கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
நீங்கள் இப்போது நடந்துகொண்டிருக்கும் வீதியில்தான் குழந்தையொன்று பின்னந்தலையும் தாயுமில்லாமல் அழுதே இறந்தது நீங்கள் நடங்கள் நீங்கள் இப்போது பார்க்கும் வீட்டில்தான் போராளி ஒருத்தியை நான்கைந்துபேர் மொழிகலப்பற்று புனர்ந்தார்கள் நீங்கள் நடங்கள் நீங்கள் இப்போது கால் நனைக்கும் கடற்கரையில்தான் படகில் தப்பியோடமுயன்ற நிறைசூல் பெண் ஒருத்திசுடப்பட்டு இறந்துபோனாள் கூடவே அவளோடு... நீங்கள் நடங்கள் நீங்கள் இப்போது நிற்கும் பதுங்குகுழியில்தான் மேலே செல்லடியிலிறந்த ஆறுமாத குழந்தையை தூக்கவியலாமல் கையில் துவக்கோடும் தவிப்போடும் நின்றிருந…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரே வயிற்றில் பிறந்தோம் ஒரே உடுப்பை போட்டோம் ஒரே கோப்பையில் சாப்பிட்டோம் ஒரே படுக்கையில் படுத்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் ஒன்றாய் படித்தோம் எச்சில் கடி கடித்து ஏப்பம் விட்டு சாப்பிட்டோம் இவ்வளவும் எமக்கு அறியாப் பருவத்தில் வாழ்க்கையை புரியத்தொடங்கினோம் - தனி வழி போக தொடங்கினோம் காலிற்கு கட்டு போடும் வயதும் வந்தது தனி குடித்தனம் போனோம் அத்துடன் எல்லை சண்டையும் பக்கென்று வந்தது உன் மகளின் கலியாண கோலத்தை என் மகள் மதிலால் ஏட்டி பார்க்கும் அவலம் அக்கா என்று ஆசையுடன் அழைக்க வேண்டியவர்கள் கோபக்காரார் என்று எரிசலுடன் பார்க்கிறார்கள் இன்று நீ யாரோ நான் யாரோ வீதியில் போகும் போது முகம் பாராத நாங்கள் கோட்டில் ப…
-
- 18 replies
- 2.8k views
-
-
சுழிகுளம் சுழிகுளம் என்ற சித்திரகவி செய்யுளின் எழுத்து எண்ணிச் செய்யப் பெறுவதாகும். இதில் இடம் பெறும் செய்யுள் நான்கு அடிகளைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வோர் அடியும் எட்டு எழுத்துகளையே பெற்றிருக்க வேண்டும். இவ்வெட்டு எழுத்துகளும் மேலும் கீழும், உள்ளும் புறமுமாக ஒத்தமைய வேண்டும். “கவிமுதி யார் பாவே விலையரு மாநற்பா முயல்வ துறுநர் திருவழிந்து மாயா” பொருள் : வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள் விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும். அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்து ஒருவர் பெற்ற பாடல் அழியாத செல்வமாகும் . நன்றி : முகனூல்
-
- 7 replies
- 1.3k views
-
-
-
- 12 replies
- 2.4k views
-
-
அன்னை கருவில் அழகான வாழ்வு அகிலம் கண்டும் ஆனந்தம் கொண்டு மனிதப்பிறவியாய் மண்ணில் ஆர்ப்பரித்து மனிதனாய் வாழ மறுக்கின்ற உலகம் செய்த பிழை எதுவென்று சொல்லாது தளம்பறித்து சிசுவாய் இருந்தாலும் சிதைத்து சுகம் கண்டு ஓடு மட்டும் துரத்தி ஓட்டாண்டியாக்கி ஒய்யாரமாய் படம் போட்டு ஒப்பாரியில் வாழ்கிறார்கள் எல்லார் வாழ்விலும் எட்டப்பர்களாய் எட்டி உதைத்து எரித்துப் போட்ட சுதந்திரம் அங்குமிங்குமாய் அலைமோதும் அகதியாய் அல்லல் படுத்தும் அறிவு கெட்ட உலகம் சுதந்திரம் என்ற சுவாசம் அடைந்து பெற்றவர்களும் அதனை அளிக்க மறுத்த ஆட்சியாளர்களாய்.... மரத்துப்போன வாழ்வுடன் மடிந்தொழிந்து போகுமுன் மனிதன் என்றாவது மறதியிலாவது ந…
