வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
இன்றைய கிராபிக்ஸ் உலகத்தில் எத்தனையோ கிராபிக்ஸ் காட்சிகளை சுலபமாக செய்து முடித்து விடுகிறார்கள். ரசிகர்களுக்காக நடிகர்கள் காட்டும் வித்தைகளில் பல, சமயங்களில் கண் கட்டு வித்தைகள் தான். அப்படித் தான், 1989ல் வெளிவந்த ‘அபூர்வ சகோதர்கள் ‘ படமும் கூட. கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இப்படத்தில், வில்லன்களின் சூழ்ச்சியால் ஒரு கமல் மட்டும் சற்று வளார்ச்சி குறைந்து குள்ளமானவராக காட்சியளிப்பார். இதற்காக மிகவும் கஷ்டப்பட்டு நடித்த கமல், குள்ளமாக நடித்தது எப்படி என்ற ரகசியத்தை இத்தனை நாள் பொத்தி, பொத்திப் பாதுகாத்து வந்தார். ஆனால், தற்போது அந்த ‘சிதம்பர’ ரகசியத்தை போட்டுடைத்திருக்கிறார் அப்படத்தின் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம். இது குறித்து அவர் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த…
-
- 0 replies
- 623 views
-
-
காய்கறி வியாபாரம் செய்து வந்த சாப்ட்வேர் பொறியாளருக்கு வேலை வழங்கிய நடிகர் சோனு சூட்! இந்தி நடிகர் சோனு சூட் தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அருந்ததி உள்ளிட்ட தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சோனு சூட். இவர், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக ஊரடங்கு போடப்பட்ட நிலையில், பிற மாநிலங்களில் தவித்து வந்த இடம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து மகத்தான சேவை செய்து, நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த மாதம் கேரளாவில் ஜவுளி ஆலையில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 147 பெண்கள், 20 ஆண்கள் என 167 இடம் பெயர்ந்த தொழில…
-
- 0 replies
- 623 views
-
-
சில்லறைக்கு சினிமா அக்கப்போருக்கு அரசியல் – வீடியோ! http://www.vinavu.com/2014/11/21/rajini-linga-comedy-video/
-
- 1 reply
- 622 views
-
-
தமிழ்த் திரையுலகம் செய்யாத ஒரு நற்செயலை இந்தி பட இயக்குநர் பால்கி செய்யவிருக்கிறார். கடந்த 45 ஆண்டு காலமாக தமிழ்த் திரையுலகில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா இதுவரையில் 1000 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். இவருடைய 1000-மாவது படம் பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’. இந்த நல்ல செய்தியை தெரிந்து கொண்ட இந்தி பட இயக்குநரான பால்கி, நம்முடைய இசைஞானிக்கு மும்பையில் மிகப் பெரிய அளவிலான ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளார். இந்த பாராட்டு விழா வரும் ஜனவரி 30-ம் தேதி நடைபெறவுள்ளதாம். இந்த விழாவில் லதா மங்கேஷ்கர், பி.சுசீலா, எஸ்.ஜானகி ஆகியோருடன் முன்னணி பாடகர், பாடகிகளும், நடிகர், நடிகைகளும், இயக்குநர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள். இயக்குநர் பால்கி இசைஞானி…
-
- 0 replies
- 621 views
-
-
திரை விமர்சனம்: மருது சிறு வயதில் பெற்றோரை இழந்து விடும் விஷால், பாட்டியின் நிழலில் வளர்ந்து ஆளாகிறார். பாட்டி கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டார். பாட்டி பக்கத்து ஊர் பெண்ணான திவ்யாவைக் காட்டி அவளைக் காதலித்து கல்யாணம் செய்துகொள்ளத் தூண்டுகிறார். உள்ளூர் அரசியலில் தவறான வழியில் வளர்ந்துவரும் ரவுடி ஆர்.கே.சுரேஷ், திவ்யாவின் குடும்பத்தை அழிக்கத் துடிக்கிறார். ஏன் அப்படித் துடிக்கிறார், திவ்யாவின் குடும்பத்தை விஷால் எப்படிக் காப்பாற்றுகிறார், இதில் பாட்டியின் பங்கு என்ன என்பதற்கெல்லாம் விறுவிறுப் பாகப் பதில் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் முத்தையா. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முந்தைய கதை. திரைக்கத…
-
- 0 replies
- 621 views
-
-
நம் கனவுகள் நனவாய் மாறும் கலங்காதே!!!!
