ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் வீடு ஒன்றிற்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த சம்பவம் யாழ்ப்பாணம் பிரப்பங்குளம் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஈ.பி.டி.பி உறுப்பினர் இரா. செல்வவடிவேல், தனது மகனுடன் சென்று குறித்த வீட்டிற்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார். அந்த வீட்டிலுள்ள கோழிப்பண்ணையை அகற்றாவிடின் ஆவா குழுவைக் கொண்டு அழிக்க வேண்டி வரும் எனவும் எச்சரித்துள்ள மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல், பண்ணை உரிமையாளரைத் தாக்கியும் உள்ளார். இந்தச் சம்ப…
-
- 20 replies
- 2.1k views
-
-
புத்தளத்தில் உருக்குலைந்த நிலையில் 15 சடலங்கள் மீட்பு புத்தளம் மாவட்டம் டுமலடெனியா வென்னப்புவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் உருக்குலைந்த நிலையில் 15 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டள்ளன. மீட்கப்பட்ட சடலங்களில் 13 ஆண்களின் சடலங்கள், 2 பெண்களின் சடலங்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. -Pathivu-
-
- 9 replies
- 2.1k views
-
-
பிரித்தானியாவின் பாராளுமன்ற முன்றலில் கரோ கவுன்ஸிலர் திரு தயா இடைக்காடர் ஆரம்பித்துள்ள 101 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாகவும், எம்மக்களின் அவலங்களை உலகிற்கு உணர்த்தவும் 5 பிள்ளைகளுக்கு தாயாரான ஓர் ஈழத்து பெண்மணியொருவரும் நீர், ஆகாரம் எதுவுமின்றி தனது சுயவிருப்பின் பேரில் போராட்டத்தில் குதித்துள்ளார். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தற்போது லண்டனை தற்காலிக வதிவிடவுமாகம் கொண்ட திருமதி வடிவேலு தவராணி என அறிய முடிகிறது. இது தொடர்பான மேலதிக தவவல்கள் விரைவில் யாழில் .... பி.கு: லண்டனில் உண்ணாவிரதப் போராட்டம் திரு தயா இடைக்காடர் பாராளுமன்ற முன்றலில் ஆரம்பிக்கும் செய்தியை உலகிற்கு எடுத்து வந்ததும், செயலாக்கியதும் யாழ் இணையமே!!
-
- 5 replies
- 2.1k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணாவுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை மேலும் மேலும் உக்கிரமடைந்து செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கருணாவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என நேற்றைய தினம் கட்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருக்கும் சில உறுப்பினர்கள் தம்மை தலைமைப் பதவிலிருந்து விலக்க முயற்சி மேற்கொள்தாகவும், அதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் எனவும் கருணா குறிப்பிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது கருணா வெளியிட்ட கருத்துக்கள் கிழக்கில் பெரும் எதிர்ப்பலையை ஏற்ப…
-
- 3 replies
- 2.1k views
-
-
கல்முனையில், கருணாவுக்கு... ஆதரவான விளம்பர பதாதைகள் எரிப்பு. கல்முனையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஆதரவு தெரிவித்து காட்சிப்படுததப்பட்ட விளம்பர பதாதைகள் இனந்தெரியாதவர்களால் எரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை – கல்முனை வாழ் இளைஞர்கள் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கப்பல் இலச்சினையுடன் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளரான கருணா அம்மானிற்கு 35 அடி நீளமான விளம்பர பதாதைகளை முக்கிய சந்திகளில் வைத்திருந்தனர். அத்தோடு, அம்பாறை – கல்முனை பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிட…
-
- 18 replies
- 2.1k views
-
-
