ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
துன்னாலை சுற்றிவளைப்பு!: STF வீடு வீடாக சோதனை!! – மக்கள் அச்சம்!! மூன்றாம் இணைப்பு : வடமராட்சி துன்னாலையில் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ள சுற்றிவளைப்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது. இரண்டாம் இணைப்பு: வடமராட்சி துன்னாலைப் பகுதி இரவோடு இரவாகச் சுற்றிவளைக்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் வீடு வீடாகச் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிவித்து இரு ஹன்ரர் ரக வாகனங்களும், 4 மோட்டார் சைக்கிள்களும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசேட அதிரடிப் படையி…
-
- 15 replies
- 1.3k views
-
-
சுவிஸிலிருந்து பேஸ்புக் ஊடாக இயக்கப்படும் ஆவா குழு! கொழும்பு ஊடகம் தகவல் வடக்கில் செயற்படும் ஆவா குழு பேஸ்புக் ஊடாக ஒன்று சேர்வதாக பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக மவ்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த குழுவின் தற்போதைய தலைவர் நிஷா விக்டர் உட்பட பிரதான சந்தேக நபர்கள் நான்கு பேர் கொழும்பில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆவா குழுவை செயற்படுத்திய தலைவர் சன்னா என்பவர் சுவிட்சர்லாந்தில் மறைந்துள்ளார். அங்கிருந்து பேஸ்புக் ஊடாக ஆவா குழுவை இணைத்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கில் வாழும் இளைஞ…
-
- 15 replies
- 1.2k views
-
-
மக்களே எமது மொத்த தமிழினமே எதிரியின் திட்டமிட்ட இனவழிப்பு ஆக்கிரமிப்பு போரிற்கு முகங்கொடுத்து நிற்கும் இந்த அவசரகால நிலையில்... எம் தாயக விடுதலைக்கான பயனத்தில் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு நிற்கும் இக்காலகட்டத்தில்... எமது இந்த அவசர நிலையினை உலகெங்கும் எடுத்துரைக்க வேண்டிய பெரும் பணியினை ஆற்ற வேண்டிய ஊடகங்களானது அவற்றின் பணியினை செவ்வனே செய்கின்றனவா.... மக்களே இந்த கருத்து கணிப்பின் மூலம் நாம் ஒரு தெளிவான முடிவினை மேற்கொள்ளலாம். எமது குறைநிறைகளை நிவர்த்தி செய்யலாம். அதன் மூலம் எம் தாயகத்தை பலப்படுத்தலாம் அதனால் நாமும் பலமடையலாம். ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கலாம். அதனால் அனைவரும் உங்கள் கருத்தினை தவறாமல் பதிந…
-
- 1 reply
- 726 views
-
-
பிரித்தானியா:- அதிகளாவான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மாணவர் அல்லது சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் பிரவேசித்தவர்கள் என பிரித்தானியா அறிவித்துள்ளது. சுற்றுலா அல்லது மாணவர் வீசா அடிப்படையில் நாட்டுக்குள் பிரவேசித்த அதிகளவான இலங்கையர்களே பின்னர் புகலிடம் கோரி விண்ணப்பிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் இலங்கையைச் சேர்ந்த 7445 புகலிட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசித்து பின்னர் புகலிடம் கோருவதாக பிரித்தானிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 1951ம் ஆண்டு உலக புகலிடக் கோரிக்கையாளர் பிரகடனத்திற்கு அமைவாக பிரித்தானியா நடவடிக்கை எடுக்…
-
- 0 replies
- 439 views
-
-
-
சிறிலங்காவின் சனாதிபதி தேர்தலுக்கான பிரசார பயணத்தினை யாழில் இருந்து ஆரம்பிக்கும் விதமாக இன்று யாழ்ப்பாணத்திற்கு மகிந்த ராஜபக்ச வருகை தந்துள்ளார். இவ்வாறு தமிழ் மக்களது வாக்கினை குறிவைத்து யாழ்ப்பாணம் வந்துள்ள கொலை வெறியன் மகிந்தவினது பிரசார கூட்டத்திற்கு மக்களை வலு கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுவரும் தமிழின துரோகிகள் தமது விசுவசத்தினை கட்டுவதற்காக மக்களை வற்புறுத்தி அழைத்து சென்றுள்ளனர். வடமராட்சி பிரதேசத்தில் இருந்து இவ்வாறு மகிந்தவின் பிரசார கூட்டத்திற்கு பொது மக்கள் வலு கட்டாயமாக ஈ.பி.டி.பி. கட்சியினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். வீதிகளில் சென்ற மக்களையும் கட்டாயபடுத்தி அழைத்துசென்றுள்ளனர். http://www.nerudal.com
-
- 0 replies
- 601 views
-
-
கூட்டமைப்பு எம்.பிக்கள் ஐவர் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் மற்றும் சிவநாதன் கிஷோர், சிறிகாந்தா, சிவாஜிலிங்கம், தங்கேஸ்வரி ஆகியோர் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப் பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் நேற்றுக்காலை வன்னிப்பிர தேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார். மல்லாவி யோகபுர…
