கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும் ஞாபகம் கொள்வோம். அழகிய கனவுகளாலும் ஆயிரமாயிரம் கற்பனைகாளாலும் செதுக்கப்பட்டு சிற்பமானது அவனது வாழ்வு. பாலன் பிறக்க முன்னொரு பொழுதிருந்த 24.12.10 அதிகாலை 5மணியோடு அவனது வாழ்வு முடிந்து போயிற்று. காரணம் அறியப்படாது அவனது கனவுகளை அழித்துக் கொண்டு காற்றாய் ஓடிய புகையிரதப் பாதையில் தலைசிதறிக் கதை முடிந்து 30வயதோடு தன்னை முடித்துக் கொண்டான். உறைபனிக்குளிரில் அந்த விடிகாலையில் அவனது கதை முற்றுப் பெற்றது. தண்டவாளத்தில் தலையைக் கொடுத்துத் தன்னையழித்தானாம்….! விறுவிறென்று செய்தி வீச்சாய் பரவி….. கதைகள் பலவாய் அவன் கூடக் கடைசிவரையும் பியரடித்து நத்தார் தினம் கொண்டாடிய நண்பர்கள் மூலமாய் அவ…
-
- 8 replies
- 1.7k views
-
-
அகதியாய் அலைந்து ஆழ்கடல் கடந்து இன்னல்கள் சுமந்து ஈழத்தைப் பிரிந்து உறவுகளைத் தேடி ஊட்டி வரை ஓடி எல்லாம் இழந்து ஏங்கித் தவித்து ஐயோ அம்மாவென ஒரு பாத்திரம் கொண்டு ஓடும் எங்கள் நிலை கண்டால் ஒளவைப் பாட்டி மட்டும் ஃமாய் நிற்பார் !
-
- 6 replies
- 1.7k views
-
-
* காதலும் வாழைபோல் வெட்ட வெட்ட வளரும். **திருமணம் நாணயங்களால் தீர்மானிக்கப்படுவதால் நாணயமான காதல்கூட செல்லாதகாசாகி விடுகிறது. ***நேற்று மலைமேல் கண்களால் பேசினோம் மறுநாள் மாதா கோவிலில் மனங்களால் பேசினோம் பின்பு கடற்கரை மணலில் கைகோர்த்து பேசினோம் இன்று தனித்தனியாய் வாழ்கிறோம் ஊமைகளாய். இதுதான் காதலா?
-
- 12 replies
- 1.7k views
-
-
-
தியாகத்தின் சிகரங்கள்..! வீர யாகத்தின் அகரங்கள்...!! காற்றோடு கலந்தவர்கள்...! வீர காவியம் ஆனவர்கள்...!! நெருப்பாற்றில் குளித்தவர்கள்...! வரலாற்றில் நிலைத்தவர்கள்...!! மரணத்தை வென்ற மாவீரர்...! தமிழ் மானத்தைக் காத்த புலிவீரர்...!! மாவீரச் செல்வங்களே...!!! உங்களின் கல்லறைகள் கூட பகைவனைப் பயமுறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் அழிக்கிறான்...!? உங்களின் நினைவுநாள் கூட எதிரிக்கு உறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் தடுக்கிறான்...!? உங்களின் தியாகத் தீயில்தான்... இன்னும் நாம் குளிர்காய்கிறோம்! இவ்வளவு இழந்த பின்னும்... இன்னும் நாம் உயிர் வாழ்கிறோம்!! இனியும் நீங்கள் எங்களுக்காய் உங்கள் ஆத்மாக்களை எழுப்பாதீர்கள்! நிம்மதியாய் உறங்குங்கள்...! உங்கள் கனவு…
-
- 11 replies
- 1.7k views
-
-
வாழ்க்கையைக் கண்டு பயந்தேன்!! அதன் வசந்தத்தை அனுபவிக்காத வரை!! அன்பைக் கண்டு பயந்தேன்!! அது என் இதயத்தில் இருள் போன்ற கருமையை நீக்கி, நிகரில்லா வெளிச்சத்தை வீசும் வரை!! வெறுப்பைக் கண்டு பயந்தேன்!! அது அறியாமை என்று அறியும் வரை!! ஏளனங்களைக் கண்டு பயந்தேன்!! எனக்குள் சிரிக்கத் தெரியாதவரை!! தனிமையைக் கண்டு பயந்தேன்! நான் தனியாக இருக்கக் கற்றுக்கொள்ளும் வரை!! தோல்விகளை கண்டு பயந்தேன்!! தோல்வியே வெற்றிக்கு அறிகுறி என்று உணரும் வரை!! வெற்றிகளை கண்டு பயந்தேன்!! வெற்றியே வாழ்க்கையின் சந்தோஷம் என்று அறியும் வரை!! மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பயந்தேன்!! அவர்களுக்கும் என்ன…
