Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. திருச்செந்தூரில் உள்ள வனத்தி என்கிற கிராமத்தைச் சேர்ந்த கிட்டானுக்கு (துருவ்) சிறுவயதிலிருந்தே கபடி ஆட வேண்டும் என்பது ஆசை... லட்சியம்! அவனது ஆசைக்குத் தந்தையின் அச்சம் தடையாக இருக்கிறது. இதற்கு தென்மாவட்டங்களில் பாண்டியராஜா - கந்தசாமி ஆகிய இரு கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்களும், அவரது இளம் பருவத்தில் நடந்த கசப்பான அனுபவங்களும் காரணமாக இருக்கின்றன. இந்நிலையில், கிட்டானின் உடற்கல்வி ஆசிரியர் அவனுக்குக் கைகொடுக்க, அடுத்தடுத்து அவன் வாழ்வில் நடக்கப் போவது என்ன என்பதைப் பேசுகிறது இந்த 'பைசன்' என்கிற 'காளமாடன்'. Bison Review; பைசன் விமர்சனம் தன் இலக்கெல்லாம் அந்த நடுக்கோட்டைத் தொடும் வேகம்தான் என, நடிப்பில் ஆற்றாமை, கோபம், வெறி என உணர்வுகளை நாலு கால் பாய்ச்சலாகக் கொ…

  2. நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் 'தலைவன் இருக்கின்றான்' என்ற நேரலை கலந்துரையாடலில் பங்கேற்றனர். சில நாட்களுக்கு முன் இதே தலைப்பில் நடிகர்கள் கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் கலந்துரையாடினார்கள். அப்போது விஜய் சேதுபதி கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். அந்த உரையாடல் சமூகவலைதளத்தில் வைரலானது. அதே போன்று இன்று நடந்த கலந்துரையாடலில் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசனும், ரஹ்மானும் அவர்களுடைய பார்வையில் பதிலளித்தார்கள். அதிலிருந்து ஒரு பகுதி இங்கே. கமல்ஹாசன் நேரலையில் பேசியது என்ன? ஊரே கொண்டாடியதற்கு பிறகுதான் நான் ஏ.ஆர். ரஹ்மானை கவனித்தேன். அவருடைய பாடல்களை அதுவரையில் நான் கேட்கவே இல்லை. 'தலைவன் இருக்கின்றான்' படத்திலுள்ள …

  3. ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ (ரோபோ) படத்தை தயாரிப்பதாக இந்தியாவின் மிகப்பெரிய மீடியா நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் அறிவித்துள்ளது. சன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் ஒரு அங்கமான சன் பிக்சர்ஸ், பெரும் பொருட்செலவில் இந்தியாவிலேயே மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். பிரமாண்டம், புதுமை, உருவாகும் விதம் என அனைத்து வகையிலும் இது மிகப்பெரிய படமாக உருவாகும். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா தெரிவித்தார். வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் சன் பிக்சர்ஸ் …

    • 1 reply
    • 1.9k views
  4. என் தமிழகமே என்னிடம் விளையாடிவிட்டதே என்று வருத்தப்பட்டுள்ளார் கமல்ஹாஸன். அமெரிக்காவின் ப்ரீமாண்ட் பகுதியில் விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டிற்கு நேரடியாக தியேட்டருக்கு வந்தார் கமல்ஹாஸன். அப்போது ரசிகர்களிடம் அவர் பேசுகையில், "என் தமிழகத்தில் விஸ்வரூபம் வெளியீடு சில காலத்துக்கு நிறுத்தபட்டுள்ளது. என் தமிழ் நாட்டிலேயே எனக்கு இந்த நிலையா என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. நீங்கள் வெளியில் இருக்கிறீர்கள் (அமெரிக்க வாழ் தமிழர்கள்). நானும் வெளியில்தான் உள்ளேன் இப்போது. என் தமிழகம் என்னை இப்படி விளையாடி பார்த்துவிட்டதே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. ஆனால் இது எல்லாம் மாறும். நான் செய்திருப்பதில் தவறேதும் இல்லை. இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன்.. …

