ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
தமிழருக்கு காங்கிரஸ் இழைக்கும் துரோகம் : இந்திய இணையம்: பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சை 'அதிகபட்சமானது', 'தேவையற்றது' என்று கூறியுள்ள இந்தியா, ஏராளமான மக்கள் கொல்லப்பட்ட அத்தாக்குதலை கண்டித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் தென் பகுதி மீது ஹமாஸ் போராளிகள் (இஸ்ரேலைப் பொறுத்தவரை பயங்கரவாதிகள்) நடத்திய ராக்கெட் தாக்குதலில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை முதல் காசா பகுதி மீது இஸ்ரேலிய விமானங்கள் சரமாரியாக பறந்து குண்டு வீசி வருகின்றன. இதில் 300க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலைக் கண்டித்துத்தான் திங்கட்கிழமை மாலை நமது அயலுறவு அமைச்சகம் ஒரு கண்டன அறிக்கை வெளிய…
-
- 2 replies
- 2.1k views
-
-
விக்கிலீக்ஸ்' (www.wikileaks.org).ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட நம் ஊர் ஏ.வி.எம் ஸ்டுடியோஸிற்கு அடுத்தப்படியாக சொன்ன தேதி தவறாமல் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு, அதிரடித் திருப்பங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்கள். வழக்கம் போல நாம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய/பழையத் தகவல்கள் குறித்து இங்கு பேசப்போவதில்லை, விக்கிலீக்ஸ் எப்படிக் கட்டமைக்கப் பட்டது, அதன் வரலாறு, எவ்வாறு செயல்படுகிறது, இணையத்தளத்தின் பாதுகாப்பு, அதில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து இத்தொடரில் விரிவாகப் பார்ப்போம் விக்கி' என்பது வருவோர், போவோர் என் யார் வேண்டுமானாலும் பங்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இணைய…
-
- 13 replies
- 2.1k views
-
-
விடுதலைப் புலிகளின் தோல்வி தமிழர்களுக்கு விடுதலை தரும்? [25 - October - 2008] [Font Size - A - A - A] விக்டர் ஐவனின் குத்துக்கரணம் அரசாங்கத்தின் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளினால், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவர், அழிக்கப்படுவர், அதனால் தமிழர்கள் பயனடைவர் என்ற வாதம் தெற்கில் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளின் நலன்கள் குன்றுகின்றன என்று கருதப்படுவதால் இச்சிந்தனை பிறந்துள்ளது. தனது பத்திரிகைக் கட்டுரையில் விக்டர் ஐவன் கூறியுள்ள கருத்தின்படி, விடுதலைப் புலிகள் தோல்வியைத் தழுவுவதால் யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இது தமிழர்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை என்று கூறுகிறார். விடுதலைப் புலிகளின் தோல்வியினால் ஆரம்பத்தில் தமிழ் மக்கள் சிறிதளவு கஷ்டங்…
-
- 6 replies
- 2.1k views
-
-
சென்னை சங்கமம் இத்துணை பெரிய வெற்றியைப் பதிவு செய்யுமென நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. காலம் சிலவற்றை எதற்காகவோ கொண்டாடித் தள்ளிவிடுகிறது. அப்படி நிகழ்ந்ததுதான் சென்னை சங்கமம் வெற்றியும். இந்த வெற்றி எங்களுக்கே புரிந்து கொள்ள முடியாத வியப்பென்றால் பலருக்கு அது வயிற்றெரிச்சலைத் தந்திருக்க வாய்ப்பு உண்டு. இலட்சியங்களிலும், உயர்ந்த விழுமியங்களிலும் புடமிடப்பட்டவர் போல் பம்மாத்து காட்டும் எழுத்தாளர் ஞானி சங்கமத்தை கனிமொழியின் விளம்பர விழா என்று எழுதினார். நான் சொல்வது தவறாக இருக்கலாம், ஆனால் சதா விமர்சித்துக் கொண்டே இருப்பது ஒருவகை மனநோய் என்பது என் எண்ணம். இத்தகையோரை நெருங்கி அணுகிப் பார்த்தீர்களென்றால் சிறுமைகள் அவர்களிடத்து நிறைய இருக்கும். ஆதலினால் பொதுவாக இத்தகையோ…
-
- 3 replies
- 2.1k views
-
-
