Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஊர விட்டு வந்த நானும் ஊரை பற்றி எண்ணும் நேரம் உண்மைகளை சொல்ல போனால் ஊருக்குள்ள ரொம்ப சோகம் 5லட்சம் உழைச்சாலும் 5காசு கையில் இல்ல காருக்குள்ள திரிஞ்சாலும் கால்கடுப்பு போகவில்ல நாலுபேர தெரிஞ்சாலும் நல்லதொரு வாழ்க்கையில்ல தாய்கொடுத்த பாசமிங்க தந்துவிட யாருமில்ல. பள்ளி நண்பன் தூரம் இல்ல தேடி போக நேரம் இல்ல துள்ளி விளையாடவில்ல தூக்கமது போதவில்ல கூலி வாழ்க்க கூட அது ஊர போல இல்லடா கேடு கெட்ட வாழ்க்க வெளிநாட போல எங்கடா சொல்லி பாரு ஊரில் சொன்ன வார்த்த கூட போலிடா சொந்த பந்தம் நேரில் என் தாய பார்த்து கேலிடா காதலிச்ச கன்னி அங்க கண்ணீரோடு நானுமிங்க என் மனசு ஏங்குதிங்க மன்மதன்னு பேருதாங்க காதலிச்சா கூட அவ காச தான பாக்கிறா காதலது வந்தா நீ மனசுக்குள்ள பூட்டுடா ஆச…

  2. குழந்தைகளுக்கான பாடல்களை தொகுத்த பதிவு யாழிலிருக்கோ? யாழில் தேடிப்பாத்தன் ஒன்றும் அம்பிடவில்லா. நான் எதிர்பாக்கிறது, நிலா நிலா ஒடிவா நில்லாமல் ஒடிவா மாதிரி .....

    • 5 replies
    • 4.1k views
  3. யார் வீட்டுப் பிள்ளை இவள்? அடி பெருத்து... இடை சிறுத்து... வளர்ந்து நிற்பவளின்.... அழகு மேனியில் தெரிகிறது, பருவ வளர்ச்சியின் படிமங்கள்! அவளின் பருவக் குலையைப் பார்க்கப் பார்க்க... தாகம் எடுக்கிறது தானாக...! தேகச்சூடு அடங்கும்வரை பருகவேண்டும் அவளின் இள நீரை! வீசுகின்ற காற்றிலே அழகாய் மெல்ல மெல்ல அசைகிறது அவள் பச்சைக் கூந்தல்..! இளங்குருத்தின் வாசம் வந்து வெட்கத்தோடு அழைக்கிறது ஏறி வா என்று...! அவள் இடை அணைத்து... அவளுடல் மீதேறி... யாரோ கட்டியதை திருட்டுத்தனமாய்... மெல்ல அவிழ்த்திறக்கி சத்தமின்றி மொத்தத்தையும் ரசித்து...குடித்து...வெறித்து.... திகட்டும் போதையில் திளைத்து, பின் களைத்துப் போக..... அவள் தோப்பில் அவளோடு, கொஞ்ச நேரம் தூங்கினாலும்…

  4. நீண்ட நாட்களுக்கு முதல் யாழ் கள உறுப்பினரும் சிறந்த கவிதாயினியுமான ஜேர்மன் மண்ணை சேர்ந்த அன்புக்குரிய நண்பி நித்தியா எழுதியது நளினமேனி நவரசப் பந்தல் இனிய மெய்யான பொய் பொய்யோ மெய்யோ என அய்யோ என்னை மலைக்க வைக்கும் இரு குன்றுகள் நெய்யாய் எனை உருக்கி ஒரு கை போதாமல் என் இரு கைகளால் அள்ளி பருகப் பருகத் தாகம் பெருக முயல முயல முயற்சி நீள அகல அகல அனைத்தும் அகன்று ஒடுங்கி ஒன்றாய் நீயும் நானும்... நெருங்கி நெருங்கி நெருப்பு மூட்டி மூட்டிய தீயில் முழுவதும் தீய்த்து தீய்ந்து பயனாய் மூளும் தீயை தீயாய் மாறி யாண்டும் எரித்து எரிந்தது சுட்டு சூடு பறக்க... என் உடலில் உரசி உசிரை கரைத்து கரைந்து இரண்டற இன்றே கலந்த…

