கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
[size=3]தேடல்கள் நீண்டாலும்[/size] [size=3]தீர்க்கமாய் முடிவெடுத்து[/size] [size=3]தேடு பொருளை சரியாய் தெரிந்து [/size] [size=3]திசைதனையும் ஆய்ந்து[/size] [size=3]தேடலை மேற்கொண்டால்[/size] [size=3]திருப்திதான் திருப்பதி தேடுபொருள் கிடைக்கும் திடமாகத் தான் நம்பு தொலைத்தவை நிறையத்தான் தமிழன் தேடத்தான் வேண்டும் தேடு தொலைத்தது ஒன்றும் தொலைவிலில்லை தேடத்தான் வேண்டும் தேடு ஒற்றை காலில் நிற்கும் கொக்கு கூட தேடித்தான் நிற்கிறது ஒற்றுமையாய் தேடிப்பார் [/size] [size=3]தேடுபொருள் நிச்சயம் கிடைக்கும்[/size] வல்வையூரான்
-
- 4 replies
- 731 views
-
-
விழுந்தவனைத் தான் இங்கு மாடும் ஏறி மிதிக்குது நொந்தவன் புண்ணில் அம்பு வந்து குத்துதூ சுமைதாங்கி மீதுதான் இடியும் வந்து விழுகிது கட்டிய மனக் கோட்டை எல்லாம் சுக்கு நூறாய்போகுது பரதேசி போலத்தான் இந்த உயிரும் சுத்துது கால்கள் போன போக்கிலே இந்த உயிர் போகுது வாழ்க்கை என்பதே அர்த்த்ம்யின்றி வீணாகப்போகுது முடிவு உள்ள வாழ்கையில் முன்னேற மனம் துடிக்குது பரந்து பட்ட உலகத்தில் இறக்கை இன்றி பறக்கத்துடிக்குது கிடைததே போதும் என்று மனமும் தடுக்குது
-
- 4 replies
- 1.7k views
-
-
யாருக்கும் பிரச்சனை இல்லை... --------------------------------------------------------- பாலஸ்தீனப் போராளிகள் பற்றி நான் பேசலாம். அயர்லாந்து சுதந்திரப் போராட்டம் பற்றி நான் எழுதலாம். தியான் மென் சதுக்கக் கொலைகளுக்கும் நான் குரல் கொடுக்கலாம்... யாருக்கும் பிரச்சனை இல்லை ஈராக் பற்றி நான் கவலைப் படலாம் திபெத்தியர்களுக்காக நான் கண்ணீர் விடலாம்.. பர்மியப் பெண்ணுக்கும் நான் பரிந்து பேசலாம். யாருக்கும் பிரச்சனை இல்லை சேகுவேராவை நான் கொண்டாடலாம்.. பிடல் காஸ்ட்ரோவை நான் வணங்கலாம்.. கொசோவா விடுதலையை நான் ஆதரிக்கலாம்.. யாருக்கும் பிரச்சனை இல்லை உலகின் எந்த மூலையில் இனக் கொலை நடந்தாலும் ந…
-
- 4 replies
- 1k views
-
-
ஜூன் மாத "கணையாழி" இதழில் வெளியாகியுள்ள எனது "அஸ்மிதா எனும் குட்டி தேவதை" கவிதையை, யாழ் களத் தோழர்களுடன்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! அஸ்மிதா எனும் குட்டி தேவதை ----------------------------------------------------- எங்கள் எதிர் வீட்டிலிருக்கும் தன் பாட்டி வீட்டுக்கு அஸ்மிதா எனும் குட்டி தேவதை கோடை விடுமுறைக்கு வந்திருக்கிறாள். கையோடு கொண்டுவந்த குட்டி மழைக்காலத்தை எங்கள் வீட்டில் விரித்து வைத்து, நிறமற்ற கோடையை நிறப்பிரிகை செய்து வானவில் காட்டுகிறாள். அஸ்மிதா பாட்டி, அஸ்மிதா தாத்தா, அஸ்மிதா நாய்க்குட்டி வரிசையில் அஸ்மிதா மாமா, அஸ்மிதா அத்தை என்று நாங்களும் பெயராகு பெயர்களாகிறோம். க…
