Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பழஞ்சோற்றிலும் பழைய மீன்குழம்பிலும் இருந்த ருசி, இங்குள்ள பீட்சாவிலும் பர்கரிலும் இல்லை! நாட்டுக்கோழி... நம்நாட்டு நாட்டாடுபோல... கென்டுக்கியும் மக்டொனால்டும் இல்லவே இல்லை!! அழகான காரிலிங்கு சொகுசாக சுற்றினாலும், ஊரிலுள்ள தெருவெல்லாம்... சைக்கிள் மிதித்துத் திரிந்ததுபோல் சந்தோசமாயில்லை...! பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டால், வாய்மட்டுமா இனிக்கும்...?! முழு மனசுமே சேர்ந்தினிக்குமே! கிடைச்ச நேரமெல்லாம் கந்தப்புவின்ர காணியில விளையாடி மகிழ்ந்த கிரிக்கெட்டினை நேரடி அலைவரிசையில் பார்க்கமட்டுந்தான் முடிகிறது... இரசிக்க முடியவில்லை! அதிகாலை சுப்ரபாதத்தையும் திருவெண்பா காலச் சங்கொலியையும் அதிகாலைத் தூக்கத்திலும் இரசித்த மனதுக்கு ...இப்பொ…

  2. மே 17 இன் பின்னரான முடிவில் எங்காவது ஒமு முகாமில் நீ அடைந்திருப்பாய் ஆராவது கொண்டு வரும் மொபைலில் தொடர்பு கொள்வாய் இருக்கிறேன்……, என்ற செய்தி வரும் சந்திப்போம் மீண்டுமெனக் காத்திருந்த காத்திருப்பு காலாவதியாகிறது தோழா….. நீண்டநாளின் பின்னர் நேற்றிரவு வந்த அழைப்பில் உன் அக்கா பேசினாள்……. ‚‘அவனைப்பற்றி ஏதும் அறிஞ்சியளோ…..? எங்கினையும் இருந்தா என்ர தம்பி தொடர்பு கொண்டிருப்பான்…. எங்கையிருக்கிறானோ‘‘…..? ஏதாவது தெரியுமோ….? அவளது இனிமைக்குமாறான கதையிலிருந்தும் அம்மாவின் வளமைக்கு மாறான பேச்சிலிருந்தும் நான் புரிந்து கொள்வது….. இல்லையோ நீயென்று அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நம்பத் தொடங்குகிறார்கள்…… அதிகம் கவலையுறுகின்றார்கள் …

    • 4 replies
    • 1.3k views
  3. மே 18க்கு……! அழைத்தாலா வருவாய்? யார் யாரை அழைப்பது? அழைத்தாலா வருவாய் யார் யாரை அழைப்பது அறியத் தருவாயா ஊரூராய் பிணக்காடாய் உன் உறவும் பிணமாக போனதந்த நாளினிலே எதுவும் கேட்காதே புறப்பட்டு வாவென்று சொல்ல வேண்டுமெனில் வினாவொன்று இருக்கிறது நீ தமிழனா! வெற்றியிலே பங்கேற்று வீரமுடன் வீறுகொண்டாய் வீழ்ச்சியிலே யாரென்று விலகி நிற்பதென்ன காலத்தின் நகர்வுகளோ காட்சிகளாய் விரிகிறது அன்னை மண்ணிருந்து அழகாய் வளர்ந்தவனே உன்னை உருவாக்கி உலகில் வாழவைத்த அன்னை மண்பட்ட அவலம் உரைப்பதற்கு அழைப்பு உனக்கெதற்கு அழைப்பு வேண்டுமெனில் வினாவொன்று இருக்கிறது நீ தமிழனா! நீ தமிழனா இல்லை மனிதனா மனிதம…

