Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. திலீபன்....... போர் மட்டுமே தெரியும் ........ புலிகளுக்கு என்றவர்க்கு....... நீர் ஆகாரம் கூட இலாது - புரட்சியில்... நீந்தவும் தெரியும் என்று சொல்லி........ தன்னை தானே........ வேருக்கு உரமாக்கிய செம்பருத்தி!! கூச்சல்களும் கூவல்களும் .... செத்து செத்து விழுந்தாலும்..... எதிரி கை முத்தமிடும் பிழைப்பும்..... தொடர் கதையாய் இன்னும் இருந்தாலும்... ஒரு சுடர் அணைந்து போச்சுதே...... இன்னும் இருட்டு..... இதயத்தின் ஒரு மூலையில்!! உயிர் உருக உருக ....... தனை எரித்து போனது ஒரு ....... ஊரெழுவின் வர்த்தி........ ஊருக்கு வெளிச்சம் வந்ததோ இல்லையோ........ உன் பேருக்கு - இறப்பு என்றுமேயில்லை! தியாகம் என்பார்.......... அதன் உச்சம் என்பார்…

    • 8 replies
    • 12.4k views
  2. தமிழீழம் மலர்ந்து விடும்......!!! கோட்டை பகை கோட்டைக்குள்ளே கொடியேறும்..... புலி கொடியேற்றி ஆளும் ஒரு காலம் வரும்.... பலம் கொண்ட படையாகி பாய்ந்து வரும்.... பாரெல்லாம் மக்கள் ஆடி பாடும் காலம் வரும்.... பகை பிச்சை கேட்டு உலகெல்லாம் ஏறி ஓடும்.... பிணமாகி பகை உடல்கள் அங்கு விழும்... ஜந்தாண்டு முடிவிற்குள்ளே அவை நடக்கும்..... ஜந்தாயிரம் படைகள் அங்கு அழிநதொழியும்..;... அவலத்திலே தென்னிலங்கை மூழ்கியெழும்... ஆத்திரத்தில் அந்த மக்கள் பொங்கியெழும்... அதை ஆக்கிவித்த ஆட்சிகளை கலைத்தெறியும்... வேண்டமது யுத்தமென்று வேண்டியழும்.... தானக வந்துயதே தானே த…

    • 11 replies
    • 1.8k views
  3. அவன் புலி அவர்கள் புலி ஆதரவாளர்கள் இவன் அகிம்சாவாதி இவர்கள் அகிம்சாவாதிகள் அவன் துரோகி அவர்கள் துரோக கும்பல் இவன் எட்டப்பன் இவர்கள் எட்டப்பர்கள் அவன் புலம் பெயர்ந்தவன் அவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் இவன் தாயகத்தான் இவர்கள் தாயகத்தவர்கள் அவன் ஜனநாயவாதி அவர்கள் ஜனநாய்கவாதிகள் இவன் சோசலிசவாதி இவர்கள் சோசலிசவாதிகள் அவன் குறும்தேசியவாதி இவன் பெரும்தேசியவாதி நீ சந்தர்பவாதி நான் இவையாவும் சேர்ந்த கலவை சூப்பர் சுப்பிரமணிவாதி

  4. எங்களது தமிழ் கவிஞர்கள் பாடலாசிரியர்கள் எல்லோருமே பெண்களின் இடுப்பின் மடிப்புக்களை மட்டுமே வைத்து கவிதையும் பாடலும் எழுதியுள்ளார்கள். இவர்கள் இரனையை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் நான் வீடு மாறியதில் வேலை அருகாமையில் இருந்ததால் அண்மையில் நான் வேலைக்கு போவதற்காக ஒரு ஸ்கூட்டர் வாங்கினேன். அதுவும் கோடைகாலம். இன்று வேலைக்கு போய்க்கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னே ஸகூட்டரில் போய்க்கொண்டிருந்த ஒரு பெண்ணை பார்த்தும் வந்து உதித்தது.. என் ஸ்கூட்டரின் முன் ஸ்கூட்டரில் முன்னமர்ந்து போகிறவளே மடிப்பேயில்லாத உன் இடுப்பில் வழுக்கி வழுக்கி விழும் என் மன அவதியில் சிக்னல் சிவப்பா பச்சையா என்கிற சிதறிப்போன பார்வையில் மஞ்சளாய் என்மனது அல்லாட அசையும்…

