கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
நேற்று மொட்டாய் நின்று... இன்று பூத்த பூவது! கட்டுக்குள் அடங்காத காளையை, கட்டியிழுத்த தேரது! இழுத்தலும் பூத்தலும் பூவின் புன்னகைக்குள், தேனாய் இனித்தது! தேன் குடிக்கப் போன வண்டு தேருழுத்துக் களைத்தது! காரிருளில் கதவடியில், கண்ணான கண்மணி கண்ணருகே நின்று நெஞ்சருகே வந்தாள்! தொட்ட இடமெல்லாம் சுட்டன மாமல்லபுரச் சிற்பங்கள்! பதைபதைத்த நெஞ்சம் தப்பி வந்த முயல் போல் தாவி நின்று மூச்சுவிட, மேவிவிட்ட உச்சந்தலையில் ஈரப்படுத்தியது என்னிதழ்! பூச்சூடிய குங்கும வாசம் வாவென்றழைக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் பூவிதழோடு போராடி வெற்றிகண்ட வண்டு, கட்டிலறைத் தேன்கூட்டே கவர்ந்து சென்று ஆறுதலாய் ரசித்து ருசித்து... முழித்தேனும் முழுத்…
-
- 27 replies
- 3.4k views
-
-
சயனைட் குப்பி...... கவிதை...... எங்கள் கோவில்களில் தெய்வமாய் வணங்குதற்கு தாராள தகுதிபெற்ற தனியொரு ஆயுதம் நீர்..... எதிரியிடம் பிடிபட்டு சிதைவழிந்து சாகாமல் கெளரவமாய் மரணத்தை வளங்கும் கொடை வள்ளல்..... காற்றாக உள் சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் மூச்சை நிறுத்திவிடும் உன்னதப் படைப்பு நீங்கள்.... குட்டி எமன்களாக - வீரர் கழுத்திலே தொங்கிடுவீர் பாசத்தின் கயிற்றினாலே மரணத்தை மறுக்காமல் தந்திடுவீர்.... வீரர்களின் மனத்திடத்தை உரைத்து நிற்கும் உன்னதமாய் அன்று முதல் இன்று வரை ஆட்சி செய்யும் செங்கோல் நீர்..... உன் தொழில் அழித்தல் மட்டுமல்ல ஆக்கும் கடமை உண்டு இரசாயனவியல் துறையில் உனக்…
-
- 3 replies
- 1.2k views
-
-
காற்றும், வானும், நீர், நிலம், நெருப்பும் தழுவி உம் மெய் ஆற்றட்டும். மண்டியிடாத மன்னவனை எமக்களித்த மாமனிதா சரித்திரச் சங்கமிப்பில் நெருப்பெடுக்கும்போதில் மண்ணின் கணிதத்தில் மரணமும் ஜனனமய்யா. பாக்கு நீரிணையின் சிற்றலைகள் மிடுக்கெடுக்க உப்புக் காற்றுறையும் ஊறணியில் இனத்தின் மீளெழுச்சித்துயில் கொள்க. காற்றும், வானும், நீர், நிலம், நெருப்பும் தழுவி உம் மெய் ஆற்றட்டும். வல்வை மண் சாந்தி தரும்.
