வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
-
நடிப்பு: விஷ்ணு, சுனைனா, சரண்யா, ராம், சமுத்திரக்கனி, அழகம்பெருமாள் ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியன் இசை: என் ஆர் ரகுநந்தன் மக்கள் தொடர்பு: நிகில் தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின் எழுத்து - இயக்கம்: சீனு ராமசாமி அழகிய கடல்புறம்... அங்கே கிளிஞ்சல்களாய் சிதறிக்கிடக்கும் எளிமையும் இயல்பும் நிறைந்த மீனவர் வாழ்க்கை... கடல் மணலில் கடவுளின் குழந்தைகளாய் திரியும் சின்னஞ்சிறுசுகளின் காதல்.. மேலும் படங்கள் -கேட்கவே நல்லாருக்குல்ல... ஆனால் அதை திரையில் ரசித்துப் பார்க்கும்படி எடுத்திருக்கிறாரா சீனு ராமசாமி? பார்க்கலாம் வாங்க! கடலலையில் அனாதையாய் வந்து மேரி - லூர்து தம்பதிக்கு மகனாகும் அருளப்பசாமியைப் பார்த்து அந்த கடல்புற கிராமமே அலறுகிறது. பயத்தினால…
-
- 4 replies
- 672 views
-
-
நீர்ப்பறவை திரை விமர்சனம் நீர்ப்பறவை திரை விமர்சனம் நீர்ப்பறவை திரை விமர்சனம் -அமிர்தம் சூர்யா (கல்கி-வார இதழில் பிரசுரமானது) ------------------------------------------ ‘குழந்தைக்குப் பாலூட்டும் அழகிய பெண்ணின் கலைப்படைப்பு சிற்பம், தானொரு தாய்என்பதை பிரச்சாரம் செய்தபடியே இருக்கும்’ என்பார் அறிஞர் அண்ணா. அதுபோல கோலிவுட் குத்தாட்ட, வெற்று குண்டு சப்தங்களுக்கிடையே அழகிய கடலும், கடல் சார்ந்த நெய்தலும் வாழ்க்கையைக் கூவியபடி வந்திருக்கும் கலைப்படைப்பு ‘நீர்ப் பறவை’. அப்பறவை இரு விஷயங்களைப் பிரசசாரம் செய்கிறது. 1. ‘திகட்டும்படி’ குடியின் கேகட்டைச் சொல்லித் திருத்தும் வழியைச் சொல்வது. 2. கடல் எல்லையில் தினம் தினம் இல…
-
- 0 replies
- 645 views
-
-
நீலநிற சூரியன் : விமர்சனம்! christopherOct 06, 2024 10:30AM பெண்ணாகத் தன்னை உணரும் ஆணின் கதை! பெரும்பாலான திரைப்படங்கள் வாழ்வோட்டத்தில் இருக்கிற பெருஞ்சிக்கல்களைப் பேசுவதே இல்லை. சமத்துவ சமுதாயம், பாலின சமத்துவம், சூழல் பாதுகாப்பு உட்படப் பல விஷயங்களைப் பேசுகிற வாய்ப்புகள் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. அப்படியொரு நிலையில், தன்னைச் சிறு வயதில் இருந்து பெண்ணாக உணரும் ஆணின் உருமாற்றத்தைப் பேசுகிறது ‘நீலநிற சூரியன்’. சம்யுக்தா விஜயன் இதனை எழுதி இயக்கியிருக்கிறார். இந்தப் படம் தரும் காட்சியனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? வலிமிகு தருணங்கள்! பானு என்ற பெயரில் தன்னைப் பெண்ணாகப் பாவித்துக்கொண்டு பேசிப் பார்க்கிறார் அரவிந்த் (சம்யுக்தா வ…
-
- 0 replies
- 212 views
-
-
தேசத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைச்சதுகள்.. எல்லாம்.. இப்படிப் பேச... தேசத்துக்காக வாழ்ந்தவர்கள்... புதைகுழிகளில்.. நீலாம்பரி வரதராஜப்பெருமாளுக்கு சொர்க்கத் தீவாகத் தெரிவது.. அநேக தமிழர்களுக்கு கொலைக்களமாகத் தெரிகிறது. இதனை மலையாள (கேரள) உலகம் அறிந்து கொள்வதும் அவசியம்.