-
- 4 replies
- 1.6k views
-
-
எல்லா துன்பமும் கடந்து போய் இனிதே மலர்க இனி வரம் ஆண்டு.அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.Happy New Year .🙏 மார்கழி மாதமடி மழை சிந்தும் நேரமடி கண்ணம்மா பா.உதயன் ——————————————————————————— மார்கழி மாதமடி கண்ணம்மா மழை சிந்தும் நேரமடி பொழுது புலர்ந்ததடி பூத்திருக்கு காலையடி கண்ணம்மா பாவை இன்னும் துயிலுவியோ பரம்தாமன் புகழ் பாடல்லையோ மார்கழி மாதமடி மலரவன் மேனியிலே மழை சிந்தும் நேரமடி மங்கை உன் கூந்தலை போல் கங்கை அணிந்தவனை காதல் செய்யல்லையோ கண்ணம்மா கன்னி நீயும் துயிலுவியோ கடும் குளிர் காலையடி காலைக் கதிரவனும் கண் விழிக்கும் நேரமடி காலைப் பூ சூடலையோ கண்ணம்மா கண் இமைகள் பாடல்லையோ காலை …
-
- 4 replies
- 794 views
-
-
இன்றைய நட்சத்திரமாக இளைஞனை தமிழ்சிறி பதிந்ததும், முன்பொருநாள் யாழ்கள உறவுகளிடம் இளைஞன் பெரிதும் சிறிதுமான இரு மேசை விளக்குகள் பேசுவதாக ஒரு சம்பாசனை கேட்டிருந்தார். அப்ப எழுதிய கவிதை போன்ற சம்பாசனை. 01/08/2007 எழுதியது. இன்று இணைப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. தொப்புள்கொடியுறவு. பெரிய மேசை விளக்கு தாய்! சிறிய மேசை விளக்கு சேய்! குழந்தை: ம்.ம்.ம்ம்மா, ம்.ம்.மா, தாய் : என்ன கண்ணே பசிக்கிறதா; குழந்தை; தெரியவில்லையம்மா, தாய் : ஓம் எனக்குத் தெரியும் உனக்குப் பசி என்று, குழந்தை: அதற்கு என்ன செய்ய வேண்டும் அம்மா, தாய் : இதோ! எனது மார்பில் சுரக்கும் பாலைக் குடி , குழந்தை : எப்படி எனது தொப்பிளாலா, தாய் : இல்லை ! உனது வாயால், குழந்தை : அம்மா! முன்…
-
- 4 replies
- 980 views
-
-
வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும் வாழ்கவே! ஆற்றலுடை தொழில் வளமும், அறிவியல் துறை வளர்வும், மாற்றமுறாப் பண்பு நிறை மாட்சிமைகொள் ஆட்சிசெய்தும், ஏற்றமுடன் தமை ஈந்த சரித்திரத்து நாயகரை சாற்றிவைத்து கூற்றியம்ப சத்தான புலமை செய்தும், வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும் வாழ்கவே! காடுகளும், கழனிகளும் கலை கொழிக்கும் கூத்துகளும், களங்கள் பல கண்ட – வீரக் கதைகள் சொல்லும் ஆவணமும், வேழமொத்த பகை விரட்ட வெகுண்டெழுந்த வேங்கையமும், வீரமுடன் பாடிப் பாடி வெற்றி வாகை சூடியே வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும…
-
- 4 replies
- 1.2k views
-
-
உணர்ச்சியலைகள் அடித்தோய்ந்த பின்பும் உன் கரையில் மணலையள்ளி வருடியபடி வெண்ணிலா உன்னை ரசித்திருப்பேன்! கடல் மீண்டும் கரைதொடும்... நிலவு மீண்டும் வானம் வரும்... என்ற எதிர்பார்ப்புடன், வெற்று வானத்தை பார்த்தபடி... சுடுமணலில் நான்!
