Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது! October 23, 2021 இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த , வீ.நிமலதாஸ் மற்றும் த. கஜீபன் ஆகிய இரு மீனவர்களையும் நேற்றைய தினம் இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். இரு மீனவர்களும் கடந்த 21ஆம் திகதி மீன் பிடிப்பதற்காக வல்வெட்டித்துறையில் இருந்து சென்ற நிலையில் , இந்திய கோடியக்கரைக்கு கிழக்கே 16.5 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை தாம் கைது செய்ததாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.…

  2. முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா விசாரணை வீரகேசரி இணையம் 11/1/2009 11:45:52 AM - அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உள்விவகாரத் திணைக்களத்தினருக்கும், இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க கிறீன்கார்ட் பெற்றிருக்கும் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அந்நாட்டு உள்விவகாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி சரத் பொன்சேகாவுடன் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்ப…

  3. 28அடி வள்­ளங்­க­ளுக்கு சேத்­துக் கட­லில் இறால் பி­டிப்­ப­தற்கு அனு­ம­திக்­கும் திருத்­தம் நாடா­ளு­மன்­றில் இன்று முன்­வைப்பு 28அடி நீள­மான வள்­ளங்­க­ளைப் பயன்­ப­டுத்தி சேத்­துக் கட­லில் இறால் பிடிப்­ப­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கும், சட்­ட­வ­ரைவு மீதான திருத்­தம், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ர­னால் இன்­றைய தினம் முன்­வைக்­கப் ப­ட­வுள்­ளது. இதற்குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் சம்­ம­தம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம், கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் நடை­பெற்­றது. இதன்­போது, நாடா­ளு­மன்­றத்­தில்…

  4. அமைச்சர் டக்ளஸ் - செந்தில் தொண்டமானிடம் சுமந்திரன் விடுத்துள்ள விசேட கோரிக்கை ஆர்.ராம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ‘ஒரேநாடு ஒரே சட்டம்’ என்ற எண்ணக்கருவை செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்குள் தமிழர்களை உள்வாங்கும் செயற்பாடுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தாவும், செந்தில் தொண்டமானும் துணைபோகக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களின் அடிப்படைகளையும், நாட்டின் பல்லினத் தன்மையையும் அடியோடு அழிக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளவுள்ள ஞானசாரர் தலைமையிலா…

  5. வருவேன்..தெரியலை..வரமாட்டேன்..வருவேன்: சிவத்தம்பி 'உறுதி' திங்கள்கிழமை, நவம்பர் 9, 2009. சென்னை: வருவாரா, மாட்டாரா என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்த நிலையில் கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தான் பங்கேற்கவிருப்பதாக இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக மாணவர் தேவானந்த் என்பவருக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு சிவத்தம்பிக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதில் சிவத்தம்பி கலந்து கொள்ளக் கூடாது என்று பல்வேறு ஈழத் தமிழ…

    • 11 replies
    • 1.5k views
  6. உலகநாடுகளிடம் புகார் அளிக்க த.தே.கூட்டமைப்பு முடிவு காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பல்வேறு நாட்டு பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து புகார் தெரிவிக்க உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, காமன்வெல்த் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்று கூறினார். அதேசமயம் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதால் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு நிலவி வருகிறது. http://www.puthiyathalaim…

    • 6 replies
    • 739 views
  7. நாட்டில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிப்பு – 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம்! சீரற்ற வானிலையால் நாட்டில் மீண்டும் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 4 ஆம் திகதிவரை 22 ஆயிரத்து 902 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேநேரம், மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் 59 அதிக அபாயமிக்க வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைத்திய அதிகாரி பிரிவுகளில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர…

  8. தனது படைகளையோ மக்களையோ இறுதிவரை விட்டுச் செல்லாத பிரபாகரனிடமிருந்து நாட்டை விட்டுத்தப்பியோடியவரான சோமவன்ச அமர சிங்க பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மீள் குடியேற்ற அமைச்சுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹேம குமார நாணயக்கார நேற்று தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிவரை தன் ஆதரவாளர்களுடனேயே இருந்தார். தனது ஆதரவாளர்களை விட்டுச் செல்ல அவர் எப்போதுமே விரும்பியதில்லை. ஆனால், ஜே.வி.பி.தலைவர் சோமவன்ச அமரசிங்க ஆபத்துவந்தவுடன் இந்தியா ஊடாக லண்டனுக்குத் தப்பிச் சென்றார். தனது ஆதவராளர்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை என்று பேசியுள்ளார். ttp://tamilseithekal.blogspot.com…