  5. விரல்கள் .. வேண்டும் எண்ணங்களின் வலி என்னை எழுத வைக்கிறது நண்பர்களே .. எழுதுகோல் என் கையில்; ! எழுது .. எழுது என்ற ஏக்கமேயன்றி எதுகை மோனை. பாடுபொருள்….. பக்குவம் எல்லாம் தொலைந்து விட்டது .. நான் பிறந்த நாடு எனக்கில்லை .. என்றார் ! நான் பிறந்த மண்ணை தமதென்றும் சொன்னார் ! தட்டிக் கேட்ட தமிழரை யெல்லாம் சுட்டுக் கொன்றார் .. விடுபட்டுப் போன சிலரை பூசா முகாமில் பூட்டியே வைத்தார் .. தப்பியோடிய தமிழர்க்கு தந்ததே உலகம்.. அகதி எனும் நாமம் பல ஆயிரம் கண்கள் சிந்திய கண்ணீர் சில ஆயிரம் இதயத்தைக் கூட கரைக்கலையே ! பல ஆயிரம் உடல்கள் சிந்திய இரத்தம் சில ஆயிரம் உள்ள…

    • 8 replies
    • 1.4k views
  6. முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி கவிஞர் இன்குலாப் நினைவுப் படலத்தில் குருதிக் கோடுகளாய்ப் படர்ந்த கொடிய நாட்கள் அவை வானம் மறுக்கப்பட்ட பறவைகளை நான்கு திசைகளிலிருந்தும் நச்சு அம்புகள் துரத்திய நாட்கள் கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து அடைகாக்கப்பட்ட முட்டைகள் உடைந்து சிதற, மண்ணெல்லாம் உதிரக்கொடி படர்ந்த நாட்கள் பறவைகளின் நெஞ்சப்படபடப்பில் காற்றும் நெளிந்து கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள் வேடுவனின் இறையாண்மையில் குறுக்கிடமுடியாதென்று நாக்கைச் சப்புக்கொட்டி பறவைகளின் பச்சைக் கறிவிற்கக் கடைதிறந்த சந்தை வணிகர்களின் பங்கு நாட்கள். கிளிகளுக்கு இரங்குவதாய் அழுத பூனையொன்று ஒரு சிட்டு…

    • 0 replies
    • 750 views
  7. 'காதலுக்குப் போராடுகிறேன்' "தாலி கட்டி பொட்டு இட்டு தாரம் என்று ஊருக்கு கூறி தானும் தன் சுகத்திற்கு மட்டும் தாகம் தீரத் உடல் தீண்டுகிறான்!" "காதல் இல்லை கனிவும் இல்லை காத்தரமான ஒரு வாழ்வும் இல்லை காலம் முழுதும் நான் பணிசெய்து காமம் தணிக்கும் உடல் மட்டுமே!" "அன்பு வேண்டி உள்ளம் போராடுகிறது அணைப்புத் தேடி உடல் போராடுகிறது அயர்ந்து தூங்க கண் போராடுகிறது அலுப்புத் தட்டி உயிர் போராடுகிறது!" "குடும்ப கண்ணியத்தை மனதில் நிறுத்தி குழந்தை குட்டிகளை கவனத்தில் எடுத்து குதூகலம் மறந்து மௌனமாய் சஞ்சரித்து குற்றுயிராய் இன்று …

  8. நியூயோர்க் ஜம்பரில் லண்டன் ஸ்ரைலில் பி எஸ் 3 வாங்க பிளாசா போனேன் பிற்சாவோடு நிற்கையில் லப்டப் அடக்கமாய் நீ இருந்தாய். திறி டி விசனில் உன்னைக் காண ஐ ஆர் கொண்டு ஸ்கான் செய்தேன் எக்ஸ் பொக்ஸ் கேம் போல திறில்லாய் இருந்தாய்..! புளூருத் சிக்னலாய் என்னைத் தந்தேன் மொபைல் போன் கமராவாய் நீ என்னைப் பார்த்தாய். ஐபொட் ஒன்று வாங்கியே அருகில் வந்தேன் எம்பி 4இல் இசைதேடி எம்பி 3 இல் இசைந்தாய் என்னோடு. ஜி பி எஸ் நவிகேற்றராய் நீ வந்ததால் கை வேயில் ரவுண்டெபவுட் தேடி அலையும் நிலை களைந்தேன். டிஜிற்றல் கமராவாய் நீ அருகில் காணும் காட்சிகளோ பல மெகா பிக்சல் அளவுகளில். என்ன மாயமோ நானறியேன் சடின்லி.. பென்ரியம் 4 காட்டிஸ்க் போல ஸ…