-
- 8 replies
- 1.7k views
-
-
வேட்டைக்காறி....... இவள் நச்சுக்குண்டைப் போடவைத்த மோசக்காறி....... நாடு விட்டு நாடு வந்த வேட்டைக் காறி...... இத்தாலி நாடு தந்த அகங்காரி..... அப்பனோ சர்வாதிகாரி..... ஆத்தாளோ இறுமாப்புக்காறி...... மகளோ அடங்கா பீடாறி...... உன்னால் நாம் நிற்கும் நிழலும் இழந்தோம்... இருக்க வீடும் இழந்தோம்.... படுக்க பாயும் இழந்தோம்.... உண்ண உணவும் இழந்தோம்..... உன் தாலி போனதால் எங்கள் தாலியையும்: அறுக்க நினைத்தாயே...? உனக்கு அப்பாவித் தமிழர் நாம் என்னதான் பாவம் செய்தோம்....? காடேறி உனக்கு தாலியின் மகிமை தெரியுமா...? காலையில் ஒண்டு மாலையில் ஒண்டு அது உன் கலாச்சாரம்....! ஒருவனுக்கு ஒருத்தி அது எங்கள் கலாச்சாரம்..... இந்திராவ…
-
- 16 replies
- 1.7k views
-
-
http://vaseeharan.blogspot.com/ பல்லவி தமிழன் தமிழன் ஒருவன் தங்கத் தமிழன் ஒருவன்-எங்கள் தலைவன் தலைவன் மறவன் தமிழர் படைத்த பிரமன்- அண்ணன் பிரபா பிரபா பிரபாகரன் பிரபா பிரபா பிரபாகரன் சரணம் 1 தமிழ்த்தாய் கண்ட கனவுஇவன்-அந்தக் கனவோடு முளைத்த நனவுஇவன் அன்னை தமிழால் சிகரமிவன்-எங்கள் அன்பை மதிக்கின்ற தலைவன்இவன் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 2 பார்வையிலே தமிழ்ப்பூமியிருக்கும் பண்டார வன்னியனின் ஆசியிருக்கும் பாயும் விழிகளிலே தீயிருக்கும் படை விரட்டும் திறன் நெஞ்சிலிருக்கும் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 3 நாட்டை நம்மை நேசிப்பவன் தமிழ்விடுதலையை என்றும் யாசிப்ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
ஆரிடம் சொல்லியழ? தொலைபேசி வைத்திருப்போரே! தொலைந்து போங்கள்…. தாயகம்பற்றிப் பேசவா? யார் முந்தி நானா?...... நீயா? உணர்வெடுத்து, உரிமைக் குரலெடுத்து ஆகாய வெளிகளை அதிர வைப்போம்..!!!!! திட்டங்களும், கருத்தாடல்களும் கேட்கக் கேட்க உற்சாகம் பிறக்கும். ஆகா இனிக் கவலையில்லை எவ்வளவு குரல்கள்…! உலக அங்கிகாரம் எதற்கு? நாங்களே இராசாங்கம் இதோ தாயகம் எங்கள் கைகளில் இதனைச் சீராட்டுவோம் பாராட்டுவோம். சிரசின்மேல் சுமப்போம். வானலைகள் கதவுதட்டி வார்த்தைகளை குவித்தெறியும்! நம்பி நம்பிக்கை கொண்டேன் வானலை வந்த என்னருந் தோழருடன் பேச தொலைபேசி எடுத்தேன்.. ஆகா நான் கதைத்தது கேட்டீரா? எப்படி இருந்தது? உணர்வாய் இருந்ததா? என ஆயிரம்…
-
- 8 replies
- 1.7k views
-
-
உலகம் அழிந்தால்.... கவிஞர் வைரமுத்து ''48மணிநேரத்தில் உலகப்பந்து கிழியப்போகிறது. ஏறுவோர் ஏறுக, என்சிறகில். இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன். இரண்டே இரண்டு நிபந்தனைகள்: எழுவர் மட்டுமே ஏறலாம்.உமக்குப் பிடித்த ஒரு பொருள் மட்டும் உடன்கொண்டு வரலாம்". திடீரென்று... ... மேகங்கள் கூடிப் புதைத்தன வானை. ஒரே திசையில் வீசலாயிற்று உலகக் காற்று. பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய் உருண்டது பூமி. மருண்டது மானுடம் அப்போதுதான் அதுவும் நிகழ்ந்தது. வான்வெளியில் ஒரு வைரக்கோடு. கோடு வளர்ந்து வெளிச்சமானது. வெளிச்சம் விரிந்து சிறகு முளைத்த தேவதையானது. சிறகு நடுங்க தேவதை சொன்னது: ''48 மணி நேரத்தில் உலகப்பந்து கிழியப் போகிறது. ஏறுவோர் ஏறுக என்சிறகில் இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன் …