-
- 11 replies
- 1.8k views
-
-
நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..! சுமார் அரைநூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் சினிமா, அரசியல் இரண்டிலும் தனித்துவத்துடன் கோலோச்சிய ஆளுமை, எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னும்பின்னும் பல முதலமைச்சர்களை, ஆளுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும் எம்.ஜி.ஆர் ஒருவரே மக்களின் இதயங்களைத் தாண்டி இன்னமும் அவர்களது இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையினால் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பல சோதனைகளுக்கு ஆளாகி, தன் மனிதநேயத்தால் மக்களின் இதயங்களைத் திருடி, பின்னாளில் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் ஆவதற்கு அவர் கையாண்ட வழிமுறைகள் என்ன... இந்த வெற்றிக்கு அடைந்த செய்த தியாகங்கள், அடைந்த துயரங்கள் என அவர் வாழ்வ…
-
- 31 replies
- 14k views
-
-
நூறு கதை நூறு படம்: 1 – கிளிஞ்சல்கள் February 15, 2019 - ஆத்மார்த்தி · சினிமா / நூறு கதை நூறு படம் / தொடர் பிரபஞ்சத்தில் இருக்கக் கூடிய ஒரே ஒரு பிரச்சினை காதல் மட்டும் தான்.காதலிக்கும் பெண்ணிடம் காதலைச் சொல்வது ஆகச்சிரமம்.அதில் தோவியுற்றால் தனக்குக் கிடைக்காமல் போன காதலை எண்ணி எண்ணி ஏங்கிச் சாவது காதலின் புனிதம்.இரண்டு பேரும் காதலிக்கத் தொடங்கினால் அதை இருவீட்டாரிடமும் தெரியப்படுத்தி சம்மதம் பெற்றுத் திருமண வாழ்வில் இணைவது இருக்கிறதே அது பலசுற்றுப் போர்க்காலம்.அப்படிச் சம்மதம் கிட்டாமல் சேரமுடியாமற் பிரிந்த காதலை இரண்டு பேரும் எண்ணி எண்ணி ஏங்கிச் சாவது காதலின் புனிதம் 2.0.சரி வா அன்பே அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து கொள்வோம் என்று இணைந்து மரணத்தை நோக்கிச் செல…
-
- 127 replies
- 19.6k views
-
-
நெஞ்சத்தை கிள்ளாதே இன்னொருமுறை காதல் கோட்டை கட்ட முயன்றிருக்கிறார் அகத்தியன். திரைக்கதையின் இழுவையால் காதல் ஓட்டையாகிவிட்டது. நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் போலீஸ் ஸ்டேசனுக்கு போகிறார் விக்ராந்த். வேலைதேடும் ஏழை பட்டதாரிபோல என்று நினைத்தால் கோடீஸ்வரர் மணிவண்ணனின் மகன் என்பது அடுத்த காட்சிகளில் தெரிகிறது. ஏன் இப்படி செய்தாய்... என்று கேட்கும் போலீசிடம் 'எல்லாம் ஒரு அனுபவத்திற்காகதான்' என படு கேஷூவலாக சொல்கிறார். விக்ராந்தின் கேரக்டருக்கு இது ஒரு சாம்பிள்தான். நாயகனின் பார்வையில் காதலையும் அப்படித்தான் எடுத்துக்கொள்கிறார். தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் பாரதியின் மனசை கூரிய வார்த்தைகளால் பஞ்சராக்கி அவமானப்படுத்துகிறார்.…
-
- 0 replies
- 963 views
-
-
நெஞ்சமெல்லாம் பல வண்ணம் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் மகேஷ் பாபு, வெங்கடேஷ் - சமந்தா, அஞ்சலி நடிப்பில் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டுள்ள `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' மொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியா பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்துள்ள படம் `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்'. தெலுங்கில் “ சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு” என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிய இந்த படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இசை - மிக்கி ஜே.மேயர், பாடல்கள் - அமான்ராஜா, சுதந்திரதாஸ், ஏக்நாத், உமாசுப்பிரமணியம், கார்கோ அருண…