-
- 9 replies
- 920 views
-
-
வெடியரசன் கோட்டையில் இருப்பது தமிழ் பௌத்த அடையாளங்களே நெடுந்தீவில் தொல்பொருள் திணைக்கள அதிகாரி தெரிவிப்பு நெடுந்தீவு – வெடியரசன் கோட்டையில் பௌத்த ஆலயத்துக்கான அடையாளங்களும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆனால் அவை தமிழ் பௌத்த அடையாளங்களே அன்றி சிங்கள பௌத்த அடையாளங்கள் அல்ல – என தொல்பொருள் திணைக்கள அதிகாரி தெரிவித்தார். நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் பிரிவுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்தவாரம் இடம்பெற்றது. இதன் போதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் அ…
-
- 1 reply
- 478 views
-
-
(ஆர்.ரஞ்ஜன், க.கிஷாந்தன்) மவுசாகலை நீர் தேக்கத்தால் மூடப்பட்ட பௌத்த விகாரை, இந்துக் கோவில் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் வற்றியதில் அவை மீண்டும் மக்களின் கண்களுக்கு தெரிகின்றது. மஸ்கெலியா பழைய நகரில் இருந்த பௌத்த விகாரை, இந்து கோவில், முஸ்லிம் பள்ளி ஆகியன மவுசாகலை நீர் தேக்கம் ஆரம்பிக்கும் போது குறித்த மூன்று வழிபாட்டுத்தலங்களும் நீரினால் மூடப்பட்டது. தற்போது மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர்மட்டம் 140 அடியிலிருந்து 40 அடிக்கு குறைவடைந்ததால் மூன்று தேவாலயங்களும் தற்போது மக்களின் பார்வைக்கு தெரியவந்துள்ளது. தற்போது மக்கள் பௌத்த விகாரை, இந்து கோவில், முஸ்லிம் பள்ளி ஆகிய வாழிபாட்டுத்தலங்களுக்கு ப+ஜை நடத்தி வழிப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்த…
-
- 2 replies
- 355 views
-
-
பசில் ராஜபக்ஸ தலைமையில் புதிய குழு! February 8, 2022 சுங்கத்தின் வசமுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் தலைமையில் புதிய குழுவொன்றை நியமிக்கவும் ஜனாதிபதியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (07.02…
-
- 0 replies
- 194 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளனான தீர்வையே தமிழரின் இனப் பிரச்சினைக்கான பரிகாரமாக வெளிப்படுத்தியுள்ள கால கட்டத்தில் நடந்துள்ள 2010 ஆம் ஆண்டின் குடியரசு அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்று. ஈழம் வாழ் தமிழ் மக்களோடு மக்களாக இருந்து உயிரைப் பணயம் வைத்து இது நாள் வரையும், இப்போதும் அரசியல் நடத்தும் இக் கட்சிகளே அங்கேயுள்ள மக்களின் குரலாக இருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற தமிழ் பேசும் மக்கள் சார்ந்த கட்சிகள் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்க, ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன மக…
-
- 11 replies
- 1.2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவது குறித்து, சிறிலங்கா அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது. சிங்கள நாளிதழான திவயின இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். இதற்குத் தேவையான போதிய பலம் சிறிலங்கா அரசாங்கத்திடம் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வடக்கில் இனவாதத்தை தூண்டுவது மற்றும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், சிறிலங்கா அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது. வடக்கில் பிரச்சினைகள…
-
- 1 reply
- 345 views
-
-
கடந்த அரசின் முக்கியஸ்தர்கள் கைதாகலாம் எனத் தகவல் தேர்தலுக்கு முன்னர் கடந்த காலத்தில் நடந்த ஊழல் மோசடிகள், கடத்தல்கள் தொடர்பான வழங்குகளின் குற்றப்பத்திரத்தைத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதி அமைச்சர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. கடத்தல்கள், ஊழல்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பியுள்ளது. அதன்மூலம் கடந்த அரசின் முக்கியஸ்தர்கள் சிலர் கைது செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது. கடந்த அரசின் முக்கியஸ…
-
- 0 replies
- 263 views
-
-
அரசியலின் ஆணிவேர், ஜனநாயகத்தின் பூதக் கண்ணாடி, செய்தி அறியும் திறந்த புத்தகம் என்று கூறப்படும் பத்திரிகையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் அதிகரிக்கிறது. எதை எழுத வேண்டும் அல்லது எழுதக் கூடாதென்கிற வரையறைகளை ஊடகங்களின் மீது திணிக்கும் ஜனநாயக ஜாம்பவான்கள் அவற்றை கையிலெடுத்து சன்னதம் கொள்வது அபத்தமாக இருக்கிறது. தென்னிலங்கையில் ஒரு பத்திரிகை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட அதேவேளை குடாநாட்டு ஊடகமொன்றிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனநாயகப் பண்புகளை, அதிகாரத்தை அடைய உதவும் ஏணியாகப் பயன்படுத்தும் நவீன ஜனநாயக மறுப்புவாதிகளுக்கு நோபல் பரிசொன்று வழங்க வேண்டுமென அக் குழுவிற்கு பரிந்துரை செய்தால் உலகில் அப் பரிசைப் பெறும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அ…
