ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143666 topics in this forum
-
கொழும்பில் வங்கிக் கணக்கொன்றை திறப்பதாயின் பொலிஸ் பதிவு அவசியம். 18.02.2008 / நிருபர் எல்லாளன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் கொழும்பிலுள்ள வங்கிகளில் கணக்கொன்றை திறப்பதாயின் அதற்கு வங்கிகளில் பொலிஸ் பதிவு கோரப்படுகின்றது. இதனால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் கொழும்பிலுள்ள தனியார் வங்கிகளில் புதிய வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கு சில தனியார் வங்கிகள் பொலிஸ் பதிவுக்கான அத்தாட்சிகளைக் கோருவதாகத் தெரியவருகிறது. கொழும்பிலுள்ள சில தனியார் வங்கிகளின் முகாமைத்துவம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களிடம் மாத்திரம் பொலிஸ் பதிவுப் பிரதிகளைக் கோருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதாரணமாக வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்குக் கோரும் ஆவணங்களுடன், யாழ்ப்பாணத்தைச் …
-
- 0 replies
- 778 views
-
-
உலகின் பிரபல ரைம்ஸ் சஞ்சிகையின் 2012 ஆண்டுக்குரிய, உலகின் சக்திவாய்ந்த நபர்களுக்குரிய வாக்கெடுப்பு தேர்வுப் பட்டியலில், ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இம்முறை இடம்பிடித்துள்ளார். 71 அகவையுடைய தென்னாபிரிகத் தமிழரான நவி பிள்ளை அவர்களுக்கான விபரக் கொத்தில் , திறமையான சட்டவாளர் என குறிப்பிட்டுள்ள ரைமஸ் சஞ்சிகை, நீண்டகாலமாக சமூக மட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியவர் என குறிப்பிட்டுள்ளது. சிரியா மற்றும் சிறிலங்காவில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் கவனத்தினை ஏற்படுத்தியவர் நவி பிள்ளை என குறிப்பிட்டுள்ள ரைம்ஸ்,1999 முதல் 2003ம் ஆண்டு வரையினாக காலப்பகுதியில், றுவாண்டா படுகொலைகளுக்கான போர் குற்றச விசாரணனையினை மேற்கொண்ட சர்வதேச குற்றவியல் நீதி…
-
- 0 replies
- 464 views
-
-
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஆரம்பப்பிரிவு விபத்து அவசர சிகிச்சை பிரிவு திறப்புவிழா August 29, 2019 அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஆரம்பப்பிரிவு விபத்து அவசர சிகிச்சை பிரிவின் திறப்புவிழா வியாழக்கிழமை(29) காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இணைந்து குறித்த கட்டடத்தை திறந்து வைத்ததுடன் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர்களும் கலந்து கொண்டனர். அங்கு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்…
-
- 0 replies
- 577 views
-
-
புலம்பெயர் தமிழ் உணர்வாளர்களுக்கு தங்களது நண்பன் யார், எதிரி யாரென்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தோல்வியை ஒருவரின் தலையின் மீது சுமத்த ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆள் தேடும் வேட்டைக்கு நான் மட்டுமல்ல, நண்பர் சுமந்திரனும் பலியாகியுள்ளார். ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்குபற்றாதது சிறந்த இராஜதந்திரமாகவே நான் பார்க்கின்றேன் என்று நீதித்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மருதமுனையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஜெனிவாவில் அரபு நாடுகளின் ஆதரவை மகிந்த ராஜபக்ச அரசுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு ரவூப் ஹக்கீம் முக்கிய பங்காற்றியதாக புலம்பெயர் தமிழர்கள் என் மீது மிகப்பெரிய விமர்சனங்களை முன்…
-
- 16 replies
- 1.2k views
-
-
13 பற்றி கதைக்கும் தருணம் இதுவல்ல; புதிய அரசமைப்பை உடன் இயற்றுங்கள்; சஜித் அணி வேண்டுகோள் “அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி கதைப்பதற்கான தருணம் இதுவல்ல. எனவே, வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணிகளை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்க வேண்டும். அதற்கு ஆதரவு வழங்கப்படும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா கூறியவை வருமாறு:- “13,14,15 என கதைத்துக்கொண்டிருப்பதற்கான தருணம் இதுவல்ல. நாட்டுக்குப் புதியதொரு அரசமைப்பு அவசியம். நாடாளுமன்றத்தில் இதனை செய்வதற…
-
- 1 reply
- 403 views
-
-