பாரிசில் தேசிய செயற்பாட்டாளர் மீது வாள்வீச்சு! பின்னணியில் சிங்கள கைக்கூலிகள்? அக் 30இ 2011 பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆயுததாரிகள் நிகழ்த்திய வாள்வீச்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பிரதிநிதியான திரு.பருதி அவர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்தை விட்டு வெளியில் வந்த பொழுதுஇ வெளியில் காத்திருந்த முகமூடியணிந்த ஆயுதபாணிகளால் கத்திகள்இ வாட்கள் சகிதம் இவர் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த திரு.பருதி அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் …
-
- 13 replies
- 2.1k views
-
-
பாரம்பரியமான உடப்பு தமிழ்க் கிராமம் பயங்கரவாத பிரதேசமாக மாற்றப்படுகிறது * மாகாண சபை உறுப்பினர் இராதாகிருஷ்ணன் உடப்பு கிராமம் நூற்றுக்கு நூறு வீதம் தமிழ் மக்கள் வாழும் கிராமமே. இங்குள்ளவர்கள் கடற்றொழலைச் செய்கின்றனர். இது ஒரு மீன்பிடிக் கிராமம். ஆனால், இக்கிராமத்தைப்பற்றி சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இங்குள்ள அப்பாவித் தொழிலாளர்களைப் பற்றியும் தவறான கருத்து வெளியிடப்படுகிறது. உடப்பு பிரதேசத்தை பயங்கரவாத சூனிய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வடமேல் மாகாண சபையின் உறுப்பினர் கே. இராதாகிருஷ்ணன் சபையின் கடற்றொழில் அமைச்சு நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றும்போது இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய மாகாண சபை உறுப்பினர் கே…
-
- 3 replies
- 2.1k views
-
-
ஒப்ரேஷன் வியாழேந்திரன்: விமான நிலையம் தொடக்கம் ஜனாதிபதி செயலகம் வரை… நடந்தது என்ன? November 3, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் நேற்று கட்சி தாவி, அமைச்சு பதவியை ஏற்றுக் கொண்டார். சமூக வலைத்தளம் முழுவதும் அவரது முடிவை கண்டித்து, விமர்சனங்களால் நிறைந்து போயிருக்கிறது. வியாழேந்திரன் 48 கோடிக்கு விலை பேசப்பட்டார்… மஹிந்த ராஜபக்ச நேரடியாக பேசினார்… கனடாவில் 30 கோடி கைமாறியது என சமூக வலைத்தளங்கள் முழுவதும் வியாழேந்திரன்தான் நீக்கமற நிறைந்திருக்கிறார். வியாழேந்திரன் எப்படி வளைத்தெடுக்கப்பட்டார், எப்படியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன, யார் எல்லாம் இந்த டீலின் பின்னணியில் இருந்தார்கள் என்ற தகவல்களை தமிழ்பக்கம் திரட்ட…
-
- 16 replies
- 2.1k views
-
-
'காகித ஓடத்தில் கலைஞர் கப்பல் விடக் கூடாது...!' [ ஜூனியர் விகடன் ] - [ Feb 02, 2009 05:00 GMT ] 'எப்போது இலங்கைக்குப் பயணப்படுவார் பிரணாப் முகர்ஜி?' என்று ஒவ்வொரு கணமும் உலகத் தமிழர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். 'வானத்து தேவன் வந்தான் காண்' என்பது போல் இலங்கையில் இறங்கிய முகர்ஜி, ராஜபக்ஷேவுடன் பேசி ஒருவழியாக ஈழத்தமிழரின் பிரச்னைக்கு உரிய 'தெளிவான' தீர்வைக் கண்டுவிட்டு, இந்தியத் தலைநகருக்குத் திரும்பி விட்டார்! 'விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதில் எங்களுக்குத் தடையில்லை. ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் முல்லைத்தீவில் உயிருக்கு அஞ்சி, உணவின்றித் தவிக்கிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பான புகலிடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்துக்க…
-
- 3 replies
- 2.1k views
-
-
சம்பூர் அனல்மின் நிலையத்துக்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் திருகோணமலை சம்பூரில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்திற்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும். இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் செய்து கொள்ளப்படவுள்ள இந்த கூட்டு ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் மின் சக்தி மற்றும் எரிபொருள் துறை அமைச்சின் செயலாளர் ஆர்.வி. சாபி கைச்சாத்திடுவார். இந்தியாவின் தேசிய நிறுவனமான தேசிய அனல் மின்சக்தி நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்திற்கு 500 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன. இத்திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் 350 அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக வழங்கப…
