வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கவிஞர் வாலி சுயநினைவை இழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட கவிஞர் வாலி(82) கடந்த யூன் 7ம் திகதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வார காலத்துக்கு பின்பு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வாலியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதையடுத்து உடனடியாக அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவின் கீழ் சிகிச்சை பெற்று வரும் கவிஞர் வாலி சுயநினைவை இழந்துவிட்டதாக மருத்துவமன…
-
- 1 reply
- 442 views
-
-
சாலையோரம் நாதஸ்வரம் வாசிக்கும் நபர்... கண்டுபிடிக்க உதவி கோரும் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதோடு சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43-வது படம் ஆகியவற்றிற்கு இசையமைத்தும் வருகிறார். இந்நிலையில் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட இணையவாசி ஒருவர், இவரது வாசிப்பையும், இருக்கும் நிலைமையையும் பாருங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ், 'இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால், நாம் அவரை பாடல் பதிவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்புகள் மிக…
-
- 1 reply
- 518 views
-
-
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி வரும் ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கவிஞர் வைரமுத்து 7 பாடல்களை எழுதியிருக்கிறார். அதில் சிவனை நோக்கி தவமிருந்த ‘கோச்சடை யான்’ ஆடும் ருத்திர தாண்டவ பாடல் ஒன்றும் அடங்கும். ‘கோச்சடையான்’ என்றொரு படைத் தலைவன். அவன் ஒரு ஞான குருவும்கூட. தீவிர சிவ பக்தன். போர் முடித்துவிட்டு ருத்திர தாண்டவம் ஆடுகிறான். அந்த ருத்திர தாண்டவம் அவ்வளவு அழகாக படமாகி உள்ளது, என்கிறார் கவிஞர் வைரமுத்து. இந்தப் படத்தின் ரஜினியின் ருத்திர தாண்டவம் தனி சிறப்பாக அமையும். இந்த ஆடலுக்கு இசை மட்டும் இருந்தால் போதும் என்று முதலில் முடிவு எடுத்தார்கள். நீ…
-
- 1 reply
- 936 views
-
-
இசைஞானி இளையராஜா. இணையற்ற திரை இசை மேதைகளில் ஒருவர். திரைப்படங்களின் காட்சிகளின் வசனங்களைத் தன் பின்னணி இசை மூலம் பேச வைத்தவர். தென்கோடி கிராமத்தில் பிறந்து தேம்ஸ் நதி நகரை இந்தியா நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பெருமை இவருக்கு உண்டு. தினமும் சரியாகக் காலை ஏழு மணிக்கெல்லாம் தன் ஒலிப்பதிவு கூடத்திற்கு வந்துவிடுகிறார். நாள் முழுதும் நடக்கும் இசைப் பணிகளுக்கிடையே யாரையும் சந்திப்பதில்லை. ‘தி ஹிந்து’ இதழுக்காக அவரைப் பிரசாத் ஸ்டுடியோவில் சந்தித்தோம். பிரகாஷ் ராஜின் ‘உன் சமையலறையில்’ படத்திற்கான பின்னணி இசையமைக்கும் பணிக்கு இடையில் பேசினார் இசை ஞானி. உங்கள் பார்வையில் ஒரு பாடல் என்பது எப்படி இருக்க வேண்டும் நினைக்கிறீர்கள் ? பாடல் பாடலாக இருக்க வேண்டும். அது உள்ளத்த…
-
- 1 reply
- 496 views
-
-
ஐந்து படங்கள் வெளியானால், அதில் மூன்று படங்களில் இருக்கிறார் ஜெயப்பிரகாஷ். குணச்சித்திர வேடம், மிரட்டாத வில்லத்தனம் என்று ஒரு பக்கம் ஜெயப்பிரகாஷ் ரவுண்டு கட்ட, மறுபுறம் ஜெ யப்பிரகாஷின் மகன்கள் நிரஞ்சன், துஷ்யந்த் இருவரும் 'வந்தோமம்மா வந்தனம்!’ என்று ஆஜராகிறார்கள் 'ஈசன்’ திரைப்படத்தில். ''அப்புறம்... கலைக் குடும்பம் ஆகிட்டீங்க!'' என்றால், ''ஐயையோ... அப்படி எல்லாம் இல்லைங்க!'' என்று மென்மையாகச் சிரிக்கிறார் ஜெயப்பிரகாஷ். ''ஒரு தயாரிப்பாளரா படங்கள் தயாரிச்சு, அப்புறம் சினிமாவில் இருந்து விலகி... கொஞ்சம் ஊசலாட்டமான ஒரு வாழ்க்கை. சேரன்தான் முதலில் 'மாயக் கண்ணாடி’ படத்தில் நடிக்க அழைத்தார். 'பொற்காலம்’ படம் தயாரித்த காலத்தில் இருந்து சேரனைத் தெரியும். 'சார், வேணாம்... இத…
