Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஈழத்து இளம் பாடகன் சுஜித்ஜீ ராப் இசையில் வழங்கும் புத்தம் புதுப்பாடலான விடுதலை 2007 பாடலை உங்களோடு பகிர்கின்றேன். நம் ஈழத்து நிலையினை வரிகளில் தோய்த்து இன்றைய காலகட்டத்து இளம் நெஞ்சங்களுக்கு வழங்கும் துள்ளிசைப் பகிர்வு இது. listen to the song at ; http://radiospathy.blogspot.com/2007/10/2007.html http://uk.youtube.com/watch?v=JBD8qHHm_TI வாழ்வும் வரும் சாவும்; வரும் ஏதோ ஒருநாள் விடிவும் வரும் கொஞ்சம் பொறு ஓய்ந்தே இரு நாளைய நாளில் வரமாய் வரும் வீதியிலே நடக்கிறேன் விதியை நினைக்கிறேன் தமிழனாய்ப் பிறந்து நான் தினமும் தவிக்கிறேன் எங்கள் நாட்டு விடுதலை ஆனதோ விடுகதை எங்கள் மண்ணில் ஏது இல்லை இருந்தும் ஏதும் இல்லை தினம் தினம் உயிர்க்கொலை உயிர்க…

    • 6 replies
    • 1.6k views
  2. முன்னர் சகாறா அக்காவின் ஒரு திரியில் எனது கவிதைகளை காட்சிகளுடன் பகிர்ந்தேன்...ஆனால் அங்கு பகிர்ந்த ஒன்றையும் காணவில்லை..எல்லாம் தொலைந்துவிட்டன..அவற்றின் பிரதிகளும் என்னிடம் இல்லை...அதனால் அதன் பின்னர் எழுதியவற்றை இந்த புதிய திரியினூடு பகிர்கிறேன்... அலுப்பூட்டும் உரையாடல்களில் இருந்தும், மனிதச் சுமைகளில் இருந்தும் இலக்கியம்களும்,இயற்கையின் பாடல்களும், குழந்தைகளுமே மனதை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன....மனதை அதன்வழியில் பேசவிட்டு வழிந்த மொழிகளை நெஞ்சுக்கு இனிமையை தந்த இந்த படங்களினூடு இங்கு பகிர்கிறேன்...மொழிக் குமிழிகள் உடைந்து சிந்திய என் கவிதைக்குழந்தையின் காலடித்தடங்களின் சுவடுகளை மீட்டிப்பார்க்கிறேன் இந்த திரியினூடு.. படித்துவிட்டு யாரோ சிந்தும் கண்ணீர்த் துளிக…

  3. 2.11.16 ஆனந்த விகடன் தீபாவளிச் சிறப்பிதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நானிலம் போற்றும் நீதி காடு இருந்த இடத்தில் அமைந்திருக்கும் முல்லை நகரில் கழனி இருந்த இடத்தில் வீடுகட்டிக் கொண்டவர்கள் கால்வாய் இருந்த இடத்தில் சாலை அமைப்பதை எதிர்த்து வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். குளம் இருந்த இடத்தில் அமைந்திருக்கும் உயர்மன்றத்தில் நீதி இன்னும் நிலுவையில் இருக்கிறது! -சேயோன் யாழ்வேந்தன் (ஆனந்த விகடன் 2.11.16) (எனது பதிவுகளி…

  4. Started by nochchi,

    ஈகத்தின் சுடரே! மக்களுக்காக எரிதனலேந்தி மண்ணிலே சாய்ந்த மைந்தனே முருகா துன்பமே சூழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வினை மாற்ற தீயினைச் சூடிப் போரினைத் தொடுத்து பொன்னெழுத்துகள் சூடி மண்ணிலே சாய்ந்தாய்! தாய் மண்ணிலே இன்றும் துன்பங்கள் சூழத் துயரங்கள் ஆளத் துடிக்கிறார் மக்கள் வடிக்கிறார் உதிரம் உதிரத்தால் உறைந்த உயிரெனும் தாய்நிலம் அடிமையாய் இன்னும் அழிகின்ற நிலையாய் தொடர்வதும் ஏனோ! ஈகங்களாலே ஈன்ற எம் தேசம் வேடங்களாலே வேற்றவராள மாற்றான் போன்று மகுடிக்கு ஆடும் பாம்புகளான தலைமைகளாலே விடையென்று வருமென்று வானகம் இருந்தே முருகதாசனோ தவிக்கின்றான்! ஈகத்தின் சுடரே தலைகுனிகிறோம் தம்பி அங்கிங்கொன்றாய் எழுகின்ற தமிழனம் …