-
- 4 replies
- 1.7k views
-
-
அமெரிக்க மூத்திரம். இடிபாடுகளுக்குள் இருந்து சிலிர்த்துக் கொண்டு எழுந்து வரும் அக் குழந்தைக்கு கைளும் இல்லை; கால்களும் இல்லை நிலைத்த அதன் விழிகளுக்குள் உறையும் பொருள் அறிபவர் யாரும் இல்லை. அக் குழந்தைக்கு முன் நீங்கள்விரித்து வைக்கும் உலகம் இதுதான் : வற்றிய முலையுடன் சிதறிய பேரன்பு, மண்ணுடன் கலந்த கோதுமை மாவை பிரித்தெடுக்கச் சென்று பிணமான அரவணப்பு, தகர்ந்து சிதறிய கட்டிக்குவியலுட் சிக்கிய உடன்பிறந்த பொம்மைகள், சுற்றிச் சுற்றி திசை அழிந்த சுடுமணற்காற்று அன்றில் குளிர் உறையும் கூடாரம் அலையும் சிறு நிலம். அக்குழந்தைக்கு கந்தகக்காற்று வாக்களிக்கப்பட்டது. அதன் நிலம் பறிக்கப்பட்டது. பசியையும் தாகத்தையும் புறக்கணித்து கொடும் அதிர்வுகளும் கொலைவெறிப் பேச்சுக்களும் இல்லாத ஒ…
-
-
- 4 replies
- 416 views
-
-
புரியாத புரிதல். புரிதல்கள் இரண்டு தமக்குள் சந்தித்துக்கொண்டன தமக்குள் புரிந்துணர்வில்லாமலே பேசிக்கொள்ள ஆரம்பித்ததன புரிதல்கள்; புரிதல் பற்றியே புரிதல்கள் பற்றிய சர்ச்சை புரிதல்கள் இல்லாததால் புரிதல்களுக்குள் முற்றிக்கொண்டிருந்தது ஒரு புரிதல் தன் பங்குக்கு புரிதல் பற்றிய தன் விளக்கத்தினை பல்வேறுவகையில் புரியவைக்க முயற்சித்தது இன்னொரு புரிதலிடம் கொஞ்சமும் புரிந்துகொள்ள முடியாத இரண்டாம் புரிதல் முதலாம் புரிதலின் புரிதல் பற்றிய கொள்கைகளை புரிதல் இல்லாமலே விமர்சித்துக் கொண்டது. இந்த முறை புதிய கொள்கைகளோடு இரண்டாம் புரிதல் தன் பங்குக்கு ஆரம்பித்தது. முதலாம் புரிதலின் புரிதல் பற்றிய கொள்கைகள் எப்படி…
-
- 4 replies
- 978 views
-
-
முள்ளிவாய்க்கால் முழங்கிய போது மெளனித்துக் கிடந்தாரே... முத்துக்குமார்கள் தீப் பிடித்து எரிந்த போதும் சும்மா கிடந்தாரே.. பூமிப்பந்தில் புனிதராம் மனித உரிமை காப்பவராம்.. வெள்ளாடு வேடம் போட்டு சமாதானம் பேசியே கழுத்தறுக்க அலையும் அந்தக் குள்ள நரிகள் அவர் தம் கொட்டம் அடக்க வெடித்தேன். வன்னி மக்களை சொந்த உறவுகளை விடுதலை.. எரிமலை என்று உசுப்பேத்தி.. போர்க்களம் ஏவிவிட்டு அவர் தம் கதை முடித்து தாம் அசைலம் அடித்து.. இன்று... எதிரி வானில் அவன் விமானத்தில் உல்லாசம் போக நினைத்த ஈனத்தமிழர்களின் ஈவிரக்கமற்ற செயல் கண்டு நெஞ்சு குமுறி வெடித்தேன்.. போட்ட ரிக்கட்டுகளுக்கு பொக்கட் காசு கூட கிடைக்கக் கூடாதென்றே. பூமி …
-
- 4 replies
- 1.1k views
-
-
