ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143529 topics in this forum
-
முகமாலையில் சிக்கிய படையினர் [27 - April - 2008] விதுரன் வட போர்முனையில் படையினர் மீண்டுமொரு முறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகள் தொடர்பாக இராணுவ தலைமைப்பீடம் தொடர்ந்தும் தவறான கணிப்பைக் கொண்டிருக்கிறதென்பதை முகமாலை சமர் மீண்டும் நிரூபித்துள்ளதுடன், இந்தப் பின்னடைவானது வடபோர் முனையில் அடுத்துவரும் படை நடவடிக்கைகளைப் பெரிதும் பாதித்து விடப்போகின்றதென்பதையும் காட்டுகிறது. வன்னியில் வவுனியா, மன்னார், மணலாறு களமுனை நகர்வுகள் மிகவும் நீண்டு செல்கிறது. குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் அங்கு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற படையினர் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எட்டு கி.மீ. தூரத்திலிருந்த மடுவைச் சென்றடைய படையினருக்கு ஒரு வருடத்த…
-
- 0 replies
- 2.2k views
-
-
கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்த குடியாம் தமிழ்குடி தரணியெங்கும் தன்முனைப்புடன் வாழ்வது தானைத்தலைவன் வரவினாலே….! காலத்தால் அழியாத கல்லணை கண்ட கரிகாலன்… சரித்திரம் போற்றும் தஞ்சைப் பெருங்கோயில் அமைத்த ராசராசன்… ஈழஅரசமைத்து சிங்களத்தை சிதைத்த எல்லாளன்… யாழ்பாண இராச்சியம் ஆண்ட சங்கிலியன்… வணங்கா மண் வன்னியை மான்புடன் ஆண்ட பண்டாரவன்னியன்… ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தம்வீரத்தால் நல்லாட்சி தந்தவர்கள் அல்லவா இந்த மாமன்னர்கள். தடம்மாறிய பயணத்தால் ஈழத்தீவில் கால்பதித்தான் சிங்களன். பொருள்தேடி கடலோடிய மேலைத்தேயர்களது வருகை தாய் மண்ணை நிறம் மாற்றியது. வாள் கொண்டு வேல் கொண்டு எதிர்நின்ற பகை வென்று தரணியெங்கும் தமிழ்க் கொடி நாட்டிய வேந்தர்கள். இவர்க…
-
- 2 replies
- 2.2k views
-
-
அனைத்துலக அரசியலில் தீர்க்கமான ஞானம் கொண்ட பிரபாகரன், தனது அடுத்து நகர்வினை முன்னெடுப்பதற்கு அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். அந்தவகையில், சிறிலங்கா அரசின் தற்போதைய போருக்கு அடுத்த வருடமே புலிகள் பதிலளிப்பார்கள் என்று பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் எதிர்வு கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 2.2k views
-
-
A hard-hitting investigation into alleged war crimes in Sri Lanka drew more than 800,000 viewers to Channel 4 http://www.broadcastnow.co.uk/ratings/c4-sri-lanka-doc-draws-800000/5028759.article
-
- 14 replies
- 2.2k views
- 1 follower
-
-
ஈழப்பிரச்சினைக்கு மலையாளிகள் தான் காரணம் - திருச்சி வேலுச்சாமி ஈழப் பிரச்சினை தொடர மலையாளிகள் தான் காரணம் என்று திருச்சி வேலுச்சாமி கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையை அடுத்த மறைமலைநகரில் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்த உண்ணாவிரத்தை ஆதரித்து பேசிய திருச்சி வேலுச்சாமி, இலங்கையில் ஈழப் பிரச்சினை தொடர காரணம் மலையாளிகள் தான். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மத்தி ய அரசிடம் நாம் கோரிக்கை வைக்கிறோம். ஆனால்…
-
- 1 reply
- 2.2k views
-
-
வெள்ளியன்று பிலியந்தலை நகரில் பயணிகள் பஸ்ஸில் இடம் பெற்ற குண்டுவெடிப்பச் சம்பவம் குறித்து சங்கரி தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளான். சங்கரியின் செய்திக் குறிப்பில் : பிலியந்தலை குண்டு வெடிப்பில் அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர். இத்தகைய சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இரத்த வெறி பிடித்த ..............ன் மிலேச்சதனமான செயற்பாடு இது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. இத்தகைய காட்டு மிராண்டிகளுடனா பேச்சு நடத்த வேண்டும் என சர்வதேச சமூகம் வற்புறுத்தி வருகிறது? புலிகளுக்கு பயந்து தமது பூர்வீக இருப்பிடங்களை விட்டு ஓடி வந்து தென்னிலங்கையில் சிங்கள, இஸ்லாமிய மக்கள் மத்திய…
