ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
பொருத்து வீட்டை எதிர்த்து அடுத்த வாரம் மீள வழக்கு கூட்டமைப்பு உறுதி பொருத்து வீடுகளை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அமைப்பதற்குத் தடை விதிக்கக் கோரி மீளவும் அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ‘பொருத்து வீடு வடக்கு – கிழக்கு காலநிலைக்குப் பொருத்தமில்லை. 65 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிப்பதற்கு கேள்வி – கோரல் நடத்தியதன் அடிப்படையிலேயே 6 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இது பிழையான நடவடிக்கை’ என்று மனுவில் குறிப்பிட்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி…
-
- 0 replies
- 206 views
-
-
ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற்வர்களுக்கென தமிழரின் தாயகமான வடக்குக் கிழக்கில் நிரந்தர வதிவிடங்கலை அமைக்கும் பணியில் சிறிலங்கா அரசு மும்முரமாக இறங்கியிருக்கிறது. இதற்கென சீனா பெருமளவு நிதியுதவியைக் கடந்த ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. தமிழர் தாயகத்தினைக் கூறுபோடவும், இன்னொரு சுதந்திரக் கிளர்ச்சியை அடக்கவுமென ராணுவ மயப்படுத்தப்படும் எமது பாரம்பரிய தாயகத்தில் இந்தியாவும் தன் பங்கிற்கு தொலைத்தொடர்பு மற்றும் இலத்திரணியல் வலையமைப்புக்கலை சிங்கல ராணுவத்திற்காக நிர்மாணித்து வருகிறது. அதற்கும் மேலதிகமாக சர்வதேச ரீதியிலிருந்து சிறிலங்கா மீது கொண்டுவரப்படும் அழுத்தங்கலைக் குறைப்பதிலும் இந்தியா பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறது. இவ்வாறு இந்தியாவும் சீனாவும் தமிழர் தாயகத்தில் அவர்கள…
-
- 0 replies
- 817 views
-
-
அரசியல் தீர்வு வரும் வராமலும் போகலாம் தீர்வு வரும் வராமல் போகலாம். நாங்கள் நிதானமாகச் செயற்பட வேண்டும். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க இருவரும் தமது கட்சி உறுப்பினர்களை ஒழுங்காக – முறையாக வழிநடத்த வேண்டும். இனிமேல்தான் முக்கிய தருணங்கள் இருக்கின்றன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம், பொது வாக்கெடுப்பில்…
-
- 10 replies
- 981 views
-
-
உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது. இலங்கையின் அந்நிய செலவாணியை ஈட்டும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும். எனினும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாவுக்கு சிறந்த நாடு எனும் சிறப்புரிமையை இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் சுற்றுலாத்துறையினர் வருகை அதிகரித்துள்ளது. பெருமளவு டொலர்களும் வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார். எனினும் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அரசாங்கத்தை கடுமையாக விமர்ச்சிக்க தொடங்கியுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாடு எரிவாயு நெருக்கடி, மின்சார தடை ஆகிய காரணமாக பெரும் பாதிப்புகளுக்கு உள…
-
- 5 replies
- 444 views
-
-
வெள்ளி, மார்ச் 12, 2010 02:10 | நைனாதீவில் சோழர் காலத்து ஆலயம் யாழ் குடாநாட்டின் கரையோர தீவுப்பகுதிகளில் ஒன்றான நைனாதீவுப் பகுதியில் சோழர் காலத்து ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராட்சி திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: நைனாதீவுப்பகுதியில் கி.மு 10 ஆம் நூற்றாண்டு பழமை வாய்ந்த சோழர் காலத்து ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது 40 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டதாகவும் பேராசிரியர் பொ. புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். ராஜ ராஜ சோழன் மிகவும் பலம் மிக்க அரசனாக 985 தொடக்கம் 1014 காலப்பகுதியில் தஞ்சாவூர் மற்றும் சோழமண்டலம் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்திருந்தார். நைனாதீவில் கண்டறியப்பட்ட …
-
- 4 replies
- 1.1k views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய றாஜபக்ச உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மே மாதம் 7ம் திகதி வவுனியா நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியா பம்பைமடுவைச் சேர்ந்த சற்குணம் கஜன் என்பவரது தந்தை தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஜே.விஸ்வநாதன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். தனது மகனை விடுதலைப் புலிகள் பலாத்காரமாக பிடித்துச் சென்றிருந்ததாகவும் எனினும் அவரை மீட்டு புதுமாத்தளன் பகுதியில் தான் இராணுவத்திடம் ஒப்படைத்ததாகவும் அவரை விடுதலை செய்யும் படி கோரியுமே இந்த வழக்கினைப் பதிவு செய்திருந்தார். மேலதிக செய்திகளுக்கு : http://www.eelamweb.com/
