ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
யாழில் இன்று இடம்பெற்ற தேர்தல் ஒத்திகை (தி.சோபிதன்) யாழ்ப்பாணத்தில் பொதுத் தேர்தலுக்கான பரீட்ச்சார்த்த தேர்தல் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் வாக்களிப்பு நடைபெற்றது. நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த வாக்காளர்கள் பரீட்ச்சார்த்த தேர்தலில் வாக்களித்தனர். இந்த வாக்களிப்பு இன்று காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை நடைபெற்றது. வாக்காளர்களுக்கன அறிவுறுத்தல்கள் ஏற்கனவே கிராம அலுவலர்கள் ஊடாக வளக்கப்பட்டிருந்தன. குறித்த வாக்களிப்புக்கு வருகை தந்த வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்ததுடன் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமும் கொண்டு வந்தனர் .அத்துடன் வாக்களிக்க வருபவர்கள் கறுப்பு அல்…
-
- 0 replies
- 340 views
-
-
வடக்கை இலக்கு வைக்கும் ஜனாதிபதி செயலணி : அனுராதபுரம் முதல் வடக்கில் நாக விகாரை வரையான பாரம்பரியத்தை தக்கவைக்க நடவடிக்கை கிழக்கின் தொல்பொருள் பிரதேசங்களை கண்காணிப்பதைப்போன்றே வடக்கிலும் தொல்பொருள் பிரதேசங்களை கண்காணிக்கும் பொறுப்பை ஜனாதிபதி செயலணிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவின் தலைமையில் இந்த வாரம் கூடும் செயலணிக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நியமித்த விசேட ஜனாதிபதி செயலணி கிழக்கின் தொல்பொருள் பிரதேசங்களை முற்றுமுழுதாக கண்காணித்து அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் கடந்த செயலணிக் கூட்டத்த…
-
- 0 replies
- 277 views
-
-
கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்தாலும் தேர்தல் நிச்சயம் நடைபெறும் – தேர்தல்கள் ஆணையாளர் இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸின் பரவல் ஏற்பட்டாலும் பொதுத்தேர்தல் நிச்சயம் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னநாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காணப்படும் பகுதிகளில் விசேட வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதன் மூலம் வாக்களிப்பு இடம்பெறும் என்றும் இது குறித்து சுகாதார அதிகாரிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். தேர்தலை மீண்டும் ஒத்திவைப்பதற்கு பதில் அதனை நடத்துவதற்கான அவசர சூழ்நிலை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா வைரஸ் குறிப்பிட்ட ஒரு பகுதியில் பரவினால் முடக்கப்பட்டுள்ள பகுதிக்குள் தேர்தல…
-
- 0 replies
- 247 views
-
-
மங்கள அரசியலை விட்டு விலகவில்லை June 14, 2020 முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தேர்தல் போட்டியிலிருந்து விலகல் எனக்கு கவலையை தந்தாலும், அவர் அரசியலை விட்டு ஓய்வு பெறவோ, வேறு கட்சியில் சேரவோ போவதில்லை, சிவில் சமூகத்தில் பணியாற்ற போகிறேன் என்று எனக்கு கூறியதில் மகிழ்ச்சி. அவரது சிவில் சமூக பணியின் மூலம், இலங்கையர் அடையாளமும், பல்லின பன்மைதன்மை அடையாளமும் இன்னமும் வலுவடைய வேண்டுமென அவருக்கு தான் கூறினேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது டுவீட்டர் தளத்தில் கூறியுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் ஊடகங்களுக்கு மேலும் கூறியுள்ளதாவது, இந்த அரசாங்கம் இன்று பகிரங்கமாக “சிங்கள பெளத்தம் மட்டும்” என்ற கொள்கையை கடைபிடிக்கின்றது…
-
- 0 replies
- 361 views
-
-
தேர்தல் ஒத்திகை தொடங்கியது – (படங்கள்) கொரோனா வைரஸ் தொற்று அபாயத்துக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுத் தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்ற பரீவ்சார்த்த தேர்தல் ஒத்திகை இன்று (10) காலை முதல் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில் இந்த ஒத்திகை அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்று வருகின்றது. இந்த ஒத்திகையின் போது, வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதம், வாக்காளர் ஒருவருக்கு வழங்கப்படும் கால எல்லை மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது குறித்த காரணிகள் ஆராயப்படவுள்ளது. https://newuthayan.com/தேர்தல்-ஒத்திகை-நடவடி/
-
- 2 replies
- 960 views
-
-
தமிழ் மக்களிள் ஆதரவை ஒருபோதும் மறக்கப்போவதில்லை- மைத்திரி தன்மீது நம்பிக்கை வைத்தே ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் எனக்கு வாக்களித்தனர் எனவும் அதனைத் தான் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய ஆட்சியில் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என தான் நம்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஆனால் தான் வழங்கிய சலுகைகள் இவர்களால் வழங்க முடியுமா என்பதை தெளிவாகக் கூறமுடியாது எனக் கூறியுள்ளார். தற்போதைய அரசியல் செயற்பாடுகள், புதிய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுத்த செயற்பாடுகள் குறித்து தமிழ் தேசிய பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் …