மாவீரர் நாள் கவிதைகள்!!! (புதுவை இரத்தினதுரை) மாரிமழை பொழியும். மண்கசியும் ஊர்முழுதும் வாரியடித்து வெள்ளம் வான்பாயும் கார்த்திகையில் பூமி சிலிர்த்துப்போய் பேறடையும். துயிலுமில்லச் சாமிகளுக்கான சந்தனநாள் வந்தடையும். மாவீரச்செல்வங்கள் மண்கிழித்து வெளிவந்து சாவீரச்செய்தி சாற்றி உறவுரைத்து பேசும் நாள். விழியில் பொலபொலன்று நீர்த்தாரை வீசும் நாள். தமிழீழம் விடியும் என நம்பி பாடும் நாள். விதைத்த பயிர்கள் நிமிர்ந்தழகாய் கூடும் நாள். தமிழர் குலம் குதிக்கும் நாளிதுதான். குன்றிக் குரல் நடுங்கி குற்றேவல் செய்த இனம் இன்றிந்த நிமிர்வுக்கு இட்ட முதல் விதைப்பு. …
-
- 4 replies
- 14.1k views
-
-
பல்லவி உயிராய் என்னை வளர்த்தவள் நீ கருவில் என்னை சுமந்தவள் நீ நீ தந்த உயிரில் பாடுகின்றேன் -உன் கனவுகள் சுமந்தே வாழுகின்றேன் பூமிக்கு என்னை அறிமுகம் செய்தாய் பூவாய்த் தானனே எனை வளர்த்தாய் அம்மா...அம்மா...அம்மா...அம்மா... இடையிசை ராப் பாடல் குரல்: சையின் சுதாஸ் (நோர்வே) சரணம் 1 கடவுளை கண்முன் பார்த்தது இல்லை உன் வடிவில் நான் பார்த்தேன் உண்மையை நேராய் உணர்ந்தது இல்லை உன் விழியில் நான் பார்த்தேன் உயிராய் ஒளியாய் இருப்பவள் நீ சுமைகளை இமைகளில் சுமப்பவள் நீ ஆயிரம் உறவின் வாசல் நீ அன்புக்கு இணையாய் எதைக் கொடுப்பேன் நிலவா நினைவா நீ கை காட்டும் திசைதான் உயிரா உணர்வா நீ பண்பாடும் இசைதான் உயிராய் என்னை வளர்த்தவள் நீ …
-
- 4 replies
- 1.3k views
-
-
செல்வண்ணை! உன் பெயரை உச்சரித்துவிட்டு கண் கலங்குவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சிரிக்கும் புலி நீ சீறும் சினத்தை சின்னச் சிரிப்புக்குள் அடக்கிவைத்திருக்கும் பேராற்றல் உனக்கு. நெருப்பு வானத்தில் ஒரு குளிர் நிலவு நீ உனக்குள்ளும் நெருப்பாறுகள் ஆனாலும் அதை பக்குவப்படுத்தி பயன்படுத்தத் தெரிந்தவன். பத்திரிகைகளுக்கூடாகத்தான் உன்னோடு பழகியிருக்கிறேன். தீயாக தினேசாக சுழன்றடித்த சூறாவளியாய் உன்னோடு பழக்கமில்லையென்றாலும் உன் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் பனிபூசிய அனல்கள் பறக்கக் காண்பேன். ஒரு தவறிப் பிறந்தவனின் காட்டிக்கொடுப்புக்கு தமிழன் இழந்து நிற்பது "ஒரு பிரிகேடியரை". எதிரியின் எத்தனை பிரிகேடியர்களை கொன்றொழி்த்தாலும் ஈடாகுமா உ…
-
- 4 replies
- 1.8k views
-
-
அழுகின்ற பிள்ளைக்கு கொடுக்க உணவில்லை.. குளிரைத் தாங்கிட போதிய உடுப்பில்லை.. விழுகின்ற குண்டுகளின் வேகத்தை பொறுத்தே, அடுத்த நிமிடங்கள் உயிர்வாழ்கிற நிலை.. எங்கெல்லாம் குண்டுகள் விழுகின்றனவோ அங்கெல்லாம் அழுதபடி தமிழ்த் தாய்மார்கள்... இங்கெல்லாம் நடக்கிற இன்னல்கள் கண்டும் இனிக்குமா நமக்கு புத்தாண்டும் பொங்கலும்? காந்தியம் பேசிவிட்டு களவாணித் தனமாக "இந்தி"யன் அளித்த ஆயுதங்கள் கொண்டு, சிங்கள வெறியன் தொடுக்கிறப் போரில் "இந்தி"யர் என்பதால் நமக்கும் பங்குண்டு..! கொல்லாதே என்று கூக்குரல் எழுப்பினால் தேசத் துரோகமாம் இந்தியம் சொல்கிறது... கொலைகார "இந்தி"யனாய் வாழ்ந்து தொலைப்பதைவிட தமிழனாய் தேசத் துரோக…
