ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143498 topics in this forum
-
இலங்கையின் இன்றைய பிரச்சனைகள் - இந்தியாவில் இருக்கும் களச் செயல்பாட்டாளர்களுடன் ஓர் உரையாடல் பல நேரங்களில் இலங்கை சம்பந்தப்பட்ட விவாதங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவையாகப் பிரித்துப் பேசப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் நமக்கு முழுமையான புரிதல் இருப்பதில்லை. இலங்கை சம்பந்தப்பட நிலைப்பாடுகளில் பல பிரச்சனைகள் வருவதற்கும் இதுவே காரணம். நமக்குத் தேவை தற்கால நிகழ்வுகள் பற்றிய முழுமையான புரிதல் மட்டுமல்ல, கடந்த காலம் பற்றியான புரிதலும் தான். இந்த முழுமையான புரிதல், அந்தத் தளத்தில் தொடர்ந்த செயல்பாடுகளையும், தகவல் சேகரிப்பையும் அடிப்படையாகக் கொண்டு கவனத்துடனும், உண்மையுடன் இருக்க வேண்டும். உலகத்தில் உள்ள பல விஷயங்களை போன்று இலங்கையைப் பொறுத்தவரையிலும் மேலே கூறப்…
-
- 1 reply
- 629 views
-
-
மல்லாவி விபத்தில் பரீட்சை எழுதச் சென்ற மாணவன் பலி! - மற்றொரு மாணவன் படுகாயம். [Wednesday 2015-09-02 19:00] முல்லைத்தீவு, மல்லாவி ஒட்டக்குளம் சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் உயர்தரப் பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த மாணவனான தர்மலிங்கம் பிரதீப் (வயது 19) உயிரிழந்துள்ளதுடன், எஸ்.சுஜீவன் (வயது 20) என்ற மாணவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர். மல்லாவி மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்களான இவர்கள், 12.30 மணிக்கு உயர்தர புவியியல் பாடப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தனர். இதன்போது, ஒட்டக்குளத்திலிருந்து பாண்டியன்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு …
-
- 0 replies
- 244 views
-
-
அடுத்த ஜனாதிபதி மைத்திரி – பிரதமராக மஹிந்த: சுதந்திரக்கட்சிக்குள் புதிய வியூகம் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை தொடர்பாக ஸ்ரீ.ல.சு.க பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தனக்கு தெரிவித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இரு அரசியல் கட்சிகளுக்கும் இடையில் பிளவுபடும் நிலைகள் காணப்படுவதனால் தயாசிறி ஜயசேகர பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறினார். மேலும் மஹிந்த ராஜபக்ஷவை அடுத்த பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேனவை அடுத்…
-
- 0 replies
- 486 views
-
-
Posted on : 2007-12-06 அப்பாவிகள் என நிரூபிக்கப்படும்வரை தமிழர்கள் இங்கு பயங்கரவாதிகளே! "பிரஜை ஒவ்வொருவரும் அவர் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்பது ஐயத்துக்கு அப்பால் நிரூபிக்கப்படும்வரை அப்பாவியாகவே கருதப்படவேண்டும்' என்பதுதான் பொதுவான சட்டவிதி; ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமை; இயற்கை நீதி. ஆனால் தலைநகர் கொழும்பிலும் புற நகரங்களிலும் தமிழர்கள் என்பதற்காகவே ஆயிரக்கணக்கில் ஆட்கள் கைது செய்யப்படுவதையும், அரசு "பயங்கரவாதிகள்' எனக் குறிப்பிடும் விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறு கைது செய்யப்படுவோருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை இவ்வாறு கைது செய்யப்படுவோர் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதையும் நோக்கும்போது தமிழர் விவகாரத்தில் மட்டும் மேற்ப…
-
- 1 reply
- 766 views
-
-
அன்புள்ள புலம்பெயர் வாழ் தமிழீழ உறவுகளே: சிறிலங்கா சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது. 64ஆவது சுதந்திர தினத்தை சிறிலங்கா கொண்டாடவிருக்கும் இந்த நாட்களில் ஈழத்தமிழர்கள் இன்றும் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர். இரத்தக்கறைபடிந்த நாட்களாகவும் தூக்கமின்றிய இரவுகளாகவும் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. உலகத்தமிழினமே உறவுகளின் அழுகுரலோடு கடந்து செல்லும் இந்நாட்களை நாம் வெறுமனே எண்ணிக்கொண்டிருந்தால் எங்கள் உறவுகளின் சமாதிகள் ஒன்றையும் கூட சிங்கள பேரினவாதம் விட்டுவைக்கப்போவதில்லை . நாம் அனைவரும் ஒரு முக்கியமான கால கட்டத்தில் எமது வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம். புலம்பெயர் தமிழர்க…
-
- 0 replies
- 550 views
-
-
