Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கார்த்திகைப் பூச்சுமந்து கல்லறை நோக்கி நடப்போம் ஈழ காவியம் எழுத தம் உயிர் தந்த கண்மணிகள் நினைவு சுமந்து போரியல் வரலாற்றில் புதிய சரிதம் எழுதி பூமிப் பந்தில் தமிழீpழம் வரைய புயலெனக் களமாடி மண்ணுள் புதைந்த மா வீரர்களே! உங்கள் மலரடி தொழுதோம் இக் கார்;த்திகை நாளிலே

  2. சந்தன பேழைக்குள் போன ஒரு சரித்திர நாயகன். திராவிட வீரத்தை மீண்டும் காட்டிய இந்த நூற்றாண்டின்-ஒரு தமிழ் மகன். விழிகள் மூடாமல் விடுதலைக்காய் வழிகள் தேடினான் வலிகள் சுமந்து-எதிரி குகையில் வாழ்ந்து இலக்கு தாக்குவான். நகைச்சுவை பேசி நண்பனாய் பழகுவான் நறுக்கென பேசி கடமையில் வெல்லுவான். அமைதியும் ஆற்றலும் இவனிடம் தேடலாம். புராணத்தில் வீரரை கற்பனையால் கண்டோம், புலி மகன் இவனால்-இன்று கண்முன்னே கண்டோம். தலைவனின் சிந்தனையை செயலாக்கினான் -இவன் செயல்கள் எல்லாம்-எதிரிக்கு பெரும் புயலாக்கினான். விடுதலை பயணத்தில் வீரமாய் வாழ்ந்த புலி - இன்று விதையாக வீழ்ந்தது எதிரியின் சதி. விடுதலை வீரனே-நீ வீழ்ந்தும் உயிர் வாழ்கிறாய். ஒற்றை தமிழன் வாழுமட்டும் நீ …

  3. எழிதிட எழிதிட ஆசை வர்னங்கள் நிறைந்த எண்னங்களை எழித்தில் வடித்திட ஆசை பொய்கள் நிறைந்த கவிதைகளை எழிதிட ஆசை உன் அழகை முத்தமிழில் வடித்திட ஆசை உன் புன்முறுவலை முத்தமிலில் எழிதிட ஆசை உன் மீதுள்ள காமத்தை கன்னியத்துடன் கதை கதையாய் எழுதிட ஆசை வழமை போல் எழிதிய கிறுக்கலை கிழித்திட நினைத்தேன் என்றாலும் இந்த ஒரு தடவை என் கிறுக்கலுக்காய் நிந்தை அடைந்திட துணிந்தேன்

  4. தன்மானத் தந்தையே! திருநிறை பழநெடு மாறன் ஐயா! தன்மானத் தமிழனாய்த் தகைசார் அறிஞனாய்த் தரணியில் இலங்கிடும் தமிழகத் தந்தையே! இன்னலில் ஆழ்ந்த ஈழத்தவன் பசிதனை இல்லா தொழிக்க எண்ணம் கொண்டுநீர் உன்னதப் பணிபுரிந்தீர் உலகமே வியந்திட உறுதியாய் நின்றங்கு உயிர்தனை வருத்தும் மன்னும் உண்ணா நோன்புதனில் இறங்கி மனிதம் நின்னிடத்தே என்பதை எண்பித்தீர்! தங்கத் தம்பியாம் திலீபனின் நாளில் தந்தையே நீவீரும் திருவுளம் கொண்டு அங்கம் நொந்து அறிவினா லுயர்ந்து ஆரும் புரிந்திடா அறப்போராட் டம்தனில் இங்கிதமாய் இசைந்தீர் ஏற்றமிகு தந்தையே! என்னகைம் மாறுநாம் இதற்காய்ச் செய்வோம்? இங்கிருந்து நெஞ்சத்தால் இனியவுயிர் நிலைத்திட எஞ்ஞான்றும் இறைவனை வணங்கி நின்றிடுவோ…

  5. மீண்டு வராத காலத்தின் நினைவுகளை துவட்டத் தொடங்குகிறான் சாம இரவில் விழிப்படைந்த வேடன். அன்றொருநாள், குறிதவறியிருக்கலாம். அன்றில், நரகத்தின் வாசலில் நிறுத்தி நழுவிச்சென்ற விரல்களில் இருந்து ஒழுகிய, பூப்படைந்த வாசம், இன்றில் அறையெங்கும் நிறைந்து யன்னல்களால் வெளியேறத்தொடங்குகிறது உவர்த்த இதழ்களும் நெகிழ்ந்த முதல்களும் வசீகர தழுவல்களும் இரைகொள்ளும் பேரலையாய் கவிழ்ந்துவிழ, பெரும் தீ ஆற்றொனாப் பெரும் தீ.

