Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. வாழ்: சினிமா விமர்சனம் நடிகர்கள்: பிரதீப், டிஜே பானு பார்வதமூர்த்தி, ஆரவ் எஸ். கோகுல்நாத், திவா, நித்யா; ஒளிப்பதிவு: ஷெல்லி கலிஸ்ட்; இசை: பிரதீப் குமார்; இயக்கம்: அருண் பிரபு புருஷோத்தமன். வழக்கமான தமிழ் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு, அருவி என்ற திரைப்படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமனின் அடுத்த படம்தான் இந்த 'வாழ்'. ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைசெய்யும் சாதாரண இளைஞனான பிரகாஷின் (பிரதீப்) வாழ்க்கையில் குறுக்கிடும் ஒரு இளம்பெண்ணாலும் (டிஜே பானு) அதனால் அவன் மேற்கொள்ளும் பயணங்களாலும் அவனது வாழ்க்கையே திசைமாறிப் போகிறது. பயணத்தின் முடிவில் நாயகன் என்னவாக ஆகிறான் என்பதே கதை. 'நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நாம் வாழ்வை …

  2. நடிகர் விஜய் 9 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியும் அபராதமும் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அவர் வரி ஏய்ப்பு செய்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான். நடிகர் விஜய்க்கு பெருகும் ஆதரவு 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி கட்ட விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ஏற்கெனவே இறக்குமதி வரி செலுத்திவிட்ட நிலையில், காருக்கான நுழைவு வரி கட்டுவதி…

  3. சமந்தாவுடன் மனோஜ் பாஜ்பாய் மற்றும் தமிழ் நடிகர்கள் சிலரும் நடித்திருந்த தி பேமிலி மேன் 2 தொடருக்கு தமிழ்நாட்டிலும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையில் ‘தி பேமிலி மேன்’ தொடரின் 3-வது பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்று சர்ச்சை கிளம்பியது. விஜய் சேதுபதி எப்படி சம்மதம் தெரிவித்தார் என்று மீண்டும் பரபரப்பு எழுந்தது. இந்நிலையில் தி ஃபேமிலி மேன் 3 தொடர் குறித்து விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியதாவது. “நான் ‘தி பேமிலி மேன் 2’ தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் நடிப்பது உண்மைதான். ஆனால், இந்தத் தொடரில் ஷாஹித் கபூர் ஹீரோ, நான் வில்லனாக நடிக்கிறேன். மனோஜ் பாஜ்பாயுடன் சேர்ந்து எந்தத் தொடரிலோ, …

  4. 80-களின் நாயகிகள் ஒன்று கூடி மகிழ்ச்சி சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா. லிசி, சுஹாசினி ஆகியோர் கலந்து கொண்டனர். பதிவு: ஜூலை 13, 2021 02:38 AM தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த நடிகைகள் சென்னையில் திடீரென்று ஒன்று கூடினார்கள். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா. லிசி, சுஹாசினி ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவரும் கதாநாயகிகளாக நடித்த காலத்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விருந்…

  5. உறக்கத்தைக் கலைத்த “The Lamp of Truth” – “பொய்யா விளக்கு” திரைப்படம் இலங்கை ஈழமண்ணில் யுத்த இறுதி நாட்களில் நடைபெற்றவை போர்க்குற்றங்களே என வலுவான ஆதாரமாக இருப்பவைகளில் மிக முக்கியமானது சேனல் 4 வெளியிட்ட காணொலிக் காட்சிகள், பிறகு நேரில் கண்ட சாட்சியங்கள். பொதுவாக, ஹேக் ஒப்பந்தம், ஜெனிவா ஒப்பந்தம், ரோம் சட்டம் ஆகியவற்றின்படி இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் என்று, என்னென்ன குற்றச் செயல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவோ, அவற்றைவிடப் பல மடங்கு குற்றங்கள் ஈழமண்ணின் யுத்த இறுதிக் காலங்களில் இலங்கை இராணுவம் மற்றும் அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது, இறுதி நேரத்தில் அரசு மருத்துவர்களை அங்கிருந்து …