சுதந்திரபுரம் படுகொலை – 21ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையிலான 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 1998 ஆம் ஆண்டு இலங்கை விமான படையாலும், இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதலில் 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த நிலையிலேயே 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) சுதந்திரபுரம் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த தாக்குதலின் போது தமது குடும்பத்தில் 4 பேரை இழந்த தயார் மற்றும் தந்தை இணைந்து ஈகைச் சுடரினை ஏற்றி வைத்துள்ளனர். இந்த நிகழ்வில் பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு அஞ்சலி ச…
-
- 1 reply
- 499 views
-
-
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றினூடாக சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளது என பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பிரித்தானியாவின் தமிழர்களுக்கான சர்வகட்சி நாடாளுமன்ற குழுவினால் பிரித்தானிய மக்கள் பிரதிநிதிகள் சபையில் கடந்த செவ்வாய்க்கிழமை கண்காட்சியொன்று ந…
-
- 1 reply
- 630 views
-
-
கோட்டாவின் மனுக்கள் நிராகரிப்பு – நாளை முதல் தொடர் விசாரணை In இலங்கை June 18, 2019 10:16 am GMT 0 Comments 1225 by : vithushan முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த இரண்டு மனுக்கள், மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. டீ. ஏ. ராஜபக்ஷ நினைவகத்தை நிர்மாணிக்க அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை இரத்துசெய்ய கோரி, கோட்டாபய ராஜபக்ஷ குறித்த மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) அந்த மனுவை நிராகரித்துள்ளது. …
-
- 0 replies
- 396 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் அனைத்துலக சமூகம் தலையிடக்கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிராந்திய அதிகாரி றொபேர்ட் ஈவன்சிடம் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
மத்திய கிழக்கு நாடுகளின் தனவந்தர்கள் குழு மன்னார் விஜயம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கட்டார் மற்றும் சவூதி அரோபியா நாட்டின் தனவந்தர்கள் மன்னார் மாவட்டதிற்கு விஜயம் செய்திருந்தனர். இவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மரிச்சிகட்டி கிராம மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது, விசேட வானூர்தியில் சென்ற குழுவினர் மரிச்சிக்கட்டி கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்த ஆராய்ந்தனர். அத்துடன், அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை தனவந்தர்களினூடாக தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் இதன்போது உறுதியளித்தார். - See more at: http://athavans…
-
- 21 replies
- 2.3k views
- 1 follower
-
-
எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக கட்சியின் தேசிய மாநாட்டின் போது நியமிக்க உள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளதாகவும், தனது கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கும் இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது அறிவிப்பார் எனவும் அவரிற்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=115325
-
- 1 reply
- 436 views
-
-
35 நாடுகளுக்கு இலவச விசா. 35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்குப் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு இந்த வாய்ப்பு குறித்த நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்குப் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், அவுஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஸகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, செக்குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ்,…
-
- 0 replies
- 355 views
-
-
மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நெடுங்கேணியில் இன்றிரவு பொதுமக்கள் மீது படையினர் நடத்திய சரமாரியான தாக்குதல் சம்பவத்தினால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வீதியால் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர்களை இலக்கு வைத்தே படையினரும் காவற்துறையினரும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். பெரும்பாலும் மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கிக்கொண்டனர். வீதி வேலைகளுக்காக அங்கு சென்று தங்கியுள்ள சிங்கள தொழிலாளர்கள் முன்னிலையில் அவர்கள் வேடிக்கை பார்த்திருக்க இத்தாக்குதல்கள் நடந்துள்ளது. தமது காவலரணை இவர்கள் தாக்க முற்பட்டதாக படையினர் இப்பகுதி மக்களுக்கு வியாக்கியானமும் செய்துள்ளனர். மாலை வேளை சில இளைஞர்கள் வழமை போன்று படை முகாம் முன்பதாகவுள்ள வீதியால் பயணித்துள்ளனர். அவ்வேளையில்…
