ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142785 topics in this forum
-
தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் ஐயா சிறு நோய் காரணமாக இன்று பி.ப 5,மணிக்கு கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். https://thinaseithy.com/தீவிர-சிகிச்சை-பிரிவில்/?fbclid=IwAR0vhRmomAFO9SVWaeSKJsLcb1JeKUHO_VBTCqadcG4pRzdMcWQRhKMQKTE
-
- 6 replies
- 1.5k views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிய சிறிலங்கா அரசாங்கம் அடுத்த சில நாட்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யவும் தீர்மானித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்திருப்பதாக சிங்கள வார ஏடான "லங்காதீப" செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் அயர்லாந்துபிரதமர் மேரி ரொபின்சன் கோரியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புவிசாரணை நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மனிதத்திற்கு எதிராக இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட குற்றச்செயல்களை வெறுமனே உதாசீனம் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம்ஏற்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உதவிகளைவழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் நல்லிணக்கத்தைஏற்படுத்தல் ஆகியன நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த மகிவும் …
-
- 0 replies
- 809 views
-
-
புலிகள் காலத்தில் வடக்கிலிருந்த பாதுகாப்பு இன்றில்லை : சித்தார்த்தன் எம்.பி வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இருந்த பாதுகாப்பு தற்போது இல்லை என்று தெரிவித்துள்ள புளொட் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் அப்போது சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அக்காலத்தில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கும் எந்த வித அச்சமுமின்றி பெண்கள் தனியாக செல்லக்கூடிய நிலமை இருந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர் அவர்களின் பாதுகாப்பு அன்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நிலமை இன்று இல்லாமைக்கு வடக்கில் சட்டம் ஒழுங்கு சரியான முறையில் கடைப்பிடிக்காமையே காரணம் என்றும் அவர் சுட்டிக்…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
அடுத்த மாதம் 5 ஆம் நாள் அவசரகாலச் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முடிவு செய்ய பெருமளவில் இடமுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
(Lanka-e-News-02.March.2012, 10.30PM) The Sri Lanka (SL) regime chief Mahinda Rajapakse is having highly secretive discussions with a group of representatives of a European State who had cordial relations with SL during the period of the SL war, in regard to methods and means to extricate himself from the US recommendations that are scheduled to be brought before the human rights conference now in progress in Geneva, according to reports reaching Lanka e news from sources within the Temple trees. These discussions had been taking place yesterday and day before late in the nights after the employees of Temple Trees have gone home after work. The E…
-
- 4 replies
- 1.4k views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டிய ஒன்று நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் நீதிக் கட்டமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். இவ்வாறு சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.சீ.வெலியமுன தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஜெனிவா தீர்மானத்தின் பின் என்ற பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் பெரும் தடையாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்த எனது நிலைப்பாடும் அரசின் நிலைப்பாடும் ஒன்றல்ல. அது குறித்து அரசு எவ்வாறு தீர்மானிக்கும் என்பதைக் கூற முடியாது என்று…
-
- 0 replies
- 325 views
-
-
ஞாயிறு 20-01-2008 01:56 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] மன்னாரில் ஆட்கடத்தல்கள் அதிகரிப்பு கடந்த மூன்று கிழமைகளில் மன்னாரில் 5 பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களுள் ஒரு வர்த்தகரும், ஒரு பெண்ணும் அடங்குவர். அவர்களுள் இரண்டு பேருக்கு மர்ம தொலைபேசி அழைப்பில், குறிப்பிட்ட இடத்திற்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு சமூகமளிக்கும்படி தெரிவிக்கப்பட்டதாகவும், அதையடுத்து அவர்கள் காணாமல் போனதாகவும் தெரிய வருகின்றது. முன்னோடி வர்த்தகரும், சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவருமான 54 வயதுடைய சூசைப்பிள்ளை அன்ரன் அவர்கள் வவுனியாவிற்கு உந்துருளியில் செல்லும் வழியிலேயே கடத்தப்பட்டுள்ளார். இதேபாணியில் இளம் விதவையான ரொசானி அருள்வாசகம் என்பவரும் கடத்தப்பட்டுள்ளார். காணாமல் போன ரொ…
-
- 1 reply
- 761 views
-
-
யாழ்.சாவகச்சேரி முருகன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று படைவீரர்கள் பலியாகியதை தொடர்ந்து அந்த பிரதேசத்தில் பதற்றநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற இடத்திலுள்ள படை முகாமைச் சூழ படையினர் குவிக்கப்பட்டு இருப்பதோடு முகாமிற்கு அருகில் உள்ள பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறலாம் எனக் கருதியே இந்த இடத்தை விட்டு பொதுமக்கள் வெளியேறிவருகின்றனர். இதேவேளை படைமுகாமில் உள்ள இராணுவப் பரிவினரை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பில் இராணுவத்தினருக்கிடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளதாக இராணுவத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.. மேலதிக தகவல்கள் விரைவில்.... http://akkinikkunchu.com/new/index…