    • 10 replies
    • 699 views
  5. கரை தேடும் கட்டெறும்பாக வாழ்கைக் கடல் மீது நம்பிக்கையோடு கரைசேர நான் மிதக்க இடையில்... அலை மீது துரும்பாக எனைக்காக்கும் கப்பலாக நீ வந்தாய். காதல் எனும் கயிறு போட்டு தொற்றிக் கொண்டேன் உன்னிடத்தில். நீயோ... பத்திரமாய் எனை கரை சேர்ப்பாய் என்றிருக்க காதல் கசந்ததென்று.. நடுக்கடலில் தள்ளிவிட்டாய். பரிதவித்தே போனேனடி. நம்பிக்கை தகர்ந்து..!! ஈவிரக்கம் இல்லாதவளே உன்னை ஓர் நாள் கடல் நடுவே திமிங்கலம் ஒன்று கவிழ்க்குமடி... அப்போதும் கட்டெறும்பாய் நான்.. அலை மீது உனக்கு உதவிடுவேன் நிச்சயம் பழிவாங்கேன்..! அது உன்னுடன் காதலுக்காய் அல்ல என்னுடன் உள்ள ஜீவகாருணியத்திற்காய்..! (படத்துக்காய் ஓர் வரி.)

  6. இன்றைய நட்சத்திரமாக இளைஞனை தமிழ்சிறி பதிந்ததும், முன்பொருநாள் யாழ்கள உறவுகளிடம் இளைஞன் பெரிதும் சிறிதுமான இரு மேசை விளக்குகள் பேசுவதாக ஒரு சம்பாசனை கேட்டிருந்தார். அப்ப எழுதிய கவிதை போன்ற சம்பாசனை. 01/08/2007 எழுதியது. இன்று இணைப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. தொப்புள்கொடியுறவு. பெரிய மேசை விளக்கு தாய்! சிறிய மேசை விளக்கு சேய்! குழந்தை: ம்.ம்.ம்ம்மா, ம்.ம்.மா, தாய் : என்ன கண்ணே பசிக்கிறதா; குழந்தை; தெரியவில்லையம்மா, தாய் : ஓம் எனக்குத் தெரியும் உனக்குப் பசி என்று, குழந்தை: அதற்கு என்ன செய்ய வேண்டும் அம்மா, தாய் : இதோ! எனது மார்பில் சுரக்கும் பாலைக் குடி , குழந்தை : எப்படி எனது தொப்பிளாலா, தாய் : இல்லை ! உனது வாயால், குழந்தை : அம்மா! முன்…

  7. கடவுள் ஓர் நாள்.. பார்ட்டிக்குப் போய் ஓவரா தண்ணி அடிச்சிட்டு கட்டிலில் வீழ்ந்தவர்.. காலையில் எழுந்து கண் விழிக்க சிந்தனை கொஞ்சம் சிக்கல்பட்டது. சரி போனாப் போகுது இப்படியே விட்டால் மூளை குழம்பிடும்.. பொழுதும் போகுதில்லை.. ஒரு மானிடப் பெண்ணைப் படைக்க சித்தம் கொண்டார்..! சித்தம் கொண்டவர் டிகிரி போல்டரை தூக்கினார். பெண்ணைப் படைக்க.. எனக்கு என்னென்ன தகுதி வேணும் செக் பண்ணத் தொடங்கினார்.. முதலில் நல்ல ஸ்கெச் போட ஒரு வரைகலை டிகிரி வேணும்.. சா.. அதுக்கு முன்னம் நல்ல மனோதத்துவ டிகிரி வேணும்.. நோ நோ.... அதுக்கும் முன்னம் நல்ல சமூகவியல் டிகிரி வேணும்.. ம்ம்ம்... இல்லையே இவை மட்டும் இருந்தால் வெறும் காட்டூன் தான் வரையலாம்.. உயிரை ஆக்க.. நல்ல…

