Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆள் ஆரவாரமற்று கிடக்கிறது வேப்பங்கிளையில் தூளி.., ஒன்றுகூட பசியாற்றா பாவத்தில் கிளைநிரப்பிய கொய்யா.., யாரினிதென்று இரைந்தபடி கிடக்கின்றன யாழும் குழலும்.., விண்ணவரும் கண்ணுறங்கி விட்டனர் இன்னும் முடிக்கவில்லையொரு கதைசொல்லி.., புள்ளதாச்சி குழிகளின் சாபம் முத்துக்களை உதிர்த்தபடி பல்லாங்குழி.., மழைநீரால் ஒளிந்து கொள்ளும் பழைய கொள்ளைபுற நீர்த்தொட்டி.., சிலேட்டு பலப்பத்தில் உயிர்த்தெழ வரிசையில் நிற்கின்றன அ,இ,ஆ,உ.., விடுப்பு கடிதமெழுதி அனுப்புநர் முகவரி தொலைத்த விடுமுறைகாலம்.., மழைநீரை வெறித்தபடி கவலைகளில் மிதக்கின்றன சில காகிதங்கள்.., புதுவர்ண பூச்சு அலங்கோலம் தூரிகை மாயம் சுவற்றில்.., மதிப்பிழந்த சில்லறை காசுகள் அறைகளில் அங்கொன்றும் இங்கொன்றும்.…

  2. பொய் சொல்லவத்தில்லை.... ஆனால் நடந்த தெரிந்த புரிந்த .... உண்மையை மறைத்திருகிறோம்.... இதை விட கொடுமை பாதி உண்மை.... பேசியிருக்கிறோம் - கொடுமையில்.... கொடுமை பாதி உண்மைபேசுவது... இதை எல்லாம்செய்து விட்டு நன்றாக நடிக்கிறோம் ..... நல்லவனாக நடிக்கிறோம் .....!!! தப்பு என்று தெரிந்து கொண்டு... தப்பு செய்திருக்கிறோம் .... மற்றவர்கள் செய்யாத தப்பையா....? நான் செய்கிறேன் -சமுதாயத்தை அடமானம் வைத்துதப்பு செய்கிறோம் .... நன்றாக நடிக்கிறோம் .... நல்லவனாக நடிக்கிறோம் ....!!! திட்ட மிட்டு பிறர் காசை திருடியது இல்லை ஆனால் வழியில் கிடந்த பணப்பையை யாரும் உரிமை கோராதபோது எம் பணமாக்கி செலவு செய்கிறோம் மனட்சாட்சிக்கு பதில் சொல்கிறோம் வழியில் கிடந்த காசு பொது சொத்து யாரும் பயன்படுத்தலாம் …

  3. Started by இலக்கியன்,

    எழுதா மறையாக இருந்தவனை எழுதவைத்த நண்பிக்கு நன்றி குடத்துள் விளக்காக இருந்தவனை குன்றிலே ஏற்றிவைத்தீர் நன்றி நண்பனாக வந்த எனக்கு உன் இதயதில் அண்ணாவாக இடம்தந்தாய் நன்றி நம் நட்புக்கு பாலமாக இருந்த அந்த மலர்களுக்கும் நன்றி கூண்டுக்கிளிபோல இருந்த என் சிந்தனையை சிறகுகள் விரித்து பறக்க வைத்தாய் நன்றி வீணாக இருந்த என் பேனாவுக்கு ஒரு அர்த்தம் கொடுத்தாய் நன்றி உன்னுடய அன்புக்கு நன்றி சொல்ல என் கவி நயத்தில் வார்த்தைகள் இல்லை நன்றி

  4. நன்றி சொல்லவார்த்தை இல்லை நண்பனே உனக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை தானாடாவிட்டாலும் தசை ஆடும் உன் போராட்டம் உலகையே ஆட்டும் கொடியவன் சிங்களன் கொடுமைகளை ஈழத்தமிழனைக் கொன்ற கொடுங்கோலரை வெளிக் கொணரும் உன் போராட்டம் உளி போல உனக்கு நான் ஒளிபோல எனக்கு நீ தமிழன் நீயடா தலை நிமிரடா; வெளியேறும்சிங்களம் ஒருநாள் தெளிவாகும்தமிழீழம் மறுநாள் தனியாக நீயில்லைத் தமிழா என்னோடு தரணியெங்கும் தமிழன் உன்னோடு முகம் தெரியா முத்தமிழா உனக்கு என் வீரமுத்தங்கள்; ;

