Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சில வாரங்களின் முன்னொருத்தியின் உடலையும் அவள் அணிந்த ஆடைகளையும் அநியாயத்தின் சாட்சியமென ஆளுக்காள் படம்காட்டி செய்தியாய் செவ்வியாய் செத்துப்போனவளை பலதரம் கொன்று புதைத்தோம்….. இன்றொருத்தி 17வயதுப் பள்ளிமாணவி 76பேருடன் உடலுறவு கொண்டாளாம்….. அடி சக்கை அந்தமாதிரிச் செய்தி….. ஆளாளுக்கு விளக்கங்கள் அடங்கொய்யாலா அதுவும் சாதனைதான். மெளதீக யுத்தம் உயிர் ஆயுதம் அச்சாப் பொருத்தமான ஒப்பீடுகளும் ஒப்பனைகளும் பதின் வயது தாண்டாத 17வயதுச் சிறுமியைக் கூட விட்டு வைக்காத இனம் நாங்கள். நமக்கெல்லாம் சமூகமும் அக்கறையும் அதிகம் தான். விட்டுத் தொலையாத நாற்றங்கள் முட்டிக் கிடக்க சொகுசுக் கதிரைக்குள் சுகமாய் தட்டச்சி ஒரு தமிழச்சியைக் கூறுபோடும்…

    • 11 replies
    • 1.9k views
  2. கிழிக்கப்பட்ட தாள்களில் வரையப்பட்ட ஓவியமாய் உடைந்த சிதைவுகளில் செதுக்கப்பட்ட சிற்பமாய் அதிகாலை கனவில் அவளின் அருகாமை வீணாய் போனது விடியலின் பொழுது விரிக்காத படுக்கை மடிக்காத உடைகள் வேண்டாத உணவு தீண்டாத தேநீர் காலையை தின்று மதியம் கொன்றது மங்கையின் நினைவு மரண வலியாய் தனிமை பயணத்தின் ஒவ்வொரு தரிப்பிலும் தடுக்கி விழுந்து மீண்டும் தொடர்ந்து கற்பனைகளில் சுழன்ற சுந்தர வதனம் கூரிய வாள்முனை குரல்வளை அறுப்பதாய் வேதனை தந்தது அந்தி சாய்ந்து ஆதவன் அணைகையில் மெல்லத் தவழ்ந்து கள்ளம் கலந்து கொல்லத் துடித்த கொள்ளை அழகில் உருகி…

  3. விடுதலையை நேசித்த எத்தனையோ விருட்ச்சங்களை தின்றுவிட்டது அநீதி ஆயினும் இன்னமும் விடுதலைக்கான வேட்கையை சுமந்து கொண்டு வீச்சுடன் எரிகிறது விடுதலைத்தீ சுதந்திரத்திற்கான கனவுகள் பொய்த்துப்போன கணங்களில் இருந்து கணன்று கொண்டேயிருக்கிறது எங்களின் இதயம் விடுதலை பெறும் நாளில் வீடுவருவோம் என்று சொல்லிச்சென்ற தோழர்களின் வருகைக்காய் எங்களின் வாழ்க்கையைப்போலவே இருண்டு கிடக்கும் வீட்டினை சுத்தம் செய்து வைத்திருப்பாள் தங்கை இப்பொழுதும் எப்பொழுதும்போல் தோழர்களுக்காய் இயலாமையில் எங்கள் இதயங்களைப்போலவே கொதித்துக்கொண்டிருக்கும் அடுப்பில் சமைத்துக்கொண்டிருப்பாள் என் தாய் நேற்றையைய்ப்போலவே இன்றைக்கும் தேடுகிறேன் இன்னமும் …