-
- 10 replies
- 2.1k views
-
-
இலங்கைக்கான சீன தூதரை, தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பதென எடுத்த முடிவால் இந்தியா கடுமையான அதிருப்தியடைந்துள்ளது. இந்தியா தனது கடுமையான அதிருப்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் நேரில் தெரிவித்ததை தமிழ்பக்கம் அறிந்தது. கூட்டமைப்பின் சார்பில் முடிவுகளை எடுக்கவல்ல இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய ஒரு பிரமுகர், தான் இந்த விவகாரம் குறித்து இந்திய தூதரகத்திற்கு விளக்கமளித்ததாக தமிழ்பக்கத்திடம் குறிப்பிட்டார். எனினும், அந்த விளக்கத்தினால் இந்திய திருப்தியடையவில்லை, தனது அதிருப்தியை நேரில் தெரிவித்தது என்பதை தமிழ்பக்கம் அறிந்தது. இலங்கை அரசின் மீது இந்திய, அமெரிக்க பிடி இறுகி வரும் நிலையில், அந்த தரப்பை சமரசப்படுத்த, சீனா தொடர்…
-
- 38 replies
- 2.1k views
- 2 followers
-
-
ஈபிடிபியின் தலைமைப் பணிமனையான யாழ்ப்பாணம் சிறீதர் திரையரங்கில் ஈபிடிபியின் முக்கிஸ்தர்கள் இருவர் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாநகரசபையில் அங்கம் பெறுகின்ற ஈபிடிபி உறுப்பினர்களுக்கான ஒன்று கூடல் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றிருக்கின்றது. நிகழ்விற்கு ஈபிடிபியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) தலைமை தாங்கினார். நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் உரையாற்றிய பொழுது, யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வர் றீகன் உரை நிகழ்த்தியிருக்கின்றார். அவர் தனது உரையில், யாழ்.மாநகர சபையும் ஈபிடிபி கட்சியும் முற்றுமுழுதாக வியாபார நோக்கத்துடனேயே செயற்பட்டு…
-
- 11 replies
- 2.1k views
-
-
திருகோணமலை கடற்படை முகாம் அமைந்துள்ள வளாகத்தில் இரகசியத் தடுப்பு முகாம்கள் இயங்கிவருகின்றன என்று தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது காணாமற்போனோரைத் தேடியறியும் குழு. கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் இந்த முகாம்களில் காணாமல்போனோர்களில் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்களின் உண்மைத் தன்மை என்னவென்பதை அரசு உடனடியாக அம்பலப்படுத்த வேண்டும் என்று காணாமற்போனோரைத் தேடியறியும் குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட, காணாமல்போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் எஸ்.மகேந்திரன் கூறியவை வருமாறு: திருகோணமலை கடற்படை முகாம்…
-
- 0 replies
- 2.1k views
-
-
இன்றைய ஐலண்ட் தினசரியில் முன் பக்கத்தில் படத்துடன் வந்த செய்தி. வன்னியில் வெகுவாக முன் நேறி வரும் சிறிலங்காப் படையினரின் நடவடிக்கைகள் யாழ்க் குடா நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. நல்லூர்க் கோவிற் திருவிழாவில் ஒரு லட்சம் மக்கள் கூடி பாதுகாப்புப் படையினர் மீதான தமது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.இத் திருவிழாவுக்குப் பாதுகாப்புப் படையினர் பலமான பாதுகாப்பை வழங்கினர். The rapid progress on the Vanni front has had a positive impact on the Jaffna peninsula where armed forces are gradually easing restrictions on the civilian community as a confidence building measure. The Nallur kovil festival has attracted a large section of the civilian…
-
- 7 replies
- 2.1k views
-
-
