கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5133 topics in this forum
-
இரத்தம்தோய்ந்த குரூரச்சிவப்பான கொள்ளிக்கண்கள் பார்வைகளே படுபாதகம் செய்யுமாற்போற் சுவாலைப்பார்வைகள் தரவையெங்கும் பிச்செறியப்பட்ட பிணப்பாகங்கள் வல்லுறவினால் சிந்திய விந்துக்கள் வழியெங்கும் செங்குருதி வழிந்து காய்ந்த தேகங்களை ஆட்காட்டிக்குருவிகள் அடையாளம் கண்டுகொண்டாற்போல் அமைதியாய் இருந்தன உள்ளம் துடித்தது பற்கள் நரும்பின மீசைகள் துடித்தன தோள்கள் முறுக்கேறின எல்லாமே கனவானது ஆட்காட்டிகள் எல்லாமிழந்து அனாதரவாய் நின்றன. அவற்றின் உணர்வுகள் நம்மையும் தொற்றிக்கொண்டது பழி வாங்கும் நேரம் இதுவல்ல பார்த்து நடக்கவேண்டிய நேரம் ஏற்றத்தைக் கைவிட்டு ஆற்றைக்கடக்க வேண்டும் ஆற்றுப்படுத்த வேண்டியது அதிகம் இருக்கிறது எங்கோ பனிமலைத் தேசத்தில் இருக்கும் நண்பன…
-
- 4 replies
- 910 views
-
-
அடர்ந்த பனிக் கூதலில் நட்சத்திரங்களின் மெல் ஒளியின் படர்தலில் இரவின் நிசப்தத்தை இரசித்துக்கொண்டு இரண்டு இதயங்கள் தொலை தூரப் படபடப்பில் இமைகளை மூடிவிட சாளரம் வளியே முத்மிடும் சாரல் காற்றின் ஸ்பரிசத் தக தகப்பில் மூச்சுக்காற்றின் சுகந்தம் அறிதல் உற கொம்பொன்றில் கொடிபடரும் பேரழகாய் கரை தடவும் மெல்லலையில் மணல்க் கோடாய் மாண்ட நடு இரவின் பொழுதுகள்தான் பொய்த்தனவே ஏக்கத் துடிப்பான எண்ணங்கள் இணைந்துவிட
-
- 1 reply
- 647 views
-
-
முன்னைக் கதைகளில் ஐம்புலன்கள் அடக்கி காட்டில் கிடந்தனராம் முனிவர் நாட்டு நடப்புக்களின் கதைபேச்சு அற்று ஐம்புலன்கள் ஒடுக்கி அவை நலிந்தடங்க முக்கிக் கிடக்கிறார் முன்பள்ளியில் புலமைப்பரிசிலி;ல் போட்டிப் பரீட்சையில் பல்கலைப் புலமையில் நிலத்தடியில் நீரிற்கு நடப்பது அறியா அறிவு விருது பெற்று வாழ்த்துப் பெற்று படபடக்கிறது பெருமைக்காற்றில் சி. ஜெயசங்கர் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115649/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 614 views
-
-
மேய்ப்பன் தடியோடு நடக்கிறான். தடி, ஆடுகளைத் திருப்பும் என்றும் அதுவே தன் பலமென்றும் இன்னும் இன்னும் நினைத்திருக்கிறான். மேய்ப்பனை மேய்க்கும் மேய்ப்பன் மேய்ப்பனை நம்பியதாக என்றுமே சொல்லியதில்லை. தடியைப் பற்றி மட்டும் பேசியிருக்கிறான். பல ஓநாய்களிடம் இருந்து காலனியைப் பெற்ற மேய்ப்பன் ஆடுகளை நோக்கி எப்போதும் பேசியதுமில்லை பசி தீர்க்கும் வழியில் அழைத்துக் கொண்டு சென்றதுமில்லை. ஆடுகளின் குரலில் பேச மட்டும் கற்றுக்கொண்டான். தன்னை மேய்க்கும் மேய்ப்பனோடு இரவுப்போசனங்களில், ஆடுகளின் கருகிய தசைகளை மென்றுவிட்டு கனவுகளைத் துப்பி விடுவான். ஆடுகள் தங்கள் முன் கையளிக்கப்பட்ட தடியை மட்டுமே நம்பின.. நம்பிக்கொண்டு இருந்தன மேய்ப்பனை ஏறெடுத்…