  4. ஆழிப்பேரலையே – எங்கள் ஆன்மாக்களை புரட்டிப்போட்ட சுனாமியே ஆசியாவையே அழித்தொழித்து அகிலத்தையே அதிரவைத்த ஊளித்தாண்டவமே ஆண்டுகள் ஆயிரமானாலும் ஆறுதல் கோடிகள் சொன்னாலும் அடங்குமோ எங்கள் மனத்துயர்? அணையுமோ எங்கள் துயர் நெருப்பு? நினைவுகளை அழிக்கமுடியாமல் நித்தமும் கலங்கி நிற்கிறோமே…. மரங்களை அடுக்குவது போல் பிணங்களை அடுக்கிவைத்த காட்சிகள் மனக்கண்களில் விரிகிறதே – உடல் அணுக்கள் அனைத்தையும் உலுப்புகிறதே இறுதிக்கடன் செய்வதற்குகூட இனசனத்தை விட்டுவைக்காமல் குடும்பத்தோடும் குடியிருப்புக்களோடும் கூடிவாழ்ந்த ஊரோடும் உற்றார் உறவினரோடும் கொத்தொடும் குலையோடும் மொத்தமாகக்கொன்றொழித்த உன் கொடுமைதனை கோரத்தாண்டவத்தை எண்ணுகையில் உள்ளம் வெடித்த…

  5. படித்ததில் மனதை நெருடியது... ஆழியாள் அவுஸ்ரேலியா என்ர ஊர் சின்ன ஊர் பெரியம்மா, பெரியப்பாக்களாலும் – மாமா அத்தை சித்தி சித்தப்பாக்களாலும், கிளி மாமி, விஜி மாமி வடிவு அன்ரிஇ வனிதா அன்ரி சொக்கா அங்கிள்களாலும் நிறைஞ்ச ஊர்.அம்மம்மா, அம்மப்பாவும் அப்பப்பா, அப்பம்மாவும் தாத்தா பாட்டி ஆச்சிகளும் எனக்கு இருந்தார்கள். ஒரு நாள் மீன் விக்கப்போன செல்லம்மா பாட்டியை மணிக்கூட்டுக் கோபுரத்துக்குக் கீழே கூறாக்கி வீசினார்கள். பெரிய மாமாவும், ராஜி அத்தையும் வெள்ளவத்தைப் பெற்றோல் நெருப்பில் கருகினர். பிறகு ரவிச் சித்தப்பா இயக்கத்துக்குப் போனார். வனிதா அன்ரி இன்னோர் இயக்கத்துக்கு போனா. சேகர் சித்தப்பா காணாமல் போனார். …

  6. எனது மரணம்: முதலாவது அறிக்கை இப்போதெல்லாம் மரணம் பற்றிய எண்ணங்கள் அடிக்கடி வருகின்றன பல தடவை மரணத்தின் கற்பூர வாசனை (இடையில் சாணி வாசனையும் வரும்) என்னருகே வந்தும் உள்ளது மரணம் நேற்று காபி கடையில் (Starbucks) நான் ஒடு cup காபிக்காக காத்திருக்கையில் என் பக்கம் வந்து அமர்ந்திருந்தது எதுவும் பேசாமல் அதன் கண்ணின் ஓரம் நீர் துளி இருந்தது திடீரென ஒரு Right turn இல் என் car திருப்புகையில் மரணம் என் பக்கத்து seat இல் அமர்ந்திருந்தது என்னை கேள்வி கேட்குமாய் அதன் முகம் இருந்தது பின் அந்த இரவில் சரியாக நடுச் சாமத்தில் மனைவியை தேடி கைகள் போகையில் அருகே மரணம் படுத்திருந்தது இம்முறையும் ஒற்றை வார்த்தையும்…

  7. Started by akootha,

    தேசிய கீதம் ஆனைவாய்க் கரும்போ? அனலிடைப்பட்ட புழுவோ? சட்டியிலிருந்து சற்றே சறுக்கி; அடுப்பினில் விழுந்த மனிதர் நாம் தாவார மில்லான், தனக்கொரு வீடில்லான், தேவாரம் மோதுதல் ஏதுக்கடி? தேசிய மேயில்லார்க்கு தேசிய கீதமொரு பொல்லாப் போடி? பொறுமையிழந்தவர் தம்மைப் போற்றி இசைப்பர் இன்னும் கோடி, இறைவனுண்டென்றால் சேருமொரு புது வாழ்வு தேடி. -அறியாதவன் http://www.valampurii.com/online/viewnews.php?ID=13381