-
- 0 replies
- 438 views
-
-
வணக்கம் கள உறவுகளே , பிரபல்யமான கவிஞர்கள் பொதுவாகக் கருத்துக்களங்களை எட்டிப் பார்ப்பதில்லை என்ற மனக்குறை எனக்குப் பலகாலமாகவே உண்டு . விதிவிலக்காக ஈழத்தின் விலைமதிக்கமுடியாத கவிஞரான வா செ ஐ என்ற அழைக்கப்படும் பொயட் யாழ் இணையத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்வேன் . நான் வாசித்த பிரபல கவிஞர்களின் கவிதைகளில் என்னைப் பாதித்த ஒரு சில கவிதைகளை இந்த சுவைத்( தேன் ) பகுதியில் பதிவிடலாம் என நினைகின்றேன் . இதுபற்றிய உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்கின்றேன் . நேசமுடன் கோமகன் ************************************************************************** 01 புத்தி தனக்குப் புத்தி நூறு என்றது மீன் - பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில் . தனக்குப் புத்தி ஆயிரம் என்றது ஆ…
-
- 18 replies
- 3.4k views
-
-
ஈழக் கவிஞனின், உள்ளத்தின் ஈரமும்.. இனத்தின் வலியின் ஆழமும்... புரியும், இக் கவியை கேளுங்கள். ஈழக் கவிஞர் கு.வீரா.
-
- 2 replies
- 1k views
-
-
மானத்தை தேட ஒரு வெளிச்சம் என்னும் ஒளிர்கின்றது நீயும் மனுசன் என்று கூறி உயிர் எரியும் வாசம் வீசுகின்றது பெருக்கெடுத்து ஓடும் குருதியின் மேல் மிதந்து வரும் தீபங்கள் தலை குனிந்து மண்டியிட்டு கூனிக் குறுகியவர்களின் தோழ்களை எப்போதும் தொடும் ஒரு நேச நெருப்பு எல்லாம் இழந்த பின்பும் பயம் சூழ அடிமைத்தனம் வந்த பின்பும் எட்ட இருந்து ஏவல் செய்யும் என்போன்றவர்களும் தூய ஒளியின் முன் குற்றவாளியாய் நிற்கின்றோம் நாங்கள் தவறுடன் தான் பிறக்கின்றோம் தவறை நியாயப்படுத்துவோம் தவிர எப்போதும் திருந்தியதில்லை திருத்தம் பெற்ற ஒளிகள் திசை காட்டி நிற்கின்றது எதிரி கருமேகமாய் கவிழ்ந்து எங்கள் நிலத்தை மறைத்தான் எங்கள் துரோகங்கள் புயலாய் வ…
-
- 8 replies
- 1.7k views
-
-
சேர் , உங்கள் zoom அழைப்பு கிடைத்தது ஆனால் passcode தான் கிடைக்கவில்லை. பணம் கட்டினால் தான் அது கிடைக்குமாமே, பகலுணவுக்கு வழியில்லை பாதை வியாபாரம் செய்யும் அப்பா பாதுகாவலனுக்கும் பயந்து பயந்து மறைந்து மறைந்து செய்யும் வியாபாரம் ஒரு வேளை உணவுக்கே போதாதாம் சேர். ஆயிரம் ரூபா தேட பாதையில் பல பாயிரம் ஓத வேண்டுமாம். ஒரு நாளில் அதை உங்களுக்கு வைப்பிலிட ஒரு கிழமை எமது அடுப்புக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமே சேர். நான்கு சகோதரர்கள் நாம் டேட்டா போடுவதற்கே எமது அப்பாவின் பல பாட்டாக்க…
-
- 12 replies
- 1.3k views
-
-
