வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
முதல் பார்வை: கர்ணன் ஊர் மக்களின் நன்மைக்காக நாயகன் உரிமைக் குரல் எழுப்பினால், அதனால் போராட்டங்களைச் சந்தித்தால் அதுவே 'கர்ணன்'. நெல்லை மாவட்டத்தில் உள்ள பொடியங்குளம் ஒரு குக்கிராமம். பஸ் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அந்த ஊர் மக்கள் அல்லல்படுகின்றனர். பக்கத்து ஊரான மேலூருக்கு நடந்து சென்று போய் பஸ் ஏறினால்தான் வெளியூருக்குப் போக முடியும். அப்படிப்பட்ட நிலையில் மேலூர்க்காரர்கள் பொடியங்குளம் மக்களைச் சம்பந்தமில்லாமல் சண்டைக்கு இழுக்கின்றனர். இளம்பெண்ணை கேலி செய்கின்றனர். அதைக் கண்டிக்கும் ஆண்களை இழுத்துப் போட்டு அடிக்கின்றனர். இதனால் வெகுண்டெழும் கர்ணன் (தனுஷ்) மேலூரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினரின் அகந்தைக்குத் தகுந்த பாடம் ப…
-
- 6 replies
- 1.6k views
-
-
மேதகு' திரைப்படம்: ''ஜகமே தந்திரம்', 'தி ஃபேமிலிமேன்' கதைகளுக்கான பதிலடி!'- இயக்குநர் கிட்டு ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 43 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER @BS_VALUE விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த வாழ்க்கை வரலாறு, ஈழத்தமிழர்கள் போராட்டம் குறித்த பின்னணியை சித்தரிப்பதாக பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது 'மேதகு' திரைப்படம். பிரபாகரன் பிறப்பு, 1950-களின் பிற்பகுதியில் நடந்த இனக்கலவரம், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 1980 வரை நடந்த அரசியல் மாற்றங்கள், கல்வி போராட்டம், பிரபாகரனின் முதல் அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவானது வரை தற்போது வ…
-
- 24 replies
- 1.7k views
- 1 follower
-
-
நடிகை சமந்தாவுக்கு எதிராக ஆந்திராவில் போராட்டம் மகேஷ்பாபு நடித்த நீனோக்கடின் என்ற தெலுங்கு படம் ரிலீசுக்கு தயாராகிறது. இதில் நாயகியாக கிருத்தி சனான் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டுக்கான போஸ்டரை சமீபத்தில் ஐதராபாத் நகரம் முழுவதும் ஒட்டி இருந்தனர். கடற்கரையோரம் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் பின்னால் அவர் காலடியை தொடர்ந்து நடிகை ஊர்ந்து செல்வது போன்றும் அந்த போஸ்டர் இருந்தது. இந்த போஸ்டருக்கு மகளிர் அமைப்பினர் பெண் அடிமைத்தனத்தை சித்தரிப்தாக உள்ளது என விமர்சித்தனர். பெண்மையை கேவலப்படுத்துவது போல் இது உள்ளது என்றும் குறை கூறினர். நடிகை சமந்தாவும் டுவிட்டரில் இந்த போஸ்டரை கண்டித்து மறைமுகமாக கருத்து வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தெலுங்கு பட…
-
- 8 replies
- 1.1k views
-
-
தெரு நாய்கள் தமிழ் சினிமாவில் படங்களை வெளியிடுவதில் கூட போட்டிகள் உண்டு. பெரிய படஜெட் படங்களுக்கு வழிவிட்டு சிறிய பட்ஜெட் படங்கள் களம் காணத்தான் செய்கின்றன. அந்த வகையில் சில படங்களுக்கு நடுவே ஒரு படமாய் வந்துள்ளது தெரு நாய்கள். இந்த படம் எப்படியிருக்கிறது, என்ன மாதிரியான கதை என பார்க்கலாம். கதைக்களம் அறிமுக நடிகர் ராம் பிரதீக் இமான் அண்ணாட்சியின் பலகாரக்கடையில் வேலை செய்கிறார். அவருடன் இருக்கும் நால்வர் அவருக்கு நண்பர்கள். நன்றாக போய்கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் புயல் வீசுகிறது. இமான் தன் நண்பருடன் வெளியே சென்றவரை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்துவிடுகிறார்கள். தன் முதலாளியின் இழப்பை த…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரபு மகனுக்கு திருமணம் பிப்ரவரி 08, 2006 சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மூத்த மகனுமான விக்ரமுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. 10ம் தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. சிவாஜி கணேசனின் இளைய மகனான பிரபுவுக்கு விக்ரம் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். விக்ரம் லண்டனில் படித்தவர். சினிமாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரமுக்கு இப்போது திருமணம் முடிவாகியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளை விக்ரம் மணக்கவுள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வரும் 10ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். சிவாஜி கணேசனின் மறைவுக்குப் பின்னர் அவரது குடும…