  6. ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக கடந்த 2013-ல் 'பகலவன்' கதை தொடர்பாக இயக்குநர்கள் லிங்குசாமிக்கும் சீமானுக்கும் இடையில் எழுந்த பிரச்னைக்கு அப்போதே சுமூக தீர்வு எட்டப்பட்ட நிலையில் பின்பு மீண்டும் தற்போது சலசலப்பு எழுந்துள்ளது. என்ன பிரச்னை? இதற்கான முடிவு என்ன? கடந்த 2013ல் இயக்குநர் சீமான் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில் இயக்குநர் லிங்குசாமி நடிகர் சூர்யாவை வைத்து இயக்க இருக்கும் கதை தன்னுடைய 'பகலவன்' கதை சாயலில் இருப்பதாகவும், இந்தக் கதையைப் பத்து வருடங்களுக்கு முன்பே நடிகர்கள் விஜய் மற்றும் விக்ரமிடம் சொல்லியிருப்பதாகவும் அதன் பிறகு நடிகர் 'ஜெயம்' ரவியிடம் சொல்லி அவர் கதைக…

  7. சினிமா படமாகும் ஜீவஜோதி வாழ்க்கை ஜீவஜோதி மீது ஓட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்த ராஜகோபால் ஆசைப்பட்டது, ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் சிக்கியது உள்ளிட்ட உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் தயாராக உள்ளது. ஜீவஜோதியாக நடிக்கும் நடிகை, ராஜகோபாலாக நடிக்கும் நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. படம் குறித்து ஜீவஜோதி கூறும்போது, “எனது வாழ்வில் நான் அடைந்த துன்பங்களை தாண்டி, உணர்வுப்பூர்வமிக்க சட்டத்தின் வழியிலான, எனது போராட்டத்தை, வசதி படைத்த உணவக முதலாளிக்கு எதிராக 18 வருடங்கள் நடந்த போரை, ஜங்கிலி பிக்சர்ஸ் திரைப்படமாக உருவாக்க முன்வந்திருப்பது, மனதிற்கு நெகிழ்வை தருகிறது. எனது கதையை பெர…

  8. முதுபெரும் இந்தி நடிகர் திலீப்குமார் மறைவு பிரதமர் மோதி இரங்கல் முதுபெரும் இந்தி நடிகர் திலீப்குமார் தமது 98வது வயதில் காலமானார். அவர் சிகிச்சை பெற்றுவந்த மும்பை இந்துஜா மருத்துவமனை பிபிசி இந்தி சேவையிடம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது. புதன்கிழமை காலை 7.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக இந்துஜா மருத்துவமனை மருத்துவர் ஜலில் பால்கர் தெரிவித்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் திரைத்துறை நாயகனாக எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரிடம் ஒப்பற்ற திறமை இருந்தது. அதனால்தான் பல தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்களை அவர் மகிழ்வித்தார் என்று தமது பதிவில் அவர் தெரிவித்துள்ள…

  9. கதாநாயகர்கள் இல்லாமல் நடிகைகளை மையப்படுத்தி தயாராகும் அதிக படங்கள் தமிழ் பட உலகில் சமீபகாலமாக கதாநாயகர்கள் இல்லாமல் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி அதிக படங்கள் தயாராகின்றன. பதிவு: ஜூலை 06, 2021 06:35 AM தமிழ் பட உலகில் சமீபகாலமாக கதாநாயகர்கள் இல்லாமல் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி அதிக படங்கள் தயாராகின்றன. ஏற்கனவே ஜோதிகா நடிப்பில் ராட்சசி, நாச்சியார், ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், நயன்தாரா நடித்து அறம், கோலமாவு கோகிலா, ஐரா, கொலையுதிர் காலம், மூக்குத்தி அம்மன். அனுஷ்கா நடிப்பில் பாகுமதி, சைலன்ஸ் ஆகிய படங்கள் வந்தன. திரிஷா நடித்த மோகினி, பரமபதம் விளையாட்டு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின் உள்ளிட்ட படங்களும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள ப…

  10. ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் கருத்துரிமையை நெறிக்கக் கூடாது: சூர்யா, கமல் எதிர்ப்புக் குரல் பட மூலாதாரம், Surya/Kamal படக்குறிப்பு, சூர்யா - கமல் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், கார்த்திக் சுப்புராஜ் என பலரும் தங்களது எதிர்ப்பை பதிவை செய்து வருகின்றனர்.ஏன் இந்த சர்ச்சை, இதன் பின்னணி என்ன? ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021 என்ன சொல்கிறது? பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்கு மூலமாக மக்களை சென்றடைவதற்கு முன்பு அதற்கு 'யு, யு/ஏ அல்லது ஏ' சான்றிதழை தணிக்கை…

