Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (செ.தேன்மொழி) நாட்டுக்கும், மக்களுக்கும் நலனை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன்,நாட்டு மக்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கோ, இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்கோ நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஐக்கிய மக்கள் சக்தியில் டைக்கோட் மற்றும் சால்வை அணிந்த மோசடிதாரர்கள் கிடையாது. அதனால் யாருக்கும் துணைப்போக வேண்டிய தேவை எமக்கில்லை என்றும் அடக்குனுமுறை ஆட்சிக்கு எதிராக குறல் எழுப்புவதற்கு ஒருபோதும் அச்சமாட்டோம் என்றும் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தி…

    • 23 replies
    • 2.7k views
  2. யாழ்.உடுவிலில் வயோதிப தம்பதிகளை சித்திரவதை செய்த கொள்ளை கும்பல் Leftin May 5, 2020 யாழ்.உடுவிலில் வயோதிப தம்பதிகளை சித்திரவதை செய்த கொள்ளை கும்பல்2020-05-05T10:50:39+00:00உள்ளூர் யாழ்.உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் மற்றும் 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளது. வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்துவிட்டு குடும்பத் தலைவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் குத்தி கொள்ளைக் கும்பல் சித்திரவதை செய்துள்ளது. அதனால் படுகாயமடைந்த குடும்பத்தலைவர், தெல்லிப்பழை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த…

  3. வடக்கு மாகாணத்தின் ஆளுநராக ஓய்வு பெற்ற யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி நியமிக்கவுள்ளார் என நம்பகரமாகத் தெரிய வருகின்றது. வடக்கு மாகாண ஆளுநராக தற்போது திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் இருக்கிறார். தேர்தல் காலம் வரைதான் அவர் பதவியில் இருப்பார். அவர் சுயவிருப்பின் பெயரில் ஓய்வு பெறவுள்ளார் என்பது நம்பகமாக அறிய வருகின்றது. அடுத்து யார் என்பதில் குழப்பம் சிறிது இருந்தாலும், அவர் இராணுவ முகமே என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பதவிக்கு வந்த புதிதில் சகோதரர் மகிந்த ராஜபக்ச வழங்கிய அழுத்தத்தால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனக்கு நம்பகமான சிவில் அதிகாரிகளை தேடிப் பிடித்து பதவிகளில் அமர்த்தினார். இப்போது எந்தத் தலையீடும் இல்லாமல் இராணுவத்தினரைப் …

    • 3 replies
    • 1.2k views
  4. “சிறிலங்கா அரசாங்கத்துடனோ, எதிர்க்கட்சியினரிடமோ, சிங்களத் தரப்புக்களுடனோ நாங்கள் பேரம் பேச வேண்டியதில்லை. வல்லரசுகளுடனேயே பேரம் பேச வேண்டியிருக்கிறது. ஆகவே, இதற்கான அறிவுள்ள, ஆளுமையுள்ளதொரு தலைமைத்துவத்தையே தமிழ்மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் ஊடாக நிச்சயம் நாங்கள் முன்னோக்கிச் செல்லலாம் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை” எனக் கூறியிருக்கின்றார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தினக்குரலுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியிருக்கின்றார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனான நேர்காணல்…. கேள்வி:- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில் உங்களுக்கு நடந்த விடயங்கள் தொடர்பில…

    • 2 replies
    • 572 views
  5. இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் செயற்படுவது யார்? கேள்வி எழுப்புகின்றார் விக்கினேஸ்வரன் Bharati May 22, 2020 இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் செயற்படுவது யார்? கேள்வி எழுப்புகின்றார் விக்கினேஸ்வரன்2020-05-22T18:47:54+00:00Breaking news, உள்ளூர் “இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார்?” என வடமாகாண முள்ளாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: முள்ளிவாய்க்கால் நினைவுதினம் மே 18 அன்று எனது பேச்சின்போது பின்வருமாறு கூறியிருந்தேன் ; “ஐ. நா மனித உரிமைகள் சபையினூடான பொறுப்புக்கூறல் முன்னெ…

    • 4 replies
    • 926 views
  6. யாழ்ப்பாணத்தில் பெண் சட்டத்தரணி ஒருவருடன் இராணுவத்தினர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ள சம்பவெமான்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. யாழ்.நகரை அண்மித்த பகுதியில் குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனிஸ்ட பெண் சட்டத்தரணி தனது சிரேஸ்ட சட்டத்தரணியின் அலுவலகத்தில் கடமைகளை முடித்துக்கொண்டு இரவு 7 மணியளவில் வீடு திரும்பிய போது வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் குறித்த பெண் சட்டத்தரணியை மறித்து சோதனையிட்டுள்ளனர். இதன்போது தான் சட்டத்தரணி என , தனது அடையாள அட்டையை அவர் இராணுவத்தினரிடம் காண்பித்துள்ளார். அவ்வேளை அவருடைய கைப்பையை தாம் சோதிக்க வேண்டும் என கோரிய இராணுவத்தினர் …