-
- 4 replies
- 2.4k views
-
-
கம்பனிற்கு கவி படித்தார்கள் நம் கற்றோர்கள் ஆறுமுகதானுக்கும் கவி படித்தார்கள் நம் அறிஞர்கள் கற்பனா சக்திக்கு பாராட்டு தெரிவித்தார்கள் நம் கவிஞர்கள் அட நம் அன்டனின் அறிவை அண்டம் புகழ பாட அறிஞர்கள் இல்லையா ஆசியா புகழ்பாடும் அரிடி உண்ணும் அண்டத்தில்
-
- 4 replies
- 1.3k views
-
-
தீவினில் ஒரு தீபம் அது வீர தீபம் உடல்தனை உருக்கி உயிரினை அளித்து மூட்டிய தீபம் கார்த்திகை மாதம் மலர்ந்திடும் மலரும் காட்டினில் சிறுத்தையும் வளவினில் செம்பகமும் வீதியில் வாகையும் வணங்கிடும் தீபம் அது வீர தீபம் மக்களின் மனங்களில் மலர்ந்திடும் நினைவுகள் சொரிந்திடும் விழினீரில் உருகியே தாழ்ந்திடும் தீபம் அது வீர தீபம் விடியலின் ஒளிதேட இருளோடு கலந்திட்ட தமிழீழ மைந்தரவர் ஏற்றிய தீபம் அது வீர தீபம் காற்றோடு சாயினும் மழையோடு மாழினும் தமிழீழ மண்ணிலது அணையாத தீபம் அது வீர தீபம் வேங்கைகள் உயிரது வேள்வியில் கலந்திட்ட வேளையில் பிறந்திட்ட மாவீர தீபம் அது வீர தீபம் அழியாத நினைவோடு நெஞ்சினில் வாழ்ந்திடும்…
-
- 4 replies
- 1.5k views
-
-
பிள்ளைகளின் மரணம் நடுரோட்டில் இரத்ததால் குதறப்படும் குடும்பங்கள் உலகம் கண்டுகளித்த இனப்படுகொலைகள் கொடூரர்களின் ஆட்சி முன்ஜென்ம பாவங்கள் ஏதுமறியா அகால மரணங்கள் போராளிகளின் வீழ்ச்சி விவசாயிகளின் கண்ணீர் ஏழைகளின் வயிற்றடுப்பு பணம் பணமென பேயாய் அலையும் பதர்கள் தீயின் நாக்குக்கு தவறாது பலியாகும் குடிசைகள்(மட்டும்) பிஞ்சுகளை சிதறடிக்கும் குண்டுகள் அப்பாவிகளை நோக்கியே நீளும் ஆயுதங்கள் காமத்திற்கு இரையாகும் பால்முகங்கள் கழுத்தறுக்கப்பட்ட கனவுகள் இவற்றைக் கண்டு நாணாதவன் கடவுளெனில் நானும் கடவுள். http://aazhkadal.blogspot.fr/2012/01/blog-post_28.html
-
- 4 replies
- 872 views
-
-
வருகிறதாம் - பொங்கல்! மனசும் எம்மிடமில்லை அதில் தூங்கும் மகிழ்வும்.. உன்னிடம் பகிர இல்லை! பானை வட்ட விளிம்பு நுரை மூட பட்டாசு கொளுத்தி.. மகிழ்ந்த காலமெலாம்......... பறந்தே போச்சு! வாழ்வை...... நடு வீட்டில் ......... உயிர்கொண்ட கற்றாளை போலவாக்கிச்சுதாம் -காலம்! எதிரிகளெல்லாம் இருந்த காலம் போய் - கூட இருப்பவரே குரல் வளை உடைக்கும் காலம் ஆனபின்னே... நீ காலமாகிடு பொங்கலே... நமக்காய் ஒரு காலம் வந்தபின் திரும்பிடு!