  5. கொடிய ஸ்ரீலங்கா அரச அதிபர் மஹிந்த என்று அழைக்கப்படும் அரக்கன் ராஜபக்ஷே விமானத்தில் இருந்து இறங்கி மண்ணை முத்தமிட்ட வேளையில் கால் தடுக்கி விழுந்தான். அவன் தனது இரத்தவெறியை அடையாளப்படுத்தும் முகமாக அணிதுள்ள அவனது சிவப்பு துண்டே அவனுக்கு தூக்கு கயிறாக மாறி அந்த இடத்தில மாண்டான். இறந்தது மஹிந்த இல்லை என்று அவன் உடன்பிறந்த இன வெறியன் கோதபாய DNA test பின்னர் தாம் அதை உறுதிபடுத்துவதாக இன்று லங்க புவத் செய்தி நிறுவனத்திற்கு அறிவித்தான். அரகர் கூட்டம் தமது ரத்த துளிகளில் இருந்து பெருகி வருவதாக புராணங்கள் கூறுகிறது .அதைபோல தான் புத்த மதத்தின் புனித மஹா வம்சம் கூறுகிறது.. இது எனது உடன் பிறப்பு இல்லை என்றும்..அவனை போல plastic surgery மூலம் முகம் மாற்றப்பட்ட யாரோ என்றும் கோதபாய அறி…

    • 0 replies
    • 2.4k views
  6. *** வசம்பெனும் குருவி குசும்புகள் பலசெய்து வலையிலே குடும்பமாய் வாழ்ந்தபின் மெளனமாய் ஓய்ந்து போனதென்ன? ஓடிப் போனதென்ன? *** புதிதாய் நண்பர்களை சேர்ப்பதிலும் ஏலவே நட்புறவு கொண்டோரின் இதயத்தில் நிரந்தரமாய் நிலைத்திருக்கும் நோக்குடனே நீண்டதூரம் சென்றாயோ? *** நிச்சயம் இன்றென அநித்தியம் நாளையென அன்றெமக்கு அன்புடன் பகர்ந்த அறிவுரையை மெய்ப்பிக்க நினைத்தே நீ பொய்யாகிப் போனாயோ? *** தருக்கங்கள் நிறைந்த கருத்தாடல் தளத்தில் சுடுகின்ற சூரியனல்ல நான் குளிர்விக்கும் நிலவென்று எமக்கு உணர்த்தவே நீ அமரன் ஆகினாயோ? *** குரலறிந்து, முகமறிந்து, முக…

  7. யார் இவர்கள்??[/b] உடம்பில் தென்பிருந்தும் மனதில் உறுதியில்லாத சிலர் பிழைக்கத் தெரிந்த நாட்டில் அரசாங்கத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் இவர்கள் சோம்பேறிகள் பெற்றோறை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டு மனைவியுடன் சுகபோகம் அனுபவிக்கும் இவர்கள் மன்னிக்கப்படாத பாவிகள் தமிழ் நாட்டை கேவலமாக எண்ணி இந்த நாடு தான் சொர்க்கம் என்று வாழ்பர்கள் அயோக்கியர்கள் குடும்பத்தில் நுழைந்து வீண்பேச்சுக்கள் பேசி வதந்திகளைப் பரப்பி ஒர் அழகிய கூட்டை சிதறடித்துப் பிரிக்கும் இவர்கள் மகா பாவிகள் கஷ்ரம் என்று அலறித்துடித்து பணத்தைப் பெற்றுவிட்டு திருப்பிக் கொடுக்காமல் பூச்சாண்டி காட்டும் இவர்கள் துரோகிகள் சீதணக் க…