  5. நன்றி வணக்கம் நாங்கள் செத்துப்போகிறோம் காற்றழுத்தம் கந்தகப்புகையழுத்திச் சாவின் வாயிலில்.... மூச்சிழுக்கவோ முழுமையாய் சுவாசிக்கவோ முடியாத நச்சு நெடில்.... மூலங்கள் எங்கும் கோலங்கள் மாறி கிட்லரின் நச்சுக் கிடங்குகளாய் மகிந்தவின் மந்திரமும் இந்திய மத்திய அரசின் தந்திரமும்.... குருதி சொட்டச் சொட்டச் செத்தவர்கள் எரிகுண்டுப் புகையோடு கருகுண்டு கண்களில் ஈரமின்றி எங்கள் காவியங்கள் முகம் மட்டும் கனவிலும் நினைவாக... பழைய புன்னகையும் பசுமையாய் நெஞ்சக்கூட்டில் தோழரும் தோழியரும் தொலைந்திடா நினைவோடு கண்ணயர முடியாமல் கனவிலும் அவர்களே கலையா நினைவுகளாய்..... பறிபோன தெருக்களெங்கும் அடுக்கடுக்காய் சடலங்கள் சாவுகளின…

    • 6 replies
    • 2.1k views
  6. நன்றி! என்னை வார்த்தையால் சுட்டு வீசி எறிந்ததற்கு! நன்றி! எனது இங்கிலாந்து இளவரசியை* தலையில் தூக்கி கொண்டாடினேன்..... அவளது வீட்டுக்கு பெயிண்ட் அடித்தேன்... அவளது வீட்டுக்கு பூமரம் நட்டேன்..... அவளது காருக்கு டயர் மாற்றினேன்.... அவளது காருக்கு பெட்ரோல் நிரப்பினேன்..... அவளது படிப்பிற்கு நான் படித்தேன்.... அவளது படிப்பிற்கு காசு கொடுத்தேன்... அவளது வாய்க்கு உணவு சமைத்தேன்.... அவளது வாய்க்கு சங்கீதம் தேடினேன்..... எனது இங்கிலாந்து இளவரசியை தலையில் தூக்கி கொண்டாடினேன்..... காலம் மாறியது...... உன்னை என்னால் மணக்க முடியாது......வார்த்தைகள் சுட்டன! உன்னிடம் வீடு இல்லை..... உன்னிடம் ஜாகுவார் கார் இல்லை.... உன்னிடம் படிப்பு பட்டம் இல்லை.…

    • 32 replies
    • 4.3k views
  7. நாய் நாய் என்று பலர் ஏசியும் வெக்கம் கெட்டு உங்கள் வாயிலோரம் அலைகிறேன் என்று கீழ் தரமாய் எண்ணாதீர்.. நான் உங்களைப் போல் நன்றி மறப்பவனில்லை... இப்படிக்கு.. நன்றியுடன்... நாய்

    • 6 replies
    • 1.4k views
  8. Started by nochchi,

    நன்றும் தீதும் - 17-Nov-2014 11:11:06 AM ஊருச் சோற்றுக்கு நாக்கை நீட்டாதே ஊழல் செய்தே பொருளை ஈட்டாதே காரி உமிழ்வான் இனிவரும் பிள்ளை கவின்நிறை முகத்தை ‘தொட்டி’ ஆக்காதே ! பதவிப் பசிக்கு ஆடுகள் சாகலாம் கதவின் இடுக்கில் கண்ணகி ஏங்கலாம் உயர்வுக்கு உழைத்தவர் பாதியில் ஏகலாம் ஊர்ப்பணி செய்பவர் உறங்கிட ஏலுமோ? சாதியும் மதமும் சமத்துவம் நல்கா தீதிலா வாழ்க்கை திசைமாறிப் போகா பாடாற்ற வேண்டின் பண்பாட்டு அமைப்பில் பாடமும் பாதையும் ‘நாமாதல்’ வேண்டும் காலச் சூழ்நிலை கறையைப் பூசும் கண்ணியம் காப்போர் உள்ளம் கூசும் குற்றம் களைந்து சுற்றம் பேணடா குருடன்கைத் தடியாய் மாறிடப் பழகடா ! நன்றும் தீதும் பணியைப் பொறுத்ததே பண்பிலாச் செயலால் …