  8. குருதி வடிக்கும் கண்களின் வருத்தம் புரியா உலகமிது; நின்று யோசித்து நிமிர்கையில் – காலம் அதோ எங்கோ போகிறதே….!! சுதந்திரம் விடுதலை என்று கேட்ட வாய்க்கு ரத்த காட்டாறும் சொட்டு ஆறுதல் கண்ணீருமே மிச்சமா? சோர்ந்து போகாத ஒரு இனத்தின் கூட்டம் உலகமெலாம் பரவி இருந்தும், மௌனத்தில் மூழ்கியதேனோ? சொல்லி அடித்த பரம்பரைதான் புது ரத்தம் தேடி – அலைகிறதோ; உயிர் செத்து மடிந்த சேதி கேட்டும் சுடும் கோபம் விடுத்து மரமானதுவோ?!! ஐயோ; மரம் கூட ஆயுதமானது இந்த மனிதர் ஏனோ மனிதமிழந்தார், கோபம் துறந்தார், குழந்தை கண்கீறி ‘கிழவி உடல் அறுத்தும் எல்லாம் சகித்தாரே????????!!!!!!!!!!!!!!! இறையே!!!!!! இதில் ஏனோ நீயும் குருடானாய் நீ இல்லையென்று முழங்கவும் இச்செயலால…

    • 0 replies
    • 832 views
  9. 1 பேச வாயற்று போன இடத்திலிருந்தே வார்த்தைகள் வீரியமாய் விழுகின்றன; விழுகின்ற வார்த்தையினால் கொதிக்கும் ரத்தத்தில் தான் - மூழ்கிக் கிடக்கிறது; நம் சுதந்திரம்!! ----------------------------------------------------------------- 2 நாம் அணியும் ஒவ்வொரு சட்டைக்குள்ளும் நம்மை காக்கும் - மானமும் இருக்குமெனில் அதற்குள் - விடுதலையும் இருக்கும்!! ----------------------------------------------------------------- 3 வெள்ளைக் கொடியில் விடுதலை எல்லாம் - இனி வெற்று வாய்க்கு மெல்ல வெற்றிலை போல்; உடல் கீறி ஒழுகும் ரத்தம் நனைத்தேனும் சிவக்கட்டும் - இனி வெள்ளைக்கொடி!! ----------------------------------------------------------------…

  10. உனைத் தொடர்ந்த எனைப் பிறர் தொடராதிருக்க, எங்கள் தடங்களை என் கூந்தலால் மறைத்தேன். எங்கள் கட்டில் தீவில் சூரியன் அஸ்த்தமித்தது, எதிரொலிகளை உண்டபடி இரவு எழுந்தது. கடலில் மிதக்கும் மரக்கட்டைகளைப் போல் கிடந்த நம் முதுகளோடு மெழுகுவர்த்த்தி மின்னி மறைந்து இரகசியம் பேசியது. எங்கள் தீவில் எங்கள் கடற்கரையில் நாங்கள் பின்னிப் பிணைந்து கிடந்தோம். எனக்கு மேல் உந்தன் விழிகள் கடைப்பிடித்துவிடுவேனோ எனத் தோன்றிய எனது வாக்குறுதிகள் பற்றிய பயத்தோடு, நாங்கள் பகிர்ந்து கொண்ட மெய்களைக் காட்டிலும், உரைக்கத்தவறிய பொய்களிற்காக அதிகம் வருந்திக்கொண்டு, நான் ஆழமாய்ச் சென்றேன். உனக்காக இறந்த காலத்தோடு போர் புரிய, நான் ஆழஆழமாய்ச் சென்றேன். இப்போ எங்கள் இருவரிற்கும் த…