-
- 1 reply
- 1.8k views
-
-
நடிகை மோகினியும், அவரது கணவர் பரத்தும் பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்ள தீர்மானித்து குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். இதேபோல நடிகை ஊர்வசியும் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். ஈரமான ரோஜாவே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மோகினி. முதல் படம் ஹிட் ஆனதால் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் போகப் போக வாய்ப்புகள் மங்கவே 2003ம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்தத் திருமணம் ஐந்து ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. சமீபத்தில் இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். இந்தநிலையில் இருவரும் பரஸ்பர விவாகரத்துக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர். இன்று காலை குடும்ப நல நீதிமன்றத்திற்கு மோகினியும், பரத்தும் ஜோடியாக வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
டோலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்கும் பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கும் கவர்ச்சிப் புயல் ஹன்ஸிகா ஐதராபாத்தில் ஒரு சாலை விபத்தில் சிக்கிக் கொண்டார். மஸ்கா எனும் தெலுங்குப் படப்பிடிப்புக்கு போகும்போதுதான் இந்த விபத்து நடந்தது. அதிர்ஷ்டவசமாக கையில் காயத்துடன் (ரத்தம் கொட்டியது!) தப்பிவிட்டார். உடனே அவரை பஞ்சாரா ஹில்ஸில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிப் போனார்கள். சிகிச்சைக்குப் பிறகு நன்றாக ஓய்வெடுங்கள் என மருத்துவர்கள் கூறினாலும் இருப்புக் கொள்ளவில்லையாம் அம்மணிக்கு. அடுத்த ஒரு மணிநேரத்திலேயே மருக்குவமனையிலிருந்து வெளியே வந்துவிட்ட ஹன்ஸிகா, நேராக படப்பிடிப்புத் தளத்துக்குப் போய்விட்டார். கதாநாயகிக்கு விபத்து என்பதால் படப்பிடிப்பை ரத்து செய்துவிடும் மூடிலிருந்த இயக…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 1 reply
- 178 views
- 1 follower
-
-
மும்பை, நடிகர் ரஜினிகாந்துக்கு மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்க வேண்டும் என்று மராட்டிய சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. அனில் கோடே வலியுறுத்தினார். மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் மும்பையில் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ., அனில் கோடே பேசியதாவது:- இந்த மண்ணின் மைந்தரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மராட்டிய அரசின் உயரிய விருதான மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். ரஜினிகாந்த் கோலாப்பூர் மாவட்டத்தில் சிவாஜி கெய்க்வாட் என்ற பெயரில் பிறந்தவர். பட வாய்ப்பு தேடி தமிழ்நாடு சென்றார். இன்றைக்கு திரைத்துறையில் கடவுளின் அவதாரத்துக்கு நிகரான அந்தஸ்தை பெற்றிருக்கிற…
-
- 1 reply
- 277 views
-
-
உதட்டுச் சுழிப்பும் உடுக்கை இடையுமாக உள்ளத்தை கொள்ளையடிக்கிறது இலியானாவின் அழகு. ஆந்திராவின் லேட்டஸ்ட் தேவதை அம்மணிதான். தெலுங்கில் இவர் நடித்த 'தேவதாஸ்', 'போக்கிரி' இரண்டு படமும் சூப்பர் ஹிட் ஆனதால் ரொம்பவே பிஸி ஆகிவிட்டார். 'முன்னா', 'ஆட்டா', 'ராக்கி' (எல்லாமே மூன்றெழுத்தா இருக்கே....) என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் 'கேடி'யில் அறிமுகமான இலியானா விஜய், சூர்யா படத்துக்குகூட கால்ஷீட் கொடுக்க மறுத்து கோடம்பாக்கம் திரும்ப தயங்குகிறார். தமிழ் படத்துல நடிக்கமாட்டேன்னு சொல்றீங்களாமே? இலியானாவிடமே கேட்டால், "அய்யய்யோ அப்படியெல்லாம் தப்பா சொல்லாதீங்க" என வாயை பொத்துகிறார். "சாப்பிடவும், தூங்கவும்கூட நேரமில்லாமல் தெலுங்…