  11. ஒடுக்கப்பட்டவர்களின் ஒடுக்கப்பட்டவர்களான புதிரை வண்ணார்களின் வாழ்க்கையையும் வலியையும் எதார்த்தமும் புனைவும் கலந்து பேசும் படைப்பு, Neestream ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘மாடத்தி.’ தீண்டாமையின் உச்சமான ‘பார்த்தாலே தீட்டு’ என்னும் துயரத்துக்கு உள்ளான புதிரை வண்ணார்கள், சாதியப்படிநிலையில் பட்டியலின மக்களுக்கும் கீழாக வைக்கப்பட்டவர்கள். பட்டியலின மக்களின் அடிமைகளாக, அவர்களின் துணிகளை வெளுக்கும் புதிரை வண்ணார்கள், ‘மேல்சாதிக்காரர்கள்’ பார்வையில் படாதவாறு மறைந்து வாழவேண்டும். அவர்கள் வழியில் வந்துவிட்டால் பார்வையில் படாதவாறு மறைந்துகொள்ளவேண்டும். அப்படிப்பட்ட புதிரை வண்ணார் தம்பதி வேணியும் சுடலையும். அவர்களின் மகள் யோசனாவுக்கு ஒருமுறையாவது ‘ஊருக்குள்’ போய்ப்…

    • 1 reply
    • 850 views
  12. ''எல்லோரும் ஈழத்துக்கு வரச்சொல்லி கூப்பிடுறாங்க'' - 'மேதகு' குட்டிமணி உ. சுதர்சன் காந்திசுரேஷ் குமார் R நடிகர் குட்டிமணி தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பயோபிக்கான, 'மேதகு' படத்தில் பிரபாகரனாக நடித்த குட்டிமணியின் பேட்டி. விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...! எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…! Get Our Newsletter தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பயோபிக் 'மேதகு'. தமிழீழ திரைக்களம…

  13. மேதகு' திரைப்படம்: ''ஜகமே தந்திரம்', 'தி ஃபேமிலிமேன்' கதைகளுக்கான பதிலடி!'- இயக்குநர் கிட்டு ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 43 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER @BS_VALUE விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த வாழ்க்கை வரலாறு, ஈழத்தமிழர்கள் போராட்டம் குறித்த பின்னணியை சித்தரிப்பதாக பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது 'மேதகு' திரைப்படம். பிரபாகரன் பிறப்பு, 1950-களின் பிற்பகுதியில் நடந்த இனக்கலவரம், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 1980 வரை நடந்த அரசியல் மாற்றங்கள், கல்வி போராட்டம், பிரபாகரனின் முதல் அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவானது வரை தற்போது வ…

  14. ஈழப் போராட்டம் பற்றி செயற்கையான புனைவுகள், அந்நியமான வசன நடைகள், வரலாற்றுக்கு புறம்பான பதிவுகள் இல்லாமல், தெளிவான கதை சொல்லும் பாங்குடன், முடிந்தளவு யதார்த்ததை ஒட்டி இதுவரை வந்த ஆகச்சிறந்த திரைப்படம் எது என்றால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம் - மேதகு. முதல் பிரேமிலேயே தமிழரின் தொன்மையை தொட்டு படம் ஆரம்பிக்கிறது. குமரிக்கண்டம் வரை ஆண்ட இனம் என்ற முகவுரை படத்தின் வரலாற்றுப் புரிதல் பற்றிய ஐயப்பாட்டை ஆரம்பத்தில் தோற்றுவித்தாலும், அடுத்த காட்சிலேயே - 1995 இன் மதுரை மாவட்ட கிராமம் ஒன்றில் நடக்கும் “மாவீரன் கூத்தோடு” அண்மைய வரலாற்றில் ஆழமாக படம் இறங்கும் போது அந்த ஐயப்பாடு மறைந்து விடுகிறது. குழந்தை பிறந்து, வளரும் பருவம் என்று மெதுவாக நகரும் கதை, சிறுவன் பிரபாக…

  15. கமலி from நடுக்காவேரி இந்த படத்தின் ட்ரைலர் பார்த்தேன். பார்க்கும் போதே, படத்தின் தரம், நேர்த்தி தெரிகிறது. கட்டாயம் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும்.