    • 3 replies
    • 1.1k views
  11. Started by சுமங்களா,

    கெந்தி விழையாடிக்கொண்டிருந்த அந்திமாலைப் பொழுதொன்றில் அடிவயிற்றில் வலி கோடு கீறப்பட்டு குந்தவைக்கப்பட்டேன் ஆளாயிட்டாள் அம்மம்மாவின் குரல் அக்கம் பக்கத்து பெடியளோடை அடிச்சுப் பிடிச்சு விழையாடுறதையும் விளக்கு வைச்சா பிறகு வெளியாலை போறதையும் நிப்பாட்டு அம்மாவின் குரல் இருக்கிற பிரச்சனைக்குள்ளை இவளும் குந்திட்டாளா ஒருத்தனிட்டை ஒப்படைக்கிறவரை ஒரே செலவுதான் அப்பாவின் குரல் என் தனிமையை போக்க எவராவது வருவாரா என வாசற்படிவரை வந்தேன் வயசுக்கு வந்த பெட்டைக்கு வாசல்லை என்னடிவேவை அண்ணனின் குரல் அன்று அடிவயிற்றில் தொடங்கிய வலி இதயத்திலேறி இன்று மூளையில் பைத்தியமாக்கி…

  12. கும்பாபிசேக மேளச்சத்தத்திலும் அமைதியாய் இருக்கும் சாமி போல அடக்கம் உனக்கு எப்படி நாதஸ்வர இசைபோல வாசித்தாய் உன் காதலை * அழும் குழந்தையைக்கூட அழகாய் சிரிக்கவைத்து புகைப்படம் எடுக்க தெரிந்த கலைஞன் நான் எப்படி உன் அழகான புன்னகை மட்டும் புரியாமல் போனது எனக்கு * பொறுக்கவே முடியவில்லை என் மறதிகளை நீ கொட்டித்தீர்த்த ஞாபகங்கள் அவ்வளவும் அளவில்ல பொக்கிசங்கள் * பிழையின்றி தமிழ் எழுத தெரியாத என்னை கவிஞனாக்கவே வந்து தொலைத்திருக்கிறது காதல் * வெக்கப்படுவதற்காகவே சேலை கட்டும் பெண்கள் மத்தியில் வெக்கத்தையே ஆடையாய் கட்டியிப்பவள் நீ -யாழ்_அகத்தியன்

  13. அடயாளத்தேடலுக்காக நிதானத்தை சாகடிக்கும் வித்தை தெரிந்தவர்கள் வித்துவான்கள் முடுக்கிக் கொண்டுவரும் மூத்திரம்போல் எதோ ஒரு திசையை சுட்டிக்காட்டுகின்றார்கள் சுட்டிக்காட்டுதலே இங்கு அனைத்திலும் பிரதானம் காட்டும் திசையில் பயணிக்கப் பாதைகள் இல்லையென்பதை சுட்டிக்காட்டினால் அது துரோகம். சிறுபோகமோ பொரும்போகமோ எதுவும் இங்கு சாத்தியமில்லை தற்போதைக்கு சாவை மட்டுமே யதார்த்தம் உணர்த்துகின்றது இருந்தும் பாடைகட்ட கொஞ்சப்பேர் பாடைக்கு குஞ்சம் கட்ட கொஞ்சப்பேர் தெளிவுதண்ணி கொடுப்பது குறித்துப்பேசினால் அது துரோகம் கேள்விக்குறிகளில் ஊஞ்சல்கட்டி ஆடிக்கொண்டிருப்பதில் எப்போதும் பெருமை செய்திகளும் புத்தகங்களும் தரும் அரசியலை விட போர் தந…

  14. அண்ணனின் அருகமரும் அதிகாரம் உடையவரே சிங்களத்தை சிதறடித்த சூறாவளியே சுற்றும் பூமிக்கும் சுழலும் காற்றுக்கும் பேசக்கற்றுக்கெடுத்த ஆசானே பார் முழுதும் புலிக்கொடி பறக்க தேசமெங்கும் தமிழர் குரல் ஒலிக்க தண்ணீரில் வந்து தாயகம் தொட்ட தனையனே என் களதில் சிங்களம் எம் குரல்வளை நசுக்கி சூதுரைத்து நிண்றபோது உன்மைய்காய் ஒலித்தகுரலே பாலா அண்ணா திரைகடலோடியும் தமிழீழம் காண்போம் எண்றுரைத்த தமிழே கொடிய நோய் வந்து தேகத்தை வாட்டினாலும் வேகத்தைக்குறைக்காமல் கொடிது கொடிது மண்டியிடும் தமிழன் வாழ்வெண்ற வரிப்புலியே வெள்ளைத்தலைகளுக்குள் சரியாசனம் பெற்ற தளபதியே பாலா அண்ணா வஞ்சகரெல்லாம் வாழ்வாங்கு வாழ ஆழப்பிறந்த அண்ணன் தளபதியே கொடிய புற்றுநோயுங்களை காவு கொள்வதா …

