கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
வழக்கமாக எழும் நேரத்திலேயே இன்றும் எழுந்து விட்டேன்...! விழிக்கும் போதே கடவுளிடம் பிராத்தனை செய்து கொண்டேன் நேற்று நடந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழாதிருக்க... இன்னும் கொஞ்சம்நேரம் தூங்கி இருக்கலாம் என கெஞ்சுகிறது அந்த கீழிமைகள்... நேற்றைய தினங்களின் பிடிக்காமல் போன முன் அனுபவங்களால் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன் இன்றாவது ஒழுங்காக இரு என்று... இருந்தும்., தேவதை ஒருத்தியின் உதாசீனப் பார்வையிலும், கசக்கி, பிழிந்து வெளியேத் தள்ளி பின்பு வழக்கம் போல புறப்பட்ட பேருந்து பயணத்திலும் .. டேய்.. வீட்ல, சொல்லிட்டு வந்துட்டியா என சபித்துவிட்டுப் போன ஆட்டோக்காரனிடமும்... அலுவலகம் சென்று மறதியால் செய்த பிழை…
-
- 2 replies
- 1.3k views
-
-
அவள் மேடை ஏறி பேசியதில்லை.. ஆனால் பேச தொடங்கினால் ஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்…!! அவள் தன்னைத்தான் “அழகில்லை” என்பாள்… ஆனால் “அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம் அவளை திரும்பி பார்ப்பார்கள்..!! அவளுக்கு “கவிதை” பிடிக்காது… ஆனால் எல்லா கவிதைக்கும் அவளை பிடிக்கும்..!! அவள் யாரையும் காதலிப்பதில்லை… ஆனால் ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது என்னோடு சேர்த்து..!! அவள் பெயரை…, என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்.. காத்திருங்கள்… அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்.. ஒரு “விருந்து உண்டு” எல்லாருக்கும்..!
-
- 4 replies
- 1.3k views
-
-
சுயநலவாதிகளே! இது மக்கள் நலனுக்காக நடப்பட்ட மரம். அதில் நீங்கள் மலர்களைக் கொய்யுங்கள். கனிகளைப் பறியுங்கள். காய்களைப் பிடுங்குங்கள் கிளைகளையும் வெட்டி எடுங்கள். ஆனால் அடிமரத்தை மட்டும் வெட்டிவிடாதீர்கள். வேர்களை நம்பி அது வாழட்டும்.
-
- 5 replies
- 1.3k views
-
-
ஏய் கிபிரே.... உச்சமேறி வந்து உருட்டி விட்டோடுகிறாய் அச்சமில்லை யெனின் அடி வாரம் வந்து பாரேன்... கந்தக தீயினிலே கருகி நீ விழுவாய் - உன் சாம்பல் எடுத்து சடங்குகள் செய்வார்.... முகிலை கிழித்து வந்து மூச்சை அடக்கி போறாய் - நீ வல்லவன் தானென்றால் தாழ பறந்து வாவேன்.... ஜயாயிரம் அடிமேலேறி ஜயா நீ பறந்து போறாய் அச்சத்தில் நீ இருக்கு அதில் வேறு செருக்குனக்கு.... ஏறி வந்தேன் எறிந்து விட்டோடுகிறாய்? இத்தனை அச்சமா இம்ரான் படையணிக்கு...? -வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.3k views
-
-
அன்னையே போய்வா! ---------------------------------- அன்னையே போய்வா தமிழுக்குத் தாயகனைத் தந்த அன்னையே போய்வா! இது விடை பெறும் நேரமென்று விதியெழுதிப் போகிறது வென்று வரும் காலமதில் விண்ணிருந்து போற்றுகையில் மண்ணிருந்து வணங்கிடுவோம் தேசத்தின் பேரன்னையே! மண்ணிருந்து வணங்கிடுவோம் தேசத்தின் பேரன்னையே! காலவெளியறுத்துத் தேசமதை மீட்டு பாசமுடன் தழுவுகின்ற வேளையொன்றில் உந்தனுக்கு ஆலயங்கள் அங்கிருக்கும் அந்தக் காலம் வரை எம் நெஞ்சமதே ஆலயமாய் வீற்றிருக்கும் வீரருடன் வந்திருப்பாய் எம் தாயே! குமுறியழுகின்ற தாய்மாரை தேற்றுதற்கு முடியாது தேசமது துடிக்கிறது எம் தெருவெங்கும் பகை சூழ்ந்து எம்மினத்தை அழிக்கிறது பகை மீண்டு தலைநிமிரும் காலம் …