-
- 1 reply
- 764 views
-
-
யாழ்.குடாநாட்டு இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்கின்ற சிறிலங்கா அரசாங்கத்தின் செயல் திட்டங்களில் ஒன்றாக தற்போது ஆவா குறூப் என்ற ரவுடிக் கும்பல் ஒன்று குடாநாட்டில் உருவாக்கப்பட்டிருப்பதாக சங்கதி24 இன் குடாநாட்டுச் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்களில் இந்த ரவுடிக் கும்பலே ஈடுபட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆவா குறூப் என்று கூறப்படுகின்ற மேற்படி குழுவினர் 10 தொடக்கம் 20 வரையான மோட்டார் சைக்கிள்களில் ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் என்ற அடிப்படையில் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களுடன் வீதிகளில் வலம் வருகின்றனர். வீதிகளில் நிற்கின்ற அப்பாவி…
-
- 5 replies
- 2k views
-
-
‘‘நானும் காணாமல் ஆக்கப்பட்டவன்தான்’’ அன்று நடந்ததை இன்று சொல்கிறார் மைத்திரி “நானும் கடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டிருந்தேன். காணாமல் ஆக்கப்படுதலால் ஏற்படும் வலி – இழப்பு எனக்கு நன்கு தெரியும்” இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கு – கிழக்கிலிருந்தும், கொழும்பிலிருந்தும், அரச தலைவர் செயலகத்தால் அழைக்கப்பட்டிருந்தனர். காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களையே சந்திக்க வேண்டும் என்று அரச தலைவர் வ…
-
- 4 replies
- 331 views
-
-
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு போட்டியாக கொண்டாட்ட நிகழ்வுகளும் குளோபல் தமிழச் செய்தியாளர் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற இடங்களுக்கு மிக அருகில் கொண்டாட்ட நிகழ்வுகளும் இன்றைய தினம் யாழில்.ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் மாணவர்களின் ஏற்பாட்டில் , நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. அதேநேரம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு மிக அருகில் உள்ள யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பல்கலைகழக வளாகத்தினுள் சிவப்பு மஞ்சள் கொடி கட்டி திலீபனின் நினைவு நாளை மாணவர்கள் அனுஸ்டிக்கும் போது , சர்வதேச…
-
- 3 replies
- 839 views
-
-
தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் அகதிகள் 15 பேரை பிணையில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள், தங்களை விசாரணை செய்து, விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, கடந்த மாதம் 2ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர். இதன் பின்னர் இந்த அகதிகள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் மிகவும் பரபரப்பானது. இச் சம்பவம் தொடர்பில், ஈழத் தமிழ் அகதிகள் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் 15 பேரும்…
-
- 2 replies
- 995 views
-
-
யாழ், மன்னார் ஆயர்களின் கருத்துகள் மற்றும் கத்தோலிக்க சபை வெளியிட்ட மேய்ப்பனின் அறிக்கையும் இலங்கையில் பிரிவினைவாதத்திற்கு துணை போவதாக தேசத்துரோகமானதாகவுமே அமைந்துள்ளன. எனவே, கத்தோலிக்க சபை பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் இல்லாவிட்டால் கத்தோலிக்க மக்களே நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கும் தர்மபால பரம்பரா (தர்மபால பரம்பரை) அமைப்பு வடக்கில் கத்தோலிக்க இராஜ்ஜியத்தை உருவாக்குவதற்காகவே எதிர்க்கட்சியில் உள்ளோரும் கத்தோலிக்க சபை முக்கியஸ்தர்களும் அரச தலைவருடன் நெருக்கத்தை ஏற்டுத்திக் கொண்டுள்ளனர். இந்த ஆபத்தை அரசு புரிந்துகொள்ள வேண்டுமென்றும் அவ்வமைப்பு தெரிவித்தது. கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள சௌசிரிபாய மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தர்மப…
-
- 0 replies
- 313 views
-
-