  5. ஜெயலலிதா அறிமுகமான படம் "வெண்ணிற ஆடை'. இந்தப் படத்தில் ஜெயலலிதாவுடன் நிர்மலா, மூர்த்தி, ஸ்ரீகாந்த் ஆகியோரும் அறிமுகமானார்கள். அதில் மூர்த்தியும், நிர்மலாவும் "வெண்ணிற ஆடை'யைத் தங்கள் பெயருக்கு முன் போட்டுக் கொண்டனர். "காதலிக்க நேரமில்லை' நகைச்சுவைப் படத்தைத் தயாரித்து வெற்றி கண்ட ஸ்ரீதர், அடுத்த படத்தை முற்றிலும் மாறுபட்ட படமாகத் தரவிரும்பினார். . பி.ஆர்.பந்துலுவின் "சின்னத கொம்பே', கன்னடப்படத்தின் ரஷ்களைப் பார்த்த ஸ்ரீதர், அதில் நடித்த சின்னப் பெண் யார் என்று கேட்டார். அவர் நடிகை சந்தியாவின் மகள் ஜெயலலிதா என்று கூறினார்கள். தான் எடுக்கவிருக்கும் "வெண்ணிற ஆடை'யின் நாயகி என அவரை முடிவு செய்துகொண்டு, சந்தியாவுக்குத் தகவல் தந்தார். அவரும் தன் மகளைக் கூட்டிக் கொண்டு "சித்…

  6. மேதகு திரைப்பட முன்னோட்டம் தமிழீழ தேசிய தலைவரின் வாழ்க்கை வரலாறு. 21 வயதே ஆனா பிரபாகரன் எனும் இளைஞன் ஆயுதப் போராட்டாம் தான் தமிழீழ விடுதலைக்கான ஒரே தீர்வு என கருதி தன்னை முழுமையாக போராட்ட களத்தில் அற்பணிக்க துணிந்ததற்கு பின்னால் உள்ள அரசியலே இக்காவியம். Direction : Kittu DOP : Riyas Music : APK Art Director : Mujbur, Ajar Editing : Elango DI : Vinayagam CG : Aravind Sound Recording : Golden Studio உறவுகளுக்கு வணக்கம், “மேதகு” முன்னோட்டம் இன்று (21/10) புதன் மாலை இந்திய நேரம் 6 …

  7. 2016 - ல் கவனம் ஈர்த்த துணைக் கதாபாத்திரங்கள்! 2016-ம் ஆண்டு, ரசிகர்களுக்கு வெள்ளித்திரை அளித்தது வகைவகையான விருந்து. குறிப்பாக, கதாநாயகிகளுக்கு இணையாக துணைக் கதாபாத்திரங்கள் ஏற்ற நடிகைகள் ஸ்கோர் செய்யும் வாய்ப்பு, பல திரைக்கதைகளில் வழங்கப்பட்டன. அப்படி ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டவர்களில் சிலர்... மியா ஜார்ஜ் தொடரும் பெண் பார்க்கும் படலம், ஏதோ ஒரு காரணத்தால் கைநழுவிச் சென்றுகொண்டே இருக்கும் திருமண யோகம்... இந்தச் சூழல் ஒரு கிராமத்து அப்பாவிப் பெண்ணின் மனதை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை அழுத்தமாகச் சொன்ன படம் 'ஒருநாள் கூத்து'. 'லட்சுமி' கேரக்டரில், கிராமப்புற இளம் பெண்களின் நிலையையும், உணர்வுகளையும் மியா ஜார்ஜ் தன் கண்களாலும், ஆர…

  8. சிவகார்த்திகேயனுடன் ஒரு நேர்காணல்

    • 0 replies
    • 451 views
  9. ஸ்ருதி நடித்துள்ள படத்துக்கு பிராமணர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வி தேஜா, ஸ்ருதிஹாசன், அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படம் பலுபு. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதற்கு பிராமணர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி ஏ. பி. பிராமண சேவா அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் துரோனம்ராஜு ரவிகுமார் கூறும்போது, கடந்த ஆண்டு எங்கள் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு எதிராக ஒரு படம் திரைக்கு வந்தது. அதை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். அந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில வெளியான பலுபு' பட டிரைலரை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். கடந்த ஆண்டு நாங்கள் நடத்திய நியாயமான போராட்டதை கிண்டல் செய்யும் விதமாக…