    • 7 replies
    • 962 views
  7. In இலங்கை May 2, 2020 10:35 am GMT 0 Comments 1491 by : Benitlas மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை காரணமாக கொழும்பில் தங்கியிருந்த வெளிமாவட்ட மக்கள் தங்களின் வசிப்பிடங்களுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் இதன் முதற்கட்டமாக கர்ப்பிணித் தாய்மார், நீண்டகால நோயாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்காக 52 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் 370 பேர்…

    • 5 replies
    • 884 views
  8. In இலங்கை May 18, 2020 10:30 am GMT 0 Comments 1347 by : Jeyachandran Vithushan அம்பன் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் குறித்த புயல் தாக்கத்தினால் பள்ளிக்குடாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும், கௌதாரி முனையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரும், முழங்காவில் பிரதேச்ததில் 2 குடும்பங்களை சேர்ந்த 9 பேரும், கிராஞ்சியில் 6 குடும்பங்களைச்சேர்ந்த 24 பேரும், பொன்னாவெளியில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும், இரணைமாதாநகர் கிராமத்தில் 1 குடும்…

    • 7 replies
    • 952 views
  9. தீவிரமடையும் ஹுலுடனான முரண்பாடு; அரசமைப்புப் பேரவையில் முறையிட ஆணைக்குழு முடிவு Bharati May 24, 2020 தீவிரமடையும் ஹுலுடனான முரண்பாடு; அரசமைப்புப் பேரவையில் முறையிட ஆணைக்குழு முடிவு2020-05-24T07:57:04+00:00Breaking news, உள்ளூர் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுலின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டிருக்கும் ஆணைக்குழு, அரசமைப்புச் பேரவைக்கு முறைப்பாடுகளை முன்வைக்கத் தீர்மானித்திருப்பதாகத தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அண்மைக்காலமாகப் பேராசிரியர் ஹுலின் செயற்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பெரும் நெருக்கடிகளை தோற்றுவிப்பதன் காரணமாகவே இவ்வாறானதொரு முடிவை எடுக்கவேண்டிய நிலைக்குத…

    • 8 replies
    • 1.7k views
  10. அமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில் யாழ்.பல்கலை மாணவர்களுக்கு தொலைபேசிகள்! ஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி பேராசிரியர் சிவா சிவானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வசதியில்லாத மாணவர்களுக்காக 100 சம்சுங் கைத்தொலைபேசிகளை அன்பளிப்புச் செய்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, அவர் சுமார் 22 இலட்சம் ரூபாவுக்கு தொலைபேசிகளைக் கொள்வனவு செய்துள்ளார். குறித்த தொலைபேசிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவின் பணிப்பாளரும் பௌதிகவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் பு.ரவிராஜன் மூலமாக யாழ். பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமியிடம் கையளிக்கப்பட்டுள்ளன. …

    • 3 replies
    • 746 views
  11. யாழில் திடீரென இராணுவப் பிரசன்னம் அதிகரிப்பு! யாழில் திடீரென இராணுவப் பிரசன்னம் அதிகமாக காணப்படுவதுடன், கெடுபிடிகளும் அதிகரித்துள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வீதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, வீதியில் செல்வோரின் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். நகர் பகுதி, கலட்டி, நாச்சிமார் கோவிலடி, கொக்குவில், திருநெல்வேலி பாற்பண்ணை பகுதி உள்ளிட்ட பல இடங்களில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதியில் செல்வோரின் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை மோட்டார் சைக்கிள்களில் குழுக்களாகவும் இராணுவத்தினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர். …

    • 12 replies
    • 1.5k views
  12. (இராஜதுரை ஹஷான் ) ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் தேர்தலை நடத்துவது அவசியமாகும். கலைக்கப்பட்ட பலவீனமான பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது. கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். கடற்படைக்குள் தான் பிரச்சினைகாணப்படுகின்றது. அதனையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம். மாணவர்களது பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதால் பாடசாலை, பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கையினை மீள ஆரம்பிப்பதில் சிக்கல் காணப்படுகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கொவிட்-19 வைரஸ் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையிலும் மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுவது அரசாங்கத்தின் கடமையாகும…