  9. நீ கேட்கும் போதெல்லாம் என் கவிதைகளை தந்துகொண்டே இருக்கிறேன் ஏதாவது ஒரு கவிதையை படித்துவிட்டாவது என்னைக் கேட்பாய் என்ற நம்பிக்கையில் * தினமும் நீ என்னை பார்த்தும் பாராமல் போகிறாய் அதையும் பார்ப்பம் பாரமல் பார்க்காம எத்தனை மட்டும் பார்க்கப் போறாயென்று * சொன்னா கேக்க மாட்டிங்களா என்றதை கேக்கிறதற்காகவே தினமும் மழையில் நனைந்து வரலாம் * ஒரு இரவாவது நீ தூங்குவதை தூங்காமல் பார்க்க வேண்டும் என்ற என் ஆசை இன்னும் நிறைவேறவில்லை ம்ம் கொடுத்து வைத்த கணவன் நான் கொடுத்து வைக்கப் போகிற அம்மா நீ * நான் தொடர்ந்தும் உனக்காகவே கவிதை எழுத வேண்டும் என்பதில் எவ்வளவு ஆசை உனக்கு என் கவிதையை படித்துவிட்டு யாரு எழுதிய கிறுக்கலுக்கு …

  10. Started by nunavilan,

    உன் புன்னகை ஒரு பரவச தேசத்தின் பளிங்கு மாளிகை போல் பரிசுத்தமானது உன் புன்னகை. அது இரவை உடைக்கும் ஓர் மின்னல் கோடு போல தூய்மையானது தேவதைக் கனவுகளுடன் தூக்கத்தில் சிரிக்கும் ஓர் மழலைப் புன்னகையுடனும் ஒப்பிடலாம் உன் புன்னகையை. எனக்குள் கவிழ்ந்து வீழும் ஓர் பூக்கூடை போல சிதறுகிறது உன் சிரிப்பு. ஒரு மின்மினியை ரசிக்கும் இரவு நேர யாத்திரீகனாய் உன் புன்னகையை நேசிக்கிறேன். ஆதாமுக்கு ஆண்டவன் கொடுத்த சுவாசம் போல எனக்குள் சில்லிடுகிறது உன் புன்னகை. எனினும் உன் புன்னகை அழகென்று உன்னிடம் சொல்ல மட்டும் ஆயுள் கால தயக்கம் எனக்கு. நீ புன்னகைப்பதை நிறுத்தி விடுவாயோ …

    • 4 replies
    • 17.9k views
  11. அன்பு உள்ளங்களே அனேகரின் வேண்டுகொள்ளுக்கு ஏற்ப பல்வேறு வாழ்த்துக்கவிதைகள் பதிய போகிறேன் உங்கள் ஊகப்படுத்தளுக்கு மிக்க நன்றி என்றும் உங்கள் கவி கவிப்புயல் இனியவன் எல்லோருக்கும் பொதுவான பிறந்தநாள் கவிதை பிறந்து விட்டாய் இந்த பூமியை புரிந்து கொள்ள பிறந்து விட்டாய் ....!!! இயந்திரமய உலகம்…….! எதையும் விந்தையாக செய்யும் அதிசய உலகம் ....!!! விளங்கியும் விளங்காத மானிடம்……! விளங்க முடியாத பாசம் ... மயங்கி விடாதே .... நொந்துபோய் வெந்து வீழ்ந்து விடாதே ....!!! தூய சிந்தனைவேண்டும். சிந்தித்ததை சீரியதாய் செய்ய வேண்டும் .... உனக்காக எனக்காக வாழவேண்டாம் ........ நமக்காக வாழ கற்று கொள்....!!! வருடங்கள் வருவதும் அவை நம…