-
- 0 replies
- 1.2k views
-
-
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் அனில்கபூர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகிறது.கமல்ஹாசனும், அனில் கபூரும் இணைவது இது முதல் முறை. அதேசமயம், இருவருக்கும் ஏற்கனவே ஒரு தொடர்பு உண்டு. கமல்ஹாசன் தமிழில் உருவாக்கிய பிரமாண்ட வெற்றிப் படமான தேவர் மகனை இந்தியில் ரீமேக் செய்து நடித்தார் அனில்கபூர். அப்படம் அங்கு விராசத் என்ற பெயரில் வெளியாகியது. அதேபோல சலங்கை ஒலி படத்தையும் ரீமேக் செய்து நடித்தார் அனில் கபூர். சமீபத்தில் சென்னை வந்திருந்த அனில் கபூர், கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். உங்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும், அதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறினார் அனில். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த கமல், சரி நடிக்கலாம், கதையை ரெடி செய்யுங்கள் என்றாராம். கமல் டக்கெ…
-
- 0 replies
- 929 views
-
-
'அறிந்தும் அறியாமலும்' படத்தில் அறிமுகமானவர் சமிக்ஷா. அழகு, இளமை இரண்டையும் பிரம்மா அபிரிதமாக அள்ளிக் கொடுத்த நடிகை. அஷ்டலட்சுமிக்கு மட்டும் ஏனோ இவரை இஷ்டப்படவில்லை. சமிக்ஷாவின் அறிமுகப்படம் தவிர்த்து வேறு படங்கள் பெரிதாக சோபிக்கவில்லை. பிற மாநிலங்களிலும் வரவேற்பில்லை. இதனால் புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளார் சமிக்ஷா. விரைவில் தாலிகட்டி தமிழ்திரையிலிருந்து விலக தீர்மானித்துள்ளார் இவர். இவரை திருமணம் செய்து கொள்ள இருக்கும் அதிர்ஷ்டசாலி யார் என்பது சஸ்பென்ஸ். சமிக்ஷாவின் காதலர் என்ற ஒரே தகவல் மட்டும் லீக் ஆகியுள்ளது. பெயரையோ போட்டோவையோ கண்ணில் காண்பிக்க மாட்டேன் என சமிக்ஷா அடம்பிடிக்கிறார். தற்போது 'தீ நகர்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார் சமிக்ஷா. தவ…
-
- 8 replies
- 1.6k views
-
-
நடிகை திரிஷாவுக்கும், தொழிலதிபரும், பட அதிபருமான வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் தனி விமானத்தில் தாஜ்மகாலுக்கு போய்வந்தார்கள். இவர்களின் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள். திரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் கடந்த ஜனவரி 23–ந்தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது. வருண்மணியன் ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ ஆகிய 2 படங்களை தயாரித்து இருக்கிறார். அடுத்து ஜெய் கதாநாயகனாக நடிக்க, திரு டைரக்ஷனில் ஒரு புதிய படம் தயாரிக்க திட்டமிட்டார். இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக திரிஷா நடிப்பதாக இருந்தார். திடீரென்று, அந்தப்படத்தில் இருந்து திரிஷா விலகிக்கொண்டார். அவருக்கு பதில் டாப்சி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த பிரச்சினையில் தான் திரிஷாவுக்…
-
- 15 replies
- 2.2k views
-
-
முதல் பார்வை: தடம் உதிரன்சென்னை ஓர் உரு இரட்டையர்களில் யார் கொலையாளி என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா இல்லையா என்பதே 'தடம்' படத்தின் கதை. எழில் (அருண் விஜய்) ஐஐடியில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கவின் (அருண் விஜய்) நண்பன் யோகி பாபுவுடன் இணைந்து சின்னச் சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார். எழில் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு அருகில் திரைப்பட விமர்சகராக வேலை பார்க்கும் தீபிகாவை (தான்யா ஹோப்) காதலிக்கிறார். கவின் நிறைய பெண்களுடன் பழகி அவர்களை வலையில் விழ வைக்கிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஆகாஷ் என்பவர் தன் சொகுசு வீட்டில் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். போலீஸ் கொலை செய்தது யார் என்று ஆதாரங்களைத் தேடுகிற…
-
- 7 replies
- 1.3k views
-
-