-
- 5 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாணம் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் FEB 21, 2015 | 12:12by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் அடுத்த மாதம் மூன்று நாள் பயணமாக சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் 13ம் நாள் சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பிக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மறுநாள், யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில், இந்திய பல்வேறு மீள்கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அத்துடன், சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்…
-
- 38 replies
- 2.2k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்யும். எனவே இதனை வரவேற்கின்றோம் என இடதுசாரி முன்னணியின் தலைவரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். ஆனால் தமிழர்களை அழிப்பதற்கு உதவிய அமெரிக்காவின் செயற்பாடுகள் இவ்விடயத்தில் எந்தளவிற்கு உண்மையாக அமையுமென்பதை கூற முடியாதென்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தினால் அந்நாட்டிலுள்ள உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியிலும், உலக உழைக்கும் வர்கத்தினர் மத்தியிலும் தமிழர் பிரச்சினைகளை கொண்டு செல்ல முடியும். ஆனால் மேற்குலகம் மீது எமக்கு நம்பிக்கை கிடையாது.…
-
- 13 replies
- 2.2k views
-
-
"தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. "தமிழர் பிரச்சினையை உலக அரங்கிற்கு கொண்டுசென்றவர்கள் மாவீரர்கள். எனவே, எத்தடைவரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து இந்தத் தியாகிகளை நாம் நவம்பர் 27ஆம் திகதி அமைதியான வழியில் நினைவுகூர்ந்து - விளக்கேற்றி அஞ்சலிப்போம்'' என்றும் கூட்டமைப்பு சூளுரைத்துள்ளது. மண் மீட்புப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மறவர்களை நினைவுகூரும் மாவீரர் தினம் நாளை 27ஆம் திகதி வியாழக்கிழமை உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள…
-
- 0 replies
- 2.2k views
-
-
சர்வதேச சமூகத்தின் ஆதரவு சமாதானத்துக்கா? சண்டைக்கா சர்வதேச சமூகம் தன்னிடமுள்ள பலமான சக்தியை உத்வேகத்தோடு பயன்படுத்தாமல் மென்போக்கு நிலையைக் கடைப்பிடிப்பதனாலேயே இலங்கை அரசு அதிகாரத்தனத்துடன் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகளையும் திட்டங்களையும் மேற்கொள்கின்றது. இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்கின்றார் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன். இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற அசிரத்தை போக்கையும் அவர் தோலுரித்துக் காட்டியிருக்கின்றார். இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமற்றது என்று சர்வதேச சமூகம் திரும்பத் திரும்பக் கூறுகின்றது. ஆனால்இ இராணுவத் தீர்வு முயற்சியில் முனைப்புக்காட்டிஇ வலிந்த படை நடவடிக்கைகளி…
-
- 8 replies
- 2.2k views
-
-