  12. கணையாழி ஜனவரி 2016 இதழில் வெளிவந்த எனது “கறுப்பு வெள்ளி” என்ற கவிதையை, யாழ் களத் தோழர்களுடன் தோழர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். கணையாழி ஆசிரியர் குழுவுக்கும், யாழ் களத் தோழர்களுக்கும் நன்றி! கறுப்பு வெள்ளி அந்தப் புதன்கிழமை என் நண்பனின் யாதுமாகிய காதலிக்குத் திருமணம். முகூர்த்த நேரத்தில் மலைக்கோட்டை மீதேறி அந்தத் திருமண மண்டபத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். அவளுடன் பேசிய அலைபேசியை ஒரு பாறையில் மோதிச் சிதறிடச் செய்தான். இறங்கி வருகையில் ஒவ்வொரு படியிலும் நின்று சங்கல்பம் எடுப்பதுபோல் எதையோ முணுமுணுத்தான். திரும்பி வருகையில் திருச்சி சாரதாஸில் அம்மாவுக்கு நூல்ப…

  13. பெயரிடப்படாதது இதோபார் நாம் இப்போ கீழொதிங்கி நிற்கும் இம்மரத்தின் பெயரை நானறியேன் இலைகளிலிருந்து வழிந்தோடும் மழைத்துளிகள் மட்டுமே எனக்குப் பரிச்சயமானவை மழைத்துளிகளுக்குப் பெயரிடாமலே மனம் அவற்றுடன் பரிச்சயமடையவில்லையா வசந்தகாலப் பசுமையைத் தாங்கும் மரங்களின் பெயர்களை அறிந்திருந்த ஒரு காலமமிருந்தது கலவிக்கழைக்கப் பாட்டிசைக்கும் பறவைகளின் நாமங்களும் பரிச்சயமாகவிருந்தன இலையசையும் திசைகொண்டு காற்றிற்கு நாமமிடும் திறனிருந்தது அப்போ பூமி உருண்டையானதென அறிந்திருந்தபோதும் தட்டையான ஒரு நிலத்துண்டம் மாத்திரமே உணர்திறனுக்குள் அகப்பட்:டுக்கிடந்தது தட்டையான உலகம் அர்த்தமுள்ளதாக இருந்தது இதோபார் பின்னர் வலங்கள் பலவற்றைக் கடந்த…

    • 4 replies
    • 1.4k views
  14. ஈழப் போரில் ஆயுதப் படையலுடன் இந்தியம் தன் சிங்கள விவாசம் தலைக்கேற செய்து முடித்தது வன்னியில் ஓர் இன அழிப்பு முள்ளிவாய்க்கால் பேரவலம்..! முரசொலியில் கடன்வாங்கி எழுதித் தள்ளிய காகிதத்தாள்கள் போக.. பிரணாப் முகர்ஜி தந்த மந்திர ஆலோசனையில் முதுகு வலி பிறக்க.. மூன்று மணி நேர உண்ணா நோன்போடு ஈழம் காத்த கடமை செய்தது திராவிடம்..!! அங்கோ... ஈழமதில் ஆயிரம் ஆயிரமாய் அப்பாவிகள் உயிர் புதைகுழி ஏகின சிங்களப் பகைவர்களால்..! இன்றோ... ரெசோ ராசா என்ற விளம்பரங்கள்.. அண்ணலின் பெயர் வளர்க்க அண்ணலோ மீண்டும் அண்ணாவின் பெயரால் அடிக்கிறார் ஒரு குட்டிக்கரணம்... "பிரணாப் முகர்ஜிகே என் ஆதரவு" போடுகிறார் முழக்கம்..! …