-
- 0 replies
- 1.7k views
-
-
என் ரோசாப்பூ சேலைக்காரி.... கவிதை - இளங்கவி........ குட்டைப் பாவாடையுடன் மனதை கொள்ளை கொள்ளும் சிரிப்பு கொண்டு நல்லூர் வீதியெல்லாம் சுற்றிடுவாய் நானும் உன்னை சுற்றிடுவேன்...... கரம்சுண்டல் வாங்கி வந்து என் கைகளிலே வைத்திடுவாய் வாங்க மறுத்துவிட்டால் என் காலை மிரித்திடுவாய்..... கடைக்கண் பார்வைகொண்டும் அடித்திடுவாய்.... நல்லூர் முருகனை மறந்துவிட்டு உனை உன்முடிபோல தொடர்ந்திடுவேன் முழு கண்கள் பார்க்கமுதல் இருளாக மறைந்திடுவேன்.... சில திருவிழாக்கள் ஓடி உன் சிறு அழகெல்லாம் வளர்ந்துவிட ரோசாப்பூ சேலைகட்டி என்மனதை ஜோராக இழுத்தவளே...! சிறுவயதில் நீ தந்த பொரிகடலை சுவையும் போய்.... நீ சிறிதாக வாங்கித்தரும் கரம்சுண்ட…
-
- 12 replies
- 1.7k views
-
-
சமாதான தேவதை - நீ சமர் கண்டு சோர்வதா? அவமான அர்ச்சனை - நீ அருகிராமல் எங்கெங்கோ போவதே! சுகமான வாழ்வது சுடராமல் அணைவதா? சாவின் கரத்தில் உயிர் சடுகுடு விளையாடி மாய்வதா? நிழலாக எம் கழல் தனை தொடர்கின்ற சுற்றமது சுவர்க்கமதை அணைப்பதா? இமையாக நின்றெமை சுமையாக நினையாத அன்னை, அப்பனை அடுத்தடுத்து அவலமாய் இணைப்பதா? தமையனாய் நின்றவர் தம்பியாய் வந்தவர் தமக்கையாய் அணைத்தவர் தங்கையாய்ச் சிரித்தவர் நீட்டி முழங்கிப் போக அனுமன் வாலாய் நீள்பவர் கவலை மறந்து, சிரித்து மகிழ்ந்து இந்நாட்டு மன்னராய் நின்றவர் அன்பென்னும் ஆகுதியில் உயிர்தனைச் சலவை செய்து அவலம் எதுவென மறந்தவர் பட்... பட்... எனப் பறக்கும் வேட்டுக்கு சட்... ச…
-
- 9 replies
- 1.7k views
-
-
அன்று நாங்கள் அமைதியாக வாழ்ந்தோம் மருதை குறிஞ்சி பhலை முல்லை நெய்தல் என நிலங்களை ஐந்தாக பிரித்து அழகான எம் நிலத்தில் அமைதியாக வாழ்ந்தோம் நெத்தலி மீன்க்ள் துள்ளி விழையாடும் கடற்கரையில் துள்ளி மகிழ்ந்தோம் குடலை நெற்கள் கதிர்விட அக மகிழ்ந்தோம் தடிமன் வந்தால் பாட்டி செய்த ஒடியற் கூழில் பஞ்சாய் பறந்து விட நிம்மதியாய் வாழ்ந்தோம் முற்றத்து செவ்வரத்தம் பூக்களில் முகம் விழித்தோம் துலா கப்பியில் தண்ணி அள்ளி சோம்பல் போக்கி முகம் கழுவினோம் தொட்டாற் சிணுங்கியை தொட்டு மகிழ்ந்தோம் பட்ட காயத்திற்கு வெட்டொட்டியால் கட்டுப்போட்டோம் நாலு மணிப்பூக்களில் நேரம் பார்த்தோம் சாலைகளில் நடக்கும் போது சுகம் விசாரித்தோம் …
-
- 7 replies
- 1.7k views
-
-
எதிரலை எங்கோ ஒர் கரையின் மடியில் - நமக்கான நாற்காலிகள் காத்திருக்கின்றன எதோ ஒர் கடலின் அலைகள் - நம் வருகை எதிர் நோக்கி நிலம் தொடுகிறது தனக்கான வேக விளிம்பைத்தாண்டி- நம் சந்திப்பின் காலம் நோக்கி - விரைகின்றன கடிகார முட்கள் இனி எப்போதுமே நாம் சந்திக்க - போவதில்லையெனும் உண்மையறியாமல்
-
- 7 replies
- 1.7k views
-
-