-
- 0 replies
- 756 views
-
-
02 SEP, 2024 | 03:20 PM ஜனாதிபதியினதும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரினதும் இரண்டாம் நிலை தலைவர்கள் இருவரையும் இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள சாதகமான நிலையை மாற்றியமைப்பதற்காக ஜனாதிபதியினதும் எதிர்கட்சி தலைவரினதும் பிரச்சார பிரிவில் இரண்டாம் நிலையில் உள்ள தலைவர்கள் இருவரையும இணைந்து செயற்பட செய்வது தொடர்பிலான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர் என அனுரகுமாரதிசநாயக்க ஹோமகவில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சஜித்பிரேமதாசவிற்கும் இடையிலான மோதல்கள…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலகியமை குறித்து விவாதிக்க இணைத் தலைமை நாடுகள் கூடுகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 982 views
-
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்துமாறு கோருவதற்கு பிரேரணை ஒன்று அவசியம் இல்லை என சிறீலங்கா அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். காரணம் பரிந்துரைகள் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் சற்று நேரத்திற்கு முன்னர் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சுதந்திரமானதும் வெளிப்படையானதும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆனால் 20 வருட யுத்தம் தொடர்பில் தனிநபர்களின் கருத்துகளைக் கேட்டு ஐநா நிபுணர், குழு அறிக்கை தயாரித்ததாக அவர் குறிப்பிட்டார். இலங்கையில் தேசிய ஒருமைப…
-
- 0 replies
- 708 views
-
-
யாழில் ஆசிரியர் அடித்துக் கொலை : இருவருக்கு தொடர் விளக்கமறியல் யாழ்.நகரப் பகுதியில் வைத்து தம்பதிகள் மீது மோசமான தாக்குதலை மேற்கொண்டு கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த 19ஆம் திகதி யாழ்.மணிக்கூட்டு வீதியினைச் சேர்ந்த யாழ்.நகரப் பாடசாலையில் பணியாற்றும் மாதவமணிவண்ணன்(44) திருமதி எம்.தர்சினி எனும் தம்பதிகள் சில காடையர்களால் தாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.இவர்களில் மாதவமணிவண்ணன் சிகிச்சை பலனின்றி கடந்த 23ஆம் திகதி உயிரிழந்தார். இதனையடுத்து குறித்த தம்பதிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இரகசிய …
-
- 0 replies
- 909 views
-
-
கிழக்கில் சமகால தமிழர் அரசியலின் செல்நெறிப்போக்கு மற்றும் அரசியல் கலாசாரத்தை தீர்க்கமாக புரிந்து கொண்டு எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றக் கூடிய தமிழர் பரப்பின் அரசியற் கட்சிகளை இணைத்து கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களின் சமூகப் பொருளாதார, பண்பாட்டியல் இலக்குகளை அடைவதற்கான ஓர் பாரிய அரசியற் கூட்டமைப்பை உருவாக்கி காத்திரமாகப் பயணிப்பதற்கான ஓர் பூர்வாங்க கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. கிழக்கின் ஈழத்தமிழரின் அரசியற் போக்கை நெறிப்படுத்த தேசப்பற்றுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து கொள்ள வேண்டும் என்ற கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களின் அபிலாஷையை முன்னிறுத்தி ஈழத் தமிழர் பேரவை குறிப்பிட்ட கலந்துரையாடலுக்கான அழைப்பை விடுத்திருந்தது. ஈழத்தமிழர் பரப்…
-
- 0 replies
- 252 views
-
-
இராணுவத் தீர்வை மட்டுமே விட்டு வைத்திருக்கும் மகிந்த: "த வோல் ஸ்றீற் ஜேர்னல்" சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தற்போது இராணுவத்தீர்வை மட்டுமே விட்டு வைத்திருப்பதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "த வோல் ஸ்றீற் ஜேர்னல்" ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவில் இனப்போர் கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்று வருகின்ற போதும் அரசு அதிகாரபூர்வமாக போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறியதனைத் தொடர்ந்து போரை வென்று விடுவோம் என அறைகூவல் விடுத்து வருகின்றது. மகிந்த அரசு வடபகுதியில் பெரும் சமரையும் ஆரம்பிக்கவுள்ளது. ஆனால் பல வழிகளில் இது ஆபத்தான விளையாட்டு. இதுவரை நடைபெற்ற மோதல்களில் 70,000-க்கும் மேற்பட்டோர் கொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜெனீவா விவகாரம்; கூட்டமைப்பு எம்.