வீரகேசரி நாளேடு - திருச்சி: இலங்கை தமிழர்களுக்கு பொருட்கள் அனுப்புவதற்காக அனைத்து கட்சிகளையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என பழ. நெடுமாறன் கூறினார். தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் மேலும் தெரிவித்ததாவது: அகிம்சைவாதியான மகாத்மா காந்தியை தேசத்தந்தையாக ஏற்றுக்கொண்ட நம் நாட்டில் இராணுவ செலவுக்கு ஆண்டுக்கு ஆண்டு நிதி ஒதுக்குவதை அதிகரித்து கொண்டே போவது தவறான முன் உதாரணம். இந்தப் பணத்தை மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு பயன்படுத்தி மற்ற நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாக இந்தியா விளங்க வேண்டும். நதிநீர் இணைப்புக்கு முன்பு ஏற்கனவே இருக்கும் கால்வாய்கள், குளங்கள் மற்றும் ஏரிகளை தூர்வாரி பராமரித்தல் வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்ப…
-
- 0 replies
- 909 views
-
-
இலங்கையில் போர்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளிலும் இருக்கின்றார்கள் ஆனால் தமிழர்களுக்கான விடுதலை இதுவரை கிடைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலகத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தங்களது உரிமைக்களுக்காக போராடி வருகின்றார்கள் அந்த கொள்கையின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவை வழங்கி வருகின்றனர் அதாவது மக்களுடைய சுயநிர்ணய உரிமை அவர்களுடைய விடுதலை என்பவற்றை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம் அந்த வகையில் மக்கள் தங்க…
-
- 2 replies
- 514 views
-
-
மன்னார் சேத்துக்குளம் பகுதியில் இன்றும் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 930 views
-
-
கூட்டமைப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் போர்க்குற்ற வழக்கு! - புலம்பெயர்ந்தோர் திட்டமாம். [Friday 2015-12-04 09:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்திலேயே, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முறைப்பாடுகளை ஆதாரங்களுடன் முன்வைக்க வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் குழுவொன்று திட்டமிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்த…
-
- 0 replies
- 807 views
-
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு! மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சனத்தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு சில வீடுகள் தகவல் வழங்காமல் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி. அனோஜா செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தொகை மதிப்பு கணக்கெடுப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 386 views
-
-
தமிழர்களைப் படுகொலை செய்யும் சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுத உதவி செய்வதனைக் கண்டித்து புதுவை யூனியன் பிரதேசத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21.03.08) கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 665 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது யாருக்கு ஆதரவு தெரிவித்தாலும் அரசியல் தீர்வு சம்மந்தமான தீர்வை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தரப்போவது இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.' தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், நீதிமன்றத்தின் கட்டளைக்கு சம்மந்தப்பட்ட பௌத்த மதகுருக்கள் கட்டுப்படவில்லை. நீதிமன்றத்தின் கட்டளையினை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸார் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நீதிமன்றத்தின் கட்டளை வருவதற்கு முன்பாக வடபிராந்திய பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பாக கதைத்தேன். ஞானசார தேரர் அவர்கள் தன்னிச்சையாக ஒரு இடத்தில் தகனம் செய்வதற்கான நடவடி…
-
- 2 replies
- 1.1k views
-
-
கடந்த 17ம் திகதி முதல் இலங்கையின் தேசிய தொலைக் காட்சியின் செயல்பாட்டு மையம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் தற்காலீகமாக கொண்டு வரப்பட்டிருந்தது. இன்று முதல் தேசிய தொலைக் காட்சி, முழுமையாகவே இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதன் தலைமைத்துவத்தை ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியொருவரான மேஜர் ஜெனரல் சுனில் சில்வா அவர்கள் பொறுப்பேற்கவிருக்கிறார். பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபய ராஜபக்ஸ அவர்களது விருப்பத்தின் பேரில் இவரது பதவி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. - http://www.ajeevan.ch/