-
- 0 replies
- 621 views
-
-
என்றும் கனவுக்கன்னியாக நீடிக்க என்ன விலை கொடுக்கிறார்கள் நடிகைகள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES சின்ன திரை பெரிய திரை என்கிற பாரபட்சமே இல்லாமல், எல்லா திரைகளிலுமே பெண்களுக்கு ஒரு மிக பெரிய நிர்பந்தம், அவர்கள…
-
- 0 replies
- 621 views
-
-
19 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது குழந்தை பெற்றுக்கொண்ட பிரபல சீரியல் நடிகையின் அம்மா ! ஒரு நல்ல செய்தி விரைவில் சொல்வேன் என்றார். அட, 19 வயசிலேயே கலியாணம் போல என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், கதையே வேற. 19 வருடங்களுக்கு பின்னர் தனக்கு தங்கை கிடைத்திருப்பதாக்வும், மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார், நடிகை. மகழ்ச்சி தானே. குட்டி தங்கைக்கு வாழ்த்துக்கள், அக்கா. தாய், 18 இலிருந்து 20க்குள் கலியாணம் முடித்திருந்தாலும், இப்பொது 40க்கு குறைவாகவே இருக்கும். இருந்தாலும், குறும்பர்கள் விடுவார்களா? அப்பா, கஞ்சர் போல இருக்கு. பலூன் ஒருமுறை தான் பாவிக்க வேணும் என்று சொல்லி வையுங்கோ. இல்லேன்னா, அடுத்தவருசம் தம்பி பாப்பா என்னு சொல்லிட்…
-
- 2 replies
- 620 views
-
-
அடுத்தடுத்து அண்ணன்கள் மரணம்; பாலியல் தொல்லை; வாழ்க்கையை மாற்றிய படம்: கடந்து வந்த பாதை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்வு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாழ்க்கை அனுபவங்களை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தக் காணொலி தற்போது வைரலாகியுள்ளது. டெட் (TED) என்ற அமெரிக்க ஊடக நிறுவனம், உலகம் முழுவதும் டெட் எக்ஸ் டாக்ஸ் (Ted x talk) என்ற பெயரில் பொது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் பல்வேறு துறையைச் சேர்ந்து சாதித்தவர்களும், தங்கள் வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்வார்கள். இப்படியான நம்பிக்கை உரைகள் பல இணையத்தில் வைரலாகியுள்ளன. இந்த உரைகள் மூலமாக வெளி உலகுக்குக் தெரியாத பலரது முகங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் திர…
-
- 0 replies
- 620 views
-
-
தமிழ் சினிமாவைப் பற்றி இன்று வெளியாகும் செய்திகளில், படத்தின் தரம், வணிக வெற்றி, திருட்டு டி.வி.டி போன்ற செய்திகளுக்குச் சமமான அளவில் படத்தின் கதை திருடப்பட்டது பற்றிய செய்திகளும் இடம்பெறுகின்றன. முன்பெல்லாம் பாடலின் மெட்டு, கதைக் கரு போன்றவை எந்தப் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்பதை எளிதில் கண்டுபிடிக்க இயலாது. இப்போது இணையமும், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களுக்கு நிகரான பங்கு வகிக்கும் சமூக வலைதளங்களும் இந்தத் திருட்டுகளைக் கண்டுபிடிப்பதை எளிதாகவும் விரைவாகவும் ஆக்கிவிட்டன. பல வங்காள, மராத்திக் கதைகள் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் தமிழ்ப் படங்களாகியிருக்கின்றன. ஆங்கிலப் படங்களிலிருந்து கதையை எடுப்பது என்பதைப் பலரும் செய்திருக்கிறார்கள். தன் கலை, அரசியல் வாழ…
-
- 1 reply
- 620 views
-
-
ஜெனிலியாவுக்கு, ‘நவ்ரா’ அனுப்பிய முதலும், கடைசியுமான ‘தந்தி’... மும்பை: பாலிவுட்டில் தற்போது ஜெனிலியா மற்றும் அவரது காதல் கணவர் ரித்திஷ் தேஷ்முக்கின் காதல் மிகவும் பிரபலம். எதையாவது வித்தியாசமாக செய்து தன் அன்பு மனைவிக்கு பரிசளிக்க நினைத்த ரித்திஷ்க்கு ஞாபகத்தில் வந்தது ‘தந்தி'. கடந்த மாதம் 15ம் தேதி தனது 160 வருடக் காலச்சேவையை நிறுத்திக் கொண்டது தந்தி. கடைசி தினமான அன்று நடிகை ஜெனிலியாவிற்கு அவரது கணவர் தந்தி ஒன்றை அனுப்பினாராம். கடந்த 2003ம் ஆண்டு ஒன்றாக சேர்ந்து நடித்த போது, ஜெனிலியாவிற்கும் ரித்திதிற்கும் காதல் பூத்தது என வதந்திகள் பரவின. முதலில் இதை மறுத்த அவர்கள், பின்னர் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இதுவ…