-
- 2 replies
- 838 views
-
-
சருகானவர்கள்..... எதிர்பார்ப்புக்கள் எதுவுமின்றி ஒளித்தொகுப்பை நடத்திவிட்டு காலங்கள் தொலைந்ததனால் காய்ந்து சருகாவதற்காய் வேர்களை நோக்கி உதிர்ந்துவிழும் இலைகள் நினைவு படுத்துகின்றன பனிமர தேசத்தில் பிடுங்கி நடப்பட்ட ஈழத்துத் தமிழர்களை.... அந்நியன்.... பைன்மரத்தை தீண்டிவரும் மாலைநேரக் குளிர்காற்றில் மனதைப் பறிகொடுத்து மயங்கி நின்றபோது ஓடி வழிந்தோடி ஒருகால்ப் பாதணியை ஊடுருவி உள்ளங்காலூடு புகுந்து உச்சி மண்டையில் சுள்ளென்று உறைக்கும்படி-குளிரில் சில்லென்று குத்திய மழைத்துளி சொல்லியது நான் அந்நியன் என்று.... சுதந்திரம்.... நிமிர்வற்கும் குனிவற்கும் நீட்டிநிமிர்ந்து படுப்பதற்கும் வீட்டில் மூச்சுவிடவும் …
-
- 7 replies
- 1.6k views
-
-
இலை உதிர்காலத்தின் சாலையில் செல்கின்றேன் பச்சையான மரங்கள் மஞ்சளாகிக்கொண்டிருக்கின்றது நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இலைகள் உதிர்ந்துகொண்டிரக்கின்றது உணவின்றி கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருந்த ஒருவன் நினைவுக்கு வந்தான் குளிர்காலம் முடிந்ததும் இந்த மரங்கள் மீண்டும் துளிர்விடும் உயிர் உதிர்ந்த மரத்தை கொத்தி விறகாக்கி சோறாக்கி தின்று தேசீயம் என்று ஒரு ஏவறை விட்ட ஞாபகங்கள் வந்துபோயின. கால்களுக்குள் இலை உதிர்காலத்து சருகுகள் கேவலமாகப் பார்த்தபடி காற்றில் சலசலத்துச் சென்றது மண்ணோடு மக்கி மீண்டும் மரத்தில் துளிர் விடுவேன் என்ற என்னிடம் இல்லாத உண்மை அதனிடம் இருந்தது. இயற்கையின் விதிவிலக்குகளில் நானும் ஒருவன் என்ற பெருமூச்சு என் காதுகளுக்கு கேட்காதபடி சருகுகள…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆபாசமாக எழுதுகிறார் என்று கவிஞர் குட்டி ரேவதி மீது விமர்சனம் வைக்கப்படுவது புதிதல்ல. ஆனால் சமீபத்தில் நீட்சி இதழில் வெளியான இவரது “மாமத யோனி” என்ற கவிதை (!) மிக அதிக அளவில் எதிர்ப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. மாமத யோனி…. தன்னையே காவு கொள்ளும் மாமத யானையென உடல் வெறித்திருக்கும் யோனி எனது திசையெங்கும் எழுச்சியுற்று காமம் கிளர்ந்திருக்கும் பேருயுயிரும் அது தன் மதச்சாறு பொழிந்த காட்டை சேற்று நிலத்தை துவம்சம் செய்து திரிகிறது ஒரு காமக்கிழத்தியைப் போல சேரிப்பரத்தையர் போல….. விடலைகளின் புல்வெளிகளை அறுத்துச் சுவைக்கிறது இந்த ஒற்றை யானையின் மதம் போதும்… என் மாமத யோனியினுள்ளே ஒரு யானையைக் கொண்டிருக்கிறேன் தறிகெட்டோடும் அதன் இச்சைக்கு இந்த இரவுகள் போத…
-
- 6 replies
- 2.1k views
-
-
