ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
ஈழத்தில் தமிழர்களாய் பிறப்பது பாவமா? என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். கோவை அருகே இடையர்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பில் நடந்த மண்டல மாநாட்டில் அவர் இதுபற்றி மேலும் பேசியதாவது: நம் நாட்டில் அறிவியல், விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே சென்றாலும் மக்களுக்குத் துன்பம் குறைந்தபாடில்லை. உணர்வு, பாசம், நெறிகள் அனைத்தும் நாசமாகிக் கொண்டிருக்கின்றன. சந்திராயன்௧ விண்கலத்தை விண்ணுக்குச் செலுத்தி வெற்றி கண்டுள்ளோம். நாம் ஒரு புறம் மேல் நோக்கிச் சென்றாலும், மறுபுறம் பாதாளக் குழிக்குள் விழுகின்றோம். விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள இளம் பெண்கள் தங்களது மண்ணின் மானம் காக்க ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், போ…
-
- 2 replies
- 1.2k views
-
-
சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக் கடத்திய சம்பவம் மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டை வடக்கிலிருந்து சென்ற கும்பல் ஒன்றே இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை சுமார் 17 மணிநேரம் தடுத்துவைத்திருந்துவிட்டு விடுவித்தனர் எனவும் இந்தச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் உறவினர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை வடக்கைச் சேர்ந்த மன்னார் பகுதியில் விவசாயப் போதனா ஆசிரியராகக் கட…
-
- 1 reply
- 1.2k views
-
-
பழியில் இருந்து தப்பிக்க...! மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஜே.வி.பி. முடிவு செய்துள்ளமை என்பது எதிர்பார்க்க முடியாததொன்றோ அன்றி ஆச்சரியம், அதிர்ச்சிக்குட்பட்ட விடயம் ஒன்றோ அல்ல. மகிந்த அரசாங்கம் கொண்டு வந்த இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு எதிராக ஜே.வி.பி. வாக்களித்த போதே மகிந்த அரசாங்கத்துடனான உறவு நிலையில் மாற்றமானதொரு நிலைப்பாட்டை வெளிப்படுத்த முற்பட்டிருந்தது என்று கொள்ளமுடியும். இத்தகையதொரு நிலையில் வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தல் என்பது அத்தீர்மானத்தின் அடியொட்டி எடுக்கப்பட்ட முடிவாகவே கொள்ளத்தக்க தாகும். ஆனால் இவ்வாறானதொரு தீர்மானத்தின் மூலம் ஜே.வி.பி. எதிர்பார்ப்பது என்னவென்பதே இங்கு முக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையின் வடக்கே தொடரும் மோதல் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் 4 தடவைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்கள் பல அழிக்கப்பட்டிருப்பதகப் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. ஆனால் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சனிக்கிழமை விமானப்படையினர் நடத்திய விமானக்குண்டு வீச்சுத் தாக்குதல்களில் ஒரு சிறுவன் உட்பட 4 பேர் காயமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர். இரணைமடுஇ முல்லைத்தீவுஇ விசுவமடுஇ புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் இந்த விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும் பா…
-
- 1 reply
- 1.2k views
-
-
20.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....fe977004015c619
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தபோது எமது அண்டை நாடான இந்தியா தான் முதலில் உதவியது. ஆனால் நன்றி கெட்ட தனமாக இந்திய அணியின் தோல்வியை இங்கு சிலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு விளையாட்டுப் போட்டி ஒன்றில் வெற்றி தோல்வி என்பது சாதாரண விடயம். அந்த வகையில் கிரிக்கெட் உலகக் கின்ன போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இலங்கையில் சில பகுதிகளில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா வென்றுவிட்டது என்பதை விடவும் இந்திய அணி தோல்வி அடைந்து விட்டது என்பதையே அவர்…