    • 0 replies
    • 388 views
  16. இந்தக் கூட்டணியை 70s கிட்ஸ் மறக்கவே மாட்டாங்க..! - நீங்கா கலைஞன் -1 #MyVikatan விகடன் வாசகர் Representational image ( pixabay ) ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களுக்கு அழகு சேர்த்ததை விட மோகனுக்கு மணி மகுடம் சூட்டினார் ராஜா. பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! ஒரு துறையில் வெற்றி காண்பது என்பது மிக எளிதான செயல் அல்ல. உழைப்பை தாண்டி அந்தப் பணியின் மீது உள்ள ஈடுபாடு என்றும் வெற்றிக்கு வித்தாக அமையு…

    • 8 replies
    • 1.3k views
  17. பல தடங்கல்கள், தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தை குத்தகைக்கு எடுத்துள்ளவர்களின் உள்ளடி வேலைகள் எல்லாவற்றையும் தாண்டி, தமிழர்களால் நடத்தப்படும் OTT தளத்தில் ஜூன் 25 வெளியாகிறது மேதகு திரைப்படம். எந்த OTT தளமும் வெளியிட மறுத்த படத்தை BS Value என்று தாமே ஒரு தளம் தொடங்கி வெளியிடுவதாக அறிகிறேன். இந்த படத்துக்கு எழுந்த இந்திய ஆளும் வர்கத்தின், அவர்களின் ஏஜென்டுகளின் எதிர்ப்பு, இந்த படம் நமக்கானது என்ற நம்பிக்கையை தருகிறது. படம் பார்த்த பின்தான் சொல்ல முடியும். இந்த படத்தை சமூக வலைதளங்களில் எவரும் டிரெண்ட் செய்யவில்லை என்பது கவலையான விடயம்.

  18. தளபதி-65 படத்தின் தலைப்பு வெளியானது- மீண்டும் ஆங்கிலத்தில் பெயர்! நடிகர் விஜய்யின் தளபதி-65 படத்தின் தலைப்பும் முதல் பார்வையும் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளதுடன் படத்துக்கு ‘பீஸ்ட் (Beast)’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இவ்வாண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படமும் ஆங்கிலப் பெயருடன் வெளியாகியிருந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜோர்ஜியாவில் நடைபெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைக்கப…

  19. தமிழ் சினிமாவின் ஆக்ஸிஜன், ரசிகர்களின் தலைவன்…'உங்கள் விஜய்' எப்படி உருவானார்? #fanboyseries-1 உ.ஸ்ரீ விஜய் 'விஜய்' இந்த பெயர் தமிழ் சினிமாவிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. சாதாரண நடிகராக திரையுலகில் அறிமுகமாகி இன்று நம்பர் 1 நாயகன் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கிறார் விஜய். கோலிவுட்டின் கமர்ஷியல் சினிமாக்கள் மீதும், கமர்ஷியல் பட ஹீரோக்கள் மீதும் சில கலைப்படைப்பாளிகளுக்கும், அறிவுஜீவிகளுக்கும் எப்போதும் ஒரு பெருங்கோபமும் ஆதங்கமும் இருப்பதுண்டு. அவர்களைப் பொறுத்தவரை மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தப்படும் படங்கள் மட்டுமே நல்ல சினிமா. அதை விடுத்து மற்ற பொழுதுபோக்குப் ப…

  20. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: வித்யா பாலன், சரத் சக்ஸேனா, முகுல் சட்டா, விஜய் ராஸ்; ஒளிப்பதிவு: ராகேஷ் ஹரிதாஸ்; இயக்கம்: அமித் மாசூர்கர். வெளியீடு: அமெஸான் ப்ரைம். சினிமாவில் அதிகம் பேசப்படாத விஷயங்களை வைத்து மிக அரிதாகவே திரைப்படங்கள் வெளியாகும். அப்படி ஓர் அரிதான திரைப்படம்தான் (Sherni - பெண் புலி). சுலேமானி கீடா, நியூட்டன் படங்களை இயக்கிய அமித் மாசுர்கரின் அடுத்த படம் இது. மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதிக்கு புதிய காட்டிலாக அதிகாரியாக வருகிறார் வித்யா. அந்தத் தருணத்தில் பெண் புலி ஒன்று அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களை அடித்துக்கொல்ல ஆரம்பிக்கிறது. அந்தப் புலியை உயிருடன் வேறு இடத்திற்கு மாற்ற முயலும் வித்யாவி…