""படபடக்கும் பறவைகளின் சிறகுகள்கூட அச்சத்தை ஏற் படுத்துவதாகவே இருக்கிறது அந்த வனப்பகுதியில். ஆனால், மரணத்தை எந்த நேரத்திலும் வரவேற்கக் காத்திருக்கும் விடுதலை வீரர்களை இந்த சலசலப்புகளால் எதுவும் செய்துவிடமுடியாது என்பதை அவர்களின் மன உறுதி வெளிப்படுத்துகிறது'' என்கிறார் ஈழத்தின் கிழக்கு மாகாணக் காடுகளில் கேணல் ராமை சந்தித்த தமிழகப் பத்திரிகையாளர் பாண்டியன். அடர்ந்த காடுகளுக்கு நடுவே நடந்த இந்த சந்திப்பின்போது, எந்த நேரத்திலும் சிங்களப் படை சுற்றி வளைக்கலாம் என்கிற சூழல் நிலவியதை யும், தங்கள் உயிர் பற்றி கவலைப்படாமல், தமி ழகத்திலிருந்து வந்திருக்கும் பத்திரிகையாளரைப் பாதுகாக்கவேண்டும் என்பதில் அக்கறை செலுத்தினர் விடுதலைப்புலிகள். காட்டுக்குள் பரண் அமைத்து அதில்தான் அவர்கள…
-
- 9 replies
- 2.1k views
-
-
[06 - April - 2008] விதுரன் * மடுவிலிருந்து திருச்சொரூபத்தைக் கொண்டு சென்றமை அரசுக்கு கொடுத்துள்ள பெரும் ஏமாற்றம் வடக்கே அடைமழை நின்று விட்டதால் மீண்டும் கடும் சமர் ஆரம்பமாகியுள்ளது. மடுவைக் கைப்பற்றி விடும் முயற்சியில் அரசும் படையினரும் தீவிரம் காட்டினர். ஆனால் மடுதேவாலயத்திலிருந்து திருச்சொரூபம் வேறிடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதால் அரசு மடுவைக் கைப்பற்றும் முயற்சியைத் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மடுவைக் கைப்பற்றுவதென்பது இராணுவ இலக்காக இருக்கவில்லை. ஆனால் அரசியல் நோக்கங்களுக்காகவே மடுதேவாலயத்தை கைப்பற்றிவிட வேண்டுமென அரசு தீவிர அக்கறை காட்டியது. இராணுவ ரீதியில் மடுவோ அல்லது தேவாலயப் பகுதியோ கேந்திர முக்கிய பகுதிகளல்ல. ஆனால் மடுத் தேவாலயத்த…
-
- 5 replies
- 2.1k views
-
-
அகதி முகாமில் பிரபாகரனின் பெற்றோர்-ராஜபக்சே கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை மற்றும் வள்ளிபுரம் பார்வதி அம்மாள் ஆகியோர் வவுனியா அகதி முகாமில் தங்கியிருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அகதி முகாமில் பிரபாகரனின் பெற்றோரும், ஏனைய விடுதலைப் புலித் தலைவர்களின் உறவினர்களும் தங்கியுள்ளதாகவும் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார். 'பிரபாகரன் பெற்றோர் திருவேங்கிடம் வேலுப்பிள்ளை- வள்ளிப்புரம் பார்வதி ஆகியோர் எம்மிடம் சரணடைந்துள்ளனர். வன்னியில் பொதுமக்களுடன் இணைந்து படையினர் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு இவர்கள் வந்துவிட்டனர்' என்று அவர் தனது உர…
-
- 1 reply
- 2.1k views
-
-
கருணா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் அல்ல – கட்சியின் பொதுச் செயலாளர்: http://www.globaltamilnews.net/tamil_news....=2910&cat=1 பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் அல்ல என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார். கட்சியின் உத்தியோகபூர்வ தலைவர் நந்தகோபன் உயிரிழந்ததைத் தொடர்ந்து தலைமைப் பொறுப்புக்கு உத்தியோகபூர்வமாக இதுவரையில் எவரும் நியமிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் உயர் பீடம் தலைமைப் பொறுப்பிற்கு யாரை நியமிப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கருணாவினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சிப்பேரவை உற…
-
- 9 replies
- 2.1k views
-
-
இந்திய அரசிடம் நீதி கேட்டு ஒரு துளி நீரும் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வீரச்சாவைத் தழுவிய ஈகச்சுடர் லெப். கேணல் திலீபனின் 20 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை தொடங்கியுள்ளன. மேலும் வாசிக்க
-
- 9 replies
- 2.1k views
-
-
சுலபமாகத் தாக்கப்பட்ட கடினமான இலக்கு.... விதுரன் [13 - April - 2008] இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களும் மிக முக்கிய பிரமுகர்களும் தலைநகரிலும் அதனையண்டிய பகுதிகளிலும் மிகப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதை, கம்பஹா வலிவேரியா பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொல்லப்பட்ட சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு யுத்தத்தின் பிரதிபலிப்புகள் தலைநகருக்கும் தென் பகுதிக்கும் எப்போதோ பரவிவிட்டன. தலைநகருக்கு வெளியே பாதுகாப்பற்ற பகுதிகளில் கொல்லப்பட்ட தலைவர்களை விட தலைநகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்புமிக்க பகுதிகளில் கொல்லப்பட்ட தலைவர்கள் மற்றும் படை அதிகாரிகளின் எண்ணிக்…