    • 4 replies
    • 1.3k views
  4. மீட்பரினாலும் மீட்கப்படாமல்போன ஈராயிரத்து ஒன்பது வருடங்கள் கழித்து... ஒரு இனத்தையே ஒட்டுமொத்தமாய் சிலுவையில் அறைந்தது சர்வதேசம்! அன்றுதான்... ஈழத்தின் கிழக்குக்கரை வாய்க்காலில் செந்நிறநீர்... ஆறாய் ஓடியது! பரலோகத்தில் இருந்த எங்கள் பிதாவுக்கு காது செவிடானதும் அன்றைக்குத்தான்!! ஒரு கல்வாரிப் பயணத்தை முப்பது வருடங்களாய் சுமந்து களைத்த மீட்பர், அன்றுதான் காணாமல்போனார்! பல யூதாஸ்கள் தோன்றினார்கள்!! ஆட்டுமந்தைகள் எல்லாம் பட்டியில் அடைக்கப்பட்டன! காணாமல் போன பல ஆடுகளை புலிதான் வேட்டையாடியதாய் ஊருக்குள் கதைப்பதாக உலகச் சந்தியின் மதவடியில் உட்கார்ந்து, பரமசிவமும் பான்கீமூனும் பம்பலாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்! ஆனால் அதேநேரம்... எல்லாம் புரிந்தும்…

  5. 'வேப்பம் பூ மிதக்கும் எங்கள் வீட்டு கிணற்றில் தூர் வாரும் உற்சவம் வருடத்துக்கு ஒருமுறை விசேஷமாக நடக்கும் ஆழ நீரினுள் அப்பா மூழ்க மூழ்க அதிசியங்கள் மேலே வரும் கொட்டாங்குச்சி,கோலி, கரண்டி துருபிடித்த கட்டையோடு உள்விழுந்த ராட்டினம், வேலைக்காரி திருடியதாய் சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்' சேற்றுக்குள் கிளறி எடுப்போம் நிறையவே, 'சேறுடா சேறுடா' வென அம்மா அதட்டுவாள் என்றாலும் சந்தோசம் கலைக்க யாருக்கு மனம் வரும்? "படை வென்ற வீரனாய் தலைநீர் சொட்டச் சொட்ட அப்பா மேலே வருவார். இன்று வரை அம்மாவும் கதவுக்கு பின்னாலிருந்துதான் அப்பாவோடு பேசுகிறாள். கடைசி வரை அப்பாவும் மறந்தேபோனார் மனசுக்குள் தூர் எடுக்க"... #விகடனில் ப…

    • 9 replies
    • 3.2k views
  6. "தமிழ் முரசு"(ஞாயிறு பதிப்பு){சிங்கப்பூர் தமிழ் தினசரி} இல் இன்று படித்ததில் சட்டென்று மனதைப் பற்றிப் பிசைந்த கவிதை... மிக இலகுவான மொழி நடை... இலாகவமான,ஆனால் காத்திரமான சொல்லாட்சிகள் என்றதுடன்,ஈழத்தமிழர் அல்லாதவரின் கவிதை என்பதும் கவரத் தூண்டின... நன்றிகளுடன் யாழ் கள உறவுகளோடு பகிர்ந்து கொள்கிறேன் வேர் வாசிகள் - பிச்சினிக்காடு இளங்கோ வாழ்க்கையை விரும்பியவர்கள் மண் சுதந்திரத்தை மறுதலித்தார்கள். மண் சுதந்திரம் மானம் என்றவர்கள் வெடித்துச் சிதறினார்கள். களத்தில் நில்லாமல் காகிதத்தில் நின்றவர்கள் புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள். கல்லறைகளில் எழும் கட்டடடத்தில் குடிபுக மல்லுக் கட்டுகிறார்கள் சனநாயகத் துணையுடன்

  7. Started by இலக்கியன்,

    தீபங்கள் வரிசையாக ஏற்றி தீமைகள் நீங்கிய நன் நாளாம் ஈழத்தின் அவலங்கள் நீங்கி ஈர இரத்த ஆறுகள் அடங்கி ஈன சிங்கள் அரக்கன் வீழ்ந்து ஈழம் மலரும் நன்நாள்-எம் ஈழத்தமிழருக்கு தலைத்தீபாவளி

  8. முதன்முதலாய் உன்னருகே நான். உன் போதை விழிகள் என் உடலில் எழுதின எனக்கான தலைவிதி. உன் மனமெப்படியோ அப்படியே செல்ல என் வாழ்க்கை பயணிக்கும் போது இடையிடையே இரவுத் தீண்டல்களில் பாதை தடுமாறும். உனக்காக பட்டினி கிடந்தேன் பல நாட்கள் மனநிறைவாய் வருவாய். எனக்கென இருநாட்கள்கூட உன் மனம் தாங்காது சலித்துப் போய் நடுநிசியில் யாருமில்லாத வானத்தை வெறுப்பாக பார்ப்பதும் கொண்டாட்டமில்லா இரவுகளை அடியோடு தொலைப்பதும் இன்றைய சூழ்நிலையாக்கினாய். உன் விஷமம் அறிந்தும் உன்னுயிரோடு ஒட்டுகிறேன் பிளாஸ்டிக் பை நீராக... நீ என்னோடு எழுதிய கவிதைகள் என் அருகே உறங்குகின்றனவே!