-
- 1 reply
- 1.1k views
-
-
குளிர்காலத்தின் துயர் சுமந்த கிளைகளில் கனவுகளை எழுதுகிறது சாம்பல் பறவையொன்று, இனிவரும், வசந்தகாலத்தின் இலைகள் பறவையின் கனவுகளை மொழிபெயர்க்கவும், இன்னொரு பறவை சுமந்து செல்லவும் கூடும், அந்தக் கணங்களில், அந்தப் பறவையும் மரமும் என்ன பேசிக்கொள்ளும்...... கனவுகளை வைத்திருந்து கையளித்ததிற்கு நன்றி கூறிப் பிரிந்து செல்லுமோ.. கிளையின் துயர் மீது கண்ணீர் சிந்திக் கழுவிப் போகுமோ.. கூடுமுடைந்து அங்கேயே தங்கிவிட துணியுமோ.. சாம்பல் பறவையின் கண்களில் இருந்து பெருவெளியில் கலந்தது அரூபமொன்று, கிளைகளில் இருந்து வழியத்தொடங்கிய காலத்தின் துயர் பறவையின் கனவுகளை மூடிப் பெருகத்தொடங்கியது. யாருக்குத் தெரியும் இனிவரும் வசந்தகாலத்தில் …
-
- 0 replies
- 637 views
-
-
கணவன் கடிந்து கொண்டான் மனைவியை எத்தனை தடவை சொன்னேன், அந்த கறுப்புப் பை கவனம் என்று மனைவி கவலைப்பட்டாள், அடடே அவர் சொல்லியும் நான் மறந்து விட்டேனே... காதலன் இறுக ஒரு முறைஅணைத்துக்கொண்டான் அவளோ அவன் இதழில் அழுத்திப் பதித்தாள் இன்னும் 10 நாட்கள் கடற்கரையில் உன்னை என்னசெய்கிறேன் பார் ரகசியம் பேசினாள் ... இன்னும் ஒருவன் கண்ணாடியை சரிசெய்து கொண்டு தொலைபேசி செய்தியில் மூழ்கிப் போனான் நாளைய நாள் கண் முன்னே நடமாடியது, அலுவலகத்தில் முக்கிய மூன்று சந்திப்பு, நண்பனை காண வேணும், பழைய கதைகள் பேச வேணும் அவன் விரும்பும் மதுப் புட்டி வாங்கவேணும் ... முதியவர் மனதுக்குள் பேசிக்கொண்டார், நேரத்துக்குப் போய்விட்டால் மகனுக்கு சுலபம் மருந்துகள் வாங்கவேணும், மனைவியும் பாவம்…
-
- 16 replies
- 1.9k views
-
-
சாம்பலில் இருந்து மீண்டும்.. எழுத்து பறக்க நான் ஒன்றும்.. பீனிக்ஸ் இல்லை.. என் வலுவை திரட்டி... பாய்ந்து போகக் கூட .. பந்தைய குதிரையும் இல்லை.. சிறுக சிறுக சேர்த்து.. கட்டி எழுப்பிய தேன்கூடு.. என் காதல் வீடு ... நீ ஒற்றையாளாய் கல்லெறிந்து.. போக எப்படி மனசு வந்தது உனக்கு .. வரிகளில் ஆழம் புகுத்தி .. சொல்களில் ஜாலம் காட்டி .. கவிதை புனையக் கூட .. கற்று கொள்ளவில்லை நான் .. உன் உதட்டில் நாண் ஏற்றி .. வார்த்தை அம்பை இழுத்து .. எப்படி குறி தவறாது என் .. இதயத்தில் செலுத்தினாய் நீ .. உயிர் ஊசல் ஆடும்போது கூட .. என் மனவானில் நீ.. ஊஞ்சல் ஆடுகிறாய் காதலே .