சூர சம்கார சுதந்திரச்சிற்பிகள் அதிகாலை அரும்பாகி அந்தியிலே சருகாகும் ஆழகான மலரும் அல்ல மலர் சூடி மணமேடை மணக்கோலம் தான்காணும் மங்கலம் இவர்க்கில்லை காண் உயிரோடு உயிர்ப்பூவை உணர்வோடு ஒருங்காக்கி விதையாக விழுகின்றார் பார் இவர் உயிர்மீது தமிழீழம் உருவாகி வரும்வேளை எதிர்பார்க்கும் இளவேனில்கள் கருவோடு திருவாக உருவாகி வரவில்லை இரவோடு உருவானார்கள் இவர் தெருவுக்குள் விளையாடி பருவத்துக் கனவெல்லாம் உருவற்று உருக்கிட்டார்கள் மருவுற்ற மனங்களில் செருவுற்ற சேதிகள் விரவிட்ட வி~வித்துக்கள் எங்கும் பரவிட்ட பாதிப்பில் பாசறை புகுந்திட்ட உதயத்து விடிவெள்ளிகள் தேனான நிலவுகள் தினம் தோய்ந்து எழும்ப இவர் தேகத்தில் துடிப்புமுண்டு வானத்து ந…
-
- 5 replies
- 1.3k views
-
-
சின்ன வயசு எனக்கு அதைவிட சின்ன வயசு உனக்கு மீசை எனக்கும் ஆசை உனக்கும் வராத காலம் அதுவும் பசுமையான காலம் புத்தகங்களை சுமக்க இயலாத வயதில் உன்னை மட்டும் சுமந்ததில் சுகம் எனக்கு நாம் கை பிடித்து பொடி நடை போடுவதற்காகவே நம் பள்ளி வரவை அதிகரித்தோம் ஒரே விட்டில் வாழ்ந்தாலும் ஒரு வார்த்தை பேசியதில்லை பயத்தால் நானும் வெக்கத்தால் நீயும் ஊமையாய் ஊனமாய் வாழ்ந்தோம் இதில்தான் உண்டானது எனக்கும் உனக்குமான உறவு உன்னில் விழிக்க வேண்டும் என்றே தினமும் தூங்க போவேன் நான் அதற்காக நீ அதிகாலை எனக்கு முன் விழிப்பாய் உன்னில் விழிக்காமல் என்றாவது என் தூக்கம் கலைந்ததுண்டா பள்ளியில் விழுந்த எறிகணை என் உயிரை பறித்…
-
- 6 replies
- 1.4k views
-
-
சூரியனாய் இரு! சூரியனாய் இரு! சூரியனாய் இருப்பதில் பெரும் சுகம் பூமியும் கூடவே சுற்றிச்சுற்றிவரும்! கொடும் வெம்மை என்று வைதாலும் தன் பாதையை விட்டு விலகுவதில்லை "பரிதி" என்பதுதான் எத்தனை பொருத்தம் துவைத்து வைத்த ஆடைக்கும் - வற்றல் வடாம் மிளகாய் என நாக்குக்கு சுவைதேடும் பல இங்கு உலர்த்தவும் மழைக்கும் இவனே காரணமாகவும் மலர்கள் மலைகள் செழிப்பின் வண்ணமும்! உடலின் உறுதி சுறு சுறுப்புக்கும் இவனே காரணம் ஆம் இவனெம் தாமரையின் காதலன்! மேகம் மறைக்க கூடும் நாயும் குரைத்து ஓடும்! இவன் சிரிப்பின் ஒளிர்வே கதிராய்! என்றும் தன் கடமை விட்டு விலகா சூரியனாய் இருப்பதன்றோ பெரும் சுகம்!
-
- 6 replies
- 1.2k views
-
-
மூடிய கனவை இமையா பறிக்கும் சூரியப் பகலை முகிலா மறைக்கும் ஆடிய தெருவை சுவடா மறக்கும் ஆணவம் அதனை அறிவா மதிக்கும் நேரிய வழியை நிழலா தடுக்கும் நித்தியா தாமரையின் நிஜமா பொறுக்கும் மூழ்கிய படகை கரையான் அரிக்கும் முற்றிய பகையை மனமா சலிக்கும் நம்மை நாமே பழுது பார்க்கலாம் நாளை உண்டு சபதம் ஏற்கலாம் முகநூல்
-
- 1 reply
- 760 views
-
-
சூரியப்பேரொளியைச் சுற்றிக் காவியப்போராளிகள் வருவர் இயலாப்பொழுதின் புலர்வாய் ஒளிசொட்டிய சூரியக் கதிர்களுக்குள் இருள் முட்டி இதயம் முட்டி எதுவெனச்சொல்ல இயலாமல்…. எதை இழக்க எதை மறக்க ? எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை…. எல்லாம் முடிந்துவிட்டாற்போன பிரமை கண்ணுக்குள் வந்து மறையும் காட்சிகளாய் கடைசிக்கணங்களின் நுனியில் சாவின் நொடிகளை நுர்கின்றன…. சந்திப்புகள் சரித்திரக் கதைகள் சாதனைகளின் நீளமாய் ஒவ்வோர் நினைவும் முகமும் கலங்கிய விழிக்கனவோடு கரைந்து கரைந்து கடல் வற்றிக் காய்ந்து பாழங்கள் நிறையும் மயானக் காட்டின் நெடிலின் நுகர்வோடு கவிதையும் கடந்தகால நினைவுகளும் கசங்கிக் காற்றள்ள முன்னம் கடைசியாய் ஏவப்பட்ட …
