கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
ஏழு வயதுகள் மட்டுமே நிறைந்த என் மகனின் முதல் கவிதை. அழகு என்ற தலைப்பில். (இந்தியா திருச்சியில் இருந்து.) அழகு. நீல வானம் அழகு - அதில் பறக்கும் குருவிகள் அழகு பச்சைப்பசேல் மரங்கள் அழகு- அதில் மலரும் மலர்கள் அழகு உயர்ந்த மலைகள் அழகு -அதில் வளரும் தேயிலை அழகு நீண்ட கடல் அழகு - அதில் விளையும் முத்து அழகு பூக்களின் இதழ்கள் அழகு - அதில் தேனுறிஞ்சும் தேனீ அழகு பச்சை புல்வெளி அழகு - அதில் மேயும் பசு அழகு மு.ஷதுர்ஜன்.(குட்டி வல்வையூரான் )
-
- 25 replies
- 3.9k views
-
-
நிலா அக்காவின் கவிதைகள் நேக்கு மிகவும் பிடிக்கும் நேரம் கிடைக்கிற நேரம் பழையகளம் யாழ்களத்தில் போய் படித்தேன் அதில் பல கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன சோ அங்கே இருந்து தூக்கி கொண்டு வந்துட்டேன் ................நிலா அக்கா ஏசமாட்டீங்க தானே (அது தானே போட்சாச்சு பிறகு என்ன என்று கேட்கிற மாதிரி இருக்கு ) வெண்ணிலா அக்கா யாழ்களம் 2 யில் எழுதிய கவிதைகளிள் சில!! காத்திருக்கிறேன் வாழ்வின் தேடுதலுக்காக நகர்ந்த நாட்களில் என்னை நீதான் அடையாளப்படுத்தினாய் உன் மௌனத்தின் வேர்களில் பூத்திருக்கிறது என் காதல் பூ பனித்துளியை பேட்டி காணும் மேகங்கள் விண்மீனைப் பிடிக்கும் மூங்கில்களில் அவசரம்.. இப்படியான என் கனவுகளின் தொடர்ச…
-
- 5 replies
- 3.9k views
-
-
ம(ர)ணமாலை பச்சை நிறமறியா.. இறுகிக்கிடந்த மன வெற்றுநிலத்தில் வந்து விதை போட்டாள்.. வெளியில் கிடந்த விதை...இளகி.. முளைகள் விட தன்னைப் படுத்தியே.. தண்ணீர் ஊற்றினாள்.. தன் கையைக்கீறியே.. செந்நீர் ஊற்றினாள்.. காளை மனதிலே ஈர கங்கை பாய்ந்தது.. காதல் முளைத்தது.. காலம் இனித்தது.. பார்வையில் உயிரைப் பகிர்ந்து பாவையின் மடியில் துயின்று... இதழ்களை இதழ்களால் இழுத்ததும்..குளித்ததும்.. இருபது விரல்களும்.. பனியில் தளிராய்.. இறுகிக்கிடந்ததும்.. ஊரை இருட்டென ஏய்த்து உயிருக்குள் தீப்பந்தம் கொழுத்தி வைத்திருந்ததும்.. தெளிந்த நீலவானில் ஒரு விண்கல புகையின் கோடாய் கூட்டத்தில் காதல் ஜோடி..கூடித்திரிந்தது.. …
-
- 25 replies
- 3.9k views
-
-
நண்பர்கள் சமீபத்தில் லீனா மணிமேகலை எழுதிய இரண்டு கவிதைகளைப் படித்து விட்டு கட்டுரைக்கு வரவும். 1.முதல் கவிதை: நான் லீனா நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில் ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில் ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில் வாழ்கிறேன் என் வேலை என்னிரு தொடைகளையும் எப்பொழுதும் பரப்பியே வைத்திருப்பது நாடு கோருபவ்ர்கள் ஜிகாத் தொடுப்பவர்கள் புரட்சி வேண்டுபவ்ர்கள் போர் தொடுப்பவர்கள் ராஜாங்கம் கேட்பவர்கள் வணிகம் பரப்புபவர்கள் காவி உடுப்பவர்கள் கொள்ளையடிப்பவர்கள் நோய் பிடித்தவர்கள் எவன் ஒருவனும் வன்புணர்வதற்கு ஏதுவாய் யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு கருங்குழியென செத…
-
- 3 replies
- 3.9k views
-
-
மலர்களும் வெட்கி தலைகுனிந்தன அவை கண்டது உந்தன் மலர்முகம். தனிமையில் முழுநிலவும் தகிக்கிறது திருடிப்போனாய் தண்மையெல்லாம். நேற்றுப்போலவே இன்றும் இனிக்கிறது உன் நினைவுகள் காதல். அவள் திறந்து பார்த்தது கடிதமல்ல என் இதயம். தூங்கும் போதும் விழித்தே இருந்தது இடம்மாறிய மனசு. முட்கள் குத்திய போதும் வலிக்கவில்லை - அது காதல். வல்வையூரான்.