  6. ஆடியமாவாசை… பிண்டமாய் போன அப்பாவுக்கு கண்ணீரில் எள்ளுத் தண்ணி இறைத்த என் இடம் நிரப்ப வருவான் ஒரு பாலன்…. அப்பா பெயர், நட்சத்திரம் மழலையாய் உதிரும் இந்த வயதில் இவனுக்கு ஆடியமாவாசை எந்தன் கண்ணீரும் உறையும் ‘தகப்பனைத் தின்னி’ பிள்ளையின் எள்ளுத் தண்ணீராய் கண்ணீரைத் தந்தபடி கூட இருந்த தாய் விளக்கம்... ‘அவர் காணாமல் போகையில் இவன் வயிற்றில்… தேடுறம் தேடுறமெண்டு… இனித் தேட ஏலாதெண்டு’ திண்டவனைக் காப்பாற்றும் ஆணைக் குழுக்கள் முடிவாக்கும் இன்னும் எத்தனை வருஷங்கள் இவன் நோன்பு… இவன் போல் இன்னும் எத்தனை எத்தனை தகப்பன் தின்னிகளோ!... ஆடி …

  7. சைவ சமயம் உட்பட பல சமயங்களில் இறைவனைத் தொழ பதிகங்கள் இயற்றி கோவில்களில் தேவாலயங்களில் பாடி இறை நம்பிக்கைகளை பன்னெடும் காலம் வளர்த்து வரும் நிலையில்... எமது இனத்தின் இருப்பின் முதலாய் நிற்கும் தெய்வத்தையும் கடந்து நினைவில் என்றும் இருக்க வேண்டிய மாவீரர்களை நெஞ்சால் தொழுது இலட்சியத்தால் அவரின் கனவு வென்று நிற்க.. தோத்திரங்கள் பதிகங்கள் இயற்றி நிற்போம். அவை பண்.. தாளம் கொண்டு புனிதம் நிலைக்க.. பாடப்படும் நிலை இயற்றுவோம்..! வீழ்ந்த வீரரின்.. இலட்சியம் காவி நிற்போம். அந்த வரிசையில்.. எங்கள் பங்களிப்பு... உங்கள் பங்களிப்பையும் ஆற்றி நில்லுங்கள்...! பண் - தாளத்துடன் பாடக் கூடியது. பண் - தாளம் - அறியப்பட வேண்டியது. மாநிலத்தின் தமிழ் மரபு காத்தாராய் தமிழ்…

  8. வணிகம் பேசினாலே மனிதம் பேசுவார்களா? இற்றைக்கு இரண்டு ஆண்டுகள் முன்புவரை ஒரு “தேசத்தின் குரல்” சர்வதேசத்தின் செவிப்பரைகளில் மோதி மோதி இந்து சமுத்திரத்தில், ஈழத்தமிழினத்தின் விழிகரித்த உப்புகடலில் குருதி கொப்பளித்துக் கிடக்கும் ஈழத்தின் இருப்பை உரைத்துரைத்து ஓய்ந்து போனது. கண் மறைந்து போன கால நீட்சியில் கற்றுக் கொண்டதும், கண்ணீர் விட்டதும், கனக்கும் இதயக்கூட்டின் கணக்கில் அடங்காமல் நீண்டநெடும் பயணத்தில் இன்னும் தொடர்கிறது. வேர் மடியின் தாகம் கொண்டு எத்தனையோ உன்னதங்களை, வேதனையைச் சுமந்து சுமந்து உலகிற்குக் காட்டியாயிற்று. தர்மத்தின் தலையில் சூது இல்லை என்பதையும் உணர்த்தியாயிற்று. நீறிட்டுக் கிடக்கின்றன நெருப்பின் முகவரிகள் …

  9. Started by கோமகன்,

    சகவும் சயவும் வேகம் என்றான் ஒருவன் ஆனால் சகவும் சகவுமாகி சயவும் சயவுமாகி சைபராகி வந்ததேனோ ???? " நான் " என்பதைவிட " நாமே " கனதியதிகம் பல பூக்கள் கொண்ட தோட்டத்தில் பல வாசம் இருக்கும் உடனடித் தேவை சகிப்புப் பிராணவாய்வு இருந்தால் சிறக்கும் பூந்தோட்டம்