-
- 3 replies
- 619 views
-
-
என் படத்தை புரமோட் பண்ணி நான் எதுவும் பேச மாட்டேன். நல்லா இருந்தா, மக்கள் பார்க்கட்டும். யாரையும் நான் ஏமாத்த விரும்பலை!''- அதிரடி ஒப்பந்தத்துடன் ஆரம்பிக்கிறார் அஜீத். ''நீங்க எப்படி வெங்கட் பிரபு டீமுக்குள் வந்தீங்க?'' '' 'ஜி’ படத்தில் சேர்ந்து நடிச்சதில் இருந்தே, எனக்கும் வெங்கட் பிரபுவுக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் உண்டு. 'வாலி’ மாதிரி ஒரு நெகட்டிவ் ரோல் ஸ்க்ரிப்ட் இருந்தா சொல்லுங்க, நான் நடிக்கிறேன்!’னு சொல்லி இருந்தேன். அப்புறம், 'பில்லா’, 'அசல்’னு அடுத்தடுத்த படங்களில் பிஸி ஆகிட்டேன். ஒருநாள் வெங்கட் பிரபு, 'கிளவுட் நைன்’க்கு படம் பண்ணப்போறார்னு கேள்விப்பட்டேன். என்ன கதைனு அவர்கிட்ட கேட்டேன். 'அஞ்சு பேரோட கதை. எல்லாருமே கெட்டவங்க. அதில் ஒருத்தன் ரொம்ப ரொம்பக…
-
- 1 reply
- 619 views
-
-
முதல்முறை மழை பார்த்த சிறுபிள்ளை போலே... மனம் இன்று கொண்டாடுதே.. இது என்ன இருதயம் மிருதங்கம் போலே... இன்று புதுப்பண் பாடுதே... http://www.youtube.com/watch?v=uWt4zsXPHQA
-
- 0 replies
- 619 views
-
-
சென்னை: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக இசையமைக்கக் கோரி தன்னிடம் வந்த இயக்குநர் மிஷ்கினை முதலில் வெளியே போகச் சொன்னாராம் இசையமைப்பாளர் இளையராஜா. இளையராஜாவின் மிகத் தீவிரமான ரசிகர்களுள் ஒருவர் இயக்குநர் மிஷ்கின். மிஷ்கின் -இளையராஜா இணைந்த முதல் படம் நந்தலாலா. அந்தப் படத்துக்கு அருமையான பின்னணி இசையும், அற்புதமான பாடல்களும் தந்திருந்தார் ராஜா. ஆனால் இரண்டு பாடல்களை மட்டும் பயன்படுத்திக் கொண்டு மீதியை சிடியில் மட்டும் வைத்துக் கொண்டார் மிஷ்கின். இடையில் யுத்தம் செய், முகமூடி என இரண்டு படங்களைச் செய்திருந்தார் மிஷ்கின். இவற்றுக்கு இசையமைத்தவர் கே எனும் இளைஞர். இவரும் ராஜா ரசிகர்தான். முகமூடி படத்தில் வரும் ஒரு பாட்டில், 'ராஜா இல்லாத சங்கீதமா' என ஒரு வரியே இடம்பெற்றிர…
-
- 0 replies
- 618 views
-
-
ஹேய்...'இயக்குநர் தனுஷ்' சிம்ப்ளி சூப்பர்ப்! - 'ப. பாண்டி' விமர்சனம்! 'பவர்பாண்டி' என்ற 64 வயது துறுதுறு கிழவரின் வாழ்வும், தேடலும்தான் ‘ப.பாண்டி’ படத்தின் ப்ளாட். ஒரே மகன் பிரசன்னாவின் வீட்டில் வசித்துவருகிறார் ‘ரிட்டயர்டு’ ஸ்டண்ட் மாஸ்டர் ராஜ்கிரண். பேரக்குழந்தைகள்தான் அவர் உலகம். உடம்பில் அதே முறுக்கு. அடுத்தவர்களுக்கு உதவுவது, அநியாயங்களை தட்டிக்கேட்பது என்று இவர் செய்யும் சில செயல்களால் பிரசன்னாவுக்கு கடுப்பாக, அவ்வப்போது முகம்சுளிக்கிறார். ஒரு கட்டத்தில் தான் சுமையாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் கெத்தாக, தன் புல்லட்டில் பயணப்படுகிறார் ராஜ்கிரண். இலக்கில்லாமல் ஆரம்பிக்கும் பயணம்.. ஓர் இலக்க…
-
- 2 replies
- 618 views
-
-
ஜெயிக்காமலே இருந்திருக்கலாம்- மனம் வருந்தும் ஆனந்த் அரவிந்தக்ஷன்! விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரச்னை , அட இன்னுமா முடியவில்லை என்றால் முதலும் முக்கியஸ்தருமான வெற்றிக்குச் சொந்தக்காரர் ஆனந்த் இப்போதுதானே மனம் திறந்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் தனது வெற்றி மற்றும் அதற்காகப் பட்ட கஷ்டங்கள் என அனைத்தையும் பதிவிட்டுள்ளார், அவர் கூறியுள்ளதாவது, கடந்து இரண்டு நாட்களாக நான் கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். இப்போதும் கனவு போல் இருக்கிறது. எனக்கு ஆதரவாக இருந்த சேனல் மற்றும் மக்களுக்கு நன்றி. பத்து வருடங்கள் காத்திருந்து பத்து மாதங்கள் போட்டி, இசைப் பயிற்சி, என அனைத்தையும் கடந்து இந்த வெற்றியை அடைந்துள்ளேன். இத்தனை ஆண்டுகளாக …