  8. ஒரு வசந்தம் தொலைந்து விட்டது எங்கள் தேசத்தின் வாசலில் ஏற்றி வைத்த தீபம் ஒன்று ஏகாதிபத்திய நெருப்பில் எரிந்து பொய் விட்டது. எங்கள் விளை நிலத்திக்கு வித்துக்களை ஊன்றி வந்த விருட்சமொன்று சரிந்து விட்டது எங்கள் புனித மூச்சை புயல் தின்று விட்டது இருள் சூழ்ந்து கிடந்த எங்கள் எல்லைக்கு ஒளி சுமந்து வந்த உயிர் ஒன்று அணைந்து விட்டது பாசத்தோடு பேணிக்காத்த சிறகொன்று பாரத வலையில் சிக்கி முறிந்து விட்டது அந்நிய தேசமெல்லாம் எங்களது அவலங்களை சொல்லி நின்ற இதயமொன்று அவிந்து விட்டது செரு முனையில் நின்று செந்தமிழின் பண்ணிசைத்த சிட்டொன்று சிதைந்து விட்டது எங்கள் இமயம் ஒன்றை இருள் விழுங்கி விட்டது எங்கள் விழி மடல்கள் வெல்ல முடியாதோரின் வஞ்சனையால் கிழிந்து விட்டன துணிச்சலையே த…

  9. தமிழர் நிலத்தினிலே ஒல்லாந்தன் கட்டிய கோட்டையிலே சிங்கக்கொடி.. அது அகற்றி தமிழர் வீரப் புலிக் கொடியேற்ற சமராடியது ஒரு பொடி அவனே.. கிட்டு என்ற அந்த புலிப் பொடி. வேட்டுகள் அவன் விருப்பு அல்ல மக்கள் விடுதலையே அவன் கனவு..! சின்னப் பொடியள் முதல் வயதான தாத்தா வரை "மாமா" என்றழைக்கும் அன்பு மகன்.. யாழ் நகரின் செல்லப் பொடி.. அவனே.. கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி..! விடுதலைப் பாதையிலே தொல்லைகள் தந்தோர் குண்டு எறிய ஒற்றைக் காலிழந்த பொடி நம்பிக்கை தளராத துணிவோடு களமாடினான் அவனே.. கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி. தமிழீழ விடுதலை என்ற தேசக் கடமைக்காய் உறவுகளைப் பலப்படுத்த தலைவன் காட்டி பாதையில் ராஜதந்திரியாய் ஏழ்கடல் தாண்டி தொலை தேசமும் நகர்ந்தான் …

  10. என்ன நியாயம்??? கட்டிக்கரும்பே மரகத மணியே பவழம் பவழம் எம் இதழ்கள் என்று சொன்னவர்களும் நீங்கள்தான் ....... கயல் விழி என்றும் , எம் விழி அம்பால் பெட்டிப் பாம்பாய் அடங்கினோம் என்று , சொன்னதும் நீங்கள் தான் ........ எங்கள் கொடியிடை அசைவில் , உங்கள் மதி தறி கேட்டுப் போனதாய் சொன்னதும் நீங்கள்தான் ........ பாலைவனமாய் இருந்த உங்கள் வாழ்வில் கோடைத் தென்றலாய் நாங்கள் வந்தோம் என்று சொன்னவர்களும் நீங்கள் தான் ...... இப்பிடி, சும்மா இருந்த எங்களை உங்கள் கற்பனை குதிரைகளால் மேய்ந்து விட்டு !!!!!!!! இப்பொழுது மட்டும் மோகம் கலைந்தவுடன் " இல்லாள் " என்று சொல்வது என்ன நியாயம் ??? பி கு : கிட்டடியிலை இல்லாள் எண்டு சொல்லி பொம்பிளையளை மட்டம் தட்டி …

  11. வருசாவருடம் பொங்கல் வருகிறது பொங்கலும் நடக்கிறது ஏதோ குறைவது போல்....... என்ன இல்லை புலத்தில் அரிசி சக்கரை கரும்பு அவல் பொங்கிட அவள்... எல்லாம் உண்டு... இருந்தாலும் இனிப்பில்லை .......... பொங்கலாம் புத்தாடை உடுத்தலாம் உற்றார் உறவினர் அயலவர் வீட்டுக்கும் போய்வரலாம் இருந்தாலும் ஒட்டுதில்லை............. என்ன குறை??? அந்த மண் இல்லை அது எங்களிடமில்லை அது வரும் நாளே மனம் பொங்கி பொங்கலிட்டு புதுப்பொலிவுடன் கம்பீரமாக தமிழன் தை நோக்கி நடக்கும் நாள்..............