  10. போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும் -------------------------------------------------------------- 01 வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அம்மாவை அக்கராயனில் நான் தேடிக்கொண்டிருந்தேன் ஷெல்களுக்குள் அம்மா ஐயனார் கோயிலை விழுந்து கும்பிட்டாள் ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது. நேற்று நடந்த கடும் சண்டையில் சிதைந்த கிராமத்தில் கிடந்தன படைகளின் உடல்கள் கைப்பற்றப்பட்ட படைகளின் உடல்களை கணக்கிட்டு பார்த்தபடி சிதைந்த உடல்கள் கிடக்கும் மைதானத்தில் பதுங்குகுழியிலிருந்து வெளியில் வந்த சனங்கள் நிறைகின்றனர். பக்கத்து வீட்டில் போராளியின் மரணத்தில் எழுகிற அழுகையுடன் இன்றைக்க…

    • 0 replies
    • 917 views
  11. நண்பனை பெற்றுக்கொள்ளுதல் என்பது குறியீடுகளால் குறியிடமுடியாத ஒன்றிணைவு. காலம் கரங்களை தரும். கரங்களுள் காணமல் போவது மனதின் சுரங்களை பொறுத்தது. நண்பனை பெற்றுக்கொள்ளுதல் என்பது வரலாறுகளால் வரையப்படாத அனுபவக்கீறல். இடங்கள் நெருக்கங்களை தரும். நெருக்கங்களுள் நெகிழ்ந்து போவது நேசிப்பின் வேர்களை பொறுத்தது. ஒரு நண்பன் ஒரு பறவையைப்போல ஒரு மழையைப்போல ஒரு புலர்வைப்போல ஒரு நல்ல வாசனையைப்போல நெருங்க வேண்டும். அவனின் நட்பு மாலையாக இருக்கவேண்டும் கழுத்தில் நீண்ட மனவெளிகளை.... நீண்ட மௌனங்களை......... பயமுறுத்தும் சில பொழுதுகளை........ ஒதுக்கும் சில சடங்குகளை..... கடக்க உதவியும், முயன்றும் பாருங்கள் நண்பனின் கரம் பற்றி. எப்போதும், நல்ல நண்பன…

  12. சூரியப்பேரொளியைச் சுற்றிக் காவியப்போராளிகள் வருவர் இயலாப்பொழுதின் புலர்வாய் ஒளிசொட்டிய சூரியக் கதிர்களுக்குள் இருள் முட்டி இதயம் முட்டி எதுவெனச்சொல்ல இயலாமல்…. எதை இழக்க எதை மறக்க ? எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை…. எல்லாம் முடிந்துவிட்டாற்போன பிரமை கண்ணுக்குள் வந்து மறையும் காட்சிகளாய் கடைசிக்கணங்களின் நுனியில் சாவின் நொடிகளை நுர்கின்றன…. சந்திப்புகள் சரித்திரக் கதைகள் சாதனைகளின் நீளமாய் ஒவ்வோர் நினைவும் முகமும் கலங்கிய விழிக்கனவோடு கரைந்து கரைந்து கடல் வற்றிக் காய்ந்து பாழங்கள் நிறையும் மயானக் காட்டின் நெடிலின் நுகர்வோடு கவிதையும் கடந்தகால நினைவுகளும் கசங்கிக் காற்றள்ள முன்னம் கடைசியாய் ஏவப்பட்ட …

    • 0 replies
    • 916 views
  13. விக்கிரமாதித்தனும் 13ம் கதையும்-பா.உதயன் எந்தத் தீர்வையும் ஈழத் தமிழனிடம் கேட்க்காமல் இந்தியா போட்ட பிச்சை இது இன்னும் கிடந்து இழுக்குது சேடம் ஆயிரம் தடவை இந்தியா சொல்லியும் இலங்கை இதுக்கு மசிவதாய் இல்லை ஏதோ புலி தான் மறுத்தினம் என்றால் இப்பவும் ஏன் தான் மறுக்கினம் கொடுக்க 13 ம் பெட்டியோடு வந்த பெரியண்ணை தலையில் பிறத்தாலே நின்று துவக்கால அடிச்சும் சிங்களம் சொன்னது இந்தத் தீவில் எந்தத் தீர்வும் எப்பவும் இல்லை என்று அப்பவே சொன்னது விக்கிரமாதித்தன் கதையைப் போல சற்றும் மனம் தளராத இந்தியா சந்திக்கும் பொழுதெல்லாம் 13 ம் கதையை பல தடவை சொல்லும் இதுக்கு மேலாய் கொடு…

