Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஊர விட்டு வந்த நானும் ஊரை பற்றி எண்ணும் நேரம் உண்மைகளை சொல்ல போனால் ஊருக்குள்ள ரொம்ப சோகம் 5லட்சம் உழைச்சாலும் 5காசு கையில் இல்ல காருக்குள்ள திரிஞ்சாலும் கால்கடுப்பு போகவில்ல நாலுபேர தெரிஞ்சாலும் நல்லதொரு வாழ்க்கையில்ல தாய்கொடுத்த பாசமிங்க தந்துவிட யாருமில்ல. பள்ளி நண்பன் தூரம் இல்ல தேடி போக நேரம் இல்ல துள்ளி விளையாடவில்ல தூக்கமது போதவில்ல கூலி வாழ்க்க கூட அது ஊர போல இல்லடா கேடு கெட்ட வாழ்க்க வெளிநாட போல எங்கடா சொல்லி பாரு ஊரில் சொன்ன வார்த்த கூட போலிடா சொந்த பந்தம் நேரில் என் தாய பார்த்து கேலிடா காதலிச்ச கன்னி அங்க கண்ணீரோடு நானுமிங்க என் மனசு ஏங்குதிங்க மன்மதன்னு பேருதாங்க காதலிச்சா கூட அவ காச தான பாக்கிறா காதலது வந்தா நீ மனசுக்குள்ள பூட்டுடா ஆச…

  2. பசி எனும் பாத்திரம். வேக வேகமாக போய்க்கொண்டிருக்கின்றேன் எங்கே, எதற்கு, எனக்கே தெரியவில்லை. என்ன தேவைக்காக இப்படி ஓடுகின்றேன் எதுவும் புரியவுமில்லை என்னை கண்டவர்கள் பார்வையில் இருக்கும் வெறி ஒரே எட்டில் கட்டி அணைத்து அழைத்து கட்டிலில் தள்ளுவதில் அவர்கள் அவசரம் அன்பான முத்தங்கள் எதிர்பார்க்க முடியாது அதரம் கடித்தலும் ஆடை விலக்கலுமே அவர்கள் குறி கறுத்த குறிகள் பெருத்த உணர்சிகளோடு முட்டுகையில் முட்டி எழும் அழுகை தட்டி அவர்கள் தாழ்ந்து நிமிர்கையில் எட்டி பார்க்கும் அருவருப்பை மிண்டி விழுங்கும் ஒரு மிடல் உமிழ்நீர் அவர்கள் வேகமான இயக்கங்களையும், இம்மியும் ரசனையின்றிய தின்னல்களையும் …

  3. ஒரு தேநீர் விடுதியும் இரு நாற்காலிகளும் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 324, காலி வீதி , வெள்ளவத்தை, கொழும்பு -06 சில வேளைகளில்.... சில இடங்களையும் சில சம்பவங்களையும் கூட காதல் தொற்றிக்கொள்கிறது! அதன் இனிய நினைவுகளால்... மனம் கொஞ்சம்... தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறது!! காத்திருப்புக்களும் சந்திப்புகளும் கைகுலுக்கிக்கொள்ளும் அழகான இடம்தான்.... அந்த தேநீர்விடுதி! வழமையான அந்த மேசையும் நாற்காலிகளும் அந்த இருவருக்காகவே காத்திருக்கும்...! காதலர்களை அமரவைத்து அழகுபார்ப்பதில் அதற்கும் கொள்ளைப் பிரியம்...!! அங்குள்ள பணியாளரைப்போலவே இவற்றிற்கும் இவர்கள் நன்கு பரிட்சயம்!!! அவளுக்காகக் காத்திருந்த பலதடவைகளில் நான் பார்த்திருக்கிறேன்.....…

