Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இரு கவிதைகள் – தீபச்செல்வன்… தணல்ச் செடி சமுத்திரத்தில் மண்டிய மையிருள் போல மறைந்திருந்த முகத்தில் அடுக்கியிருந்த இரகசியங்கள் சொல்லாத எண்ணற்ற கதைகள் கலந்தன தீயில் கருணைமிகு உன் புன்னகை கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின் சிறகுகளில் ஒழுகுகிறது தணல் நெருப்பை தின்று காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர் கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக வெடிக்கின்றன விதைகள் கந்தகம் சுமந்து வெடித்துருகிய இடத்தில் …

  2. நாங்கள் பிறை காண முன் அவன் சிறை காண வேண்டும் நாங்கள் கஞ்சி குடிக்கும் போது அவன் அஞ்சி துடிக்க வேண்டும் நாங்கள் நோன்பு பிடிக்க முன் அவன் கம்பி பிடிக்க வேண்டும் நாங்கள் ஈச்சம் பழம் உண்ண முன் அவன் பேச்சுப் பலம் மறைய வேண்டும் நாங்கள் கேட்டு அழும் துஆவால் அவன் கூட்டுள் விழ வேண்டும் நாங்கள் நம்பி எண்ணும் திக்ரால் அவன் கம்பி எண்ண வேண்டும் நாங்கள் எழுந்து சஹர் செய்ய முன் அவன் ஒழிந்து போக வேண்டும் நாங்கள் தானம் செய்யும் மாதத்தில் இந்த ஞானம் பொய்யனாக வேண்டும் நாங்கள் கேட்டு அழும் குனூத்தால் அவன் ஆட்டம் நிற்க வேண்டும்…AkuranaToday.com | Read more http://www.akuranatoday.com/news/?p=138917 .

    • 4 replies
    • 1.1k views
  3. அகத்தியன் என்பவர் தற்போது சிறையில் இருக்கும் போராளி அவர் எழுதிய கவிதைகளை இந்த தொகுதியில் இணைக்கிறேன்; தேட‌ல்...! கிழித்தெறியப்பட்ட இதயத்தாளின் ஒரு புறத்தில் அடைத்துவைக்கப்பட்ட எங்கள்-அழுகையொலியும்,வேதனையும்.., அருகதையிழந்த மக்களின் குருதிச்சாயமும் குரூரத்தின் கோரத்தனமுமே மிஞ்சிக்கிடக்கிறது.....! எடுத்தவர்கள் எவராயினும்- காணாமல் போனவர் சங்கத்தில் காட்டிப்பதியுங்கள் எங்களின் இருப்பையும் எங்களின் இழப்பையும் நாங்கள்- காணாமல் போவதற்குள்..! நன்றி அகத்தியன்

    • 2 replies
    • 1.1k views
  4. Started by இலக்கியன்,

    நறு மணம் வீசும் மலராக இருந்தால் நானும் உனக்கு முள் வேலியாக இருப்பேன் பயன்தரும் விதையாக நீயும் இருந்தால் அதுக்கு பசளையாக நான் இருப்பேன் எழுத்தாக நீயும் இருந்தால் உன்னை கவிதையாக இங்கு நானும் கோர்த்துடுவேன் வெண்ணிலவாக நீயும் இருந்தால் உன்னை கருமுகிலாக வந்து உன்கற்பை காத்துடுவேன் கண்ணாக நீயும் இருந்தால் உன்னை இமையாக வந்து நானும் காத்திடுவேன் மூக்காக போல நீயும் இருந்தால் நானும் உனக்கு சுவாசம் தந்துடுவேன் வாய் போல நீயும் இருந்தால் என் கவித் திறனை உனக்கு தந்திடுவேன் இதயத்த…