-
- 21 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஈழத் தமிழருக்காக போராடிய கன்னடர்கள்! பெங்களூருவில் கிளம்பிய புதிய படை கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஆயுர்வேத மாநாட்டில் கலந்துகொள்ள வந்த இலங்கை அமைச்சர் சலின்டே திச நாயகாவுக்குக் கறுப்புக் கொடி காட்டிய 44 பேரைக் கைது செய்தார்கள். சிறையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பெங்களூரு அம்பேத்கர் பவனில், பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக நடந்த கூட்டத்தில் எழுச்சி இன்னும் அதிகமாகவே இருந்தது! கர்நாடக மாநில பெரியார் திராவிடக் கழகத்தின் பழனி தான் முதலில் பேசினார். ''இனி இலங்கையில் நடக்கின்ற போர் சிங்களவனுக்கும் ஈழத் தமிழனுக்குமான போராக இருக்கக் கூடாது. உலகத் தமிழனுக்கும் சிங்களவனுக்குமான போராக இருக்க வேண்டும்!'…
-
- 3 replies
- 1.2k views
-
-
திங்கட்கிழமை, மார்ச் 28, 2011 இலங்கை - இந்திய கரையோர காவல்படைகளின் படகுகள் ஒரே வர்ணத்தில் மீனவர்கள் திண்டாட்டம்.இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான கரையோரப் பாதுகாப்பு படகுகள் வடபிராந்திய கடற்பகுதியில் சேவையாற்றுவதற்காக இணைக்கப்பட்டுள்ளன. இப்படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து பணிக்குப் புறப்படுகின்றன. இப்படகுகளிற்குச் சர்வதேச கரையோரப் பாதுகாப்புப் படகுகளுக்குப் பூசப்படுகின்ற வெள்ளைநிறம் பூசப்பட்டுள்ளது. அது போன்று வடிவமைப்புக்களும் இந்திய கரையோர படகுகளுக்குச் சமனானவையாகும். இதனால் இலங்கை - இந்திய மீனவர்கள் எது தமது நாட்டு படகு என்பதனை கண்டு பிடிப்பதில் சிரமமாக உள்ளனர். இந்த வகையான படகுகள் தாக்குதலினை மேற்கொண்டாலும் இனங்காண முடியாது என க…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் இனவாதத்தை தூண்டி அதன் ஊடாக அரசியல் நன்மைகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, இனவாதத்தை தூண்டி அரசியல் லாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அவர் அவ்வாறு செய்வது நியாயமற்றது. தரைவழி போரை நானே வடிவமைத்து திட்டமிட்டேன், படையணிகளுக்கு நானே உத்தரவு பிறப்பித்தேன். கீழ் மட்ட உறுப்பினர்களுக்கு நானே ஆணை வழங்கினேன். இந்த போராட்டத்தை நன்றாக கண்காணித்தேன். எனவே, மனித படுகொலைகள்…
-
- 13 replies
- 1.2k views
-
-
தலைநகர் கொழும்பிலும் அதனை அண்டிய தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும், தமிழ் இளைஞர்கள், யுவதிகளை நேற்று இரண்டாவது நாளாகவும் பொலீஸார் கைது செய்தனர். இரண்டு நாள்களில் மொத்தம் 850 பேர் கைது செய்யப்பட்டு பொலீஸ் நிலை யங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளியன்று கைதுசெய்யப்பட்டவர்களில் 100பேர் விசாரணையின் பின்னர் பூஸா தடுப்பு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட் டுள்ளனர். சந்தேகம் என்ற பேரில் கைதுசெய்யப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் நேரில் கோரும் பொருட்டு அவரின் வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு நேற்றுப் பாத யாத்திரையாக சென்ற பாதிக்கப்பட்ட பெற்றோர் காலிமுகத்திடலில் தடுக்கப்பட்டனர். இந்தப் பாதயாத்திரைக்கு பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனும் நாடாளுமன்ற உறுப்பினர…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் பாணந்துறை