Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அன்பென்றால் அம்மா அறிவென்றால் அம்மா அவனியில் அவள் அன்றி அரவணைப்பார் யாரம்மா துணையென்றால் தூண் அம்மா துணிவோடு தானம்மா தூரதேசம் ஏனம்மா துரத்தினதயே பாரம்மா செல்ல மகன் நானம்மா சென்றதனால் தானம்மா சொந்தமென வந்த செல்வம் செய்த வேலை சோகம்மா

    • 14 replies
    • 2.6k views
  2. Started by suvy,

    அம்மம்மம்மா! மண்ணில் இருந்து விண்ணுக்கு நீ எதையும் எடுத்துச் செல்லவில்லை என்னுள் சில விதைகளை விதைத்துச் சென்றுவிட்டாய்! இதோ உன் நினைவு மலரில் நம் உறவுச் செடி வேர் ஊன்றுகிறது மெது மெதுவாக! மறக்க முடியவில்லை! மின்னலாய் தோன்றி மறைந்த நம் 24 வருட உறவை! நடந்தவையெல்லாம் கனவாக இருக்கக் கூடாதா! கிள்ளிப்பார்த்தேன்.... வலிக்கிறது அம்மம்மா! அம்மம்மா என்னும் ஆடையை உனக்குடுத்தி பேத்தி என்னும் சட்டையை எனக்குடுத்தி காலன் தைத்த உறவில் நாம் வாழ்ந்த வாழ்க்கை என்ன! அம்மம்மா உன் அன்பை ஆழ்ந்து அனுபவித்த முதல் பாக்கியசாலி நான்! வெளிமனம் அறியாது உன் அருமைகளை! உள்மனம் மறவாது நீ அருளிய வரங்களை! உன் குழந்தைகள…

  3. Started by Ravi Indran,

    காதல் அம்மாவின் மார்புக்குள் அப்பாவை தொட்டபடி விளையாட்டுப் பொம்மையுடன் தூங்குகிறேன். வெளியில் நான் இலைபோட்டுக் காப்பாற்றிய மழைவெள்ளத்தில் நனைந்த எறும்பு குளிருக்கு என்ன செய்யும்? ஐயோ பாவம்! எல்லாமே என் சொந்தம் சொந்தங்கள் எல்லாமே எனக்காக என்கிறது குழந்தை எனக்குப் பசித்திருக்கும் அவனுக்குப் பால் கொடுப்பேன். எனக்குத் தூக்கம் வரும் அவனைத் தாலாட்டுவேன். தந்தைக்குச் சேமித்த நேரத்தையும் அவனுக்குச் செலவு செய்வேன் என்கிறாள் தாய் என் வலிய தோள்களே வலிபெறுமளவுக்கு சுமப்பேன். முடமான கால்களால்கூட அவனைச் சுமந்து நடப்பேன். வீட்டுக்கொரு கொலுசுச் சத்தம் கூட்டி வந்த பின்பும் கண்ணை இமைபோல அவனை நான் காப்பேன். என்கிறார் தந்தை. …

  4. திருக்கேதீச்சரம்! தீபச்செல்வன்… பாடல்பெற்ற தலத்தில் பெற்றோம் கொன்று மறைக்கபட்டவர் எலும்புக்கூடுகளால் நிரப்பட்ட மாபெரும் சவக்குழியை உக்க மறுக்கும் எலும்புக்கூடுகள் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கமுடியாதவையெனச் சொல்பவனின் பல்லிடுக்குகளில் சிக்கிப் படிந்துள்ளன சதைத்துண்டுகள் உறக்கமற்ற மரணத்தோடு மாபெரும் வதையோடு சரிந்துபோய்க் கிடப்பவர்கள் உக்க மறுக்கும் வார்த்தைகளோடிருந்ததை நான் கண்டேன் …