    • 0 replies
    • 1.5k views
  9. அபிவிருத்தி என்பது இதுதானா? கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு வருவதாயின், இதைவிட அதிக நேரம் எடுக்கின்றது. புதிய அதிவேகசாலை அமைக்கப்பட்டதால் இனிமேல் 20 நிமிடங்களே போதுமானது. கொழும்பு கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையில் இந்த நாட்டின் ஜனாதிபதி தாமே தமது காரை ஓட்டிச் செல்லும் காட்சியைப் பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. இந்த நாட்டின் முதல் பெண்மணி மனைவி அருகே அமர்ந்திருக்க ஜனாதிபதியவர்கள் மிகவும் மகிழ்ச்சிகரமானதொரு சூழ்நிலையில் தமது காரைப் படுவேகமாக ஓட்டிச் சென்றிருப்பாரென்பதில் எவரும் ஐயம் கொள்ளத் தேவையில்லை. மேலும் இந்த அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதை நியாயப்படுத்தும் முகமாக ஒரு தகவலும் தெரிவிக்கப்பட்…

  10. மயிலிட்டி காச நோய் மருத்துவமனையை விடுவிக்க பேச்சு! வலி.வடக்கு, மயி­லிட்­டி­யில் இயங்கி வந்த காச நோயா­ளர்­க­ளுக்­கான வைத்­தி­ய­சா­லைக் காணி­யில் இரா­ணு­வம் சொகுசு விடு­தி­களை அமைத்­துள்­ள­து. அதை தற்­பொ­ழு­தும் தமது கட்­டுப்­பாட்­டுக்­குள் இராணுவம் வைத்துள்ளது. அந்தக் காணி விடு­விப்­பது தொடர்­பில் இரா­ணு­வத்­தி­ன­ரு­டன் பேச்சு நடத்தப்படுகின்றது என்று சுகா­தா­ரத் திணைக்­கள அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் காச நோயா­ளர்­க­ளுக்குச் சிகிச்சை வழங்­கு­வ­தற்காகப் பிரத்­தி­யேக வைத்­தி­ய­சாலை ஆரம்­பிக்­கப்­பட்டு அங்கு காச நோயா­ளர்­கள் போருக்கு முன்னர் சிகிச்சை பெற்­று­ வந்­த­னர். உள்­நாட்­டுப் போர் கா…

  11. தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60ஆக உயர்வு – சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து! தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கைச்சாத்திட்டார். நாடாளுமன்றத்தில் அவர் இன்று (புதன்கிழமை) குறித்த சட்டமூலத்தில் கையெழுத்திட்டார். நவம்பர் 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில் இலங்கையின் தனியார் துறை ஊழியர்களின் புதிய குறைந்தபட்ச ஓய்வு வயது 60ஆக அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது 55 வயது நிரம்பியவர்கள், 57 வயது வரை பணிபுரியலாம் என்றும் 53 முதல் 54 வயது வரை உள்ளவர்கள் 58 வயது வரையும், 52 வயது நிரம்பியவர்கள் 59 வயது வரையும் பணிபுரியலாம் என்றும் சட்டமூல…

  12. பதவிக்கு வந்து ஆறு மாதங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை ஒழிப் பது உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. ஆகிய அணிகளுடன் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கப்பாட் டுக்கு வந்துள்ளார். இதனையடுத்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி ஆகிய எதிர்க்கட்சிகளின் பொது வேட் பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா களம் இறங்குவது உறுதியாகி உள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வந்திருக்கின்றன. முத்தரப்புகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொகுக்கப்பட்டு ஒப்பந்தமாக்கப…

  13. ‘வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்’ கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை, கிழக்கு மாகாணத்தில் நிறைவேற்றுவதே, தன்னுடைய நோக்கமாகுமென, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி டேவிட் பெல்ட்மென்ட், கிழக்கு மாகாணத்துக்கு வருகைதந்திருந்தார். அவர், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநருடன் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் ரோஹித போகல்லாகம கருத்து தெரிவிக்கையில், இச்சந்திப்பின் போது, கிழக்கு மாகாணத்தில் நல்லிண…

  14. அரசியல் கைதிகள் தண்டனை காலத்தை விட விசாரணை என நீண்ட காலம் சிறையில் இருக்கின்றனர். அருட்தந்தை மா.சத்திவேல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் தண்டனை காலத்தை விட விசாரணை என நீண்ட காலம் சிறையில் இருக்கின்றனர். என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (03.12.2021) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மதங்களுக்கிடையில் பகைமையை தூண்டியதாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆளுநர் அசாத்சாலி அவர்கள் விசாரணை முடிவுற்ற நிலையில் குற…