-
- 3 replies
- 2.1k views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளம் குறித்து சிறிலங்கா வான் படையினர் தகவல் கொடுத்ததை கண்டுபிடித்துள்ளோம் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.1k views
-
-
ஆபாச இணையதளங்கள் சிறிலங்காவில் தடை – சிறிலங்கா நீதிமன்றம் உத்தரவு சிங்களப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் படங்கள், வீடியோக்கள் கொண்டுள்ள சுமார் 12 ஆபாச இணையத்தளங்களைத் தடைசெய்யும்படி சிறிலங்கா தொலைத்தொடர்புகள் ஒழுக்காற்று ஆணையத்துக்கு (TRC) சிறிலங்கா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. சிங்களப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் பலவற்றை இந்த தளங்கள் கொண்டிருப்பதாகவும், இலவசமாக அணுகக்கூடியதாக இருப்பதால் அனைவரும் அவற்றைப் பார்க்கிறார்கள் என்றும் போலீசார் முறையிட்டதாலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கொழும்பு குற்றவியல் நீதிபதி நிஷாந்த கப்புராச்சி கூறியுள்ளார். வலைத்தளத்தின் சொந்தக்காரர்கள் இந்தத் தளங்களை 14 நாட்களுக்குள் தடுக…
-
- 16 replies
- 2.1k views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கைப் படையினர் களத்தில் இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். ஒரு கிழமைக்குள் பாரிய நிலப்பரப்புக்களை கைப்பற்றிய வரலாறு புலிகளுக்கு உண்டு என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்தார். அக்கராயனில் நேற்று நடைபெற்ற தேசிய எழுச்சி மாநாட்டில் உரையாற்றும் பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: மக்களால் கட்டிவளர்க்கப்பட்ட அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு திகழ்கின்றது. களமுனையில் போராளிகள் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும் மக்களுக்கு கிடைக்கும் வெற்றியாக அமைக்கின்றது. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த மக்கள் பொங்கு தமிழ் நிகழ்வின் ஊடாக தமது உணர்வின் வெளிப்பாட்டை தமிழ் மக்களின் பலத்தை உலகி…
-
- 10 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் வீடு ஒன்றிற்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த சம்பவம் யாழ்ப்பாணம் பிரப்பங்குளம் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஈ.பி.டி.பி உறுப்பினர் இரா. செல்வவடிவேல், தனது மகனுடன் சென்று குறித்த வீட்டிற்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார். அந்த வீட்டிலுள்ள கோழிப்பண்ணையை அகற்றாவிடின் ஆவா குழுவைக் கொண்டு அழிக்க வேண்டி வரும் எனவும் எச்சரித்துள்ள மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல், பண்ணை உரிமையாளரைத் தாக்கியும் உள்ளார். இந்தச் சம்ப…
-
- 20 replies
- 2.1k views
-
-
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 27, 2011 Gotabaya wanted to use Shavendra as the guinea pig சவேந்திரசில்வாவின் வழக்கை அவரே எதிர்கொள்ள வேண்டும் என கோத்தா கூறியுள்ளார். சுவிற்சலாந்தில் மேஜர் ஜெனெரல் டயஸ் அவர்களை இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு தடையாக இருக்கும் என கூறி வரவழைத்த அரசாங்கம் ஏன் சவேந்திரசில்வாவை அழைக்கவில்லை என அவரது குடும்பத்தார் கேள்வி எழுப்பியுள்ளனர்.. அடுத்ததாக சவேந்திர சில்வா மீதான வழக்கு தொடர்பில் அவர் தானாகவே அதனை எதிர்கொள்ளப்போவதாக கூறினாரே தவிர சவேந்திர சில்வாவிற்காக அரச ஊடகங்களோ அமைச்சர்களோ ஏன் கோத்தபாய இராஜபக்ஷவோ இதுவரை குரல் கொடுக்காதது ஏன் எனவும் தென் இலங்கை ஊடகங்கள் கேள்வி எழுப்பியு…
-
- 5 replies
- 2.1k views
-
-