-
- 0 replies
- 576 views
-
-
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு பேய்ப் படங்கள் ஆட்டிப் படைத்தன. பலரும் பல விதமான பேய்ப் படங்களைக் கொடுத்தார்கள். அவற்றில் சில படங்கள் பேய் ஓட்டம் ஓடின. சில படங்கள் வந்த சுவடு கூட தெரியாமல் ஓடிப் போயின. அந்த காலகட்டத்தில் இந்த நெஞ்சம் மறப்பதில்லை படம் வந்திருந்தால் நிச்சயம் பேயோட்டம் ஓடியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.வழக்கமான பழி வாங்கும் பேய்க் கதை தான். ஆனால், இது செல்வராகவன் கொடுத்துள்ள பேய்க் கதை என்பதில் தான் வித்தியாசம் இருக்கிறது. திரைக்கதையிலும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பிலும் தன்னுடைய தடத்தை அழுத்தமாகப் பதித்திருக்கிறார் செல்வராகவன்.கம்பெனி ஓனரான எஸ்ஜே சூர்யா, மனைவி நந்திதா ஸ்வேதா, குட்டி மகன், நான்கு வேலைக்காரர்களுடன் காட்டுக்கு நடுவில் இருக்கும் பங…
-
- 2 replies
- 544 views
-
-
புதிய திரைப்படம் நெஞ்சில் சில் சில் http://oruwebsite.com/movies/nenjil1.html
-
- 0 replies
- 988 views
-
-
மகாபாரதத்தில், கர்ணன் துரியோதனனின் நட்பின் உயர்வை விளக்கி 'தளபதி' திரைப்படத்தை எடுத்த மணிரத்னம், இலங்கையரசன் ராவணனின் உயர்வை விளக்கும் வண்ணம் இயக்கியிருக்கும் திரைப்படம்தான் 'ராவணன்'. வரலாற்றில் நடந்த ஒரு சில சம்பவங்களோடு ஏராளமான கட்டுக்கதைகளையும், பத்துத்தலை ராவணன் போன்ற பகுத்தறிவுக்குப் புறம்பான கற்பனைகளையும் கொண்டு எழுதப்பட்ட ஒரு Fiction தான் ராமாயணம். அப்படியானால் வரலாற்றில் நடந்த அந்த சம்பவங்கள் என்ன? இந்து மதத்தின் புராண இதிகாசங்கள் அனைத்தும் ஆரியரின் பண்பாட்டுப் படை எடுப்புக்களின் தொகுப்புக்கள்தாம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினை ஆய்வு செய்த ராகுல் செங்கிருத்யாயன், ஜவகர்லால் நேரு போன்றவர்கள், ஆரியர்களுக்கும் தமிழர் மற்றும் சில பழங்குடியினருக்கும் …
-
- 2 replies
- 6.3k views
-
-
நெடுஞ்சாலை (Highway) பயணங்கள் எப்போதும் சுவாரசியத்தைத் தரக்கூடியவை. பயணத்தில் இலக்குகள் அல்ல, பயணத்தைத் தொடங்குவதே எல்லாவற்றையும் விட முக்கியமானதென புத்தரிலிருந்து லா-சூ வரை பலர் தொடர்ந்து கூறி வந்திருக்கின்றனர். அதுவும் பயணங்கள் -எவ்விதத் திட்டமிடலும் இல்லாமல் வாய்க்கும்போதும்- அவை இன்னும் அழகாகிவிடுகின்றன. இவ்வாறான பயணங்களில் மனம் எதையும் எதிர்பார்க்காதிருப்பதால், கிடைக்கும் சந்தர்ப்பங்கள் அனைத்தும், மறக்க முடியாதவையாக ஆகிவிடுகின்றன. இவ்வாறு எதிர்பாராது நிகழும் பயணம் ஒன்றைத்தான் 'ஹவே' எங்களுக்குக் காட்சிப்படுத்துகின்றது. கழுத்தை நெரிக்கும் திருமணச் சடங்குகளாலும், உறவுகளாலும் திணறும் ஓர் இளம பெண், திருமணத்திற்கு முதல் நாளிரவு, தன்னை ஆசுவாசப்படுத்த தன் நண்பரோடு …
-
- 0 replies
- 474 views
-
-