  13. யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு; இருவர் கைது எம்.றொசாந்த் யாழில் ஊரடங்கு வேளையில் குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். வலி. வடக்கு நகுலேஸ்வரம் பகுதியில் நேற்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை இரவு 10 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெறுவதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற போது பொலிஸ் உப பரிசோதகர் மீது இருவர் தாக்குதலை மேற்கொண்டு வாளினால் வெட்டி காயப்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர். அதனை அடுத்து காயமடைந்த பொ…

  14. கவாசாகி நோய் குறித்து பெற்றோருக்கு எச்சரிக்கை May 24, 2020 கொரோனா வைரஸ் தொற்றுடன் உலக நாடுகள் சிலவற்றில் பதிவான கவாசாகி (Kawasaki) என்ற நோய் தற்போது இலங்கையிலும் காணப்படுவதாக லெடி ரிஜ்வே அம்மையார் சிறுவர் Lady Ridgeway வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நோய் ஏற்கனவே இருந்த போதிலும் தற்போது கொரோனா தொற்றுக்கு மத்தியில் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கத்தேய நாடுகளில் தற்போது காணப்படுவதாக தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்த நோய் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவுவதால், பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 5…

  15. தமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவதமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்காத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்கா யஸ்மின் சூக்கா (ITJP) இலங்கை இராணுவத்தினருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுமுன் அவர்கள் போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதை விசாரித்தறிந்த பின்பே பதவிஉயர்வு வழங்க வேண்டுமென்பது ஐ.நா. தீர்மானம் 30/1 இல் இலங்கை அரசு உடன்பட்ட ஒரு விடயம். ஆனாலும் 11 வது போர் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதி ராஜபக்ச போர்க்குற்றதில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கும், நீதிமன்றங்களில் குற்றவாளிகள் எனக் காணப்பட்டவர்களுக்கும் வேண்டுமென்றே பத…

  16. ஜனாதிபதியின் உரை குறித்து சில நாடுகள் தீவிரமாக ஆராய்கின்றன Rajeevan Arasaratnam May 24, 2020 ஜனாதிபதியின் உரை குறித்து சில நாடுகள் தீவிரமாக ஆராய்கின்றன2020-05-24T10:27:22+00:00உள்ளூர் இலங்கை படையினரை இலக்குவைக்கும் அமைப்புகளில் இருந்து வெளியேறுவோம் என ஜனாதிபதி தெரிவித்திருப்பது சர்வதேச தலைநகரங்களில் எதிரொலித்துள்ளது என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. இது நன்கு ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட முடிவா என்ற கேள்வி எழுகின்றது எனவும் சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது இது தொடர்பில் சண்டேடைம்சில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கை படையினரை இலக்குவைக்கும் அமைப்புகளில் இருந்து வெளியேறுவோம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருப்பது…

  17. பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் வரலாறு முழுக்க சுயாதீனமானவர் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நியமிக்கப்பட முன்னமேயே, அவர் பக்க சார்பற்றவர் என நாட்டுக்கு நீரூபித்தவர் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் விடுதலை புலிகள் பலம்பெற்று இருந்த காலத்தில் கூட அவர் துணிச்சலுடன் தனது கருத்துகளை முன்வைக்க தவறவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மனோ கணேசன், அவர் மீதான வெட்கம் கெட்ட அழுத்தத்தை அரசு நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதிகார போக்குக்கு எதிராக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், எங்களது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் முக்கியத்துவத்தை இன்று நாடு உணர்கின்றது என்றும் இதன் நடுநிலையாக தேர்தல்கள் அணைக…

  18. புத்தளம் அநுராதபுரம் வீதியில் உள்ள புனித சாந்த மரியாள் தேவாலயத்தின் முன்பக்கமாக அமைக்கப்பட்டிருந்த சாந்த மரியாள் சொரூபத்தின் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலினால் சிலையின் கண்ணாடிக் ௯ண்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (18) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த புத்தளம் பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை (19) மோப்ப நாய்களின் உதவியுடன் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சோதனைகளை முன்னெடுத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.ibctamil.com/srilanka/80/143606

    • 19 replies
    • 2k views
  19. ************ சிங்களவன் டெல்லிக்காரனை புரிந்து வைத்திருக்கிற அளவுக்கு, டெல்லிக்காரன் சிங்களவனை புரியவில்லை. மோடி போனை வைத்த கையோட, பீகிங்க்கு போனை போட்டு, சிரித்து மோடியை பத்தி பேசி கலாய்த்து இருப்பார்... கோத்தா.... 😄 ************ சீனாவிற்கு செக் வைக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிராவின் ஜூக்நாத் உடன் தொலைபேசியில் பேசினார். இரண்டு நாடுகளிலும் பொருளாதார ரீதியான முதலீடுகளை செய்ய அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் தற்போது எல்லையில் மோதல் ஏற்பட தொடங்கி உள்ளது. சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் இரண்டு நாடுகளும் தொடர்ந்து மோதி வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் பெரிதாக வெடிக்க…