-
- 4 replies
- 618 views
-
-
சென்னை: 'துப்பாக்கி’ படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"மதச்சார்பற்ற கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், சிறுபான்மையினரின் நலன் காத்திடும் வகையிலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தீபாவளித் திருநாளில், நடிகர் விஜய் நடிப்பில் தமிழகத்தில் வெளியான ‘துப்பாக்கி’ என்னும் திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இக்காட்சிகள் உடனடியாக நீ…
-
- 0 replies
- 618 views
-
-
நண்டு கொழுத்தா வலையில தங்காது.. வாய் கொழுத்தா வாழ்க்கை தங்காதுன்னு சொல்வாங்க… அது சிலர் விஷயத்தில் எப்போதுமே சரியாகத்தான் இருக்கிறது. சின்மயி விஷயத்தில் இது எப்படி என்று கீழ் வரும் அவரது பேஸ்புக் ஸ்டேடஸைப் படித்துவிட்டு சொல்லுங்கள்… ட்விட்டர், பேஸ்புக்கில் குழாயடிச் சண்டை நடத்தி, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அமைதியாக இருந்த சின்மயிக்கு, இப்போதுதான் சில வாய்ப்புகள் கிடைத்துள்ளன, பாடுவதற்கு. அந்த தைரியத்திலோ என்னமோ அவர் இன்று பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள சவால் ஸ்டேடஸைப் பாருங்கஷள்… “ஒரு வருடம் கூட ஆகல. தமிழ்நாட்டிலேந்தே துரத்த்தறேன், நீ பாடாம இருக்க அத செய்யறேன் இத செய்யறேன் ன்னு இந்த பேஜ் லயே வந்து மிரட்டினாங்க சில பேர். கடவுள் என்னையும் என் தாயாராயும் நல்லா காப்பாத…
-
- 1 reply
- 618 views
-
-
ராக்கி - திரை விமர்சனம் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROWDY PICTURES படக்குறிப்பு, ராக்கி திரைப்படம் நடிகர்கள்: பாரதிராஜா, வசந்த் ரவி, ரோகிணி, ரவீனா ரவி; ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா; இசை: தர்புகா சிவா; இயக்கம்: அருண் மாதேஸ்வரன். இந்த ஆண்டின் துவக்கத்தில் 'ராக்கி' படத்தின் டீஸர் வெளியானபோது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள். அந்த டீசரில் நின்று கொண்டிருக்கும் ஒரு நபர், உட்கார்ந்திருக்கும் ஒரு நபரை துருப்பிடித்த ரம்பத்தை வைத்து நிதானமாக அறுக்கும் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்தது. டீஸரே இப்படியிர…
-
- 2 replies
- 617 views
-
-
ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம்! விநாயக சதுர்த்தியன்று கோச்சடையான்! ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்குப் பின் ரசிகர்களுக்கு பதில் தெரியாமல் இருந்த கேள்வி கோச்சடையான் படம் எப்ப ரிலீஸ் ஆகும்? என்பது தான். கோச்சடையான் திரைப்படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின், இன்று போய்... நாளை வா... கதையாக தனது டுவிட்டர் அக்கவுண்டில் Coming Soon... என்பதையே திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தாலும் ரசிகர்கள் படத்திற்காக அமைதியாக காத்துக்கொண்டிருந்தனர். கேன்ஸ் திரைப்பட விழா, சுதந்திர தினம் என ஒவ்வொரு முக்கிய தினத்திலும் கோச்சடையான் வராதா? என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சௌந்தர்யா அஸ்வினின் சமீபத்திய டுவீட். தனது டுவிட்…
-
- 0 replies
- 617 views
-
-