  10. திரை விமர்சனம்: வைகை எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து மதுரைக் குச் செல்லும் வைகை எக்ஸ்பிரஸின் ஏ.சி. வகுப் புப் பெட்டியில் அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் கொல் லப்படுகிறார்கள். இன்னொரு இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது. கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ரயில்வே புலன் விசாரணை அதி காரியான ஆர்.கே.விடம் ஒப் படைக்கப்படுகிறது. கொலைகள் நடந்த பெட்டியில் பயணம் செய்த தீவிரவாதியைக் (ஆர்.கே. செல்வ மணி) கைதுசெய்து விசாரணை யைத் தொடங்கும் ஆர்.கே.வால் தனது குழுவின் உதவியுடன் குற்ற வாளியை நெருங்க முடிந்ததா, இல்லையா என்பதுதான் கதை. கொலை செய்யப்பட்ட பெண்களின் குடும்பப் பின்னணி, அவர்களைச் சுற்றி நிகழும் …

  11. ச.ஆனந்தப் பிரியா பிபிசி தமிழுக்காக நூற்றாண்டு காணும் தமிழ் சினிமாவின் வரலாற்றை நடிகர் சிவாஜி கணேசனை தவிர்த்து விட்டு எழுத முடியாது. தனது நடிப்பாலும் கதா பாத்திரங்களாலும், வசனங்களாலும் அன்றும் இன்றும் என்றும் அவருக்கான இடம் நிலைத்திருக்கும். இன்று அவரது 93-வது பிறந்தநாள். இன்று அவரை சிறப்பிக்கும், வகையில் கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். மேடை நாடகத்தில் அதீத ஆர்வம் கொண்ட சிவாஜி கணேசனின் முதல் நாடகத்தின் பெயர் 'இராமாயணம்'. இதில் சீதை வேடத்தில் நடித்தார் சிவாஜி. 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' மூலம் கணேச மூர்த்தி, 'சிவாஜி' கண…

    • 1 reply
    • 475 views
  12. நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகின்றது… நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பெங்களூரை சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்த படத்தை உருவாக்கி வருவதாகவும் இதற்காக . ஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனிகபூரிடமும் அனுமதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் இந்த ஐந்து பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உள்பட அனைத்து மொழி நடிகர்-நடிகைகள் ஸ்ரீதேவி பற்றி பாராட்டி பேசும் கருத்துகளும் அவரது படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில…

  13. காதலர் மெஹதியை திருமணம் செய்து மும்பையில் செட்டிலான லைலா அம்மாவாகியிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பேன் என்று ஊசலாட்டம் இல்லாமல் உறுதியாக கூறியவர் லைலா. கொஞ்சநாள் குடும்ப வாழ்க்கையை அனுபவித்து விட்டு மீண்டும் நடிப்பேன், அதுவும் கதாநாயகியாக மட்டும் என்றார். ஆனால் எதிர்பார்ப்பு ஏமாற்றமானது. லைலாவை யாரும் கல்யாணத்திற்குப் பின் கதாநாயகியாக கற்பனை செய்யவில்லை. இந்நிலையில் கர்ப்பமான லைலாவுக்கு நேற்று தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலம். குழந்தை பிறந்து அம்மாவாக பிரமோஷன் ஆனதால் இன்னும் சில மாதங்களுக்கு வெள்ளித்திரை பக்கம் லைலாவை எதிர்பார்க்க வேண்டாம். சிரிப்பழகியின் ரசிகர்களுக்கு இது கவலை தரும் விஷயம்தான்