  21. எப்படி இருக்கிறது ஜகமே தந்திரம்.? நடிகர்கள்: தனுஷ் ஐஸ்வர்யா லட்சுமி ஜோஜு ஜார்ஜ் கலையரசன் ஜேம்ஸ் காஸ்மோஸ் வடிவுக்கரசி Advertisement இயக்கம்- கார்த்திக் சுப்பராஜ் இசை - சந்தோஷ் நாராயணன் பத்த வச்ச நெருப்பு பரபரன்னு பற்றி எரிவது போல படம் ஓடுகிறது.. தொடக்கத்திலிருந்து இறுதி வரை.. வழக்கமான ஒரு டான் கதைதான் போல என்று ஆரம்பக் காட்சிகளில் தோன்றினாலும்.. அதைத் தாண்டி சில ஏரியாக்களை டச் செய்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.. அது இந்தப் படத்தை வித்தியாசப்படுத்த கை கொடுத்துள்ளது. அதை விலக்கி விட்டுப் பார்த்தால் இதுவும் ஒரு சாதாரண டான் கதையாக மாறிப் போயிருக்கும். 2 டான்கள்.. ஒருவன் நல்ல டான்.. இன்னொருவன் மோசமான டான். பல்வேற…

  22. பாலியல் தொல்லை : 14 பேர் பட்டியலை வெளியிட்ட - நடிகை ரேவதி சம்பத் திருவனந்தபுரம் நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்டவர் ரேவதி சம்பத் (வயது 27). கோவையில் உள்ள கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உளவியலில் பட்டம் பெற்றுள்ளார். அவரது மிகப் பெரிய படைப்புகளில் வாஃப்ட் என்ற குறும்படம் அடங்கும். இந்த் குறும்படம் அவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு ஒரு வருடத்திற்கு முன் வெளியிடப்பட்டது. 2019-ல் `பட்னாகர்’ என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அறிமுகமானார். இவர் தற்போது, தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என 14 பேருடைய பட்டியலை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ``இவர்கள் என்னை பாலியல் ரீதிய…

  23. தொரட்டி படத்தின் கதாநாயகன் கொரோனாவால் உயிரிழப்பு! தொரட்டி படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மக்களை மிகவும் பாதித்து வருகிறது. தமிழ் சினிமாவிலும் பல திறமையான கலைஞர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தொரட்டி படத்தில் கதாநாயகனை நடித்த ஷமன் மித்ரு கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து இன்று உயிரிழந்துள்ளார். ஷமன் மித்ரு தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரும் கூட. கேவி ஆனந்த், ரவிகே சந்திரன் ஆகியோரிடம் அவர் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். …

  24. ஒரு திரைப்படத்தின் ஆரம்பத்தில் உறைந்துள்ள முடிவு – ஆர். அபிலாஷ் June 12, 2021 - ஆர்.அபிலாஷ் · சினிமா கட்டுரை ablish three things to your reader or audience: (1) who is your main character? (2) What is the dramatic premise — that is, what’s your story about? and (3) what is the dramatic situation — the circumstances surrounding your story?”- Syd Field (“The Foundations of Screenwriting”, p. 90) சிட் பீல்டைப் பொறுத்தமட்டில் ஒரு திரைக்கதையை சரியாகத் துவங்க முதலில் நாம் அதன் முடிவை, கதையின் உள்ளார்ந்த மோதல்கள் உருவாக்கும் சிக்கலுக்கு நாம் வந்தடைகிற தீர்வை (resolution) நாம் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும். அதாவது ஒரு நல்ல திரைக்கதை துவங்குகிற இடத்தி…

  25. 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO INDIA, YOUTUBE நடிகர்கள்: கேப்ரியல் லியோன், ஃப்ளாவியோ டொலஸானி, ஃபிலிப் ப்ரகன்கா, ராக்கல் வில்லர், மரியானா செரோன், லைலா காரின்; இசை: மெலிசா ஹார்ட்விக்; இயக்கம்: ப்ரெனோ சில்வெய்ரா. வேறு ஒரு கலாச்சாரம், நிலப்பரப்பு, மனிதர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் தொடர்கள், திரில்லர், ஹரார், ஆக்ஷன் தொடர்களாக இல்லாத பட்சத்தில் அவை கவனிக்கப்படும் வரவேற்கப்படுவதும் மிக அரிதாகவே நடக்கும். அந்தப் பட்டியலில் சேர்கிறது இந்த DOM தொடர். இந்த முதல் சீசனில் மொத்தம் எட்டு எபிசோடுகள். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கிறது கதை. பிரேசிலில் போதைப் பொருளான கொக்கெய்ன் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.