  8. வாடி வதங்கி நின்றாலும் - எமக்கு வல்லரசுகள் எதிராகும். நலமா?....... என்றும்மை நான் கேட்கப் போவதில்லை, நாடு விட்டுப் போனவர்கள்... அனைவரும் நலமென்று.. நானறிவேன் கண்ணாளா! - இதை கேடு கெட்ட பிழைப்பென்று பழித்தவரும் நீங்கள்தான்! கொண்ட கொள்கை மாறி - மனம் களிப்பவரும் நீங்கள்தான்! அன்று... இலட்சியங்கள் பேசி - எனை இலாவகமாகக் காதலித்து - இன்று அந்நிய புலத்தில்.... ஏன் அவலட்சணம் ஆகிவிட்டீர்? சாகச வீரனென்று - உம் சந்ததியே உமைச் சொல்லும்! ஆதலால்தானே - உம்மில் ஆசைகள் கோடி வைத்தேன் - இன்று சாகரம் கடந்து சென்று சா...தப்பும் கோழைத்தனம்!?....... நான்... ஆதி நாளில் பார்த்ததில்லை அது எப்படி வந்ததும்மில்? அன்பே! வாகை …

  9. எப்போ சொல்வாய். கண்காணிப்பு குழு....??? பாதை திறப்பென்று பார்த்து போக வந்தவரே... பாவம் ஏனய்யா பங்கருள்ளே பதுங்குகிறாய்...??? உத்தரவு பெற்று வந்தே உள்ளுக்குள்ளே நீ நுழைந்தாய்..... இத்தனையும் அறிந்த பின்னே எறிகணைகள் ஏன் எறிந்தார்....??? கண் காணிக்க வந்த உந்தன் உயிர் காவெடுக்க ஏன் முனைந்தார்....??? உன் உயிர் நீ காக்க உள்ளுக்குள்ளே ஏன் ஒழிந்தாய்....??? உந்தனுக்கு பின்னாலே உலகமது நீ என்றாய்....??? ஈற்றில் வரை உந்தனுக்காய் இவ்வுலகம் என் உரைத்தார்....??? சமரசத்தை பேணிடவே சம்பந்தியாய் நீயும் வந்தாய்.... உன் உயிரை குடித்திடவே உந்தனுக்கு கணை எ…

    • 3 replies
    • 1.1k views
  10. Started by vijivenki,

    நண்பர்களே - கவிதை ஒன்று அன்புக்கு என்றும் பஞ்சமில்லை!! வாருங்கள் - என்னிடம் நீங்கள் எதிர்பார்த்ததை விட நிறையவே கிடைக்கும்!! ஆனால் ஒன்று அதற்கான தொகையை சரியாக செலுத்திவிட வேண்டும் - என்னிடம் பணமாக!!! அன்புக்கும் விலை பேசும் சில மனிதர்கள்!!! என் செய்வது??? என்னுடைய ஆற்றாமை இது. உங்கள் கருத்து எதுவாயினும் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

    • 4 replies
    • 1.3k views
  11. அல்லி மலரோடு நான் தினம் என் கனவில் வருவாள் புஷ்பாஞ்சலி அழகில் அவள் முகமோ மலர்ந்திட்ட முல்லை மையிட்ட கண்களாலேயே கொள்ளையிட்டாள் கள்ளி கன்னத்தில் கருமையாய் வைத்திருப்பாள் புள்ளி என் மனதிலும் வைத்தாளே ஒரு புள்ளி அவள் பெயரோ லவ் ல் தொடங்கும் லல்லி தருவாள் தரிசனம் தவறாமல் வருவாள் பள்ளி கூடவே ஒட்டிக் கொண்டு வருவான் அவளின் மல்லி அவள் வீட்டிலும் மம்மி கூட எனக்கு பெரும் வில்லி தினமும் வாய்க்கு ருசியாய் வயிறார உண்பாள் உள்ளி மறவாமல் தண்ணீருடன் விழுங்கிடுவாள் வில்லை வங்கியிலே வைத்திருக்கிறேன் நிறைய சல்லி பரிசாய் நானும் தந்திடுவேன் தங்கச் சங்கிலி அவள் நினைப்புடனே அடித்துடுவேன் மில்லி போதையில் உளறிடுவேனே லில்லி லில்லி விளையாட்டிலே…