-
- 2 replies
- 3.9k views
-
-
புலிகள் எதற்குப் பின்னே இன்றையதினம் படித்ததில் கிடைத்தவை இவை புலிகள் எதற்குப் பின்னே நடந்தார்கள்..? இராவணன் தோல்விக்கு விபீஷணன் காட்டிக் கொடுத்தான்.. கட்டபொம்மன் தோல்விக்குக் எட்டப்பன்..காட்டிக் கொடுத்தான்.. பண்டார வன்னியனுக்கு அவன்சாதி காக்கை வன்னியன் குழிபறித்தான்.. சங்கிலினுக்கு இன்னொரு காக்கை என்கிறது கண்டவர் சரித்திரம்.. ஊமைத்துரை என்பதே கேள்விப்பட்ட பெயர்.. சிவன்பூமி இலங்கையின் செறிந்த வரலாற்றில் இன்னொரு பக்கம்..இது.. தமிழ் மன்னன் தேவநம்பிய தீசனின் தந்தை மூத்தசிவன்.. மூத்தசிவன் மைந்தன் தேவநம்பிய தீசன் மகன் கோத்தபாயா கோத்தபாயா மகன் துட்டகைமுனு.. சோரம்போன தமிழ்ச் சாதியின் சொந்தங்கள்.. …
-
- 1 reply
- 3.9k views
-
-
அவைக்கஞ்சா சிங்கமே! அண்ணன் பாலசிங்கமே! இதயத்தில் இடி விழுந்தது! எம் தேசத்தின் குரல் ஒடிந்தது! விடியும் வேளையில் விளக்கு அணைந்தது!-புலிக் கொடியும் இறங்கி அரைக் கம்பத்தில் பறந்தது! ஈழத்தின் அரசியல் யாப்பை எழுத வேண்டியவனே! எப்படித் தாங்குவோம் உன் இழப்பை! தமீழீத்தில் இன்னொரு சுனாமியாய் உன் இழப்பு! நீ இல்லாத பேச்சுவார்த்தைக் களம்!-அது நீர் இல்லாத குளம்! நோய் வந்த போதும்-புலிக்கு ஓய்வு மரணத்தில் தான்!-என்று சிரித்தபடியே நீ செப்பியதை! நினைத்துப் பார்க்கவே முடியவில்லை!-நான் நினைக்கிறேன் இனிப்பேச்சு வார்த்தை இல்லை! பேச வேண்டியதெல்hம் நீ பேசி விட்டாய்! பேச்சுக்கு இனி ஓய்வு-அதனால் தானோ-நீ எடுத்து விட்டாய் ஓய்வு!-நீ பேச வருகின்றாய் என்றால் எ…
-
- 23 replies
- 3.9k views
- 1 follower
-
-
வாயும் வயிறும்.. ஜம்மு பே(பி) யின் வாய்..! விடிந்த அந்த பொழுதினில் வீசிய இதமான வாசனையில் கருவாட்டின் மணம் முகர்ந்து விரிந்துகொண்டது வாய்! விரிந்த அந்தவாய் கருவாட்டு வாசம்வந்த குசினிப்பக்கம் பார்த்து ஏவறை விட்டுக்கொண்டது! பின்னர் வாய் திறக்கப் பட்டபோது வயிறு புழுங்கி எரிந்தது.. வாயை திறந்ததும்.. வாயிலிருந்த பற்கள் ஒவ்வொன்றும் பலவிதமான நாற்றத்தை உருவாக்க.. இந்த நாற்றம் வயிறுவரை சென்றுவிட்டது போலும்..! வயிறு அதனை விரும்பவில்லை..! நெடியின் கோரத்தில் தலைக்கு தலைசுற்ற அது குப்பறப்படுத்துக் கொண்டது! வாய் உடனடியாக மூடப்பட.. மீண்டும் கருவாட்டு வாசனை வர இப்போது வயிறு வாயை தவிர்த்து மூக்குடன்…
-
- 24 replies
- 3.9k views
-
-