-
- 0 replies
- 1.3k views
-
-
வெறுமையாய் தனிமைக்குள் சுழல்கின்ற பயணம் அமைதிக்குள் தொலைந்துவிட நினைக்கின்ற மனம் இவைகளை இயல்பாய் இணைக்கின்ற கோடாய் நின் புன்னகையின் சாயல் நினைவுகளில்-அன்னையே வாழ்க்கைப் பாதையில் வலிமிகும் பொழுதுகளில் ஏக்கங்கள் எழுந்து எரிக்கின்ற வேளைகளில் உணர்வுகள் உடைந்து உயிர்சுடும் கணங்களில் தாங்க முடியாமல் தவிக்கும் தருணங்களில் உணர்வற்ற ஜடமாய் வார்த்தைகள் வடிந்து வலியோடு வருமொரு முனகல் ’அம்ம்ம்மா’ மெல்ல வலிகுறைந்து கண்ணில் நீர் நிறைந்து ஏக்கப் பெருமூச்சொன்று எழுந்து அடங்கிவிட மீண்டும் முன்புபோல் முட்டி மோ…
-
- 6 replies
- 1.3k views
-
-
எங்கே போகிறாய்? வெளிநாட்டில் தமிழனுடனும் தமிழில்பேச வெட்க்கப்படுகிறாய் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்......... வேற்று மொழிபேசி நீயும் உன் தாய்மொழி மறந்து நீ எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்......... காதில தோடுபோட்டு எடுப்பாக நடந்து நீயும் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்.......... தலைமுடிக்கு சாயம்பூசி குதிரைகால் செருப்புபோட்டு எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்.......... வெளிநாட்டில் வந்து உன் பண்பாடு மறந்து நீயும் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்.......... தமிழின் சமயம் விட்டு தாவிக்குதித்து நீயும் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்..…
-
- 2 replies
- 1.3k views
-
-
இன்று face book இல் பகிரபட்ட கவிதை ஒன்று பணத்தை தேடி அரபுநாடுகளுக்கு செல்லும் ஒரு கணவனை நோக்கி மனைவி தனது ஏக்கம்களை கூறுவதாக அமைய பெற்ற கவிதை படிச்சு பாருங்க திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்! சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்! என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது ... காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்! சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்! பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்! அம்மா வருவதாக…
-
- 2 replies
- 1.3k views
-
-
"யாழ்" என் காதலி கனவுகளின் பெருவெடிப்பில் கண்டுகொண்ட களமிவள் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருக்கவில்லை இருந்தும் என்னைக் கவர்ந்துகொண்டாள் - மோகிக்கவும் முக்குளிக்கவும் கூடச்செய்தேன் விளைவு, என் கிறுக்கல்களையும் கருக்கட்டிக் கொண்டாள்.. களத்து மாற்றங்களையும் கருவறுப்புகளையும் கூடத் தன் காலவோரையில் கல்வெட்டாக்கினாள் - விருந்தினர்களாய் வரும் வேடந்தாங்கல்களுக்கும் விளைநிலமானாள் நச்சுக்களையும், வித்துக்களையும் கூடத்தன் கர்ப்பத்தில் சுமந்தாள்.. வேர்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன அறுப்புக்களும், விதைப்புக்களும் தொடர்ந்தாலும் அவள் அப்படித்தான் அவளுக்கு ஆயிரம் குழந்தைகள் இருந்தாலும் என் காதலி அவளின் கரம்பிடித்துக் கரைசேர்ந்தவனல்லவா நான் ..! எண்ணி…
-
- 18 replies
- 1.3k views
-
-
உன் தாய் தந்தையின் அருமை நீ வளரும் பொது தெரியாது உன் பிள்ளையை வளர்க்கும் போது தான் தெரியும்...