-
- 3 replies
- 478 views
-
-
வரணி ஆலயத்தில் திருடியவர் கைது; நேற்று கைதானவர் விடுதலை! யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி வடக்கில் அமைந்துள்ள கும்பிட்டான்புல பிள்ளையார் ஆலயத்தை கடந்த (09.06.2020) உடைத்து கொள்ளையிட்ட நபர் இன்று (13) கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் – சங்கானையை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு மந்துவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து திருட்டுப்போனதாக கூறப்படும் சங்கிலி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் (12) மந்துவிலை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தில் கைதான நிலையில், அவர் சம்பவத்தில் தொடர்பற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையிலேயே ஆலய சிசிடீவியில் அகப்பட்ட திருடன் கைது செய்யப்பட்டுள்ள…
-
- 1 reply
- 662 views
-
-
பூநகரியில் மக்கள் காணியை அபகரித்த வனத் திணைக்களம் – மக்களுக்கு எதிராக வழக்கு! கிளிநொச்சி – பூநகரி, கிராஞ்சி மொட்டையன் குளம் கிராமத்தில் மக்களுக்குரிய காணியை வனவள திணைக்களம் தமக்குரிய காணி என அடையாளப்படுத்தி பொதுமக்களை காணிக்குள் செல்லவிடாது தடுத்ததால் அங்கு மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பொது மக்கள் சிலருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையறிந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு இடங்களை பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பாதிப்புகளை கேட்டறிந்து உரிய சட்ட நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கியத…
-
- 0 replies
- 341 views
-
-
யாழ் பல்கலை துணைவேந்தராக இராணுவ அதிகாரியா? மறுக்கிறது மானியங்கள் ஆணைக்குழு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒரு இராணுவ அதிகாரியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ துணைவேந்தராக நியமிக்கப் போகிறார் என்ற செய்தியில் உண்மை இல்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க உறுதிபடத் தெரிவித்துள்ளார். நாட்டில் பல்வேறு உயர் பதவிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் இராணுவ உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஒரு வருட காலத்துக்கும் மேலாக வெற்றிடமாகவுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, கடந்த 9ம் திகதியுடன் விண்ணப்பங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலை…
-
- 1 reply
- 495 views
-
-
இளவாலை கடலில் மிதந்து வந்த 57 கிலே கஞ்சா! யாழ்ப்பாணம் – இளவாலை கடற்பரப்பில் மிதந்து வந்த 57 கிலோ கஞ்சா கடற் படையினரால் மீட்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் இன்று (12) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இளவாலை கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் மர்ம பொருட்கள் மிதந்து வந்ததை அவதானித்த கடற்படையினர் குறித்த மூட்டைகளை சோதனையிட்டுள்ளனர். அப்போது அதற்குள் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீட்கப்பட்ட கஞ்சா மூட்டைகள் இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/இளவாலை-கடலில்-மிதந்து-வந/
-
- 3 replies
- 570 views
-
-
(நா.தனுஜா) இலங்கை - சீனா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதிலும், ''ஒரு மண்டலம் ஒரு பாதை" செயற்திட்டத்தை மேம்படுத்துவதிலும் இலங்கையின் அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது. சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான 'ஒரு மண்டலம் ஒரு பாதை' திட்டத்தின் கீழ் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான முதலாவது கூட்டம் கடந்த வியாழக்கிழமை வீடியோ மூலமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சர்வதேச திணைக்களங்களுக்கான அமைச்சர் ஸோங்க் ராஓ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட கட்ச…
-
- 2 replies
- 479 views
-
-