-
- 2 replies
- 1.3k views
-
-
மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும் சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினாலேயே மேற்படி தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. 2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ஆவது எதிரி மகாலிங்கம் சசிதரன், 5 ஆம் இலக்க எதிரி தில்லை நாதன் சந்திரதாசன், 6 ஆம் இலக்க எதிரி பெரியாம்பி எனப்படும் …
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கை புதிய அமைச்சரவையில் சேர அனைத்து கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் நீடித்து வரும் மோசமான நெருக்கடியை சமாளிக்கத் தவறியதாகக் கூறி கொழும்பில் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸா உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைவர்கள் இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் மோசமான நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் விதமாக உத்தேசிக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி அமைச்சரவையில் சேரும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான தகவலை அவரது ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ளது. …
-
- 1 reply
- 309 views
- 1 follower
-
-
சிறீ ஜயவர்தணபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பிக்கு மாணவர்களினால் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டதில் பொலிஸாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமது கல்வி நடவடிக்கைகளுக்காக முன்னதாக கொடுத்த மகஜர்களுக்கு எதுவித பதில்களும் கிடைக்காத நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது :‐ ஸ்ரீ ஜயவர்தணபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பிக்கு மாணவர்களினால் இதற்கு முன்னர் தமது கல்வி நடவடிக்கைகளுக்கான பல கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்ட மகஜர்கள் உரிய அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும், ஏன் ஜனாதிபதியிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு கையளிக்கப்பட்ட மகஜர்கள் தொடர்பில் இதுவரையில் உரிய தரப்பிடமிருந்து எதுவித பதில்களும் வராத…
-
- 3 replies
- 1.8k views
-
-
நாடாளுமன்றத்தில் இருப்பவர்களில் அதிகளவானவர்கள் திருட்டுக் கூட்டத்தினர் என ஜே.வி.பியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். நாடு கெட்டு சீரழிந்துள்ள நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும். தற்பொழுது நாட்டில் உள்ள போதைப் பொருள் வியாபாரிகள் அவற்றை மொத்தமாக கொண்டு வருகின்றனர். போதைப் பொருள் தேவை என்றால் பிரதமரின் அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தை எடுத்துக்கொண்டால் 105 அமைச்சர்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் இருப்பவர்களில் அதிகளவானவர்கள் திருட்டுக் கூட்டத்தினர் என அவர் சுட்டிக்காடியுள்ளதுடன், இந்த திருடர்களை அரசியல் வட்டத்தில் இருந்து விரட்ட வேண்டிய காலம் வந்துள்ளது. ஆளும் கட்சியின் கொழும்பு மாவட்ட முதன்மை …
-
- 1 reply
- 339 views
-
-
தார்மீகப் பொறுப்பை விஜயகலா ஏற்கட்டும்! Share மாணவி வித்தியா வன்கொடுமை வழக்கு முடிவுக்கு வந்தாலும், அது புதிய திருப்பம் ஒன்றை எடுத்துள்ளது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரில் 7 பேர் குற்றவாளிகள் என்று தனி அமர்வுத் தீர்ப்பாயம் தீர்ப்ப ளித்துள்ளது. மூன்று நீதிபதிகள் கொண்ட அந்தத் தீர்ப்பாயத்தின் ஒரு நீதிபதியான மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பில், குற்றவாளி களில் ஒருவரை மக்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றிய அமைச்சர் ஒருவர், அவரைப் பொலிஸாரிடம் ஒப்படைக்காமல் விட்டமை குற்றவாளி தப்பிச் செல்வதற்கு உதவியதாகவே அர்த்தப்படும் எ…
-
- 2 replies
- 348 views
-
-
தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய ஒரேயொரு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே! – ஆசிரியர் இரா. செல்வவடிவேல் Published By editor On Saturday, April 3rd 2010. Under செய்திகள் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய சிறந்த தலைமைத்துவமுள்ள ஒரே தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விளங்குகின்றார் என ஆசிரியர் இரா. செல்வவடிவேல் தெரிவித்தார். யாழ் நாவாந்துறை கொட்டடி சனசமூக நிலைய முன்றலில் யாழ் மாநகரசபை உறுப்பினர் கோமகன் தலைமையில் இன்று (02) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த 30 ஆண்டுகாலமாக எதிர்ப்பு அரசியல் எமது மக்கள் உயிர்களையும், உடமைகளைய…