மேலும் புதிய படங்கள்கமல்ஹாசனின் கனவுக் காவியமான மருதநாயகம் படத்தின் டிரைலர் சில வீடியோ இணையத் தளங்களில் உலா வந்து கொண்டுள்ளது. கமல்ஹாசனின் கனவுப் படம் மருதநாயகம். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்திற்குப் பூஜை போட்டார் கமல். சாதாரண பூஜையாக அது நடக்கவில்லை. இங்கிலாந்து ராணி எலிசபெத் வந்து பூஜையில் கலந்து கொண்டார். பெரும் பொருட் செலவில் எடுக்கப்படவிருந்த இந்தப் படம், பொக்ரானில் இந்தியா போட்ட அணு குண்டால், ஸ்தம்பித்துப் போனது. அமெரிக்காவிலிருந்து பெரும் நிதியுதவியைப் பெறவிருந்த கமலுக்கு, இந்தியா நடத்திய அணு குண்டு சோதனையால் அமெரிக்க விதித்த பொருளாதாரத் தடையால் அந்த நிதி வராமல் போனது. இதனால் மருதநாயகம் நின்று போனது. மருதநாயகம் படத்தின் ஸ்டில்கள் தான் இணையத் தளங்…
-
- 1 reply
- 1.4k views
-
-
நெப்போலியன் மருத்துவமனையில் அனுமதி நடிகரும், மத்திய அமைச்சருமான நெப்போலியனுக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நெல்லை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தசை திறன் குறைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மயோபதி சிகிச்சை மையத்தை அவர் நெல்லையில் நடத்தி வருகிறார். இங்கு நெப்போலியன் மாதந்தோறும் வருவார். நேற்று சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் நெப்போலிஅன் வந்தார். பிறகு அங்கிருந்து தனது மயோபதி சிகிச்சை மையத்திற்கு வீரவநல்லூருக்கு காரில் வன்டு கொண்டிருந்தார். அப்போது கோவில்பட்டியை கடந்து வந்தபோது நெப்போலியனுக்கு திடீர் வாந்தி, தலைச் சுற்றல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவர் நெல்லையில் மருத்துவமன…
-
- 0 replies
- 441 views
-
-
‘மங்கத்தா’ படத்தில் நடித்த மகத்தும், தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சுவும் சென்னையில் சில தினங்களுக்கு முன் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் கடுமையாக மோதிக்கொண்டனர். மகத்தை மனோஜும் அவரது நண்பர்களும் அடித்து உதைத்தனர். வயிற்றிலும் தொண்டையிலும் பலமான குத்து விழுந்தது. இதையடுத்து மகத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையும் மேற்கொண்டார். உயிர் பிழைத்தது ஆச்சரியம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது நடிகை டாப்சியால் இந்த தகராறு நடந்தாக பரபரப்பு தகவல் கிடைத்துள்ளன. மனோஜ் மஞ்சு தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் ஆவார். மகத் போலீசில் புகார் அளித்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மனோஜிடம் விசாரணை நடத்த தயாரானார்கள். ஆனால் …
-
- 0 replies
- 711 views
-
-
நெருக்கமாக நடிப்பதில் தவறில்லை: மனம் திறந்த ப்ரியங்கா சோப்ரா நெருக்கமாக நடிப்பதில் தவறில்லை என்று ஹாலிவுட்டிற்கு சென்றுள்ள பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்த பிரியங்கா தெரிவித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம். இந்தி படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ள பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் நடிகையாகிவிட்டார். அங்கு கவர்ச்சி விஷயத்தில் எல்லையை கடந்து நடிக்கிறார். ஹாலிவுட் படத்தை விட அவர் நடித்து வரும் ஹாலிவுட் டி.வி. தொடரான ‘குவாண்டிகோ’ வில் ஆங்கில நடிகருடன் மிகவும் நெருக்கமாக நடித்து இருக்கிறார். இது பற்றி பத்தி…
-
- 0 replies