-
- 0 replies
- 916 views
-
-
மயூரனுக்கும் இணைந்து நடக்கும் தோழர்களுக்காகவும், செங்கொடி ஏந்திய சந்ததி வேரே! செங்கொடி ஏந்திய சந்ததி வேரே! சிங்களம் வெகுண்ட சினத்திற்குரியோனே! எண்திசை நிமிரும் தமிழனின் மானம் ஏந்தியே நடக்கும் இளைய தேவரீர்! தமிழ்ச்சங்கடம் தீர்க்கும் சஞ்சீவி சுமக்க சாலையில் இறங்கிய சரித்திர பொறிகளே! எங்கே மைந்தரே! தாயகத்திற்காகத் தூரங்கள் கடக்கும் உங்கள் கால்கள்….. வலித்தால் சொல்லுங்கள். உங்கள் திருவடி நீவித் தைலமிடவும், வெந்நீர் ஒத்தடம் விரைந்து தரவும் அன்னையர் உள்ளோம். அகிலத்தின் திசைகளில் அனைவரும் உள்ளோம். சட்டத்தை மதித்துச் சாதனை செய்யலாம் எனும் புதுக்கட்டக் கதவின் திறவுகோல்களே! வழிகோலி வைக்கின்றீர்கள், வாழ்த்தெடுத்து விழிகசிந்து நி…
-
- 7 replies
- 1.5k views
-
-
[size=3] செஞ்சோற்றுக் கடன் அல்ல..![/size] [size=3] பசி பஞ்சம்[/size][size=3] பிணி[/size][size=3] எங்கு இருக்கிறது..?[/size][size=3] எங்கும் எல்லாம் நிறைந்திருக்கிறது[/size] [size=3] அவரவர் ஊழ் வினையாகக் கூட இருக்கலாம்[/size][size=3] உன் குடும்பத்தினர்[/size][size=3] இல்லையேல் உன் முதாதையர்[/size][size=3] பழி பாவங்களில் பங்கெடுத்து இருக்கலாம்[/size] [size=3] இல்லையென்றால் நீ ஏன்[/size][size=3] கொடுந் துயரங்களை சுமக்க வேண்டும்[/size][size=3] சுகமான நித்திரையை புறந்தள்ள வேண்டும்[/size][size=3] தனிமை முழுதும் துக்க விசயங்களில்[/size] [size=3] நீண்டு கொண்டே போகின்றன[/size][size=3] விடை தெரியாத புதிர்களில்[/size][size=3] கிளி பேசும் மொழி …
-
- 0 replies
- 632 views
-
-
செஞ்சோலை தெருவெல்லாம் புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே; தமிழ் படித்த சிறுமியின் குரல் சப்தம் தொலைத்து கிடக்கிறதே; பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம் மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே; மறக்க இயலா மரணச் சூட்டின் - மண்டியிடவைத்து அவன் சுட்ட வெடி சப்தத்தின் - சற்றும் மனிதம்பாரா எம் குலமழித்த வெறியில் - முளைத்தெழு உறவுகளே; அடிப்பவனை மன்னிக்கலாம் அவனே திருப்பி அடிபானெனில் - திருப்பி அடித்தவனை திருப்பி அடிக்கும் வரை அவன் வருந்தி திருந்தும் வரை மன்னிக்காதே மடையுடைத்த வெள்ளமென பொங்கியெழு உறவுகளே; செத்தவன் செத்தவளெல்லாம் வெறும் சுப்பனும் குப்பனுமல்ல; எம் விடுதலையை 'உயிர்விடும் வரை காத்த வீரர்கள் - அவர் உறைந்த மண்ணில் மீண்டும் புடைச…
-
- 0 replies
- 720 views
-
-