-
- 6 replies
- 1.7k views
-
-
சம்பந்தன் தானாம் தேசியத் தலைவர்சொல்கின்றார் TNA எம்பி சரவணபவன் !!!! TNA தலைவர் சம்பந்தனை தேசியத் தலைவர் என TNAஎம்பி சரவணாபவன் தீபம் தொலைக் காட்சியில் தெரிவித்தார் . இதனை அவதானித்த தீபம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் அனஸ் அவர்கள் சற்று அதிசயமாகவே , நீங்கள் சம்பந்தனையா தேசியத் தலைவர் என குறிப்பிடுகின்றீர்கள் என மீண்டும் கேட்டார் . அதற்கு சரவணபவன் ஆம்எனப் பதிலளித்தார் . இந்த வீடியோவில் பார்க்கலாம் . http://www.youtube.com/watch?feature=player_embedded&v=jry_fW_p-rc அதே பேட்டியில் தொடர்ந்து பேசிய சரவணபவன் தேசியம் , சுய நிர்ணய உரிமை பற்றி பேசுவதால் சிங்கள அரசு கோபப்படுகின்றது அதனால் தான் எல்லாப் பிரச்சனையும் என்றும் தெரிவித்தார் ஏதோ இன அட…
-
- 21 replies
- 2.2k views
-
-
மகனைத் தேடவேண்டாம் என தொலைபேசியில் மிரட்டல் வந்தது வவுனியா நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறுவர் நன்னடத்தை அதிகாரியால் இரத்மலானை இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட எனது மகன் அதன் பின்னர் காணாமற்போயுள்ளார்.இது தொடர்பில் நாங்கள் பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தபோது, புலனாய்வாளர்கள் எனக்கூறி எங்களுக்கு தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியவர்கள் மகனைத் தேடவேண்டாம் என அச்சுறுத்தல் விடுத்ததாக தந்தையான அல்போன்ஸ் அன்ரன் அலெக்ஸாண்டர் என்பவர் சாட்சியமளித்தார். காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான காணாமற்போனோரின் உறவுகள் சாட்சியமளிக்கும் அமர்வு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சாட்சியமளித்…
-
- 0 replies
- 572 views
-
-
பிரபாகரனாலேயே தமிழர்களின் பெருமையை உலகம் கண்டது – பாரதிராஜா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாலேயே தமிழர்களின் பெருமை உலக அளவில் போற்றப்பட்டதாக தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா தெரிவித்தார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை வந்துள்ள அவர், மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார். மேலும் கூறிய அவர், “பெரும் கலைஞர்கள், அறிஞர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழைப் பற்றி சொன்னார்கள். அகநானூறு, புறநானூறு எல்லாம் கூறினார்கள். அப்போது கூட தமிழர்கள் உலக அளவில் கவனிக்கப்படவில்லை. என்றைக்கு பிரபாகரன் தலையெடுத்து நின்றானோ அன்றுதான் தமிழர்கள் பெருமை கொண்டனர். …
-
- 1 reply
- 483 views
-
-
ஈ.பி.டி.பி யின் கொழும்பு அலுவலகத்தை கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவு? கொழும்பு மாவட்ட நீதி மன்றம் கொழும்பு பாக் வீதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி யின் அலுவலகத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது. இவ் நீதிமன்ற உத்தரவினை தனியார் வங்கி ஒன்றே நீதிமன்றில் பெற்றதாகவும் எனினும் தற்காலிக உடன்பாட்டுக்கு வந்ததையிட்டு இவ் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்னும் உயிருடன் இருக்கின்றன மருதாணி மரங்கள் மற்றும் சில பூவரச மரங்கள் பாதி நிழலை வைத்திருக்கிறது மருத மரம் சாம்பல் சுவடுகளின் மேலாய் புதிய கூடாரம் நாட்டப்பட்டிருக்கிறது வானத்தின் காயம் ஆறிவிடும் என்று அம்மா நம்புவதைப்போல மீண்டும் வீடு வளரும் என்று தங்கை நம்புகிறாள் காணி நிலத்தில் மீண்டும் பாடல்கள் முளைக்கின்றன -தீபச்செல்வன் கவிஞர். தீபச்செல்வன் ( 1983 ) ஈழத்தின் வன்னிப் பிரதேசத்தில் பிறந்தவர். போரின் பூமிக்குள்ளேயே வளர்ந்து வாழ்ந்து வருபவர். 2005ஆம் ஆண்டில் முதல் கவிதை பிரசுரமானது. கண்முன்னால் நடந்த கொடூரங்களை எல்லாம் இந்த உலகிற்கு சாட்சியமாகச் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பில் , இவரது எழுத்துக்கள் மிகக்…
-
- 1 reply
- 558 views
-
-