சர்வதேச மனித உரிமைகள் தினம் -விடையதைச் சொல்லு…! 76 Views விடையதைச் சொல்லு…! ********** சர்வதேசம் சொல்லுது இன்று மனித உரிமைகள் நாளாம் எமக்கு…அட இல்லாத ஒன்றை இருக்கெனச் சொல்ல இந்த நாளும் இருக்குது இப்போ… மனிதரின் உரிமை என்ன என்று எழுதி வைச்சவர் ஆரப்பா சொல்லு…? விடுதலைப் போரில் செத்தவர் யாரு…? நினைச்சுப் பார்க்க உரிமை இருக்கா….? கைதியாய் பிடிச்ச உறவுகள் எங்கே…? அவர்களின் நிலையதை அறிய உரிமை இருக்கா….? புனர்வாழ்வு பெற்ற எம்மவர் எல்லாம் நல்வாழ்வு வாழ உரிமை இருக்கா…? ஈழ மண்ணில் வாழும் எங்கள் இனத்துக்கு என்ன அடிப்படை …
-
- 0 replies
- 563 views
-
-
சர்வதேசமே கண் திறவாயோ ? தரணியிலே தலைநிமிர துடிக்கின்ற இனம்! இனிமையான மொழியோடு இரக்கமுள்ள மனம்! வந்தாரை வரவேற்க வாசலில் காத்திருந்து அன்பைப் பரிமாற ஆசையுள்ள சனம் பச்சைக் கிளிகள் பசுமையான வயல்கள் பண்பாடும் குயில்கள் பணியாத பனைமரங்கள் கலை கலாச்சாரம் கனிவான பண்பாடு தளராத துணிவுதான் தமிழரின் அடையாளம் உங்களோடு இணைகிற நாடுகள் உருகிட உலகத்தின் செவிகளில் எங்களின் பூபாளம் உரிமைக்குரல் ஒலிக்க வீதியிலே ஊர்வலம் முட்களை விழுங்கி சிறகடிக்கும் பறவைகள் சாவிலும் வாழ்வோம் நிகழ்வே உணர்த்தும் நாங்கள் விடுதலை சுமந்த எரிமலைகள் மூன்று தசாப்த்தங்கள் மூச்சுவிடாத போராட்டம் எங்கள் குஞ்சுகள் குருதியில் கரைகிறது …
-
- 5 replies
- 1.2k views
-
-
சர்வதேசமே தமிழினம் செய்த தவறு என்ன? உங்கள் தண்டனைக் கோவைகளையெல்லாம் தட்டிப்பார்த்து தமிழினத்தை தனிமைப்படுத்துவதற்கு தடயம் தேடிக்கொண்டிருப்பதற்கு. தமிழினம் அழியுதென்று தக்க இடம் கொடுத்து தமிழ் மண்ணின் கொடுமைகளை தாராளமாய் அறிந்துகொண்டும் தயங்குவதேனோ தடைகளை உடைப்பதற்கு. வெழிநாட்டார் எவரையும் வெறுப்பாகப் பார்க்கவில்லை உலக மக்களுக்கு ஊறேதும் செய்ததில்லை அயல் நாட்டவரை அச்சுறுத்தி நடக்கவில்லை அல் கைதாபோல் அடுக்குமாடி தகர்க்கல்லை விடுதலை என்று சொல்லி வெளி நாட்டார் விமானத்தை கடத்தவில்லை. வீணே எதற்கு இந்த விழியறியா விமர்சனங்கள். உண்மை நிலை அறிந்தும் ஊமையாய் இருப்பதேனோ மனித நேயத்தின் மாண்பர்கள் நீங்கள் மயங்…
-
- 0 replies
- 515 views
-
-
கொத்துக்கொத்தாய் கொன்றொழித்தாயே... கொடுமைப்பசியில் வாட்டி வதைத்தாயே... முட்ட ஏதும் இன்றி முனுகவில்லை நாம்... முக்காளமிடுகின்றோம் கேட்கவில்லையா? வெட்டி எம்மைச் சாய்க்கும்போதும் வேலைப்பழுவிலா நீ இருகின்றாய்... சட்டங்களெல்லாம் செத்த போதிலும் சட்டைகள் மாட்டி ஏன் இருக்கின்றாய்?... ஐ.நா வே... உன் நாவை நம்பினோம்... நீயும் காறித்துப்புவாய் என்று எண்ணவே இல்லை நாம்... காத்திருக்கின்றோம்... மீண்டும் வருவாய்... எம் உறவுகளின் உயிரதனை காப்பாய் என்று... இனியும் வரத்தாமதித்தால்... எம்மை அல்ல எம் எலும்புகளை மட்டும் எடுத்துச்செல்... படிந்திருக்கும் படிமங்களை எடுத்துச்செல்... வாழும்போதே மடிந்த, மடியும்போதே படிமங்களான எம் வரலாற்றுச் சுவடுகளை எடுத்…
-
- 1 reply
- 741 views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