  12. Mummy பொங்குறா பொங்கல் பிள்ளை order பண்ணுறான் Pizza Daddy எனக்கு வேண்டாம் புக்கை வாங்கித்தாங்கோ மக் பேர்கர்! விடியக்காலம மனிசிக்கு வேலை பின்னேரம் எனக்கு வேலை Fridge இக்குள்ள புக்கை! Facebook இல அரட்டை அட் ரா சக்கை ..... அட் ரா சக்கை ...! இதுதாண்டா புலம்பெயர் பொங்கல்!!!! பொங்கலோ பொங்கல்!!!! டமில்போய் 14/01/2014

  13. தேசத்தின் புயல் மாதவன். பச்சை வயல் நிறைந்த தென்மராட்சி மண்ணில் மாதவமாய் வந்துதித்த மனோரஞ்சன். தொண்ணூறுகளின் தொடக்கம்...., யாரெவனோ என்றிவனை ஊர் போற்றும் வீரனாய் புலி வேங்கையாய் போர்க்காலமொன்றில் யாழ் மண்ணில் பணிசெய்ய வந்தான். 'மாதவன்' மறக்க முடியாத நினைவுகளில் அவன் புன்னகையும் ஆழுமையும் ஆற்றலின் பன்முகமும் அழியாச்சுடர் அவன்.....! நெருப்பைச் சுமந்தான் சிரிப்பில் மட்டும் இனிப்பாய் கரைந்தான். இனிமையான போராளியாய் இதயங்களில் நிறைந்தான்....! இசையூடக வழியே பாடகனாய் திரையூடக வழியே நடிகனாய் கவியூடக வழியே கவிஞனாய் கலையின் மொத்த வடிவம் - மாதவன் கலைபண்பாட்டுக்கழகத்தில் இவனொரு வரலாறு. இவனின்றிய வரலாறொன்று இருந்தறியாத நாட்களில் கலைகடந்து கனரகம் சுமந்து களம் கண்ட ப…

  14. ஆச்சி எடன அரிவாளை.. எதுக்கடா பேராண்டி பொங்கலுக்கு புதுக்கதிர் எடுக்கவோ..?! இல்லையன ஆச்சி இனமானப் போரில் பொட்டிழந்து பொலிவிழந்து.. குளிக்கும் உன்னைக் கூட கணக்குப் பண்ணும் சிங்கள **களை போட்டுத்தள்ள...! விடுடா அது அவன் பிறவிக் குணம்.. இல்லையன ஆச்சி தமிழர் நாங்கள் புலியாய் பாய பயந்தோடிய தெருநாய்கள் உலக உருண்டையின் பொய் நயத்தால் வெற்றிக் கோசம் சேர்த்து எம் தேசம் மேய்கின்றன. இன்னும் என்னை சும்மா இருக்கச் சொல்லுறியோ..??! தம்பி ராசா.. பொங்கிய இரத்தம் போதும் செத்து வீழ்ந்ததும் போதும் வீரம் விவேகம் விளையாடினதும் போதும் எனிக் கொஞ்சம் இராஜதந்திரம் படிக்கட்டும் எம் இனம் சும்மா கிடவடா..! என்னன ஆச்சி சொல்லுறா கண் முன்னால அநியாயம் கண்டும்...…

