கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
உன் காலடி ஓசையில்தானே என் இதயம் பாசை கற்றுக்கொண்டது உன் கூந்தலின் சுருள்களில்தானே என் இதயம் கனவைப் பெற்றுக்கொண்டது சிந்தையும் மையலில் சிதைந்தபோதுதானே கண்களும் காந்தமாய் கவர்ந்தபோதுதானே அந்தரத்தில் அந்தரித்து நின்சுந்தரத்தில் சுயம்புரள அதரத்தில் ஆதாரம்தேட நீ அகல நின்றாய்! சுட்டும் சொற்களுக்குள் உன்னை சிறையாக கட்டிக்கொள்ள வகையறியா கபோதி மீட்டும் உன்விரல் பிறப்பில் ஊற்றும் உணர்வில் ஈட்டும் என்மனமே இன்ப இராகங்களே!!
-
- 3 replies
- 541 views
-
-
குற்றம் ஏர்.... ஊருக்கு உண்மைகள் உரைப்பேன்- எனக்கறிந்த உண்மைகள் அத்தனை உரைப்பேன் பாருக்கெல்லாம் முதலாகுமென்ற பாரதியை வார்த்தையை உரைப்போம்... தாளப்பறந்த விமானம் தள்ளாடி விழ்வது முறையே கண்ணேதிர் முன்னே நின்ற கட்டிடம் காண பிழையே... உச்ச கதிரோன் தானெனவே உசந்ததாய் நினைத்தத பிழைதானே மதியதை மதியதை மறந்தாரே- இன்று மனிதமதையெ இழந்தாரே.... கூடு கட்டிய குருவிகளின் கூடது உடைத்தத பிழைதானே மாட மாளிகையில் தானெனவே மனிதா நினைத்தத பிழைதானே.... நீதிநெறியதை மறந்தாரே- இன்று நீதிகெட்டின்று விழந்தாரே தூக்கிட யாரின்று வருவாரோ...? துன்பத்தில் தவிப்பது முறைதானே... இகழ்வதும் புகழ்வதும் முறைதானே- தொடர் இகழ்வது இகழ்வது பிழைதானே மனிதன் போட…
-
- 3 replies
- 1k views
-
-
என்னை விட்டு நீங்கிய என் சுவாசமே .. உன்னை விட்டு நான் நீங்க வில்லை.. உன்னைவிட்டு நான் நீங்கினால் .. என்னை விட்டு நீங்கிவிடும் எந்தன் உயிர் தென்றலுக்கு தெரியும் வாசனை மீது மலர் கொண்ட நேசம் கடல் நுரைக்கு தெரியும் கடல் மீது அலை கொண்ட நேசம் முகிலுக்கு தெரியும் மேகம் மீது வானவில் கொண்ட நேசம் என் கவிதைக்கு தெரியும் நான் உன் மீது கொண்ட நேசம் - அனால் உனக்கு மட்டும் என் நேசம் புரியாமல் போனதேன் என் விழியன் பார்வையில் கலந்தவள் நீ என் இதயத்தின் துடிப்பில் உறைந்தவள் நீ என் உடலின் உயிரோடு சேர்ந்தவள் நீ என் நாடி நரம்புகளில் உணர்ச்சியாய் வந்தவள் நீ என் சுவாசமாக என்னுள் நுளைபவள் நீ என் பாதங்கள் செல்லும் பாதையாய் தொடர்பவள் நீ என் நிழலாக என்னோடு …
-
- 17 replies
- 11.3k views
-
-
2012 டே எப்படி உனை நான்... ---------------------------------------- மகிழ்ச்சி வெள்ளத்தில் அகதியாய் நான் வாழும் நாடு யுத்தச் சூறாவளியுள் தொலைந்த எம் தேசமே எப்போது எம் வாழ்வில் புத்தாண்டு மலருமென ஏக்கமுடன் பார்த்திருக்கும் குழி விழுந்த கண்களுடன் கூன் விழுந்த தோற்றமுடன் தேற்றுவாரற்ற இனமாக என் இனமே துவண்டு துரும்பாகிக் கிடக்கையிலே எப்படி உனை நான் மகிழ்வோடு... 2012 டே எம்மினத்தின் ஒற்றுமை கொணரும் ஆண்டாக வேற்றுமை களையும் ஆண்டாக எம் தலைநிமிரும் ஆண்டாக மலராதோ மலராதோ...... மலர்விக்கும் கடனெமதானால் வரும் ஆண்டுகள் யாவும் எமதே!