சற்று ஆறுதல்…! -------------------- கடந்த சில நாட்கள் கடப்பதே துயரமாய் கடந்து போனது கண்களில் நீருடன் திரண்ட தமிழகம் தீர்ப்பினை மாற்றென நீதியைக் கோரி நீண்டது தெருக்களில் தமிழகத் தாயோ தன்னால் முடிந்தததை அவையிலே செய்தார் அரியதோர் நகர்வாய் அமைந்தது கண்டோம்! மூவரின் உயிரை முழுதுமாய்க் காத்திட உலகம் எங்கும் வாழ்கின்ற தமிழரே உறுதியோடு குரல் கொடுப்பீரா? காப்பது என்ன மூவரின் உயிரா உயிருடன் இணைந்து நீதியுமல்லவா? நீதியை காத்திட நெருப்பென எழுகின்ற தமிழக உறவே பற்றிக் கொள்கிறோம் நன்றியுடனே! நாதியற்றவன் தமிழன் என்பதை நாளைய சந்ததி எதிர்கொள்ளலாமா? மீட்கும் வரைக்கும் நீதியைக் கேட்போம் நீதியை மறுத்தால் தமிழனுக்…
-
- 8 replies
- 1.2k views
-
-
சலாம் குலாமும் சமுதாயச் சீர்த்திருத்தமும் பின்ன சுரேஷும் (பகடி) - இலவசக் கொத்தனார் - உரைநடைகளின் போதாமைகளைத் தாண்டி நம் அகத்தினைத் தொட்டு, தட்டி எழுப்பி, எழுச்சிகளைக் கொந்தளிக்க வைத்து, நம் பிரக்ஞைகளை உலுக்குவதுதான் நல்ல கவிதை என்றால் சுரேஷின் கவிதைகள் நல்ல கவிதைகள். நல்ல கவிதைகள் படிக்க முடியாத கரடுமுரடு மொழியில்தான் இருக்க வேண்டும் என்ற மேற்தட்டு மனப்பான்மையை சுக்குநூறாக தகர்தெறிந்து உழைக்கும் வர்க்கத்தினரின் உன்னதமான எளிய பாசாங்கற்ற பகடுகளேதுமில்லாத மொழியிலும் கூட நல்ல கவிதையைத் தர முடியும் என்பதற்கான சான்று சுரேஷின் கவிதைகள். மனித உணர்வுகளின் பிரதிபலிப்பு என்று வந்த பின்னர் விமர்சனப்பிரதிகளில் கவிதையியல். கோட்பாடு எல்லாம் இரண்டாம் மூன்றாம் பட்சமாகிவிடுகிற…
-
- 0 replies
- 670 views
-
-
1 மாலை நேரக்காற்று முன்னிற்க மணநாளில் பவ்யமாய் விடை பெறுகிறாள் மணப்பெண் அவளது பர்தாவுக்குள் முகம் புதைத்தபடி மலர்களின் வாசனையோடிணைந்த புணர்ச்சியைப் போதிக்கிறாள் தமக்கை. தானே அறிந்திராத தடித்த புத்தகத்தின் பக்கங்களை துரிதகதியில் புரட்டுகிறாள் எந்த நாளில் புணர்ந்து கருவைத் தள்ளிவைக்கலாம் எனவும் ஹராமாக்கப்பட்டதெனவும்* கூடவே புணர்ச்சிக்குப் பிந்தைய சுத்த பத்தங்களையும் தன் குள்ள உருவத்திற்கேற்ற குற்றக் கண்களில் குறுக்கிடுகிற வாழ்வின் சுகவீனங்களையும் நைந்து போன புணர்ச்சியின் வெற்றுச் சூத்திரங்களையும் தனக்குள்ளாக ஒளித்தபடி அவ்வப்போது வெட்கத்தில் துவண்டு விழுகிற வார்த்தைகளை சிறுமியின் அசட்டுத் தன்னம்பிக்கையு…
-
- 1 reply
- 942 views
-
-
சவுக்கும் ... குப்பி சாராயமும் காற்றில் சுழன்று சுழன்று வீசியது கிர் கிர் செவிப்பறையில் அறைந்து மறைந்தன பார்வை வழி உள்நுழைந்த அசிரீரி உள்புகுந்து வெளியேறிய வெளி உள் நுழைந்து சிவப்பு நிறம் கொண்ட சவுக்கு குப்பி சாராயம் ஆள் கிணற்றுக்குள் சங்கிலிக்கருப்பு
-
- 0 replies
- 553 views
-
-
சஹாராவில் பூக்களா? பாலைவனத்தில் ... பா(ழ்) ல் பண்ணை ...? நிறுவ முடியுமா? முடிந்தாலும் ... பச்சை வயலை எரித்துவிட்டு,,,, பாலைவனத்தில்... பன்னீர் மழையா? வீணே போகுமே!! சூரியனுக்கு... கறுப்படிக்க நினைக்கிறானாம்.!. முடிந்தாலும்........(???) சுற்றி வர - இருட்டாகுமே ... கவலையில்லையா?! (யாருக்கோ)