ஒல்லாந்தர் காலத்தில் அழிக்கப்பட்ட சிவன்கோவிலின் சிவலிங்கம் சாவகச்சேரியில் மீட்பு! யாழ்.சாவகச்சேரி நீதிமன்ற கட்டிடம் இருந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் பிரித்தானியர் காலத்தில் இப்பகுதியில் இருந்த சிவன் ஆலயம் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் நீதிமன்ற கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கலாம் என யாழ். பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் புஷ்பரத்தினம் தெரிவித்துள்ளார். பிரித்தானியர் காலம் தொட்டு சாவகச்சேரியில் இயங்கி வந்த உயர்நீதிமன்றக் கட்டிடங்கள் தற்போது அங்கிருந்து முற்றாக அகற்றப்பட்டு அவ்விடத்தில் மீண்டும் புதிய நீதிமன்றம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான அத்திவாரம் வெட்டும் பணி நடந்துவரும் இடங்களில் வரலாற்றுப் பெறுமதி …
-
- 9 replies
- 2.1k views
- 1 follower
-
-
பிள்ளையான் குழு பிளவுபடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள வார இதழ் முதல் பக்கச் செய்தி வெளியிட்டுள்ளது. பிள்ளையான் குழுவைச் சேர்ந்த பாரதீ உள்ளிட்ட சிலர் கட்சியிலிருந்து விலகிச் செயற்படத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. புதிய அரசியல் பிரவாகமொன்றை ஏற்படுத்துவதைவிடுத்து கிழக்குவாழ் தமிழர்களிடம் கப்பம் பெறல் மற்றும் வன்முறைகளில் பிள்ளையான் குழு ஈடுபட்டு வருவதாக பாரதீ குழு குற்றஞ்சாட்டுகிறது. பிள்ளையான் குழுவினர் பிரதேசத்தில் உள்ள தமிழ் பெண்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகவும் பாரதீ குழு தெரிவித்துள்ளது. மேலும், ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அடக்கு முறை, கப்பம் பெறல், கடத்தல் போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவது நியாயமா…
-
- 6 replies
- 2.1k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இல்லை - கோத்தபாய ராஜபக்ஸ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் என்ற ஒன்று இல்லை எனவும், ஒப்பந்தம் இருப்பதாகக் கூறுவதில் அர்த்தம் இல்லை என்றும், சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக வார்த்தை அளவில் மாத்திரமே அர்த்தமற்ற ஒப்பந்தமாக இது இருக்கின்றது என்றும், அசோசியேட் பிறஸ் ஊடகத்துடனான நேர்காணலில் கோதபாய ராஜபக்ஸ கூறியுள்ளார். கடந்த சில மாதங்களில் கிழக்கில் விடுதலைப் புலிகளுடனான போரில் கணிசமான வெற்றிகளை தமது இராணுவம் பெற்றது என்றும், இந்த வெற்றி தற்பொழுது வடக்கு நோக்கி நகர்த்தப்படுவதாகவும் கோத்தபாய மேலும் கூறினார். சிறீலங்கா அரசுத் தலைவர் ம…
-
- 9 replies
- 2.1k views
-
-
''என்னை மூணு வருஷமா லவ் பண்ணினார். கல்யாணம் பண்ணிக் கிறதாச் சொல்லி ஆசையாப் பழகினார். ஆனால், இப்போ கல்யாணத்துக்கு மறுக்கிறார். என்னை மன உளைச்சலில் தள்ளிய அவர் மீது நடவடிக்கை எடுங்கள்!'' - இயக்குநர் சீமான் மீதுதான் இப்படி ஒரு புகார்... கிளப்பி இருப்பவர் நடிகை விஜயலட்சுமி! புகார் கொடுத்த கையோடு சில சினிமா புள்ளிகளிடம் பேசிய விஜயலட்சுமி, ''உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு ஹீரோவாக இருக்கும் சீமான் என் வாழ் வில் வில்லனாகிவிட்டார். புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி யாரும் வற்புறுத்தினால் தற்கொலை செய்துகொள்வேன்!'' எனப் புலம்பி இருக்கிறார். விஜயலட்சுமிக்கு அப்படி என்னதான் பிரச்னை? 'ப்ரண்ட்ஸ்’ படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விஜயலட்சுமி. பெரிய வாய்ப்புகள் ஏதும்…
-
- 4 replies
- 2.1k views
- 1 follower
-
-