-
- 1 reply
- 735 views
-
-
வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை -தீபச்செல்வன் 01 வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்கள் அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய தனித்தலைபவனின் காலடிகளைத் தொடரும் நாரைகளும் மௌனம் கலைத்தேதும் பேசவில்லை 02 …
-
- 1 reply
- 1.2k views
-
-
பிள்ளைகள் பெண்ணாய் பிறந்து விட்டதே தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும் நிலம் வாங்கி சேர்க்க வேண்டும் செலவை குறைத்து சேமித்த பணத்தை வங்கியில் சேர்கனும் என்று ஏங்கித் தவிக்காதீர்கள் தூக்கம் மறந்து துவழாதீர்கள் துக்கம் கொள்ளாதீர்கள் நீங்கள் ஆற்ற வேண்டியது ஒன்றே ஒன்று தான் பெண் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுங்கள் எதையும் எதிர்த்து ஏறி மிதித்து வாவென்று தன்…
-
-
- 5 replies
- 1.5k views
- 1 follower
-
-
முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!! தவமிருந்துதான் பெற்றோம் உன்னை, தடுமாறி வாழ்கை நடத்தியபோதும் தனித்தன்மையாய் வளர்த்தோம், உன் எச்சில் பட்ட என் கண்ணங்கள் இன்னும் குளிருதாடா..!மகனே... உன் மழலை புன்னகையை பிச்சை கேட்டு பல நாட்கள் உன்னிடம் மண்டியிட்டிருக்கிறேன் , என் செல்ல மகனே..., உன் பால் வாசத்தில் என் பாசம் உணர்ந்தேன், நீ கடித்து காயபடுத்திய என் கன்னத்து தழும்பை இன்னமும் முத்தமிடுகிறாள் உன் அம்மா...! என் கிழிந்த வேட்டியை மறைத்து,மடித்து கட்டி வேட்டி வாங்கும் பணத்தில் வாங்கியதுதான் உன் வெள்ளி பாலாடை...! என் அன்பு மகனே..! முதல் முறை நீ பள்ளி செல்லும்போது …
-
- 23 replies
- 2.2k views
-
-
-
போருக்கு பின் எனது கிராமத்துக்கு ஒரு முறை செல்ல முடிந்தது உடைந்த சட்டி பானைகளும்..... விளக்குமாறு தும்புத்தடிகளும்... அகப்பை காம்புகளுமே - அம்மாவினது அடையாளமாக மிஞ்சியிருந்தது. அப்பாவின் இருப்பு சரிந்து விழுந்து கிடந்த கோர்க்காலியிலும்... பழைய முடிச்சு பொட்டாளியிலும்.... புலப்படுத்தப்பட்டது. வீட்டின் பின்பகுதியில் - கிழிந்து புதைந்து கிடக்கிறது எனது பழைய காற்ச்சட்டை ஓரிரு நாட்களேனும் தம்பி அதை பயன்படுத்தியிருக்கலாம். உரலும் அம்மியும் முற்றத்தில் சிதறிக்கிடந்தது. ஊரார்கள் தூக்க முடியாமல் விட்டு விட்டார்கள் போல...... தங்கச்சியினது - எந்த அடையாளங்களும் அங்கே காணப்படவில்லை... எதிரிகளால் அவள் கொலை செய்யப்பட்டிரு…
-
- 20 replies
- 5.6k views
-
-