-
- 4 replies
- 1.2k views
-
-
(2004 கவிதை மீண்டும்.. நினைவுகளை மீட்க) இஸ்ரேல் இருப்புக்காய் அனுப்பியது கிபீரும் ஆட்லறியும் இந்தியா இரகசியமாய் அனுப்பியது மிக்கும் மிரண்டாவும் அமெரிக்கா அண்டப்புளுகுக்காய் அனுப்பியது பெல்லும் கிறீன்பரேட்டும் ரஷ்சியா டொலருக்காய் அனுப்பியது தரையில் தாங்கியும் ஆகாயத் தாங்கியும் சீனா சிங்களத்தோடு உறவுக்காய் அனுப்பியது எப் 7ம் ரி 56 உம் பாகிஸ்தான் பகட்டுக்காய் பரிசளித்தது மல்டிபரலும் பல்டி அடியும் சிம்பாவே சிம்பிளாய் அனுப்பியது சிணுங்க ஒரு ஆயுதக்கப்பல் இன்னும் விட்டது குறையாய் தொட்டது குறையாய் யார் யாரோ எல்லாம் ஆயுத வியாபாரச் சந்தை விரித்தார் எங்கள் அன்னை பூமியின் அழிவுகளின் மேல்....! இத்தனைக்கும் சாட்சியாய் இதோ அவள்....…
-
- 4 replies
- 1k views
-
-
எங்கிருந்தோ எனை ஆழ்கின்ற என்னவளே... முன்னொருபோதும் இத்தனை சந்தோசம் அடைந்தவனில்லை நான்! பின்பு ஒருநாள் தேவதை நீ வருவாய் எனும் அசரீரி ஏதும் கேட்டதில்லை... ஆனாலும் உன் தரிசனம் கிடைத்தது... காதலெனும் புதுசுகம் மலர்ந்தது! நீ இல்லாத போது வலிக்கின்ற நெஞ்சம் அருகில் வந்தபின் கவனிப்பதே இல்லை பிரிவின் போது தான் உள்ளிருக்கும் காதல் விழித்துக் கொள்கிறது! கண்ணே கலங்காதே... நகருகின்ற நாட்களில் எம் வாழ்வு எங்கே என்று தேடாதே... நாட்களின் வரையறைக்குள் இல்லையடி நம் வாழ்வு! பூக்களைப் பார் மாலையில் மரணம் என்றாலும் காலையில் இதழ்விரித்துச் சிரிக்கின்ற பக்குவம் அதற்கு... …
-
- 4 replies
- 1.5k views
-
-
சந்தையின் மாலை வெறுமை. விலைபேசல்களும் விற்பனைகளும் முடிந்்தபின் சந்தைகனளும் சலனங்களும் கலைந்தபின் எந்த வியாபாரிக்கு என்ன ஆதாயம் கிடைத்திருக்குமென்பது பற்றிய அக்கறையெதுவுமின்றி சந்தைச் சதுக்கம் வெறுமையுற்றிருக்கிறது எந்தத் தராசு எதை நிறுத்தது ? எந்தக் கணக்கீடுகளின்படி விலைகள் நிர்ணயமாயின ? யார் யார் வந்தார்கள் ? எவற்றையெல்லாம் வாங்கினார்கள் ? எவற்றையெல்லாம் விற்றார்கள் ? தோட்டக்காரர்கள் யார் ? தோற்றங்கள் பெற்ற மதிப்பீடுகள் என்னவாயிருந்தன ? உள்ளீடுகளின் பெறுமதிகள் எங்கேனும் உள்வாங்கப்பட்டதா ? ஆதாயமற்ற கேள்விகள் வழங்கக்கூடிய ஊகப்பதில்களின் பயனின்மைபற்றிய தன் முன்னனுமானங்களைக் கூட்டிவாரிக் குப்பைக் கூடையில் கொட்டியப…
-
- 4 replies
- 1.3k views
-
-
