Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஆடுகளம் பார்த்தேன்... [Aadu kalam] நீண்டகால இடைவெளிக்குப் பின் யாழ்ப்பாணம் செல்லா திரையரங்கில் ‘ஆடுகளம்’ எனும் படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தைப் பார்த்ததும் முப்பத்தைந்து ஆண்டு கால நினைவுகள் என்நினைவுத் திரையில் நிழலாடின. எனது நண்பரும் ஒரு சாலை மாணாக்கரும் உறவினருமான கவிஞர் வ.ஐ.ச. ஜெயாபாலன் இந்தப் படத்திலே தனுஷ் உடன் இணைந்து முக்கியபாத்திரத்தில் நடித்துள்ளார். மதுரை மாவட்டத்திலே ஒரு கிராமத்தில் ஒரு காலத்தில் நடைபெற்ற கோழிச்சண்டையை (சேவற்சண்டையை) மையமாகவைத்துப் பின்னப்பட்ட கதையிலே பரம்பரை பரம்பரையாகக் கோழிச் சண்டையை நடத்தி வரும் பேட்டையாராக இலங்கையைச் சேர்ந்த கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவரது தோற்றம் அந்தப்பாத்திரத்திற்கு உயிர் கொடு…

    • 0 replies
    • 817 views
  2. அனுஷ்க்கா ரசிகர்களுக்கு துக்ககரமான செய்தி ! கவர்ச்சிப் புயல் (!?) அனுஷ்க்கா அண்மையில் மிகவும் ரகசியமாக நாகர்ஜுனாவின் மகனைத் திருமணம் செய்த்ததையொட்டி அவரது ரசிகர்கள் சுருண்டுபோயுள்ளார்களாம். தெலுங்கிலும், தமிழிலும் பல முண்ணனி நடிகர்களுடன் ஒரு கலக்குக் கலக்கிய அனுஷ்க்கா இப்படித் திடு திடுப்பென்று கலியாணம் முடித்தது தமிழகத்தில் ஒரு சில முண்ணனி நடிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறதாம். அதில் ஒருவர் வயித்தெரிச்சல் தாங்கமுடியாமல் ஊரெல்லாம் சொல்லி அழுது புலம்புகிறாராம். பாவம் ரசிகர்கள் ( நானும்தான்) கீ...கீ

  3. உரு பட்டேல் என்ற பெயரை இதுவரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இவர் வெளிநாட்டு வாழ் இந்தியர். டாலர்களில் புரளும் மில்லினர். குஜராத்தில் பிறந்த உரு பட்டேலுக்கு ஓர் ஆசை. ராமாயணம் கதையை படமாக்க வேண்டும்! இதே ஆசையுடன் திரிந்த இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி 'ராமாயணம்' என்ற பெயரில் ஸ்கிரிப்ட் தயார் செய்து, அஜய்தேவ்கானை ராமனாகவும் அவரது மனைவி கஜோலை சீதையாகவும ஆக்கி விட்டார். இந்தப் படத்தின் பட்ஜெட் நூற்றைம்பது கோடி! ராஜ்குமார் சந்தோஷியின் இந்த அட்டாக்கால் சற்றும் மனம் தளராத விக்கிரமாத்தியன் உரு பட்டேல், 'அனுமான்' என்ற பெயரில் அதே ராமாயண கதையை தயாரிக்கிறார். இதுவொரு சர்வேதச புராஜெக்ட். பட்ஜெட் ராஜ்குமார் சந்தோஷியின் ராமாயணத்தைவிட அதிகம். இதனை புரிந்து கொள்ள ஒரு சின்ன சாம்…

    • 0 replies
    • 995 views
  4. கடல் குதிரைகள் திரைப்படம் தொடர்பில் இசையமைப்பாளர் திரு.இமான் அவர்கள் வழங்கும் கருத்துக்கள் http://www.pathivu.com/news/40690/57//d,article_full.aspx