    • 4 replies
    • 328 views
  15. தாங்கள் மிகுந்த கஷ்டப்பட்டு படித்து இன்று வேலையொன்றை அதுவும் அரசாங்க வேலையொன்றை பெற்றுக் கொள்வதற்காக படும் கஷ்டங்கள் சொல்லில் அடங்காததுதான். சிங்கள அரசின் இன அழிப்பின் மத்தியில் சில வருடங்களில் பூர்த்தியடையும் கல்வி பல வருடங்களாக இழுபட்டு இப்போது ஒருவாறாக பட்டம் பெற்றாலும்கூட அரச உத்தியோகம் எதுவும் கிடையாது நீங்கள் படும் அவலம் கொஞ்ச நஞ்சம் அல்ல. ஆனால் அரசின் அடிவருடிகளான சில தமிழ் ஏஜன்டுகள் தங்கள் சுயநல கேடித்தனமான அரசியலை வைத்துப் பிழைப்பதற்கு நீங்கள் பலிக்கடா ஆக்கப்படுவதுதான் ஜீரணிக்க முடிவதில்லை. பட்டதாரிகள் என்று நெஞ்சை நமிர்த்திக் கொள்ள வேண்டிய நீங்கள் எல்லாம் தியேட்டர் ஒன்றிலிருந்து அரசியல் விபச்சாரம் செய்பவர்கள் முன்னால் கூனிக்குறுகி அவர்களது ஊர்வலங்கள், பேரணி…

  16. அதி­ர­டிப் படை­ சிறப்­புப் பிரிவு யாழ்ப்­பா­ணத்­துக்கு விரைவு பொலி­ஸார் மீதான தாக்­கு­தல் – வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் யாழ்ப்­பா­ணத்­தில் திடீ­ரென அதி­க­ரித்­துள்ள நிலை­யில், அதி­ர­டிப் படை­யின் அதி சிறப்­புப் பிரி­வி­னர் யாழ்ப்­பா­ணத்­துக்கு இன்­றைய தினம் வர­வுள்­ளது என்று பொலிஸ் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. இந்த மாதம் 21ஆம் திகதி மண் அகழ்வு நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­தோர் கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்­தி­யி­ருந்­த­னர். மறு­நாள் 22ஆம் திகதி நல்­லூ­ரில் துப்­பாக்­கிச் சூடு இடம்­பெற்­றி­ருந்­தது. அதில் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­ய­னின் மெய்ப்­பா­து­கா­வ­லர் உயி­ரி­…

  17. அமெரிக்க செனற் வெளியறவு குழுவின் அண்மைய அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட அதன் பேச்சாளர், அந்த அறிக்கை இனங்களுக்கு இடையில் பக்கச் சார்பு பார்க்கவில்லை; இனத்தின் அடிப்படையில் அதன் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பவும் முடியாது என்று தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2UKOJlaccaeoOAd4deKKMMM0a3cdlYOed4dBTnB22022m4BZ4e

    • 4 replies
    • 1.1k views
  18. எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைக்கும் நோக்கத்தில் ஜனாதிபதி தேடிய பிரபலமான நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நட்சத்திரம் வேறு யாருமல்ல. இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த பிரித்தானிய பிரதமருக்கு துஷ்ரா பந்தை வீசி வீழ்த்த முயற்சித்து தனது பந்தில் தன்னையே வீழ்த்திக் கொண்ட முத்தையா முரளிதரனே அந்த நட்சத்திரமாகும். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றதோடு அரசியல் மைதானத்திற்குள் காலடி எடுத்து வைத்த அர்ஜூன ரணதுங்க, சனத் ஜயசூரிய வரிசையில் முத்தையா முரளிதரனும் அரசியல் மைதானத்திற்கு வருவதாக ஜனாதிபதிக்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்க…

  19. துன்னாலை சுற்றிவளைப்பு!: STF வீடு வீடாக சோதனை!! – மக்கள் அச்சம்!! மூன்றாம் இணைப்பு : வடமராட்சி துன்னாலையில் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ள சுற்றிவளைப்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது. இரண்டாம் இணைப்பு: வடமராட்சி துன்னாலைப் பகுதி இரவோடு இரவாகச் சுற்றிவளைக்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் வீடு வீடாகச் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிவித்து இரு ஹன்ரர் ரக வாகனங்களும், 4 மோட்டார் சைக்கிள்களும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசேட அதிரடிப் படையி…