கல்லூரி - திரை விமர்சனம் http://movies.sulekha.com/kalloori/wallpap...4/image3241.htm http://movies.sulekha.com/kalloori/wallpap...4/image3239.htm 'காதல்' படம் தந்த பாலாஜி சக்திவேலின் படமென்பதால் ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் தான் படம் பார்க்க துவங்கினேன். கல்லூரின்னா, நமக்கு தெரிஞ்சதெல்லாம், 'பங்க்' முடியுடன் வரும் இளவட்டங்களின் கெட்டாட்டங்கள்தான். பாலாஜி சக்திவேலின் கல்லூரியில், மண்மணம் மாறாத, கிராமத்து முகங்கள்தான் மாணவர்கள். பள்ளிப் பருவத்திலேருந்தே ஒண்ணா படிக்கும் கும்பல் ஒண்ணு, ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் சேர்ந்து படிப்பை தொடர்கின்றனர். கும்பலில் ஆண்களும், பெண்களும் உண்டு. எல்லோரும் மிகவும் ஏழ்மையில் வாடுபவர்கள். செருப்பு தைக்கும் தந்தை, கல…
-
- 0 replies
- 2.9k views
-
-
கமல் அடிக்கடி தனது பேட்டிகளில் நாகேஷை புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுவார், அது கொஞ்சம் மிகையோ என்று தோன்றுமளவிற்கு ஐயம் வரும், ஒரு கதிரையில் இருந்தபடி கணப்பொழுதில் எம்மையறியாமல் எங்கே அழுதுவிடுவோமோ என்ற அளவில் அச்சுறுத்தி அவரால் நெகிழ வைக்க முடியும் என்பதற்கு சாட்சியாக அவர் நடிப்பு இந்த காணொலியில் இருக்கிறது
-
-
- 16 replies
- 951 views
-
-
ஆஸ்கருக்கு இணையான கோல்டன் க்ளோப் விருது பெற்றவர்கள் -முழு பட்டியல் ஆஸ்கருக்கு இணையான மற்றும் ஆஸ்கார் விருதிற்கு முன்னோட்டமாகக் கருதப்படும் கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது. 73வது கோல்டன் க்ளோப் விருது சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சித் தொடர்களுக்கும், கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டன. இந்த விருதில் சிறந்த நடிகருக்கான விருதை டைட்டானிக் நாயகனான லியனார்டோ டிகாப்ரிகோ 2015ல் வெளியான ரெவனண்ட் படத்திற்காகப் பெற்றார். இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து மைக்கேல் புன்கே என்பவரால் எழுதப்பட்ட நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டது. சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்கத்திற்கான விருதினையும் தட்…
-
- 1 reply
- 758 views
-
-
சுசி.கணேசன் இயக்கிய 'பைவ் ஸ்டார்' படத்தில் அறிமுகமானவர் கனிகா. அதற்குப் பிறகு தமிழ், மலையாள மொழிப்படங்கள் சிலவற்றில் நடித்தவர், தற்போது 'பழஸிராஜா' என்ற மலையாளப் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். கனிகா தமிழில் நடித்த குறிப்பிடத்தகுந்த படம் என்று 'வரலாறு' படத்தைச் சொல்லலாம். அதன்பிறகு வாய்ப்புகள் அதிகம் அவருக்கு வரவில்லை. இந்நிலையில் கனிகாவுக்கு அவர் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். அடு்த்தமாதம் பதினாறாம் தேதி கனிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகன் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக உள்ளார். பெயர் ஷியாம் ராதாகிருஷ்ணன். சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கனிகா-ஷியாம் ராதாகிருஷ்ணன் திருமணம் நடைபெறுகிறது. Cinesouth…
-
- 0 replies
- 898 views
-
-
நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்! 14 Jun 2025, 1:18 PM நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி இன்று (ஜூன் 14) வயது மூப்பு காரணமாக காலமானார். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியைச் சேர்ந்தவர் கருப்பாயி. நாட்டுப்புறப் பாடகியான இவர் சிறிது காலம் வானொலியில் பணியாற்றினார். இவரது திறமையை அறிந்த நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் கொல்லங்குடி கருப்பாயியை ஆண் பாவம் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தில் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்தார். தொடர்ந்து, ஆண்களை நம்பாதே, கோபாலா கோபாலா, கபடி கபடி, ஏட்டிக்கு போட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக சசிக்குமார் நடித்த காரி படத்தில் நடித்திருந்தார். 1993-ஆம் ஆண்டு இவரது கலை சேவையை பாராட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…
-
- 2 replies
- 321 views