நீதிமன்றம் விசித்திரமான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட நபரொருவரைக் கைது செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் இவரைக் கைது செய்ய முடியவில்லை என பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து குறித்த நபரைத் தன்னால் கைது செய்து நீதிமன்றில் ஒப்படைக்க முடியும் என தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் முன் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தக் கைதியை பிணையில் விடுதலை செய்த பாணந்துறை நீதிபதி ரங்க திசாநாயக்கா இரு வாரங்களில் குறித்த நபரைக் கைது செய்து நீதிமன்றிடம் கையளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு சட்டவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. SOURCE: http://eelamweb.com
-
- 4 replies
- 1.2k views
-
-
எமது விடுதலைக்கு தன் உயிரை அர்ப்பணித்த மாவீரர் செல்வங்களுக்கும் இன்றுவரை உயிர்நீத்த எம்உறவுகளுக்கும் வீரவணக்கம். எமது போராட்டம் முடியாது தொடரும் என்று உறுதி செய்வோம். http://tamilcrisisweeklyupdate.blogspot.com/2009/11/weekending-28-nov-2009.html
-
- 0 replies
- 1.2k views
-
-
விழித்தெழுங்கள் தமிழர்களே ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.2k views
-
-
''மகிந்த கம்பனி'' அரசாங்கத்தை வெளியேற்றும் மக்கள் போராட்டங்கள் தொடரும் - ரணில் ''மகிந்த கம்பனி'' அரசாங்கத்தை வெளியேற்றும் மக்கள் போராட்டங்கள் அடுத்தாண்டு சனவரி மாதத்தில் ஆரம்பமாகும் என ஜக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று ஹம்பகா மாவட்டத்தில் இடம்பெற்ற ஜக்கிய தேசியக் கட்சியின் 52வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார். சிறுபான்மை அரசாங்கத்திடம் ஆதரவுடன் மகிந்த அரசாங்கம் பலாத்கார ஆட்சியை நடத்திவருகின்றது. ஊழல் மோசடிகள் நிறைந்த "ராஜபக்ஷ கம்பனி' அரசாங்கத்தை வெளியேற்றும் மக்கள் போராட்டத்தை ஜனவரியில் ஆரம்பிக்கவுள்ளோம். மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வீத…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஜே.வி.பி.க்கு பிரித்தானிய தூதுவர் அழைப்பு [புதன்கிழமை, 16 மே 2007, 17:46 ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் நடவடிக்கைகளை மிகக் கடுமையான விமர்சித்து வருவது தொடர்பாக ஜே.வி.பி.யினருடன் விவாதிக்க பிரித்தானிய தூதுவர் அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானியா நாடாளுமன்றில் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த மூன்று மணி நேர விவாதம் நடத்தப்பட்டது. இலங்கைக்கு பிரித்தானிய நாடாளுமன்ற குழு பயணம் மேற்கொள்ளும் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரும் அமைதிக் குழுப் பொறுப்பாளருமான சு.ப.தமிழ்ச்செல்வனை பிரித்தானியா நாடாளுமன்றத்துக்கு அழைத்து புலிகளின் நிலைப்பாட்டை விளக்க வாய்ப்பளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழக்கவிஞர் அன்பு வேண்டுகோள்... ''தலை கோதி விடுங்கள்.. சக்தியை எங்களுக்குள் விதைத்துவிடும்!'' சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் உக்கிரமாகத் தகித்துக் கொண்டிருக்கிறது. 'வாழ்வா... சாவா...' என்ற முனைப்பில் பல்முனை யுக்திகளோடு காணிகளைத் தக்க வைக்கக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் புலிகள். ஏவுகணை, துப்பாக்கி என சீறிக் கொண் டிருக்கும் புலிகளுக்கு எழுத்து வெடிகுண்டுகளின் மூலம் எழுச்சியையும் ஊக்குவிப்பையும் ஒருசேரக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர் புதுவை இரத்தினதுரை. கவிஞர் காசி ஆனந்தன் தமிழகத்துக்கே வந்து நிரந்தரமாக தங்கிவிட்ட பிறகு, புலிகள் அமைப்பின் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளராக இயங்கி வரும் இரத்தினதுரை, முல்லைத்தீவி…