-
- 5 replies
- 1.3k views
-
-
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ! ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ! காராரும் வானத்தில் காணும் முழுநிலவே! நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே! ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே! ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே! உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில் பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே! சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய் கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு! நீதிதெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச் சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில் கனலேற்ற வந்த களிறே, எனது மனமேறு கின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே! தேக்குமரம் கடைந்து செய்ததொரு தொட்டிலிலே ஈக்கள் நுழையாமல் இட்ட திரைநடுவில், பொன்முகத்தி லேயிழைத்த புத்தம் புதுநீலச் சின்னமணிக் கண்ணை இமைக்கதவால் ம…
-
- 2 replies
- 1.3k views
-
-
புலிக்கு வைத்த பொறியில் மாட்டிய பகை... மேசையின் கீழொரு வெடி குண்டு அமர்ந்தால் புலியது பல துண்டு... பார்த்தே இருக்குது பகை இரண்டு... அதில் பாய்ந்தே உண்ணும் கழுகொன்று... கூரிய நீள சொண்டொன்று அதலால் குத்தியே உண்ணும் புலி துண்டு... கூடியே செய்து சதியங்கு எடுக்கவே காத்திருக்கு புலி பலியங்கு... இவரை நம்பியே போகுமா புலியங்கு....??? பதுங்கியே எடுக்குது தற்காப்பு இதுவே புலிக்கு முதற்காப்பு... மேசையை மாற்றி குந்திடுங்க வருகிறோம் பேச்சில பங்கெடுக்க....!!! 16-10--6 இந்த இணையத்தில் பார்த்த கேலிசித்திரம் இவ்வாறு சொல்கிற(தா)து... www.webeelam.com
-
- 0 replies
- 1.3k views
-
-
கண்ணிலே நீர் இல்லை துடைப்பதற்கு கவிதையிலே பஞ்சம் இல்லை உங்கள் சிற்பத்துக்கு கவிஞனாக உயிர் தந்த உங்கள் அன்புக்கு என்றும் அடிமையாகதான் இருப்பேன் இந்த உறவுக்கு
-
- 4 replies
- 1.3k views
-
-
அன்புத் தோழியின் மரணம் தரும் துயரோடு....! 05.03.2014.., அழகிய வாழ்வை - மரணம் அள்ளிக் கொண்டு போகக் காத்திருக்கிறது. அழகான உனது புன்னகையும் இனிமையான உனது குரலின் கீதமும் எங்கள் காதுகளிலிருந்து இறங்கி மெல்ல மெல்லத் - தனது இறுதிப்பயணத்தின் கதையை எழுதத் தொடங்கியிருக்கிறது.....! 1990...., மாற்றத்தின் பெறுமதிகள் மண்விடுதலை யாகத்தில் வரியுடுத்திய தலைநிமிர்வின் அடையாளம் நீயுமாய் உனது நிமிர்வின் வீரம் இன்னும் நிழலாய் தொடர்கிறது....! 1991...., ஆனையிறவும் அகிலன் வெட்டையும் அந்த உப்பளக்காற்றின் ஈரமும் உன் தோழ் சுமந்த கனரகத்தின் கனவுகளையும் காலம் தன் கைகளில் பொத்தி வைத்துக் காக்கும் பொக்கிசம் நீ. எல்லோர் போலவும் உனக்கான வாழ்வும் வசந்தங்களும் ஆற்றல் மிக்க குழந்தைகளும…
-
- 9 replies
- 1.3k views
-
-
உரிமையுள்ள ஒன்றிற்காய் உளம் ஏங்கி உயிர் துடிக்கும் கருணையற்ற மனிதருக்கு காணும்வலி கணம்கூட உணராது நெஞ்சில் வெடித்தெழும் நேசத்து நிகழ்வுகளின் சொல்லொணாத் துயர் சுமந்து சொல்லி அழாச் சுமைகளுடன் காத்திருக்கும் கணங்கள் கவி சொல்லிட முடியாது காலாண்டு கூடவில்லை கடல்போல் அன்பு காட்டாற்று வெள்ளமாய் கரையுடைக்க காலத்தின் வரவுக்காய் காத்திருக்க மட்டுமே முடிகிறது முடிவின்றி முடிவேதுமில்லா அண்டப் பெருவெளியில் அரவமற்று அனாதையாய் நிற்பதாய் உணர்கையில் உள்ளத்தெழும் உணர்வின் கொடுமையில் உறக்கம் மட்டுமா தொலைந்து போவது???
-
- 16 replies
- 1.3k views
-
-
மானின் விழி கண்டு மருண்டு நான் நின்றபோது அன்ன மொன்று வந்து அவள் நடையைக் காட்டியதே.