16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இலங்கை அரசு தடை!! 16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதை அரசாங்கம் தடை செய்துள்ளது. சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்திலும் திருத்தத்தை மேற்கொள்ளவும் (Cap 135) Minimum Wages (Indian Labour) ordinance amendment Act அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: இன்று 12ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாக ஊழியர்களை பணியில் ஈடுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயது 16 என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் 2020 ஜுன் மாதம் 12ஆம் திகதியன்று இடம்பெறும் சர்வ…
-
- 4 replies
- 1.3k views
-
-
48,000 ஆண்டுகளுக்கு முன் வில் மற்றும் அம்பு தொழில்நுட்பத்தின் ஆரம்ப சான்றுகள் இலங்கையில் இருந்துள்ளது – ஆய்வில் தகவல் இலங்கையின் ஆதிமனிதர்கள் 48,000 ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகளின் எலும்புகளிலிருந்து கருவிகளை வடிவமைத்து குரங்குகள் மற்றும் அணில்களை வேட்டையாட பயன்படுத்தினர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இது ஐரோப்பா மற்றும் அபிரிக்காவிற்கு வெளியே, இலங்கையில், வில் மற்றும் அம்பு பயன்பாட்டின் ஆதாரங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் கடந்த ஆண்டு, ஃபா-ஹீன் லீனா குகையில் காணப்பட்ட குரங்கு மற்றும் அணில் எலும்புகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் குறித்த தகவலினை வெளியிட்டனர். இந்த குகை தெற்காசியாவில் ஹோமோ சேபியன்களின் ஆரம்பகால புதைபடிவ தோற…
-
- 1 reply
- 704 views
-
-
கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்களா? – சிவமோகன் கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்களா? என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது என வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (13) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த கேள்வியை எழுப்பியுள்ள அவர், தமிழர் ஒற்றுமையை சீர் குலைக்க நினைக்கும் பலர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், “தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து கட்சிகளாக பிரிந்தும் சுயேட்சைக்குழுக்களாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களுக்கு தமிழ் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். அவர்கள்…
-
- 4 replies
- 557 views
-
-
யாழில் சுமந்திரன் கூறிய பெரும் பொய்! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி .தவராசா பகிரங்க எச்சரிக்கை
-
- 6 replies
- 804 views
-
-
அனைத்து பல்கலைகழகங்களும் ஜூன் 22 இல் திறப்பு Published by T. Saranya on 2020-06-13 15:22:40 அனைத்து பல்கலைகழகங்களும் இறுதி ஆண்டு பரீட்சைகளுக்காக ஜூன் 22 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களின் இறுதியாண்டு பரீட்சையை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது. https://www.virakesari.lk/article/83901
-
- 0 replies
- 435 views
-
-
யாழ் வல்லைவெளிப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் காயம் யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவு, வல்லைவெளிப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.குறித்த பகுதியில் இருந்த மர்ம பொதி ஒன்றே வெடித்துள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.வல்லைவெளி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவச் சிப்பாய்கள் இருவரும் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் விழுத்திவிட்டுச் சென்ற பொதியை அவதானித்த இராணுவ அதிகாரி, பொதியை பிரிக்க முற்பட்டபோது அது வெடித்துச்சிதறியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.இதில் காயமடைந்த அதிகாரி இராணுவ முகாமிற்க…
-
- 0 replies
- 385 views
-
-
ஜனாதிபதி செயலணியை இணைந்து எதிர்ப்போம்! கிழக்கு மண்ணைக் காவு கொள்ள வரும் ஜனாதிபதி செயலணியை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து எதிர்ப்போம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழர்களுடைய தாயகமான இணைந்த வடக்குக் கிழக்கிலே முக்கியமான பகுதி கிழக்கு மாகாணமாகும். இவ் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளில் ஒன்றான தாயகக் கோட்பாட்டோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகக் கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது. தமிழர்களின் தாயக பூமியான இக் கிழக்கு மாகாணத்தை அடக்கி ஆள்வதற்கும், ஆக்கிரமிப்பதற்கும், கைப்பற்றுவதற்கும் …
-
- 0 replies
- 413 views
-
-