    • 12 replies
    • 2k views
  9. எத்தனை நகைப்பொலிகள் இன்னும் என்காதுகளில் சிரிக்கட்டும் விட்டுவிடு சீர்கெட்ட உலகம் இது ஒடும் படைகளினது வெற்று வேட்டொலிகள் துளைக்காது உன் இதயம் போகட்டும் விட்டுவிடு சிரித்தவன் இன்று இங்கே சிறந்தவள் என்கின்றான் சிரிக்கிறேன் நான் இங்கே என் ஒலி கேட்கிறதா?

  10. [Wednesday, 2011-06-15 21:36:15] முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயலும் சிறிலங்கா அரசு:செனல்-4 வினால் அல்ஜெஸீராவிடம் மாட்டிக் கொண்ட ரஜீவ் விஜயசிங்க எம்.பி அறிவிப்பாளரைக் கேள்வி கேட்கவிடாமல் கதையளக்கும் காணொளி.. http://youtu.be/sdrCR-X4iH0 http://www.seithy.com/breifNews.php?newsID=44922&category=TamilNews

  11. Started by கஜந்தி,

    ஆசை அதிகாலை தன்னில் பறவைகளின் இசையில் எழுந்திட ஆசை சூரியன் தீண்ட முதல் பணித்துளிதன்னை-நான் தொட்டு விளையாடி மகிழ்ந்திட ஆசை தென்றலின் வருகையால் அசைந்திடும் மொட்டுக்கள் மலர்ந்திடும் அழகால் சிந்திடும் பனித்துளியில் நான் நனைந்திட ஆசை மென்மையான பூக்களின் இதழ்களில் - என் முகம் புதைத்து கண்முடி -இந்த வாழ்கை தன்னை மறந்திட ஆசை இளங்காற்றின் அசைவில் ஆடிடும் மரங்களின் ஓசை தனை ரசித்தபடி நதிக்கரை ஒரமாய் நடத்திட ஆசை சண்டை இல்லா உலகில் மனிதர்கள் மகிழ்ச்சியுடன் மட்டும் வாழ்வதை பார்த்து ரசித்து விட ஆசை நிறைவு பெறுமா இவள் இறுதி ஆசைமட்டும் புரியாது …

  12. Started by Ahasthiyan,

    உனக்கு எப்பொழுதும் அடுத்தவர் துன்பத்தில் ஆனந்தம் அதுவும் தமிழர்கள் பிணங்களை எண்ணுவது பேரானந்தம் நீ செய்ய நினைத்ததை அவன் செய்தான் - ஆதலால் அவன் ரகு வம்சம் நாம் அரக்கர்கள் ஆனோம். தூது போக அனுமார்கள் தேவையில்லை இருக்கிறார்களே எம்மூர் விபீசணன் மார் அரசியல் எமக்கு தெரியாது - ஆனால் காலம் காலமாக அண்டிப் பிழைக்கிற ஆக்களை அடையாளம் காணத் தெரியும் மகா பாரதம் உனக்கு பொருந்துதோ? இல்லையோ ? எம் தர்மம் ஒரு நாள் வெல்லும்

  13. Started by yaal_ahaththiyan,

    இதுவரை கணக்குகளை மட்டும் விளங்கபடுத்த என் கையோடு கூடிய பேனா முதல் முறை உனக்கு கவி எழுத என் கையோடு கூட்டியதில் வந்த கழித்தல்கள் இவை தயவு செய்து சிரித்துவிடாதே கலைந்து கிடக்கும் என் எழுத்துக்கள் இன்னும் கலைந்துவிடும் பல கோடி கவிதைகளை கண்டபின்னும் பசியாறவில்லை இன்னும் காதலுக்கு எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி சிலையின் கையில் கொடுக்கப்பட்ட பேனாபோல் அசையாமல் மிதக்கிறேன் கற்பனைக்கடலில் எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி எண்ணில் விட்டதில்லை எழுத்துக்களில் விடுவதுண்டு பிழை எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி உனக்காய் கவி எழுத விடிய விடிய யோசித்ததில் இரவுகளின் நீளத்தை என்னால் இப்படித்தான் அளக்க முடிந்தது ந…