செஞ்சோலைக் குயில்கள்..... கவிதை - இளங்கவி..... புலியின் கோட்டையிலே பூத்த சிறுமலர்கள்..... பொசுங்கி விட்ட பின்பும் மனதில் பூத்து நிற்கும் கொடி மலர்கள்.... அவர் செஞ்சோலையில் வளர்ந்த சிரித்து நின்ற இளந்தளிர்கள் செத்து நம் சரித்திரத்தில் இடம்பிடித்த இளம் குயில்கள்.... வாழ்க்கையின் வசந்தத்தை ஏக்கத்துடன் பார்த்திருந்த.... வெண்பனியில் தவண்டுவரும் நம் ஈழத்துப் பென்குயின்கள்.... வணக்கத்துடன் சூரியன் கிழக்குவாசல் வந்துவிட..... செஞ்சோலைப் பூக்கலெல்லாம் சிறிதாக மலர்ந்துவிட.... வளமையான பொழுதென்று வண்ணச் சிட்டுக்கள் நினைத்திருக்க.... வாழ்க்கைக்கு சில மணிதான்; என்று தெரியாத தேவதைகள்...... மகிந்தவின் கட்டளைக்கு எமன்க…
-
- 4 replies
- 857 views
-
-
மாறாத வடுக்களை எம் இதயங்களில் எழுதிவிட்ட எதிரியே.. இந்தப் பிஞ்சுகள் செய்த குற்றம் என்ன..??! ஏன் இந்தத் தண்டனை…??! உலகம் இயக்கும் இயந்திரப் பறவைகள் கொண்ட உன் பலத்தால்.. அதன் திமிரால் மக்களை… தண்டிக்க அவசரப்பட்ட நீ… இழந்து போன இந்த மொட்டுக்களின் வாழ்வை மீளளிக்க முடியுமா..??! போர் செய்து என்ன வென்றாய்..?! தமிழர் நிலங்களைப் பறித்தாய். மனித மனங்களை சரித்தாய்.. மனிதம் அழித்தாய்..! ஏன்… நீ.. மனிதன் அல்ல சிங்களப் பேரினப் பிசாசு என்று மொழிந்தாய். மனிதனாய் உன்னோடு வார்த்தைகளால் பேசிப் பயனில்லை.. இந்த மொட்டுக்கள் விர…
-
- 9 replies
- 1.3k views
-
-
செடியின் துயரம் பலநூறு மொக்குகள் மலர புன்னகையுடன் பேசத் தொடங்கியது செடி முந்திக் கொண்ட ஒவ்வொரு மலரும் முணுமுணுத்தது தனித்தனி மொழியில் தானாகக் கண்டறிந்து சேர வழிகேட்டது கூந்தலுக்கும் கோயிலுக்கும் தோட்டத்தைச் சுற்றி இலைகளாய்ச் சிதறின சொல்சொல் என அவை முன்வைத்த வேண்டுகோள்கள் ஆளற்ற வெளியில் பரிதவிக்கும் பார்வையற்றவர்களென காற்றின் திசைகளில் விடைவேண்டி கைதுழாவி நடுங்கிக் களைத்தது காலம் சற்றே கடந்தாலும் ஒப்பந்தப்படியும் உரிமைப்படியும் பறித்தெடுத்தன பூக்காரனின் விரல்கள் போகுமிடம் தெரியாத இழப்பின் வலியில் கிளைகழற்றிக் குமுறியது செடி
-
- 9 replies
- 1.9k views
-
-
கோடைத் தாக்குதலில் உதடுகள் உலர்ந்த இலைகளை வாரி யணைத்துக் கொண்டது ஒரு ஆலமரம். பீறிட்ட ஞாபங்கள் ஒன்று சேர மெல்ல கிளைமேல் படர்ந்தேன் ஒரு பாம்புபோல. ஒரு கிளையினுள் நுழைந்த அக்கணமே கண்டேன். அங்கே பல சிற்பங்கள் செதுக்கப் பட்டுக் கொண்டிருந்தன. சிறு வலியோடு தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. முன்பொருநாள் எனக்கும்.. "நீ யார்? உனக்கு என்ன வேண்டும்?" அதே அதிகாரத் தோரணையில் கேள்வி கேட்கப்பட்டது. என் பதிலை எதிர்பாராது உளியை கையில் எடுத்துக்கொண்டான் என்னையும் செதுக்கிய சிற்பி. நான் ஞாபகங்களுடன் வெளியேறினேன். அன்று அழுத விழிகளுடன் அதே கிளையில் தண்டனை நிறைவேற்றப்பட்டதால்தான் இன்று அழகிய சிற்பமாய் ஆதவனாய் நான்....…
-
- 3 replies
- 1.2k views
-
-
