கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
என்ர பைரவிக்கு அனைத்தும் வரும் இருந்தும் எனக்கும் “சிந்து”க் கிறக்கம் . பௌதீகம் இதுவரை பைரவி மட்டும். சித்தத்தில் மட்டும் சிந்து சிலநேரம்! பச்சசைக்கிளி முத்துச்சரம் இரயிலிற்குள் எனைக் கட்டும் படிச்ச பாவபுண்ணியம் என் கனவினில் எனைக் கட்டும் பிடிச்ச பைரவி நொந்திடக்கூடாது என, சரிக்க முடியாது இதுவரை என் பயணம் என் பைரவி என் உசிர்... சொல்லிச் செய்தது போல் அப்பிடி ஒரு பொருத்தம் நான் கொஞ்சிக் கொஞ்சி அவள் சொக்கிலும் புதுக் குழி உதட்டு முத்தமும் கன்னத்துமுத்தமும்...கன்னமே அதிகம்! ...பைரவி என் உசிர்! எந்தன் இரசிகை, விவாதக் காரி, விளையாட்டும் காரி சில்மிசம் சிருங்காரம்... அவள் சிரிப்புச் சில்லறை போல் சிதறும் என் அகந்தை உடைத்துச், சிறுமை திருத்திச…
-
- 9 replies
- 1.6k views
-
-
இயல்பினை கடந்த திடத்துடன் இயற்கையை வென்றவர்கள் எப்பொழுதும் இறப்பதில்லை! அறத்தினை மீறிய உலகிற்கு மறமென்றால் இதுவெனக் காட்டியோர் தம் இனமென்றே தம்முயிர் வாட்டியோர்! நிலத்தினில் வீழ்ந்திட்ட விதைகள் புலத்தினில் புதிதாய் கதைகள் உம் கல்லறையேனும் சொல்லுமா விடைகள்? உங்கள் ஒவ்வொரு கதையும் போதும் எம் பரம்பரை உம்மைத் தொடரும் உம் இலட்சியம் அடையும் வரை! அதுவே உங்களுக்கான உண்மையான அஞ்சலிகள்!
-
- 3 replies
- 1.2k views
-
-
இல்லாதவர்களின் கனவு மீள் எழுத்து : தீபச் செல்வன் அவர்கள் பெருங்கனவுடனே மரணத்தை முத்தமிட்டனர். கடைசியில் அவர்களின் ஞாபகம் நிரப்பிவிடப்;பட்ட கல்லறைகளும் நம்மிடம் இல்லை. தாய்மார்கள் தீப்பந்தங்களையும் தமது பிள்ளைகளுடன் இழந்து விட்டனர். மனைவிமார்கள் தங்கள் புன்னகையுடன் கல்லறைமீதான தமது சொற்களையும் இழந்து விட்டனர். கனவின் அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிடக்கிறது. இம்முறை எந்தப் பூக்களும் மலரவில்லை. இலைகளில் குருதி ஒழுக பூமரங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன. தலைகளை மின்கம்பத்தில் மோதி இல்லாதவர்களை அழைக்கிறது நம்பிக்கையற்ற மனம். கனவை உறிஞ்சி எடுத்துக்கொண்டு அவர்களை தின்று முடித்துவிட்டது உலகம். அவர்கள் மீதெழுதப்பட்ட மரணப்பாட…
-
- 0 replies
- 676 views
-
-
களத்திற்கு வரும் பொது கவிதையுடன் வருவதென முடிவெடுத்து மாவீரர் கனவுகளை நினைவாக்க கருத்தியலால் கவிதை வடிக்க நடுங்கியது இரு கரமும் சொல்லுண்டா மாவீரர் தியாகத்தை கவிதையாக்க நிகருண்டா அவர்கள் தியாகத்திற்கு வெதும்பியது மனம் கல்லாக்கி மனத்தைக் கருங்கல்லாக்கி வித்தாகிப்போன மாவீரர் கவிதை எழுத சொல்லுண்டா என் மனம் துடித்தது மல்லுக்குக் கவிதைஎழுதி மாவீரர் வில்லுக்கு வினை சேர்ப்பதா நான் எல்லைக்கும் செல்லாதவன் எல்லை கடந்தவரை எழுதிப் பழி சேர்ப்பதா சூரியதேவன் குழந்தைகளின் கூரிய இலக்கினை ஆரியன் அடக்கினான் எனப் பேருக்குப் பொய் எழுதுவதா பாரினிலே ஈழம் பிறந்திட மாரினிலே தழும்புடன் பகைவன் பாசறை புக…