  9. தமிழீழத்தில் ஒட்டுக் குளுக்களுக்கு தனியான ஓரிடம் தரணியிலே தமிழர்கள் தலைகுனியவைத் தான்தந்த தானினம் தங்களுக்குள் தலைமையில்லா தரங்கெட்ட தனியினம் தன்மானம் தானில்லா தாய் கூட தனக்கில்லா தனியான ஒரு கூட்டம் தப்பான தனிக்கூட்டம் தன்னானத் தழிழர் எல்லாம் தள்ளிவைக்கும் தானிந்த தவளைக் கூட்டம்

    • 4 replies
    • 1.5k views
  10. களனி கங்கையின் இசை நிலவிலே பெளத்த நாட்டிளம் பெண்களுடனே சுந்தர சிங்களத்தில் பாட்டிசைத்து ரயில்,பஸ் ஒட்டி விளையாடிடுவோம் யாழ்ப்பாணத்து செம்மண் புறத்து பனம்பண்டம் புளத்சிங்கள வெத்திலைக்கு மாறு பண்டம் முஸ்லிம் மக்களின் கவிதை கொண்டு அரபிய தொப்பிகளை பரிசளிப்போம் புலத்து தமிழருக்கோர் பாலம் அமைப்போம் இணையத்தை பலப்படுத்தி உறவு சமைப்போம் மகாவலியில் ஒடிவரும் நிரின்மிகையால் எல்லா மாவட்டங்களிலும் பயிர் செய்திடுவோம் மலையகத்தில் தேயிலை பயிரிடுவோம் வெளிநாட்டுக்கு ஏற்றியிடுவோம் மட்டுநகரில் கருவாடு காயவைப்போம் தொப்புள் கொடி உறவுகளுக்கு பார்சல் பண்ணிடுவோம் ஆயுதம் செய்வோம் நல்ல குடியேற்றம் செய்வோம் விகாரைகள் வைப்போம் அகதி முகாம் வைப்போம் ச…

  11. நம் தமிழீழ மண் வீரம் விழைந்த மண் வீரம் விழைந்த மண்ணிது வீரமறவரும் வாழ்ந்த மண்ணிது அம் வீர மன்னர்களின் வீர சாம்ராச்சியம் அன்னியன் சதியினால் வீழ்ந்த போது எம் வீரச்சரித்திரம் சாய்ந்த மண்ணிது. ஆங்கிலேயர் நம் மண்ணைவிட்டு அகன்ற போது ஆட்சி உள்ளூர் எதிரிக்கு மாறிய மண்ணிது. ஐம்பது வருட அடக்கு முறைக்கு அப்பாவி உயிர்கள் பலியான மண்ணிது. எம் அடிமைச் சரித்திரம் மாற்றி எழுதிட சூரியத்தேவன் தோன்றிய மண்ணிது. சூரியத்தேவன் தோன்றியததனால் சாய்ந்த வீரமும் நிமிர்ந்த மண்ணிது. எதிரியின் பிடியிலுள்ள் எம் சரித்திரம் மீட்டிட வேங்கைகள் பாய நம் எதிரியும் வீழ நம் வீரமும் உலகின் கண்களில் தெரிய உலகமே பார்த்து வியந்த மண்ணிது. …

  12. நம் தலைவனின் கனவு நிஜமாக..... கவிதை - இளங்கவி..... அடிமை வாழ்வில் குப்பையாய் கிடந்தோம் கூட்டுவார் இன்றி காற்றுக்கும் பறந்தோம் ஏய் தமிழா...! உன் தேச மண்ணில் குப்பையாய் கிடக்கின்றாய் கூனிக் கிடந்து கூன் விழுந்திட்டாய் ; என்று இந்தக் குப்பை மேட்டிலே ஓர் பொறியாக விழுந்தாய் சிறுதணல் மூட்டினாய் சிறிதாகவும் புகைந்தாய்; ;பின் செந்தணல் ஆகி விடுதலை தீயை மூட்டினாய் இன்றோ கோடி தமிழனின் மனங்களில் கொழுந்து விட்டெரிந்து விடுதலைத் தீயாய் வீறுகொண்டு எரிகிறாய்......! வேதனை வாழ்விலும் வீரியம் தந்தவன்..... எங்களின் வாழ்வுக்காய் தன் வாழ்வையும் மறந்தவன்...... இருபதில் தொடங்கி இருபதினாயிரம் கண்டாய்...... இன்னமும் காண்பாய் இற…