சிறப்புற நடைபெற்ற அந்தோனியார் பெருவிழா அந்தோனியார் பெருநாளை முன்னிட்டு இன்று (13) வவுனியா – இறம்பைக்குளம், அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலி பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன. மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில், மட்டுப்படுத்தப்பட்ட கத்தோலிக்கர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதன்போது ஆயரினால் விசேட நற்கருத்துக்கள் வழங்கப்பட்டதுடன் தற்போதைய சூழல் நீங்கி, மக்கள் சமாதானமானதும் சுதந்திரமானதுமான வாழ்க்கை வாழ பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டார். https://newuthayan.com/சிறப்புற-நடைபெற்ற-அந்தோ/
-
- 0 replies
- 736 views
-
-
இந்திய உதவியுடன் பலாலி விமான நிலையம் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்- பிரசன்ன பலாலி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் உதவியுடன் விரைவாக அபிவிருத்தி செய்யப்படுமென சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய அரசுடன் விரைவில் இலங்கை அரசு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ள இருக்கின்றது. குறித்த உடன்பாட்டை ஏற்கனவே செய்து கொள்வதற்கு திட்டமிடப்படிருந்த நிலையில், கொரோனோ தொற்றினால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு மாறி வருகின…
-
- 2 replies
- 562 views
-
-
போலியான பெயரில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற சஹ்ரானின் சகோதரன்- விசாரணையில் முக்கிய தகவல் கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் சகோதரர் ரில்வான் ஹாசீம், போலியான பெயரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சம்பவம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ரில்வான் ஹாசிம் உயிரிழந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் போலியான பெயரில் பதிவாகி சிகிச்சை பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் எச்.கே.சந்தன, ஜனாதிபதி ஆணைக்குழுவி…
-
- 0 replies
- 404 views
-
-
பெரஹரவுக்கு அனுமதி – எவரும் பங்கேற்க முடியாது! இம்முறை பெரஹர நிகழ்வுகளை பிரதான வணக்கஸ்தலங்கள் மற்றும் தேவாலயங்களில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவிறுத்தல் வழங்கியுள்ளார். இருப்பினும் குறித்த பெரஹர நிகழ்வுகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி இல்லை என இன்று (12) ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது பாரம்பரியம் மற்றும் மத கோட்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி இந்த ஆண்டு பெரஹெர நிகழ்வுகளை விகாரைகளிலேயே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவறுத்தியுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் – நல்லூர், திருகோணமலை மற்றும் கிழக்கில் இருந்து கதிர்காம திருத்தலத்திற்கு பாதயாத்திரைகளை முன்னெடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குற…
-
- 0 replies
- 363 views
-
-
(எம்.நியூட்டன்) தமிழ் மக்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, இன அழிப்பிற்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரங்கில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடாத்திய சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் சுமந்திரனுக்கு முன்னாள் போராளிகள் மீது திடீரென பொங்கிய பாசம் தேர்தல் நெருங்குகின்றது தமிழ் மக்களை ஏமாற்ற நாங்கள் வந்துவிட்டோம் என்ற கருத்தினையே தொக்கி நிற்கின்றது. தமிழ் மக்களின் இருப்பு உறுதி செய்யப்…
-
- 5 replies
- 803 views
-
-
சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற வேட்பாளரான முன்னாள் ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்கவும் தேர்தலில் இருந்து விலகியுள்ளார். தனது விலகல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் கட்சியின் தலைவர் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இவருடன் இதுவரை சஜித் அணியின் மூன்று வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலயகியுள்ளதுடன், அவர்களில் ஒருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் பக்கம் தாவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/சஜித்-கட்சியின்-அடுத்த/
-
- 4 replies
- 697 views
-
-
விடுதலைப் புலிகள் தொடர்பான ஏ.எம்.சுமந்திரனின் கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது ஏ.எம்.சுமந்திரன் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை. அவருடைய கட்சிக்காரரே மறுதலிக்கும் அளவிற்கு கூச்சம் இல்லாமல் பொய்பேசி வருவது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படமுடியாதென முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற வேட்பாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவ்வாறு தெரிவித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆயுதப் போராட்டத்தை நடத்தி…
-
- 1 reply
- 502 views
-