-
- 3 replies
- 1.1k views
-
-
சாக்கடையில் சந்தன மலர்கள்........ கவிதை - இளங்கவி....... வேலிப் பூவரசு வெண்மஞ்சல் பூப்பூத்து வாசலில் போவோரை வா வாவென்று வரவளைக்கும்..... முன்வைத்த காலை பின் வைய் என்று சொல்லி எங்கள் மொட்டைவால் நாய்க்குட்டி முன் வந்து குரைத்து நிற்கும்..... மொத்த அரசியலை ஒரு பத்திரிகையில் உள்வாங்கி எங்கள் பொக்குவாய் தாத்தா பொழுதுகள் போக்கிடுவார்.... ஆட்டிறைச்சிக் குழம்புவைக்க அயலட்டம் எல்லாம் மணக்க அந்த வாசக் குழம்புடனே வயிறாறச் சாப்பிட்ட நம் சந்தன மலர்களெல்லாம் இன்று சாக்கடைச் சகதிக்குள்....! அன்று திருவிழாக் காலத்திலே சிறிதாக வலம் வந்தோம்...... இன்றோ திண்ட மலம் கழிப்பதற்கும் நீண்டதாய் வரிசை நிற்போம்.... என்னையா கொடுமைகள்…
-
- 6 replies
- 1.1k views
-
-
-
சாட்சியம் காலத்தின் கட்டாயம் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள் சித்திரவதைகள் என எம்மினம் சின்னாபின்னப்படுத்தப்பட்டு எமது தேசமும் எரிக்கப்பட்டபோது உலகம் கண்மூடி நிற்க உண்மைகள் புதைக்கப்பட்டன. இப்போ சீமெந்துச் சுவரில் முளைவிட்ட சிறு விருட்சம்போல் உண்மை மெல்ல மெல்ல வெளியேறுகிறது. தன்கடமையை மறந்த ஐ. நா மன்று கதிகலங்கி நிற்க மனிதவுரிமை மனச்சாட்சியாய் வாய்திறக்கிறது. சாட்சியம் கோரி வாய்திறக்கும் மனிதவுரிமை ஆதரவில்லாமல் அனாதையாய்விடக் கூடாது. பார்த்ததை பகிர்ந்ததை பட்ட துன்பத்தை துணிவுடன் எடுத்துக் கூறி தமிழர் துயர் துடைக்க சாட்சியம் வழங்கு சாட்சியமில்லாவிடத்து உண்மையும் அனாதையாகிவிடும். மனச்சாட்சியும் மௌனமாகிவிடும். தயங்காதே! தமிழீழ விடுதலைக்காய் தன்ன…
-
- 4 replies
- 734 views
-
-
அத்தை மகளோ... அம்மான் மகளோ.... எந்தத் தலைமுறை தாண்டிவந்த உறவோ....... நானறியேன்.....! சிந்தைக்குள் உன் நினைவிருக்கு சிதையாதே என் கனவிற்கு - என கதைகதையாய் பல சொல்லி உன் காலடியில் போட்டவளே..... மடியோடு எனைச் சாய்த்து தலைகோதி தாலாட்டி மனதோடு ஒன்றி போனவளே.... நான் கேட்டா உன் மடி தந்தாய்.... நீதானே என் பதியென்றாய் நீயாக நெருங்கிவந்து - எனை தீயாக்கி போகாதே... அணைத்து முத்தமிட்ட உன் இதழில் பதிக்க மறந்தேன் என் முத்திரை - அதுதான் தேடி அலைகிறேன் உன் முகவரி இன்று உணர்வுகள் தரும் உறவை விட உன் உறவுகள் சொல்லும் உரைகளோ சரி உனக்கு....? மனசுகள் பேசும் வாழ்வை விட உன் மாமன் மகன் மதனா பெரிது உனக்கு.....? காய்வெட்ட நி…
-
- 23 replies
- 4.3k views
-
-
கையில்லதவனும் கால் இல்லாதவனும் கண் இல்லாதவனும் சாதிக்கிறான் எல்லாம் இருப்பவன் காதல் தோல்வி என்ற பெயரை சொல்லி சாகிறான் சாவதற்க்கு ஒரு நொடி யோசித்தால் போதும் சாதிப்பதற்க்கு பல நொடி யோசிக்க வேண்டும் நீ சாகப்பிறக்கவில்லை சாதிக்க பிறந்திருக்கிறாய் சாதித்து காட்டு...