  4. ஒரு வசந்தம் தொலைந்து விட்டது எங்கள் தேசத்தின் வாசலில் ஏற்றி வைத்த தீபம் ஒன்று ஏகாதிபத்திய நெருப்பில் எரிந்து பொய் விட்டது. எங்கள் விளை நிலத்திக்கு வித்துக்களை ஊன்றி வந்த விருட்சமொன்று சரிந்து விட்டது எங்கள் புனித மூச்சை புயல் தின்று விட்டது இருள் சூழ்ந்து கிடந்த எங்கள் எல்லைக்கு ஒளி சுமந்து வந்த உயிர் ஒன்று அணைந்து விட்டது பாசத்தோடு பேணிக்காத்த சிறகொன்று பாரத வலையில் சிக்கி முறிந்து விட்டது அந்நிய தேசமெல்லாம் எங்களது அவலங்களை சொல்லி நின்ற இதயமொன்று அவிந்து விட்டது செரு முனையில் நின்று செந்தமிழின் பண்ணிசைத்த சிட்டொன்று சிதைந்து விட்டது எங்கள் இமயம் ஒன்றை இருள் விழுங்கி விட்டது எங்கள் விழி மடல்கள் வெல்ல முடியாதோரின் வஞ்சனையால் கிழிந்து விட்டன துணிச்சலையே த…

  5. தமிழர் நிலத்தினிலே ஒல்லாந்தன் கட்டிய கோட்டையிலே சிங்கக்கொடி.. அது அகற்றி தமிழர் வீரப் புலிக் கொடியேற்ற சமராடியது ஒரு பொடி அவனே.. கிட்டு என்ற அந்த புலிப் பொடி. வேட்டுகள் அவன் விருப்பு அல்ல மக்கள் விடுதலையே அவன் கனவு..! சின்னப் பொடியள் முதல் வயதான தாத்தா வரை "மாமா" என்றழைக்கும் அன்பு மகன்.. யாழ் நகரின் செல்லப் பொடி.. அவனே.. கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி..! விடுதலைப் பாதையிலே தொல்லைகள் தந்தோர் குண்டு எறிய ஒற்றைக் காலிழந்த பொடி நம்பிக்கை தளராத துணிவோடு களமாடினான் அவனே.. கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி. தமிழீழ விடுதலை என்ற தேசக் கடமைக்காய் உறவுகளைப் பலப்படுத்த தலைவன் காட்டி பாதையில் ராஜதந்திரியாய் ஏழ்கடல் தாண்டி தொலை தேசமும் நகர்ந்தான் …

  6. வருசாவருடம் பொங்கல் வருகிறது பொங்கலும் நடக்கிறது ஏதோ குறைவது போல்....... என்ன இல்லை புலத்தில் அரிசி சக்கரை கரும்பு அவல் பொங்கிட அவள்... எல்லாம் உண்டு... இருந்தாலும் இனிப்பில்லை .......... பொங்கலாம் புத்தாடை உடுத்தலாம் உற்றார் உறவினர் அயலவர் வீட்டுக்கும் போய்வரலாம் இருந்தாலும் ஒட்டுதில்லை............. என்ன குறை??? அந்த மண் இல்லை அது எங்களிடமில்லை அது வரும் நாளே மனம் பொங்கி பொங்கலிட்டு புதுப்பொலிவுடன் கம்பீரமாக தமிழன் தை நோக்கி நடக்கும் நாள்..............

  7. நல்லெண்ணெய் வழிய வைத்து ..ஊரில் நல்லதண்ணி கிணறு தேடி போய்..வயலில் அள்ளி முழுக்காட்டி விட்டா என் ..அக்காள் அறுகம் புல்லு பிடுங்க போகையில்...தரைவைக்கு மணியத்தின் லாரி வரும் கொழும்பில் ...இருந்து மாமாக்கள் வாங்கி அனுப்பிய சீனவெடி ..கொண்டு சிங்காரமா புது சட்டை போட்டு ..தலைசீவி பொங்கல் பொங்கும் அம்மாக்கு ...உதவி கட்டித்தரும் பொங்கல் கொண்டு மாமி ..வீடு போகும்போது மனதில் வரும் வெட்கம் ..மச்சாள் இங்கேரு மாப்பிள்ளை வாறாரு என்று சொல்லும் ..மாமா வீட்டுக்கு வந்த உறவுகள் எல்லாம் ..கூடி முற்றத்தில் தொடங்குவர் விளையாட்டு ..கிளி சின்னவர் எங்களை தங்கள் காலுக்குள் ..வைத்து தள்ளி விடுகையில் விழும் அடி முதுகில் ...உறைக்க நினைவுகள் மட்டும் இப்பொழுதும் ...மனதில் மீண…