  5. அம்மா உன் கருவறை மீண்டும் தருவியா... நல்ல சயனம் அங்குதானே மீண்டும் தாங்கவருவியா.. இந்த பூமி ரொம்ப இரைச்சல்.. அதுதானே என்னிதய எரிச்சல்.. நட்பு என்பதை நம்பி நான் மோசம் போனேன் தம்பி அன்பு என்ற அம்பு என்னைத்துளைகள் செய்தது நம்பு இது மனிதம் இறந்த காலம் புவி திரும்பச் சுழலக்கூடும்.. ஒழுக்கம்தானே உயர்வு பண்புதானே வாழ்வு நல்லதென்றும் யோசி -நன் மெய் அதையே பேசி.. தந்தை சொன்ன மந்திரம்-இன்று தவிக்கும் தனயன் மாத்திரம்

  6. ஓயுதல் தீருமடா புதியதோர் ஒளி பிறக்குமடா! பாயுதல் இன்றிப் பதுங்கியிருந்த புலி பாய்ந்தே சீறுமடா! சீயத்தின் பிடறி கிழித்து விளையாடி காயங்கள் ஆற்றுமடா! சிங்கத்தை கொடியில் தாங்கியதால் வீரம் வருமோடா? அடே மோடா... பாடங்கள் இன்னும் பல இருக்கு படிக்க! கூட்டங்கள் பல கூடி கூவிப் பிதற்றி நின்றோரெல்லாம் ஓட்டங்கள் விடுவர் ஆட்டங்களின்றி தலைவன் போடும் திட்டங்கள் கண்டு திசையெங்கும் வியந்தே நிற்குமடா! பயந்தே நடுங்கிப் பகை யோடுமடா விரைந்தே எமக்கொரு தனி ஈழம் உருவாகுமடா!

    • 4 replies
    • 1.3k views
  7. கருக்கலைப்பு மூலம் கொல்லப்பட்ட சிசு. உயிராய் முளைத்த அவர் காதலில்... பூவாய் மலர்ந்தேன் செடியாகும் கனவோடு..! கருவறை தந்தவள் கருணையே இன்றி பாதியில் பறித்தாளே சாய்த்தாளே என்னுயிர்.! கண்ணீர் கூட காணிக்கை இல்லை உரிமைகள் கூட எழுத்தில் இல்லை கருக்கலைப்பென்று வாழ்வை அழிப்பவரே ஒரு கணம்... எனக்காய் அழுவீரோ..??! இல்லை தொலைந்தது தரித்திரம் சரித்திரம் படைபீரோ..??! நீரும் ஓர் நாள் கருவோடு இருந்தீர் மறந்தீரே துணிந்தீரே பாதகரே..! கண நேர சுகத்துக்காய் ஏனென்னை பலியிட்டீர்... சிதைக்கின்றீர் தளிருடலை..! பிறந்ததும் கொஞ்சும் உறவு பிறக்க முன் பாடையில் போவது பாவமில்லையோ..??! தளைக்க மானுடம்..!!! கரு…

  8. நிறுவைக்கோளாறு. -------------------------------------------------- தராசின் ஒரு பக்கத்தில் என் உறுதிப்பாடுகளை வைத்தேன் மறுபக்கத்தில் என் சந்தேகங்களை அவிழ்த்துக் கொட்டினேன் சந்தேகப் பக்கம் தாழ்ந்து நின்றது பின் உறுதிப்பாடுகளுடன் சிறிது விவாதங்களை அடுக்கினேன் அப்பாடா அதன்பின் தாழ்ந்து நின்றது உறுதிப்பாட்டின் பக்கம் உறுதிப்பாடுகளால் சந்தேகங்களை அளந்தேனா ? அல்லது சந்தேகங்களால் உறுதிப்பாடுகளை அளந்தேனா ? நிறுவைப் படிகள் எவை? நிறுக்கப்படுபவை எவை ? மீண்டும் மேலெழுந்தது உறுதிப்பாடுகளின் பக்கம் இவ்வாறாக இவ்வாறாக தமக்குள் ஏதோ நானறியா ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டவைபோல் எழுவதும் தாழ்வதுமாய் என்னை ஏளனம் செய்தவாறே தமத…