-
- 2 replies
- 1.2k views
-
-
சாதிவெறி இன்னும் சத்தியமாய் தீரவில்லை எங்கள் தமிழ் போராட்டமும் அவ்வெறியை தீர்க்கவில்லை பலநூறு மைல்கள் பறந்து வந்தும் ஐயையோ பார்கின்றோமே சாதியது இங்குமல்லோ ஆதியிலே சாதியில்லை பாதியிலே வந்ததென்று சேதியாகச் சொல்லுறாங்க ஓதியே வைச்சாங்க மோதித்தான் சாகிறாங்க கோதித்ததான் பார்க்கிறாங்க மீதியாய் ஒன்றும் இல்லை சாதியால் அழிவுதாங்க. பார்பனரோ கொண்டு வந்தார் ஏற்பவரோ ஏற்றி விட்டார் தீர்ப்பவரோ இன்று இங்கு திண்டாட்டப் படுறாங்க மோர்மிளகாய் செய்து தந்தால் முட்டி மோதித் தின்னுவாங்க ஊர்காரர் உள்ளே வந்தால் எட்ட நில்லு என்கிறாங்க சாதியில்லை என்று தான் அம்பேத்கர் சொன்னாங்க வாதியாக பெரியாரும் அதைத்தானே சொன்னாங்க நாதி…
-
- 14 replies
- 2.4k views
-
-
நாங்கள் மீண்டும் ஒருமுறை அழுது தீக்கிறோம். நீயோ எங்கள் அழுகையை ரசிக்கும் ஆவலில் எப்போதும் வரட்டும் என்கிறாய்…
-
- 2 replies
- 666 views
-
-
சாத்தான்களின் வருகையால் …. மனிதம் நசுங்கும் பொழுதொன்றில் வரும் என் அவலக்குரல் -உங்களுக்கு ஒப்பாரிப் பாடாலாய் தோன்றலாம் இதுதான் வாழ்க்கை எமக்கு நித்தம் சப்பாத்துக் கால்களில் மிதிபட்டு நசுங்குகிறது எம் குரல்வளை... உயிர் உறையக் கதவடைத்து துயில்கையில் நாய்களில் ஓலத்தில் எமனின் பிரசன்னம் ! மூச்சு விட மறந்து உயிர் பற்றி தவிக்கையில் இடித்து உடைகிறது கதவு தாழ்ப்பாள் தெறிக்க ... இராணுவ மிருகங்கள் ஊர் புகுந்தபின் அன்றாட வலிகளாய் போனது இதுவும் .. ஆண்பிள்ளைகள் கைதாக்கி முற்றத்திலே சோதனை என தொட்டுத் தடவுகையில் செத்துப் போகிறாள் முதல் தடவை தமிழிச்சி .. பெற்றவர், கட்டினவர் கண்முன்னே அடித்து உதைத்திழுத்து செல்லுகையில் யார் கதறலு…
-
- 2 replies
- 688 views
-
-
அன்புக்குரிய யாழ்க்கள, தமிழ் இசை, கவிதை நண்பர்களுக்கு, அன்பு வணக்கம். காதல் கடிதம் (02.08.2003) - காதல் மொழி(14.05.2006) - காதல் வானம்(25.06.2008 ) வசீகரனின் வரிகளில், வி.எஸ்.உதயாவின் வசந்த இசையில் 25.06.2008 அன்று நோர்வேயில் காதல் வானம் வெளியீட்டு விழா நிறைவாக நடைபெற்றது. காதல் வானம் இறுவட்டு ஈழத்தமிழ் மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கின்ற பல பாடல்களுடன் வெளிவந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படைப்பை இறுவட்டாக பெற்றுக் கொள்ள PAYPAL சிறந்த முறை. இறுவட்டு பாதுகாப்பாக அஞ்சலில் அனுப்பி வைப்பேன். காதல் வானம் இசைத் தொகுப்பின் குறுந்தககட்டுப் பிரதி வேண்டுகிறவர்கள் தொடர்புகொள்ளலாம் : vaseeharan@hotmail.com (Paypal Account). Vaseeharan:…
-
- 4 replies
- 1.8k views
-