-
- 3 replies
- 1.3k views
-
-
எங்கும் எதிலும் தமிழோசை லண்டன் எதிரொலிக்கும் அந்த மணியோசை பொங்கும் தமிழ்ப்பாட்டின் இன்னோசை மனம் பூரித்துப் பாடுதம்மா என்னாசை சங்கம் வளர்த்த தமிழ் உலகமெங்கும் இங்கு தனிநடை போடுதம்மா வீறுகொண்டு சங்கக்குலவிளக்கை தமிழ்த்தாயை இந்த தலைநகர் பாடுதம்மா ஆவல் கொண்டு முருகன் கழுத்துக்கொரு மணியாரம் அவன் முன்னின்று பாடுதற்கு தேவாரம் நிறுமித்த நெஞ்சினிற்குப் புகழாரம் இந்த நேரத்தில் நான் இசைக்கும் தமிழாரம் ஆக்கத்திரைக் கடலும் தமிழ் ஒலிக்கும் அதில் ஆடிடும் மீன்களெல்லாம் தமிழ்ப்படிக்கும் தீர்த்தக்கரையில் பெண்கள் குரல் ஒலிக்கும் அது திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கும் எங்கும் எதிலும் தமிழோசை உலகம் முழுதும் சென்றான் தொழில் நடத்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
கனவான உறக்கங்கள் கலைவதெப்போ? எழுதுங்கள் எம் இதயதாபம் எங்கும் எரிகிறது விடுதலையின் தீபம் எம் இனத்திற்கு யாரிட்டார் சாபம் நாம் ஏதிலிகளாய் அலையும் காலம் நீல வானத்தில் நிர்மலமாய் அமைதி அங்கு கானங்கள் பாடுது பார் குருவி இச் சிலுவைகளோ அடையாளச் சுருதி இங்கு சிந்துதுபார் செந்தமிழன் குருதி எம் காதாரம் ரீங்காரம் பாடும் சில் வண்டுகளின் ஓங்கார ஓசை அங்கு தூரத்தில் கேட்கும் வெடியோசை எம் துடிக்கின்ற வீரத்தின் பாசை தணலாகக் கொதிக்கிறது நிலவும் தீக் கனலாகச் சுடுகிறது தென்றல் அதி காலையிலே சிந்தும் பனித் தூறல் எம் கல்லறைக்கு அதிகாலை பூசை எம் கனவான உறக்கங்கள் கூட விரைவில் கலைந்து விடும் செய்திவரும் காலை இது கணநேரம் ஓய்வெடுக்கும் வேளை ஈழ…
-
- 2 replies
- 1.3k views
-
-
எனக்குள் எரியும் ஓர் நெருப்பு செந்தீயில் என் தேசம் வெந்தணலில் என் மக்கள் பந்தாட வந்தோரால் நொந்தேதான் மெய்சோர்ந்தார் வந்தோடி வந்தோர் நாம் சிந்திக்க ஏன் தயக்கம்? என் மண்ணின் மீட்புக்காய் அங்கே ஓர் பெரும் யாகம் இங்கோ நாம் களிப்போடு உல்லாசம் தரும் கோலம் சோகங்கள் எம் மண்ணில் தொடர்கின்ற இந்நேரம் போகங்கள் ஏன் இங்கு பாரங்கள் தான் அங்கு என் மண்ணின் வசந்தங்கள் எங்கோ போய் ஒளிந்ததனால் என்றுமே நிரந்தரமாய் இலையுதிர் காலங்கள் விரக்தியின் விளிம்பினிலே துடித்திடும் உயிர்க் கூட்டை விடுத்திட விரும்புகின்ற மிடிமையில் என் மக்கள் சொந்தங்கள் சுடராகத் துடிக்கின்ற பொழுதிங்கு நெஞ்சங்கள் உருகாமல் நிலைக்கின்ற நிலைகண்டு என்நெஞ்சி…
-
- 6 replies
- 1.3k views
-
-
வாழ்க்கை என்பது என்ன வாழ்வின் அர்த்தம் என்ன வாழாதிருந்தால் என்ன வாழ்வை அனுபவிப்பதென்பதென்ன அழகான பெண்ணை மணப்பதாலா அழகாக உடலை அமைப்பதாலா பகட்டாக வாழ்வதாலா "சத்தான" உணவுண்டு ஆயுளை பெருக்குவதாலா பிள்ளை குட்டி பெற்று பெருவாழ்வு வாழ்வதாலா.. தினம் தினம் ஏக்கங்கள் வயிற்றுப்பசி உடல்பசி பொருள்பசி ஓ.... பலவாயிரம் ஆண்டுகள் மனிதம் இப்படித்தானே கழிந்தது, உனக்கென்ன அர்த்தம் தேவை... "சும்மா" வாழ்ந்துவிட்டு போ.. உன் மூதாதயரை வாழ்ந்துவிட்டுப் போ... மூதாதயர் வாழ்ந்தது தான் வாழ்வா "சமயம்" பல வழி கூறும் பிரிவுகளை மேலும் பெருக்கி உள குளப்பத்தை தான் தூண்டும் பொய்யான, "நம்பிக்கை" தான் வாழ்க்கை என்று விளங்காமல் ஏற்கச் சொல்லும் கிறிஸ்து…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்த காதல் மழை 50 துளிகளாய் விழப்போகிறது ஒவ்வொரும் தனிரகம் நீ சூரிய உதய நேரம் .... பிறந்திருக்கிறாய் .... உன்னை காணும் .... போதெலாம் சூரியனை .... கண்ட தாமரைபோல் .... என் .... இதயத்துக்குள்ளும் .... மலர்வு ஏற்படுகிறது ....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 01