கண்ணின் மணியாய் கனிந்தவளே கனக்குதடி இதயம் காணத்துடிக்குதடி உன்னை.. கண்ணோடு கண் கொண்டு கதைகள் பேசி கணங்கள் மறந்து களித்திருந்த நினைவுகள்..! கனவுகள் கூட கணமும் காட்டுதடி உன்னை கனக்கும் பிரிவுக்குள் கண்கள் சிவக்குதடி தினமும். கண்ணீரின் நிறையது கடல் தாண்டிப் போனதடி கனக்கும் சோகம் கட்டிலில் நோயோடு கட்டியதடி என்னை. கனவாகிப் போனதுவே காளையிவன் களிப்பு..! கணமும் ஏங்குதடி கண்ணில் உன் விம்பம் நாடி. கதறுகிறேன் இன்று தனிமையில்.. கனிந்த உன் நினைவுகள் கனக்குதடி மனசெங்கும்.. கழுத்தில் ஒரு சுருக்கு களிப்புடன் தா கனவில் உன்னைக் கண்டபடி கழற்றி விட என் உயிரை கழன்று விடுகிறேன் உலகை விட்டே கண்களால் நீ என்றும் என்னைக் காணாதிருக்க…
-
- 10 replies
- 2k views
-
-
பறவை ஒன்றை வரையத் துவங்கினேன் வரைந்து முடிந்ததும் அது பறந்து விட்டது மீண்டும் ஒரு பறவையை வரைந்தேன் அதுவும் பறந்து விட்டது நான் வரைந்துகொண்டே இருந்தேன் அவைகள் பறந்து கொண்டே இருந்தன இறுதியாக மரம் ஒன்றை வரைந்து முடித்தேன் பறந்து போன அத்தனை பறவைகளும் வந்து அமர்ந்து கொண்டன........... நன்றி: தென் பாண்டியன் கவிதை ஒன்று இந்த டிசெம்பர் மாத 'உயிரெழுத்து' பத்திரிகையில். http://rprajanayahem.blogspot.fr/2012/08/blog-post_29.html
-
- 9 replies
- 993 views
-
-
அன்னை கருவில் அழகான வாழ்வு அகிலம் கண்டும் ஆனந்தம் கொண்டு மனிதப்பிறவியாய் மண்ணில் ஆர்ப்பரித்து மனிதனாய் வாழ மறுக்கின்ற உலகம் செய்த பிழை எதுவென்று சொல்லாது தளம்பறித்து சிசுவாய் இருந்தாலும் சிதைத்து சுகம் கண்டு ஓடு மட்டும் துரத்தி ஓட்டாண்டியாக்கி ஒய்யாரமாய் படம் போட்டு ஒப்பாரியில் வாழ்கிறார்கள் எல்லார் வாழ்விலும் எட்டப்பர்களாய் எட்டி உதைத்து எரித்துப் போட்ட சுதந்திரம் அங்குமிங்குமாய் அலைமோதும் அகதியாய் அல்லல் படுத்தும் அறிவு கெட்ட உலகம் சுதந்திரம் என்ற சுவாசம் அடைந்து பெற்றவர்களும் அதனை அளிக்க மறுத்த ஆட்சியாளர்களாய்.... மரத்துப்போன வாழ்வுடன் மடிந்தொழிந்து போகுமுன் மனிதன் என்றாவது மறதியிலாவது ந…
-
- 0 replies
- 437 views
-
-
தமிழினத்தை அழிக்கும் அரச பயங்கரவாதிகளுக்கு, சர்வதேச அரங்கில் என்ன விளையாட்டு?. நீ..கைகளைக்கட்டி முதுகினில் சுடுவாய். தமிழ் பெண்களின் முதுகில் காலால் உதைப்பாய். அதற்கும் 'LIKE ' போட முகநூலில் நாலாயிரம் பேர்!. சிங்களப் பேரினவாதமே.. ஒன்றை உற்றுக்கவனி. உன்னில் பத்தாயிரம் பேர் திரண்டிருந்த மைதானத்தில் எம் தேசியக்கொடியுடன் ஒரு தமிழன். Seelan Ithayachandran
-
- 1 reply
- 540 views
-
-
சூரியப்பேரொளியைச் சுற்றிக் காவியப்போராளிகள் வருவர் இயலாப்பொழுதின் புலர்வாய் ஒளிசொட்டிய சூரியக் கதிர்களுக்குள் இருள் முட்டி இதயம் முட்டி எதுவெனச்சொல்ல இயலாமல்…. எதை இழக்க எதை மறக்க ? எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை…. எல்லாம் முடிந்துவிட்டாற்போன பிரமை கண்ணுக்குள் வந்து மறையும் காட்சிகளாய் கடைசிக்கணங்களின் நுனியில் சாவின் நொடிகளை நுர்கின்றன…. சந்திப்புகள் சரித்திரக் கதைகள் சாதனைகளின் நீளமாய் ஒவ்வோர் நினைவும் முகமும் கலங்கிய விழிக்கனவோடு கரைந்து கரைந்து கடல் வற்றிக் காய்ந்து பாழங்கள் நிறையும் மயானக் காட்டின் நெடிலின் நுகர்வோடு கவிதையும் கடந்தகால நினைவுகளும் கசங்கிக் காற்றள்ள முன்னம் கடைசியாய் ஏவப்பட்ட …