  14. Started by yaal_ahaththiyan,

    உனக்கு சந்தேகம் அதிகம்தான் இல்லையென்றால் எதற்காக உன்னோடு நட்சத்திரங்களையும் கூட்டிப் போகிறாய் * என் இதயக் கரும்பலகையில் உன் பெயரே நிலவு * உன் இதழைத் தொட்டுக் கொடுப்பதால்தான் கேட்டு வாங்குகிறாய் என் முத்தங்களை * முத்தக் கவிதைக்காய் என் காது மடலையும் விட்டு வைக்கவில்லை உன் இதழ்கள் * அம்மா எவ்வளவுதான் சுற்றிப் போட்டாலும் உன் கண்படும் இடத்தில் எப்போதும் நான் -யாழ்_அகத்தியன்

    • 3 replies
    • 1.2k views
  15. உயிருடன் இறந்து விட்டேன் ஒரு நொடி கண் சிமிட்டல் ...!!!sms கவிதை ///////சின்ன சின்ன வலி வார்த்தைகள் பழகிவிட்டேன் வலியை தாங்க sms கவிதை சந்தோசம் நீ நினைக்கும் இடத்தில் இல்லை..நீ இருக்கும் இடத்தில் உண்டும் +sms கவிதை காதல்எல்லோருக்கும் வரும்எனக்கு போய்விட்டது +sms கவிதை பூக்கள் வாசனைக்காக பூக்கவில்லை தன் வாழ்க்கைக்காக பூக்கிறது - காதலும் அப்படித்தான் ....!!!+sms கவிதை நீ காதலிக்காதுவிட்டாலும் எனக்குகாதல் வந்திருக்கும்உன்னை பற்றிய கவிதை ...!!!+sms கவிதை கவிதைக்கு கற்பனை.....வேண்டும் -உன்னை....நினைத்தால் கற்பனை.....வரமுன் கண்ணீர் ....வருகிறது ....!!!+sms கவிதை

  16. இணையம் கண்டெடுத்த இதயம் (சும்மா ஒரு எதுகை மோனைக்காக!) எப்போதோ சந்தித்த ஒருவர் உலகத்தின் இன்னொரு மூலையில் வந்தபின் மீண்டும் ஹலோ சொல்வதால் வரும் சந்தோசம் பெரிது! கணினித் திரை வழி கைகள் சொடுக்கி இணையத்தில் தேடினேன் சந்தை நிலவரம் முதற்கொண்டு சாதிக் கலவரம் வரை உலகத்தின் வினையத்தனையும் விபரமாய்த் தரும் இணையத்தில் முந்தை ஒரு நாள் வீதியில் புன்னகைத்துச் சென்றவளும் சேதிகள் பலகொண்டு தேடியே வருவாள் என்று என்றேனும் நினைத்தேனா? விந்தையிது வென்று கூத்தாடி நான் மகிழேன்... இணையத்தின் அகன்ற கைகளில் உலகம் வெறும் எள்ளுருண்டை! http://kaviruban.spaces.live.com/blog/cns&...B!170.entry அண்ணா சும்ம…

  17. பால்ராஜ் அமரனுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன் அமரா நீ மீட்ட ஆனையிறவில் சுடப் பட்ட செங்கால் நாரைகள் போல் வன்னியெங்கும் தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே. என் கவிதையிலே நீ இருக்க ஈழம் கதறியழும் நியாய மென்ன. நீயோ முடங்கிய காலில் மூண்டெரிந்த விடுதலைத் தீ. தீவெட்டியாய் உன்னைச் சுமந்து சென்ற தோழருக்கு 'இத்தாவில்' பகையிருட்டில் வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா. உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு. களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல் காலங்கள் ஊடே என் கவிதை இனிச் சுமக்கட்டும் அவனை ஆழப் புதைக்காதீர் ஆலயங்கள் கட்டாதீர். நாளை மணலாற்றை மீட்டு வாழ திரும்புகையில் நம் சனங்கள் மசிரை விட்டுதுகள் தம் மனம் நிறைந்த நாயகனை. …