-
- 0 replies
- 911 views
-
-
பாராட, பார்த்தாட, பாதைபல வார்த்தாட வகுத்த பிரபாகரம் வாழீ போர்த்து மழைத்துளி பொழியும் பொன்முகிலைச் சுமக்கும் ஆகாய வெளியே! நீ வாழீ ஆர்த்து அலை எறிந்து அன்பு நுரை சுரக்கும் ஆனந்தக் கடலே! நீ வாழீ பார்த்து வர்ணப் புன்னகைக்கும் வனப்புகளில் கோலமிட பூத்தெழுந்த பூமகளே! வாழீ - இங்கு வார்த்து ஒரு வாழ்த்துரைக்க வல்லமை கோர்த்துவந்த திகட்டாத செந்தமிழே! வாழீ காலமகள் புதல்வனை தூளியிலே தந்த கார்காலத் திங்களே! வாழீ - அக் கதிரவனின் கால் தடங்கள் வலயவரப்பெற்ற வல்லமைத் திருமண்ணே! வாழீ சூரியப் புதல்வனைத் தழுவிச் சுழல்கின்ற கனிவான காற்றே! நீ வாழீ - அடர் காட்டிடை அணைத்துக் களைப்பாற்றி அனுப்பிய அழகான தருகளே! வாழீ மானமகன் தலைசாய்ந்த…
-
- 1 reply
- 877 views
-
-
எங்கள் அன்னை மண்ணை மீட்க ஆயுதம் ஏந்தி மரணித்த நீங்கள், கல்லறை தெய்வங்களாய் எம் தேசமெங்கும் காவல் காத்தீர்கள். மரணித்த உங்களைக்கூட மன்னிக்க தெரியாத மானங்கெட்ட சிங்கள காடையர்கள் எங்கள் காவல் தெய்வங்களின் கல்லறைகளை அழித்து உங்களையும் வென்றுவிட்டதாக எண்ணி மார்தட்டிக்கொள்கின்றார்கள். மானங்கெட்ட சிங்களவன், யார் இந்த சிங்களவன்? கல்லறைகளைக்கூட மன்னிக்க தெரியாத இவர்கள் புத்தர் வழி வந்த புண்ணியர்களா? யார் அந்த புத்தன்? இவனும் ஒரு அரக்கர்கூட்ட தலைவனா? அல்லது நல்வழி காட்டிய நல்லவனா? விடை தெரியாமல் பாவப்பட்ட தமிழர் நாம் இன்று இவர்கள் பிடியில். இவர்களுக்கு உங்கள் கல்லறைகளை மட்டும் தான் அழிக்க முடியும். எங்கள் இதய அறைகளில் இருந்து உங்கள் நினைவுகளை ஒரு துரும்ப…
-
- 0 replies
- 718 views
-
-
மெளனங்களாய் உங்கள் நினைவேந்திக் கரைகிறது இந்நாள்….. முப்பதாண்டுத் தவம் முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு மூச்சறுந்த நிலையில் எல்லாம் உறைந்து போய்க் கிடக்கிறது…… வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம் வரலாறாய் பதித்துவிட்டு வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில் இந்த மெளனங்களும் ஊகங்களும் வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது….. உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில் இப்போ நல்ல மழை பெய்கிறது….. நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வை உறிஞ்சிக் குடிக்கிறது இந்தக் கூட்டம்….. உங்கள் சொல்லுக்கு உங்கள் அன்புக்கு உங்கள் நம்பிக்கைக்கு உங்கள் கனவுக்கு உயிர் கொடுக்கப் போனவர்கள் தவிர்க்க முடியா நில…