  8. புத்தாடை கட்டி ஊரில் புதுப்பானை வைத்து கோலம் போட்டு மாவிலை கட்டி திருச்சி வானொலியை திருகிவிட்டு கவியரங்கம் கேட்டு அப்பா அம்மா அம்மாச்சி சின்னன் பொன்னன் ஆளடுக்கு புடை சூழப் பொங்கலோ பொங்கல் என்று பொங்கிய காலமும் உண்டு..... இடையில், கதிரவனுடன் என்வானில் புதிதாய் எட்டிபார்த்த இயந்திரப்பறைவைகள் பறந்து வட்டமிட்டு என் பொங்கலை வேவு பார்த்து எச்சங்களாய் உலோகக் குண்டுகளை உமிழ்ந்து விட பொங்கலோ பொங்கல் என்றிருந்த என்வாழ்வும் மங்கலாகிப் போனதும் உண்டு..... இன்று, விடிந்தும் விடியாத பனிப் புகாரில் என் நினைவுகள் கண்ணாம் மூஞ்சி காட்ட வேலைக்குப் போகும் அவதியில் என் உதடு பொங்கலோ பொங்கல் என்று இயந்திரத் தனமாய் முணுமுணுக்கும்........

  9. முகநூலில் அகப்பட்ட கவிதை கவிஞர் தமிழ்தாசன் எழுதியது......கவிதையைப்படித்து முடித்து நீண்ட நேரமாகியும் இன்னும் வெளிவராமல் அதிர்ந்து போய் நிற்க வைத்திருக்கும் எழுத்து..... யாழ்க்கருத்துக்கள நண்பர்களுடனும் இதனைப்பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலில் இங்கு பதிவிடுகிறேன். விலைமாது விடுத்த கோரிக்கை..! ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு. என்னிடம் கடன் சொல்லிப் போன கந்து வட்டிக்காரகளும் உண்டு. சாதி சாதி என சாகும் எவரும் என்னிடம் சாதிப் பார்ப்பதில்லை. திருந்தி வாழ நான் நினைத்தபோதும் என்னை தீண்டியவர்கள் யாரும் திரும்பவிட்டதில்லை. பத்திரிக்கையாளர்கள…

  10. ஆச்சி எடன அரிவாளை.. எதுக்கடா பேராண்டி பொங்கலுக்கு புதுக்கதிர் எடுக்கவோ..?! இல்லையன ஆச்சி இனமானப் போரில் பொட்டிழந்து பொலிவிழந்து.. குளிக்கும் உன்னைக் கூட கணக்குப் பண்ணும் சிங்கள **களை போட்டுத்தள்ள...! விடுடா அது அவன் பிறவிக் குணம்.. இல்லையன ஆச்சி தமிழர் நாங்கள் புலியாய் பாய பயந்தோடிய தெருநாய்கள் உலக உருண்டையின் பொய் நயத்தால் வெற்றிக் கோசம் சேர்த்து எம் தேசம் மேய்கின்றன. இன்னும் என்னை சும்மா இருக்கச் சொல்லுறியோ..??! தம்பி ராசா.. பொங்கிய இரத்தம் போதும் செத்து வீழ்ந்ததும் போதும் வீரம் விவேகம் விளையாடினதும் போதும் எனிக் கொஞ்சம் இராஜதந்திரம் படிக்கட்டும் எம் இனம் சும்மா கிடவடா..! என்னன ஆச்சி சொல்லுறா கண் முன்னால அநியாயம் கண்டும்...…

  11. அம்மாவாணை எனக்கொரு ஆசை அம்மாணை எனக்கொரு ஆசை ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல... ஒப்பனுக்கெண்டாலும் நிம்மதியா நித்திரை கொள்ள.. எத்தனை நாளைக்கு இங்க குளிரில கிடந்து சாக இஞ்சை ஒரு கோதாரியும் இல்லை காசைத் தவிர.! சில்லம்பல்லமாய் சிதறிப்போச்சு எங்கட வாழ்க்கை மக்கரிப்பாங்கள் எங்கட ஊருக்குள்ள வந்ததால.! கடல் தண்ணி குண்டி நனைக்க கக்காவுக்கு இருந்த சுகம் "ஏசிக்" கக்கூசுக்குள்ள ஒப்பனுக்கும் இல்லை. கரவலை மீனில ஒரு சொதியும்.. கறுத்தப்பச்சையரிசி சோறும்... கறுமொறெண்டு அப்பளப்பொரியலும்... சுட்ட பத்தாம்பட்டி கருவாடும்... உந்த "சைனீஸ்" காரண்ட "பிறைட் றைஸ்" பிச்சை வாங்கும். சாதுவா கோப்பிறேசன் கள்ளைப்போட்டு தென்னை மர நிழலில சாரத்தை…

