ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143499 topics in this forum
-
ஊரடங்கு சட்ட நடைமுறையும் தேசிய அடையாள அட்டையும்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கம் ஊரடங்கு சட்ட நடைமுறையும் தேசிய அடையாள அட்டையும்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கம் ஊரடங்கு சட்ட நடைமுறையும் தேசிய அடையாள அட்டை இலக்க அடிப்படையில் அத்தியாவசிய நடமாட்ட ஏற்பாடுகளும் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை: கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மே மாதம் 04ஆம் திகதி, திங்கள், அதிகாலை 5.00 மணி வரையும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் – ஏப்ரல் 27, திங்கள், அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாள், இரவு 8.00…
-
- 0 replies
- 342 views
-
-
அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும் Dec 8, 2025 - 08:16 AM அனர்த்தங்கள் காரணமாக மன அழுத்த நிலைமைகள் ஏற்பட்டிருப்பின், தேசிய மனநல நிறுவகத்தின் 1926 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இவ்வாறான அனர்த்த நிலையின் பின்னர் அது எமது மனதை நேரடியாகப் பாதிக்கக்கூடும் எனவும், அதன் காரணமாக மக்களிடையே மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமாகக் காணக்கூடிய ஒன்று எனவும் ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ நிபுணர், பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார். நீங்கள் அத்தகைய அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால், முதலில் பிரச்சினையை அடையாளம் காண வேண்டும் …
-
- 1 reply
- 115 views
- 1 follower
-
-
சர்வ கட்சி கூட்டத்தை விஜயகாந்தும் புறக்கணிப்பு ஈழத்தமிழர் பிரச்சினைக்காக கருணாநிதி கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் தே.மு.தி.க. பங்கேற்காது என்று நடிகரும் கட்சித் தலைவருமான விஜயகாந்த தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில்; : ஈழத்தமிழர் பிரச்சiனைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் எங்களைப் போன்றவர்கள் கலந்து கொண்ட போது, 'ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களும், அரைகுறை ஆதரவாhளர்களும் கலந்து கொண்டார்கள்" என்று கருணாநிதி குறிப்பிட்டமை ஒரு சுமுக சூழ்நிலையை உருவாக்கக் கூடியதா? 1956 முதல் இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையாகப் பாடுபடுவது தி.மு.க.தான் என்று கருணாநிதி கூறிய பிறகு மற்றக் கட்சிகளுக்கு இதில் என்ன வேலை என்று கேட்பதாகத்தானே …
-
- 0 replies
- 1k views
-
-
[size=1][/size] [size=4]நவம்பர் மாதத்தை மாவீரர் மாதம் என கடைப்பிடிப்பது அவரவர் விருப்பமே என கனடா தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது. கனடாவில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முக்கிய அமைப்பான கனடியத் தமிழர் பேரவை, இதுவரையிலும் மாவீரர் மாதம் என்று ஒன்று கடைப்பிடிக்கவில்லை. இருபது வருடமாக இல்லாத ஒன்றை புதிதாக சிலர் ஆரம்பித்துள்ளனர். இப்படி ஒரு மாதத்தை கடைப்பிடிப்பது அவரவர் சொந்த விருப்பத்தற்குரியது. யார் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்க முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அறிவித்துள்ளனர். இது தொடர்பான அப்பேரவையின் அறிக்கை: கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. அதையொட்டிய வாரம் முழுவதும் உணர்வு பூர்வமான நிக…
-
- 55 replies
- 5k views
-
-
தமிழக அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளனர் – கோதபாய: தமிழக அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு குறித்த அரசியல்வாதிகளுக்கு புலிகள் லஞ்சம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தமிழக அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கோதப…
-
- 5 replies
- 1.5k views
-
-
eral 2009 மேயில் முடிவுக்கு வந்த முப்பது வருட கால யுத்தத்தின் போது இருந்ததிலும் பார்க்க யாழ்ப்பாணம் இன்று பாரிய மாற்றத்தைக் கண்டிருக்கின்றது. யுத்த காலத்தில் கூரைகள் அற்ற வீடுகள், ஷெல் துவாரங்களுடனான சுவர்கள், குன்றும் குழியுமான வீதிகளுடன் காணப்பட்ட அந்தப் பிரதேசம் இப்போது பகட்டான கட்டிடங்களுடனும் பொருட்கள் நிறைந்த கடைகளுடனும் ஹோட்டல்களுடனும் காபெட் போடப்பட்ட வீதிகளுடனும் காட்சி தருகின்றது. ஆனால் இந்தப் பிரகாசமான வெளிப்புறத் தோற்றம் வெளியிலிருந்து வந்த பணத்தின் மூலமே தோற்றுவிக்கப்பட்டிருப்பதுடன் இதற்குள் முடக்கப்பட்ட உள்ளூர் பொருளாதாரம் ஒளிந்திருக்கின்றது. வட மாகாண சபை பொருளாதார அபிவிருத்தியிலும் பார்க்க தீவிரவாத அரசியலில் அதிக ஆர்வத்தைக் கொண்டிருப்ப…