1987 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஒன்றாகும். சுதந்திரம் அடைந்த பின்னர் எமது நாடு வேறு எந்த ஒரு ஆண்டிலும் அவ்வாறு கீழான சிறுமைப்படுத்தலுக்கு உள்ளாகாத அளவுக்கு அந்த ஆண்டில் நாட்டின் மதிப்பு கீழ்த்தள்ளப்பட்டது. அந்த துரதிர்ஷ்டமான நிகழ்வு ஏற்படுவதற்குப் பெருமளவில் காரணமாக நமது தவறான செயற்பாடுகளே இருந்தன. அன்று ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கமும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட ஏனைய தென்பகுதிக் கட்சிகளும் தமது அரசியல் நடவடிக்கைகளை மிகுந்த தொலை நோக்குடனும் ஒற்றுமையுடனும் நடுநிலையுடனும் மேற்கொண்டிருந்தால் 1987 ஆம் ஆண்டில் நாம் அந்த அளவுக்கு ஆபத்தான அபத்தமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம். புதிய வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அந்த …
-
- 1 reply
- 2.2k views
-
-
-
விரைவில் விழித்துக் கொள்ளுங்கள். இலங்கை தமிழ் அரசு கட்சியை அழித்தவர் என்ற அவப்பெயரை வரலாற்றில் சூடிக் கொள்ளாதீர்கள் என காட்டமான கடிமொன்றை இரா.சம்பந்தனிற்கு அனுப்பி வைத்துள்ளார் இலங்கை தமிழர் அரசு கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு நேற்று (16) இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அரச ஆதரவு தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு அண்மையில் நேர்காணல் வழங்கிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வெற்றிபெற்ற கூட்டமைப்பு வேட்பாளர்கள் தனிப்பட்ட செல்வாக்கினால்தான் வெற்றிபெற்றார்கள், கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை, அப்படி வாக்களிததிருந்தால் கட்சித்தல…
-
- 42 replies
- 2.2k views
- 1 follower
-
-
தென்னாசியப் பிராந்தியத்தில் ஆழமாக கால்பதிக்கும் அமெரிக்கா! By naatham On 29 Mar, 2012 At 07:26 AM | அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்திய பாதுகாப்பு திட்டத்தின் ஒர் அங்கமாக ஒஸ்றேலியாவுக்க்கு சொந்தமான சொந்தமான கோக்கோஸ் தீவில் பாரிய கடற்படைத்தளத்தினை அமைக்கும் திட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட அமைக்கப்படவுள்ள இந்தக் கடற்படை தளத்துக்கான அனுமதியை அமெரிக்காவாவின் நாடாளுமன்றம் வழங்கியுள்ளது. ஒஸ்றேலியாவின் டார்வின் தீவிலும் அமெரிக்கப்படைகளை நிலைநிறுத்துவதற்கான தளம் ஒன்று அமைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒஸ்றேலியாவின் கோக்கோஸ் தீவில் இந்தப் பாரிய படைத்தளம் உருவாகின்றது. அமெரிக்க அரசுத் தலைவர் …
-
- 0 replies
- 2.2k views
-
-
இளங்கோவன் அரவணைப்பில் 5917 குழந்தைகள். இன்றைய திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகில் உள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் வானம் பார்த்த பூமியில் பெரும்பாலும் வறட்சியை மட்டுமே பயிர் செய்துவந்த விவசாய குடும்பத்தில் கு. குழந்தைசசாமி- சுப்புலட்சுமி தம்பதியருக்கு பிறந்தவர்தான் இளங்கோவன். இளங்கோவனுக்கு அன்று முதல் இன்று வரை பிடித்த ஒரே விஷயம் படிப்புதான். ஆனால் படிப்பதற்காக அவர் பட்ட பாட்டை தெரிந்து கொள்ளும் யாருக்கும் கண்களில் ரத்தம் கசியும். பள்ளிப்படிப்பை தொடர்வதற்கே ஏழு கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் செல்லவேண்டிய நிலை. சொந்தமாக 120 ரூபாய் கொடுத்து சைக்கிள் வாங்கமுடியாத சூழல். இதனால் வாடகை சைக்கிளில் சென்று வந்தார். அந்த சைக்கிள் வாடகையை கொடுப்பற்காக வாரவிடுமுறை…
-
- 5 replies
- 2.2k views
-
-