  15. நல்லெண்ணெய் வழிய வைத்து ..ஊரில் நல்லதண்ணி கிணறு தேடி போய்..வயலில் அள்ளி முழுக்காட்டி விட்டா என் ..அக்காள் அறுகம் புல்லு பிடுங்க போகையில்...தரைவைக்கு மணியத்தின் லாரி வரும் கொழும்பில் ...இருந்து மாமாக்கள் வாங்கி அனுப்பிய சீனவெடி ..கொண்டு சிங்காரமா புது சட்டை போட்டு ..தலைசீவி பொங்கல் பொங்கும் அம்மாக்கு ...உதவி கட்டித்தரும் பொங்கல் கொண்டு மாமி ..வீடு போகும்போது மனதில் வரும் வெட்கம் ..மச்சாள் இங்கேரு மாப்பிள்ளை வாறாரு என்று சொல்லும் ..மாமா வீட்டுக்கு வந்த உறவுகள் எல்லாம் ..கூடி முற்றத்தில் தொடங்குவர் விளையாட்டு ..கிளி சின்னவர் எங்களை தங்கள் காலுக்குள் ..வைத்து தள்ளி விடுகையில் விழும் அடி முதுகில் ...உறைக்க நினைவுகள் மட்டும் இப்பொழுதும் ...மனதில் மீண…

  16. அம்மாவாணை எனக்கொரு ஆசை அம்மாணை எனக்கொரு ஆசை ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல... ஒப்பனுக்கெண்டாலும் நிம்மதியா நித்திரை கொள்ள.. எத்தனை நாளைக்கு இங்க குளிரில கிடந்து சாக இஞ்சை ஒரு கோதாரியும் இல்லை காசைத் தவிர.! சில்லம்பல்லமாய் சிதறிப்போச்சு எங்கட வாழ்க்கை மக்கரிப்பாங்கள் எங்கட ஊருக்குள்ள வந்ததால.! கடல் தண்ணி குண்டி நனைக்க கக்காவுக்கு இருந்த சுகம் "ஏசிக்" கக்கூசுக்குள்ள ஒப்பனுக்கும் இல்லை. கரவலை மீனில ஒரு சொதியும்.. கறுத்தப்பச்சையரிசி சோறும்... கறுமொறெண்டு அப்பளப்பொரியலும்... சுட்ட பத்தாம்பட்டி கருவாடும்... உந்த "சைனீஸ்" காரண்ட "பிறைட் றைஸ்" பிச்சை வாங்கும். சாதுவா கோப்பிறேசன் கள்ளைப்போட்டு தென்னை மர நிழலில சாரத்தை…

  17. ஒரு தேநீர் விடுதியும் இரு நாற்காலிகளும் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 324, காலி வீதி , வெள்ளவத்தை, கொழும்பு -06 சில வேளைகளில்.... சில இடங்களையும் சில சம்பவங்களையும் கூட காதல் தொற்றிக்கொள்கிறது! அதன் இனிய நினைவுகளால்... மனம் கொஞ்சம்... தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறது!! காத்திருப்புக்களும் சந்திப்புகளும் கைகுலுக்கிக்கொள்ளும் அழகான இடம்தான்.... அந்த தேநீர்விடுதி! வழமையான அந்த மேசையும் நாற்காலிகளும் அந்த இருவருக்காகவே காத்திருக்கும்...! காதலர்களை அமரவைத்து அழகுபார்ப்பதில் அதற்கும் கொள்ளைப் பிரியம்...!! அங்குள்ள பணியாளரைப்போலவே இவற்றிற்கும் இவர்கள் நன்கு பரிட்சயம்!!! அவளுக்காகக் காத்திருந்த பலதடவைகளில் நான் பார்த்திருக்கிறேன்.....…

  18. Started by nochchi,

    தலைநிமிர்வோம்! --------------------------- மனிதம் தொலைந்த முதற்பொழுதொன்றிலே சிங்களக் காடைகள் காவலரானதால் தமிழர் உடல்கள் தெருவில் சாய்ந்தன ! பெண்ணோ குழந்தையோ தமிழராய் இருந்தால் புத்தரின் புத்திரர்க்குக் கொல்வதே வேதம்! நான்கு தசாப்தங்கள் நடந்து முடிந்து இன்றும் தொடரும் இனப்படுகொலை ஓயவில்லையே! ஓயவேண்டுமெனில் தமிழீழம் அமைவதே சாலச் சிறந்தது! தமிழாராச்சியே சிங்களத்துக்குச் சினமென்றால் நாடமைப்பதை சிரித்து ஏற்குமா! வீழ்ந்தவர் மீதிலே உறுதியெடுப்போம் தாயகம் மீட்டுத் தலை நிமிர்வோமென! தலைகள் நிமிரக் கரங்களை இணைப்போம்!