-
- 3 replies
- 924 views
-
-
இவள் முகம் பார்த்தால் இவனுக்குள் காதல் இல்லையேன்று மறுத்திட இதயமில்லை என்னிடம் இனியவளின் வார்த்தை இதமாய் தானிருக்கும் இடிகள் விழும் காலமும் இனியாய் தானிக்கும் இது என் காதலின் ஆரம்பம் இவள் முடிவின் இறுதியாகுமோ? இமை மூடி திறந்தால் -என் இமைகளை தாண்டி நீர் சொறியும் இசையதை கேட்டால்- அதில் இனிமையின்றி இருக்கும் இப்படியேன் ஆகிவிட்டேன் இறைவனிடம் கேட்டேன் இன்று வரை பதில்லை -அருகில் இருப்பவரிடம் கேட்டேன் இது என்ன கேள்வி என்றார் இப்படியேன்னை சாகவிட இனியவளே நான் என் செய்தேன் இதயமதை கேட்டதற்க்கு இறக்கும் வரம் தருவதா? இதிலுனக்கென்ன ஆனந்தம் இன்றும் நம்புகின்றேன் இறுதிவரை பார்க்கமாட்டேன் இன்னோருவள் முகமதை இருக்கிறேன் உனக்காக இவ்வ…
-
- 12 replies
- 2.6k views
-
-
கனவும் நனவுமாய்ப்போன காலபைரவர்களே கார்த்திகை நாளில் வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி கடலளவு கருணை இல்லாவிடினும் _சிறு கடுகளவேனும் நெஞ்சில் ஈரம் கொண்டு விடுதலை வேட்கையைக் கூட விலைபேசும் மனிதர்கள் மத்தியில் வீர வரலாறு எழுதினாயேடா தோழா வீர வரலாறு எழுதினாயே... தீட்டிய மரத்தில் கூர்பார்க்கும் எமக்காய் தினம் தினம் சிலுவை சுமந்தாயே தோழா தினம் தினம் சிலுவை சுமந்தாயே... உணவுண்ட கோப்பையில் மலங்கழிக்கும் ஈனமா இனத்திற்காய் உன் இன்னுயிரை ஈய்ந்தாயே தோழா இன்னுயிரை ஈய்ந்தாயே... கூடப்பிறந்த சோதரியை கூட்டாக கருவறுக்கும் போது கூட்டிக்குடுக்கும் கயவர்கள் மத்தியில் குண்டு சுமந்தாயேடா தோழா குண்டு சுமந்தாயே... இரக்கப்பட்டு விடும் கண்ணீரையே …
-
- 3 replies
- 673 views
-
-
கருக்கொள்ளும் போதே கல்லறைத் தெய்வங்களாகக் கடவது என காலன் சொன்னானோ என்னவோ கனவுக்காக உயிர்கொடுக்கச் சென்ற காலத்தின் புதல்வர்களே கார்த்திகை நாளில் வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி கணப்பொழுதும் கண்துஞ்சாது காத்திருந்து கந்தகம் சுமந்து காவியமான காவிய நாயகர்களை காசுக்காக விற்றுவிட்டு உங்கள் கல்லறைகளிலும் வைத்து சில்லறை பார்க்கும் கார்த்திகை நாளில் வணங்குகிறோம் எம் இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சிறு கடுகளவேனும் கருணை கொண்டு கார்த்திகைப் பூக்களை காலால் நசுக்குவது போல் கல்லறை தெய்வங்களையும் சிறு கணப் பொழுதுடன் மறந்துவிடுகிறோம் எம் களியாட்டங்கள் தொடர்வதற்காய் விளக்கிலே பட்டு வீழ்ந்துபோகும் விட்டில்கள் போல உங்கள் வீரம் விளைந்…