ஐ. நா. அறிக்கைக்கு எதிராக பாரிய நடவடிக்கை: அயல் நாடுகளுக்கு பறக்கும் சிறப்பு தூதுவர்கள் வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 17, 2011 மஹிந்த இராஜபக்ஷ, கோத்தபாய இராஜபக்ஷ, பேராசிரியர் பீரிஸ் உட்பட பல முக்கிய புள்ளிகள் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக மிகப்பெரும் முறியடிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். இதன் படி முதலாவது சீனா, இரஸ்யா ஆகிய நாடுகளின் உதவியினை நேரடியாக உத்தியோக பூர்வமாக கேட்பது. அடுத்ததாக நடு நிலை நாடுகளுக்கு விசேட சிறப்பு தூதுவர்களை உடனடியாக அனுப்புவது. மூன்றாவதாக அணி சேரா நாடுகளுக்கு ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர்களை அனுப்பி ஐக்கிய நாடுகளுக்கு கண்டன கடிதங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்வது. இதன்படி இந்தியா, பாகிஸ்தான், இந்தோனே…
-
- 11 replies
- 2.2k views
- 1 follower
-
-
புலிகளுக்கு பணம் கொடுத்த ஒருவரை கைது செய்த அரசு ஏனைய மூவரையும் என்ன செய்யப் போகின்றது [05 - June - 2007] * ரணில் கேள்வி எழுப்புகிறார் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, மகிந்த ராஜபக்ஷ சார்பில் பெருந்தொகை பணத்தை விடுதலைப் புலிகளுக்கு வழங்குவதில் இடைத் தரகர்களாக செயற்பட்டவர்களில் ஒருவரை மட்டும் கைது செய்துள்ள அரசு ஏனைய மூவர் தொடர்பில் என்ன செய்யப் போகின்றதென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெ…
-
- 0 replies
- 2.2k views
-
-
வன்னியில் நிலம் விழுங்கியபடி முன்னேறும் சிங்களப்படையின் நகர்வால் ஊக்கம் பெற்றுள்ள மகிந்தஅரசு போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. போரில் சிங்களப்படைகள் வெற்றிநடை போடுகின்றன என்று மகிந்தஅரசு பிரகடனங்களை விடுவித்து வருகின்றது. மேலெழுந்தவாரியாகப் போரை ஆய்வு செய்வோரும் - புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்று விரும்புவோரும் மகிந்த அரசின் வெற்றிப் பிர கடனங்களை நம்புகின்றனர். கண்ணால் காண்பதும் பொய் - காதால் கேட்பதும் பொய் - தீரவிசாரிப்பதே மெய் என்ற அனுபவ வாக்கியம் போர் நடைமுறைக்கும் பொருந்தும். போரில் பல்வேறு விதமான போக்குகள் காட்டி எதிரியை ஆழஉள்ளிழுத்து - அழிக்கும் வல்லமையுடனேயே புலிகள் இயக்கம் உள்ளது. வன்னிநில அமைப்பும் - புலிகளின் படைவலுவும் இணைந்து இந்தப் போர்க்களப்புரட்ச…
-
- 0 replies
- 2.2k views
-
-
கையாலாகத தமிழனாக இருப்பதற்கு வெட்கமும் வேதனையும் இருக்கிறது.. தவறை திருத்தி கொள்ள ஆசை படுகிறோம். எவ்வாறு என்று தெரியவில்லை? செவ்வாய், 13 ஜனவரி 2009, 20:04 மணி தமிழீழம் [] இக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்றுஎட்டிப்பார்க்
-
- 0 replies
- 2.2k views
-
-
நியூயார்க்: கருணா கும்பலுக்கு சிறுவர்களைப் பிடித்துத் தரும் வேலையில் இலங்கை ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து போன கருணா தலைமையில் ஒரு கும்பல் அங்கு செயல்பட்டு வருகிறது. இலங்கையின் கிழக்குப் பகுதியில் சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் இவர்களுக்கு இலங்கை ராணுவம் முழு ஆதரவும் ஆயுதமும் தருகிறது. இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பு வளையத்தின் கீழ்தான் கருணா கும்பலும் செயல்பட்டு வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றார் கருணா. அவருடன் சிறு அளவிலான வீரர்களும் உடன் சென்றனர். அதன் பின்னர் அவர்களைப் பயன்படுத்தி ராணுவம் புலிகள் மீது தாக்குதல் ந…
-
- 8 replies
- 2.2k views
-
-
ரூபவாயினியில் பொய் போர்ச்செய்தி சொல்பவர் வன்னியில் இடம்பெய்ர்ந்தவர்களின் உடமைகளை திருடியது அம்பலம்,இவர் தெற்கில் ஒரு பிரபலாமான ஒரு ஊடகவியலாளராவர் இவர் இடம்பெயர்ந்த வன்னி மக்களின் ஐந்து மடிக்கணனி மற்றும் ஒரு டிஜிட்டல் கமரா உட்பட பெருமளவு பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார், இவரை விடுவிக்க தற்போது அமைச்சர் மற்றும் மகிந்த மட்டத்தில் வேலை நடக்குதாம் .... மேலதிக செய்திகள் விரைவில்................. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 7 replies