பி.க்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்தார் சம்பந்தன் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் பிரசன்னமாவதில்லையென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு அக்கட்சியின் பாராளுமன்றக் குழு ஏகமனதாக ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு பம்பலப்பிட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காரியாலயத்தில் முற்பகல் 11.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை நடைபெற்ற கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. கூட்டத்தொடரின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஜெனீவாவில் பிரசன்னமாகியிருப்பரென முதலில் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்டத் தொடர் தொடங்கு…
-
- 9 replies
- 1.1k views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் குறித்து தம்மால் எந்த முடிவையும் எடுக்க முடியாதென நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அரசாங்கமே அரசியல் கொள்கை ரீதியாக முடிவெடுத்து நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், அந்தத் தீர்மானத்தை சட்ட ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரப்பு அமைச்சே மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இதுதொடர்பில் நீதி அமைச்சர் கருத்துவெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் பேசுகையில், நாட்டில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்பதையும், பாரிய குற்றச்சாட்டுக்களில் கைதுசெய்யப்பட்டவர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் மீண்டும் வலியுறுத்துகின்றேன். இந்தக் கருத்த…
-
- 0 replies
- 674 views
-
-
இராணுவ சீருடைக்கு ஒத்ததான சீருடைகளை பயன்படுத்த தடை விதிக்கும் வகையிலான சட்ட திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற விதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இராணுவ சீருடைக்கு ஒத்ததான சீருடைகளை வைத்திருப்பதானது, தேசிய பாதுகாப்புக்கு சிறந்ததாக அமையாது என்ற அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சீருடை கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இராணுவ சீருடைகளை வைத்திருப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றமையினால…
-
- 0 replies
- 437 views
-
-
ஈழ இனப் படுகொலை இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் அவலம் - கவிஞர் சேரன் [ வியாழக்கிழமை, 08 மார்ச் 2012, 13:37 GMT ] [ புதினப் பணிமனை ] [சென்னையில் இருந்து வெளிவரும் 'காக்கைச் சிறகினிலே..' இலக்கிய மாத இதழில் [மார்ச். 2012] வெளிவந்த கவிஞர் சேரனின் நேர்காணலை அதன் முக்கியத்துவம் கருதி எமது தளத்தில் மீள் பிரசுரம் செய்கிறோம்.] ‘நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு’ என்று மிகச் சிக்கனமான வரிகளில் ஈழத்தில் நடந்த பேரழிவை எடுத்துச் சொல்லும் கவிஞர் சேரன் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்தவர். ஈழத்தில் நடந்த பல அதிகாரம் சார்ந்த அதிர்வுகளுக்கு எதிர்வினையான எழுத்துச் சாட்சியங்களாக இருக்கின்றன இவருடைய கவிதைகள். தற்போது கனடாவில் உள்ள வி…
-
- 1 reply
- 1.7k views
-
-
யாழ். தென்மராட்சியில் உள்ள மட்டுவில் சோலையம்மன் கோவிலடிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவால் நேற்று இரவு மூன்று சகோதரர்கள் வரிசையாக நிற்கவிட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 2.6k views
-
-
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை வடக்கு, வட மத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மாத்தளை மாவட்டங்களுக்கு சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்படி பகுதிகளில் எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசும் என்றும், இங்கு காற்றின் வேகம், 70 – 80 கி.மீ வரை செல்லக் கூடும் என்றும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 55 – 65 கிமீ வேகத்தை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் வேளைகளிலேயே இந்த நிலை இருக்கும் என்றும் தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், மன்னார், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை …
-
- 0 replies
- 476 views
-