  15. ஸ்ரீலங்கா தேசிய கீதம் தமிழில் பாடுவது தடை செய்யப்பட்டு விட்டது. இனி அங்கு வாழும் சிங்களம் தெரியாத தமிழர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் பாடுவதற்கு ஒரு தேசிய கீதம் வேண்டாமா? அவர்களுக்காக எனது சிறிய முயற்சி: --------------------------------------------- ஸ்ரீலங்கா பேயே நம் ஸ்ரீலங்கா நமோ நமோ நமோ பேயே தமிழரின் தலை கொண்டு புதைகுழிகள் யாவும் நிறைப்பாய் வெறி லங்கா ஞாலம் இகழ இனவெறி மதவெறி கொலை வெறி தமிழ் இரத்தம் கொள் லங்கா தமிழரின் கொலைக்களம் என ஒளிர்வாய் நமதருமை பேயே எக்கடன் பட்டும் கொலை தொடர்வோமே நமோ நமோ நமோ பேயே நம் ஸ்ரீலங்கா நமோ நமோ நமோ பேயே http://gkanthan.wordpress.com/index/anthem/

  16. எப்படி நீ ஊமையாய் உட்கார முடியும்? இன்னும் நீ எழவில்லை. சக்தியின் வடிவமாய் உலா வரவில்லை. கன்னங்கள் சிவக்கவும், காதலின் வசீகரங்களில் கூர்ப்பழிந்து கிடக்கவும், நீண்ட மயக்கத்திலும், உனக்கு மட்டுமான சுயத்தின் பிடிப்பிலும் கட்டுண்டே கிடக்கிறாய். நேற்றொருத்தியின் முகம் தென்றலாய் வந்து தேவிட்டாத மொழியில் பேசியபோது காதினிக்கக் கேட்டாய், கண் விரித்து இரசித்தாய். இன்றவளே பேரினவாத இராணுவத்திற்கிரையானாள். இன்றும் பார்த்தாய் பலப்பலவாய் கோணங்களில் அவளின் பெண்ணுடலை மறைப்புக்கள் அற்று மனிதத்தின் பெயரால் உலகமே உற்றுப்பார்த்து உச்சுக் கொட்டுகிறது. யார் அவள்? உன் தாய் உன் சேய் உன் தோழி உன் மண்ணின் மானம் காத்தவள். …

  17. உன்போல் ஆயிரமாயிரம் தங்கைகளை அக்காக்களை தின்னக் கொடுத்துவிட்டு அக்கிரமம் இறுதியில் பெண்ணுடலையே தின்னும் ஆதிக்கம் அதற்கு நீயும் விலக்கில்லாமல் ஆழ்கடல் நுனிமட்டும் அலைகிறதுன் ஆத்ம ஓலம்…… கண்ணுக்குள் நிறைந்த சிரிப்பும் கதைசொல்லும் பொன்முகமும் பூவினும் இனியதாய் பொலிந்த உன் பெண்மையும் நாயினும் கடையதாய் உனக்கு நடந்தவைகள்…… நெஞ்சமெல்லாம் நெருப்புப்பற்ற நீ சிரிக்கும் கொள்ளையழகின் தூய்மை அலங்கோலமாய் அணுவணுவாய் படம்பிடித்து மகிழும் காட்சியாய் நினைக்க நினைக்க மூழும் தீயின் எச்சம் நெஞ்சுக்குள் மட்டுமே புதைகிறது…… தீயெரித்த கண்ணகியின் கோபத்தை கதைகளில் தான் படித்தோம். ஆனால் எங்கள் சக்திகள் உங்களின் சாதனைகளை சமகாலத்தில்…