  13. நம் தலைவன் வரவுக்குகாய் காத்திருப்போம் கவிதை - இளங்கவி தமிழினத்தின் இன அழிப்பின் உச்சமான இவ்வருடத்தில் வைகாசி பதினெட்டு; வழமைபோல் மகிழ்வின்று விடிகிறது..... உலகத்தின் குரலொன்று தமிழனுக்காய் ஒலிக்காதா; எனும் சின்னஞ்சிறு நம்பிக்கையில் காலை கடனுமின்றி கணனியை தட்டுகிறேன்..... அதிர்ச்சி செய்தியொன்றில்; என் அனைத்துலகும் இருள்கிறது...! ஆம்..! தளபதிகள் நால்வர் மண்ணுக்காய் மரணிப்பு...! பதைபதைக்கும் நெஞ்சுடனே நண்பனும் நானுமாய் பாராளமன்ற சதுக்கம் விரைகின்றோம்..... கையடக்கத் தொலைபேசியில் மறுபடியும் கவலையுடன் ஓர் செய்தி..... எம் தலைவனையும் கொன்றுவிட்டார் அவன் சடலமுமெடுத்துவிட்டார்..... ஆம்...! இதுதான் அச்செய்தி தமிழர் உலகெல்லாம்…

  14. கோபம் கொண்டு எழு தமிழா.. கொலை வெறி கொண்ட சிங்களவர்களை கடல் வந்து நம் இனத்தவரை அள்ளி சென்றது போல்.. நாம் அவர்களை அள்ளி செல்ல வா தமிழழா.. நம் தமிழ் மண் காக்க சென்ற நம் மாவீரர் வழியில்.. நாமும் செல்வோம் எழுந்து வா தமிழா.. நம் மண் காக்க போராடும் நம் போரளிகளுக்காக எழுந்து வா தமிழா.. நம் இனத்தவரின் அலறல் ஓசை உன் காதில் கேட்கவில்லையா? எழுந்து வா தமிழா.. நம்மை கண்டு அஞ்சி நடுங்கும் சிங்கள படைகளை அடித்து விரட்டுவோம் எழுந்து வா தமிழா.. நம் இனத்தவரின் வீரத்தை கண்டு இந்த உலகம் வியப்பில் ஆளட்டும் எழுந்து வா தமிழா.. நம் தலைவன் வழியில் நாமும் செல்வோம் எழுந்து வா தமிழா.. . அன்புடன் சுஜி

  15. நம்ப வைச்சு கழுத்தறுத்த குள்ள நரி ....நீ!! உலகத் தமிழினத் தலைவன்......நீ எமக்காய் உயிரைவிட துணிந்தவன்....நீ எமக்காய் பதவியை எறிந்திட துணிந்தவன்..... நீ உலகத் தமிழினமே நம்பினோம் ...... ஐயா தமிழனுக்கு விடிவுகாலம் பிறந்தது ......என்று சரத் பொன்சேகா சொன்னான் .....அன்று தமிழகத் தலைவர்கள் கோமாளிகள் ....என்று தமிழகமே கொதித்து எழுந்தது ...அன்று உங்களை நம்பினோர் எல்லோரும் கோமாளிகள் ...என்று தமிழர்களுக்கும் தமிழின உணர்வாளர்க்கும் புரிந்தது....இன்று நீங்கள் அன்று சொன்னது வெறும் கவிதை....என்று கேவலம் சிங்களவனுக்கு புரிந்தது கூட நமக்கு புரியவில்லையே....அன்று. உலகத் தமிழினத் துரோகி ....நீ …

  16. Started by கோமகன்,

    என் வானமும் என் தரையும் கந்தக நெடிகளாகி ......... வாழ்வின் அர்தத்தையே அகலப்படுத்தின . தூரத்தே நாளை என்னும் நம்பிக்கைப் பொட்டுகள் கண்சிமிட்டும் நட்சத்திரமாய் கண்ணாம் மூஞ்சி காட்டும் எனக்கு . எட்டுப்பட்டிச் சுற்றமும் ஏறுதளநாருமாய் இருந்த " நாங்கள் " இன்று " நானாகி " போனதில் , இறுக்கமான வலி இறுகியே பாயும் என் மனதில் . இன்பமும் துன்பமும் காலதேவன் வகுத்த சுற்றில் என்கால் நாளையை நம்பி உரமாகவே நடைபயிலும் .