-
- 5 replies
- 903 views
-
-
எம்.எஸ் சுப்புலட்சுமிக்கு வாலியின் இரங்கல் கவிதை எம்.எஸ் .சுப்புலட்சுமி காலமான போது ,வாலி எழுதிய உருக்கமான கவிதை ஒன்று ! நடுத்தமிழ் நிற்கிறது நடுத்தெருவில் .... தன் விலாசத்தை தவறவிட்டு ; அதன் - திருவிழி உகுக்கிறது தீர்த்தச் சொட்டு ! எம்.எஸ் ஏறிவிட்டார் வாகனம் ; எல்லோர்க்கும் இருந்தென்ன ? எமனுக்கு இல்லையே ஏழிசை ஞானம்! இழந்து நிற்கிறது இசைக்கலை - தான் தங்கியிருந்த - எம்.எஸ் என்னும் இன்ஷியலை! ஓதம்சூல் உலகின்காண்- ஓர் ஒப்புலட்சுமி-இல்லாதவர் சுப்புலட்சுமி ; தூய வாய்மலரால்- இசைத் தேனைத் துப்புலட்சுமி என்னணம் எண்டிசை-இனி பயணிக்கக் கூடும் -நம் பண்டிசை? எம்.எஸ் என்பது சங்கீத சாஸ்திரத்தின் ப…
-
- 1 reply
- 2.4k views
-
-
-
- 10 replies
- 952 views
-
-
மீதமின்றி கொல்லம்மா கடலம்மா `````````````````````` பெற்றால் தானே பிள்ளையின் பெருமை தெரியும் என்பார்கள்,, உண்மைதான் நாங்கலெல்லாம் உனக்கு தெருவில் கிடந்தது கரையை சேர்ந்தவர்கள் தானே அது தான் உயிர் வாழ உன் மீது வலை வீசிய எம் உயிர் பறிக்க அலை வீசினாய் அழித்த நீ எம்மை அடியோடு அழித்திருக்கலாமே - ஏன் அங்கொன்று இங்கொன்று விட்டு வைத்தாய் நீ அழியா வரம் பெற்றவள் என்ற திமிரிலையா எம்மை வதைக்கிறாய் தாயே ??? கொன்றுவிடு எம்மை மீதமின்றி கொன்றுவிடு, கொன்று விட்டு திரும்பி பார் உன்னை கண்டு கொள்ள ஒரு நாய் கூட வராது, அன்றாவது உணர்வாய் அர்த்தமற்ற உன் செயலின் விளைவால் நாம் பட்ட வேதனையை......... எழுத்து -27/12/2012
-
- 7 replies
- 1.1k views
-
-
ஒரு மார்கழி இருபத்தாறில்தான், பேராறுபோல் பெருக்கெடுத்தாய்.... எம் ஊருக்குள்ளே! பொறுமையாய் பொறுத்தாழ்ந்த பூமித்தாயை... நீ கண்ணீரால் நனைத்தது அன்றைக்குத்தான்! சொல்லாமல் கொள்ளாமல் வந்து, எங்களையெல்லாம் கொன்று போட்டாய்..! இத்தனைநாளாய் உன்னில் அள்ளியெடுத்த செல்வத்தையெல்லாம், ஒற்றைநாளில் மொத்தமாய் நீ அள்ளியெடுத்தாய்..!! கடல்தாயே... மறந்துவிட்டாயா? சுனாமியென்றால் எமனின் பினாமியென்று அன்றைக்குத்தான் தெரியும்! என்றுமே...இயற்கையைப் போற்றினோம்...! அன்றுதான் உன்னைத் தூற்றினோம்...!! என் பாட்டன் உன்மேல் வலைவீசினான், என் அப்பன் உன்னில் தூண்டில் போட்டான், எம் பிஞ்சுக்குழந்தை.... உனக்கு என்ன செய்தது? நீ அலையலையாய் அடிக்க... நுரைக்குமிழி பிடித்து விளையாடிய பிஞ்சுக…
-
- 14 replies
- 1.8k views
-
-
யார் மீட்பாரோ! --------------------- எம்மை அழித்த இன்னொரு ஆமியாய் வந்த சுனாமியே எந்தனை உயிர்களை காவு கொண்டாய்! சாவுகள் சூழ்ந்து சாய்ந்த மனங்களை சாவுகளாலே மீண்டும் சாய்த்தாய்! ஆண்டுகள் கடந்து போகின்ற போதிலும் எம்முடன் வாழ்ந்தவர் நினைவுகள் வாழுமெம்முடன் என்பதை அறிவே அறியுமல்லவா! துயரங்களாலே நிறைந்த வாழ்விலே தோள்கொடுத்த எம் மீட்பரும் இன்றி தொலைகின்ற வாழ்வினை யார் மீட்பாரோ! மீடபராய் யாரும் இல்லாவிடினும் துட்டராயேனும் இல்லாதிருக்கும் நிலையொன்று வேண்டும் நிம்மதிகான வழியொன்றும் வேண்டும் வலிகளைக் கடந்து நிமிர்ந்திட வேண்டும் உலகிலே தமிழினம் நிலைபெற வேண்டும்! சுனாமியில் சாய்ந்த உறவுகள் நினைவோடு கடலிலே மீண்டும் இறங்கியது போல் கரைகளைத் தேடப் புதிய திசைகளைத் தேடுவோம் நாமே!