    • 1 reply
    • 1.3k views
  5. இலங்கையை ஆட்சி செய்த கடைசி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்க மன்னனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் மும்மொழியிலும் உருவான திரைப்படம் தான் கிரிவெசிபுர. இத்திரைப்படத்தின் உத்தியோகபூர்வ முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை தேவிந்த கோங்காகே இயக்கியுள்ளார். இவரே கதை,திரை கதை,வசனம் எழுதியுள்ளார். இக்கதைப்பற்றி 4 1/2 வருடங்கள் ஆராய்ச்சியும் செய்துள்ளார். கிரிவெசிபுர படத்தின் பிரதான கதாபாத்திரங்களாக புபுது சத்துரங்க (ஸ்ரீ விக்ரம இராஜசிங்கன்) மஹேந்திர பெரேரா (பிலிமதலவ்வை),புத்திக லொகுகெட்டிய (டொன் டி யெஸ்) ஆகியோர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தில் ஸ்ரீ விக்ரம இராஜசிங்க மன்னனின் பட்டத்து ராணி ஸ்ரீ வெங்கட் ரங்கம்மாளாக இலங்கை தமிழ் சினிமாவின் ந…

    • 0 replies
    • 512 views
  6. "பாகுபலி" வெற்றிக்காக, தியேட்டர் வாசலில் ஆடு பலி கொடுத்த ரசிகர். ஹைதராபாத்: பாகுபலி படம் வெற்றி பெற வேண்டி ஹைதராபாத் அருகே உள்ள தியேட்டர் வாசலில் ரசிகர் ஒருவர் ஆடு ஒன்றை பலி கொடுத்துள்ளார். எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பாகுபலி படம் இன்று உலகம் முழுவதும் தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளில் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் மற்றும் வெளிநாடுகளிலும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. பாகுபலி டிக்கெட் வாங்க ரசிகர்கள் முந்தியடிக்கிறார்கள். ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பை பார்த்து பாகுபாலி படக்குழுவினர் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் செய்த செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைத…

  7. குழந்தைகள் கட்டாயம் பார்க்கவேண்டிய ஐந்து பெஸ்ட் உலக திரைப்படங்கள்! குழந்தைகளின் இயல்பான படைப்பாற்றலையும், நல்லியல்புகளையும் தக்க வைத்துக்கொள்ளவும், அவர்களின் கற்பனை வளத்தை வளர்த்தெடுக்கவும் குழந்தைகள் பார்க்க வேண்டிய ஐந்து சிறந்த குழந்தைகள் படங்கள் இதோ, 1. தி ரெட் பலூன் ( the red balloon ) ஒரு சிறுவனுக்கும், சிகப்பு வண்ண பலூனுக்கும் இடையேயான நட்பை பேசுகிறது இப்படம். சிறுவனுக்கும் பலூனுக்கும் இடையில் நடக்கிற காட்சிகள் குழந்தைகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும், அதே நேரத்தில் முற்றிலும் இயந்திரமாய் மாறிப்போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் இப்படத்தைப் பார்க்கும் போது நாமும் இழந்துவிட்ட குழந்தைப் பருவத்தை நிச்சயம் பெறுவோம் என்று உறுதியாகச் சொல்ல முடிய…

    • 2 replies
    • 1.2k views
  8. Started by கிருபன்,

    தொப்பி ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன், கலாப்ரியா, நாஞ்சில்நாடன் ஆகியோர் நடுவே என்ன ஒற்றுமை? கலாப்ரியா எப்போதுமே ஆழமான மனச்சோர்வுடன் இருப்பார். விசேஷ நாட்களில் சோர்வு இன்னும் அதிகமாகும். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனை நான் திருவண்னாமலையில் முதலில் பார்த்தபோது குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தார். ”ஏன் சார் அப்டி சிரிக்கிறார்?”என்று ரகசியமாக பவா செல்லத்துரையிடம் விசாரித்தேன். ”அவர் அப்டித்தாங்க சிரிப்பாரு…” என்றார். ”அது சரி…ஆனா எதுக்கு சிரிக்கிறார்?” அவர் ”அதாங்க நானும் சொன்னேன்,அவரு அப்டித்தான் சிரிப்பாரு”. பிறகு நான் சந்திக்கும்போதெல்லாமே எஸ்.ராமகிருஷ்ணன் குலுங்கிக் குலுங்கித்தான் சிரித்துக் கொண்டிருந்தார். அவரது சரீர அமைப்பே அதற்கு வாகாகத்தான் வடிவம் கொடிருக்க…