-
- 5 replies
- 766 views
-
-
அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் எதிரான.... நம்பிக்கையில்லாப் பிரேரணை – எதிர்க்கட்சி முக்கிய தீர்மானம் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிப்பதை ஒருவாரம் பிற்போட எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. தற்போதைய பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு அது நேரடி தாக்கம் செலுத்தும் என பொருளாதார நிபுணர்கள் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்க்கட்சி முன்னதாக திட்டமிட்டிருந்தது. அதற்க…
-
- 0 replies
- 88 views
-
-
புதிய அரசுடன் சேர்ந்து செயற்பட தயார் - ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய அரசுடன் சேர்ந்து செயற்பட தயார் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி கதரீன் அஸ்ரன் அம்மையார் அவர்கள் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்திற்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவ் வாழ்த்து செய்தியில் மகிந்த ராஐபக்ஸ அரசாங்கத்தின் சுதந்திர ஐக்கிய முன்னணியின் வெற்றிக்கு வாழ்த்தும் மற்றும் தேர்தல் நடைபெற்ற அன்று இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் அரசாங்கம் சுயாதீன முறையில் விசாரணை செய்யும் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கைய…
-
- 11 replies
- 1.1k views
-
-
2009இல் புலிகளின் தாக்குதலால் யுத்தம் தோற்கும் கட்டத்தை அடைந்தது! – ஒப்புக்கொண்டார் பொன்சேகா [sunday, 2014-02-23 08:55:20] 2009ம் ஆண்டின் தொடக்கத்தில் யுத்தம் தோற்கும் கட்டத்தை எட்டியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கெசல்வத்தயில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தற்காலிக யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், யுத்தம் தோற்க வேண்டிய கட்டத்தை அடைந்தது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 500 படைவீரர்கள் கொல்லப்பட்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 48 மணித்தியால யுத்த நிறுத்தத்திற்கு உத்தரவிட்டிருந்தார். அதற்கு நான் கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன். புலிகள் …
-
- 0 replies
- 354 views
-
-
மானிப்பாயில் சற்றுமுன் வாள்வெட்டு :இளைஞன் படுகாயம் மானிப்பாய் பகுதியில் சற்றுமுன் இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் கூழாவடி பகுதியில் சற்றுமுன் இளைஞன் ஒருவன் மீது சரமாரியாக வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. இன்று மாலை 6.45 மணியளவில் குறித்த வீதியால் மோட்டார் சைக்கிளில் அண்ணன் தம்பி இருவர் சென்ற நிலையில் பின்னால் வந்தவர்கள் வாள்வெட்டு மேற்கொண்டுள்ளனர். குறித்த வாள்வெட்டில் மானிப்பாயை சேர்ந்த 22 வயதுடைய விஜிதரன் இரண்டு கைகளிலும் காயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வாள்வெட்டு தொடர்பான விசாரணைகள் மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். …
-
- 0 replies
- 561 views
-
-
மானிப்பாய் பகுதியில் இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்த நிலையில் நேற்று இரவு தப்பி ஓடியுள்ளார். வன்னயில் இருந்து மானிப்பாய் பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த பெண் பஸ் நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருந்து வேளையில் குற்றப்புலனாய்வினர் எனக் கூறி பலாத்காரமாக மோட்டடர் சைக்கிளில் கடத்திச்சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் சம்பந்தமாக இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் நஞ்சருந்தியதால் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை அலுவர்களின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் ஒருவரே தப்பி ஓட…
-
- 0 replies
- 547 views
-
-
ஆளும்கட்சியின்... முன்னாள் மாகாண சபை, உள்ளூராட்சி உறுப்பினர்கள் அலரிமளிகைக்கு அழைப்பு ஆளும்கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் அலரிமாளிகையில் அழைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இக் கலந்துரையாடலில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1278590
-
- 0 replies
- 80 views
-
-