ஆரம்பம் முதலே 2006ம் ஆண்டில் இருந்து சிறீலங்கா அரசு யுத்தத்துக்கான முஸ்தீபுகளில் ஈடுபடுவதற்கு இந்தியாவே காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தன. அதற்கு முன்னரும் பின்னரும் விடுதலைப்புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டதில் இந்தியாவின் பங்களிப்புக்கள் பற்றிப் பேசப்பட்டு வந்தன. ஆனால் இப்போதுதான் உண்மை வெளிவருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தமிழீழத்தை விட்டு தப்பிக்கவில்லை என்றும் அவர் நீர்மூழ்கி மூலமோ அல்லது வேறு வழியிலோ தப்பிக்க முனைந்திருப்பின் இந்திய ரடார்களும் உளவு விமானங்களும் அவற்றை இனங்கண்டிருக்கும் என்று இந்திய கடற்படையும் கரையோரக் காவற்படையும் தெரிவித்திருக்கின்றன. விடுதலைப்புலிகளின் நடமாட்டங்களை தொடர்ந்து கண்காணித்து சிறீலங்காவுடன் கூட்டுச் சேர்ந்து ஆ…
-
- 3 replies
- 2.1k views
-
-
தமிழக தலைவர்களை ஒன்றுதிரட்டி காங்கிரசிற்கு எதிராக ஓர் அணியில் திரட்டி காங்கிரசை ஓரம்கட்டவேண்டும் தமிழகம் கொந்தளித்துபோயிருக்கிறது இதை நாம் எம்விடுதலைக்கான பாதையாக மாற்றவேண்டும் தமிழக தலைவர்களை ஒன்றுதிரட்டி காங்கிரசிற்கு எதிராக ஓர் அணியில் திரட்டி காங்கிரசை ஓரம்கட்டவேண்டும் இது முடியும் எம்மால் இன்று தமிழகம் கொந்தளித்துபோயிருக்கிறது இதை நாம் எம்விடுதலைக்கான பாதையாக மாற்றவேண்டும எனவே தலைவர்களைத்தொடர்பு கொள்ளக்கூடியவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தக்கூடியவர்கள் மீண்டும் மீண்டும் இக்கோரிக்கையை அவர்களிடம் முன்வைக்கவேண்டும் நாம் அவர்களுக்கு தெரியும்தானே என்று இருப்பதால்தான் எமது நோக்கமும் இலட்சியமும் பின்போடப்பட்…
-
- 6 replies
- 2.1k views
-
-
அத்துமீறும் சர்வதேச தலையீடு இந்தப் பத்தியில் ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டிய ஒரு விட யத்தை மீண்டும் வெளிப்படுத்திக்காட்ட வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்திருக்கின்றது. இலங்கை இனப்பிரச்சினை இரண்டு பிரதான தரப்புகளுக்கு இடைப்பட்டது.ஒருபுறம் சிங்களவர்கள் மறுபுறம் தமிழ்பேசும் மக்கள். இந்த இரண்டு பிரதான தரப்பினரே இந்தப் பிரச்சினைக் குத் தீர்வுகாண வேண்டியவர்கள். அதுவும் இப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு ஒன்று காணப்பட வேண்டுமானால் இந்த இரண்டு தரப்புகளுமே தங்களுக்குள் பேசி உடன்பாடு கண்டு ஒரு தீர்வை எட்டவேண்டும். வேறு புற சக்திகள் எவையும் தீர்வு இதுதான் எனத் திணிக்க முயலக்கூடாது. அது அத்துமீறிய நட வடிக்கை என்று இப்பத்தியில் ஏற்கனவே தெளிவாக விளக்கி யிருந்தோம். தீர்வுக்காக…
-
- 2 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 2.1k views
-
-
கிழக்கில் தப்பி சென்ற புலிகள் பாதுகாப்புப்படையினரிடம் சரணைடைய மன்னிப்பு காலம் வழங்கவுள்ளது-பிரதமர் நிஷாந்தி செப்டம்பரில் 1ம் திகதி முதல் கிழக்கிலிருந்து தப்பி சென்ற விடுதலைப்புலிகள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைய மன்னிப்பு வழங்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெற்காசிய ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளும் இலங்கை அன்னியின் மக்கள் எனவே அவர்களையும் இந்நாட்டடின் அபிவிருத்தியை இணைத்து கொள்ள வேண்டியது அரசின் கடமை அவர்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டியதும் அரசின் கடமையென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சனிக்கிழமை ஹொரனையில் இடம் பெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். தொப்பிகயில் இருந்து தப்பி சென்ற புலிகள் மறைந்திருந்து …
-
- 6 replies
- 2.1k views
-
-
கொழும்பு குண்டுவெடிப்பு – இதுவரை 13 பேர் கைது கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக தெமட்டகொட பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் இருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் இதுவரை 215 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆவர். நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பல குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று வந்த நிலையில், நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத…
-
- 10 replies
- 2.1k views
-