-
- 1 reply
- 1k views
-
-
பட மூலாதாரம்,X படக்குறிப்பு, நந்தன் திரைப்படம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக ஊராட்சி பதவிகளை வகிக்கும் தலித் சமூகத்தினர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கிகளையும் ஆதரவையும் பெற்று பதவிக்கு வரும் தலித் தலைவர்கள் எவ்வாறு கைபொம்மையாக ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்பதுதான் நந்தன் படத்தின் ஒன்லைன். இந்த படத்தை ரா. சரவணன் இயக்கியுள்ளார். படத்தில் சசிகுமார், பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஆர்.வி. சரண் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். கதை என்ன? புதுக்கோட்டையில் உள்ள வணங்கான்குடி என்ற ஊரில் ஊராட்சி மன்றத…
-
- 1 reply
- 215 views
- 1 follower
-
-
இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் --பிரபுதேவா http://videos.oneindia.in/watch/4020/micha...rabhu-deva.html
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=2] இணைதளம் ஒன்றின் தொடக்க விழாவிற்காக சென்னை வந்திருந்தார் மம்முட்டி. அப்போது அவர் அளித்த பேட்டி.[/size] [size=2] "மலையாள சினிமா தனிதன்மையை இழந்து வருகிறதா?” [/size][size=2] மலையாள சினிமா தனது தனித்தன்மையை இழந்து வருகிறது என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. கொஞ்சம் கொஞ்சம் பாதிப்பு இருக்கலாம். முழுக்க சீரழிஞ்சிட்டின்னு சொல்ல முடியாது. இன்றும் தேசிய விருதில் முன்றில் ஒரு பங்கு எங்களுக்கு தான் கிடைக்கிறது. கதையோட உள்ளடகத்தை பற்றி கவலைப்படுவதும் நாங்கள் தான். தமிழ் சினிமா சாயலை மலையாள சினிமா உள் வாங்கி இருப்பதும் உண்மை தான் ஆனாலும் அதை குறை சொல்ல முடியாது. [/size] [size=2] "நீங்கள் சமீபத்தில் பார்த்த படம்?”[/size][size=2] " தமிழ்ப்படம் நிறைய பார்ப்பேன…
-
- 1 reply
- 813 views
-
-
'முந்தானை முடிச்சு' புகழ் நடிகர்... தவக்களை மாரடைப்பால் மரணம். சென்னை: நடிகர் தவக்களை மாரடைப்பால் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று மரணம் அடைந்தார். 1983ம் ஆண்டு பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படம் மூலம் நடிகர் ஆனவர் தவக்களை. ஆள் குள்ளமாக இருந்தாலும் நடிப்பில் அசத்தி ரசிகர்களின் மனதில் உயர்ந்தவர். அவர் சென்னை வடபழனியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 42. தவக்களை 496 படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், இந்தி ஆகிய 6 மொழி படங்களில் நடித்துள்ளார். தவக்களையின் மரணம் குறித்து அறிந்த திரையுலகினர்…
-
- 1 reply
- 902 views
-
-
ஆஸ்கர் 2019: விருதுகளைக் குவித்த படங்கள்! திரைப்படங்களுக்காக வழங்கப்படும் விருதுகளில் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், திரைக் கலைஞர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது ஆஸ்கர் விருதுகளைத்தான். 91ஆவது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி இன்று (பிப்ரவரி 25) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு ஆஸ்கர் நிகழ்ச்சியை ஹாலிவுட் நடிகர் ஹெவின் ஹர்ட் தொகுத்து வழங்குவதாக இருந்தது. 2009 -2011 காலகட்டத்தில் அவர் LGBT சமூகத்தவர்களை தரக்குறைவாகப் பேசியது கடந்த டிசம்பர் மாதம் ட்விட்டரில் பரவியது. இது தொடர்பாக சர்ச்சை உருவான நிலையில் அவர் மன்னிப்பு கேட்டதோடு ஆஸ்கர் நிகழ்ச்சியைத் தான் இந்த முறை தொகுத்து …
-
- 1 reply
- 724 views
-
-