-
- 0 replies
- 1.2k views
-
-
விஸ்வமடுவில் விமானத்தாக்குதல் வீரகேசரி இணையம் முல்லைத்தீவு விஸ்வமடு பகுதியில் விமானப்படையினர் இன்றும் வான் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். விடுதலை புலிகளில் ஆயுத களஞ்சியம் மற்றும் ஆயுதங்களை இறக்குமிடத்தின் மேல் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விடுதலை புலிகளின் இனங்காணப்பட்ட இலக்கின் மேல் வெற்றிகரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.எனினும் இவ் வான் தாக்குதலின் போது ஏற்பட்ட சேதவிபரம் இதுவரை தெரியவரவில்லை. http://www.virakesari.lk/html/head_view.asp?key=7048
-
- 2 replies
- 1.2k views
-
-
"எல்லோருக்கும் வணக்கம்.மதிப்பிற்குரிய நம்ப அலப்பறை டீம் கூட்டம் இன்னைக்கு அவசரமா நடத்தவேண்டிய அவசியம்? ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கினமாதிரி வாய் திறந்து பேசாம இருந்த சித்தனை கட்டி இழுத்துட்டு வந்திருக்கோம். 'போட்டு பின்னிடலாம் வாங்க' " என்ற அறிவிப்புடனே செம்மொழிப் பூங்காவில் இடம் தேடி அமர்ந்தார் சுவருமுட்டி சுந்தரம்.அருகில் நம்ப ஆ.ராசா மாதிரியே வீரவசனம் பேசிக்கொண்டிருந்தார் சித்தன். ஆனால் யாரும் கேட்கிற மாதிரி இல்லை. கோட்டைசுத்தி கோபாலு அண்ணன்தான் பேசினார்.''நம்ப லண்டன் தமிழர்களுக்கு முதலில் ஒரு சல்யூட் வைக்கணும்பா. 'எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன்'னு ராஜபக்சேவை புலம்ப வைச்சுட்டாய்ங்க.அந்த மனுஷன் நெஞ்சை நிமிர்த்திகிட்டு போன கம்பீரம் என்ன?.இப்போ தலைகுனிந்து ஓடிவர்ற ஒ…
-
- 0 replies
- 1.2k views
-
-
நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா November 6, 2020 நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக ஏறகனவே அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்னும் சில வருடங்களில் நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் குறித்த குழுவின் தலைவரும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜோன்ஸ்ரன் பெனான்டோ தலைமையில் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதே…
-
- 12 replies
- 1.2k views
-
-
தமிழகத்தில் தங்கியிருந்த சிறிலங்கா வான்படையினரை திருப்பியனுப்பியது இந்தியா [புதன்கிழமை, 04 பெப்ரவரி 2009, 05:53 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழ்நாட்டில் உள்ள சென்னை தாம்பரம் வான்படை நிலையத்துக்கு பயிற்சி பெற சென்ற சிறிலங்கா வான்படையினர் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர
-
- 10 replies
- 1.2k views
-
-
கருணா அணி அரசுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக டெய்லி மிரர் செய்தி நிஷாந்தி தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் எதிர்வரும் காலங்களில் தேர்தலில் நின்று அரசுடன் இணைந்து மக்களுக்கு பணியாற்றவுள்ளதாக அவ் அமைப்பின் தலைவர் கருணா அம்மன் தெரிவித்துள்ளதாக ஆங்கிழ நாளிதழான டெய்லி மிரர செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு வன்முறைகள் என்பவற்றை கைவிட்டு மக்களுக்கு பணியாற்ற முன்வந்துள்ளதாக அதன் அம்பாறை மாவட்ட தலைவர் ஐ.பாரதி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கிழக்கே மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் ஒரு முடிவிற்கு வர வேண்டும் அவை இராணுவ தீர்வின் மூலம் முடிவிற்கு கொண்டுவர முடியாது ஜனநாயக ரீதியாகவே தீர்க்கப்படவேண்டும் நாம் ஆயுதங்களை நமது பாதுகாப்பிற்ககவே …
-
- 2 replies
- 1.2k views
-
-
வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு, அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், அங்கு வைத்து அதிகாரிகளினால் மிகக்கடுமையான வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, சக அரசியல் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற விசாரணைக்கு என அநுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அரசியல் கைது ஒருவர் மீண்டும் வவுனியாவிற்கு அழைத்து வரப்படாது, அநுராதபுரத்தில் தடுத்து வைத்து வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். குறித்த இந்தக் கைதியை மீண்டும் வவுனியா சிறைக்கு அழைத்து வருமாறு தெரிவித்து, வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் 28 பேர் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதன் ஒரு கட்டமாக வவுனியா சிறை அதிகாரிகள் மூவரை நேற்று பணயக் கைதிகளாக…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கைப் போரும் இந்தியாவின் நிலைப்பாடும் வ.திருநாவுக்கரசு இலங்கைத் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்திய அரசு பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் எனும் போக்கினையே கடைப்பிடித்து வருகின்றதென்பதைக் கண்டுகொள்வதற்கு றொக்கற் விஞ்ஞானம் வேண்டியதில்லை. அன்று ஆரம்பகாலகட்டத்தில்"அன்னை' இந்திராகாந்தி மீது இலங்கை தமிழ்த் தலைமைகள் அதீத நம்பிக்கை வைத்துச் செயற்பட்டு வந்தன. அன்று இந்திராகாந்தி அரசாங்கம். இலங்கையில் ஜெயவர்த்தன அரசாங்கத்தோடு கொண்டிருந்த பகைமை காரணமாக குறிப்பாக தமிழ் இளைஞர் குழுக்களை உள்வாங்கி ஆயுதப் பயிற்சி அடங்கலாக பல்வேறு உதவிகளை வழங்கி வந்தது. அதாவது ஜெயவர்த்தன அரசாங்கத்தை மட்டந்தட்டி வைத்திருப்பதற்கு இந்திராகாந்தி கையாண்ட யுக்தியாகவே அத…
-
- 1 reply
- 1.2k views
-
-
மலேசிய அரசு வழங்கிய ஒரு லட்சம் அமெரிக்க டாலர் நிதி உதவியை கொழும்பில் உள்ள மலேசிய தூதுவர் ரொஸ்லி இஸ்மாயில், அமைச்சர் ரோகித போகல்லாகம வழியாக இலங்கை அரசிடம் அளித்தார். இது தொடர்பான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை வெளிவிவகாரத்துறையின் அமைச்சகத்தில் நடைபெற்றது. அங்கே அவர் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு மலேசிய அரசு வழங்கிய உதவிகளுக்கு அமைச்சர் அங்கு நன்றி கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ரோகித போகல்லாகம பேசினார். அப்போது, மலேசிய அரசின் உதவிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மக்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும். தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை 180 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தும் திட்டம் மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு …
-
- 0 replies
- 1.2k views
-
-
லண்டன், கரோ பிரதேச கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராச்சல் ஜோய்ஸ் அம்மையார் அனுப்பிய பதில் மடல். கடந்த இரு தினங்களுக்கு முன்னராக தமிழ்நெட் இனையத் தளத்தில் "ஒன்றுபட்ட இலங்கை - ஒரு தவறு" என்ற தலைப்பில் இந்த பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. அதனைத் தொடர்ந்து அவரின் நிலைப்பாட்டுக்கு நன்றி தெரிவித்தும், எமது மக்களின் இன்றைய அவலம் குறித்தும் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவர் பின்வருமாறு பதில் எழுதியிருந்தார். நீங்களும் செய்யலாம். அவருக்கு ஆதரவு தரவேண்டியது எமது கடமையும் இன்றைய அவசரத் தேவையுமாகும். நன்றி ரகுனாதன்(அன்ரன்) Dear Sir thank you for your email. I will continue to raise the humanitarian problem. best wishes …
-
- 4 replies
- 1.2k views
-