  5. Started by yaal_ahaththiyan,

    காதலித்தால் இதயங்கள் இடம் மாறுமாமே வா இதயங்களை மாற்றிவிட்டு காதலித்து பார்ப்போம் * நான் வார்த்தை தேடி அலைந்தபோது வந்து கிடைத்த கவிதை நீ * பயந்து பயந்துதான் உன்னை என் அம்மாவுக்கு அறிமுகப்படுத்தினேன் அவா உன்னை ஆலாத்தி எடுத்து வரவேற்பா என்று தெரியாமல் * வறண்ட பூமியை விட நீ வைத்திருக்கும் குடைதான் மழைக்காக தவிக்கிறது * உலகம் அழியும் நாளில் நான் உயிரோடிருந்தால் தற்கொலையாளியாய் உன் மேல் பாய்ந்துதான் என்னை அளித்துக் கொள்வேன் -யாழ்_அகத்தியன்

  6. காந்தாளே..! கார்த்திகை முழுதும் கணலாய் எரிக்கும் பூவே..! நாமெல்லாம் சுமந்த விதி தின்ற பெருங்கனவொன்றின் அடையாளம் நீயென்று அறிவாயா..? இரத்தம் சேறான தேசத்தின் நினைவு நூற்கையில் நதியாய் பின்னும் கண்ணீரை நீயறிவாயா..? பெருங்கோடையில் நீரற்ற நதியைப்போல வற்றிப்போனது எம் சந்ததியின் கடலாயிருந்த தாகம் சருகுகளைப்போல உதிர்ந்துபோயின எங்கள் நிழலாயிருந்த மரங்கள் ஊழிக்காலமொன்றில் உப்புமற்றுக் கடலுமற்றுப்போயிற்று எம் மிச்சமிருந்த கண்ணீரும்.. எம்மைத்தவிர யாரறிவார் சுடுகாடொன்றில் உயிரோடெரியும் பிணமொன்றின் வலியை.. காந்தாளே..! எம் கனவெல்லாம் வாங்கிப்பூத்தமலரே..! அறிவாயா.. எம்தேசத்தின் வீதிகளும் வீடுகளும் வயல்களும் காடுகளும் ஞாபகங்களின் ஞாபகங்களும் சேர்ந்தேயழும் துயரை ந…

  7. ‘அடைமழை ஓய்ந்த நாளின் மாலைக்கும் இரவிற்கும் இடைபொழுதில் வாசலில் வந்து நின்றாள் தேவதை . . தொலைதூர பிரயாணத்தின் வழியிடையே எப்போதும் போல் ஏதாவதொரு விடுபடுதலின் நிமித்தமாக இருக்கலாம் . . அடித்து பெய்த மழையின் இறுதி பொழிவுகள் அவளது அதரங்களினூடே . . தேநீர் குவளைகள் இரண்டிலொன்றில் இயலுமான வெப்பம் இதமாயிருக்கும் அவளது உறைகுளிர் போக்க . . பகலிரவு காலத்தை மாற்றிடும் இமை கதவுகள் மூடி திறந்ததும் பெருக்கெடுத்தது வெள்ளி நிரோடை . . ஆசுவாசப் படுத்திக் கொள்ளட்டுமென கன்னங்களை துடைத்து விட்டு மெல்லிய கைகளை பற்றினேன் . . தேவதை மொழியால் விம்மியபடி மாநகர பேருந்தின் லாவகமான காய்நகர்த்தல்களை சொல்லி பேச்சுடைந்தால் . . ஒ! வென அழ…

  8. எல்லா இடங்களிலிலும் மனிதர்கள் மனிதர்களை கொல்கின்றனர் நகரங்கள், பள்ளிகள், கிராமங்கள் எல்லா இடங்களிலும் மனிதர்கள் மனிதர்களை கொல்கின்றனர் எல்லா இடங்களிலும் போர்களை நடத்துகின்றனர் குழந்தைகளை கொல்கின்றனர் சிறுவர்களை கொல்கின்றனர் பிறக்க இருக்கும் சிசுக்களைக் கொல்கின்றனர் குழந்தைகளின் தாய்மார்களை கொல்கின்றனர் கதறும் அப்பாக்களை கொல்கின்றனர் ஓடி ஒழியும் அப்பாவிகளைக் கொல்கின்றனர் அவர்கள் கூடிக் கூடிக் கதைக்கின்றனர் போர்களை நிறுத்துவதற்கு கூடுகின்றனர் பின் மீண்டும் போர்களை எப்படி திறமையாக நடத்துவது என்று கதைக்கின்றனர் போரால் சிதையும் மனிதர்கள் பற்றி கதைக்கின்றனர் பின் சிதையாது மிச்சமிருப்பவர்களை கொல்வது எப்படி என்று கதைக்கின்றனர் ஒருவர் இறப்பத…