  12. காத்துக் கிடக்கின்றனர் அவர்கள் அவளின் ஒவ்வொரு வரிகளுள்ளும் பிரவகித்து ஓடும் காதலிக்கப்படுவதான பிம்பங்களின் நிழலில் குளிர் காய்தலில் தம் இழந்து போனவைகளையும் கனவுகளுள் புதைந்து போனதையும் எச்சங்களின் படிமங்களில் எப்படியோ காண்பதான பிரமைகளையும் துழாவமுடியாத இருட்டில் தினம் குருடாகிப் போன கண்களின் வெளிச்சத்தில் தேடியபடியே இருக்கின்றனர் கண்முன்னே காத்திருக்கும் காரணமற்ற வெளிச்சங்களை பார்த்திட முடியாத மனக்குருடாய் மடை திறந்தோடும் மனவாற்றின் வழியே ஆசையின் அகல்விளக்கேற்றி அடைந்திடமுடியாததான அகத்தின் அருகே சஞ்சரிப்பதான பிரமை கூட்டியபடி வீழ்ந்திடாத பழமரங்களுக்காய் கற்களைத் எந்நாளும் எறிந்தபடி

  13. நினைவுவலிகளை நீக்குமொரு நிகழ்வுப்பயணத்தை நினைவுகளூடே நீட்டிக்கொள்கிறேன்..... காலக்கரைவுகளில் புது வர்ணங்கள் பூசப்பட பூரித்துப்போகிறது நிகழ் கணங்களில் முகம் . வல்வைக்கடலுவர்க்காற்று வந்துமோதி முற்றத்து முல்லை பூவுருத்திப்போகும்_ .அதுவே மயங்குமாலையில் மன்மத வாசம் பூசும் காற்றில் ............. எருக்கலையும் நாயுருவியும் தெருக்கரைகளில் கதைபேசும் உருக்குலைதிருந்தாலும் எந்தநூர் திருக்கலையாதிருக்கும் பிணிஎதுமில்லாமல் போய்வர முனியப்பரை துணை கேட்டு வல்லை வெளியூடே எல்லைத்தாண்டும் பயணம் தொடரும் . உடுவை சந்தியில் உணர்வரியா உவர்ப்புடன் தேடல் பாடுபொரு…

  14. நீ தடம் பதித்துப் போகும் பாதவெளியில் பட்ட பனித்தூறல் அதன் சூட்டில் உருகிப் பின் என்னைப்போல் உறைகிறது காண் ஒயாமல் மோதி விழும் பனிச் சாரலது உரைந்த பனியதன்மேல் உள்ளக்கற்பனைபோல் கோபுரம் கட்டி எழ ஒரு கோடி மேளங்கள் ஒன்றாய் இசைப்பதுபோல் ஓடி வரும் வான்துளியின் ஒட்டலுடன் ஒளி கீற்றும் சேரந்து வந்து கற்பனையின் ஒப்பனையை கலைக்குது பார் இயற்கைக்கு இயல் இதுவோ? உண்டாக்கி உருப்பெருக்கி உருக்குலைத்து பின் உண்டாக்கும் பெரு இயலோ இவ்வுலகில் யார் அறிந்தும் யார் உணர்ந்தும் முடியாத கற்பனைபோல் கோலமிடும் உள்மனது வான் பரப்பின் மேகமதாய் வாழ்கை எனும் வாழ்வுக்கு

  15. *** பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் - அந்தக் காலம் பாலுக்காய் பாலகனே கால் கடுக்க பாதையில் நிற்பது - இந்தக் காலம் *** மங்கைக்கு மாலையிட சுயம்வரம் நடப்பது - அந்தக் காலம் மங்கைக்கு மாலையிட பணவரம் கொடுப்பது - இந்தக் காலம்

    • 4 replies
    • 1.4k views
  16. Started by putthan,

    இந்து நான் இந்தியா புனிதம் எனகென்றாய் கிறிஸ்தவன் நான் ஜெருசலம் புனிதம் எனகென்றாய் முஸ்லிம் நான் மக்கா புனிதம் எனகென்றாய் வடக்கு கிழக்கின் பூர்விக குடிமகன் என்பதற்காக என்ன ஆதாரம் காட்டினார் நீ புத்தன் ஆசிர்வதித்த சிறிலங்கா அவனது பூர்வீகம் உரிமை கூறுகிறான் சிங்கள பேரினவாதி- இப்படி சிறிலங்கா அவனுக்கு புனிதமாம்

    • 6 replies
    • 1.5k views
  17. கட்டியவனோ காலமாகி விட்டான் ! பெற்றவனோ கைகழுவி விட்டான் ! இருக்கின்ற காலங்கள் எதுவரையோ ? அது வரையும் உழைத்தே உண்ணுவேன் ! முதுமை என் சுருக்கங்களுக்கு மட்டுமே ! .......................................................... எனக்கில்லை! வாழும்வரை தன்னம்பிக்கையோடு .... (எங்கேயோ பார்த்ததில் மனதை ...)