நீ எனக்காக பிறந்தவள் .... என்னை காதலிக்க.... எதற்காக தயங்குகிறாய் ...? கவலையை விடு .... நான் உனக்காகவே .... பிறந்தவன் ......!!! என் காதல் பைங்கிளியே .... அவனவன் காதல் ... அவனால் ..... தீர்மானிக்கபடுவதில்லை .... எல்லாம் வல்ல அவனே ... நிச்சயிக்கிறான் ....!!! ^ என் காதல் பைங்கிளியே காதல் கவிதை கவிப்புயல் இனியவன் நீ ... எத்தனை... முறை மறுத்தாலும் .... நான் .. அதற்கு பலமுறை .... முயற்சிப்பேன் .... ஆனால் ... உன் அனுமதியில்லாமல் .... உன்னை ஏற்க மாட்டேன் .... ஒருமுறை என்னை .... காதலித்துப்பார் ..... பலமுறை என்னையே .... வணங்குவாய் ....!!! ^ என் காதல் பைங்கிளியே காதல் கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 1.7k views
-
-
மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை நாடு திரும்ப முடியலை மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை நாடு திரும்ப முடியலை சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளிச் சொரியுது எங்களுயர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளிச் சொரியுது எங்களுயர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது தாய்கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளைக் கிழிக்கிறான் தாயாகும் முன்னேயிளம் பிஞ்சுகளை அழிக்கிறான் தாய்கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளைக் கிழிக்கிறான் தாயா…
-
- 1 reply
- 1.7k views
-
-
உன் ..... கண் அசைவில் மதி ...... இழந்தவன் நான் ..... நீ கண்ணை அசைத்தாய் .... என் வாழ்க்கையே அசைந்து ..... விட்டது ..................!!! ^ கவிப்புயல் இனியவன் கடந்த காதல் - குறுங்கவிதை
-
- 6 replies
- 1.7k views
-
-
பிணம் தின்னி கழுகுளாக மாறிய மனிதர்கள் மதம் என்ற மதம் பிடித்த மடையர்கள் நிலம் கேட்காத நிலத்திற்கு நீட்டிய வாள்கள் தன்னவரையும் எதிரியையும் துளைக்கும் குண்டுகள் கொன்று கூவித்துவிட்டு கூச்சலிடும் பீரங்கிகள் அலைந்து பறந்து மரணத்தை அடித்த உலோகப் பறவைகள் கால்களை காகிதமாய் துண்டித்த கண்ணி வெடிகள் ஆடவரை இழந்து விதவையான பெண்களின் ஒப்பாரிகள் தந்தையை இழந்து அனாதையான பிஞ்சுகளின் கூக்குரல்கள் காதலியை தொலைத்து நாட்டிற்காக உயிர்தொலைத்த வீரர்கள் மரணத்தை விட கொடுமையான ஊனங்கள் அந்த ஊனத்தை குறைக்க மருந்தை விற்கும் வியாபாரிகள் நீர் போல ஓடிய ரத்த ஆறுகள் குருதியை குடித்து குளித்த மானிட ராட்சதர்கள் கன்னிகளின் கற்பை சூறையாடிய கயவர்கள் தாயின் பாலை வற்ற வைத்த நயவஞ்சகர்…
-
- 8 replies
- 1.7k views
-
-
கோபுரம் கட்டி முடிக்கையில்....... அத்திவாரம் - ஆட்டம் கண்டதோ? மெல்ல முழைத்த உன் பாத விரல்கள்... பூமியில் அழுந்துமுன் - பொசுங்கி போயிற்றோ? ஏதுடா சமாதானம்? என்னையும் -உன்னையும் எரித்தபின் ஏதும் வந்தால் அது - சமாதானமா? அதன் பெயர் சமாதி! நான்கு வருடங்களாச்சு ....... கண்டதென்ன?...... செம்பருத்திக்கும் ....... தெருவினோர .......கழிவு நீருக்கும்...... வேறுபாடு............... பிரித்து பார்க்க முடியாமல் பேதலித்து கிடக்கிறாய்......! உன் பிறப்பின் அடையாளம் மெல்ல மெல்ல ....... அதன் ஆயுள் முடிக்கிறதே ..... அறிந்தாயா- நீ? கண்மணிக்குள் இரத்தம் பாயாதுதான்......... இல்லையென்று இல்லை....... உன் இதயத்தில் கூட அதன் இயக்கம் …