-
- 0 replies
- 914 views
-
-
_________________________________ அவர்கள் பெருங்கனவுடனே மரணத்தை முத்தமிட்டனர். கடைசியில் அவர்களின் ஞாபகம் நிரப்பிவிடப்;பட்ட கல்லறைகளும் நம்மிடம் இல்லை. தாய்மார்கள் தீப்பந்தங்களையும் தமது பிள்ளைகளுடன் இழந்து விட்டனர். மனைவிமார்கள் தங்கள் புன்னகையுடன் கல்லறைமீதான தமது சொற்களையும் இழந்து விட்டனர். கனவின் அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிடக்கிறது. இம்முறை எந்தப் பூக்களும் மலரவில்லை. இலைகளில் குருதி ஒழுக பூமரங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன. தலைகளை மின்கம்பத்தில் மோதி இல்லாதவர்களை அழைக்கிறது நம்பிக்கையற்ற மனம். கனவை உறிஞ்சி எடுத்துக்கொண்டு அவர்களை தின்று முடித்துவிட்டது உலகம். அவர்கள் மீதெழுதப்பட்ட மரணப்பாடல் நெருப்பில் கிட…
-
- 1 reply
- 861 views
-
-
நீண்ட நாட்களுக்கு முதல் யாழ் கள உறுப்பினரும் சிறந்த கவிதாயினியுமான ஜேர்மன் மண்ணை சேர்ந்த அன்புக்குரிய நண்பி நித்தியா எழுதியது நளினமேனி நவரசப் பந்தல் இனிய மெய்யான பொய் பொய்யோ மெய்யோ என அய்யோ என்னை மலைக்க வைக்கும் இரு குன்றுகள் நெய்யாய் எனை உருக்கி ஒரு கை போதாமல் என் இரு கைகளால் அள்ளி பருகப் பருகத் தாகம் பெருக முயல முயல முயற்சி நீள அகல அகல அனைத்தும் அகன்று ஒடுங்கி ஒன்றாய் நீயும் நானும்... நெருங்கி நெருங்கி நெருப்பு மூட்டி மூட்டிய தீயில் முழுவதும் தீய்த்து தீய்ந்து பயனாய் மூளும் தீயை தீயாய் மாறி யாண்டும் எரித்து எரிந்தது சுட்டு சூடு பறக்க... என் உடலில் உரசி உசிரை கரைத்து கரைந்து இரண்டற இன்றே கலந்த…
-
- 10 replies
- 784 views
-
-
தொலைந்து போகும் அடையாளங்களை தூக்கிநிறுத்துவதற்கு புலிப்பிரமுகர்கட்கும் புலிஎதிர்ப்பு பிரமுகர்கட்கும் மகிந்த வள்ளலானார் இரும்பும் கரும்பாய் இனிக்குமடா இனி…. செயலிறங்கத் துடிக்கும் புலத்து இளையோரை பொறிக்குள் வீழ்த்திட தூதுவராலயத்து தூதுவர்கள் அபிவிருத்திக் குச்சிகளோடு ஊரோடு உறவாட வருகிறார்கள் ஊர்சார் அமைப்புக்களே உசாராகுங்கள் குண்டுமணியளவேனும் எங்கள் சொந்தப்பலத்தில் நிகழட்டும் எங்கள் சொந்தநிலத்திற்கு சேரட்டும் புதிதாய் முளைக்கும் ஊர்ப்பற்றாளரிடம் விழிப்பாயிருங்கள் இயற்கைவளமே எங்கள் பலமென்று வாழ்ந்தவர் நாம் கடலும் வயலும் பனையும் தென்னையும் கனிதருமரங்களும் எங்கள் சொந்தம் எங்கள் நிலத்தில் மூச்சுவிட்டு இருக்கவிடு இராணுவ அரண…
-
- 1 reply
- 810 views
-
-