  14. களத்திற்கு வரும் பொது கவிதையுடன் வருவதென முடிவெடுத்து மாவீரர் கனவுகளை நினைவாக்க கருத்தியலால் கவிதை வடிக்க நடுங்கியது இரு கரமும் சொல்லுண்டா மாவீரர் தியாகத்தை கவிதையாக்க நிகருண்டா அவர்கள் தியாகத்திற்கு வெதும்பியது மனம் கல்லாக்கி மனத்தைக் கருங்கல்லாக்கி வித்தாகிப்போன மாவீரர் கவிதை எழுத சொல்லுண்டா என் மனம் துடித்தது மல்லுக்குக் கவிதைஎழுதி மாவீரர் வில்லுக்கு வினை சேர்ப்பதா நான் எல்லைக்கும் செல்லாதவன் எல்லை கடந்தவரை எழுதிப் பழி சேர்ப்பதா சூரியதேவன் குழந்தைகளின் கூரிய இலக்கினை ஆரியன் அடக்கினான் எனப் பேருக்குப் பொய் எழுதுவதா பாரினிலே ஈழம் பிறந்திட மாரினிலே தழும்புடன் பகைவன் பாசறை புக…

  15. முதல் வெடியோசையில் பிறக்கிறது காதல் .. பக்கத்துக்கு கூடாரம் யாராக இருக்கும் .. எண்ணிய வேளையத்தில் பிள்ளை வேகமா வா .. என் அழைக்கும் அவள் அம்மாவின் சத்தம் .. நிலா ஒளியில் அவள் நிலா முகம் பார்க்கிறேன் .. ஓடி சென்று மாமர அருகில் இருந்தவாறு .. ஒன்னை பெத்து வைத்திருக்கிறேன் .. கட்டிகாக்க நான் படும் பாடு பெரும்பாடு . . என்னும் ஏக்க பெரும்மூச்சு விடும் அவள் அம்மா .. கற்பூர வள்ளி போல வாடாமல் இருக்கிறாள் .. கண்களில் மட்டும் சிறு நீர் நிரம்பி இருக்கு .. அது ஒரு வயது பார்த்தவுடன் வாழ்க்கை கொடுக்கும் .. கட்டினால் இப்படி ஒரு பிள்ளையைத்தான் .. என்னும் மன ஓட்டத்தில் இயங்கும் நிலை .. எம்மை பற்றி சிந்தித்ததை விட அவளை பற்றி அதிம் .. அடிக்கடி பவுடர் போடும் …

  16. முள்ளிவாய்க்கால் பரணி! 01 கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென ஒருவரும் கொல்லப்படவில்லையென யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென அவர்கள் கூறினர் ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென பின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனரென பின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென இறுதியில் சொல்லினர் யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென எமை மீட்கும் யுத்தமென்றனர் மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா? மனிதாபிமான யுத்தமெ…

    • 0 replies
    • 915 views
  17. தீபச்செல்வனின் கவிதை :- விபூசிகா கடத்தப்பட்டாள்! இன்று வெளியான (13.03.2014) ஆனந்த விகடனில் வெளியான இரண்டு கவிதைகளில் ஒன்று விபூசிகாவைப் பற்றியது. "காணாமல் போன அண்ணன்" என்பது அக் கவிதை. அந்தக் கவிதை இன்று வெளியாகியிருக்கிறது என்று நான் அறியும்போது அந்த விபூசிகாவும் கடத்தப்பட்டிருக்கிறாள் என்று செய்தியையும் அறிகிறேன். குழந்தைகள் காணாமல் போகும் தேசத்தில் என்னதான் இருக்கும்? காணாமல் போன அண்ணன் ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக் கொண்டு செல்லும்பொழுது வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில் அண்ணன் எங்கே என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப் பார்க்கும்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும்போதும் அண்ணன் வந்துவிட்டானா? என…