  15. அதிகாலை எழுந்து ....அம்மணமான உடையுடன் ....அம்மாவின் கையை பிடித்தபடி .....வீட்டின் முன்பக்கம் பின்வளவு ,,,,எல்லாம் சுற்றி திரிந்து ....அக்கா அண்ணா பள்ளி செல்லும் ....போது நானும் போகணும்....என்று கத்தியழுத அந்த காலம் ....வாழ்வின் "தங்க காலம் "......!!!பச்சைஅரிசிசோறு வேகும்போது ....அவிந்தது பாதி அவியாதது பாதி ....கஞ்சிக்கு கத்தும் போது ....பொறடாவாரேன் என்று சின்ன ....அதட்டலுடன் கஞ்சியை வடித்துதர ....பாதி வாய்க்குள்ளும் மீதி ...வயிற்றில் ஊற்றியும் குடித்த ....அந்த காலம் ....வாழ்வின் "பொற்காலம் "......!!!பாடசாலையில் சேர்ந்தபோது .....புத்தகத்தையும் என்னையும் ...தூக்கிகொண்டு சென்ற அம்மா ....சேலையின் தலைப்பை என் தலை ....மேல் போட்டு தன் தலை வெய்யிலில் ...வேக வேக வீட்டுக்கு வந்து .…

  16. Started by பாகன்,

    மார்பினிலே சாய்ந்திடலாம் மது மயக்கத்தை மிஞ்சிடலாம் பார்வையாலே பேசிடலாம் நாவினிக்கப் பரிமாறிடலாம் தேர் போலே ஜொலித்திடலாம் தெம்மாங்கும் பாடிடலாம் ஊர் போற்ற நடந்திடலாம் உற்றாரிடம் பேர் வாங்கிடலாம் பார் ஆளும் மன்னனுக்கும் பொறுப்பிலாத மனிதனுக்கும் மனதினிலே வாசம் கொள்ளும் மங்கையவள் மட்டுமே யார் கேட்பினும் பெருமையுடன் என்றென்றும் தயங்காமல் என்னவளென்றவன் சொல்லும் உண்மையான மனைவியாவாள்

  17. ராமன் தேடும் சீதை....... கவிதை..... மலர்களின் மணம்வீசும் இளவேனிற் காலத்தில் இனிய மாலைப் பொழுதொன்றில் நண்பனின் திருமண அழைப்பிற்கு தனிமையில் செல்கின்றேன்..... அழகான மண்டபத்தில் மிக அழகான சோடினைகள்..... என் மனதின் மகிழ்ச்சிக்கு இயற்கையின் அழகுடன் செயற்கையும் அழகுசேர்க்க காதலெனும் நினைவு என் கண்களால் வெளிவந்து என் பார்வைக்கு இறகுகள் பலமாக முழைத்துவிட.... தேடினேன் என் சீதையை...! கண்டு கொண்டேன் ஓர் அழகை என் அந்தபுற(ர)த்தில்...! ஆகா..! என்ன ஆச்சரியம்.. அம் மானின் அழகில் மயங்கிவிட்டு அம் மானை எனதாக்க விழி அம்பை தொடுத்ததும்... பதிலுக்கு ஓர் அம்பு பாய்ந்து வருகுறது..! என் பார்வை…

  18. Started by சுஜி,

    என் அன்பனா கணவனே கண்ணீர் துளியுடன் காத்து இருக்குறேன் உன் கல் அறையின் அருகில் உன் மகன் உடன் என் சோகங்களை சொல்ல ஆள் இல்லாமல்.

  19. Started by akootha,

    நேற்று கனடாவில் கிரவுண்ட் ஹாக் டே அது குழியில் இருந்து வெளியே தலையை நீட்டி தனது சுதந்திர நாளை எண்ணி போனது குழிக்குள் இன்று நவீன துட்ட கெமுனு தமிழீழ தலைநகரில் அறுபத்தி ஐந்து வருட அவலத்தை தொடருவேன் பண்டைய மன்னர்கள் புறாக்களை பறக்கவிட்டனர் சுதந்திரமாக அந்த பறவை போல நாமும் பறந்திடவேண்டும் எமது மண்ணில்..

    • 4 replies
    • 589 views
  20. சீனியம்மா என்னைப்பெற்றது என் அம்மாவானாலும் சிறுவயதில் உன்மடிதானே என் இடம் என் சீனியம்மா... நான் சிரிக்கப் பேசி சின்னக் கதை சொல்லி சித்திரமாய் என்னை வளர்த்தாய் ... உன்கை பிடித்தே நான் பள்ளிக்கூடம் செல்லும்பொழுது உலகமே என்கால் அடியில் ........ காலம் என்ற நதியில் கரைபுரண்ட வெள்ளத்தில் நீயும் நானும் மல்லுக்கட்டினோம்......... ஒவ்வரு வருடமும் இங்கு தோல் உரிந்து முடி உதிர்ந்து குளிர் வேளையில் உறையும் ஃபைன் மரங்கூட வெய்யில்பட புதுப்பெண் போல் பொலிவு பெறும்........ குருவிகளும் தேன் வண்டுகளும் ஃபைன் மரத்தை சுத்திவர , உனக்கும் எனக்கும் மட்டும் ஏன் சீனியம்மா கலண்டரில் கிழிஞ்ச கடதாசி போல் பொலிவு இழக்கின்றோம் ?????????? காலம் கிழித…