உயிர்ப் பூக்கள் தமிழீழம் மலர்ந்து தன் மானத்துடன் வாழவே தானத் தலைவன் தரணியில் அமைத்தான் புலிப்படை எம் இனத்தை வதை செய்த பாதகரைத் திவசம் செய்ய தலைவன் வழியினில் உதித்த உயிர்ப் பூக்கள் நீங்கள். வானத்திலிருந்து விமானங்கள் குண்டு மழை பொழிந்தாலும் அந்நியப் படைகள் ஆயிர மாயிரமாய் வந்தாலும் சிரிக்கின்ற முகத்துடன் சிட்டாகப் பறந்து சென்று தேடிவந்த பகை விரட்டியடித்து பூரித்து நிற்பதே உங்களின் இலக்கு பார் முழுவதும் வியக்கும் படைப் பலத்தைப் பெற்றீர்கள் களத்தினில் எதிரிகளைக் கொன்று காலனை உம்மிடம் அழைத்தீர்கள் உங்கள் குருதி உறைந்த தமிழ்மண்ணை உயிராய் நேசிப்போம் தமிழ் உயிர்ப் பூக்கள் என்றும…
-
- 6 replies
- 1.5k views
-
-
மொட்டென முகம் மூடியிருந்தேன்............. கிளி - கொத்தாதவொரு கொவ்வை பழமாய்......... என் பாட்டில் நானிருந்தேன்! சட்டென்று கடந்தது ஒரு -மைனா..... பட்டென்று முழைத்தது - காதல்! எழுத்துகூட்டி தமிழ் படித்தவன் ஒரே இரவில் கவிஞன் என்றானேன்! இதயத்தின் அடியிலொரு நீர் வீழ்ச்சி..... இனி என் இயங்கு திசை எங்கும் .......... அவள் ஆட்சி! ஆயுள் ரேகை உண்டென்று.......... உலகம் ஆயிரம் சொல்லும்...... ஆளவந்தாள் என்னை - இனி அவளே என் ஆயுளுக்கு நீதிபதி! பாடல் கேட்க பிடிக்குது...... சித்ரா பாடியது அதுவென்று தெரிந்தும்........ என் சித்திரம் பாடுதென்று ........ திருட்டு கனவு வருது! போச்சு போச்சு................ இனி என்ன செய்ய நான்? ஊர் உறங்கும…
-
- 17 replies
- 3.1k views
-
-
என் உயிரே காதல் செய்தாயே என்னை ஞாபகம் இருக்கிறதா? நான் உன் மீதூ பைத்தியம் ஆகும் வரை காதல் செய்தாயே ஞாபகம் இருக்கிறதா? நாம் கற்பனையில் வாழ்வதாக பல கதைகள் சொன்னாயே ஞாபகம் இருக்கிறதா? நான் உன்னை புரிந்துகொள்ள வைத்தாயே ஞாபகம் இருக்கிறதா? காலத்தின் கோலத்தால் நான் உன்னை பிரிந்து வந்தேனே ஞாபகம் இருக்கிறதா? பிரிந்துஇருப்பதிலும் ஒருவித சுகம் உண்டு என்றாயே ஞாபகம் இருக்கிறதா? தொலைபேசியில் நாங்கள் மணிக்கணக்கில் பேசியது எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் அனுப்பிய காசில் நீ உன்னை அலங்கரித்தது எல்லாம் ஞாபகம் இருக்கிறதா? எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் உன்கூடத்தான் …
-
- 4 replies
- 1.5k views
-
-
என் காதலியும் என் கல்லறையும் ________________________________________ என் சவப்பெட்டியை செய்து எத்தனித்தேன் உள்ளே செல்ல வந்தாளே காதலி இடுகாட்டில் இருந்த பெட்டிக்கு மெல்ல அன்பே இன்னும் இற்க்கவில்லை காத்திருந்தேன், நான் சொல்ல பெட்டியில் அடிக்காமல் ஆணியை நெற்றியில் அடித்தாள் என்னை கொல்ல இறந்தேன் - இறப்பைப் போன்று உறுதியான உண்மை. தந்தை வந்தார் அழுதுச் சென்றார் தாயும் நின்றாள் சோர்ந்து தம்பி வந்து தேம்பி அழ அக்காவோ புலம்பி அழுது சுற்றமும் முற்றமும் தோழர்களும் ஏங்கி சேர்ந்து அவளை தேடி அலுத்தது கண்கள் அங்குமிங்கும் பாய்ந்து இறந்தாலும் - இருந்தேன் அங்கே ஆன்மாவாக. அவளும் வந்தாள் கல்லறைக்கு பூக்கள் நிறைந்த கரங்கள் ஆகா என் கண்மணி அறிவாள் எனக்கு…