  17. நம்பிக்கை ------------------- நீண்டு நிமிர்ந்திருந்த புத்தனின் கண்கள் மூடியபடி சாரையாய் நீண்ட பக்தர்களின் கைகளில் வெள்ளைத்தாமரைகள் புத்தம் சரணம் கச்சாமி வழிபடுங்கள் நம்பிக்கையோடு கீழ்ப்படிதலோடு மீண்டும் மீண்டும் இந்த நாடு உங்களுக்கே உரித்தாகும் இதைக் கேட்ட புத்தர் பரிகசிப்போடு தனக்குள் சொல்லிக் கொண்டார் இந்த முட்டாள் மனிதர்களின் குருட்டு நம்பிக்கைகளுக்கு அளவில்லாமல் போயிற்றே.. எனது விதிப்பின் படியும் விதியின் கணக்குப் படியும் வழிபாட்டுடனும் நம்பிக்கையுடனும் என்னை அதிகம் அழைத்தவர்களுக்கே இந்த நாடு சொந்தமாகும் என்பதை அறியாதிருக்கிறார்களே (ஹலீல் ஹிப்ரானின் கவிதை ஒன்றை வாசித்த போது எனக்குள் ஏற்பட்ட தாக்கம்)

  18. Started by nunavilan,

    ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். நம்பிக்கை சாலையின் மத்தியில் பார்வை இழந்தவனின் கைத்தடி நடந்து சென்றது... நம்பிக்கையில்! * இடம் பெயர்ந்தோம் நிறம் மாறிப்போனது தாய்மொழி * வயிறு கழுவ உடல் குளித்துக் கொண்டது..!

    • 15 replies
    • 2k views
  19. Started by priyan_eelam,

    கரைகளே... நெருப்பாய் இருந்தால் நதிக்கொன்றும் நஷ்டம் இல்லை... நண்பர் உனக்கு நம்பிக்கை இருந்தால் தடைகளொன்றும் கஷ்டம் இல்லை B)

    • 3 replies
    • 1.1k views
  20. Started by slgirl,

    நம்பிக்கை நண்பா! மேற்கில் மலரும் சூரியன்-மீண்டும் கிழக்கில் உதயமாவதில்லையா? ஒருநாளில் வாடிப்போகும் பூ கூட சிரிக்கவில்லையா? மேலிருந்து விழுந்த நீர்வீழ்ச்சி-மீண்டும் எழுந்து அருவியாய் ஓடுவதில்லையா? வண்ணங்களை காட்டி மகிழ்விக்கும் வானவில் கூட தோன்றியவுடன் மறையும் ஆனால் திரும்பவும் தோன்றும் தானே அது போல் தோல்வியென்று எண்ணாதே நம்பிக்கை வை நீ உயர்வாய் வசந்தம் உன் வாசல் தட்டும்!

    • 3 replies
    • 1k views
  21. வானத்தில் வெள்ளிகள் சிதறிக்கிடக்கின்றது அண்ணாந்து பார்தபடி மரத்தடியில் அவள் இருபக்கமும் சின்னன் இரண்டும் நித்திரையாக கண்கள் நனைய கண்ணீரில் நிலவெளி தெறித்தது வீடிளந்து வீதியோர வாழ்வில் மழைக்கு முன் கூடாரம் அமைக்க கடவுள் வழிவிடவேண்டும் மனதுக்குள் பிரார்தனை விடியாத வாழ்வில் விடிந்தது காலை அருகில் மூன்று கல்லு வைத்து அடுப்பு ஊத ஊத புகையை காற்று சுழற்றி முகத்தில் அடித்தது நாசிக்குள் போக பிரக்கடித்தது கண்ணெரிந்து கண்ணீர் வந்தது ஏனிந்த கண்ணீர் நிற்காமல் வருகிறது விறகு புகைக்கும் வருகிறது வீட்டுக்காரனை ஆமி சுட்ட போதும் மானாவாரியாய் வந்தது நினைக்கும் போதும் நிற்காமல் வருகின்றது தோட்டம் துரவை விட்ட…

    • 7 replies
    • 1.4k views
  22. Started by pakee,

    இழந்து விட்டேன் என்கிறேன் இல்லை இல்லை இன்னும் கொஞ்சம் இருக்கிறது என்கின்றது(நம்பிக்கை)...