-
- 17 replies
- 2.1k views
-
-
வன்னியில் கற்பழிப்பாம் யாழில் கொலையாம் தீவில் மண் பறிப்பாம் அகதி முகாமில் கருவறுப்பு தொடர்கதையாம் எழுதுகிறார் பேசுகிறார் சாவீடு போல் பறை அடித்து அழுகின்றார் எல்லாம் சரிதான் இதை மாற்ற என் செய்தார் நாலு பேர் சேர்வோம் என்றால் நாலே நாலு பேர் தானா... சுமை யாவும்அவர் மேலா..... வேலை வீடு வீடு வேலை நேரமிருந்தால் கொஞ்சம் சினிமா பெரும் பகுதி தொடர் நாடகம்என தூங்கிக்கிடக்கின்றார் துளியளவும் அதற்கான உழைப்பில்லை ஆனாலும் மண் வேண்டும் தான் பிறந்த தனை ஏற்ற மண் வேண்டும் அதற்காக உழைப்பதெப்போ...? அதற்கான உனது நேரம் என்ன..? பாதை தெரிந்ததுதான் பாதையில் நடந்தாயா ஒரு அடியேனும் பாதையில் வைக்காமல் பயணமுடிவை எவ்வாறு கணக்கிட்டாய்? வா வாரத்தில்…
-
- 14 replies
- 1.5k views
-
-
எம் கண்ணுணர முடியாத கண்மணிப்பூக்களே! ஏனிந்த மௌனம்? இன்னும்…. கார்த்திகை மலரவில்லை காண்டாமணி ஒலிக்கவில்லை புன்னகை பூக்கவைக்கும் பேச்சொலியும் கேட்கவில்லை பார்த்தொருகால் வந்தெமக்கு….. பூத்தமுகம் காட்டுதற்கு புனிதர்கள் இன்னும் எழவில்லை. ஏனோ பெரு மௌனம்!!!!! காலதேவரே!....... இதுவென்ன கண்ணாமூஞ்சி விளையாட்டு கபாடக் கதவங்களின் தாழ் திறக்கும் ஓசைகூட மானசீகச் செவிகளின் மன்றம் வந்து சேரவில்லை ஐம்புலனை சிறிதடக்கில் - உம் அருவுருவின் சலசலப்பு ஆன்மாவுக்குக் கேட்கும் இப்போது, ஆயத்த ஆரவாரமும் அருவுருவில் உணரவில்லை சலசலப்புச் சத்தமும் செவிப்புலனுக்கெட்டவில்லை காலதேவர்களே உம் மூச்சின் வெம்மை இன்னும் என் காதோரம் பரவவ…
-
- 4 replies
- 1.1k views
-
-
தூல உடல் துறந்தோரின்.... ஆலயமழித்தோர் அரன்மனையும் கால நெருப்பில் கட்டாயம் அழியும். இது கார்த்திகை மாதம் பூவேந்தி எம் புதல்வரின் பொன்முகம் காணும் காலம் மண்மடியில் குடிபுகுந்த புனிதர்களைப் புதுக்குவித்து, எண்சாண் மெய்சிலிர்த்தெம் உயிர் உருகும் நேரம். காலப்பெருவெளியில் ஈழக்கதை எழுதிய இளவேணில்கள் - தம் உறவுகளைக் காணக்காத்திருக்கும் திருமாதம். தூல உடல் துறந்தோரின் ஆலயம் அழித்தோர் அரன்மனையும் கால நெருப்பில் கட்டாயம் அழியும். ஈனமா… இனத்திற்கா… இன்னுயிரை ஈந்தோமென தோழ ஆத்மாக்கள் தொய்தொடுங்கக்கூடாது. ஆழத்தாய்மடியின் அணைப்பிற்குள் இருக்கும் எங்கள் காலப்புதல்வர் கண்கலங்கக்கூடாது. ஞாலப் பரப்புகளில்……. உறவுகளே! காலச்சி…
-
- 12 replies
- 1.8k views
-
-