  19. பசி எனும் பாத்திரம். வேக வேகமாக போய்க்கொண்டிருக்கின்றேன் எங்கே, எதற்கு, எனக்கே தெரியவில்லை. என்ன தேவைக்காக இப்படி ஓடுகின்றேன் எதுவும் புரியவுமில்லை என்னை கண்டவர்கள் பார்வையில் இருக்கும் வெறி ஒரே எட்டில் கட்டி அணைத்து அழைத்து கட்டிலில் தள்ளுவதில் அவர்கள் அவசரம் அன்பான முத்தங்கள் எதிர்பார்க்க முடியாது அதரம் கடித்தலும் ஆடை விலக்கலுமே அவர்கள் குறி கறுத்த குறிகள் பெருத்த உணர்சிகளோடு முட்டுகையில் முட்டி எழும் அழுகை தட்டி அவர்கள் தாழ்ந்து நிமிர்கையில் எட்டி பார்க்கும் அருவருப்பை மிண்டி விழுங்கும் ஒரு மிடல் உமிழ்நீர் அவர்கள் வேகமான இயக்கங்களையும், இம்மியும் ரசனையின்றிய தின்னல்களையும் …

  20. காதல் கடவுள் போல அன்பு கடல் போல நெஞ்சில்.. கருணை அள்ள அள்ள இருந்தும் என்ன பயன்.. கடனட்டையில் டொலரும் களுசான் பையில் பவுன்ஸும் பாண்டு பொக்கட்டில் ரூபாயும் மாடிமனையொடு நல்ல காரும் இல்லையேல்... இல்லானை இல்லாளும் வேண்டாள் இதுதான் மானுட உலகம் இன்று..! நோயென்று பசியென்று புசித்தலுக்கு உணவின்றி ஒரு பாதி உலகில்... மானுடர் பதை பதைக்கையில் மறுபாதி உலகில்.. பகட்டுக்கு செய்யும் செலவில் பாதி என்ன.. பருப்பளவு போதும் உண்டி சுருங்கிய வயிறுகள் கொஞ்சம் நிரம்ப...! இருந்தும் இல்லை என்று சொல்லும் உலகில்.. இல்லானை இல்லாளும் வேண்டாள்..! இதுதான் மானுட உலகம் இன்று. கத்தர் என்றும் அல்லா என்றும் சிவன் என்றும் விஷ்னு என்றும் சிலைக்கும் சிலுவைக்கும் பிறைக…

  21. என் ராஜியத்தின் இளவரசியானவளே.....! என் ஆளுகைக்குட்பட்ட அனைத்தையும் புன்சிரிப்பால் வளைத்தவளே....! மார்கழியில் மலர்ந்த செங்காந்தள் பூவே....! தேவதைகளை வெண்சாமரம் வீசப் பணித்த தேவதைகளின் தேவதையே....! எல்லாமுமாய் என் வாழ்வின் வசந்தமாய் திகழ்பவளே....! என் வானவில்லை வண்ணமிழக்கச் செய்துவிட்டுப் பறந்த வண்ணத்துப் பூச்சியே....! இழையோடிய சோகம் நிறைந்த வாழ்வுதனில் இமைப்பொழுதில் இன்பமூட்டிக் கொன்றவளே....! பிறப்பிற்க்கும் இறப்பிற்க்கும் நடுவே வாழ்தலை மட்டும் விட்டுச் சென்றவளே....! இன்றுபோல் என்றும் என் மனதில் பூப்பாயாக.... # பாப்பா rip 06/01/11 - 21/01/11

  22. முகநூலில் அகப்பட்ட கவிதை கவிஞர் தமிழ்தாசன் எழுதியது......கவிதையைப்படித்து முடித்து நீண்ட நேரமாகியும் இன்னும் வெளிவராமல் அதிர்ந்து போய் நிற்க வைத்திருக்கும் எழுத்து..... யாழ்க்கருத்துக்கள நண்பர்களுடனும் இதனைப்பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலில் இங்கு பதிவிடுகிறேன். விலைமாது விடுத்த கோரிக்கை..! ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு. என்னிடம் கடன் சொல்லிப் போன கந்து வட்டிக்காரகளும் உண்டு. சாதி சாதி என சாகும் எவரும் என்னிடம் சாதிப் பார்ப்பதில்லை. திருந்தி வாழ நான் நினைத்தபோதும் என்னை தீண்டியவர்கள் யாரும் திரும்பவிட்டதில்லை. பத்திரிக்கையாளர்கள…