நெல்லியடியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்‐ நெல்லியடியில் இருந்து GTN னின் விசேட செய்தியாளர்‐ 02 May 10 05:08 pm (BST) நெல்லியடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று இரவு இலங்கை நேரம் 7.30ற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் 26 வயதுடைய சிவலிங்கம் சபசேன் என்ற இளைஞரை சுட்டுக் கொலை செய்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். வன்னியின் இறுதி யுத்தத்தில் அகப்பட்டு முகாமில்; இருந்து விடுபட்டு சென்ற இவர் நாளை பெயின்ற் கடை ஒன்றைத் திறப்பதற்கு தயாரான நிலையில் படைப் புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக நெல்லியடித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரம் விரைவில்…
-
- 22 replies
- 2.2k views
-
-
இலங்கையை... பொருளாதார நெருக்கடியில் இருந்து, மீட்டெடுப்பதற்கு இந்தியாவும்... போராடுகிறது – அண்ணாமலை இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது என இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொட்டகலை சி.எல்.எவ்.வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ் முழு உலகமும் இந்தியாவை திருப்பி பார்க்கின்றது. இந்தியா என்பது வல்லரசு நாடாக மாறியுள்ளது. உல…
-
- 0 replies
- 126 views
-
-
அவசரகாலச் சட்டம் ஏன்? அரசாங்கம் விளக்கம் இலங்கை மக்களின் வாழ்க்கையை பாதுகாத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை முன்னெடுக்கவே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தவிர்ப்பதற்கு குறுகிய காலத்திற்கு இந்த அவசர கால நிலை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இயல்பு நிலை திரும்பியதன் பின்னர் அவசர கால நிலை மீளப்பெற்றுக் கொள்ளப்படும் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/அவசரகா…
-
- 4 replies
- 412 views
- 1 follower
-
-
மாகாணசபைத் தேர்தலில் அரசுக்கு காத்திருக்கிறது பெரும் பின்னடைவு! – புலனாய்வுத் தகவலால் அரசாங்கம் அதிர்ச்சி. [sunday, 2014-03-23 09:54:01] வரும் சனிக்கிழமை நடக்கவுள்ள மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் கடும் பின்னடைவை சந்திக்கும் என புலனாய்வுப் பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளன. புலனாய்வுப் பிரிவின் இந்த அறிக்கை தொடர்பில் ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கியஸ்தர்கள் உட்பட சிலர் இணைந்து கடந்த 16 ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.அடுத்த வாரத்தில் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய புதிய தேர்தல் பிரசார வழிமுறைகள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டுள்ளன. ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டால…
-
- 2 replies
- 324 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா ஆதரவு? முறியடிப்பதற்கு அங்கு விரைந்துள்ள சிறிலங்கா பிரதிநிதி!! நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா அரசின் தார்மீக ஆதரவைப் பெறுவதற்கு வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று இலங்கை அரசுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, புலிகளின் முயற்சியை முறியடிப்பதற்காக கியூபாவுக்கான இலங் கைத் தூதர் தமாரா குணநாயகத்தை இலங்கை அரசு அவசர அவசரமாக வெனிசுலாவுக்கு அனுப்பியிருக்கிறது. இலங்கை அரசின் உத்தரவின் பேரில் வெனிசுலாவுக்கு திடீர் விஜயம் மேற் கொண்டுள்ள தூதர் தமாரா குணநாயகம் அந்நாட்டுப் பத்திரிகை ஒன்றுக்கு வழங் கிய பேட்டி ஒன்றிலேயே இந்தத் தகவல் களை…
-
- 9 replies
- 1.9k views
-
-
கல்முனை, காத்தான்குடி வீதியில் 160 முஸ்லிம்களை கடத்திச் சென்று கொலை செய்ததாக, தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முறைபாடுகள் தொடர்பிலான விசாரணைகளை காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக அதன் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டு அவர்கள் புதைக்கப்பட்டதாக அவர்களது உறவினர்கள் மற்றும் மதத் தலைவர்களால் கூறப்படும் காத்தான்குடி – குருக்கள்மடம் பகுதியை ஆய்வு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தி, நீதி மன்றம் ஊடாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும்அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். http://www.onlineuthaya…
-
- 0 replies
- 393 views
-
-
சர்வக்கட்சி அரசாங்கத்தால் மொட்டு உதிரும் அபாயம் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டு சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வரசாங்கத்தின் அமைச்சரவை இன்னும் முழுமையாக நியமிக்கப்படவில்லை. அவ்வப்போது புதியவர்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி வகித்தவர்களில் பலரும், சர்வகட்சி அரசாங்கத்திலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள், கடந்த அரசாங்கத்திலிருந்து விலகி, பாராளுமன்றத்த…
-
- 0 replies
- 270 views
-