  14. 'அக்கா ஒரு ஆட்டம் போடுங்க!' - குடிமகன் கலாட்டா... குலுங்கிய நமீதா!! கற்றோருக்கு மட்டுமல்ல, நமீதா மாதிரி நடிகைகளுக்கும் செல்லுமிடமெல்லாம் சிறப்புதான்... எங்கே போனாலும் கூட்டத்துக்கும் சுவாரஸ்ய தகவல்களுக்கும் குறைவில்லை. சமீபத்தில் திருச்சியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார் நமீதா. திருச்சியிலிருந்து உள்ளடங்கிய பக்கா கிராமம் அது. நெற்றி மேட்டில் கைவைத்தபடி உற்று நோக்கினாலும் ஒரு ஆள் தென்படாத பொட்டல் வெளியில் நிகழ்ச்சியை வைத்திருந்தார்கள். ஆனால் என்ன ஆச்சர்யம்... நமீதா வருகிறார் என்று கூறிய சில மணி நேரங்களில் சுத்துப்பட்டு கிராமங்களில் உள்ள அத்தனை பேரும் வயது வித்தியாசமின்றி குவிந்து விட்டனர். கூட்டத்தைப் பார்த்த நமீதாவுக்கு ஏக சந்தோஷம். வழக்…

  15. கேரளாவின் காசர்கோடுக்கு வந்த கன்னட நடிகையை துரத்தியடித்துள்ளார்கள் அப்பகுதி மக்கள். அந்த நடிகை ஜெயமாலா! அய்யப்பனை தொட்டேன் என்று கூறி ஆண்டவனையே ஆடம் டீஸிங் செய்த அதே ஜெயமாலா! சபரிமலை அய்யப்பன் சன்னிதியில் இளம் பெண்களுக்கு அனுமதியில்லை. குழந்தைகளும் வயதான பெண்களுமே அனுமதிக்கப்படுவர். மகளிர் மறைவுப் பிரதேசமான அய்யப்பன் சன்னிதியில், அய்யப்பன் சிலையை தொட்டு வணங்கியதாக பேட்டியளித்தார் ஜெயமாலா. இந்த சின்ன வெடி கேரள அரசியலில் யானை வெடியாக வெடித்தது. ஜெயமாலாவை கைது செய்ய போராட்டம் நடந்தது. தீட்டுக்கு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. ஜெயமாலா சொன்ன அய்யப்பன் டச்சிங் வெறும் அல்வா என்பது விரைவில் வெட்ட வெளிச்சமானது. ஆனாலும், கேரள போலீஸ் ஏனோ அவர்மீது நடவடிக்கை எடுக்கவில…

    • 0 replies
    • 1.1k views
  16. நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு நிச்சயம் செய்துள்ள வந்தனா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏராளமான மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் திட்டமிட்டபடி அவர்களின் கல்யாணம் நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த வாரம்தான் ஸ்ரீகாந்த்தின் தந்தை தனது மகனின் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஜூன் 18ம் தேதி ஸ்ரீகாந்த்துக்கும், வந்தனாவுக்கும் கல்யாணம் நடைபெறும் என அவர் அறிவித்தார். இருவரும் நீண்ட காலமாகவே நெருங்கிப் பழகி வந்தனர், எனவே இது காதல் கல்யாணம் என்றும் பின்னர் கூறப்பட்டது. ஸ்ரீகாந்த்தை கணவராக அடைவது நான் செய்த பாக்கியம், கிடைத்த வரம் என்று வந்தனா நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். அதேபோல மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் ஸ்ரீகாந்த்தும். திர…

  17. ஜீலை 31, 2011 ஆம் திகதியன்று , லண்டன் மாநகரில் ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தின் இசை வெளியீடு மிகச்சிறப்பாகநடந்து முடிந்துள்ளது. இவ்விசை வெளியீட்டு விழாவில், நோர்வேயில் இயங்கும் Global Media Invest As நிறுவனத்தின் முதல் படைப்பான ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தினைஇயக்கிய திரு.புகழேந்தி தங்கராஜ், திரு. சத்யராஜ், திருமதி சங்கீதா கிரிஷ், இசையப்பாளர்இமான் மற்றும் பாடகர்கள் பல்ராம், கிரிஷ் மற்றும் மாதங்கி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இசை வெளியீட்டு விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்றீபன் புஸ்பராஜா அவர்கள், “தென்தமிழீழத்தின் மட்டக்களப்பில்நடந்த உண்மை சம்பவத்தைக் கருவாக கொண்டே இத்திரைப்படத்தினைஇயக்குநர் புகழேந்தி அவர்கள் நெறிப்படுத்திய…