  23. சிதையும் தமிழ் கலாசாரம் சீர்மிகு தமிழினம் இன்று சிதைந்ததை எண்ணித் துடிக்கையில் விளைந்த தமிழ் மானமது வீழ்ந்ததடா சாக்கடையிலே மானத்திற்காய் உயிர்தந்த எம் மாந்தையரோ மதிகெட்டு இன்று மயங்கி வீழ்ந்தனரே மேற்கத்திய நாகரிகத்தினிலே கட்டிக்காத்த கலாசார நிலவதுவோ கருமுகிலில் புகுந்து மறைகிறதே சுதந்திரமாய் சுத்திவந்த தென்றலோ சுத்தம் கழைந்து செல்கிறதே பாவப்பட்ட மண்ணினிலே பாவச்செயல்கள் எத்தனையோ கருவைச் சுமந்த கன்னியரின் கருகளைவுகள் எத்தனையோ தொட்டிலிலே தூங்க வேண்டிய திசுகளோ தொட்டியிலே குப்பைத் தொட்டியிலே தலை குனிந்து சென்ற பெண்களோ தரம் கேட்டு சந்தையிலே மந்தைகளாய் மதுவினிலே மயகியதால் மானம்தனை மறந்துவிட்டான் வீரத் த…

  24. விடைபெறும் ஆண்டே விதைத்து விட்டு போகிறாய் பலவற்றை எம் வயல்களில்... அறுவடைக் காலத்திற்காய் காத்திருக்கும் வலிமையையும் விளைவுகளை சாதகமாக்கும் திண்மையையும் தந்துவிட்டு போ.... கண்ணீரின் கனதி சுமந்த காற்றும் கலைந்த கனவுகளின் ஓலங்களும் பேரிருள் ஏறிய உறைவிடங்களில் நிறைந்துபோக, ஏக்கங்களும் ஏமாற்றங்களும் யுகாந்திர காத்திருப்புக்களும் மௌனமாக வாழ்விடங்களில் நிலைத்துப்போக, இயலாமை சுமந்து விடை கொடுக்கிறோம். கருவழிந்த காலத்தின் குறியீடே... உயிர்ப்பினை ஒளித்துவிட்டு சாம்பல் பூசி அடங்கிக்கிடக்கும் கிளைகள் மீதினில் மோதட்டுமுன் ஊழியின் பெருங்காற்று. மக்கிப்போகாத எலும்புகள் மீதும் மண்தின்ற தசைத் துண்டங்கள் மீதும் இறங்கட்டுமுன் பிரளயம். இனி பகை கொண…

  25. அசோகன் பேசுகிறான் மீண்டும்..... வரலாறுகள் மாற்றி எழுத முடியாதவை ....கடந்த சில காலங்களில் பல ரணங்களை எமக்குள்ளே விட்டு சென்ற எமது தேசத்தின் அழிவுகளும் கூட..இறந்து கொண்டு இருக்கிறோம் என்பதை தவிர எதையுமே அறிந்திராமல் இறந்து போனது எத்தனை பேர்.... அதன் வலிகள் என்னை இன்றுவரை சுகமாக தூங்க விட்டதில்லை.... புத்தம் இந்த உலகிற்கு பரவியது அசோகனின் மூலமே...... அன்பு ஒன்றை தவிர ஏதும் இல்லை இவ்வுலகில் பெரிதாக என்ற வார்த்தை எல்லாம் பொய்த்து போனது எம் மண்ணில்... தமிழனை கொள்வோம்.... தமிழனை கொள்வோம்.... தாரக மந்திரம் இதுவென சொல்வோம் என்று கொள்வதை தவிர வேறு ஒன்றும் செய்ய வில்லை தமிழனுக்காக சிங்கள அரசு... எல்லாம் முடிந்தது தடையங்களும் அழிந்தது ... இன்று சில அசோக மனங்கள் மட்டும் உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.