-
- 0 replies
- 576 views
-
-
வலைப்பூவெனும் வலையால், இணையத்தின் துணையால், கடலலைபோல் எழுந்தேகி... எண்ணக்கடலின் கரை தேடலாம்! வண்ண வண்ண வடிவங்களாய்... எண்ணமெல்லாம் வடிக்கலாம்! சின்னச் சின்னச் சித்திரமாய்... எழுத்துக்களைச் செதுக்கலாம்! காகிதத்தில் எழுதி, கடிதங்களாய் அனுப்பி, காத்திருந்து காத்திருந்து... பார்த்திருக்கத் தேவையில்லை! இணையச் சுவரில் கிறுக்கிட... வலைப்பதிவொன்று போதுமே! உலகமெல்லாம் பகிர்ந்திட... வலைப்பூவுலகும் விரிந்திடுமே! விசைப்பலகை தடவி விரலால், வலைப்பூவில் தூவி வினாடிகளில்... உலகமெங்கும் மலர்ந்திடுமே - உங்கள் எண்ணங்கள் வண்ணங்களாய்...! எண்ணங்களை எழுத்துக்களாய்... படைப்பவனும் பிரம்மன்தான் ! வண்ணம் தரும் வார்த்தைகளை... வடிப்பவனும் ரவிவர்மன்தான் !! வலைப்பூவை உருவா…
-
- 2 replies
- 782 views
-
-
எழுத்தில் நிலைக்க முன் படத்தில் பதிய முன் எழுந்த வேகத்தில் கரைந்திடும் மன அலைகளே..! கலியாணம் கட்டி காண வேண்டியதை கண நேரத்தில் காட்டி மறைகிறீர்.. மனததை தவிக்க விடுகிறீர்..! காதலிக்க நினைப்பவரை கட்டியணைக்க வைக்கிறீர் மீண்டும் தவிக்கையில் தலையணையை தருகிறீர்...! நடந்ததை மறந்தாலும் நினைவுக் கிடங்கதை கிண்டிக் கிளறி விடுகிறீர் நன்றும் தீதும் இரட்டையராய் தருகிறீர்..! கலரா.. கறுப்பு வெள்ளையா வகை வகையாய் போகாத காட்டிலும் போக விடுகிறீர் ராக்கெட் இல்லாமலே எட்டாத வெளியிலும் பறக்க விடுகிறீர் விழுந்து சாகவும் செய்கிறீர்..!! அலறி அடிக்கும் கணங்கள் போக அடித்து வீழ்த்த நினைக்கும் எதிரியை அடிக்க வைக்கிறீர் அலைகள் கடந்து நடுக்கடலில் நிறுத்தியும்…
-
- 4 replies
- 679 views
-
-
பறவைகளின்றி வானம் இறந்து கிடக்க, இலைகள் கழற்றிய கிளைகள் காற்றோடு குலவுகின்றன, மதில்களில் பூனைகள் இல்லை. வாசல்களில் யாதொன்றினதும் அரவங்களும் இல்லை. அறைகளில் ஒளிரும் மின்குமிழ்கள் கண்ணாடி யன்னல்களில் ஒளியத்தொடங்குகின்றன. குளிர் புணர்ந்து அந்தி கவிழ்ந்துவிட்டது. இனியிருள் சூழ்ந்து அமைதி வளர்ந்துவிடும். மூச்சுக் காற்றில் வெப்பம் தெறிக்க, உள்ளங்கைகளில் குளிர் குத்தும். இரண்டுபட்டுக் கிடக்கிறது தேகம். மனதும், கிடுகுவேலிப் புலுனிக்குருவி நான் இந்தப்பனிக் குளிக்கும் மரங்களில் எனக்கேது மறைவு. செயின் நதியும் ஈபிள் கோபுரமும் மோனோலிசாவின் முகமும் உலகின் அழகான ராஜபாட்டையும் டயானாவின் கார் மோதிய தூணும் கடிகாரத்தின் இலக்கங்களாகிடச் சுற்றிக்கொண்டிருக…