    • 26 replies
    • 7.5k views
  18. கட்டழகி தந்த காயம்.... கவிதை...... என் பார்வையில் மயங்கி பதிலுக்கு சிரித்தாள் நானும் சிரித்தேன்........ பக்கத்தில் வந்தாள் நானும் மகிழ்ந்தேன்...... தன் பெயர் கூடச் சொன்னாள் என் பெயர் நானும் சொன்னேன்..... ஓர் நாள் பழக்கத்தில் ஓர் உடல் ஆனோம்...... ஒன்றாகக் கை கோர்த்து பூங்காவில் நடந்தோம்..... சந்தோசத்தில் நாம் எமை மறந்து நடக்க.... கால் தடம் புரண்டு அவள் ஆற்றினில் விழுந்தாள்...... எனக்கு நீச்சல் தெரியாது இருந்தும் என் உயிரைக்காக்க ஆற்றினில் குதித்தேன்... என்னால் நீச்சல் முடியாமல் நீரின் மேலுக்கு வந்தேன்... தண்ணீரில் விழுந்த வலியும் தாங்காமல் என் மூக்கிலிருந்து நீரை எடுத்தேன்... என்னால் முய…

  19. சொல்லக்கூடிய வார்த்தைகளுக்குள் என் சோகம் எழுதப்படவில்லை எழுதியதெல்லாம் உன்னைப்பற்றி என்பதால் அழுகைகூட ஆனந்தமாகிறது...! வாசிக்கும் வாய்க்கும் வழிகாட்டும் விழிக்கும் விளங்கவில்லை வாசிக்கும் உன் மடல் முட்களாய் மூளையை கிழிப்பது ...! விழித் தெறிப்புக்குள் தலைகீழாய் விதி எழுதும் சாட்சியத்தில் நானும் கைதியாய் நடிக்கக் கற்றேன் தப்பிக்க முடியவில்லை...! தாகம் அற்ற நிலத்தில் தவறிவிழும் மழைத்துளிபோல் வெயிலுக்கும் வேகாமல் போனது தினம் உதிரும் கண்ணீர் துளிகள் ...! வாழ்வும் ,சாவும் வாழ்க்கைச் சலனங்களில் உயிர் குடிக்கும் உத்தரவாதங்களுக்குள் இன்னும் உயிர் வாழ்கிறது தேடல் திரும்பிப் பார்த்தாவது திருப்பிவிடு உன்னி…

  20. என் சிறகுகளை முறித்தெறிந்துவிட்டு, ஏன் சிரித்துக்கொண்டிருக்கிறாய்? அப்படியே உன் பாதங்களால் நசித்துக் கொன்றுவிடு! என் வலிகளை ரசிப்பாய் என அப்பொழுதே தெரிந்திருந்தால், பூக்களை வெறுக்கும் வண்ணத்து பூச்சியாய் வாழ்ந்திருப்பேன்! வண்ணத்தில் மயங்கி... வாசத்தில் கிறங்கி... வலிகளை வாங்கிய கஷ்டம் எனக்கிருந்திருக்காது. காலங்கடந்த ஞானம் எனக்குள் -இப்போது! என் மெளன மொழிகளில் கெஞ்சிக் கேட்கிறேன், அப்படியே உன் பாதங்களால் நசித்துக் கொன்றுவிடு! -இல்லையேல், என் முறிந்த சிறகுகள் கூட, உன்னைக் காயப்படுத்தலாம்!!!

  21. கேணல் ராயூ நினைவாக… வெற்றிகளின் பின்னால் இருந்த பேராற்றல்… இடிவிழுத்திப்போகும் இச்செய்தி வருமென்றா உன்னை வழியனுப்பி வைத்தோம் போர் ஓய்ந்த நாளிலும் எமக்கேன் இடி விழுகின்றது குருதி நரம்புகள் உறைந்துபோக நெஞ்சில் குத்தீட்டி ஏறுகின்றது கேணல் ராயூ குயிலலெனவும் இவன் குறிக்கப்பட்டான் அதிகம் பேசாமல் அதிகம் சிரியாமல் அதிக அதிசயம் நிகழ்த்திய அதிசயன் . தலைவருகில் தன்னை தயார்படுத்தியதால் கதிரவன் ஒளிகசிந்து ஊறியகாளை நுட்ப மதி நிறைந்த நுாதனன். விடுதலையன்றி வேறொன்று சிந்தியா விவேகன். புதிய அரும்புகள் முளைகொள்ள நாற்றங்கால் போட்ட நாயகன். பெருவெற்றிகள் ஒவ்வொன்றின் பின்னாலும் இந்தபுலிமகனின்பேராற்றலும் இருந்தது பகை நெஞ்சேறிய குண்டுகள்…