    • 2 replies
    • 525 views
  20. நாடாளுமன்றை மீள கூட்டுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தாம் கூட்டப்போவதில்லையென திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரத்தை தாம் இதுவரை பயன்படுத்தவில்லை என்றும், தேவைப்படின் அதனை பயன்படுத்த தயாராகவே இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்படியே நான் செயற்பட்டுள்ளேன்.அரசியல் காரணங்களை வைத்து எனக்கு அழுத்தங்களை வழங்க எவரும் முயற்சிக்கக்கூடாது. நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு நீதிமன்றம் சொன்னாலும் நான் மீண்டும் ஒத்திவைப்பேன். அல்லது கூட்டும் வர்த்தமானியை விடுத்து மீண்டும…

    • 21 replies
    • 1.6k views
  21. சிறிலங்கா தொடர்பிலா ஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானத்தில் இருந்து சிறிலங்கா வெளியேறியிருந்தாலும், இப்போதும் சிறிலங்காவை கட்டுப்படுத்தும் ஒர் தீர்மானமாகவே அது உள்ளதோடு, சிறிலங்கா அதற்கு கட்டுப்பட வேண்டிய நிலையில் உள்ளதென போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாளர் தூதுவர் ஸ்டீபன் ராப் தெரிவித்துள்ளார். இணையவழியூடாக தொடங்கியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில், சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே இக்கருத்தினை தெரிவித்திருந்த தூதுவர் ஸ்டீபன் ராப், சிறிலங்கா உலகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படும் நிலையில் உள்ளதென தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் பல உலகளவில் தண்டிக்கப்பட்டு வருக…

    • 3 replies
    • 568 views
  22. நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக உரிய தினத்தில் சம்பளத்தை வழங்க முடியாதுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு நேற்றைய தினம் மே மாதத்திற்கான சம்பளம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில் மோசமான நிதி நிலைமையால் உரிய தினத்தில் சம்பளத்தை முடியாதுள்ளதாக முகாமைத்துவம் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிப்புரிந்து வந்த 400க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே சம்பளம் இன்றி விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் பிரச்சினை காரணமாக உலகம் முழுவதில் உள்ள விமான சேவை நிறுவனங்கள்…

    • 1 reply
    • 475 views
  23. போர் குற்றவாளிகளே இன்றைய இலங்கையின் ஆட்சியாளர்கள். அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இனவாதத்தையும் போலி தேசியவாதத்தையும் மூலோபாயமாக பயன்படுத்தி வருவதன் ஒரு எதிரொலி தான் இது. இந்த சிந்தனையுடன் செயற்படும் அவர்களினால், ஒருபோதும் நாட்டைப்பற்றி சிந்தித்து, வளமான ஒரு நாட்டை தூர நோக்க சிந்தனையுடன் ஏற்படுத்தி கொடுக்க முடியாது. போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற எத்தகைய துன்பத்துக்குள்ளும் இலங்கையை கொண்டு போக அவர் துணிந்துவிட்டார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவல் க.வி்.விக்னேஸ்வரன். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், முள்ளிவாய்க்கால் நினைவுதினம் (மே 18) அன்று எனது பேச்சின்…

    • 10 replies
    • 861 views
  24. யாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குழு சிக்கியது எம்.றொசாந்த் யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அவர்களிடமிருந்த 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான நகைகளை மீட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் 23, 24 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் எனவும் அவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் 45 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் குறித்து மேலும்…

  25. குழந்தைகள் மத்தியில் புதிய வகை நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் எனவே பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தமது குழந்தைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலின் மத்தியில் இந்த கவாசாகி (Kawasaki) என்ற நோய் குழந்தைகள் மத்தியில் ஏற்படுதால் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சீமாட்டி குழந்தைகள் வைத்தியசாலையின் (Lady Ridgeway Hospital for Children) விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா கூறுகையில், இந்த நோய் ஏற்கனவே இருந்தாலும் தற்போது கொரோனா தொற்றுக்கு மத்தியில் மேற்கத்தேய நாடுகளில் வேகமாக ஏற்படுகின்றது. இந்த நிலையில் தற்போது இலங்கையில் குறித்த நோய்க்கான …

    • 0 replies
    • 469 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.