-
- 18 replies
- 1.3k views
-
-
வீட்டுக்கு மேல் போர் விமானங்கள் பறக்க குழந்தைகளை இழுத்துக்கொண்டு நீங்கள் ஓடி ஒளியும்போது... கண்ணெதிரில் உங்கள் வீட்டுப் பெண்கள் கற்பழிக்கப்படும்போது... உங்கள் சகோதரன் சுட்டுக் கொல்லப்படும்போது... பட்டினியால் உங்கள் பெற்றோர் இறக்கும்போது... அப்போதுதான் போர் என்பது புரியும் எனில், அதுவரைக்கும் தமிழர்களே கிரிக்கெட் பாருங்கள். அடுத்த தேர்தல் வந்துவிட்டது வரிசையில் நின்று வாக்களியுங்கள். ---------------------------------------------- பயணத்தில் உங்கள் இருக்கையில் இன்னொருவர் அமர்ந்துகொண்டு எழ மறுத்தால் என்ன செய்வீர்கள்? சாலையில் உங்கள் வாகனத்தை இன்னொரு வாகனம் இடித்துவிட்டால் என்ன செய்வீர்கள்? உங்கள் குழந்தையைப் பள்ளி ஆசிரியர் காயம…
-
- 2 replies
- 1.3k views
-
-
2009 மஏ 17,18ம் திகதிகள் மனசுடைந்து தொடர்ந்து சிந்தியும் சினந்தும் சிவந்த கண்களோடு 2009 மே மாத இறுதி ஜூன்மாத ஆரம்பங்களில் எழுதி முடித்த கவிதை. 1000 வருடங்களுக்குப் பிறகும் வாசிக்கப் படப்போகிற எனது கவிதைகளுள் இக்கவிதை முக்கியமானதாக இருக்கும். தோற்றுப் போனவர்களின் பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் * எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனெனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உ…
-
- 0 replies
- 1.3k views
-
-
தொலைபேசியும் தொலைத்(த)தொடர்பும்....... கவிதை.... வண்ண வண்ணச் சிட்டுக்கள் என்னை தொலைவில் நின்றும் பார்க்கவில்லை..... காரணம் தெரிந்து கொண்டேன் கையட்டக்கத் தொலைபேசி கூட என் கையில் அன்று இருக்கவில்லை...... கடன் அட்டை ஒன்றெடுத்து கைத் தொலைபேசி வாங்கி வந்தேன் அதன் பெயரோ '' நோக்கியா'' அதைக்கண்டு ஓர் சிட்டு என்னை நோக்கினாள்..... அதன் பின்னர் ''சொனி எரிக்சொன்''கு மாறினேன் அவளை சில படங்களும் எடுத்துக் கொண்டேன் அவளும் சிரிப்புக்கு மாறி தன் கண்களையும் சிமிட்டிக் கொண்டாள்..... பின்னர் ''சாம்சங்''கு மாறி அவளோடு தனிமையில் பேசி வந்தேன் என் காதலுக்கும் சரி சொல்லி என் மார்பிலும் சாய்ந்து கொண்டாள…
-
- 8 replies
- 1.3k views
-
-
நீ சிந்திய சிரிப்புகளையெல்லாம் சேமித்துவைத்திருந்தேன் இரண்டுவருடசேமிப்பை எடுத்துப்பார்க்கிறேன். எதிலுமே என் பெயரில்லை என் பக்கத்தில் நின்றவர்களை பார்த்து சிரித்தது பல என் முன் நின்றவர்களுக்காய் சில பின் நின்றவர்களுக்காய் சில எவரையோ எண்ணியபடி எனை பார்த்து சிந்தியவை சில எல்லாவற்றையும் கழித்தபோது எஞ்சியவை எனக்காக சில ஏளன புன்னகைகள் என் மனக்காயங்களுக்கு-அவை மருந்தா, திராவகமா தெரியவில்லை ஆனாலும் அள்ளி அள்ளி பூசிக்கொள்கிறேன். இதயதில் உன் பெயரையும் உயிரில் உன் முகவரியையும் சுமந்தபடி! சிலம்பூர் யுகா, துபாய் [yughas@yahoo.com]
-
- 3 replies
- 1.3k views
-