வசந்தகாலம் ......... பச்சையம் விரிந்த புல்வெளியும் பல வா்ண அழகு மலா்களும் வீதியின் இருமருங்கும் வியாபித்திருக்க பள்ளி விடுமுறையில் மழலைகள் துள்ளி விளையாடும் பூங்காவை நோக்கி நான் என் பேரனுடன் நடைபயில இரண்டாவது படிக்கும் அவனது கையிலும் ஜ போன் வீதியில் ஓடிஓடி மூலைக்கு மூலை எதையோ தேடி அலைந்தான் அன்று தும்பி பொன்வண்டுதேடி மாட்டு வால் தடத்துடன் ஓடி விளையாடிய என் அண்ணன் தம்பிகளின் இளமைப் பருவம் நினைவில் ஊசலாட இவனென்ன தேடுகிறான் என்று எண்ணித் திகைத்து வீதியில் கவனமாக நடத்கும்படி எச்சாித்தபடி நான் அவன் சொன்னான் போக்கிமான் பிடிக்கிறானாம் காலமும் தேசமும் மாறினாலும் தேடல் ஒன்றுதான் என்று என் நினைவில் நிழலாட அவனைத்தவிர மூலைக்கு மூலை …
-
- 30 replies
- 3.9k views
-
-
நல்வரவு லண்டன் ஹீத்ரோவுக்கு நல்வரவு குடிவரவு, பொதிமண்டபம் இவ்வழி மஞ்சட் ஓட்டுக்கு இப்பால் வரிசையில் நில் கடவுச்சீட்டு? நுழைவுப்படிவம்? (கண்களால் மேலுங் கீழுந் துளாவல்) இது உன்னுடைய கடவுச்சீட்டா? விஸா எங்கு பெற்றாய்? கொஞ்சம் பொறு யாருடன் நிற்கிறாய்? முகவரி? தொலைபேசி? எத்தனை நாள் நிற்கிறாய்? ஏன்? எதற்கு? விமானப் பயணச்சீட்டை எடு கொஞ்சம் பொறு மஞ்சட் கோட்டுக்குப் பின்னால் நில், ஓரமாக அடுத்த ஆள் அடுத்த ஆள் அடுத்த... நீ வரலாம் அந்தப் பக்கமாக வைத்தியபரிசோதனைக்குப் போ சட்டையைக் கழற்று எக்ஸ் கதிர் இயந்திரத்தின் முன் நில் மூச்செடு, முதுகை நிமிர்த்தி நெருங்கி நில் கொஞ்சம் பொறு இந்தா உன் கடவுச்சீட்டு நீ போகலாம் பொதி மண்டபம் இவ்வழி…
-
- 17 replies
- 3.9k views
-
-
சமாதானத்தின் எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்ட இன்றைய நிலையின் நாளைய நோக்குக் குறித்து எழுதும் கவிஞர் புதுவை இரத்தின துரையின் உலைக்கள வரிகள் இவை நெஞ்சுக்குள் அலையெற்றிய மாயக்கனவுகள் வெளியேற நிஜமனிதர்களாக நிற்கிறோம் இப்போது. மினுங்கிய மின்சாரமற்று தொடர்புக்கிருந்த தொலைபேசியற்று செப்பனிடப்பட்ட தெருவற்று மாவற்று - சீனியற்று - மருந்தற்று ஏனென்று கேட்க எவருமற்று கற்காலத்துக்குத் திரும்புகிறோம் மீண்டும். கணினிகளையும் காஸ்சிலிண்டர்களையும் வீட்டு மூலையில் வீசிவிட்டு மெருகு குலையா மதில்களின் மின்குமிழ்களையும் விறாந்தையின் தரைவிரிப்புகளையும் மாடியிற் பூட்டிய அன்ரனாக்களையும் அசுமாத்தமின்றி அகற்றிவிட்டு பதுங்கு குழிக்குப் பால்காச்சிவிட்டோம். …
-
- 9 replies
- 3.9k views
-
-