  9. புறமுதுகிட்டு ஓடச் செய்தாய் பூரித்துப் போனேன். பொழுது புலர்ந்து விடும் – உன் புதுமை நிர்வாகம் உலகறியச் செய்யும். காத்திருந்த கணங்கள் அனைத்தும் தொடர்கதையாகி விடுகதையையும் சேர்த்து விட்டுச்சென்றுள்ளது? திசையெல்லாம் கூடிய ஆதரவில் திசை திரும்பாமலே பயணித்தாய். சேர, சோழ, பாண்டிய கதைகள் பழங்கதையாகி தேசமெங்கும் தேசியத் தலைவரானாய். நல்லவரா? கெட்டவரா? நாள்தோறும் முண்டியத்த நாக்குகளுக்கு மட்டுமே தெரிந்ததால் நகைப்பாய், நகைச்சுவையாய் நாள்தோறும் தலைப்புச் செய்தியானாய்? உன் ஓழுக்கம் குறித்து – இங்கு அக்கறையில்லை. ஊடக விற்பனையில் – நீ உரத்துச் சொன்ன அத்தனையும் உலகறியாது? உதிரம் கொடுத்து உள்ளே புதைந்தவர்கள் உறவை விடுத்…

  10. Started by pakee,

    நிலவே நான் நேசிக்கின்றேன் ஆனால் உன்னையல்ல மலரே நான் நேசிக்கின்றேன் ஆனால் உன்னையல்ல பெண்ணே நான் நேசிக்கின்றேன் ஆனால் உன்னையல்ல என் சுவாச மூச்சே நான் நேசிப்பது உன்னை கூட அல்ல எல்லாவற்றுக்கும் மேலான என் அன்னையை தான்...

    • 2 replies
    • 835 views
  11. முதன் முதலாய் அம்மாவுக்கு... ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரு(மை)ம ஒத்தவரி சொல்லலையே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு ஒங்கீர்த்தி எழுதலையே! எழுதவோ படிக்கவோ ஏலாத தாய்பத்தி எழுதிஎன்ன லாபமின்னு எழுதாமாப் போனேனோ? பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே! குலமகளே! என்னைப் புறந்தள்ள இடுப்புல்வலி பொறுத்தவளே! வைரமுத்து பிறப்பான்னு வயித்தில்நீ சுமந்ததில்ல வயித்தில்நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிருச்சு கண்ணுகாது மூக்கோட கறுப்பா ஒருபிண்டம் இடப்பக்கம் கெடக்கையில என்னென்ன நெனச்சிருப்ப? கத்தி எடுப்பவனோ? களவாணப் பிறந்தவனோ? தரணிஆள வ…

  12. ஓஓ..... என் பழையவளே வருடங்கள் எத்தனை போனபின்பும் உன்நினைவுகளில் நான் என்நினைவுகளை நீ எத்தனையாவது பக்கத்தில் பதிந்து வைத்திருக்கறாய் உன்பெயரை மறக்க நான்உண்ட தூக்கமாத்திரை கூட தோத்து போனதே நீ மாறியிருக்கிறாய் கண்ணருகே கருவளையம் கருங்கூந்தல் நிறம்மாறி ஆனால் உதடுகள்மட்டும் அதேசிரிப்பு இப்போதும் நாம் பேச போவதில்லையா?? பேசமுடிந்தபோது பிரிந்தவர்கள் பேச முடியாத போது சந்திக்கிறோம் உன்நினைவுகள் உன்குழந்தையைபோல உறங்கியிருக்கலாம் ஆனாலும் ஒரேயொரு கேள்விதான் நீயும் என்னை காதலித்தாயா?? இது மீள் பிரசுரம் என்னுடைய பழைய வலைப்பக்கத்தை நோண்டிபொழுது அகப்பட்டது