-
- 11 replies
- 1k views
-
-
மறுவாழ்வு பச்சை வர்ண ஆடைகட்டி பல நிறத்தில் மலர்கள் சூடி பார்ப்பவர்கள் நெஞ்சத்தினை பறித்திழுக்கும் அழகிகள் காலம் செய்த கோலத்தால் கட்டழகு தளர்ந்து பூவிழந்து பொலிவிழந்து போர்த்திருந்த போர்வை கழன்று ஆண்டிக்கோலம் கொண்டு: அல்லவையாய் நின்றபோது வெள்ளாடை கொடுத்து விதவைக்கோலம் ஆக்கினான் ஒருவன். இப்படி அமைந்ததே நிலையென்று ஏக்கமாய் பார்த்தேன் வேடிக்கை பார்க்காதீர்; - நாங்கள் விதவையாக்கப்பட்டவர்கள் பூத்துக் குலுங்கி புதுப்பொலிவு பெற எங்களுக்கு காலம் கைகொடுக்கும் வரை காத்திருக்கிறோம்; என்றார்கள் செண்பகன் 23.10.13
-
- 4 replies
- 831 views
-
-
பெரும் குரலெடுத்துப் பாடிக்கொண்டிருக்கிறது இலையுதிர்காலத்தின் கடைசிப் பாடலை நீண்டவால்க் குருவி. வானத்தின் சோகங்களையும் வீதியின் தனிமைகளையும் பழுத்த ஊசிஇலைகளின் துயரங்களையும் துணைக்கழைத்து நேசிப்பின் வரிகளை இழைத்துக் கூவியழுகின்றது. சேர்ந்து இசைக்கும் குரலொன்று வருமென்ற தேடலில் நியமம் தப்பாத இடைவெளிகளை சலிப்பின்றி விட்டு காத்திருக்கவும் செய்கின்றது. நீண்டவால்க் குருவியின் ஒற்றைக்குரலில் சூரியன் மரணிக்கத்தொடங்குகிறான். இருளின் பெருக்கத்தொடு இயைந்து மௌனத்தின் இடைவெளியும் நீண்டு கனக்கத் தொடங்குகையில், அந்த இடைவெளிகளின் நிசப்தத்தில் மூச்சின் ஒலிகளை நிறுத்திக் காவலிருக்கத் தொடங்குகிறேன். இன்னொருகுரல் எங்காவது ஒலித்துவிடாதா.... நீள்கின…
-
- 18 replies
- 1.6k views
-
-
எங்கள் தேசத்தின் குரல் ஓய்ந்திடவில்லை ஆண்டுகள் எட்டு ஓடி மறைந்ததா?- எங்கள் தேசத்தின் குரல் ஓய்வெடுத்து ஆண்டுகள் எட்டானதோ? அன்பே மூலதானமாக அடக்கமே ஆளுமையாக அறிவே ஆயுதமாக தமிழினத்தின் குரலை தரணிக்கு எடுத்துக் கூறிய எங்கள் அன்பு பாலா அண்ணா உலகத்தைவிட்டு பறந்தோடி ஆண்டுகள் ஏழு ஆனதோ? உண்மையுள் உண்மையாய் உண்மையே உணர்வாய் உண்மையே இவராய் உண்மையாய் வாழ்ந்த உயரிய மகன்-இன்று எம்மைவிட்டு சென்றதை இன்னும் நம்ப மனம் மறுக்கின்றது உலகின் பார்வையில் இவரின் உறக்கம் சாவு எனச் சொல்லப்படலாம் ஆனால், உலகத்தமிழர் உளங்களில்- இவர் என்றும் வாழ்ந்திருக்கும்; மனிதன். தமிழின விடிவுக்காகவே இறுதிவரை உழைத்த உறுதியான போராளி இவர். பாழும் நோய் வந்து பாடையேறும் நாளை இரக்கமின்றி தெரிவித்தபோது பத…