  12. Mummy பொங்குறா பொங்கல் பிள்ளை order பண்ணுறான் Pizza Daddy எனக்கு வேண்டாம் புக்கை வாங்கித்தாங்கோ மக் பேர்கர்! விடியக்காலம மனிசிக்கு வேலை பின்னேரம் எனக்கு வேலை Fridge இக்குள்ள புக்கை! Facebook இல அரட்டை அட் ரா சக்கை ..... அட் ரா சக்கை ...! இதுதாண்டா புலம்பெயர் பொங்கல்!!!! பொங்கலோ பொங்கல்!!!! டமில்போய் 14/01/2014

  13. தேசத்தின் புயல் மாதவன். பச்சை வயல் நிறைந்த தென்மராட்சி மண்ணில் மாதவமாய் வந்துதித்த மனோரஞ்சன். தொண்ணூறுகளின் தொடக்கம்...., யாரெவனோ என்றிவனை ஊர் போற்றும் வீரனாய் புலி வேங்கையாய் போர்க்காலமொன்றில் யாழ் மண்ணில் பணிசெய்ய வந்தான். 'மாதவன்' மறக்க முடியாத நினைவுகளில் அவன் புன்னகையும் ஆழுமையும் ஆற்றலின் பன்முகமும் அழியாச்சுடர் அவன்.....! நெருப்பைச் சுமந்தான் சிரிப்பில் மட்டும் இனிப்பாய் கரைந்தான். இனிமையான போராளியாய் இதயங்களில் நிறைந்தான்....! இசையூடக வழியே பாடகனாய் திரையூடக வழியே நடிகனாய் கவியூடக வழியே கவிஞனாய் கலையின் மொத்த வடிவம் - மாதவன் கலைபண்பாட்டுக்கழகத்தில் இவனொரு வரலாறு. இவனின்றிய வரலாறொன்று இருந்தறியாத நாட்களில் கலைகடந்து கனரகம் சுமந்து களம் கண்ட ப…

  14. Started by nochchi,

    தலைநிமிர்வோம்! --------------------------- மனிதம் தொலைந்த முதற்பொழுதொன்றிலே சிங்களக் காடைகள் காவலரானதால் தமிழர் உடல்கள் தெருவில் சாய்ந்தன ! பெண்ணோ குழந்தையோ தமிழராய் இருந்தால் புத்தரின் புத்திரர்க்குக் கொல்வதே வேதம்! நான்கு தசாப்தங்கள் நடந்து முடிந்து இன்றும் தொடரும் இனப்படுகொலை ஓயவில்லையே! ஓயவேண்டுமெனில் தமிழீழம் அமைவதே சாலச் சிறந்தது! தமிழாராச்சியே சிங்களத்துக்குச் சினமென்றால் நாடமைப்பதை சிரித்து ஏற்குமா! வீழ்ந்தவர் மீதிலே உறுதியெடுப்போம் தாயகம் மீட்டுத் தலை நிமிர்வோமென! தலைகள் நிமிரக் கரங்களை இணைப்போம்!

  15. என் ராஜியத்தின் இளவரசியானவளே.....! என் ஆளுகைக்குட்பட்ட அனைத்தையும் புன்சிரிப்பால் வளைத்தவளே....! மார்கழியில் மலர்ந்த செங்காந்தள் பூவே....! தேவதைகளை வெண்சாமரம் வீசப் பணித்த தேவதைகளின் தேவதையே....! எல்லாமுமாய் என் வாழ்வின் வசந்தமாய் திகழ்பவளே....! என் வானவில்லை வண்ணமிழக்கச் செய்துவிட்டுப் பறந்த வண்ணத்துப் பூச்சியே....! இழையோடிய சோகம் நிறைந்த வாழ்வுதனில் இமைப்பொழுதில் இன்பமூட்டிக் கொன்றவளே....! பிறப்பிற்க்கும் இறப்பிற்க்கும் நடுவே வாழ்தலை மட்டும் விட்டுச் சென்றவளே....! இன்றுபோல் என்றும் என் மனதில் பூப்பாயாக.... # பாப்பா rip 06/01/11 - 21/01/11