    • 0 replies
    • 915 views
  18. சுயத்தை ஒடுக்கிய எங்கள் சூரியத் திருவே, வல்லமை சுரக்கும் வீரப்பெரும் வரலாறே, தாயக உள்ளொளி பெருக்கும் தர்மத்தின் உறுதியே, உலகனைத்துமான தமிழினத்தின் வாழ்வேந்தி வனையும் வல்லமையே பாடுகிறேன் ஒரு பல்லாண்டு. பன்னூற்றாண்டுகளின் படிமக்கறைகளைப் பகுத்தாய்ந்து புறஞ்செய்த காலபிரவாகமே, வல்லரச வியூகங்களை வலுவிழக்க வைத்த வல்வையின் வனப்பே, இன்றுங்கள் பிறந்த நாள் ஏழு கடல்களும், ஐந்து கண்டங்களும் அதிசயித்து நோக்கும் ஆதித்த கரிகாலரே ஈழத்திரு நிலத்தின் ஆணி வேர் அமைதி காக்கும் அதி சாதனைப் பொழுது இது, அர்த்தமற்றுப் போகாது. ஈழம் என்ற சொல்லுக்குள் இணைபிரியாக் காவியமே, இலக்கென்ற வடிவுக்குள் கலக்கமில்லா ஓவியமே, யாலம் உனை அழிக்காது சத்தியத்தின்…

  19. [size=5]குரலிழந்த குயில்கள்.[/size] கூடித் திரிந்த குயில்கள் குதுகலமாய் பறந்த குயில்கள் பார்த்துச் சிரித்த குயில்கள் பாசமாய்ப் பழகிய குயில்கள் வீறுநடைபோட நாங்கள் வியப்பாகப் பார்த்த குயில்கள் காடுமேடெல்லாம் கம்பீரமாய் திரிந்து வீட்டுக்கும் நாட்டு;க்கும் வியத்தகு சேவை செய்து சுதந்திரதாகம் பற்றி சுருதிமாறாமல் பாடியகுயில்கள்;. வல்லாதிக்க வஞ்சகர்கள் வலைவிரித்து வீழ்த்தியதால் வாழ்விழந்து வலுவிழந்து வனப்புமிகு சிறகிழந்து காலிழந்து கருத்துமிழந்து கனத்த மனத்துடனே கூவும் குரலும் இழந்து கூட்டுக்குள் அடைபட்டு வாடித் தவிக்கின்றனவே வதைமுகாம் நடுவினிலே… பார்ப்பாரும் இ;லை கேட்பாரும் இல்லை தேசியச் சொத்துக்கொண்டோர் கூட திரும்பியும் பார…

  20. Started by nunavilan,

    நிறமற்றவன் எதில்தான் இல்லை வர்ணம் இலையில் பூக்களில் மரத்தில் பூச்சிகளில் மனிதர்களில் எதில்தான் இல்லை வர்ணம் மனங்களில் சோதியில் சாதியில் வர்ணங்களற்று வாழவே முடியாது நம்மால் முஸ்லீமாய் இந்துவாய் கிறித்துவனாய் சீக்கியனாய் வர்ணங்களற்று வாழவே முடியாது நம்மால் புத்தனுக்கென்று ஒரு நிறமில்லை எந்த வர்ணத்தையும் அவன் வரைந்து கொள்ளவில்லை அதனால் தான் நம்மிடமிருந்து புத்தனையே துடைத்தோம் நம் வர்ணத்துக்கு புத்தன் ஆக மாட்டான் இம்சையே நம் இயல்பின் வண்ணமாயிருக்க நம் நிறத்தை மறுத்தார் ஒருவர் அஹிம்சையின் நிறத்தினை துப்பாக்கியால் துடைத்தோம் நம் குரூரத்தின் வர்ணத்தினை அவரிலிருந்து வெளியாக்கினோம் வெண்புறாக்கள் பறக்கும் …

    • 3 replies
    • 914 views
  21. Started by nochchi,

    1987 யூலை 5 …. --------------------------------- இது வெறும் நினைத்து மறந்திடும் நினைவுநாளல்ல எம் தேசம் மீட்டிடத் தீயென வாழ்ந்தவர் தீரத்தைப் பாடிடும் வீர நாளன்றோ! விடுதலைப் பாதையின் தடைகளை வீழ்த்திட வெடிகளாய் மாறிய வேதங்களன்றோ! இவர் பாதம் பதிந்த நிலங்களின் மீதிலே பூக்களைத் தூவிடும் காலத்தைப் படைப்போம்! மக்கள் வாழ்வினை நெஞ்சிலே சுமந்தவர் தம்முயிர் வீசிடும் வேளையிற் கூடத் தாயக விடுதலை கீதம் பாடிடும் பெரும் ஞானிகளானோர்! ஞாலம் மீதிலே வாழ்கின்ற வரையிலே இவர் நாமத்தை எங்கள் நெஞ்சிலே சுமப்போம்! - நொச்சி -