டெல்லி: மத்திய அரசின் செயலற்ற வெளியுறவுக் கொள்கையால் இலங்கையின் யாழ். பலாலி விமான நிலையம் மற்றும் திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றி விமானப் படை மற்றும் கடற்படை தளங்களை அமெரிக்கா அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேபாள விவகாரத்தில் ஏற்கனவே இந்திய வெளியுறவுக் கொள்கை தோல்வியைத் தழுவியது. பல ஆண்டுகளாக இந்தியாவுடன் மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்த நேபாளத்தில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தது முதலே அங்கே சீனா ஆதிக்கம் ஆரம்பித்துவிட்டது. இந் நிலையில் சர்வதேச அரசியலில் இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்கிற பெரும் போட்டி நடைபெற்று வருகிறது. அதிலும் இலங்கை திருகோணமலை துறைமுகம் யார் ஆதிக்கத்தில் இருக்கிறதோ அவர்களே தென்னாசியாவை ஆட்டிப் படைத்து ஆள…
-
- 5 replies
- 1.5k views
-
-
01 JAN, 2025 | 01:49 PM (நமது நிருபர்) வட பகுதி மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனவரி மாத இறுதியில் சந்தித்துப் பேசுவதற்கு கடற்றொழிலாளர் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. அதேவேளையில் எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரையும் இவ்வமைப்புகள் சந்தித்துப் பேசவுள்ளன. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்திற்கும், வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்திற்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பிலேயே இது தொடா்பான தீமானம் எடுக்கப்பட்டது. இந்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சால் முன்மொழியப…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் கனகராயன்குளம் வானொலி மன்றத்தின் முத்தமிழ் கலையரங்கம் நேற்று கனகராயன்குளக் கோட்ட அரசியல்துறையின் உறுதுணையுடன் வெகு சிறப்பாக கனகராயன்குள மகாவித்தியாலத்தில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 634 views
-
-
அண்மையில் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையின் சார்பில் கருத்துக்களை முன்வைத்த ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம், தன்னை ஐநாவில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வந்த செய்திகளை உண்மை என்று உறுதி செய்துள்ளார். தன்னை வேறு இடத்துக்கு மாற்றுவதை, இலங்கைக்கு எதிரான சக்திகள், தமிழர் ஒருவருக்கு எதிரான பழிவாங்கலாக தவறாக அர்த்தப்படுத்தி கூற முற்படலாம் என்றும் அவர் வெளியுறவு அமைச்சுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் எச்சரித்திருக்கிறார். தன்னை பிரசிலுக்கு அல்லது கியூபாவுக்கு மாற்றலாகிச் செல்லுமாறு கேட்கப்பட்டதாகக் கூறும் தமரா, அது தற…
-
- 3 replies
- 845 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் வேட்பாளர் ஒருவருக்கோ அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகளையோ வாக்குச் சீட்டில் அடையாளமிட முடியும். குறிப்பாக வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்புவாராயின் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது X எனும் புள்ளடியை இடுவது பொருத்தமாகும். அல்லது முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் இருக்குமாயின் முதலாவத…
-
- 6 replies
- 717 views
-
-
தென்னன்மரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிட நடவடிக்கை adminJanuary 10, 2025 முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பிரதேசத்தின் தென்னமரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிடுவதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் கட்ட களப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் UN-HABITAT நிறுவனத்தால் Adaptation Fund நிதி உதவியுடன் சுற்றாடல் அமைச்சு, மாவட்ட சமூகம் சார்ந்த அமைப்புகள் ஊடாக இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் காலநிலை மாற்றம் மற்றும் கால நிலை மாறுபாட்டை தாங்கும் தன்மை எனும் தலைப்பில் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நீண்ட காலமாக புரனமைக்காது காண…
-
- 0 replies
- 126 views
-
-
வன்னிக்களமுனையான மணலாறு, மன்னார் மற்றும் வவுனியாப் பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் சிறிலங்காப் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 726 views
-