இணைய உறவு இனிய உறவு இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு இருபத்தோராம் திகதி இதே சித்திரை மாதத்தில் இதோ பசுமையாக அவ்நினைவுகள் இன்றும் என் நெஞ்சில்; இனிமையான காலைப்பொழுதில் இயக்கினேன் கணனியை இணைந்தேன் அரட்டைக்குள் இயற்பெயர் வெண்ணிலாவாக இவளுக்காகவே காத்திருப்பதுபோல்; இன்முகத்துடன் அரட்டைக்குள் இளங்கவிக்குயிலாக நீயிருந்தாய் இதமாக கதைக்க நினைத்து இதழ்விரித்துக் கேட்டேன் இருக்கின்றீர்களா நலமா என்று இதயத்தை தொடுவது போல் இயம்பினாய் ஆம் நலமே என இலங்கையில் வசிக்கின்றேன் நான் இங்கிலாந்தில் வசிக்கின்றாய் நீ இவ்வாறாக தொடர்ந்த அரட்டையில் இருநாடுகளில் வாழ்ந்தாலும் இணைபிரியாது வாழ எண்ணி இருவரும் கலந்தாலோசித்…
-
- 15 replies
- 3.9k views
-
-
எதற்காகப் பிறந்தேன் என்று தெரியவில்லை அன்பு செலுத்த மறுக்கும் உனக்கு அன்பு செலுத்தவா? நம்பிக்கையில்லாத உன் வாழ்வில் நம்பிக்கை தான் வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டவா? யாருக்காகவும் இதுவரை கண்ணீர் வடித்ததில்லை கல்மனம் கொண்ட உனக்காக கண்ணீர் வடிக்கவா? என் எதிர்காலத்திற்காக கடவுளை வணங்கியதில்லை உன் எதிர்காலம் நன்றாக அமைய கடவுளை வணங்கவா? ஏனடா நான் இப்படி? இது என் காதலின் ஆரம்பமா? இல்லை என் அன்பின் இறுதியா? ஒலிவடிவில்..
-
- 19 replies
- 3.8k views
-
-
காவல் தேவதை மாலதி. வீரம் தந்தவள் விடுதலைப் பயணத்தின் வீரியம் சொன்னவள் எங்களில் ஓர்மத்தை விதைத்த எழுச்சியின் குறியீடு எழுதிய வரலாறு மாலதி. சுதந்திரப் பொருளுரைத்துப் பெண்ணின் பெருமையை பேறாக்கிய பெருமை பெரும் பேறாய் எம்மினத்தில் பிறந்த பெருந்தீ. கோப்பாய் வெளிக்காற்று ஈரம் சுமக்கும் இன்றுமுன் வீரம் கண்ணகை தெய்வமாய் அங்கெல்லாம் மாலதி காவல் தேவதையாய்....! காலநதி உன் கலையா நினைவோடு கரைகிறது தோழி மாலதியென்றெம் மனங்களில் மூட்டிய தீயின் அடையாளம் மாலதி படையணியாய்....! 10.10.2002 (11வருடங்கள் முதல் எழுதிய கவிதை அல்லது அந்த நேரத்து உணர்வு. மீளும் நினைவாய் ) http://mullaimann.blogspot.de/2013/10/blog-post_10.html
-
- 13 replies
- 3.8k views
-
-
தத்தித் தவழும் குழந்தை தத்தித் தவழும் கண்ணே நீ...... பூமியில் கால் தடம் பதித்து நடந்து செல்லும் அழகு வெகு தூரத்தில் இல்லை.... இன்னும் நீ தவழ்ந்து சென்று நிற்க முயற்சிக்கும் திறனைப் பார்த்து உன் எதிர் காலத்தைக் கணித்துவிட்டேன்.. நான் உன் அழகிய எதிர்காலத்தைக் கணித்துவிட்டேன்....... உன்னவள் தாய்க்கரங்களிற்கு இனியும் பாரத்தைக் கொடுக்காமல் இந்த வயதிலே பொறுப்பை உணர்ந்தபடி நீ... முயற்சி செய்கின்றாயே... தவழ்ந்து தவழ்ந்து நடக்க முயற்சி செய்கின்றாயே... நீ.. வாழ்வாய் இவ்வுலகில் நலமுடன் சந்தோஷமாக வாழ்வாய் என்றென்றும் வாழ்வாய்.......