செத்தும் காத்த என் அம்மாவின் பிறந்தநாள் நினைவில் . அம்மா பிறந்தது 1917 உடுவில் மகளிர் கல்லூரி வரவேற்ப்பில் மகத்மா காந்திக்கு மாலை சூடி ஆசி பெற்றது நவம்பர் 2017 (இறக்கிற வரைக்கும் காந்திய செல்வாகுடனேயே வாழ்ந்தார், விடுதலையும் சமூக சமத்துவமும் கவிதையும் அவரிடமிருந்து கற்றதுதான்.) . 2013 நவம்பரில் அம்மாவின் சமாதிக்குச் சென்றபோது கோத்தபாய ராசபக்சவின் விசேட உத்தரவின் பேரில் என்னைக் கைதுசெய்ய இராணுவம் எங்கள் பண்ணைக்கும் வன்னிவளான்குழம் கோவிலுக்கும் நடுவிலுள்ள காட்டுக்குள் காத்திருந்தனர், நல்ல வேலையாக நான் கார் சார்தியிடம் ”40 வருடமாக ஒவ்வொரு தடவை பண்ணைக்கு வரும்போதும் வன்னிவிளான்குளம் அம்மன் கோவிலில் கற்பூரம் கொழுத்திவிட்டு வரும்படி சொல்லுவார். 40 வருடங்களாக நான…
-
- 6 replies
- 1.3k views
-
-
செத்துவிட்டாள் அம்மா பேப்பரில் போடுங்கள் முடிந்தால் கொழும்பு பேப்பரிலும் போடுங்கள் தப்பாமல் வீடியோவும் எடுத்திடுங்கள் இயலுமாயின் வானொலிக்கும் குடுத்திடுங்கள் இணையதில் போட்டால் இன்னமும் நல்லம் கொள்ளி வைக்க யாரும் இல்லை எனின் எங்கள் வள்ளி மகன் வைப்பான் கொள்ளி.... இக் கவியில் தாய் இறந்த செய்தி கேட்ட மகன் அல்லது மகள் ஊரில் உள்ளவருக்கு தொலைபேசியில் கொடுக்கப்பட்ட கோரிக்கை...ம்ம்ம் இதிலே வள்ளி மகன் என்பது வேலைக்காரியுன் மகன்...இப்படி தான் இன்றைய காலத்தில் தாய் இறந்தால்...சில பிள்ளைகளால் கடமை செய்யபடுகின்றது...என்ன உலகமோ
-
- 7 replies
- 1.8k views
-
-
உலகம் இன்று நீதி தர்மம் அறம் அத்தனையும் தொலைந்து சுழல்கிறது எங்குமே யுத்த சத்தங்களும் மனிதப் பேரழிவுமாய் பசி பட்டினியுமாய் மனிதத் துன்பங்களுமாய் கிடக்கிறது. இனி பிறக்கும் வருடத்தில் எங்கும் மனிதாபிமானமும் அமைதியும் சமாதானமும் நிலவி இருள் கடந்து ஒளி பிறக்கட்டும். -பா.உதயன் செந்தமிழாய் எங்கும் இசை- காலை புலரும் நேரம் கடல் கரையில் ஒரு ஓரம் தானாய் வந்த பறவை எல்லாம் ஏதோ சொல்லிப் பாடுது ஏழு கடல் ஓடி வந்து எத்தனையோ வர்ணம் தீட்டும் காடு எல்லாம் ஆடி ஆடி கவிதை பல பேசும் ஆலமரம் செழித்து நிற்கும் அன்னைத் தமிழ் இசை பாடும் பாடி வரும் தென்றல் காற்று பண் இசைத்து ஓடி வரும் வசந்தம் எல்லாம் பூத்திருக்கும் வானம் எங்கும் கவி பாடும் பச்சை கிளி பறந்து …
-
-
- 3 replies
- 468 views
-
-
செந்தமிழ்த்தாயி நாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி – எந்தன் நாவில் உறைபவளே செந்தமிழ்த்தாயி ஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி – நாவில் அமிழ்தூறச் செய்பவளே செந்தமிழ்த்தாயி. மன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி – உன்னை வழுத்திடவே வாழ்ந்தவளே செந்தமிழ்த்தாயி பொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி – புவி போற்றிடவே தந்தவளே செந்தமிழ்த்தாயி வெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி –பலபேர் வீழ்த்திடவே எண்ணுகிறார் செந்தமிழ்த்தாயி அம்பா நீ…
-
- 0 replies
- 810 views
-