அம்மம்மம்மா! மண்ணில் இருந்து விண்ணுக்கு நீ எதையும் எடுத்துச் செல்லவில்லை என்னுள் சில விதைகளை விதைத்துச் சென்றுவிட்டாய்! இதோ உன் நினைவு மலரில் நம் உறவுச் செடி வேர் ஊன்றுகிறது மெது மெதுவாக! மறக்க முடியவில்லை! மின்னலாய் தோன்றி மறைந்த நம் 24 வருட உறவை! நடந்தவையெல்லாம் கனவாக இருக்கக் கூடாதா! கிள்ளிப்பார்த்தேன்.... வலிக்கிறது அம்மம்மா! அம்மம்மா என்னும் ஆடையை உனக்குடுத்தி பேத்தி என்னும் சட்டையை எனக்குடுத்தி காலன் தைத்த உறவில் நாம் வாழ்ந்த வாழ்க்கை என்ன! அம்மம்மா உன் அன்பை ஆழ்ந்து அனுபவித்த முதல் பாக்கியசாலி நான்! வெளிமனம் அறியாது உன் அருமைகளை! உள்மனம் மறவாது நீ அருளிய வரங்களை! உன் குழந்தைகள…
-
- 27 replies
- 4.2k views
-
-
அவன் வருவான் அதுவரை காத்திரு…. அழுதபடி உனக்காய் இல்லாத கடவுளையெல்லாம் இறைஞ்சியதன் பலன் இன்று நீ அறுக்கப்பட்ட செட்டைகள் முளைத்துப் பறக்கும் பறவைபோல் இருள் மதில்கள் தாண்டி வெளியில் வந்திருக்கிறாய்…. *குறுந்தகவல் மூலம் உன் விடுதலைச் செய்தி* மனம் முட்டின மகிழ்ச்சி நிலத்தில் நிற்காது கால்கள் பறக்கின்றன….. மூன்றாண்டு அஞ்ஞாத வாசம் முடித்து – உன் வரவை எதிர்பார்த்திருந்த குழந்தையின் முகத்தில் மீளவும் சிரிப்பை பூக்க வைத்துள்ளாய்…… அவன் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி இனி நீ கனவு காணலாம் கவிதைகள் படிக்கலாம் அச்சம் தரும் கனவுப்பாளங்களை உடைத்துக் கொண்டு இரவுகளில் இனி நீ உறங்கலாம் இது நிரந்தரமாகட்டும். கனவுகளுக்காய்ப் போன உனது கண்ணாளனின்…
-
- 4 replies
- 1.6k views
-
-
நம் பசி தீர்க்க தன் பசிக்கு உணவு நாடிச் சென்றவள சென்றும் பல நாழியாச்சு நலமோடு வரும் வரையில் நாம இருப்போம் ஒற்றுமையாய் நகர்ந்து சென்று ஓடாதே நன்றும் தீதும் காத்திருக்கும் நிறத்தில் வேறு கண்டாலும் நிஜத்தில் நாம் உறவுகள் பத்திரமாய் நாம் இருப்போம் சென்ற வழி பார்த்திருப்போம் பதறாதே சோதரி பகல் பொழுது சாய முன் பசி தீர்க்கும் தாயவள் பாயந்து ஓடி வந்திடுவாள்
-
- 4 replies
- 927 views
-
-
எம் தேசத்தின் விடியலுக்காக வித்தான வீர மறவர்களே..! கல்லறை விட்டு எழுந்து வாருங்கள்.. கரிகாலனின் வழியில் சென்று போர்க் களங்களில் எதிரியை வீழ்த்தி சந்தன பேழைக்குள் உறங்கும் எங்கள் மாவீரர்களே எழுந்து வாருங்கள்.. புதிய சரித்திரம் படைப்போம் உயிர்த்து விடுங்கள்… அன்னியரின் அடிமை விலங்கை உடைத்து எரிமலையாக எழுந்த சூரிய புதல்வர்களே தமிழீழ மண்ணில் உயிர்த்து விடுங்கள் .. கண்கள் மூடி உறங்கும் எங்கள் தோழனே கல்லறையை விட்டு வெளியே வாருங்களேன்… கார்த்திகை தீபம் ஏற்றும் வேளையிலே எங்கள் உள்ளம் துடித்து அழுகின்றோம் கார்த்திகை பூக்களே எழுந்து வாருங்கள்…. ஈழத்தின் வித்துக்களாய் தமிழீழத்தின் காவற் தெய்வங்களாய் தேசிய தலைவனின் பிள்ளைகளாய் .. தமிழீழம்தா…