  16. சிதையும் தமிழ் கலாசாரம் சீர்மிகு தமிழினம் இன்று சிதைந்ததை எண்ணித் துடிக்கையில் விளைந்த தமிழ் மானமது வீழ்ந்ததடா சாக்கடையிலே மானத்திற்காய் உயிர்தந்த எம் மாந்தையரோ மதிகெட்டு இன்று மயங்கி வீழ்ந்தனரே மேற்கத்திய நாகரிகத்தினிலே கட்டிக்காத்த கலாசார நிலவதுவோ கருமுகிலில் புகுந்து மறைகிறதே சுதந்திரமாய் சுத்திவந்த தென்றலோ சுத்தம் கழைந்து செல்கிறதே பாவப்பட்ட மண்ணினிலே பாவச்செயல்கள் எத்தனையோ கருவைச் சுமந்த கன்னியரின் கருகளைவுகள் எத்தனையோ தொட்டிலிலே தூங்க வேண்டிய திசுகளோ தொட்டியிலே குப்பைத் தொட்டியிலே தலை குனிந்து சென்ற பெண்களோ தரம் கேட்டு சந்தையிலே மந்தைகளாய் மதுவினிலே மயகியதால் மானம்தனை மறந்துவிட்டான் வீரத் த…

  17. அசோகன் பேசுகிறான் மீண்டும்..... வரலாறுகள் மாற்றி எழுத முடியாதவை ....கடந்த சில காலங்களில் பல ரணங்களை எமக்குள்ளே விட்டு சென்ற எமது தேசத்தின் அழிவுகளும் கூட..இறந்து கொண்டு இருக்கிறோம் என்பதை தவிர எதையுமே அறிந்திராமல் இறந்து போனது எத்தனை பேர்.... அதன் வலிகள் என்னை இன்றுவரை சுகமாக தூங்க விட்டதில்லை.... புத்தம் இந்த உலகிற்கு பரவியது அசோகனின் மூலமே...... அன்பு ஒன்றை தவிர ஏதும் இல்லை இவ்வுலகில் பெரிதாக என்ற வார்த்தை எல்லாம் பொய்த்து போனது எம் மண்ணில்... தமிழனை கொள்வோம்.... தமிழனை கொள்வோம்.... தாரக மந்திரம் இதுவென சொல்வோம் என்று கொள்வதை தவிர வேறு ஒன்றும் செய்ய வில்லை தமிழனுக்காக சிங்கள அரசு... எல்லாம் முடிந்தது தடையங்களும் அழிந்தது ... இன்று சில அசோக மனங்கள் மட்டும் உ…

  18. விடைபெறும் ஆண்டே விதைத்து விட்டு போகிறாய் பலவற்றை எம் வயல்களில்... அறுவடைக் காலத்திற்காய் காத்திருக்கும் வலிமையையும் விளைவுகளை சாதகமாக்கும் திண்மையையும் தந்துவிட்டு போ.... கண்ணீரின் கனதி சுமந்த காற்றும் கலைந்த கனவுகளின் ஓலங்களும் பேரிருள் ஏறிய உறைவிடங்களில் நிறைந்துபோக, ஏக்கங்களும் ஏமாற்றங்களும் யுகாந்திர காத்திருப்புக்களும் மௌனமாக வாழ்விடங்களில் நிலைத்துப்போக, இயலாமை சுமந்து விடை கொடுக்கிறோம். கருவழிந்த காலத்தின் குறியீடே... உயிர்ப்பினை ஒளித்துவிட்டு சாம்பல் பூசி அடங்கிக்கிடக்கும் கிளைகள் மீதினில் மோதட்டுமுன் ஊழியின் பெருங்காற்று. மக்கிப்போகாத எலும்புகள் மீதும் மண்தின்ற தசைத் துண்டங்கள் மீதும் இறங்கட்டுமுன் பிரளயம். இனி பகை கொண…