தமிழ் சினிமா : ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? இப்போதெல்லாம் யாராவது என்னிடம் ஏதாவது ஒரு விஷயம் பற்றி சீரியசாகப் பேசும்போது, அதற்குச் சம்பந்தமேயில்லாத வேறொரு விஷயத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுகிறேன். (குறிப்பாக திருமணத்திற்குப் பின் தான் இந்த நிலை என்று சொல்லலாம்!) சென்றவாரம் எங்கள் ஊரில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்துவரும் ஒரு அண்ணனிடம் போஃனில் பேசிக்கொண்டிருந்தேன். 'இப்போதெல்லாம் 30 லட்சரூபாய்க்கு மேற்பட்ட வீடுகள் விலை போவதில்லை' என்றும் ' சிறுபட்ஜெட் வீடுகளையே மக்கள் விரும்பி வாங்குவதால், அத்தகைய வீடுகளையே கட்டி, விற்றுக்கொண்டிருப்பதாகவும்' சொன்னார். நான் பதிலுக்கு 'அது சரி தான்ணே, கஸ்டமர் என்ன விரும்புறாங்களோ அதைக் கொடுப்பது தானே முறை' என்று சொல்லிக்கொண்டி…
-
- 0 replies
- 616 views
-
-
வெளியானது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடிக்கும் படத்திற்கு பேட்ட என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரையும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று மாலை வெளியிட்டிருக்கிறது. காலா படத்திற்கு பிறகு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார். பெயரிடப்படாமல் தொடங்கப்பட்ட இந்த படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மோஷன் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘பேட்ட’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரஜினி ரசிகர்களை மனதில் வைத்து உருவா…
-
- 2 replies
- 616 views
-
-
நடிகை வனிதாவின் 3வது கணவர் மறைவு. வனிதா விஜயகுமார் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் விசுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பாலை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்து கொண்ட ஒரு சில மாதங்களிலேயே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பீட்டர் பால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://www.thanthitv.com/latest-news/actress-vanithas-3rd-husband-passes-away-183159?infinitescroll=1
-
- 0 replies
- 615 views
-
-
சமந்தா - நாக சைதன்யாவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நாக சைத்தன்யா உடன் சமந்தா | கோப்பு படம் தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் விரைவில் நிச்சயத்தார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜூனின் மகன் நாக சைதன்யா. நாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது 'ப்ரேமம்' படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் நிவின் பாலி வேடத்தில் நாக சைதன்யா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'மனம்' உள்ளிட்ட பல படங்களில் நாக சைதன்யாவுக்கு நாயகியாக நடித்தவர் சமந்தா. இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவருமே காதலித்து வருகிறார்கள், விரைவில் த…
-
- 5 replies
- 615 views
- 1 follower
-
-
ஐ என்ற பிரமாண்ட ஹிட்டிற்கு பிறகு இனி தன் ரசிகர்களை காக்க வைக்க கூடாது என்று விக்ரம் களத்தில் இறங்கியுள்ள படம் தான் 10 எண்றதுக்குள்ள. 4 சிறுவர்களை மட்டும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை கலக்கிய ‘கோலிசோடா’ புகழ் விஜய் மில்டன் இந்த முறை கோலிசோடா பேக்ட்டரி அளவிற்கு ஒரு பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். இதற்கு யானை பலம் சேர்க்கும் அளவிற்கு இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ் இப்படத்தை தயாரிக்க, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு பல மடங்கு உயர்ந்தது. இன்று இப்படம் உலகம் முழுவதும் பல திரையங்குகளில் வெளிவந்துள்ளது. கதை: இந்தியாவின் ஒதுக்கப்பட்ட வடகிழக்கு மாநிலத்தில் இன்றும் சாதி கொடுமைகள் நடந்து வருகின்றது. அந்த வகையில் உத்ரகாண்ட் மாநிலத்தில் கீழ் சாதியினர் அத்து மீறி கோவில…
-
- 1 reply
- 614 views
-