    • 0 replies
    • 2.2k views
  18. மானத்தி அவள்; தமிழச்சி!! செய்தித் தொகுப்பாளர் இசை ப்ரியா! 1 மண்ணின் விடுதலைக்குப் போராடிய தமிழச்சியின் நிர்வாணம் இணையமெங்கும் ஒளிபரப்பு; உயிரிருந்தும் உலவும் நாம் - அதை கண்டும் - சாகாத; இழி பிறப்பு!! ————————————————————– 2 மானத்தில் - தொட்டால் சுடும் நெருப்பு, இழிவாய் - பார்த்தாலே பாயும் மின்சாரம், அவள் - தாயிற்கும் ஒரு படி மேல் என்று இனி புரியும் – சிங்களனுக்கு!! ————————————————————– 3 அவளுக்கு மட்டும் தெரிந்திருந்தால் ஒன்று பார்த்தவரையெல்லாம் எரித்திருப்பாள், அல்லது – தன்னையாவது எரித்துக் கொண்டிருப்பாள்!! ————————————————————– 4 தப்பித் தவறி அவள் பிள்ளை இதை பார்த்திருந்தால்- எத்த…

  19. அர்த்தமற்ற விடியலிற்காய்..... மித்திரன் ----------------------------------------- தூரத்து விடியலுக்கய் இன்னமும் நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம் பாதையற்று... குந்தியிருக்க குடிநிலமின்றி கூப்பாடுபோடும் மந்தைக்கூட்டமாய் தொலைந்துபோனதாக நாம் நினைத்த நிம்மதியும் நிலவொளியும்..... கட்டிய கோவணமும் உருவ உனக்கு நாள் குறித்த பின்னர் எதற்கு அலங்காரமும் அபிசேகமும்... விதைநிலங்கள் எங்கும் விஷங்களின் விதைகள் இனி உனக்கெதற்கு விளைநிலங்கள்? உறவிழந்தபோதும் உன் விண்ணப்பங்கள் விடையறியாமலே விழுதொடிந்து போகிறது..... எனினும் உன்னுள் உறங்கிக் கிடக்கிறது விடுதலையின் வினாத்துளி..... தினம்தினமாய் நீ …

    • 3 replies
    • 888 views
  20. எழுதாத பக்கமொன்று எனக்காக வைத்திரு! வசந்தத்தைத் தேடும் குயிலே! - உன் வாசல் வருவேன். பாலையை குயிலொன்று வசந்தமென்று அழைப்பது.... அமிழ்த மொழிக்கு எப்படிச் சாத்தியமாயிற்று? குளிர்ச்சி தரும் தென்றல் நான் பேசும் பொழுதில் மட்டும், அனல் கொட்டித் தழுவுவதை - உன் காற்றாடி வேகத்தால் காதிற்குள் கேட்டுள்ளேன். உன் நெஞ்சறை யாகத்தில் தீய்ந்த மணம் உண்மைதான், இருப்பினும் பல பீனீக்ஸ் சிறகடிப்பின் புழுதியைத்தானே நாசி உணர்கிறது. நெருஞ்சியை நொறுக்கி சிரிக்கின்ற பூக்கள் உனக்கானது... உணர்கின்றேன். என்றோ ஒருநாள்...... உனைக்காண வருவேன். எனக்காக......., இதயத்தில் எழுதாத பக்கமொன்று வைத்திரு. பனித்துருகும் விழிக்குளத்தில் குளித்தெ…

  21. போராடிப் பெருவீரர் சாய பிழை பிடித்த இனம் தமிழினம் பலநூறாய் பொதுமக்கள் சாக பண்டிகை எடுத்த இனம் தமிழினம் எதிரியின் எச்சில் இலைக்காக ஏவல் செய்யும் இனம் தமிழினம் சிறீலங்கா கிரிக்கெட்டில் ஜெயிக்க சிரித்து மகிழ்ந்த இனம் தமிழினம் தமிழீழம் தவித்து ஏங்க தமிழகத்தில் தூங்கிய இனம் தமிழினம் மண்ணில் தோன்றிய இனங்களிலே மானங் கெட்ட இனம் தமிழினம் http://gkanthan.wordpress.com/