  9. நான் ஏழை வீட்டுப் பிள்ளை கிடுகு வீட்டுக் கிள்ளை கிட்ட வந்து தொட்டு நிற்க.. எடி நான் உனக்கு சரிவர மாட்டேன்... ஏடும் எடுத்ததில்லை ஏரெடுத்த அழுக்கும் கலைஞ்சதில்லை ஏர்போட் ஏறி இறங்க எடி நான் உனக்கு ஏற்ற ஆளாய் வரமாட்டேன்.. பாடமும் படிச்சதில்லை பட்டமும் பெற்றதில்லை பகட்டும் எனக்கு இல்லை.. எடி நான் உனக்கு ஒத்துவரமாடேன்.. நான் ஏழை வீட்டுப் பிள்ளை கிடுகு வீட்டுக் கிள்ளை கிட்ட வந்து தொட்டு நிற்க.. எடி நான் உனக்கு சரிவர மாட்டேன்... **** வாசலில் வாடி நிற்கும் செவ்வரத்தை நான் மடி மீது ஊஞ்சல் கட்ட மாதுளை உனக்கு மன்னன் மகனும் அல்ல எடி நான் உனக்கு என்றும் தோதாய் வரமாடேன் காவல் காக்க நான் நாயும் இல்லை உன் காலடி சுற்றிவர பூனையும் இல்லை கட்டிலில் …

  10. உங்களைச் சுற்றி மௌனம் மட்டுமே மலர்ந்து நிற்கிறது மனதுக்குத் தெரியாத மர்மங்களில் .. எங்களைச் சுற்றி இனங்கள் மட்டுமே இடித்துக் கொண்டு நிற்கிறது.. மனதுக்குத் தெரிந்த மர்மங்களில் ...! http://tamilpaingili.blogspot.com.au/2011_11_01_archive.html

  11. சண்டை களத்தில் சமருக்குப் பயந்து சாவுகளைச் சாட்டி சமுத்திரங்கள் தாண்டி சந்துபொந்தெங்கும் சரணடைந்திட்ட சாமிகளே... "சமரு"க்கு மட்டும் சாலை வரும் சங்கதி கண்டு சந்தி சிரிக்குது..! சனங்களின் பயபக்தியில் சன்னதமாடும் சாமியார்கள் சட்டுப்புட்டென்று சதுரம் வளர்க்க சந்தர்ப்பம் வழங்கியது போதும்..! சரித்திரம் படைக்க சண்டைக்குப் போன தேசம் சரிந்து கிடக்குது சார்ந்திருக்குது சந்ததி ஒன்று..தப்பிப் பிழைக்க..! சாவில் தான் சந்தர்ப்பம் கண்டும் கரங்கொடுக்க மறந்தீர்..! சரிந்தது போதும் அவ்வினம்.. சரணடைந்தொரு அடிமை வாழ்வில் சண்டித்தனம் இயற்றியதும் போதும்..! சட்டுபுட்டென்று காரியம் ஆகட்டும் சில்லறைகள் நிறையும் உண்டியல்கள் ஊருக்குப் போகட்டும் சாலை வரும் சாமிகளே…