  18. இந்தியன் தாத்தாவும்... இளைய தளபதியும்... இந்திய நாட்டை பீடித்துள்ள ஊழல் நோயை குணமாக்கப் போகிறேன் என திடீரென ஞானோதயம் ஏற்பட்டு இன்று இந்திய நாட்டின் இறையாண்மைக்கே சவாலாக விளங்கிவரும் இந்துத்துவா கும்பலால் களமிறக்கப்பட்டு ஊடகங்களாலும் ஆதிக்க சக்திகளாலும் ஒரே இரவில் "ஹீரோ" அவதாரம் எடுத்திருக்கிறார் அன்னா ஹசாரே என்கிற 73 வயது இந்தியன் தாத்தா.... மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் ஆட்சிக்காலத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது "முந்திரா" ஊழல்... மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி ஆட்சிகாலத்தில் இன்றளவும் பேர்சொல்லும் வகையில் சாதனையாக அமைந்தது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்... இந்த இந்தியன் தாத்தாவிற்கு நேசமான பாரதீய ஜனதா ஆட்சிக் காலத்தில் "டெஹல்ஹா" அம்பலப்படு…

  19. விஜய் நடிப்பில், பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டுள்ள நண்பன் படம் வசூல் சாதனை படைத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இதுவரை ரூ. 110 கோடியை அது வசூலித்துள்ளதாகவும் கூறுகிறார்கள். படம் வெளியிடப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வரவேற்புடன் ஓடி வருவதாகவும், விஜய் மற்றும் மற்றவர்களின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. படத்தில் விஜய் உள்ளிட்ட அத்தனை பேரும் இயல்பாக நடித்துள்ளதை அனைவரும் ரசிப்பதாலும், வித்தியாசமான விஜய்யைப் பார்க்க ரிபீட் ஆடியன்ஸ் எனப்படும் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும்தான் படம் பெரும் வெற்றி பெற்றிருப்…

  20. இந்திர விழா படத்திலிருந்து நான் விலகவில்லை. தற்போது கர்ப்பமாக இருப்பதால் 3 மாதம் கழித்து அப்படத்திற்காக ஒரு பாடலுக்கு ஆடிக் கொடுக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார் மாளவிகா. திருமணத்திற்கு முன்பு நடித்ததைப் போலவே திருமணத்திற்குப் பிறகும் கிளாமராக நடித்து வருகிறார் மாளவிகா. அவர் சமீபத்தில் ஒப்பந்தமாகியிருந்த படம் ஸ்ரீகாந்த் நடிக்க, ராஜேஷ்வர் இயக்கத்தில் உருவாகும் இந்திர விழா. இப்படத்தின் நாயகி நமீதா. இருந்தாலும் மாளவிகாவையும் கூடுதல் கிளாமருக்காக படத்தில் சேர்த்திருந்தார் ராஜேஷ்வர். ஒரு பாடலில் படு கிளாமராகவும் ஆடுகிறார் மாளவிகா. இந்த நிலையில் கர்ப்பம் தரித்து விட்டதால் படத்திலிருந்து மாளவிகா விலகிக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்கிறார் மாளவி…

  21. நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் பாட்சா படத்திற்கு முக்கிய இடம் உண்டு. மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் அது. நடிகர் ரஜினிகாந்தின் „சுப்பர் ஸ்டார்' பட்டத்தை மேலும் வலுவாக்கிய படம். ரஜினிகாந்திற்கு என்றே உருவாக்கப்பட்ட பாத்திரம் மற்றும் திரைக்கதையை கொண்டிருந்த படம். வேறு யார் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவ்வளவிற்கு எடுபட்டிருக்காது. படம் வெற்றி பெற்றதோடு மட்டும் அல்லாது ரஜினிகாந்தை அரசியலில் குரல் கொடுக்கவும் செய்த படம் அது. பாட்சா படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் தமிழ் நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புக்களை கண்டித்துப் பேச அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதன் பிறகு „ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்க…