  22. விலைகொள்ளா எழிலே _எனை குலைத்த கோலமயிலே , நிலைகொள்ளா எண்ணங்கள் _நீ கலைநிலா வர்ணங்கள் . நாவுக்கும் என் பாவுக்கும் நான் வளத்த நாய்க்கும் ஆவுக்கும் இரவில் அலறுமந்த கோவுக்கும் ஏந்திழையே, ஏங்கியுன் கதசொன்னேன் . நெற்றிவகிடு கண்டு நெகிழ்ந்து வற்றிபோனதடி தொண்டதண்ணி ! சுற்றி நீபோட்ட கொண்டையில சுருண்டு கிடந்ததடி மஞ்சத்து பூனைமனது !! குடமெடுத்து நீவர நிரம்பிக்கொண்ட என்னுள்ளம் _போன தடமிருந்து அழுதது நீ(ர்) நிர(ம்)ப்பி போக வெறுமை சுமந்து தள்ளாடியது பாதம் கண்ட கணமதில் பாதியானவன் , மீதம் காணும் கனவில் சேதமானவன். யாதும் நன்றேயென்றே திமிரானவன் தோதாயிருப்பனோ யென்றே சோர்ந்துபோனவன் உம்மென்று சென்ற உன்னம்மாவுக்கும் என்னெ…

  23. Started by nunavilan,

    ஈழத்தமிழன் நீரால் பிரிந்தாயோ தமிழா நிலத்தால் பிரிந்தாயோ தமிழா இயற்கை பிரித்ததோ தமிழா தமிழ் மொழியால் ஒன்றுபட்டோம் - தமிழா வாழ்கை நெறி கண்டவனும் தமிழன் உயர்வு வாழ்வுநெறி சொன்னவனும் தமிழன் உலக நீதி கண்டவனும் தமிழன் உலகம் முழுவதும் வாழ்பவனும் தமிழன் வான்புகழ் கண்ட வள்ளுவனும் தமிழன் மானம் உயிரெனக் கொண்டவனும் தமிழன் கொஞ்சும் தமிழ் கண்ணீர் சிந்துதே குளிர்ந்த ப10மி குருதியில் நனையுதே இதைக் கண்டு எம்கண்கள் குளம் ஆகுதே எட்டுத் திக்கும் மகிழ்ந்து தமிழ் வாழுமா? ஈழத்தமிழனின் சோகக்கதைதான் தீருமா? இருளை விலக்கித் தமிழ் ஈழம் தளைக்குமா? உண்மையென்றும் சாவது இல்லை தமிழா! உன் உரிமைக்கு நீதி கிடைக்கும் தமிழா! J.டானியல் (யாழ்ப்பாணம்) கி…

  24. உன்னையும் என்னையும் இங்கே இணைத்தது ஈழம் எனும் நேர்கோடு இடையில் பல எதிர்கோடு இவற்றை தண்டி நீ ஓடு இதற்கு மேல் நீ எழுது கருத்தோடு

    • 4 replies
    • 913 views
  25. சர்வதேசமே! 1948இல் இலங்கைக்கு சுதந்திரம் தந்தாய் பத்து ஆண்டுகள் கூட தமிழனால் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியவில்லை பேரினவாத சிங்களவனின் சுரண்டலுக்கு ஆளானோம் தமிழ்மண்ணில் சிங்களக் குடியேற்றம் செய்தான் பொறுத்தோம் எம் வளங்களைச் சுரண்டினான் பொறுத்தோம் எம் உயிரிலும் மேலான கல்வியைப் பறிக்க தரப்படுத்தல் சட்டம் அமுலாக்கினான் இனியும் பொறுக்க முடியாமல் அஹிம்சை வழியில் கேட்டோம் கிடைக்கவில்லை ஆயுதம் ஏந்திக்கேட்டோம் பயங்கரவாதிகள் என்றா(றீர்)ன் இலட்சக்கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்து விட்டு இன்றும் கேட்கிறோம் நீ தானே சொன்னாய் எந்த ஒரு சமூகமும் தனித்துவமான மொழி கலை,பண்பாடு கொண்ட இனம் தனது சுயநிர்ணய …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.