-
- 6 replies
- 3.8k views
-
-
என் குடும்பம்..! மீசை அரும்ப ஆசை முளை விட அலை பாயும் ஆண் மனம் பெண் மனம் பொழுதொரு காதல் காமம் கண்டு கரங்கோர்க்க அற்ப சுகம் தேடிய உடலிணைவின் கதறலில் அழுகையில் உறவுகள் பிறக்கும் அதுவே குடும்பமாக.. மானிட வாழ்வு அடங்குகிறது குறுகிய விட்டமுடன் வட்டமாக..! ஓமோன்களின் ஆசைக்கு அடங்கும் சுயநலப் பொதிகளாய் எங்கும் மானிடர் மனங்கள். எல்லைகள் கடந்து.. தீட்டிய சம்பிரதாயங்கள் தாண்டி.. சிந்தனை விரித்துப் பறந்து வா... மனதை அகட்டி வா.. காண்பாய்.. அன்பின் பரிசாய் அளந்து கட்டி அன்பளிக்கப்பட்டவை.. அன்புக்கு ஏங்கும் குழவிகளாய்.. தந்தை தாயிருந்தும் அநாதைகளாய்... போர்களின் உச்சரிப்பில் உறவுகள் சிதைய …
-
- 16 replies
- 3.8k views
-
-
வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை - தினார்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்...... பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்...... இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள்... கொம்பியூட்டர், ஸ்கைப். போனிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது... தொலைதூர பாசம் செய்தே/காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்... நான் இங்கே நல்லா…
-
- 0 replies
- 3.8k views
-
-
பாலைவன ரோஜா...... கவிதை - இளங்கவி நம் வாழ்விழந்த சோகத்தில் வாயடைத்து நின்றேன்...... அழியும் நம் இனத்துக்காய் நடு வீதிக்கு சென்றேன்..... அந்த தருணங்கள் என் வாழ்வின் ரணங்களாய்..... எப்போதும் சுட்டெரிக்கும் பாலை வனங்களாய்........ அந்தப் பாலைவனத்தினிலே சோககீதம் பாடும் ஓர் சோலைக் குயிலாக..... திசையேதும் தெரியாமல் திசைமாறிப் பறக்கின்றேன்.... அந்த நெருப்பு மண்தரையில் பட்டுவண்ண ரோஜாவொன்று..... நட்பெனும் நிழல் தேடி நான் பறக்கும் திசை நோக்கி நட்புடன் சிரிக்கிறது.... சுட்டெரிக்கும் சூரியன் விட்டெறியும் கதிர்களினால்.... தொட்டாலே தீப்பற்றும் சுட்டெரிக்கும் மண் தரையில்...... வேரூன்றித் தவிக்கும் அந்த அழகான பூச்செடிக்கு..…
-
- 6 replies
- 3.8k views
-
-
காலம் யார் பற்றியும் கவலைப் படாமல் தன் சுழற்சியில் கவனமாய் இருக்கிறது. வருடம் தோறும் பல நூறு பண்டிகைகள் ஒவ்வொரு இனச் சமூகத்திற்கும் சொந்தமாக இருக்க... நம்மவரும் பல பண்டிகைகளை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது வழமை. தீபாவளி தமிழர் பண்டிகையா என்கின்ற வாதத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு அது தருகின்ற செய்தியோடு ஐக்கியம் ஆவது நன்மை பயக்கும். அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் அதை அழிக்கக் கூடிய வல்லமையோடு சக்தி ஒன்று தோன்றும். அதன் பின்னர் ஒளி மயமான வாழ்வு கிடைக்கும்... இன்றைய காலத்தில் தீபாவளி தருகின்ற செய்தி அர்த்தம் நிறைந்தது. ஏதேனும் ஒளி பிறக்குமா? எதிர்பார்ப்புடன்... இக்கவிதை... பாவம் படர்ந்த வாழ்வது தொலைந்த தீபாவளி! தீண்டும் த…
-