  22. எங்கள் முகாரிகளே.. முரசுகளாக மாறும். மௌனித்துக் கொண்டவர்களே! இனிமேல் மனிதத்தைப்பற்றிப் பேசாதீர்கள். பேசினால் உங்கள் கருத்தைக் காவிவரும் மொழி களங்கப்பட்டுவிடும். எட்ட நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, ஆதாயம் உண்டென்றால் இனவாத அரசின் செயலை ஆதரித்து, இந்த இனஅழிப்பிற்கு, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று முத்திரை குத்திவிட்டு முறுவலித்துக் கொள்ளுங்கள். இப்போது முகாரிகள் எங்கள் தேசியமொழியாகிக் கிடக்கிறது. வலியனை வாழ்த்துவது வழமையானதுதான்… நாங்கள்தான் முட்டாள்கள் போலும். எங்கள் ஒப்பாரிகள்…. உங்கள் செவிப்பறையில் மோத மானிடத் துடிப்புக் கொள்வீர்கள் என்று நம்பி, ஏமாந்து கொண்டிருக்கிறோம். எங்கள் பிள்ளையர்தான் எங்கள் வல்லமைகள்…

  23. Started by izhaiyon,

    விடியல் வன்னியில் போர்மேகம் புலத்தில் மக்களின் எழுச்சி .... வீதியில் தாய் தமிழககத்தில்...அரசியல் சித்து சிலபேரின் தற்கொடை தவிர வெறீயின் விளின்பில் தமிழீழம் புலம் மக்களோ வீதியில் எழுச்சியில்... சர்வதேசம் பாராமுகம் விடியல் தூரம் இல்லை விழித்திரு விடியலுக்காக இளையோன்

    • 0 replies
    • 780 views
  24. அடிமைக் கால பெரு நதி நீள்கின்றது யுகங்களுக்கு அப்பால் பெருக்கெடுத்த காலம் எம்மை அடிமையாக்கியே இன்னும் நீண்டு செல்கின்றது ஈழப் பெருங் கடலையும் கால நதி சப்பித் துப்பியது போர்ப் பரணி பாடி அணிவகுத்த ஆயிரமாயிரம் தோழர் போன திசை அழித்த காலம் பெரும் பசி கொண்டு அலையுது நெஞ்சில் கனல் கக்க தோழர்களை காத்த மக்கள் மீதும் நெருப்பு துகள்களை கொட்டி பெரும்பசியை தீர்த்தலைகின்றது காலத்தின் திசைகளை எமக்கு எதிரியாக்கியது யார் கொட்டும் குளவிகளின் நுகத்தடியில் எம் தலைவிதியை செருகியது யார் எதிரியின் கையில் காலத்தை ஒப்படைத்தது யார் எமக்கான காலத்தை நாமே எழுத முயன்ற ரட்சகனையும் கால ராட்சதனா கொன்றழித்தான் அடிமை…

    • 13 replies
    • 1.8k views
  25. இன்று தமிழ்த்தேசத்தின் புதல்வன் பாலச்சந்திரன் பிறந்தநாள். சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன பாலச்சந்திரன் நினைவாக எழுதிய கவிதை இது. # பாலச்சந்திரன் சிறு நிலா சிறு நிலாவா? அதைச் சொல்லவும்கூடுமோ? பத்துத் திக்கும் சுடரொளி வீசிய சூரியனைக் கொன்றது சிங்கம் தாய்நிலத்தைச் சூழ்ந்த குருதியால் சுவரோவியங்கள் வரையப்படுகின்றன சினத்துடன் சிங்கம் சிறிய நிலாவையும் கொன்றபோது முகில்களின் திரையைக் கிழித்து உள்ளே ஒளிந்தது நிலா பயத்தில் ஒடுங்கின நட்சத்திரங்கள் இருளின் சஞ்சாரம் நிலா சூரியனாக மாறுகிற ஒரு நாள் வரும் அப்போது எங்களுக்கு ஒளிவதற்கும் இடம் கிடையாது. https://www.facebook.com/parani.krishnarajani?hc_location=stream

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.