  21. சிங்களத்தில் பிரபலமான எனது கவிதை. . வசந்தகாலம் 1971 . இலங்கைத் தீவில் 1971 ஏப்பிரல் 5ல் ஆரம்பித்த சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி ஜூன் மாதம் பல்லாயிரம் சிங்கள இளைஞர்களின் படுகொலையுடன் முடித்து வைக்கப்பட்டது. 1971 ஏப்பிரல் கிளற்ச்சியின்பின்னர். ”தமிழ் இளைஞர்கள் அமைதியானவர்கள். சிங்கள இளைஞர்கள் பயங்கர வாதிகள்” என சிங்கள அதிகாரிகள் பலர் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன். . சிங்கள இளைஞர்கள் சிங்கள மக்களின் பங்குபற்றுதலோ தமிழ் முஸ்லிம் மலையக (தமிழ் பேசும்) மக்கள் பற்றிய அக்கறை இல்லாமலும் ”சிங்கள சமூக நீதி” அடிப்படையில் இக்1970ல் ஜெவிபி (Janatha Vimukthi Peramuna ) கிளற்சித் தலைவர் ரோகண விஜயவீர இதயநோய் சம்பந்தமாக வைத்திய…

    • 0 replies
    • 1.4k views
  22. கந்தகக் காற்றிலே... கந்தகக் காற்றிலே... வெந்து மடிந்தோமே....! சொந்த மண்ணிலே... சொந்த மண்ணிலே...! செத்து விழுந்தோமே...!! முள்ளிவாய்க்கால் மீது கிடத்தி, கொள்ளி வைத்தான்... எதிரி! கொத்துக் கொத்தாய்க் குண்டு போட்டு, சாக வைத்தான்... சிதறி!! பிஞ்சுக் குழந்தையெல்லாம் பிஞ்சு போனதடா.... நஞ்சுக் குண்டிலே எரிஞ்சு போனதடா..........! நெஞ்சம் வெடிக்கிற சேதி தினமே.... பஞ்சமின்றித்தான் வந்து சேர்ந்ததடா........!!! காப்பாற்ற முடியலையே... கதறி அழுதோம் நாங்கள்...! கேட்பாரற்று நீங்கள் சிதற... பதறித் துடித்தோம் நாங்கள்...! ஊமையான சர்வதேசம்... செய்ததெல்லாம் சர்வநாசம்..! போலியான மனிதநேயம்... சொன்னதெல்லாம் வெற்று வேஷம்..!! உரிமைகேட்டு.... உயிரைக் கொடுத்து, எழுந்து நின…

    • 3 replies
    • 2.1k views
  23. காதல் மலர்ந்தது! காதலர் தினமும் மலர்ந்தது! காதலர் மனமும் மலர்ந்தது! வருடம் ஒரு தடவை மலர்ந்தது! வசந்தம் அந்நாளில் வீசி செல்வது காதலர்களின் சுதந்திர தினமது காதல் பரிசு பரிமாறும் பொன் நாளது படித்ததில் பிடித்தது சுட்டது வீரகேசரி

  24. படைத்தவன் வாயடைத்துச் சென்றான். படைத்தவன் புூமி வந்தான் மனிதர்களைப் பார்த்து ஒரு வரம் தருகிறேன்.. கேளுங்கள் என்றான்.... ஆனால் ஒரு நிபந்தனை என்றான் உங்கள் அனைவரின் எண்ணமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றான் அனைவரும் சேர்ந்து சொன்னார்கள் நான் மட்டும் நல்லா இருக்க வேணும் படைத்தவன் வாயடைத்துச் சென்றான்.

    • 2 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.