  9. காலம் காலமாக மனிதனை மனிதன் அடக்கி ஆளும் மரபும், குனிந்தே பழகிய மனிதனும் திடீரென்று ஒருநாள் முதுகெலும்பின் பயனறிந்து நிமிர்ந்து நிற்பதும் நடந்து கொண்டேதானிருக்கிறது. தற்போது சைனாவின் ஒரு பகுதியாக இருக்கும் தைவான் 1930களில் ஜப்பானின் அதிகாரப் பிடியில் இருந்த போது நடந்த “Wushe Incident” என்றழைக்கப்படும் பழங்குடியின மக்களின் எழுச்சிப் போராட்டத்தின் அப்பட்ட பதிப்பே "Warriors of the Rainbow: Seediq Bale" என்னும் இந்தத் திரைப்படம். தைவானின் திரைப்பட வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், சென்ற ஆண்டின் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இறுதி வரை பங்கேற்று ஈரானின் 'A Seperation' படத்திடம் தோற்றது குறிப்பிடத்தக்கது. படத்தின…

  10. இஷா கோபிகரை நினைவூட்டும் ‘என் சுவாசக் காற்றே’! 26 Feb 2025, 8:10 PM சில திரைப்படங்கள் சில நினைவுகளின் எச்சங்களாகத் திகழும். அப்படத்தோடு சம்பந்தப்பட்டவர்களே அதனை மறந்திருந்தாலும், அதனைப் பார்த்து ரசித்தவர் மனதில் கோடானுகோடி எண்ணங்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். எந்தவொரு கலைப்படைப்புக்கும் அது பொருந்தும். அந்த வகையில், ‘என் சுவாசக் காற்றே’ திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மீதமிருக்கிறது. அந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தந்த பாடல்களைக் கேட்டுவிட்டு, ‘மிஷன் இம்பாஸிபிள்’ டாம் க்ரூஸ் போன்று அரவிந்த் சாமி சாகசம் செய்யும் ஸ்டில்களை பார்த்துவிட்டு ஆவலோடு அப்படத்தைக் காண தியேட்டருக்குச் சென்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. வீணான ‘காஸ்ட்டிங்’! ஒரு அழகான…

  11. முதல் பார்வை: இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தாமல் விடப்பட்ட குண்டு மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கினால், அது காவல் நிலையத்தில் இருந்து களவு போனால், அதற்குக் காரணம் என்று காயலாங்கடை லோடு ஏற்றிச் செல்லும் லாரி டிரைவர்தான் என்று குற்றம் சுமத்தினால் அதுவே 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஓர் இளம் தாய், தன் குழந்தையுடன் மாமல்லபுரம் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அங்கு கரை ஒதுங்கிக் கிடக்கும் குண்டைத் தாண்டி அந்தக் குழந்தை ஓடும் போது தடுக்கி விழுகிறது. குழந்தையை வாரி அணைக்கும் அந்தத் தாய் குண்டு இருப்பது கண்டு அதிர்ச்சியாகி, போலீஸுக்குத் தகவல் கொடுக்கிறார். காவலர் ஒருவர் அந்த க…

  12. படம் தொடங்குனதுல இருந்து ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் சிரிக்கவைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவே பெரிய வெற்றி. ஏற்கனவே இலங்கையில் வெளிவந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பதால் கதையின் ஒன்லைன் தெரியும். ஆணுறுப்பு எழுச்சியடைந்த நிலையில் இறந்துபோகும் ஒரு பெரியவர், குடும்பத்தினர் இதனை மறைத்து எவ்வாறு அவரை நல்லடக்கம் செய்கின்றனர். அதுதான் கதை. இதில் என்ன நகைச்சுவை செய்துவிட முடியும் என்கிற அதிருப்தியில்தான் படம் பார்க்கவே சென்றேன். சும்மா சொல்லக்கூடாது திரிகொளுத்தி பட்டாசாக வெடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியுமே நல்ல நேர்த்தி, நடித்தவர்கள் எல்லோருடைய பங்களிப்புமே மிகநன்று, சரியான டைமிங் டயலாக்ஸ், சின்னச் சின்ன முகபாவனைகளில், பார்வையில், பல்வேறு செய்திகளை குறிப்பால் உண…

  13. இளையராஜா என்ற மகாவித்வானும் நானும்.. -1 எழுபதுகளின் முற்பகுதி. ஒளிப்பதிவாளராக மட்டும் நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். கேரளத்தில் மலையாளப் படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது ஒரு தெலுங்குப் படவாய்ப்பு வந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். ராஜாஜி அவர்களின் கதையான "திக்கற்ற பார்வதியை" தமிழில் படமாக எடுத்துத் தேசிய விருது பெற்றவர். திக்கற்ற பார்வதியைத் தொடர்ந்து " தரம்மாறிந்தி " என்ற தெலுங்குப் படத்தை இயக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப் படத்தை நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஒத்துக்கொண்டேன். அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஜி.கே. வெங்கடேஷ் என்ற இசையமைப்பாளர் தான் அந்தப் படத்திற்கு இசை. ஜி.கே. வெங்கடேஷ் எம்.எஸ…