-
-
தூக்கத்தில் நடக்கும் நோயால், அவதி: சுவிட்சர்லாந்துக்கு போகிறார் சமீரா ரெட்டி. மும்பை: தூக்கத்தில் நடக்கும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமீரா ரெட்டி இதற்கான சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சமீரா ரெட்டிக்கு குழந்தை பருவத்திலிருந்தே ‘சோம்னாம்புலிசம்' என்ற தூக்கத்தில் நடக்கும் பாதிப்பு உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரும் அவர் பல்வேறு சிகிச்சைகள் பெற்றும் நிவாரணம் கிடைக்கவில்லை. இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளார். சுவிஸ் செல்லும் முன்பாக கிரீஸ் நாட்டில் வசித்து வரும் தனது சகோதரி மேகனாவை பார்க்க செல்கிறார். மேகனா கர்ப்பமாக இருப்பதால் அவரது பிறக்கப் போகும் குழ…
-
- 1 reply
- 574 views
-
-
பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் ஆகிய இரண்டு படங்களுமே குறைந்த பட்ஜெட்டில் படமெடுப்பவர்களை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்து இருக்கிறது, குறிப்பாக தயாரிப்பாளர்களை! 50 கோடி, 90 கோடி, 150 கோடி என்கிற ரூபாய் கணக்கில் தயாரிப்பு செலவு எகிறும் படியாக படங்கள் தயாரிக்கப் பட்டு, அவைகள்தான் வெற்றி பெறுகின்றன என்று சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் இருந்த போதுதான் வெளிவந்தது, மிக குறைந்த பட்ஜெட் செலவுப் படங்களான பீட்சாவும் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படமும். இந்த இரண்டு படமும் வெளிவந்து படம் சூப்பர் ஹிட்டாக, வெற்றிப்பட நாயகனாகி விட்டார் விஜய் சேதுபதி. அதோடு, குறைந்த சம்பளம்தான் விஜய் சேதுபதி கேட்பதுவாம். இதையெல்லாம் விட இன்னொரு விஷயம் விஜய் சேதுபதி பிரபலமான…
-
- 0 replies
- 912 views
-
-
தெலுங்கு பட உலகில் நடிகர் கமல்ஹாசனின் மகள் நடிப்பில் வெளியான கப்பர் சிங் படம் சூப்பர் ஹிட். இதை அடுத்து இளம் கதாநாயகிகளில் தெலுங்கு பட உலகம் சுருதி ஹாசனுக்கு என்று ஒரு தனி இடத்தை ஒதுக்கி உள்ளது. சுருதியும் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று படங்கள் ஒப்புக் கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார். இடையில் விளம்பரப் படங்கள் வேறு குவிகிறது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், மனதை மாற்றிக் கொண்ட இயக்குனர் சுருதி ஹாசனை ராம் சரண் ஜோடியாக நடிக்க வைக்க விருப்பம் கொண்டு, சுருதியை அணுகிய போது, ஒரு கோடி சம்பளம் கேட்டு அதிர வைத்தாராம் சுருதி. இயக்குனர் அதிர்ச்சி அடைந்தாலும் 2 வார காலம் தயாரிப்பாளர், சுருதி, மற்றும…
-
- 0 replies
- 666 views
-
-
பெர்லின் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் முதன்முறையாக தமிழ் குறும்படம் இடம்பெறுகிறது.பிரதீபன் என்பவர் இயக்கி உள்ள குறும்படம் ‘என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்’. இலங்கையில் போரினால் தமிழ் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை கருவாக கொண்ட இப்படத்திற்கு சி.ஜே. ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராகவா அர்ஸ் எடிட்டிங் செய்துள்ளார். இந்த படம் பிப்ரவரி மாதம் நடைபெறும் பெர்லின் திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் பங்கேற்கிறது. தென்னிந்திய படம் ஒன்று இங்கு போட்டி பிரிவில் பங்கேற்பது இதுவே முதல்முறை. http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=458 -தினகரன்
-
- 0 replies
- 1.4k views
-
-
தனுஷ் பட நாயகியை கடித்து குதறிய நாய்கள்: மருத்துவமனையில் அனுமதி தனுஷ் படத்தில் நடித்த பருல் யாதவ் வாக்கிங் சென்ற போது நாய்கள் கடித்து குதறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த முழு செய்தியை கீழே பார்க்கலாம். மும்பையைச் சேர்ந்தவர் நடிகை பருல்யாதவ். இவர், தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான டைரக்டர் கஸ்தூரிராஜாவின் `டிரீம்ஸ்' என்ற படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக நடித்து உள்ளார். மேலும் `புலன் விசாரணை-2' படத்திலும் கதாநாயகியாக நடித்தவர். இதேபோல மலையாளத்தில் புல்லட், கிருத்தியம், பிளாக் டாலியா என்பது உள்பட பல படங்களிலும், கன்னட…