-
- 1 reply
- 981 views
-
-
"சங்கமாடிய தமிழ் என பேசிய தம்பிமாரெல்லாம் கடல் கடந்தனர் துப்பு கெட்டவர் நாயிலும் கீழவர் அகதி லேபலில் தூசி தட்டட்டும் கப்பலேறி கனடாவில் நக்கட்டும்" - -புதுவை இரத்தினதுரை நன்றி. உண்மையிலும் உண்மை.
-
- 11 replies
- 2.2k views
-
-
பரந்த வெளியிலே ஒற்றை மரமாய் தனித்து நின்றாலும் இரைதேடும் பட்சிகளுக்கு தங்குமிடமாகிறது மேற்கே மறையும் சூரியனும் தெளிந்த நீரோடையும் மெல்லென் தழுவிச் செல்லும் காற்றும் நீரிலே தோன்றும் சூரிய ஒளியும் இரவை நோக்கி நகர்ந்து சென்று உனக்கும் எனக்குமாய் நாளை எனும் உதயம் ஆழ்ந்த் நம்பிக்கையோடு விடிவு பிறக்கும்.
-
- 3 replies
- 916 views
-
-
This is the middle way, this is the eightfold path This is the way to the end of suffering. Right view Right view is the forerunner of the entire path. Right view provides the right practice. Right view leads to a virtuous life. Right view comes at the end of the path. Right view requires you to know that the dying always look up to the sky and therefore get ready to shell hospitals. Right intention Birth is suffering, aging is suffering, Sickness is suffering, death is suffering, Sorrow, lamentation, pain, grief and despair are suffering, Association with the unpleasant is suffering, Separation from the pleasant is sufferin…
-
- 0 replies
- 658 views
-
-
புலிகளை துரோகி என்றேன். அவர்கள் என்னை அரவணைத்துக் கொண்டார்கள். ஈழத் தேசியம் ஒரு கற்பிதம் என்றேன். பௌத்த மரபு உனக்கு வசதியாய் இருக்கும் என்றார்கள். பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட போது, நான் புலிகள் மக்களை கலைத்துப் பிடித்துச் சுட்டார்கள் என்றேன். எனது நூலை ஆங்கிலத்தில் கொண்டு வர உதவினார்கள். போருக்கு உதவிய எல்லா நாடுகள் குறித்தும் மௌனம் காத்தேன். சாதகமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து போருக்கு எதிராக நிறுத்தினேன். என்னை நடுநிலையாளர் என்று சான்றிதழ் கொடுத்தார்கள். வெளிப்படையாக வரவா என்றேன். இல்லை இல்லை நீ இந்த முகத்தோடு இருப்பதுதான் எங்களுக்கு வசதி என்றார்கள். இதற்கு மேல் விற்க எதுவும் இல்லை என்றேன். அவர்களோ முட்கம்பி வேலிகளிலும் வானாந்தரங்களிலும் வீ…
-
- 11 replies
- 1.7k views
-
-