-
- 9 replies
- 1.7k views
-
-
-
- 14 replies
- 1.7k views
-
-
கனவினைக் கொடுத்து தூக்கத்தைக் கெடுத்து பாதியில் செல்வாள் பாவை! பாதையைத் தொலைத்து பேதையை நினைத்து வீதியில் விழுவான் கோழை! சேலைகள் நினைத்தால்... சோலைகள் காய்ந்து பாலைகள் தோன்றும் வேலைகள் செய்திடும்! காலைகள் இருண்டு காரிருள் படிந்து வாழ்க்கையும் உருண்டிடும் கவனம்!!! ***எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது***
-
- 20 replies
- 1.7k views
-
-
விழித்திடு பெண்ணே! விடியலைப் படைத்திடு சமுத்திரம் ஒன்றே இலக்கெனக்கொண்ட ஆறுகள் சோர்வது உண்டா? சரித்திரம் படைத்திட புறப்பட்ட பின்னால் தடைகளால் உடைந்திடல் நன்றா? வெளுத்தது எல்லாம் பாலென நம்பிய மனத்துக்கு இது ஒரு பாடம்! நீ குழந்தையல்ல குமரி ஆனாய் இனி விழித்திரு பெண்ணே எப்போதும்! இடையினில் தடை வரும் தடுக்கிடப் பார்த்திடும் தலைவலி உடன் வரும் கடு கடு சொல் வரும் களங்கமும் சேர்ந்திடும் நெருப்பென்று ஆனாய் பெண்ணே நெருப்பினை ஈக்கள் மொய்ப்பது இல்லை சளைக்காமல் நீ தொடு இலக்கினை! பொடி வைத்துப்பேசும் நாக்கு பொய் கூசாமல் சொல்வோர்க்கு விளக்கங்கள் கொடுத்திடல் நன்றோ?! சூரியன் மேற்கினில் உதிப்பது உண்டோ? தோல்விகள் வெற்றியின் படிகள் அன்றோ? இறைவனின் அருளொடு நல்லோர்கள…
-
- 0 replies
- 1.7k views
-
-
கடவுள் ஓர் நாள்.. பார்ட்டிக்குப் போய் ஓவரா தண்ணி அடிச்சிட்டு கட்டிலில் வீழ்ந்தவர்.. காலையில் எழுந்து கண் விழிக்க சிந்தனை கொஞ்சம் சிக்கல்பட்டது. சரி போனாப் போகுது இப்படியே விட்டால் மூளை குழம்பிடும்.. பொழுதும் போகுதில்லை.. ஒரு மானிடப் பெண்ணைப் படைக்க சித்தம் கொண்டார்..! சித்தம் கொண்டவர் டிகிரி போல்டரை தூக்கினார். பெண்ணைப் படைக்க.. எனக்கு என்னென்ன தகுதி வேணும் செக் பண்ணத் தொடங்கினார்.. முதலில் நல்ல ஸ்கெச் போட ஒரு வரைகலை டிகிரி வேணும்.. சா.. அதுக்கு முன்னம் நல்ல மனோதத்துவ டிகிரி வேணும்.. நோ நோ.... அதுக்கும் முன்னம் நல்ல சமூகவியல் டிகிரி வேணும்.. ம்ம்ம்... இல்லையே இவை மட்டும் இருந்தால் வெறும் காட்டூன் தான் வரையலாம்.. உயிரை ஆக்க.. நல்ல…
-
- 13 replies
- 1.7k views
-
-
அகதியாக வந்த பறவை ஏன்அங்கு துடிதுடித்தது கடல் கடந்து வந்த உள்ளம் ஏன் பதைபதைத்தது சிங்களத்து படைகளினால் அகதியாகி புலம்பெயர்ந்தது அமைதியாக வாழ என உங்கு வந்தது அகதியாக வந்தவனை தமிழகம் ஏன் மிதித்தது விழுந்தவனைத் தான் அங்கு மாடும் முட்டுது பச்சைபாலன் என்பது அறியாமலா நாய் கடிதது செய்தி படித்த என் மனமோ பதைபதைக்குது ஈனமான தமிழனாக இவனும் தன்னைக்காட்டுது
-
- 8 replies
- 1.7k views
-
-
1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உயிர்த்தெழுந்த நாட்கள் -வ.ஐ.ச.ஜெயபாலன் அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம் துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல. மீண்டும…
-
- 7 replies
- 1.7k views
-