  14. பொன்மகளும், சில திரைப்பெண்களும்! மின்னம்பலம் நிவேதிதா லூயிஸ் கொரோனா காலத்திலும் மக்களிடம் ஓடிடி பிளாட்ஃபார்ம் மூலம் முதலில் வந்து சேர்ந்திருக்கிறாள் ‘பொன்மகள் வந்தாள்’. பெண் மனத்தை, அவள் போராட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய படங்கள் மிகக் குறைவே. பெண் மனது எப்படி இயங்குகிறது என்பதையும் ஆண்களே இங்கே எழுதி இயக்கியிருக்கிறார்கள்.’பொன்மகள் வந்தாள்’ அப்படியான ஒரு படம் என்றே பரவலாகப் பேசிக்கொள்ளப்படுகிறது. ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் சக்தி ஜோதியின் ‘தாய்’ ஒருகட்டத்தில் நமக்கு அறிமுகம் செய்யப்படுகிறார். மகள் காதல் திருமணம் செய்துகொண்டு போனபின் அவளைப் பற்றிய எல்லா ஆவணங்களையும் ஆத்திரத்தில் ‘எரித்து’ விட்டதாகக் கூறி, தன் மகள் வயிற்றுப் பேத்தி உயிருடன் இருப…

  15. படப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல ஹீரோ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி எர்ணாகுளம் மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் டொவினோ தாமஸ். இவர் நடித்த கோதா, அபியம் அனுவம் மற்றும் மாயநாதி போன்ற படங்கள் பெறும் வரவேற்பை பெற்றன. தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். இதனிடையே அவர் தற்போது வரவிருக்கும் காலா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் காலப்பட படபிடிப்பின் சண்டை காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக டொவினோ தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கேரள் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் டொவினோவ…

    • 3 replies
    • 1.1k views
  16. TALAASH (Hindi) - திரை விமர்சனம் அமீர் கானின் சிறப்பான நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் இது. வசூலில் பெரும் சாதனை படைக்கவில்லை என்றாலும் என்னைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர். திரைப்படத்தின் முதல் காட்சியே படத்தின் பலம். நள்ளிரவில் கடலின் ஓரமாக இருக்கும் சாலையில் வேகமாக வரும் ஒரு கார், அதே வேகத்தில் பாதை மாறி கடலில் தவறி விழுகிறது. மறுநாள் காலையில் உள்ளிருந்து கார் வெளியேற்றப்படும் போது அதனுள்ளே இறந்த நிலையில் ஒருவர் கிடக்கிறார். இந்த கேஸை கையாள வரும் இன்ஸ்பெக்டர் சுரான் (அமீர்கான்) தன் விசாரணையில், இறந்தவர் குடி மற்றும் போதையி…

    • 0 replies
    • 1k views
  17. நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து நேற்று இரவு கீழே விழுந்தார். அப்போது கட்டில் கால் அவருடைய வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது (59). ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மஞ்சுளாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகை மஞ்சுளா எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ் போன்ற பழம்பெரும் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்…

    • 11 replies
    • 1.1k views
  18. திரை விமர்சனம்: எங்கிட்ட மோதாதே ரஜினி ரசிகனான ரவியும் (நட்ராஜ்), கமல் ரசிகனான நல்லபெருமாளும் (ராஜாஜி) நண்பர்கள். இருவரும் ரஜினி, கமல் நடித்த படங்கள் வெளியாகும்போது, கட்அவுட் வரைந்து பாராட்டுகளை அள்ளுகிறார்கள். ராஜாஜியின் தங்கை சஞ்சிதா ஷெட்டிக்கும், நட்ராஜுக்கும் காதல் மலர்கிறது. அந்தக் காதலால் நண்பர்கள் இடையே மோதல் உருவாகிறது. ரஜினி, கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும்போது தியேட்டரில் ரசிகர்களுக்குள் மோதல், அடிதடி எனப் பிரச்சினைகள் வெடிக்கின்றன. அந்தப் பகுதியில் திரையரங்கம் வைத்திருக்கும் ராதாரவியுடன் சேர்ந்து கட்டப் பஞ்சாயத்து அரசியல் செய்யும் விஜய்முருகனுக்கு இது பிடிக்காமல் ரசிகர்கள் இடையே ப…