- 2.2k views
-
-
மாவீரருக்கு செய்வோம் வீரவணக்கம்!! இன்று புலத்திலும் களத்திலும் நடந்துகொண்டு இருப்பது என்ன? அந்நியனும் சிங்களமும் இன்று வெற்றி திளைப்பில் இருக்கிறான் நாமோ பல தளபதிகளைய்ம் ஆயிரக்கணக்கில் போராளிகளையும் இழந்ததால் இடிந்து போய் இருக்கிறோம் யுத்தம் முடிந்த உடனேயே தலைவனை கொன்றோம் பொட்டரை கொன்றோம் என்றது தளபதிகளை நய வஞ்சயமாக கொன்றது ஆனால் எம் சூரிய புதல்வனை தொட முடியவில்லை தலைவனை கொன்றதாக சொல்லும் சிங்களம் முதலில் ஒரு பொம்மையினை வைத்து உலகினை ஏமாற்ற நினைத்தது Plastic Surgery பிழைத்ததுக்கான காரணம் தனது Video Clip என்று உணர்ந்தது அது பிசகி போகவே இன்று இன்னொரு விதமான இனொரு செட் படங்களை வெளியிட்டது அதில் தாடி முளைத்துவிட்டது காலையில் clean ஆக இருந்த முகம்…
-
- 3 replies
- 2.2k views
-
-
அன்புள்ள அண்ணா! - மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம் நக்கீரன் அண்ணாவுக்கு, முல்லைத் தீவிலிருந்து அதீதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)ங்கிற 14 வயசு பொண்ணு எழுதறேன். நல்லாயிருக்கீங்களா? நாங்க இங்கு நல்லயில்லையண்ணா. 'நல்லாயிருக்கீங்களா... எப்படி இருக்கீங்க'ன்னு கேட்க எந்த ஒரு சனமும் இல்லையண்ணா. நல்லாயிருக்கீங்களான்னு ஒரு வார்த்தையை எங்க செவிகள் கேட்டு ரொம்ப நாளாச்சு. எங்கிருந்தாவது அந்த வார்த்தை ஒருமுறை எங்க செவிகள்ல விழாதான்னு ஏங்கிக் கிடக்கிறோமண்ணா. உக்கிரமான போர் முடிஞ்சதும் வவுனியா முகாமுக்குள் நாங்க அடைத்து வைக்கப்பட்டோம். நாங்கன்னா...நான், என் அம்மா, என் தாத்தா, என் அண்ணா. எங்க அப்பா (சந்திரேசன்) போரில் வீர மரணம் அடைஞ்சிட்டாரு. கதிர்காமம் முகாமுலதான் …
-
- 21 replies
- 2.2k views
-
-
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மூன்று இணைந்து தமது நாடுகளில் செயற்படும் விடுதலைப்புலிகளை கைது செய்ய கூட்டு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு தகவல்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாலியில் அண்மையில் அதிகளவான விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டதை அடுத்து இவ்வாறான நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள குறித்த ஐரோப்பிய நாடுகள் மூன்றும் திட்டமிட்டுள்ளதாக அந்த ஊடகம் கூறுகிறது. குறித்த ஐரோப்பிய நாடுகளின் காவற்துறையினர் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இத்தாலியில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் சம்பந்தமான விசாரணைகளுக்கு உதவும் நோக்கில் அமைச…
-
- 0 replies
- 2.2k views
-
-
திருக்கோணமலை வர்சா கொலை வழங்கின் சந்தேக நபர்கள் அண்மைக்காலத்தில் திருக்கோணமலை யில் நடைபெற்ற பல்வேறு கடத்தல்கள், கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. சுமார் 35 குற்றச்சாட்டுகளுக்கு தாங்கள் பொறுப்பேற்றதாக அவர்கள் காவற்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். தங்களால் கொல்லப்பட்ட படமாளிகையின் முகாமையாளர் ஒருவரையும், பேரூந்து நடத்துனர் ஒருவரையும் படகில் கொண்டு சென்று கடலில் வைத்து கொலை செய்து கடலில் சடலத்தை போட்டுவிட்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனார்த்தனின் உதவியுடன் இவைகள் செய்ப்பட்டதாக அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவ்விடயத்தை ஜனார்த்தனன் மறுத்துள்ளார். http://www.tamilskynews.com/ http://ww…
-
- 0 replies
- 2.2k views
-