    • 10 replies
    • 1.7k views
  18. Started by Jamuna,

    அன்புத்துளியே!! வானில் இருந்து விழுந்த மழைதுளியில் ஒரு துளி நீயம்மா கல்லான என் இதயத்தை ஈரமாக்கிய அந்த ஒரு துளி நீயம்மா... என் விழியில் வடிந்த கண்ணீரை நீக்கிய என் அன்பு துளி நீயம்மா சில மழைதுளி போல் என் வாழ்வில் உடைந்திடாத அன்பு துளி நீயம்மா!! இதமான பேச்சில் இதயத்தையே தொட்டுடும் துளியம்மா நீ என் கோபத்தை கூட புன்சிரிப்பில் கரைத்திடும் அன்பு துளியம்மா நீ.. மழையில் கிடைத்த இந்த துளியை கண்ணில் வைத்தேன் என் கண்மணியாய் அக்கணமே என் கண்ணில் இருந்து கண்ணீர் துளி வருவதில்லையம்மா.. குடை பிடிக்க மறுக்கும் என் கரங்கள் குடை பிடிக்க தொடங்கிவிட்டன வேறோரு மழைதுளி என் மேல் விழாமல் என் கண்ணில் இருக்கும் உனைக் காக்க.. …

    • 17 replies
    • 2.6k views
  19. தினம் நினைக்கப்பட திணிக்கப்பட்ட தினமல்ல, மனிதம் பேசும் மரபுக்காயெழுந்த மகத்தான தினமிது ! மூர்க்கம் கொண்ட முதலாளி வர்க்கம் கலைக்கும் வகையறியாது , பார்க்குமிடமெல்லாம் வதைபட்டு வேர்த்தவொருவனின் வேதனை சிதைத்த தினமிது !! புரட்சியின் பரிணாமமாய் எழுந்தான் எங்கெல்ஸ், பொங்கிவெடித்தான் மார்க்ஸ்_அரசியலில் அழைத்துவந்தான் லெனின் . தோழர்கள் தோள்மேல் பயணப்பட்ட எழுச்சி விதைத்துவைத்தது தொழில்புரட்சி. ஓங்கியோலிக்கட்டும் இங்குமினி புரட்சியின் குரல் , அடக்குமொரு அரசினை _மனிதம் மறுக்குமதன் அரசியலிருப்பினை, பாசிச தலைவர்களை _இன அழிப்பின் இயங்குபொறிகளை இனங்காட்டி ஓங்கியோலிக்கட்டும் . உழைக்குமொருவனின் உரிமைகள் இழக்கப்படாதிரு…

  20. நீ.. எனக்கு ஒரு ஏஞ்சல் (கெஞ்சல்) நான்.. உனக்கு ஒரு வலன்ரைன் கிவ்ட் சுத்திய கஞ்சல். (கஞ்சல்) ஓசில வந்ததென்று கிவ்டை கவ்விக்கிட்ட நீ கஞ்சலை.. தூசென.. தூக்கி வீச முன் கண் திறந்து பார்.. அங்கு.. கசங்கிக் கிடப்பது நானும் என் அன்பும்..!(காதல்)

  21. கண்கள் பூத்திருக்க கருவிழிகள் பார்த்திருக்க வெஞ்சமரில் விதையான வீரர்களின் வாழ்த்தொலியில் பொங்குதமிழால் பூரித்த மண்ணிலே வெந்து வெந்து நீறான சிங்களத்தினை வெற்றிகொண்டெழும் எம் வீரப்புலிக்கொடி நாட்கள் அதிகமில்லை நன்னாளும் தொலைவில் இல்லை பார்க்கும் இடமெங்கினும் பார்புகழும் வகைதன்னிலே பறந்திடும் எம்கொடி பார் தமிழே பார் வீரத்தமிழ்த்தலைவன் வெற்றியின் அரசனவன் வீறுகொண்டெழுந்திடுவான் வெற்றித்திலகத்தை பெற்றிடுவான் ஆற்றல் மிக்க அவனிடம் ஆயிரம் கலை உண்டு தோற்றோடும் பகைகண்டு தொடைதட்டி மகிழ்ந்திடான் விதையான தன்மக்களை மனதார நினைத்திடுவான் தாய்க்கு பிள்ளையாய் தமிழிற்கு தாயாய் வந்துதித்த எம்தலைவன் வெற்றி வாகை சூட வீறுகொண்டு நாம…