  22. அகப்பை ஆக்கவும் காய்ச்சவும் அள்ளி பரிமாறவும் நாங்கள் தேவை. இவற்றை செய்வதற்கு பானையில் இருக்க வேண்டும் பானையில் இருப்பதையே நாங்கள் எடுப்போம் நாங்கள்; பானை பிடிக்கும் பாக்கிய சாலிகள் தொண்டுழியர்கள் அப்போதெல்லாம் மங்கையர் கைகளில் மட்டுமே இருந்தோம் இப்போதெல்லாம் மணவாளன் கையிலும் இருக்கிறோம். அநேக சந்தர்ப்பங்களில் செங்கோலாகவும் [ஆண்களுக்கெதிராக] பயன் படுகிறோம். செங்கோல் எனும் சொல்லும் போது பல ஆண்கள் அடி வேண்டியிருப்பார்கள் போல உது பற்றி உங்கள் கருத்துக்கள்

  23. என் இனமே! சாகாவரத்தோடு உயிர்போகும் ரணவலியையும் இலவசமாய்ப் பெற்ற இனம் எம் தமிழினம்! அதனால்தானோ என்னவோ, இன்னும் குற்றுயிராய்த் துடிக்கின்றது! கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன்தோன்றிய மூத்தகுடியாம் தமிழினம் என்பார்கள்! இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை -இன்னும் தலைகுனிந்தே நிற்கிறது அகதியாய்...வாடகை நிலத்தில் ! கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன், பண்டாரவன்னியனுக்கு ஒரு காக்கைவன்னியன், கரிகாலனுக்கு ஒரு கருணா என தலைமுறையாய் தவறாது தொடரும் தமிழினத்தின் சாபக்கேடுகள்!!! காசுக்குக் காட்டிக்கொடுக்க ஒரு கூட்டம்! காரியத்துடன் காய்நகர்த்த இன்னொரு கூட்டம்!! கேவலமாய் இருக்கின்றது "தமிழன்" என்று சொல்ல!!! வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்ற…

  24. மனதில் ஓர் காதல் பரிசு..... கவிதை - இளங்கவி சேர்ந்த உதடுகளுக்கிடையில் சீனப் பெருஞ் சுவராய் அவளின் தலைமுடிகள அவன் உதட்டை உறுத்தின........ அவள் மூச்சின் வெப்பம் மூச்சால் வெளிவர மறுத்து அவள் கண்களூடே வெளிவர அவன் கண்களோ- அவளின அனல் மூச்சின் வெப்பம் தாளாமல் அதைத் தணிப்பதற்கு வேறு இடம் தாவியது....... அங்கே குளிரும் அறையில் கொதி மலைகளின் தழுவல்..... இரத்த நாடிகளின் வேகம் அதன் உச்சத்தில் இருக்க... இரத்த நாளங்களோ அதற்குப் பக்கத் துணையிருக்க.... போதாது என்று- அவன் ஏக்கம் கூடவும்..... போதும் வரை போராடு என்று அவளின் உணர்வும் சேரவும்.... அந்த அறையில் சில நிமிடப் புயல்கள்.... சில கணங்கள் அமைதி.... பல நிமிட அணுயுத்தம் …

  25. பனித்துளியை சூடாக்கும் கண்ணீர்த்துளிகள்.... மாவீரர் அஞ்சலிக் கவிதை..... கவிதை - இளங்கவி.... காலச சுவடுகளில் என்றும் கால் பதித்து விட்ட கார்த்திகை வந்ததுமே... கடும் பனியும் மறந்துபோச்சு.... காலகளை மூடிவிடும் கடும் மழையும் மறந்து போச்சு..... கனவுகளை ஆட்சி செய்யும் காதலும் மறந்து போச்சு..... கவலைகளைத் துறந்து.... காதலை மறந்து... காடு மேடெல்லாம் திரிந்து கடும் பசியும் தாங்கி - தமிழரின் கனவுகளை நினைவாக்க கஸ்ரங்கள் மட்டுமே அனுபவித்த காவிய நாயகர்தாம் என் நினைவில்...... கடலிலும் வெடித்தான்.... கட்டாம் தரையிலும் வெடித்தான்.... கடல் நீர் அருந்தி மட்டும் காவியங்கள் பல முடித்தான்..... காரிருளில் நடைபயின்று -எதரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.