-
- 3 replies
- 1.5k views
-
-
புதிய அரசியலமைப்பை நோக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியாயமான முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தயாராகவே இருப்பதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கருமமொழிகள் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அனைத்துத் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் மாநாடு ஒன்றை உடன் கூட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். புதிய அரசியலமைப்புக்கான கலந்துரையாடல் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்துக்களை தான் ஏற்றுக்கொள்கிறேன். அரசாங்கத்தின் பிரதான பங…
-
- 1 reply
- 439 views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் தளபாட வியாபாரிகளான சிங்களவர்கள் இருவர் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 906 views
-
-
-
-
-
- 24 replies
- 1.7k views
- 1 follower
-
-
இந்த அரிய ஆவணத்தை குளோபல் தமிழ்ச் செய்திகள் இங்கே மீள்பதிவு செய்கிறது. ஆகஸ்ட் 22 ஆம் திகதி எழுதப்பட்ட தங்களது கடிதம் கிடைக்கப்பெற்றேன். அக்கடிதத்துடன் இணைக்கப் பட்டிருந்தவைகளைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். இந்திய ஜனதாக் கட்சி அரசாங்கம் நடப்பு இலங்கை அரசுக்கு ஆதரவாக இருக்கும் முகமாகத் தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் துன்பங்களை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ள அவர்கள் விரும்புவார்கள் என நான் கருதவில்லை. இன்றைய நிலையில் எங்களது எல்லாக் கவனமும் தேர்தலில்தான் இருக்கிறதேனினும் வேறு ஏதேனும் ஒரு வழியில் இப்பிரச்சினையைப் பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கான சாத்தியம் இருக்கிறதா எனப் பார்க்கிறேன்.. இப்படிக்கு உங்கள் உண்மை…
-
- 9 replies
- 2.6k views
-
-
நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அரசியலுக்கு ஏதாவது ஒரு தரநிலை இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். நம் நாட்டுக்கு அரசியலில் ஒரு தரம் வேண்டும். அரசியல்வாதி நினைத்ததைச் செய்யலாமா? இல்லை. அதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது. அரசியல்வாதி ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் செயல்பட வேண்டும். அரசியல்வாதி சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். அரசியல்வாதி நாகரீகமான சட்டத்தில் இருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத வாகனங்கள், சுங்க…
-
- 1 reply
- 200 views
- 1 follower
-
-
அனைத்துலக மன்னிப்புச் சபை பக்கசார்பாக நடந்து வருவதாக சிறீலங்கா அரச கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையையும், அதனது பொதுச் செயலாளர் ஐறின் கானையும் வன்மையாகக் கண்டித்த சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல, மன்னிப்புச் சபையின் பக்கசார்பான நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார். சிறீலங்கா அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டுமென அனைத்துலக மன்னிப்புச் சபை அழுத்தம் கொடுத்து வருகின்றது. இதேபோன்ற கருத்தினை நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற உலகின் முன்னணி அமைப்புகள் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதால், ஆத்திரமடைந்த …
-
- 1 reply
- 1.2k views
-
-
தோழர் சேரனுக்கு, உங்கள் கருத்துடன் முரண்பட நேர்ந்தமைக்கு வருந்துகிறேன். இன்று 0 மட்டத்தில் (ground zero) வீழ்துகிடக்கும் களத்தில் உள்ள எமது மக்களின் விடிவுக்காக புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் சூரியனின்கீழ் அவசியமான சகல ஆட்டங்களையும் ஆடியே ஆகவேண்டும். அது எருமை ஆட்டம் மட்டுமல்ல அதற்க்குக்கீழேபோய் நாய் ஆட்டம் நாரி ஆட்டமாக இருப்பினும் நாம் ஆடியே ஆகவேண்டும் என்பது என்று வலியுறுத்துகிறேன். நீங்கள் எங்களுக்கு பல தெரிவுகள் இருக்கின்றது என்று கருதுகிறீர்களா? நாம் வெறென்ன செய்யலாம். செய்யவேண்டும்? நமக்கு இதைவிட வலுவான மாற்று வழிகள் இருந்தால் மட்டுமே நீங்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கலாம். நான் ஒரு சமூக விஞானியோ அறிஞனோ இல்லை. ஆனாலும் நாம் ஒரு இன்மாகத் தப்பிப் பிழ…
-
- 12 replies
- 2.4k views
-
-
தமிழ்ப் பெயர்கள் அகற்றப்படும் : ராவணாபலய ஆவேசம் யாழ்ப்பாணத்தில் நாகதீப என்ற பெயரை, நயினாதீவு என்று பெயர்மாற்றம் செய்தால், கண்ணில் தென்படுகின்ற அனைத்து தமிழ் வீதிகளின் பெயர்ப் பலகைகளையும் தகர்த்தெறிவோம் என்று ராவணாபலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தன்கந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். பௌத்தர்களின் புனித தீவான யாழ்ப்பாணம், நாகதீப என்ற பெயரை நயீனாதீவு என்று பெயர் மாற்றம் செய்ய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முயற்சித்து வருகிறார். தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தாம் சிறை செல்லக் காரணமானவர்களை கொலை செய்வதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றனர். குறிப்பாக, யுத்தத்தை