- 4 replies
- 3.8k views
-
-
-
- 22 replies
- 3.8k views
-
-
பாற்கடலில் பாவை குளிக்க அதைப்பார்த்துக் கண்கள் களிக்க நனைந்த தேகத்தில் அங்கங்கே மின்னிச் சிரிக்கின்றன மொட்டுக்கள்! மெல்ல மெல்லப் பாலாடை விலக சின்னச் சின்னதாய் சிந்தனை சிதற முழுதான நிர்வாணத்தின் அழகில் சொக்கிப்போகிறது மனசு! பாவையவள் பார்வையாலே எட்டிப்பார்க்கிறது அந்தரங்கம்! ஒளிந்து கிடந்த ஒற்றைத் தென்னைகூட இப்பொழுது ஒளிர்ந்து எழுந்திடுதே! கொஞ்சங்கொஞ்சமாய் முன்னேறி தன் அவசரத்தைக் காட்டுகிறாள்! ஜன்னலைத் திறந்துவைத்தால் என் கட்டில் வரை வருவாள்! காலையில், அவள் கணவன் வரும்வரைக்கும் என் இரவு.... இவளோடு கழியும்! அழகான, இவள் தேகம் புணர்வதினால் என் இதயம்.... இதமாகக் களிக்கும்! காலடியில் கிடக்கும் ஈரமான புல்வெளியை காலையில் பார்க்கும்போது... நேற்ற…
-
- 9 replies
- 3.8k views
-
-
-
- 2 replies
- 3.8k views
-
-
அன்னை மடிதொட்டு தந்தை கரம்தொட்டு மாமன்உறவைத்தொட்டு மாமியின்பாசம் தொட்டதால் அன்பே உனைத்தொட்டு இன்பம் எனைத்தொட்டு மழலைகள் வாழ்வைத்தொட்டு சொர்கம் எனைத்தொட்ட வேளை சோதனை நமைத்தொட்டு இறப்புக்கள் வாழ்வைத்தொட்டு பிரிவுகள் எனைத்தொட்டதால் இதயம்வலியைத்தொட்டு கண்கள் நீரைத் தொட்டு கவிதைசோகம்தொட்டு தவிப்புகள்எனைத் தொட்டு துடிக்கின்றேன் உன்னால் இதுதான் விதியா?
-
- 24 replies
- 3.8k views
-
-
யோசி....நேசி....![/ அந்திசாயும் இதமான நேரம் மந்திகள் தொங்கும் மரநிழலின்கீழ் உன் தோளில் என் தலைசாய்த்து பன்னாட்டு கதை பல பேசி.... இனிமையான அப்பொழுதில் இணைந்த நம் இதழ்களோடு நாசிகள் உரசியவேளையில் நங்கையிவள் சட்டென கூசி... இன்னும் எத்தனையோ சில்மிசங்கள் இவையனைத்தயும் ஒருநொடியில் மறந்ததுமேனோ மன்னவனே மனம் திறந்து நீ யோசி.... என் உடல் உருக உருக உன்னையே தினமும் சுற்றி சுற்றி கன்னக்குழிகள் தெரிய சிரித்து வந்த வெண்ணிலாவை ஒருகணம் யாசி... பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள் விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து தன்னந் தனிமையில் அல்லாடும் கன்னியவளை வா வந்து நேசி...
-
- 23 replies
- 3.8k views
-
-
உன்னை நினைக்க மறந்த இரவொன்றில் நிலவின் துணை கொண்டு எழுதிய கவிதை இது தயவு செய்து வாசித்துவிடாதே உன் கண்ணீரை ஏந்தினால் என் கவிதை இறந்துவிடும் காலங்கள் கரைந்தாலும் கரை சேராத நதியாய் தேங்கியபடியே கிடக்கிறது என் காதல் உன்னால் காதல் எனும் வானத்தில் நாமிருவரும் பறந்து திரிந்த காலங்களை எண்ணியபடியே சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான் என் காதல் உன்னை மட்டும் காதலிக்க கற்றுத்தரவில்லை உன்னைத் தவிர யாரையும் காதலிக்க கூடாது என்பதையும்தான் கற்றுத்தந்தது உன் இரவுகளின் தாலாட்டு எது என்பதை நானறியேன் ஆனால் என் ஒவ்வொரு விடியலின் ஓசையும் என் கவிக்குழந்தையின் அழுகுரல்தான் உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீ என்னோடு இருந்தபோது ஒவ்வொர…
-
- 6 replies
- 3.8k views
-