  12. Started by Thamilthangai,

    ஆடிக்கலவரம்- கறுப்பு ஜீலை ஓடி ஓடிச் சிங்களம் ஈழத்தமிழரைக் கொன்று குவித்த நாளாம் அம்மா சொன்னாள்! கண்டதில்லை கலவரத்தின் நிலவரம் ஆனால் கண்டவர் உணர்ந்தவர் யாவரும் சொன்னார் "வாழை" போலே வெட்டிச் சாய்த்தார்களாம் நம் உறவுகளை தலைமுறைத் தளிர்களை" நாவினை அறுத்தால் கோஷங்கள் அடங்கலாம் தமிழீழம் எனும் உணர்வுகள் அடங்குமா?! கைகளை அறுத்தால் வேறு கதி இன்றி அடங்குவோம் என்று நினைத்தால் நம்பிக்கை அறுபட்டுப்போகுமா? அடிபட்டுப் போகுமா?! ஆண்ட பரம்பரை நாங்கள் என்று சொல்லித் திரிந்தால் போதுமா? மீண்டும் ஆளவேண்டும் என்று நினைப்பது தமிழனே தவறென்று ஆகுமா? கொன்று குவிப்பவன் காலைப் பிடித்தொரு கோழை பிழைப்பு இங்கு வேண்டுமா?! வென்று எங்கள் கொடி நாட்டுதல்…

    • 3 replies
    • 1.1k views
  13. பிரபாகரனைப் பற்றிப் பேச உனக்கு தகுதி உண்டு என்றால்.. பிற நாய்களைப்பற்றி கவலைப் படாதே..! ************************************ மு.வே.யோகேஸ்வரன் ********************************* விடுவது நாங்கள் மூச்சுத்தான் நண்பா.. ஆனால் விதைப்பது மண்ணில் என்ன தெரியுமா? தமிழின் விதை! வாழ்ந்தான் தமிழன் செத்தான் என்பது வரலாறு அல்ல..ஒரு செய்தி..! பிறந்தான் தமிழன்...வீரம் செழிக்க வாழ்ந்தான் போராட்டக் களத்தில் மடிந்தான்.. என்பதே வரலாறு! பிரபாகரனைப் பற்றிப் பேச உனக்கு தகுதி உண்டு என்றால்.. பிற நாய்களைப்பற்றி கவலைப் படாதே..! பிரபாகரனைப்பற்றி அறிய நீ நினைத்தால் .. வரும் சோதனைகளை எண்ணி வருத்தப் படாதே.. பெரும் வீரர்களின் வரலாற்றைப் பற்றி …

    • 3 replies
    • 1.1k views
  14. மூன்றாவது மனிதனின் கவிதை. - வ.ஐ.ச.ஜெயபாலன். என்றோ ஆழ்மனதுள் தைத்து இன்னும் சிப்பிச் சிறு மணலாய் நெருடும் காலமுகமான ஒரு கவிதையடி நீ. தொடுவான் எரிய மணல் ஊருகி அலை புரளும் பாலையிலே ஈடன் பூந்தோட்டத்து வழி தவற ஓயாமல் சபிக்குமொரு ஒட்டகத்தைப் புணர்ந்தவன் நான். ஏவாள் நீ இன்றெங்கே. உந்தன் உடற் தணலின் முலைச் சுவாலை இதழ் பொசுங்கத் தின்று உயிர் எரிந்த காலத்தே நீ இச்சித்தும் நான் தவிர்த்த அந்த விலக்கப் பட்ட கனி இன்னும் இருக்கிறதா. உன்னிடத்தே வளைய வளைய வந்து எனைக் கண்டால் நச்சுப் பொறாமை வழியச் சிரித்திடுமே அந்த அருவருத்த பாம்பு அது எங்கே. உன் பிள்ளை ஒன்றுக்குப் பாம்புக் கழுத்து மற்றதற்ககுப் பாம்புக் கண் என்ற ஊர்வாய் மொழியைஒப்பவில்ல்லை …