அம்மா உன் அன்பு உள்ள வரை தனிமை தெரிவதில்லை உன் கரிசனம் இருக்கும் வரை உணவும் தேவையில்லை தனித்த் போது ஒரு சிணுங்கலில் தாவி ஓடி அணைத்திடுவாய் அள்ளி முத்தம் தந்திடுவாய் அம்மா மடி மீது நான் மட்டும் அரசாட்சி கண்ணுறங்க கதை சொல் வாய் அப்பாவை எனக்கு அறிமுகம செய்தவளே தப்புக்கள் நான் செய்தால் தட்டிக் கேட்பவளே பகட்டான பட்டுச்சட்டை கலர் கலராய் காலுறை மெத்தென்ற சப்பாத்தும் கை காது கழுத்துக்கும் நகையணிபூட்டி அழகு பார்த்தவளே பள்ளிக்கு சென்று நானும் பாடங்கள் பல படித்து பரீட்சையில் சித்தி பெற்று பட்டங்கள் பல பெற்று பாங்காய் ஒரு பணியிடத்தில் பல்லாயிரம் பணம் பெற்று பக்குவமாய் வீடு கட்டி பல பேரும் பார்த்து நிற்க பாரினில…
-
- 6 replies
- 3k views
-
-
சிற்ப்பிகள் இரண்டு வரைந்த ஓவியம் வெள்ளை நிறத்தில் விளையாட்டின் விடைகள், கூடத்தில் மழலைகள் போட்ட கோலங்கள் நிலவுகள் எழுதிய கவிதைகள் இங்கு சமாதான நிறத்தில்
-
- 6 replies
- 1.5k views
-
-
செஞ்சோலை தெருவெல்லாம் புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே; தமிழ் படித்த சிறுமியின் குரல் சப்தம் தொலைத்து கிடக்கிறதே; பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம் மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே; மறக்க இயலா மரணச் சூட்டின் - மண்டியிடவைத்து அவன் சுட்ட வெடி சப்தத்தின் - சற்றும் மனிதம்பாரா எம் குலமழித்த வெறியில் - முளைத்தெழு உறவுகளே; அடிப்பவனை மன்னிக்கலாம் அவனே திருப்பி அடிபானெனில் - திருப்பி அடித்தவனை திருப்பி அடிக்கும் வரை அவன் வருந்தி திருந்தும் வரை மன்னிக்காதே மடையுடைத்த வெள்ளமென பொங்கியெழு உறவுகளே; செத்தவன் செத்தவளெல்லாம் வெறும் சுப்பனும் குப்பனுமல்ல; எம் விடுதலையை 'உயிர்விடும் வரை காத்த வீரர்கள் - அவர் உறைந்த மண்ணில் மீண்டும் புடைச…
-
- 0 replies
- 715 views
-
-
மூட்டை முடிச்சும் முட்டுவலியும் மூச்சிப்பிடிப்புடன் வீடு வந்து சேர்ந்தேன் வளைகுடாவிலிருந்து விடுதலையாகி வந்தேன்! மணக்கும் மனைவியின் முகமோ சுருக்கம் கண்டு; சுறுக்கமாய் முதுமைக் கொண்டு! முன்னாடி நிற்கும் எனைத்தெரிய கண்ணாடு போடும் திரை மறைத்த விழி! நரைக்கொண்டு கரைப்படிந்து; உழைத்தக் காசை செலவுச் செய்ய வியாதியுடன் வந்திருக்கிறேன் வயோதிகத்தில் வந்து நிற்கிறேன்! இளமைக்கு வேட்டு வைத்து கடமைக்கு ஓட்டுப் போட்டு கடனுக்கு ஒட்டுப்போட்டு; பாலையிலேப் பலக்காலம்! செழிப்பான வாலிபத்தை மாதச் சம்பளத்திற்கு விற்றுவிட்டு; நமக்கென்று துணைவேண்டி ஓடிவரமுடியாமல் ஊன்றி வருகிறேன் குச்சினை! எட்டி உதைக்கும் பிள்ளை வேண்டி ஏங…
-
- 11 replies
- 1.9k views
-