-
- 2 replies
- 550 views
-
-
உயிர் நீட்சி குடித்த விஷம் அழைத்து வந்த மரணம் அறைக்குள் நட்பு சம்பாஷணையொலிக்க பேச்சு முடியட்டும் போவோம் என்று பொறுத்திருந்தது மிச்சமிருந்ததை இன்னொரு முறை பருகி துரிதப்படுத்தினேன் விளைவுகளை அது என்னவென்றறியாத நண்பன் எனக்கும் என்று கை நீட்டவில்லை கேட்டிருந்தாலும் உன் பங்கும் சேர்ந்துதான் தீர்ந்தது என்றிருப்பேன் நொறுக்குத் தீனியிருந்தால் நேரம் போகுமென்றெண்ணி மரணம் உலவுகிறது குறுக்கு நெடுக்காக தற்காலிகமாய் விடைபெற்று நண்பன் அகன்றான் உத்வேகமாய் வந்த மரணம் தன் தொழில் பெட்டியை திறக்கும்முன்பு தட்டப்பட்டது தாழிட்ட கதவு "இங்கே என் நண்பன் இருக்கிறானா?" நிலை மறந்து வாய் தவறி மரணமே பதிலிறுத்தது "இருக்கிறான் இருக்கிறான்" உள்ளேயிருந்து கேட்ட குரல் உன்னுடை…
-
- 9 replies
- 5.8k views
-
-
எங்கள் தலைவிதியை நாமே சிங்கமும் கருநாகங்களும் குள்ளநரிகளும் ஒருபுறம், பொல்லாத மலைப்பாம்புகளுடன் இன்னுமொரு சிங்கம் மறுபுறம், என்ன செய்வோம் நாம்? எங்கள் குரல்வளையை நெரிக்க, எங்கள் விழிகளை குத்திக்கிழிக்க, எங்கள் வாழ்விடங்களை பறித்தெடுக்க இந்த கொடிய மிருகங்களில் ஒன்றை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமாம். தெரிவு செய்ய நாங்கள் செல்லாவிடில் எமக்காக அதையும் அந்த குரூர விலங்குகளே செய்துவிடும். இந்த அவலத்திலிருந்து மீட்க, எவருமே எமக்காக இல்லை. எங்கள் விதியை நாங்கள் தீர்மானிக்க முடியாதாம். இந்த உள்நாட்டு விலங்குகளும் வெளிஉலக வல்லூறுகளும் ஓநாய்க் கூட்டங்களும்; தான் எங்கள் வாழ்வை பற்றி தீர்மானம் எடுப்பார்களாம் அப்படியானால் நாம் யார்? எமக்காக பேச எவருமில்லையென்றால் எங்களை…
-
- 7 replies
- 719 views
-
-
முகடு இதழ் (பிரான்ஸ்) இதுவே எனது கன்னி கவிதை(அச்சில்). இதுநாள் வரை என்னை மெருகேற்றிய யாழ் உறவுகளுக்கும் அச்சில் கொண்டு வந்த முகடு இதழுக்கும் எனது நன்றிகள்.