முன்னின…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கைத் தமிழர்களின் "தமிழர் தாயகம்' குறித்து பகிரங்க விவாதமொன்றிற்கு வருமாறு அமெரிக்காவின் முன்னாள் உதவி சட்டமா அதிபர் புருஸ் பெய்ன் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பேர்னாட் குணத்திலகவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். பேர்னாட் குணதிலகவிற்கு தாம் எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: தமிழ், தாயகம் தொடர்பாக பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் என்னுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட முன்வருமாறு அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வது போலஇ இலங்கை அரசு தமிழர்களை முதல்தர பிரஜைகளாக நடத்துகிறதென்றால் அவர்களுக்கு குறைபட்டுக் கொள்வதற்கு எதுவுமில்லை யென்றால் தனி நாடா அல்லது ஐக்கியமா என்பதை தமிழ் மக்கள் வெளிப்படுத்துவதற்…
-
- 7 replies
- 2.6k views
-
-
பிளவுபட்டுள்ள சிங்கள, தமிழ் மக்களிடையில் நல்லிணக்க பாலத்தை ஏற்படுத்துவதே இலங்கைக்கு நன்மை பயக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு சென்றிருந்த அவர், செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். தற்போதைய இலங்கை அரசாங்கம் இரண்டு சமூகங்களுக்கு இடையிலும் நல்லுறவை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக நல்லிணக்க சபையின் தலைவியாக செயற்பட்டு வரும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார். 'இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பிளவு உள்ளது. பாடசாலைகளும் இரண்டு சமூகங்களுக்கும் வெவ்வேறாக உள்ளன. இந்தநிலையில் இந்தியாவைப் போன்ற ஆங்கில மொழிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டிருந்தால் அது இரண்டு சமூகங்களுக…
-
- 1 reply
- 1.5k views
-
-
‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை ஆரம்பம். ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்திற்கான புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து இன்று மாலை 3.55 மணிக்கு புறப்படும் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது. அத்துடன், குறித்த ரயில் இரவு 10.16 காங்கேசன்துறையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டுஇ யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டையினை காலை 10.24 மணிக்கு ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ வந்தடையவுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்…
-
- 23 replies
- 2.2k views
-
-
22 NOV, 2024 | 11:01 AM இலங்கை அதானிகுழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட ஏழு பேருக்கு எதிராக அமெரிக்கா மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தி பிடியாணை பிறப்பித்துள்ளது. இலங்கையில் நிகழ்ந்த ஊழல்கள் குறித்த விபரங்கள் வேறு நியாயாதிக்கங்களில் அம்பலமாவதை பார்த்திருக்கின்றோம் என கொழும்பை தளமாக கொண்ட வெரிட்டே ரிசேர்ச்சின் நிறைவேற்று பணிப்பாளர் நிசான் டி மெல் தெரிவித்துள்ளார். சிலவருடங்களிற்கு முன்னர் பிரிட்டனில் இடம்பெற்ற விசாரணையின்போது எயர்பஸ் நிறுவனத்திடமிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்சிற்கான எயர்பஸ் கொள்வனவில் மோசடிகள் ஊழல்கள் …
-
- 1 reply
- 189 views
- 1 follower
-
-
தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி; அரசாங்கம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு [ Sunday,29 November 2015, 02:52:02 ] வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் துறை அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதிக்கு என்ன நடக்கின்றது என்பது தொடர்பாக ஆராய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தேயிலைத் தோட்டங்களில் தேயிலை பறிப்பதில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும் ஆனால் தேயிலை செடிகளுக்கு உரம் போடுதல், களைகளை அகற்றுதல் போன்ற விடயங்களிலும் தொழிலாளர்களின் நலன்களிலும் கவனம் செலுத்தப்படுவதில்லை என சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் பெரியசாமி பிரதீபன் குற்றம் சுமத்தியுள்ளார். மலையகத்தின் சில பிரதேசங்களில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைகள்…
-
- 0 replies
- 515 views
-
-
வெளியார் தலையீட்டை ஏற்கமுடியாது – ஜெனிவாவில் சிறிலங்கா திட்டவட்டம் Sep 12, 2019 | 4:26by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் உள்நாட்டு முடிவுகள் தொடர்பாக வெளிச் சக்திகளின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நடந்து வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டது குறித்து, இணை அனுசரணை நாடுகளும், பல அனைத்துலக அமைப்புகளும் கவலை வெளியிட்டிருந்தன. குற்றச்சாட்டுக்குள் உள்ளாகியிருக்கும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டது…
-
- 1 reply
- 365 views
-
-
29 Nov, 2024 | 05:44 PM (நா.தனுஜா) வடக்கில் அநேக இடங்களில் வெள்ளநீர் வடிந்தோட இடமின்றித் தேங்கி நிற்பதால், அங்கு வாழும் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உருவாகியிருப்பதாகவும், எனவே இதற்குத் தீர்வுகாண்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் கடந்த ஒருவாரகாலமாக நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையாலும், வெள்ளத்தினாலும் வட, கிழக்கு மாகாணங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வடக்கின் வெள்ளப்பேரிடர் பாதிப்பு மற்றும் ப…
-
- 0 replies
- 128 views
-