-
- 1 reply
- 423 views
-
-
கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது நடிகர் ரஜினி காந்துக்கு வழங்கப்படுவதாக இந்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்துள்ளார். சினிமா துறையில் சாதனை படைக்கிறவர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இது. இதற்கு முன்பு இந்த விருதைப் பெற்ற தமிழ் நடிகர் சிவாஜி கணேசன். விருதுக்கு ரஜினி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்த பிரகாஷ் ஜாவடேகர் இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரான ரஜினிக்கு இந்த விருதினை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 587 views
-
-
சிக்கலில் வடிவேலுவின் தெனாலிராமன்? இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு வடிவேலு நடிக்கும் படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இப்படத்தில் கிருஷ்ணதேவராயர்-தெனாலிராமன் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு. பட்டாபட்டி படத்தை இயக்கிய யுவராஜ் படத்தை இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் 22 நாட்கள் நடைபெற்றது. அதையடுத்து படப்பிடிப்பு நடைபெறுவதற்கான அறிகுறிகளே இல்லை. இதுபற்றி அப்பட யூனிட் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபோது, படப்பிடிப்பு நடந்தபோது சில பிரச்னைகள் ஏற்பட்டு விட்டது என்கிறார்கள். என்ன காரணம் எனறால், தினமும் 9 மணி படப்பிடிப்பு என்றால் 11 மணிக்குத்தான் ஸ்பாட்டில் தலைகாட்டினார் வடிவேலு. இதுமாதிரி இன்னும…
-
- 0 replies
- 454 views
-
-
A film without a story::
-
- 0 replies
- 571 views
-
-
அன்புள்ள ரஜினிகாந்த், ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்த தமிழ் ரசிகன் எழுதுகிறேன். நலமா? இலங்கை அரசை கண்டித்து ஏப்ரல் 2-ம் தேதி உங்கள் திரைத்துறையை சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக செய்திகள் படித்தேன். அதில் நீங்களும், கமல்ஹாசனும் கலந்துகொள்வீர்கள் என்ற 'சிறப்பு செய்தி'யையும் படித்தேன். நல்லது. நீங்கள் வர வேண்டும் எனவே விரும்புகிறேன். இப்போது மட்டுமல்ல... எப்போதுமே நீங்கள் இத்தகைய போராட்டங்களில் முன் நிற்க வேண்டும் என்றும், நீங்களே முன்வந்து தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் ஆசைப்படுகிறேன். உங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு இதை செய்ய வேண்டிய பெரும் கடமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் யதார்த்தம் எ…
-
- 0 replies
- 768 views
-
-
பயமா இருக்கு திரை விமர்சனம் தமிழ் சினிமாவை பேய் விட்டாலும், பேய் தமிழ் சினிமாவை விடாது போல. பேய் சீசன் முடிந்துவிட்டது என்று இருந்தால் மீண்டும் ஒரு ஹாரர், காமெடி டெம்ப்ளேட்டில் ஜவஹர் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள படம் தான் பயமா இருக்கு. கதைக்களம் படத்தின் நாயகன் சந்தோஷ் ப்ரதீப், தன் மனைவியின் அம்மாவை அழைத்து வர இலங்கை செல்கின்றார், அங்கு இரானுவ வீரர்கள் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இதில் மொட்டை ராஜேந்திரன், பரணி, ஜீவா, ஜெகனும் மாட்டிக்கொள்ள, இரானுவ வீரர்களிடம் சண்டைபோட்டு சந்தோஷ் அந்த 4 பேரையும் காப்பாற்றுகின்றார். அதன் பின் இவர்கள் 5 பேரும் நல்ல நண்பர்களாக சந்தோஷ…
-
- 1 reply
- 1.6k views
-
-
ரஜினியை வைத்து ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் புதிய படத்தின் கதாநாயகியாக அனுஷ்கா நடிப்பார் எனத் தெரிய வந்துள்ளது. கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதிய படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்குவார் என்றும், கன்னட - தமிழ் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது. கோச்சடையான் விழாவில் இந்தப் புதிய படம் குறித்து இன்னும் சில தினங்களில் நடக்கவிருக்கும் கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்ற எதிர்ப்பார்ப்பும் ஆரம்பித்துவிட்டது. இந்தப் படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா ஏற்கெனவே ரஜினிக்க…
-
- 11 replies
- 954 views
-