விடை ஒன்று கொடுத்து புதியதை வரவேற்று விண்ணுக்கும் மண்ணுக்கும் துள்ளினர் ஒருபால் வித விதமாக, விழிகளை உயத்த வைத்த விலை கொண்ட ஆடையர் ஒருபால் கடிகார முள்ளை கன நேரமுற்று காத்திருந்து கையிலிருந்த வெடிதனை வெடித்தோர் ஒருபால் பெடிகளாய் நின்று கும்மி குத்தி பெண்கள் பக்கம் திரும்பி இளித்தவர் ஒருபால் கைகள் வலிக்க வலிக்க கஷ்டம் பார்க்காமல் கனகதியில் SMS அனுப்பினர் ஒருபால் லட்டு ஜிலேபி என்றி பட்சணங்கள் உண்டு பக்கத்துக்கு வீட்டுக்கு தந்து பறை சாற்றியோர் ஒருபால் பீர் ஒரு கையில் பிகர் ஒரு கையில் என்று பின்விளைவுகள் அறியாது சுத்தினர் ஒருபால். தேரடி வீதியிலும் திரும்பிய திசைகளிலும் சந்தோசம் கொப்பளிக்க இருந்தனர் இவர்கள் ஊரது…
-
- 4 replies
- 699 views
-
-
எங்க நாடு கிடக்கிற பாடு எப்படிச் சொல்லுவம் நாங்க பாணுக்கும் பாலுக்கும் நாம படுகிற துன்பத்தைப் பாரும் சோத்துக்கும் கஞ்சிக்கும் நாங்க தூங்கிறம் றோட்டில பாரும் எண்ணைக்கும் காஸ்சுக்குமாக எத்தனை சண்டைகள் இங்கு ஊழலும் லஞ்சமுமாக பாழ்பட்டுக் கிடக்குது நாடு ஆளுக்கு ஒரு பங்காய் அரசியல் வாதிகள் எல்லாம் அறுத்து தின்றனர் நாட்டை அந்த பெரிய பெரிச்சாளிகள் போல எங்கள் உழைப்பெல்லாம் சுரண்டி அந்த பூசுவா கூட்டங்கள் போலே பொல்லாத திருடர்கள் இவர்கள் சிலர் போலி சோஷலிசக்காரர் இனவாதம் எல்லாம் பேசி இருந்ததை எல்லாம் குழப்பி இனத்துக்க குரோதத்தை வளர்த்து இப்போ இருக்குது நாடு கவுண்டு வீழ்த்தினோம் தமிழனை என்றும் வெற்றி விழாக…
-
- 4 replies
- 468 views
-
-
பொய்யும் புரட்டும் ... சிரட்டையும் கையுமாம் .. என் அப்பத்தா அடிகடி .. முணுமுணுக்கும் சொல் .. வழி கேட்டா சொல்லார் பின் .. வக்கனையா விடுப்பு கேட்பார் .. எதுக்கு போறிங்க என்னத்துக்கு என்று .. கேள்வி மேல் கேள்வி வைப்பார் .. உள்ளதை உள்ளபடி சொல்லார் பொய்யர் .. சுற்றி வளைத்து சுழல விட்டு .. கெட்டித்தனம் என தமக்குள்ள எண்ணி .. அத்தனை முட்டாள் தனம் செய்யும் ... இவர்கள் வாய் திறந்தாள் வானவெடி .. மனிதனுள் மனிதனை விற்கும் .. வித்தை அறிந்தவர்கள் பொய்யர்கள் .. கேட்டால் வாழ வழி என்பார் ... வேறு நல்வழி தேடார் பொய்யர் .. நடுநிலை ..கரைநிலை என்று காரணம் வேறு .. கண்ணை பார்த்து மூக்கு என்று சொல்பவர் .. இல்லை என நீ சொன்னால் கொள்கைவாதி .. …
-
- 4 replies
- 1.1k views
-