நளினியின் விடுதலை தொடர்பான வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் என தமிழக அரசு தரப்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நளினி விடுதலை தொடர்பான ஆலோசனை குழு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு 2 வார கால அவகாசம் கேட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்களிடமே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை வழங்குவதற்குப் போதிய கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள் அரசு தரப்பில் கேட்கப்பட்ட 2 வார கால அவகாசத்தை நிராகரித்து தமிழக அரசு நாளை இந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நளினியை விடுதலை செய்வது குறித்த இந்த அறிக்கை தொடர்பான கருத்துப் பகிர்வுகள் சில மாதங்களாக இழுபட்டு வரும் நிலையிலேயே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள…
-
- 2 replies
- 650 views
-
-
இலங்கையில் பயங்கரவாதத்தை முழுதாக தோற்கடித்த மனிதாபிமான நடவடிக்கையின் போது இராசாயன ஆயுதங்கள் உட்பட மரபல்லாத ஆயுதங்களை ஆயுதப்படைகள் பயன்படுத்தின என பல தரப்பினராலும் ஊடகங்கள் வழியே பல அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஆதாரமற்ற தவறான குற்றச்சாட்டுகளாகும் என்று இராணுவப்பேச்சாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பில், பாதுகாப்பு தலைமை அதிகாரி அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்ச்சியாக மரபு அல்லாத பல வழிகளில் இராணுவத்துக்கும் இலங்கை சிவிலியன்களுக்கும் எதிராக தாக்குதல்களை நடத்திய போதிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது ஆயுதபடைகள் குறைந்தபட்ட அளவிலான மரபு ரீதியான வழிகளை மட்டும் தேவையின் நன்மை கருதி பயன்ப…
-
- 1 reply
- 207 views
-
-
தமிழர்கள் அனைவரும் ஒருகுடையின்கீழ் அணிதிரளவேண்டும் – வடமாகாண முதலமைச்சர்! வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் ஒரு குடையின்கீழ் அணிதிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும், அதில் தாம் வெற்றிகண்டுகொண்டிருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தற்பொழுது எங்களிடம் ஆயுத பலம் இல்லை. ஆகையால் தமிழ் மக்கள் அனைவரும் வேற்றுமை பாராது ஒருகுடையின்கீழ் அணிதிரண்டு எமது கோரிக்கைகளை முன்வைக்க முன்வரவேண்டும். அது மட்டுமல்லாது உலக நாடுகளின் தலைமைத்துவத்துடன், எமக்கு நடக்கும் பிரச்சனைகள்…
-
- 0 replies
- 281 views
-
-
எரிபொருள் வரிசையில் காத்திருந்த... மற்றுமொருவர், உயிரிழப்பு! அத்துருகிரிய பகுதியில் எரிபொருள் கொள்வனவு செய்ய வருகைத் தந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 85 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. வேனொன்றில் வருகைத் தந்து, எரிபொருளை நிரப்புவதற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்த தருணத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக, அவர் அத்துருகிரிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம…
-
- 1 reply
- 361 views
-
-
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் ஏற்பட்டுள்ள பிளவுகள் தமக்கு சாதகமாக உள்ளதாகவும் தனது மக்கள் பணியை தொடர்ந்து செய்வதற்கு உரிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தம்பட்டி கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்துள்ளார். ஊர்காவற்றுறையிலிருந்து தம்பட்டி வரையிலான புதிய பேரூந்து தேவை ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பாக கதைப்பதாக கூறி தம்பட்டி கிராம மக்களின் பிரதிநிதிகள் அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின்போது மேலும் கருத்துக்கூறிய டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தமக்குள்ளே பிரிந்துகொண்டு தேர்தலில் போட்டியிடுவதால் யாழ் மக்கள் எமக்கு வாக்களிப்பதில் விர…
-
- 6 replies
- 810 views
-
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழர்களைத் திட்டமிட்டு புறக்கணித்துவருகிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். போட்டிப் பரீட்சைகளில் சித்தி பெற்ற போதிலும் நியமனங்களைப் பெற்றுக்கொள்வதில் தமிழர்கள் திட்டமிட்ட முறையில் புறக்கணிப்படுகின்றனர் என்று அவர் கூறினார். மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான், புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த நாட்டிலே போர் ஆரம்பிக்கப்பட முன்னர் தமிழர்கள் கல்வியில் உயர்தர நிலையில் இருந்துள்ளார்கள். அவர்களது கற்றல் ஆற்றலை அழிக்க வேண்ட…
-
- 0 replies
- 240 views
-