    • 14 replies
    • 1.1k views
  13. என் .... கண்களில் உன்னை.... ஓவியமாய் சுமந்து செல்கிறேன் .... உதடுகளில் உன்னை ... மந்திரமாய் உச்சரிக்கிறேன்.... இதயத்தில் உன்னை .... தேவதையாய் வணங்குகிறேன் ....!!! என் ... ஆத்மாவில் மூலாதாரம் - நீ உயிரோட்டத்தின் மூச்சும் -நீ குருதி ஓட்டத்தின் குருதியும் -நீ சிந்தனைகளின் வடிவம் -நீ என் உடலும் நீயே..... என் உயிரும் நீயே அன்பே ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் உடலும் நீயே உயிரும் நீயே கவிதை தொடர் 01

  14. கண்ணே உன் முத்தமும் அரபு வசந்தம் போலடி [size=3] என் இதயத்தை ஆக்கிரமித்ததால் கண்களால் கைது செய்ததால் நினைவில் சித்திரவதை செய்வதால் பெண்ணே நீயும் கொடும் படை போலடி உடலெங்கும் பெரும் கிளர்ச்சி செய்த்தால் உணர்விலே கொடும் தீப்பற்ற வைத்ததால் இதயத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியதால் கண்ணே உன் முத்தமும் அரபு வசந்தம் போலடி எட்டா விலையில் இருப்பதால் தடவலால் ஊக்கம் பெறுவதால் தகவல் பரிமாற்றம் செய்வதால் பலான பெண்ணே நீயும் ஐ-பாட் போலடி வன்பொருளும் மென்பொருளுமிருப்பதால் என்பொருள் முடிவடையச் செய்வதால் என் நேரத்தை என்றும் இழுத்தடிப்பதால் பெண்ணே நீயும் கணனி போலடி[/size][size=3] Posted by வேல் தர்மா at 02:18 Thanks: http://velthar…

    • 1 reply
    • 575 views
  15. அக்காங்களா ! அண்ணனுங்களா ! இது என்னோட ரெண்ணாவது கவிதைங்க . உங்க மாற்றரில நான் கவிதை பாடுறது றைட்டானு எனக்கு கொன்பியூஸ்சுங்க . பட் என்னோட மெசேஜ் எப்பிடீன்னு , கவிதை களத்தில இருக்கிற என்னைய விட பெரீய ஆளுங்க எல்லாம் காமன்ற் தந்தீங்கன்னா , நான் என்னைய கறெக்ட் பண்ண ஹெல்ப்பா இருக்குங்க :) . ஓக்கேயா ? சொப்னா ஜூட்டடி :lol: :D . முறங்கொண்டே புலியை விரட்டிய தமிழிச்சி வயற்றில் பிந்தவர்களே அழலாமா??? துடையுங்கள் உங்கள் விழிநீரை ....... யார் சொன்னார்கள் நான் இறந்தேன் என்று?? துடைத்திடுவீர் உங்கள் விழிநீரை ........... காற்றோடு காற்றாய் நான் கலந்தாலும், உங்கள் நாடிநரம்பெல்லாம் பாடுகின்றேன் போர்பரணி.... என்றுமே எமக்கில்லை தலைக்குனிவு, மனப்பால் இருத்திடுவீ…

  16. கொத்தணிக் குண்டுகள் -Cluster bombs உலகம் எங்கும் தடைசெய்யபட்ட எமக்கு 29.11.2008 இன்று விடுதலைநாள்! பறந்து பறந்து வெடிக்கும் எமக்கு பிடித்த நகரம் தமிழீழத்தில் கிளிநொச்சி! எம்மைக் கட்டுப்படுத்த முடியாது. எம்மைக் கொச்சைப்படுத்த முடியாது. சோவியத் சிறைகளில் அடைபட்டுக் கிடந்தோம் சிறிலங்கா வந்து மீட்டெடுத்து தமிழர்களின் தலைவாசலில் கட்டிவைத்து விளையாடுகிறது. ஈழத் தமிழருக்காக உலகத் தமிழர்கள் மட்டுமில்லை நாங்களும்தான் கொத்துக் கொத்தாய் கண்ணீர் வடிக்கிறோம்! நாம் என்ன செய்வது? எம்மை உருவாக்கியவனும் பயங்கரமானவன் நாமோ அவனைவிடப் பயங்கரமானவர்கள் எம்மை இலகுவில் அழித்துவிட முடியாது ஒருமுறையல்ல இருமுறையல்ல…