-
- 19 replies
- 1.5k views
- 1 follower
-
-
யாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது – யாழ் அரசாங்க அதிபர் பிரதீபன் பெருமிதம்! இந்த ஆண்டு யாழ் மாவட்டத்திற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களால் கிடைக்கப் பெற்ற சுமார் 7869.8 மில்லியன் ரூபாய்களில் சுமார் 6735.8 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது தலைமை உரையை ஆற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இவ் வருடம் நிறைவடைய உள்ள நிலையில் யாழ் மாவட்ட செயலகத்துக்கு பொது நிர்வாக உள்நாட்டல்கள அமைத்து மற்றும் ஏனைய அமைச்சுகள் மூலம் கிடைக்கப்பெற்ற…
-
-
- 2 replies
- 206 views
-
-
தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்கா படையினர் இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை மொத்தம் 1,099 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 7 ஆயிரம் படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.3k views
-
-
வறுமை, கடன் தொல்லைகளினால் தினமும் 11 பேர் தற்கொலை! - மஹிந்தவின் 'ஆசியாவின் அதிசயம்' இதுவா? ஐ.தே.கட்சி கேள்வி இலங்கையில் நாளாந்தம் 11 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'நாட்டை ஆசியாவின் அதிசயமாக மாற்றுவோம்' என்று கூறும்போது தற்கொலை வீதம் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்தத் தற்கொலைகள் அனைத்தும் வறுமை மற்றும் கடன் தொல்லைகள் காரணமாகவே இடம்பெற்றுள்ளன என்பதை பொலிஸ் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஸிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வியாழகிழமை இடம்பெற்ற வரவு - செலவுத்திட்ட உரை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே கபீர் ஹாஸிம் இவ்வாறு தெரிவித்தார். இந்த விவாதத்தில் அவர் தொடர்ந்து உரைய…
-
- 1 reply
- 311 views
-
-
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: மேலும் நான்கு ஆசிரியர்கள் கைது செல்வநாயகம் கபிலன் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது பாடசாலை மாணவியொருவருக்கு பாலியல் துன்புறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் இந்தச் சம்பவத்தை மூடிமறைப்பதற்கு முயற்சித்த அந்தப் பாடசாலையின் அதிபர் மற்றும் 3 ஆசிரியைகள் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழைமை (19) கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். …
-
- 7 replies
- 630 views
-
-
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயப் பொங்கல் விழா கிரிகை நிகழ்வுகள் மாத்திரமே இடம்பெறும் – மக்களுக்கு அனுமதியில்லை முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது.இந்நிலையில் குறித்த பொங்கல் விழா தொடர்பாக நேற்று புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் மாவட்டசெயலர் க.விமலநாதன், மேலதிக மாவட்டசெயலர் க.கனகேஸ்வரன், சுகாதாரப்பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் மணிவண்ணன் உமாமகள், கரைதுறைப்பற்று பிரதேசசபைின் செயலாளர், பொரலிஸார், இராணுவத்தினர், கோயில் நிர்வாகத்தினர் எனப்பலரும் கலந்திருந்துகொண்டனர். இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று அச்சம் காரண…
-
- 1 reply
- 455 views
-
-
கந்தரோடை விகாரை பெயர்ப்பலகை அகற்றம். யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் ” கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்” என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து , “கந்தரோடை விகாரை” என நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில் , தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் “கந்தரோடை விகாரை” என திசை காட்டும் பெயர் பலகை நடாத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கந்தரோடை விகாரைகள் அமையப் பெற்றுள்ளதாக கூறப்படும் , புராதன இடத்தினை , ” தொல்லியல் ஆய்வு மையம்” என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என பிரதேச சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை அடுத்து வீதிகளில…
-
-
- 3 replies
- 311 views
- 1 follower
-
-
வவுனியா, ஈரற்பெரியகுளம் பகுதியில் சிறீலங்கா காவல்துறை அதிகாரி ஒருவரால் கீழ்நிலை உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 1 reply
- 1.4k views
-
-