கலைஞர்களுக்கான விருதா... கட்சிக்காரர்களுக்கான விருதா? தமிழ்நாடு திரைப்பட விருது சர்ச்சை #TNFilmAwards தூங்கிக்கொண்டிருப்பவர்களை எழுப்பி 'குட் நைட்' சொன்னால் எப்படி இருக்கும்? நீண்ண்ண்ண்ட... இடைவெளிக்குப் பிறகு தமிழக அரசு அறிவித்திருக்கும் திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு அப்படித்தான் இருக்கிறது. பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த தமிழக அரசின் திரைப்பட விருதுகள் ஒரேயடியாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதுவும் 2009 முதல் 2014 வரையிலான திரைப்பட விருதுகள்தான். இத்தனை வருட இழுத்தடிப்புக்குப் பிறகு அறிவிக்கப்படும் விருதுகள் எவ்வளவு தீவிரமாக ஆலோசித்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும்? ஆனால், விருதுகளுக்குத் தேர்வாகியுள்ள பல படங்களையும், கலைஞர்களையும் பார்த்தால்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிவதாச சுவாமிகள் (நாசர்) குருவாக இருக்கும் நாடக சபாவில் சிறுவர் களாகச் சேருகிறார்கள் காளியும் (சித்தார்த்) கோமதியும் (ப்ரித்விராஜ்). பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் தமிழ்ப் புராண நாடகங்களை மனப்பாடம் செய்து, கதாபாத்திரங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். பின்னாளில் இவர்கள் காளியப்ப பாகவதராகவும் கோமதி நாயகம் பிள்ளையாகவும் நாடக மேடையில் அடையாளம் காணப்படுகிறார்கள். இந்தக் குழுவில் பாட்டிலும் நடனத்திலும் சிறந்து விளங்கும் வடிவு (வேதிகா) வந்து சேர்கிறார். கோமதி இவள்பால் கவரப்படுகிறார். சித்தார்த் தனது நடிப்பில் பாரம்பரிய வழியைப் புதுமையாக வெளிப்படுத்துகிறார். இதனால் நாசருக்கு சித்தார்த்தை மிகவும் பிடித்துப்போகிறது. பாரம்பரிய முறையை மீறாத ப்ரித்விராஜ், நாசர் தன்னைத் திட்டமிட்டு…
-
- 1 reply
- 932 views
-
-
யாரவது இவரை பற்றி கேள்விபட்டு இருக்கிறீர்களா? இன்று Toronto விலிருந்து வரும் ஒரு பிரபலமான தினசரியில் இவரை பற்றி எழுதியிருந்தார்கள் Youtube இல் இவரின் விளையாட்டு <iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/N6nrZRL-au4" frameborder="0" allowfullscreen></iframe>
-
- 1 reply
- 461 views
-
-
1964ஆம் ஆண்டு வெளியாகி, மெகா வெற்றி பெற்ற ‘கர்ணன்’ தமிழ்ப் படம் கடந்த வெள்ளியன்று மீண்டும் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அன்று ஈஸ்ட்மென் கலரில் வெளியான படத்தை இன்று டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் மூலம் புது மெருகேற்றி ரிலீஸ் செய்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்துவிட்டு, ஆனந்தக் கண்ணீர் விட்டுப் பாராட்டினார் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். பத்மா சுப்ரமணியம், “இதே போல சிவாஜியுடைய ‘திருவிளையாடல்’ படத்தையும் டிஜிட்டலில் கொண்டுவர வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டாராம். ஒய்.ஜி.மகேந்திரன், “‘சரஸ்வதி சபதம்’ படத்தையும் இதே மாதிரி பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு,” என்றாராம். “தமிழ்நாடெங்கும், மொத்தம் 70 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி, சிவாஜி ரசிகர்களை மட்…
-
- 1 reply
- 1.6k views
-
-
நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்! தென்னிந்திய நடிகரும், கராத்தே மற்றும் வில்வித்தை நிபுணருமான ஷிஹான் ஹுசைனி (Shihan Hussaini) இன்று அதிகாலையில் இரத்தப் புற்றுநோயுடன் போராடி காலமானார். அவரது மறைவுச் செய்தியை அவரது குடும்பத்தினர் பேஸ்புக்கில் உறுதிப்படுத்தினர். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும். பின்னர், அவரது உடல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹுசைனி தனது சமூக ஊடகப் பக்கங்களில் தொடர்ந்து புதுப்பிப்புகளை வழங்கி தனது புற்றுநோய் பயணத்தை ஆவணப்படுத்தி வந்தார். அவரது பதிவுகளைப் பார்த்த தமிழக அரசு…