  17. உன்னை பிரிந்தது வலியில்லை.... பிரிய நீ ஆசைப்படுவது வலிக்கிறது .... மறந்து வாழ்வது வலியில்லை..... மறக்க வைப்பதுதான் வலி ..... காதல் வலியால் தைத்த ஆடை .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் தோல்வி கவிப்புயல் இனியவன்

  18. பொதிகை மலை திமிர்த்த சிறு முனி அகத்திய மாமுனி எழுதிய தமிழ் குமரி தொடு தமிழ் மண் குளிர் தென்றல் சுமந்த மூவேந்தர் வளர் தென் பெண்ணை பாலாறு தொடு நதி பெருகும் வைகைப் பெரு நதி தமிழ் மணக்கும் காவிரிப் பூம் புனல் அத்தனை சிறப்பும் பெற்று அகமகிழ்நதிருந்த தமிழணங்கு இடிமிசை அரன்று இனி தமிழ் அகன்று போகும் இழி நிலை அரங்கேறும் இது நிலையாகுமோ வெனும் அறி நிலையறியா உயிர் நிலை துடிக்கும் இது நிலையோ பொதி நிலை சுமக்கும்தமிழா இதுவொரு நிலையோ -இது விடை கீழ் நிலையெது வரினும் ஏற்பது எம் நிலையே :unsure:

  19. தூத்துக்குடி முத்தே தென்பாண்டி துறைமுத்தே ஆத்தூர் கொழுவநல்லூர் ஆண்மை தமிழ் மகனே காத்து தமிழ் இந்தக் காசினியில் நிமிர வைக்கத் தீய்த்து வதை தீயில் சிதைந்து துடித்து இறந்தாய் சோத்தி உதிரிகளும் துணிந்தேழுந்தோம் மறவர்களாய் கோத்து கைமோதி குவலயத்தில் தமிழ் அரசு பூத்திடவே வைப்போம் புலியே முத்துகுமரா ஏத்தி தொழும் ஈழம் என்றும் ஒளிக் கோபுரம் நீ தமிழோசைக்காக கணியன் நன்றி www.Tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...7&Itemid=68

  20. நான் பங்குபற்றிய , சிங்களவருடன் மோதி தோற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு கணத்தில , சிறந்த வீரன் ஒருவனால் ஏற்பட்ட எதிர்பாராத முடிவால் வியந்த ஒரு யுத்தம் பற்றிய கதைதான் இது... இது நடந்தது கிபி2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம்... எங்கட கொம்ப்யூட்டர் லாப் இல... கோபப்படாதீங்க... ஒரு உண்மைச்சம்பவத்த அடிப்படயா வச்சு சாத்தியமான ஒரு முடிவத்தான் சொல்லவாறன்... அதுக்காக இத வாசிச்சு ஓவரா எதிர்பார்ப்ப கிறியேட் பண்ணிடாதீங்க... எங்கும் மரண ஓலம்.... வெட்ட ப்பட்டு வீழந்த தலைகள் குதிரைகளின் குளம்புகளில் அகப்பட்டு நொருங்கும் ஓசையும் கேடயங்களில் வாள்கள்மோதித்தெறிக்கும் ஓசையும் கலந்து நாலாபக்கமும் எதிரொலித்துக்கொண்டிருந்தது.. . விழ விழ அலை அலையென வந்து கொண்டிருந்த குதிரைப்படைகள் எதிரி மா…