-
- 4 replies
- 1.5k views
-
-
காணாமல் போன அண்ணன்! தீபச்செல்வன்… ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக் கொண்டு செல்லும்பொழுது வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில் அண்ணன் எங்கே என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப் பார்க்கும்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும்போதும் அண்ணன் வந்துவிட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்வில்லை யாராவது திருவிழாவுக்கு செல்லும்போதும் கொண்டாட்டநாட்கள் வரும்போதும் அண்ணன் வரமாட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தூங்கி எழும்பும்போதும் பள்ளிக்கூடம்செல்லும்போதும் அண்ண…
-
- 0 replies
- 1.1k views
-
-
''நிதர்சனத்திற்கு நன்றிகள் '' ''நிதர்சனத்திற்கு நன்றிகள் '' இரும்பு கரமதிலே இறுகி கிடந்தவனை அகிம்சை வாளெடுத்து எப்படி அறுத்து வந்தாய்...?? கம்பிச் சிறையினிலே கட்டுண்டு கிடந்தவனை தங்கு தடையின்றி எப்படி தப்பிக்க வைத்தாய்...?? தேதி குறித்தங்கு சாவு காத்திருக்க காலன் வர முன் எப்படி காத்து வந்தாய்..?? நினைத்து பார்க்கையிலே நெஞ்சு வியக்குதய்யா இத்தனை துணிவுணக்கு எப்படி வந்ததய்யா...?? ''நீதியின் முன்னாலே நிற்கின்ற நிதர்சனமே- உந்தன் பாதம் பணிந்தே யான் வணங்கி எழுகின்றேன்...'' ஈழ மைந்தனவன் இன்னுயிரை காத்தவரே காலம் புராவும் - உம்மை கையெடுத்து வணங்குகிறோம்... இதய மில்லாமல் இருக்கின்ற மனிதர் முன் மனிதத்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஒரு நாள் உன்னை விட்டு பிரிந்து வந்ததற்கே எப்படி பிரிய முடிந்ததென்றா கேக்கிறாய் எங்கே உன் இதயத்தை திறந்து பார் பிரிவுக் கவிதை எழுதிக்கொண்டிருப்பேன் நீயே சொல் .. என் நம்பிக்கை நீயென்ற பின் நம்பிக்கை இல்லாமல் நீ தள்ளியே நின்றால் விழுந்திட மாட்டெனோ உன் முதல் சந்திப்பும் உன் முதல் பிரிவும் சில நாட்களுக்குள் நடந்தேறியிருந்தாலும் உன் பிரிவு மட்டும் இன்னும் என்னை வாட்டுகிறது உனக்கும் இரவில் உலாப் போக பிடிக்குமா சரி வா போய் வருவோம் அதற்க்கு முன் நிலாவிடம் சொல்லிவிட்டு வா கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து வரும்படி உன்னை நான் பார்க்க வரும் போது மட்டும்தான் ஏறும் பேருந்தையும் இறங்கும் தரிபிடத்தையும் பக்கத்தில் இரு…
-
- 9 replies
- 5.3k views
-
-
என்னைக் கவர்ந்த சங்ககாலம் இதுவரை நான் படித்துச்சுவைத்த சுவைத்துக்கொண்டிருக்கின்ற சங்ககாலப்பாடல்களை அவற்றிற்கான சிறு சிறு விளக்க்கங்களுடன். . .
-
- 1 reply
- 1.2k views
-