மல்லாவியிலும் மாணவி துஷ்பிரயோகம் -சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்று வருகின்ற மாணவியை, அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததாக குறித்த மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி மாணவியை அச்சுறுத்தி கடந்த 04 மாதங்களாக ஆசிரியர் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கி வந்துள்ளார். இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (26) மாணவிக்கு துன்புறுத்தல் கொடுத்த நிலையில், மாணவி எழுத்து மூலம் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஊடாக அதிபரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதிபர் இந்த விடயத்தை வலயக் கல்வ…
-
- 1 reply
- 304 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் முன்னாள் போராளிகள் யுத்தம் முடிந்ததன் பின்னர் பல வகையான இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தங்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உதவி கரமாக இருக்கவில்லையெனவும் முன்னாள் போராளிகள் கவலை தெரிவித்துள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில், நேற்று (19) நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், கடந்த ஆட்சிக் காலத்தில், முன்னாள் போராளிகளுக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் வரவு - செலவுத்…
-
- 5 replies
- 1.1k views
-
-
வன்னி படை நடவடிக்கையின் விளைவுகள் எதிர்காலத்தில் நிகழப் போகின்ற போரின் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகளாகவே கடந்தவார நிகழ்வுகள் தென்படுகின்றன. ஏனெனில் மேற்கு வன்னியின் வடக்குப்புறம் நிகழ்ந்த முன்னகர்வின் போது ஏற்பட்ட மூர்க்கமான சண்டைகளும், அதனால் ஏற்பட்ட பாரிய இழப்புகளும் மற்றும் வான்வழித் தாக்குதலில் புலிகள் கடைப்பிடித்த நவீன உத்திகளும். இப்போரின் இன்னொரு பரிணாமத்துக்குள் இட்டுச் சென்றிருக்கிறது. அரசபடைகள் கிளிநொச்சியை நோக்கி நகருவதாகவும் அதே வேளை மாங்குளத்திற்கும் முறிகண்டிக்கும் இடைப்பட்ட ஏ9 வீதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காகவும் மிகக் கடும் பிரயத்தனத்தைப் பிரயோகித்து ஏ9 வீதிக்கு சமாந்தரமாக ஆனால் நெருக்கமாக நிலை கொண்டிருக்கின்ற…
-
- 1 reply
- 1.2k views
-
-
தங்கம் எனக் கூறி போலி நகைகளை வங்கிகளில் அடகு வைத்தார் என்ற குற்றச்சாட்டில் நெல்லியடியில் ஒருவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் தங்கம் எனக் கூறி போலி நகைகளை 4 வங்கிகளில் 4 தடவைகள் அடகு வைத்து பணத்தைப் பெற்றிருந்தார். குறித்த நபர் 2010 ஆண்டு காலப்பகுதியிலேயே இவ்வாறு போலி நகைகளை அடகு வைத்து பணத்தைப் பெற்றிருந்தார். அது குறித்து தகவல் வங்களின் ஊடக நெல்லியடிப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் விசாரணைக்காக நீதிமன்றத்தில் சமுகமளிக்காத காரணத்தினால் அவருக்கு எதிராக பிடியாண…
-
- 1 reply
- 497 views
-
-
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவில் தீ கணினிகள் எரிந்து நாசம் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொறியியல் பிரிவில் நேற்று இரவு 8.10 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளுக்காக இரசாயன பகுப்பபாய்வாளர்களை அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் விஜேபால தெரிவித்துள்ளார். மின் ஒழுக்கினால் இந்த விபத்து சம்பவித்திருக்கலாம் என சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்தினால…
-
- 0 replies
- 204 views
-
-
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் உளவாளிகள் ஊடுருவல். தமிழரசுக் கட்சியின் இறுதிப் பொதுக்குழு கூட்டப்பட்ட போது சாணக்கியன் எம்.பி எமது கட்சியிலேயே இல்லை. தற்போது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள் உள் நுழைக்கப்பட்டுள்ளார்கள் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் சுமந்திரன் ஆதரவாளர்கள் தான் அதிகம் உள்ளனர். அவர்களால் புகுத்தப்பட்டவர்கள் தான் அங்கே அதிகம் உள்ளனர். பதில் செயலாளராக இருந்தவர்…
-
- 2 replies
- 214 views
-
-
-க. அகரன், நடராசா கிருஸ்ணகுமார் வவுனியா - செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளைப் பிடித்து, விவசாய நடவடிக்கை மேற்கொள்வதற்காக, படையினர் வேலியிட்டுள்ளார்களென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய காலாநிதி சிவமோகன் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இதற்கு நடவடிக்கை எடுக்காத வனவளப்பிரிவு, தமிழ் மக்கள் தங்களுக்கு உரித்தான காணிகளை அபிவிருத்தி செய்ய முற்படும் போது, அவர்களுக்கு இடையூறு செய்து, நீதிமன்றங்கள் மூலம் வழக்குத் தொடுத்து வருவது எதற்காக எனவும் வினவினார். அப்படி எனில், இலங்கையின் நீதி படையினருக்கு ஒன்றாகவும் தமிழ் மக்களுக்கு ஒன்றாகவும் உள்ளதா என்பதை உரியவர்கள் தெளிவுபடுத்த வேண்டுமெனவும், அவர் கூறினார். h…