- 256 views
-
-
சென்னை துணை நடிகை ரெமோலா, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னை பலாத்காரம் செய்ததாக புதுவை சினிமா லொகேஷன் மானேஜர் குமரன் மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் இது பொய் புகார் என்று குமரன் கூறியுள்ளார். இதுபற்றி ரெமோலா கூறியதாவது:- நான் பொய் புகார் கொடுத்துள்ளதாக குமரன் கூறியுள்ளார்.தற்போது நான் வெளியிட்டுள்ள போட்டோ ஆதாரங்கள் சிறிதுதான். இன்னும் நெருக்கமான வீடியோ, போட்டோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும்,அதனை நீதிமன்றத்தில் வெளியிடுவேன் என்றும் கூறினார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14147:sex-tamil-acctor&catid=39:cinema&Itemid=107
-
- 3 replies
- 2.1k views
-
-
விக்ரம் பிரபு ஒரு வெற்றி கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். தொடர் தோல்விகளால் துவண்டு இருக்கு இவர் தன் சொந்த தயாரிப்பில் தானே நடித்து அசோக் குமார் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் நெருப்புடா. இந்த நெருப்புடா அவருக்கு வெற்றியை தந்ததா? பார்ப்போம். கதைக்களம் சிறு வயதில் தன் ஏரியாவில் நடக்கும் தீ விபத்தை அனைத்தவர்களை பார்த்து ஒரு தீயனைப்பு வீரனாக வேண்டும் என்று நினைக்கின்றார் விக்ரம் பிரபு. அவருடன் சேர்ந்து 4 நண்பர்களும் இந்த வேலைக்கு வர விரும்புகிறார்கள். ஊரில் எங்கு தீப்பிடித்தாலும் இவர்கள் டீம் அங்கு இருக்கும், எல்லாம் நல்ல படியாக போக தேர்வு நாளும் நெருங்குகின்றது. தேர்வுக்கு முந்தைய நாள் விக்ரம் பிரபு…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ் ரசிகர்களின் நமீதா மோகம் தலை கால் புரியாத அளவுக்குப் போய் விட்டது... அதாவது கோயில் கட்டும் அளவுக்கு. ஏற்கெனவே குஷ்புவுக்கு திருச்சிக்கு அருகே கோயில் கட்டி தங்கள் ரசிப்புத் திறனை உலகுக்கே பறைசாற்றியவர்கள் தமிழ் ரசிக மகா ஜனங்கள். அது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பின் அடையாளம் என அகமகிழ்ந்து போனார் குஷ்பு. மூன்று காலப் பூஜையெல்லாம் கூடச் செய்தார்கள். கோயிலுக்கு நேரில் வாங்க தெய்வமே, என ரசிகர்கள் வைத்த கோரிக்கையை மட்டும் கவனமாக நிராகரித்துவிட்டார் குஷ்பு (காணிக்கை தராத வெத்துக் கோயிலுக்குப் போறதுல என்ன லாபம்?!). இப்போது கவர்ச்சி வெடிகுண்டு நமீதா முறை. ஏற்கெனவே இவருக்குக் கோயில் கட்ட ஒரு கூட்டமே அலைந்து கொண்டிருந்தது. ஆனால் 'என்கு கோயில் வேணாம்.. நெஞ்லே எடம்…
-
- 2 replies
- 1.3k views
-
-
அந்நிய(ன்) நாட்டு சரக்கு. ச்சும்மா காரம் தலைக்கேறுகிறது. நேர்க்கோட்டில் சொல்ல வேண்டிய கதையை 3 துண்டுகளாக வெட்டி முப்பரிமாணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். கரும்பை எத்தனை துண்டு வெட்டினால் என்ன? இனிப்பு இனிப்புதானே? கூரியர் பையனின் கையில் கூரிய ஆயுதம்! வரிசையாக போட்டுத்தள்ளுகிறான். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நபர்கள். மண்டையை பிய்த்துக் கொள்கிற போலீஸ், கொலைகாரனை கடைசியில் சுற்றி வளைக்க, அதுவரை 3 கோணங்களில் சொல்லப்பட்டு வந்த கதை திரிவேணி சங்கமமாக ஒன்றிணைந்து, அசுபம்! இறந்து போகிற கொலைகாரனை மனைவியோடு சேர்த்து வைக்கிறது ஆவியுலக அற்புதம். அங்கேயும் வில்லன்கள் வந்தால் என்று கேள்வி கேட்பவர்களுக்கு... கதையின் இரண்டாம் பாகம் வரும். ஜாக்கிரதை! நேபாளி தோற்றத்தில் பரத்…