  19. 12 வருட அடிமை - அடிமைகளது அகவாழ்க்கையையும் துயர்களையும் சொல்லும் படம் ரதன் முப்பது வருடங்களுக்கு முன்பு அகதியாக மொன்றியலில் உள்ள மிராபல் விமான நிலையத்தில் தை மாத முற்பகுதியில் வந்திறங்கியபோது காலை பத்து மணி. அகதி விசாரணைகள் முடிந்து அங்கிருந்த ஒரு கறுப்பின மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் மொன்றியல் நகருக்கு வந்தபோது மாலை நான்கு மணி. நான் மொன்றியல் நகரில் இறங்கியபோது குளிர் பூச்சியத்துக்கு கீழே 27 பாகை எனப் பேருந்து நிலைய அறிவித்தல் பலகை காட்டியது. அப்போது என்னால் அந்தக் குளிரின் கொடூரத்தை உணரமுடியவில்லை. என்னிடம் அப்போது இருந்தது இரண்டு கனடிய டொலர்கள். அங்கு நின்றவர்களிடம் விலாசத்தைக் காட்டி அரைகுறை ஆங்கிலத்தில் வினவி மற்றொரு பேருந்தில் ஏறிக்கொண்டேன். புதிய இடம், கடும் …

  20. மனநலம் பாதிக்கப்பட்டவள் என்று முத்திரை குத்தி தன்னுடைய சொத்துக்களை பறிக்க சதி செய்வதாக தந்தை மீது நடிகை கனகா புகார் கூறியுள்ளார். செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், 2002ஆம் ஆண்டு தனது தாய் தேவிகா இறந்துவிட்டார். அப்போது நான் மிகவும் தனிமையாக இருப்பதை உணர்ந்தேன். தனிமையால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு 2004ஆம் ஆண்டு முத்துக்குமார் அறிமுகமானார். 3 வருடங்களாக நாங்கள் பழகி வந்தோம். அதன் பிறகு இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டோம். 15 நாட்கள் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்ந்தோம். பின்னர் முத்துக்குமார் காணாமல் போய்விட்டார். அதன் பிறகு நான் என் கணவரை தேடி வருகிறேன். என் கணவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. அப்போது ம…

  21. உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது. 1940 அபண உத்தமபுத்திரன் ஊர்வசி சாகசம் காள மேகம் கிருஷ்ணன் தூது நவீன தெனாலிராமன் சந்திரகுப்த சாணக்யா தருதலை தங்கவேலு சகுந்தலை சதி மகானந்தா சதி முரளி சத்யவாணி தமிழ் தாய் (மாத்ரூ தர்மம்) தானசூர கர்ணா திலோத்தமா திருமங்கை ஆழ்வார் தேச பக்தி நவீன விக்ரமாதித்தன் புத்திமான் பலவான் ஆவான் நீலமலை கை பக்த சேகா பக்த கோரகும்பர் பக்த துளதிதாஸ் பக்தி (அம்பரீஷன்…

    • 14 replies
    • 3.2k views
  22. இந்த வருட ரொராண்டோ படவிழா அடுத்தமாதம் நான்காம் திகதி ஆரம்பமாகின்றது .இதில் காக்கா முட்டை என்ற மணிகண்டன் இயக்கிய தமிழ்ப்படம் திரையிடப்படுகின்றது.அதைவிட வேறு இரு இந்திய படங்களும் திரையிடுகின்றார்கள் .

    • 3 replies
    • 536 views
  23. இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தம்முடைய இசைக்கல்லூரியில் 'தa Futures' என்கிற திட்டத்தை அவருடைய பிறந்த நாளான நேற்றைய தினம் அறிமுகப்படுத்தினார். எம்ஐடி கல்லூரி, இயக்குநர் பரத்பாலா மற்றும் கே.எம் இசைக் கல்லூரி சேர்ந்து கிரியேட்டிவாக ஒரு ப்ராஜக்ட் பண்ண வேண்டும் என நினைத்தோம். அதன் வெளிப்பாடு தான் இந்த 'தa Futures' என்கிற அறிமுகத்தோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார் அவர். அப்பொழுது பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்தார். கே : தa Futures மூலமாக என்னவெல்லாம் பண்ணலாம் என நினைக்கிறீர்கள்? ப : இது தமிழ்நாடு கலாசாரம் அதிலும் குறிப்பாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.