  19. தோழிகளின் கிண்டல் பேச்சில் "வெட்கித்து தலைகுனிந்திருந்த" தருணங்களவை.... எதிர்வரும் பேய்களின் கண்ணிற்க்கு "விருந்தாகி நாணிக்குறுகியிருந்த" தருணங்களவை.... தலைவனின் தழுவலில் "பெண்மையில் சிலாகித்திருந்த" தருணங்களவை.... குழந்தையின் அரவணைப்பில் "தாய்மையில் திளைத்திருந்த" தருணங்களவை.... கண்ணாடியின் பிம்பங்களில் வழிந்த "வனப்புகளில் பெருமித்திருந்த" தருணங்களவை.... . . . அவ்வாறு இருக்க கூடாதென "கடவுளை வேண்டியிருந்த" தருணங்களவை.... அப்படியேயென கும்பிட்ட "கடவுள் கைவிட்ட" தருணங்களவை... தனக்கு மட்டும் ஏன்? இப்படியென "ஆற்றாமையில் அழுதிருந்த" தருணங்களவை.... "கற்சிலைக்கேன் இத்துணை கலைநயமென" கண்கள் பூத்திருந்த தருணங்களவை ... "கடன்பட்டு புலம்பெயர்த்…

  20. Started by அஞ்சரன்,

    வாடிய பூ மீது ..விழுந்த இலையின் மீது . தேடிய காதல் மீது ..பாடிய பாடல் மீது .. கூடிய உறவுகள் மீது ..நாடிய சொந்தங்கள் மீது .. மறையும் சூரியன் மீது ..கரையும் சந்திரன் மீது .. துளிர் விடும் விதை மீது ..தூவும் மலர் மீது .. அதிகாலை கனவு மீது ...கம்பனின் கவி மீது .. முகம் மறைக்கும் கன்னி மீது ..முடியாத கடல் மீது .. வராத பணம் மீது ..வாங்கிய முத்தம் மீது .. பாட்டியின் கதை மீது ...பாட்டனின் கைதடி மீது .. மழலை அழுகை மீது ..மடிந்தவர் புன்னகை மீது .. அதீத ஆசைகள் மீது ...ஆர்ருயிர் நண்பி மீது .. என்னுள் தொலைத்தவள் மீது ..எழுதா கவி மீது .. கண்ணாடி பொட்டின் மீது ..மருதாணி கைகள் மீது .. தேய்த்து போன செருப்பின் மீது ..சுவர் படங்கள் மீது .. காய்த்த கருவாட்டின் மீது ..கடைசி வார்…

  21. சுனாமிப்பாதிப்பின்போது எழுதிய கவிதைகள் சுனாமியிலே மடிந்த எம் சொந்தங்களுக்குச் சமர்ப்பணம். ---------------------------------------------- கட்டடிப் போட்ட நாய்போல் காலை நக்கும் கடலே - உன்னை அழகியவோர் அவளாக நினைத்திருந்தேன் - உன் அலைச் சேலை உயர்ந்த பின்பு தான் தெரிகிறது நீ ஓர் அருவருக்கத் தக்க மிருகமென்று ஆங்கிலேயன் உனக்கு வைத்த தமிழ்ப் பெயர் சீ! ஐப்பானியன் தனக்குத் தெரிந்த தமிழில் உனக்கு வைத்தான் பெயர் சுனாமியென்று ஆமியடித்தது போதாதென்று சுனாமி நீ வேறு வந்திருக்கிறாய் பஃறுளி ஆற்றையும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோட்டத்தையும் கொடிய நீ கொண்டாய் பூம்புகார் உன்னால் புதையுண்டு போனது துவாரகா நகரம் துவம்சமானது இவ்வாறுதான் நீ தென் குமரியின் வாழ்வை உன் வக…

    • 2 replies
    • 617 views
  22. தேவனுக்கு ஒரு திறந்த மடல் அன்பான பாலகனுக்கு , உலகமே உம் வரவை உற்சாகமாய் கொண்டாட என் மண் மட்டும் ஏன் ஐயா சிரிப்பைத் தொலைத்தது ??? ஆழிப் பேரலையாய் ஆவேசமாய் வந்தீரோ ? ஆரவாரமாய் என்மக்களை உம்மிடம் இழுத்தீரோ? பல வடுவை சுமந்த எமக்கு உம் வருகை உவப்பாய் இல்லை....... வெளியே நாம் சிரித்தாலும் உள்ளே நாம் உறைந்துதான் போனோம். வருடங்கள் பல பறக்கும் காலங்கள் கலகலக்கும் ஆனாலும் நீர் வைத்த ஆழ வடு ஆறவில்லை எங்களுக்கு. வாரும் பாலகனே வாரும் .. என்மக்கள் நிலையில் மற்றதை தாரும்.. கோமகன் மார்கழி 24 2013