    • 0 replies
    • 526 views
  21. ஒரு ஈராக்கியனின் சப்பாத்து அடே ஜோர்ஜ் புஷ் கண்ணீரால் எம்மக்களின் வேள்வி அதனால் கேட்கிறேன் ஒரு கேள்வி எதற்காக எம்மீது படை எடுத்தாய் எண்ணற்ற உயிர்களைப் பலி எடுத்தாய் எண்ணெய் மேல் நீ கொண்ட பித்தத்தினால் தண்ணி போல் இரத்தத்தை ஓடவிட்டாய் பேரழிவு ஆயுதங்கள் எம்மிடம் இருக்குதென்றாய் பேரழிவுகளை எம்மிடம் ஏற்படுத்தினாய் இலட்சியம் நிறைவேறியதென முன்னர் முழங்கினாய் அதை ஏமாற்றமெனப் பின்னர் கலங்கினாய் சதாமைப் பின்னர் அழித்தவனும் நீதான் அவனை முதலில் வளர்த்தவனும் நீதான் நீ வருமுன் எம்நாடு நாசமயிருந்தது நீ வந்தபின் இன்னமும் மோசமாயிருக்கிறது இன்று என் கையில் சப்பாத்து முடிந்தால் உன் தலையைக் காப்பாத்து http…

  22. களம் களமிது யாழ்க்களம் வந்து பாருங்கோ உளங்களிக்க உள்ள எழுதிப்பாருங்கோ வந்து நீங்க எட்டிப்பாத்து வணங்கிட்டா…. உங்க வண்ட வாளம் அலச ஒரு கூட்டங்கோ நாரதரும், சாத்திரியும் நாத்தீக இளங்கோவும் தூயவனும், ஈழவனும், டங்குவாரை அறுத்தெறிய, நெடுக்கால போறவரும், குறுக்கால வாறவரும் கந்தப்பு இறைவனுக்கு காவடி எடுத்தாட சின்னாவும், வடிவேலும், சிலுக்கோட கூத்தாட குத்தாட்டம் போட்டபடி கு. சாவும் தள்ளாட கானத்துப் பிரபாவும், கதை எழுதும் மணிப்பயலும் கதவோரம் நின்று நின்று களத்துக்குள் கல் பொறுக்க வானவில்லும் வெண்ணிலாவும் வக்கணையாய் பேச்செடுக்க பொக்கைவாய் திறந்து யம்மு போயிலை சாறுமிழ விண்ணான டங்குவுடன் விம…

  23. கருணாநிதியே கவிதை நதியே உலகம் தூற்றும் உயர்ந்த பதியே தமிழன் தலையைக் கவிழ்த்த உன் கடிதப் பொதிகள் டெல்லியின்வீதிகளில் கடலை சுத்துவதும் விதியே நீவிர் செய்தது உமக்கே சரியா ஒன்றல்ல மூன்றாமே உமக்கு நாம் ஒன்றுமே இல்லாமல் இருக்கும் போது நாளை உமது காற்றடைத்த உடல் நாறும் போது இத்தாலி திரவியம் உம் உறவுகளையும் நாற வைக்கும் வாழ்க உம் கடிதக் கவிகள் வாத்தியார் *********

  24. நான் கொலைகாறன்... ஒட்டு கேட்டு நானும் அன்று ஓடி அங்கு வருகையிலே.... கூட்டுமாறு கொண்டுவந்து கூட்டி கூட்டி அடித்தவரே.... பழஞ்சோறு அள்ளி வந்து பரப்பி என்னில் எறிந்தவரே.... பாதணிகள் களட்டி வேறு பாவி மீது வீசினீரே.... ஆட்சியிலே ஏறும் வரை அடியேன் யான் பொறுமை காத்தேன்... இன்று பழஞ்சோற்றுக்கு வழியில்லை பட்டினியால் செத்துமடி.... கூட்டுமாறு கொண்டுவந்து பிணமதுவை கூட்டி அள்ளு.... தமிழன் தோலை உரித்து படைகள் பாதணியாய் பேட்டிடட்டும... ஊர்வலமா நடாத்தி வந்தாய் ஊரடங்கு போட்டுவிட்டேன்... சட்டமதா பேசி வந்தீர் சாக்கடையை திறந்து விட்டேன்.... குண்டுகளை வீசி உங்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.