    • 0 replies
    • 625 views
  23. நம்பிக்கை கொண்டு நடவுங்கள் ஏய்! முணு முணுக்கும் வாய்களே! கொஞ்சம் நிறுத்துங்கள். படலைக்கு உள்ளே தெருநாய் வருவதால் உன் முற்றம் தொலையுதென்று எவன் சொன்னான்? தெருக்கள் எங்கும் நீ கை வீசி நடக்கணும். உன் இருப்பை எப்போதும் உறுதி செய்யணும். உண்மைதான் உருப்படியாய் என்ன செய்தாய் இதற்கு? ஊருக்கு சொல்ல உன்னிடம் நிறைய உண்டாயினும் உன்னிடம் சொல்ல ஏதேனும் உண்டாவென உன் மனச்சாட்சியைக் கேள் ஆமெனில்.. நீ கரைவதை தொடர் ஆயினும் சில வார்த்தைகளைத் தவிர் அதைப் பின் காலம் சொல்லும் இல்லையெனில்.. இனியாவது சிந்தனைகொள் மானிடப் பேரவலம் கண்டாவது உன் மனக்கதவு திறக்கட்டும் இரும்புச் சிறையுடைத்து புது மனிதனாய…

  24. நம்பிக்கைகள் உனக்காய் துளிர்விடுகிறது... நம்பிக்கைகள் அறுபட்டு நீ இருப்பாயின்னும் என்ற நினைப்பும் விடுபட்டுப் போன ஒரு அந்திப் பொழுதில் அழைத்தாய்.... "அக்கோய் சுகமோ" ? நினைக்காத பொழுதொன்றின் நினைவுகளில் வந்து நிரம்பினாய்.... "எப்படியிருக்கிறாய்" ? எப்போதும் போலான கேள்வியில் அப்போதும் சிரித்தாய்.... "அக்கா இருக்கிறேன்" அதிஸ்டமோ இல்லை ஆயுள் நீளமோ ? அறியேன் என்றாய்.... ஐந்து நிமிடமோ அதற்கும் சில நொடியோ " அக்கா போகிறேன்" தொடர்பறுத்து விடைபெற்றாய்.... கடைசிச் சிரிப்பும் கலகலத்த பேச்சும் கனவிலும் மாறாமல் நீ.... வீரச்செய்திகளுக்குள் நீயும் வித்தாய்ப் போனாயோ ? காலம் அள்ளி வரும் களச் செய்திகளில் காவ…

    • 5 replies
    • 1.5k views
  25. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் -சினேகிதி- அளவில்லா ஆனந்தத்தோடு அண்ணன் படை சேர்ந்தாய் அண்ணாவே பூநகரி மணலாறு கிளிநொச்சி எனக்களம்பல கண்டாய் இன்று நீயும் மாவீரன் வீட்டருகில் நீ வெடித்துச் சிதறினாய் உள்ளம் வலிக்கத்தான் செய்தது உன் சோதரர்கள் உனக்குச் சொல்லவில்லையா அது இராணுவம் ரோந்து வரும் நேரமென்று யார்யாரோவெல்லாம் ஆறுதல் சொன்னார்கள் அம்மாவும் விசும்பல்களை நிறுத்திவிட்டாள் அழுது ஆற்றாமை தீர்த்தால் இராணுவ இராஜமரியாதையையும் ஏற்கவேண்டி இருக்குமே ஐயர் வந்து சாந்தி செய்தார் - நீ சிதறிப்போன சந்தில் எங்களுக்குத் தெரியும் தமிழீழம் ஒன்றுதான் உங்களுக்கு ஆத்ம சாந்தியென்று இரு தசாப்தங்கள் ஆகிவிட்டன ஆனாலும் உங்கள் கனவுகள் நனவாகவில்ல…

    • 32 replies
    • 5.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.