    • 3 replies
    • 1k views
  22. நினைவு இருக்கிறதா ? உனக்காக ஒருத்தி ,காத்திருந்தாள் , உனக்கு எழுதிய கடிதம் ,உன் அசட்டையினால் பாடசாலை அதிபரிடம் பிடிபட்டு ,அசம்ப்ளியியில் தலை கவிழ்ந்து நின்றது , பஸ் வண்டியால் இறங்கி நீ மழையில் நனைவாய் என்று குடையுடன் காத்திருந்தது , உன்னை ஒரு நாள் காணவிட்டால் தோழி மூலம் கடிதம் சேர்ப்பது . நீ பந்து விளையாடிய போது ,தோழியருடன் உனக்காக கர கோசம் செய்தது ,பாட சாலை இல்ல விளையாடில் ,உனக்காக நண்பிகளுடன் தோரணம் செய்து தந்தது. காலிலே காயம் பட்ட போது என் துப்பட்டாவில் ,கிழித்து தந்தது . ரசாயயான கூடத்தில் பதிவை தவற விட்டு ,மறுநாள் நீ தேடிய போது ,இரு நாள் தேட விட்டு ,மறு நாள் நான் தந்தது . ன் லேடி பைக் காற்று போனதும் ,அதை நான் உருட்ட கூடாதென்ற…

  23. [size=5]அந்தக்காலம்[/size] [size=5][/size] நம்ம ஊர் பட்டசீஷன் எங்களால்தான் களைகட்டும்! கனவில் கூட பட்டம்தான் பல கலரில் வந்து போகும்! பட்டம்-நூல்-கூவக்கட்டை-நார் என்டு அலைஞ்ச நாள் அதிகம்! "இராக்கொடி" விட்டுட்டு...நித்திரை முழிச்சு இரவிரவா "இழுவை" பாத்த ஞாபகம் இன்னும் இருக்குது! நன்றி : கவிதையின் கவிதைகள்

  24. ஒரே ஒருமுறை சிந்திப்போம் ஓரணியில் சந்திப்போம். பேதங்கள் தொலைப்போம் - எங்களுக்காக தம்மை தந்தவர்கள் பாதங்கள் தொழுது வேண்டுகிறோம் எங்களுக்குள் இருக்கும் பேதங்கள் தொலைப்போம். தாயகம் மலரவும் தமிழ்க்கொடி பறக்கவும் தம்மையே தந்து தரணிக்கு எம்மை இனம் காட்டிய தவப் புதல்வர்களின் இலட்சியம் நிறைவேற பேதங்கள் தொலைப்போம். ஒன்று பட்ட ஓர் இனமாய் ஒருங்கிணைந்து செயற்படுவோம் உத்தமர் தம் உயிராலே நெய் ஊற்றி ஒளி ஏத்தி வைத்த தீபமதை சத்தியம் செய்து காத்து வைப்போம். அண்ணன் அடிக்கடி சொல்லிடுவான் அடுத்த சந்ததிக்கு வேண்டாம் நாம் பட்ட துன்பம் என்று அவன் வழித்தடத்தில் தடம் பதித்து வரும் நாம் அடுத்த சந்ததிக்காய் எதை விட்டுச் செல்லப் போகிறோம…

    • 13 replies
    • 979 views
  25. செந்தமிழ்த்தாயி நாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி – எந்தன் நாவில் உறைபவளே செந்தமிழ்த்தாயி ஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி – நாவில் அமிழ்தூறச் செய்பவளே செந்தமிழ்த்தாயி. மன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி – உன்னை வழுத்திடவே வாழ்ந்தவளே செந்தமிழ்த்தாயி பொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி – புவி போற்றிடவே தந்தவளே செந்தமிழ்த்தாயி வெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி –பலபேர் வீழ்த்திடவே எண்ணுகிறார் செந்தமிழ்த்தாயி அம்பா நீ…

    • 0 replies
    • 810 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.