    • 0 replies
    • 1.1k views
  15. Started by கிருபன்,

    சைவப்பற்று -பாவேந்தர் பாரதிதாசன்- இரும்புப் பெட்டியிலே - இருக்கும் எண்பது லக்ஷத்தையும், கரும்புத் தோட்டத்திலே - வருஷம் காணும் கணக்கினையும், அருந்துணையாக - இருக்கும் ஆயிரம் வேலியையும் பெருகும் வருமானம் - கொடுக்கும் பிறசொத்துக்களையும், ஆடை வகைகளையும் - பசும்பொன் ஆபரணங்களையும் மாடு கறந்தவுடன் - குடங்கள் வந்து நிறைவதையும், நீடு களஞ்சியம்கள் - விளைந்த நெல்லில் நிறைவதையும், வாடிக்கைக் காரர்தரும் - கொழுத்த வட்டித் தொகையினையும், எண்ணிஎண்ணி மகிழ்ந்தே - ஒருநாள் எங்கள் மடாதிபதி வெண்ணிறப் பட்டுடுத்திச் - சந்தனம் மேனியெலாம் பூசிக் கண்கவர் பூஷணங்கள் - அணிந்து கட்டில் அறைநோக்கிப் பெண்கள் பலபேர்கள் - குலவிப் பின்வர முன்நடந்தா…

  16. Started by slgirl,

    சங்கமம் ஒற்றுமை உயர்வில் சங்கமம், ஆத்திரம் அழிவில் சங்கமம், நதி கடலில் சங்கமம், கதிரவன் மேற்கில் சங்கமம், கற்பனை கவிதையில் சங்கமம், பிரிவு சோகத்தில் சங்கமம், ஐயம் தோல்வியில் சங்கமம், வசந்தம் இளமையில் சங்கமம், காதல் இதயத்தில் சங்கமம், மனிதநேயம் பண்பில் சங்கமம், நல்மணம் அன்பினில் சங்கமம், பிறப்பு இறப்பில் சங்கமம், படிப்பினை மனதில் சங்கமம், ஊக்கம் உற்சாகத்தில் சங்கமம், உழைப்பு உயர்வில் சங்கமம், முயற்சி வெற்றியில் சங்கமம்.

    • 2 replies
    • 1.1k views
  17. உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்? சந்தனம் கமழ, செந்தமிழ் குழைய மங்கலம் இழைய "வருக என் பொன்னாண்டே" என்று வரவேற்கும் இங்கிதம் தொலைந்து போன உள்ளம் உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்? வருக புத்தாண்டே. அழைத்தாலும், விட்டாலும் அகலக்தடம் விரித்து - எங்கள் வாழ்வின் வாசலில் வினையாற்றத் தொடங்கிவிட்டாய். அழைத்தென்ன? விட்டென்ன? அனுமதி கேட்டா வருகின்றாய்? வந்தது வந்துவிட்டாய் வலிய வந்த சீதேவியே! எங்கள் வாழ்வின் வாசலில் கோலமிடு. நேற்றுன் சோதரி வந்தெடுத்துப் போனாள். ஒப்பாரி ஓலங்களை மட்டுமே எங்களதாய் மிச்சப்படுத்தி, கண்மூடித் திறக்குமுன்னே களவாடிப் போய்விட்டாள். எங்களுக்கென்று பத்திரப்படுத்த, செல் விழுந்த சிதைவிடையே உயிர் காவி …

  18. Started by யாயினி,

    ஒரு நாளும் மழையில் நனையாத நான் நேற்று மட்டும் ஏன் நனைந்தேன்.....? மழைத்துளியில் குளித்தாவது உடல் வெப்பதை போக்கி கொள் என உள்மனம் சொல்லிச் சென்றது. ஒரு சிறு பொழுது மனிதர்களால் செய்ய முடியாத ஒன்று அந்த மழை கூட எனக்காக அழுதது போலும்.. நாட்கள் வாரங்கள் மாதங்கள் வருடங்களாய் வண்ண வண்ணப் பூக்களாய் பூத்து நின்ற கனவுகள் காரணமின்றியே உலர்ந்து கொட்டி விட்டன.... என் ஒரு கனவாவது பலித்திடனும் என பகல் இரவாய் விரதம் இருந்தென்ன பயன்..... கண்ட கனவுகள் எல்லாம் பகல் கனவாகி போக என் கனவுகளும் காணாமல் போனோர் பட்டியலில் உரிமை கோர வழியின்றி விழி பிதிங்கி நிற்க ஒருவர் மட்டுமே நிழலாய் தோன்றினார். தூங்கும் போது காண்பது கனவு அல்ல தூங்க விடாமல் காண்பத…