    • 15 replies
    • 1.3k views
  20. சுவிஸிலிருந்து பேஸ்புக் ஊடாக இயக்கப்படும் ஆவா குழு! கொழும்பு ஊடகம் தகவல் வடக்கில் செயற்படும் ஆவா குழு பேஸ்புக் ஊடாக ஒன்று சேர்வதாக பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக மவ்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த குழுவின் தற்போதைய தலைவர் நிஷா விக்டர் உட்பட பிரதான சந்தேக நபர்கள் நான்கு பேர் கொழும்பில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆவா குழுவை செயற்படுத்திய தலைவர் சன்னா என்பவர் சுவிட்சர்லாந்தில் மறைந்துள்ளார். அங்கிருந்து பேஸ்புக் ஊடாக ஆவா குழுவை இணைத்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கில் வாழும் இளைஞ…

    • 15 replies
    • 1.2k views
  21. மக்களே எமது மொத்த தமிழினமே எதிரியின் திட்டமிட்ட இனவழிப்பு ஆக்கிரமிப்பு போரிற்கு முகங்கொடுத்து நிற்கும் இந்த அவசரகால நிலையில்... எம் தாயக விடுதலைக்கான பயனத்தில் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு நிற்கும் இக்காலகட்டத்தில்... எமது இந்த அவசர நிலையினை உலகெங்கும் எடுத்துரைக்க வேண்டிய பெரும் பணியினை ஆற்ற வேண்டிய ஊடகங்களானது அவற்றின் பணியினை செவ்வனே செய்கின்றனவா.... மக்களே இந்த கருத்து கணிப்பின் மூலம் நாம் ஒரு தெளிவான முடிவினை மேற்கொள்ளலாம். எமது குறைநிறைகளை நிவர்த்தி செய்யலாம். அதன் மூலம் எம் தாயகத்தை பலப்படுத்தலாம் அதனால் நாமும் பலமடையலாம். ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கலாம். அதனால் அனைவரும் உங்கள் கருத்தினை தவறாமல் பதிந…

  22. பிரித்தானியா:- அதிகளாவான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மாணவர் அல்லது சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் பிரவேசித்தவர்கள் என பிரித்தானியா அறிவித்துள்ளது. சுற்றுலா அல்லது மாணவர் வீசா அடிப்படையில் நாட்டுக்குள் பிரவேசித்த அதிகளவான இலங்கையர்களே பின்னர் புகலிடம் கோரி விண்ணப்பிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் இலங்கையைச் சேர்ந்த 7445 புகலிட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசித்து பின்னர் புகலிடம் கோருவதாக பிரித்தானிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 1951ம் ஆண்டு உலக புகலிடக் கோரிக்கையாளர் பிரகடனத்திற்கு அமைவாக பிரித்தானியா நடவடிக்கை எடுக்…

  23. எல்லை கிராமங்கள் நோக்கிய பணி

    • 2 replies
    • 160 views
  24. சிறிலங்காவின் சனாதிபதி தேர்தலுக்கான பிரசார பயணத்தினை யாழில் இருந்து ஆரம்பிக்கும் விதமாக இன்று யாழ்ப்பாணத்திற்கு மகிந்த ராஜபக்ச வருகை தந்துள்ளார். இவ்வாறு தமிழ் மக்களது வாக்கினை குறிவைத்து யாழ்ப்பாணம் வந்துள்ள கொலை வெறியன் மகிந்தவினது பிரசார கூட்டத்திற்கு மக்களை வலு கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுவரும் தமிழின துரோகிகள் தமது விசுவசத்தினை கட்டுவதற்காக மக்களை வற்புறுத்தி அழைத்து சென்றுள்ளனர். வடமராட்சி பிரதேசத்தில் இருந்து இவ்வாறு மகிந்தவின் பிரசார கூட்டத்திற்கு பொது மக்கள் வலு கட்டாயமாக ஈ.பி.டி.பி. கட்சியினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். வீதிகளில் சென்ற மக்களையும் கட்டாயபடுத்தி அழைத்துசென்றுள்ளனர். http://www.nerudal.com

  25. கூட்டமைப்பு எம்.பிக்கள் ஐவர் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் மற்றும் சிவநாதன் கிஷோர், சிறிகாந்தா, சிவாஜிலிங்கம், தங்கேஸ்வரி ஆகியோர் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப் பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் நேற்றுக்காலை வன்னிப்பிர தேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார். மல்லாவி யோகபுர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.