-
- 2 replies
- 2.4k views
-
-
விஜய் டீவி http://puspaviji.net/page81.html சன் டிவி http://puspaviji.net/page52.html தமிழ்திரை டிவி http://puspaviji.net/page78.html தென்றல் டிவி http://puspaviji.net/page63.html ஈரோ டிவி http://puspaviji.net/page2.html ராஜ் டிவி http://puspaviji.net/page3.html
-
- 6 replies
- 2.8k views
-
-
நேரம் - சினிமா விமர்சனம் “ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ மாவீரம் போகுதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச் சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத் தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக் கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக் குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே..” கி.பி. 1800-களில் இராமச்சந்திரக் கவிராயர் எழுதிய இந்த பாடலின் விளக்கம் இதுதான் : “வீட்டில் பசு மாடு கன்று போட்டிருக்கிறது. கடும் மழையால் வீடு இடிந்து விழுந்திருக்கிறது.. வீட்டில் மனைவி நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கிறாள். வேலைக்காரன் திடீரென்று இறந்துவிட்டான்.. வயலில் ஈரம் காய்ந்துவிடும் என்று பயந்து நெல் விதை போட வயலுக்கு ஓடுகிறான். வழியிலேயே அந்த விதை வாங்க கடன் க…
-
- 0 replies
- 911 views
-
-
தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த பார்த்திபன், மிகுந்த சிரத்தைக்குப் பிறகு இயக்கிய 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகி வெற்றிபெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் திருட்டு வீடியோக்களை ஒழிக்கும் விதத்தில், சென்னை பர்மா பஜாரில் ஒரு கடையில், இயக்குநர் பார்த்திபன் தானே நேரில் சென்று கையும் களவுமாக ஒருவரை பிடித்துள்ளார். இதை வீடியோ பதிவாக எடுத்து தனது யூடியூப் சனலிலும் பார்த்திபன் பதிவேற்றியுள்ளார். பார்த்திபனின் உதவியாளர் ஒருவர் கடையில் நிற்க, தூரத்தில் கேமராவுடன் இருக்கும் பார்த்திபன், உதவியாளருடன் செல்பேசியில் பேசுகிறார். சிடி வாங்குவதற்காக ஒருவர் வந்து, காசு கொடுத்து, அவருக்கு 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தின் திருட்டு விசிட…
-
- 9 replies
- 1.1k views
-
-
நேருவும், என் தாயும் உயிருக்கு உயிராக காதலித்தனர்: மவுண்ட்பேட்டன் பிரபு மகள் லண்டன்: முன்னாள் இந்திய பிரதமர் நேருவும், தனது தாய் எட்வினாவும் உயிருக்கு உயிராக காதலித்ததாக மவுண்ட்பேட்டன் பிரபுவின் இளைய மகள் பமிலா ஹிக்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டன் பிரபுவின் வாழ்க்கை வரலாற்று வைஸ்ராய்ஸ் ஹவுஸ் என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. 1947ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவின்போது நடந்த சம்பவங்களை மையமாக வைத்து படம் எடுத்துள்ளனர். குரிந்தர் சதா இயக்கியுள்ள ஹாலிவுட் படமான வைஸ்ராய்ஸ் ஹவுஸில் ஹ்யூ போன்வில் மவுண்ட்பேட்டன் பிரபுவாக நடித்துள்ளார். இந்நிலையில் படம் குறித்து மவுண்ட்பேட்டன் பிரபுவின் இளைய மகள் லேடி பமிலா ஹிக்ஸ் கூறுகையில், மவுண…
-
- 4 replies
- 988 views
-