  19. ஒரு கவியை கவி கொண்டு பாட........ மனசு வரிகளுக்காய் .......... வரண்ட வயலாய் ...இன்னும் சிந்தனைக்கு ஏதும் வராது சிறு மெளனம்.....கொள்கிறது! ஐயா........எல்லா கவிஞனும்......... எழுது கோலுக்கு நிறநீர் மட்டுமே......... நிரப்புவான்........நீரோ......... உயிர் உம்மோடு இருந்தவரை......... கண்ணீர் பாதி செந்நீர் பாதி கொண்டே...... இந்த கைவிடபட்ட இனத்துக்காய்.......... எழுத்தால் போர் செய்து காலமானீர்! என்ன சொல்லி உம்மை பாட? நரைத்த தலை தாடி உம்முருவம்........ அதனுள் நரை விழாத விடுதலை உணர்வு....... இது-இளமை கொண்டவர்கூட ........ எட்டப்பராய் திரியும் காலம்........ முதுமையின் சாயல் முகத்தில் விழுந்தும்..... கடைசிவரை எம் தேச தாகம் தீர்க்க.......…

  20. நெஞ்சில் இனித்த நினைப்பு --------------------------------- -மு.கருணாநிதி தொங்கு சதை கிழவிஜெயா அறிக்கை புலி மங்கு சனிக்குணமும் பொங்கு பசிவயிறும் தங்கு தனியிடமும் தழுவுகலா சேவையும் வங்கு ரோத்துதனமும் வறட்சிமிகு மூளையும் கொண்டதனால் குழப்பமிகு அரசியல் ஆட்சி தந்தபணால் பன்னிகளும் புடைசூழ நின்று வெந்தபுண்ணாய் மக்கள் வெதும்பி அழுதிட வந்தமாற்றம் என்னிடம் அரசு ஆட்சியாய் ரெண்டுரூபாய் அரிசிக்காய் ரெட்டையிலை தூக்கி கூவத்தில்வீசும் கலர்டீவிகாட்ட கைநாட்டு போடும் பாமரத்தமிழன் பாராளுங்கனவோடு பசிவயிறு மேல் ஈரத்துணி போட்டு இரந்துவாழ் நாள்மட்டும் எந்தனாட்சி என்வீட்டு ஆட்சியாய்வரு சாட்சியாய் ஒன்றுரெண்டு மூன்றுமனுசி பெத்தவாரிசு ஆட…

  21. 1 நினைவை விட்டழியா நெருப்பு நாட்கள் இனவெறித்தீ பரவி எமை அழித்த-அந்த நெருப்பு நாட்கள்-எம் இதயம் சுமக்கும் எரிதணல்கள். நீறாகிய எம் உறவுகள் நினைவுகள் நாளும் நாளும் கனன்று-இன்று பெருநெருப்பாகி வியாபித்து எரிகின்றது. இரத்தப்பெருவௌ;ளத்துள் திக்கித்திணறி தத்தளித்து எங்கள் தமிழினம் தவித்த-அந்த கொடியநாட்கள்-எங்கள் நினைவைவிட்டழியா நெருப்பு நாட்கள் தமிழினத்து வேரை தகர;த்தெறிவோமென்று தறிகெட்ட மிருகங்கள் எம்மினத்து குருத்துக்களை குதறிக்கிழித்து குதுhகலித்த-அந்தநாட்கள் எங்கள் நினைவைவிட்டகலா கறுப்புநாட்கள் தமிழினத்தை தலைகுனியவைக்க தமிழ்ப்பெண்களை வன்கொடுமைக்குள்ளாக்கி குதறிக்குற்றுயிராக்கி கொடுஞ்செயல்புரிந்த அந்த கோரநாட்கள் எங்கள் வாழ்வின் இருண்டநாட்கள் பச்சிளம் குருத்துக்கள் …