-
- 19 replies
- 1.5k views
-
-
இணையதள வரலாற்றில் முதன்முறையாக 400க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க ஒரு அரிய வாயப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளை தினமலர் இணையதளம் நேரடியாக ஒளிபரப்புகிறது. சென்னையில் நடைபெறும் மார்கழி மாத இசை கச்சேரிகளை அடுத்த மாதம் முதல் வாரம் வரை உலகம் முழுவதும் உள்ள இசை ஆர்வலர்கள் கண்டு, கேட்டு ரசிக்கலாம். உலகம் முழுவதும் உள்ள 210க்கும் மேற்பட்ட நாடுகளிலும் தமிழர்கள் தினமலர் இணையதளத்தை தொடர்ந்துபார்த்து, படித்து வருகின்றனர். இந்த நேரடி இசை நிகழ்ச்சி ஒளிபரப்பை அனைவரும் கண்டு களிப்பதுடன் உங்கள் நண்பர்களுக்கும் இது குறித்து எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கின்னஸ் சாதனை: சென்னையில் கடந்த 50 ஆண்டுகளாக இசை…
-
- 0 replies
- 1.5k views
-
-
தொலைவே இல்லாத பின்னிரவொன்றில், விடிகாலைப் பொழுதினைத் தொலைத்துவிட்டு, நிரந்தரமாகிப்போன கும்மிருட்டில், சத்தமே இல்லாமல், சந்தம் பாடுகின்ற குயில்களின் குரல்வளைகளை அறுத்தெறிந்து, கோட்டான்களைக் கூப்பிடுவோம் வாருங்கள்! முகவரி இல்லாமலே பூபாளம் பாட! 10/dec2014
-
- 2 replies
- 706 views
-
-
ஆயிரம் கால்களுடன் மரஅட்டையொன்று, மனதினுள் ஊர்ந்து கொண்டிருக்கிறது சில காலங்களாக....!!! பரந்த வெளிப்பரப்பின் சன நெரிசலின் எதோவொரு மூலையில் முகமறியாத முகமொன்றின் புன்னகைக்காக தவமிருக்கிறது.....!!! தாழ்வாரத்தை நோக்கி பாய்ந்து முடிந்த, மழை வெள்ளத்தின் ஈரலிப்பை நோக்கி கால்கள் நகர்கின்றன.....!!! பாதையில்லாப் பயணமொன்றின் நடுவில், வழிதவறிய பாதையின் பாதச்சுவடுகளை தேடி கண்கள் பணித்து கலங்குகின்றன....!!! பாலைவனப் பாறையொன்றின் அடியில், இதிகாசங்களாய் கிடந்தது போல் இதயம் கணக்கிறது....!!! தேடிக் கிடைத்த பொருளை தொலைத்து விட்ட இயலாமையின் வலியை இன்றியமையாததாக்கி கொள்கிறது காலம்....!! மகரந்த தேனை உண்டு புசித்த வண்டை, பூக்கள் இல்லாத தேசத்தில் பறக்க விட்ட வெறு…
-
- 13 replies
- 1.7k views
-
-
பெண்ணே.. பெண்ணே... காதல் கொண்டேன் உந்தன் கண்ணில் மின்னல் கண்டேன் உன்னால்தானே தூக்கம் மறந்தேன் விண் மேகம்போல நானும் மிதந்தேன் செல்லமாய்ச் சிரிக்கிற தேவதையே...! வெல்லமாய் இனிக்கிறாய் மனசுக்குள்ளே...!! கனவில் கன்னங் கிள்ளிப் போறவளே...! என் நினைவை அள்ளிக்கொண்டு போறாய் புள்ள...!! வெண்நிலவாய் நெருங்கி வருவாயா...? காதல் சொல்லித் தருவாயா? இல்லை... வேண்டாம் என்று மறைவாயா? என் இதயம் திருடித் தொலைவாயா? கண்ணே.. கண்ணே... என்னோடு சேர்ந்துவிடு ! என் காதல்.... நீ என்று... சொல்லிவிடு ! நீ அன்றி நான் வாழும் என் வாழ்வில் அர்த்தங்கள் இல்லை என்று... புரிந்துவிடு ! வாழ்வில் வண்ணக் கோலம் நீ போட... இதயம் சின்னச் சின்னத் தாளமிட... என் பக்கம் ஓடி நீ வாடி…
-
- 11 replies
- 1.8k views
-