-
- 1 reply
- 516 views
-
-
சுவிஸ் தூதரக ஏற்பாட்டில் தமிழ்த்தரப்புக்களுக்கு இடையில் நடைபெறவிருந்த சந்திப்பில் இழுபறி நிலை - பிறிதொரு தினத்துக்குப் பிற்போடப்படும் சாத்தியம் Published By: Vishnu 10 Feb, 2026 | 02:45 AM (நா.தனுஜா) இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவிருந்த சந்திப்பில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும், எனவே அச்சந்திப்பு பிற்போடப்படக்கூடும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்…
-
- 0 replies
- 97 views
- 1 follower
-
-
இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை! [Tuesday, 2012-12-04 07:46:41] அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு புதிய சட்ட சவால் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நாடுகடத்தப்படவிருந்ததாக கூறப்படும் 56 இலங்கையர்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சிட்னி நீதிமன்றம் குறித்த இலங்கையர்களின் நாடு கடத்தலுக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.இந்த தடையுத்தரவு நாளை மறுநாள் வியாழக்கிழமை வரை அமுலில் இருக்கும். இதன் பின்னர் மீண்டும் நீதிமன்ற விசாரணைகள் நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அகதிகளுக்கான நடவடிக்கைக்குழு என்ற அமைப்பு அகதிகள் சார்பில் இந்த இடைக்கால தடையுத்தரவு மனுவை தாக்கல் செய்தது. எனினும் குறித்த இலங்கையர்கள் நாடுகடத்தப…
-
- 0 replies
- 476 views
-
-
மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் வெடி கொழுத்த 10 ஆயிரம் கட்டணம். மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் இடம்பெறும் மரணச் சடங்கிற்கு வீதியில் வெடிகளை கொழுத்தவேண்டுமாக இருந்தால் சபைக்கு 10 ஆயிரம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் க.ஜெசீதன் தலைமையில் இடம்பெற்ற நிலையில் இந்த பிரேரணையை தவிசாளர் கொண்டுவந்த நிலையில் , தீர்மானிக்கப்பட்டது. மேலும், தவிசாளர் தனது பிரேரணையில் கருத்து தெரிவிக்கையில், மரணச் சடங்குகளின் போது வீதிகளில் வெடி வெடிப்பதால் வீதிகள் அசுத்தமடைகின்றன. அவற்றை பிரதேச சபையே சுத்தம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. எனவே அந்த குப்பைகளை சுத்தம் செய்வதற்காக நாங்கள் குறித்த வெடிகளை வெடிப்பவர்களிடமிருந்த…
-
- 2 replies
- 142 views
- 1 follower
-
-
வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படைக்கும் - கடற்புலி களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலானது அண்மையில் வடக்கு கடற்பரப்பில் நிகழ்ந்த மோதல்களில் குறிப்பிடத்தக்கதும் சில விசேடித்த முக்கியத்துவம் கொண்டதுமாகும். இம் மோதலில் சிறிலங்காக் கடற்படையின் சில புதிய விசேட படையணி கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாகச் சிறிலங்காக் கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த விசேட படகு அணி, விரைவுத் தாக்குதல் அணி என்பன பயன்படுத்தப்பட்டிருந்தன. இக்கடற்படையணிகள் கரையோரப் பாதுகாப்பிற்கெனவும் ஆழம் குறைந்த கடற்பரப்புக்களில் அதாவது கரையோரத்திற்கு அண்மித்த பகுதிகளில் மோதல்களில் ஈடுபடுவதற்கெனவும் உரு வாக்கப்பட்டவையாகும். இப்படையணியில் சிறிலங்காக் கடற்படைத்தரப்பு பெரும்…
-
- 0 replies
- 2.8k views
-
-
ஸ்ரீலங்கா அரசுக்கு அடித்த லொத்தர்! நிரூபித்துக்காட்டிய சம்பந்தன் கொரோனா தொற்று உலகம் முழுவதும் திணறடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்ரீலங்காவில் அதன் தாக்கம் குறைவடைந்து வருவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதற்கிடையில், பொதுத் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில், அனைத்து தரப்பினரும் தேர்தலை நோக்கி ஓடத் தொடங்கியிருக்கிறார்கள். உண்மையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்வது என்ன? தமிழ் தேசிய கூட்டமைப்பு காபந்து அரசின் பிரதமருடன் பேசியதன் வாயிலாக நிரூபித்துக்காட்டியது யாது? இவை தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் மிக விரிவான விளக்கத்தினை எமது நிலவரம் நிகழ்ச்சியில் வழங்கியிருக்கிறார், இது தொட…
-
- 2 replies
- 594 views
-