    • 13 replies
    • 1.5k views
  22. ரஜினிமுருகன் எதை காப்பாற்றுகிறான் தெரியுமா? ரஜினிமுருகன் விமர்சனம்! மதுரைக்காரங்க வெட்டு குத்து கொலை என்று அலைந்துகொண்டேயிருக்கிறவர்கள் என்கிற தமிழ்த்திரையுலகின் கற்பிதத்தை உடைக்க வேண்டுமென்பதற்காகவே சிரிக்கச் சிரிக்கப் படமெடுத்து அதில் சிந்திக்க வைக்கும் சில விசயங்களையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். எல்லாப்படங்களிலும் பிறக்கிற குழந்தைக்கு அப்பா அம்மா பேர் வைப்பார்கள் என்றால் இந்தப்படத்தில் தீவிர ரஜினிரசிகரான அப்பாவின் நண்பர் கதாநாயகனுக்கு ரஜினிமுருகன் என்று பெயர் வைக்கிறார். நாயகன் சிவகார்த்திகேயனின் அப்பா பள்ளித்தலைமையாசிரியர், அம்மா அதே பள்ளியில் ஆசிரியர், அவருடைய அண்ணன்கள் இருவர், ஒருவர் மென்பொருள்துறையிலும் இன்னொருவர் இராணுவத்தில…

    • 25 replies
    • 4.5k views
  23. கமலின் மருதநாயகம்தான் மர்மயோகி படக் கதை எனக் கூறப்படுகிறது.ஆங்கிலேயர்களு

    • 0 replies
    • 667 views
  24. [size=2] சென்னையில் நேற்று மதியம் தொடங்கிய பவர் ஸ்டார் கைது என்ற பரபரப்பு செய்தி காட்டு தீ போல் பரவ ஆரம்பித்தது.[/size] [size=2] சூப்பர் ஸ்டார் நிகராக தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படுபவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் இதுவரை நடித்த படம் நான்கு. ஆனால் இதுவரை வெளியானது 2 படங்கள் தான். ஆனால் தன்னை மிகப்பெரிய திரைஉலக ஜாம்பவான் போல் காட்டி கொள்வதில் வல்லவர். ஏதோ ஒன்றை எதிர்மறையாக செய்தவது விளம்பரம் தேடுபவர். அதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலம். [/size] [size=2] அரசியல் கட்சி ஒன்றினை பின்புலமாக கொண்டவர். தன்னுடைய பாதுகாப்பிற்காக அவர்களிடம் அடைக்கலம் புகுந்தார். இப்படி இருக்க ஒருவரிடம் வாங்கி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்பதற்காக கைது செய்யப்பட்டு சிறையில்…

  25. கமலுக்காக எப்பவோ சுஜாதா எழுதிய கதை.இப்போது ரஜினியுடன் ஷங்கருக்கு ராசியான எட்டாம் தேதி முதல் இயங்கத்தொடங்கிவிட்டான்'எந்திரன்.' இனி, இன்னும் இரண்டு வருடங்களுக்குஎகிறிக்கொண்டே இருக்கும் ரஜினி டெம்போ. ரஜினி -ஷங்கர் இருவருக்குமே எந்திரன், 'ட்ரீம் புராஜெக்ட்.' படத்தின் திரைக்கதை - வசனங்களை பக்காவாக எழுதிவிட்டார் சுஜாதா. இப்போது அந்தக்கதையில் சின்னச் சின்ன டெக்னிக்கல் அப்டேட்களுக்காக மட்டுமே 250 பேர் பம்பரமாகச் சுற்றிச்சுழல்கிறார்களாம். 'சுஜாதா சார் ஒருவருக்குப் பதிலா 250 பேர் தேவைப்படுறாங்க பாருங்க... சுஜாதா சார் வாஸ் ரியல்லிகிரேட்!' என ஆதங்கப்பட்டு இருக்கிறார் ஷங்கர். 2010 கோடை விடுமுறைக்கு ரிலீஸ் என்பது குறைந்தபட்சச் செயல்திட்டம். ஆனால், ரிலீஸ் தேதிக்கு நெருக்கடி கொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.