-
- 1 reply
- 317 views
-
-
குசேலன் தோல்வி, ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகத்திடம் மன்னிப்பு கேட்டது போன்றவற்றால் ரஜினியின் இமேஜ் அடிவாங்கியிருப்பது குறித்து யார் கவலைப்படுகிறார்களோ இல்லையோ எந்திரன் படத் தயாரிப்பாளரும் இயக்குநரும் பெரிதும் கவலைப்படுகின்றனர். ஈழத் தமிழர் பிரச்சினைக்காக நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கமாட்டேனென அஜித் கூறியதாகச் செய்தி வெளியானதும் ஏகன் படம் பல வெளிநாடுகளில் ஈழத் தமிழர்களால் தடை செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் இன்டர்நேஷனல் அஜித்தைக் கூப்பிட்டு உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளுமாறு ஆணையிட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதே போன்று ரஜினிக்கும் உத்தரவு போடப்பட்டிருக்கிறது. கூடுதலாக மிகுந்த செலவுடன் தயாரிக்கப்பட்டு வரும் எந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
F8-க்கு சவால் விடுகிறதா போங்கு டீம்? - போங்கு விமர்சனம் யாரோ செய்த கார் திருட்டுக் குற்றச்சாட்டில் சிக்கி வேலையைத் தொலைத்த மூன்று நண்பர்கள், பிறகு கார் திருட்டையே வாழ்க்கையாக்கிக்கொள்கிறார்கள். திருட்டிலிருந்து திருந்தினார்களா, அவர்களைத் திருந்தவிட்டார்களா என்பதே இந்த ‘போங்கு’ ஆட்டம். நட்டி, ருஹி சிங், அர்ஜுனன் மூவரும் நண்பர்கள். கார் கம்பெனி வேலை, நிறைவான சம்பளம், சொகுசான வாழ்க்கை என வாழ்கிறார்கள். டெலிவரிக்குப் போன காஸ்ட்லி கார் ஒன்று திருடப்படுகிறது. அந்தத் திருட்டுக் குற்றச்சாட்டு, இவர்கள் மீது விழுகிறது. ஜெயிலுக்குச் செல்கிறார்கள். வெளியே வந்த பிறகும் மற்ற கம்பெனிகளில் வேலை தர மறுக்கிறார்கள். ஜெயில் நட்பை பயன்படுத்தி கா…
-
- 1 reply
- 418 views
-
-
எம்.ஜி.ஆர் உடன் சில்க் ஸ்மிதா முரண்பட்டாரா? துணை நடிகையாக இருந்து சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஒரு விண்மீன் என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா. ஆந்திராவின் ஒரு கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த பெண். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என குறுகிய காலத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சில்க் ஸ்மிதாவின் முதல் படம் இணைய தேடி எனும் மலையாளப்படம் ஆகும். இதில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். பிறகு தமிழில் முதல் படமான வண்டிச்சக்கரம் எனும் படத்தில் பார் (மதுபான சாலை) வேலை செய்யும் பெண்ணாக ஒரு கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரே இவரது பெயராகவும், அ…
-
- 0 replies
- 2.9k views
-
-
சிங்கையில் குருஷேத்திரம் - விமர்சனம் நடிப்பு: விஷ்ணு, சிவகுமார், மதியழகன், விக்னேஷ்வரி, பிரகாஷ் அரசு பிஆர்ஓ: எஸ் செல்வரகு இசை: ரஃபீ கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இணை தயாரிப்பு - டிடி தவமணி தயாரிப்பு: மெட்ரோ பிலிம்ஸ், சிங்கப்பூர் பிலிம் கமிஷன் மற்றும் புளூ ரிவர் பிக்ஸர்ஸ் முழுக்க முழுக்க சிங்கப்பூர் கலைஞர்களை வைத்து, ஒளிவெள்ளம் பாயும் சிங்கப்பூரின் இருண்ட பக்கத்தைக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள். மன்னிக்க முடியாத மரண தண்டனைக் குற்றம் என்று தெரிந்தும், போதை மருந்துத் தொழிலில் ஈடுபடும் சிங்கப்பூரின் நிழல் மனிதர்களைப் பற்றிய கதை. முதல் காட்சியே படு வித்தியாசமாக ஆரம்பிக்கிறது. எடுத்த எடுப்பில் சிங்கப்பூர் சிறையில் ஒரு தாய்க்க…
-
- 0 replies
- 1k views
-
-
அழகா பிறக்கணும் கணவன்: நமக்குப் பையன் பிறந்தா என்னை மாதிரியே பிறக்கணும்?" மனைவி: கொஞ்சம் அழகா பிறக்கணும்னு நெனைச்சிருக்கேன் நான்!
-
- 0 replies
- 832 views
-