  23. நத்தார் நாயகனே பரிசுத்த இளைஞனே.. குழந்தை ஜேசுவாய் அன்னை மேரியின் தவப்புதல்வனாய்... இறை தூது கொண்டு.. நீ வந்தாய் தூசிகள் படித்த மனித மனங்களை தூய்மைப்படுத்த..! அகிலத்தில் - முதலாய் அகிம்சை எனும் ஆயுதம் தூக்கிய இளைஞனே அப்பாவியாய் நீ உலகை வலம் வந்தாய். மனித மனங்களை மாண்பால் பண்படுத்த நீ முயன்றாய்..! ஆனால்... அடப்பாவிகள் உன் தலையில் முட்கிரீடம் இட்டு தோளில் சிலுவை வைத்தார் இறுதியில் அதில் உனை அறைந்தே வீரம் கொண்டார்..! அதர்மத்தின் வீரம் அகோரம் தர்மத்தின் வீரம் சாந்தம்..! இளைஞர் எம் முன்னோடியே விடுதலைப் போராளியே.. நாமும் வருவோம் உனது தடம்படித்தே..! தோழனே ஜேசுவே உன் பிறந்த நாளில் உனை அன்போடே நினைவுகூறுகிறோம்..! வொட்காவுக்கோ.. வைனுக்கோ அல்ல கேக்குக்கோ புடிங்குக்கோ அல்ல சாண்…

  24. நாம்... ரொம்பவும் நேசிக்கும் ஒருவரால்தான், 'துரோகம்' எனும் பரிசையும்... புன்னகைத்தபடியே... கொடுக்க முடிகிறது! மனச்சாட்சிகள் எப்பொழுதும் தொடர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதில்லை..! அது... துரோகம் செய்தவரையும் ஒருநாள் தட்டியெழுப்பும்..!! காலம் கடந்த ஞானத்தால்... கோலம் மாற்ற முடியாது! காலைச் சுற்றிய பாம்பாக... மனச்சாட்சியின் தொண்டைக்குழியை, இறுக்கிக்கொண்டேயிருக்கும்...!! துரோகத்தின் தடங்களில்... அனுபவப்பாதை விரிந்து செல்லும்...! தாங்களே பின்னிய வலையில், துரோகிகள் சிக்கித் தவிக்க... மற்றவரின் பயணம் மட்டும் தொடரும்! மீண்டுமொருமுறை துரோகச் சந்திகளில் தரிக்காத, தனித்த நீண்ட பயணங்களில்...... மாற்றங்கள் இருக்கும்...! ஏமாற்றங்கள் இருக்காது...!! இனிமையான பொழுதொன்றி…

  25. இலைகளை உதிர்த்து நிர்வாணாமாய் நின்று கொண்டிருக்கும் மரங்கள் துளிர்க்க ஆரம்பித்து விட்டன ஒன்றும் செய்யாமல் அமைதியாக காத்திருந்த புல் தானாக முளைக்க தொடங்கிவிட்டது நான்காயிரம் மைல்கள் கடந்து வந்த மெக்சிகோ ஆண் ஹம்மிங் பறவையொன்று இணைதேடி ரீங்கார ஒலியெழுப்பிக் கொண்டிருக்கிறது பனிக்காலம் முழுதும் தூங்கிக் கழித்த பாண்டா குட்டியொன்று தன் முதல் மூங்கில் குருத்தை ருசிக்க தாயாராகி விட்டது இரையை பிடிக்க முடியாதவாறு ஊர்ந்து செல்லும் ஒசையை வெளிப்படுத்தும் பைன்மர சருகுகளை பாம்புகள் வெறுத்துக் கொண்டிருக்கின்றன 'களவு' எனும் உயிர்ப்பித்தலுக்கான முதல் பாடத்தை ஒநாய் தன் குட்டிகளுக்கு கற்பித்துவிட்டிருந்தது கலவி முடிந்தும் மூர்க்கம் குறையாத காடா மான் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.