    • 10 replies
    • 1.1k views
  22. சில்லுடைந்து விழுந்த வண்டி சிலுக்காகி ஆடையிலே பல்லெடுத்து சிரிக்காம பார்த்து நானும் நிற்பேனோ...??? வந்த வழி தடுமாறி வழியோரம் கேட்கையிலே என்ன வென்று சொல்லாமால் எடுத்தெறிஞ்சு போவேனோ....?? கட்டழகு மேனி காட்டி கண்னேதிரே நீ வந்தா கண்ணெடுத்து பார்க்காமா கரையொதுங்கி போவேனோ...?? சுத்தி விட்ட துணி நளுவி தொப்பிளது தெரிஞ்சுப் புட்டா கை nவைத்து நுள்ளாம காளை நானும் நிற்பேனோ...??? முற்றத்து வாசலிலே துளசி மரம் முன்னிருந்தா கை யெடுத்து வணங்காமா காலெடுத்து போவேனோ....??? பதில் சொல்லு....! :P :P :P - வன்னி மைந்தன் -

    • 2 replies
    • 1.1k views
  23. உயிரை வருத்தி நீங்கள் செய்த தியாகங்கள் வீணாகிவிடக் கூடாதேயென நித்தம் நித்தம் ஏங்கியேங்கி நாங்கள் இப்போது மூச்சுத்திணறி நிற்கின்றோம்! தாயகம் சுமந்துவரும் உங்கள் நினைவுகள் எம் ஒவ்வொருவர் மூச்சுக்காற்றிலும் கலந்து மண்ணை மீட்பதில் நாம் கண்ணாயிருக்க ஆன்ம பலத்தை எங்களுக்கு தரட்டும்! http://karumpu.com/wp-content/uploads/2010/song.mp3 தகவல்: நிதர்சன் | வன்னித்தென்றல்

  24. [size=3] [/size] [size=3] பெண் ஒன்று கண்டேன்… மழையில் நனைந்தவொரு மான் மரத்தடியில் ஒதுங்கியதுபோல் மான்விழி மங்கையவள் மருண்டோடி மாமரத்தடியில் மறைந்து நின்றாள். கார்மேகம் அசைவது போல்- அவள் கருங்கூந்தல் ஆடியது. கண்வைத்தேன். காய் வேல்கள் பாய்ந்தவைபோல்- அவள் கரு விழிகள் என்மீது வேல்பட்டு வீழ்ந்த வேங்கைபோல் நான் ஆனேன் மீண்டும் வெருண்டசைந்து அப்; பக்கம் மெதுவாகப் பாதி விழிவைத்தேன். கோபங்கொண்டென்மீது கொதித்தெழுந்தாள். ஆடையெல்லாம் பாவை உடலழகில் ஒட்டியது அழகு மயில் நனைந்ததுபோல் அதில் நீர் கொட்டியது தோகைமயில் சிறகுவிரித்துபோல் உடல் அசைக்க துளித்துளியாய் நீர்மணிகள் என்மீது சிதறினவே. பனித்துளி பட்டுச் சிலிர்த்த மலர்போலே- நான்…

  25. ஈனர் மனம் கொழுத்தி நீதியை காத்திடம்மா! ஈனர் மனம் கொழுத்தி நீதியை காத்திடம்மா! நீதியின் தாயென நிமிர்ந்த தெய்வமே கண்ணகைத் தாயே! வரணியில் உன் சந்நிதியில் சாதிய திமிரை எப்படி அனுமதித்தாய்… ஊரெல்லாம் கூடி இழுக்கின்ற தேரை பாரமிழுக்கும் யந்திரத்தால் இழுப்பிக்க நீ எப்படி அதில் அமர்வாய். நிச்சயமாய் நீ அங்கு இல்லை என்பேன்! நீதி செத்த கோபத்தால் பாண்டியன் நாடெரித்து மனம் ஆறாமல் பாம்பாகி எங்கள் ஈழநிலம் அடைந்தாய் இங்கும் செட்டிச்சி பெண் தெய்வமாவது எப்படி என உருமாற்றியவர் நாண உருக்குலையாது நீ நிம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.