இலங்கையின் முதல்தர கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்ந்த ஆணந்தசிவா கொழும்பில் கருணா குழுவால் கடத்தல். வியாழக்கிழமைஇ 9 பெப்ரவரி 2006 பிரபல கோடீஸ்வரனான வர்த்தகர் ஆணந்தசிவா கருணா குழுவால் கொழும்பில் கடத்தபட்டுள்ளார். கோழும்பின் பிரபல வெஸ்ரேன் மற்றும் றஞ்சனாஸ் நகைகடைகளின் உரிமையாளரும்; லண்டனிலும் கொழும்பிலும் பல சொத்துகளின் பங்களானாக செயற்பட்டு வந்த இலங்கையில் முதல்தர கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்ந்த கரவெட்டி துன்னாலை என்ற இடத்தை சோர்ந்த ஆணந்த சிவா கருணா குழுவால் கடத்தப்பட்டுள்ளார். இந்த கடத்தல் கருணா குழுவின் முக்கியஸ்தர் முஸ்தபாவின் உத்தரவிற்கமைய நடைபெற்றதாக சந்தேகிக்கபடுகின்றது. http://www.nitharsanam.com/?art=15127
-
- 10 replies
- 2.1k views
-
-
இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் - பிரித்தானிய 1/5/2008 12:34:37 PM வீரகேசரி இணையம் - இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணாது பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென பிரித்தானிய அரசாங்காம் கோரியுள்ளது . இலங்கை அரசாங்கம் 2002ஆம் ஆண்டு விடுதலை புலிகளுடன் செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகவுள்ளதாக மேற்கொண்ட தீர்மானம் தொடரிபில் கருத்து தெரிவிக்கையிலேயே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லோர்ட் மலோச பிறவுண் இதனைத் தெரிவித்துள்ளார் . அத்துடன் இலங்கை அரசின் இத் தீர்மானம் தொடர்பில் தாம் வருத்தமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதான நடவடிக்கைகளில் நோர்வேயின் அ…
-
- 4 replies
- 2.1k views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நோர்வேயின் அனுசரணையுடன் தீர்வு ஏற்பட வேண்டும். இலங்கையில் ஒரு வருடத்துக்குள் இனப்பிரச்சினை விவகாரத்தில் மாற்றம் ஏற்படும் என்று சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ள முன்னாள் பின்லாந்து ஜனாதிபதியும் சமாதான தூதுவருமான மாரீப் அதிசாரி தெரிவித்துள்ளார். சமாதானத்துக்கான நோபல் பரிசு இவருக்கு நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நேற்று வழங்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளரிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கொசோவா இனப்பிரச்சினை விவகாரத்தில் சமாதான தூதுவராக செயற்பட்ட மாரீப் அதிசாரி மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் பங்களிப்பு வழங்குமாறு அங்குள்ள பல நண்பர்கள் கோரிக்கை …
-
- 7 replies
- 2.1k views
-
-
சமாதானம் பற்றி உரையாற்றுவதற்காக இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்பு கருத்தரங்கில் சமாதானம் பற்றி விரைவுரையாற்றுமாறு இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவால் இந்த அழைப்பு விடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எழுத்து மூலமான அழைப்பு ஒன்று சுப்ரமணியம் சுவாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், சுப்ரமணியம் சுவாமி அழைப்பை ஏற்றுக் கொண்டாரா, என்பது பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. http://www.saritham.com/?p=57286
-
- 20 replies
- 2.1k views
-
-
விடுதலைப்புலிகளுக்கு நாம் உதவுவது என்பது அப்பட்டமான பொய் - நோர்வே வெளிவிவகார அமைச்சு அறிக்கை. http://www.aftenposten.no/english/local/article1550551.ece
-
- 6 replies
- 2.1k views
-
-
இரேவாடிரவாகக எமக்குத் தெரியாமலேயே நாடு பிரிந்து விட்டதோவென நினைத்தோம்- (தேசியன்) [10 - June - 2007] கொழும்பிலுள்ள தங்குமிடங்களில் (லொட்ஜ்களில்) பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருந்த பல நூற்றுக்கணக்கான வட, கிழக்கு தமிழ் மக்கள் கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவத்தினராலும் பொலிஸாராலும் பலவந்தமாக வட, கிழக்கு பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். கடந்த மே மாதம் 31 ஆம் திகதி மாலை புறக்கோட்டைப் பகுதியிலுள்ள தங்குமிடங்களின் உரிமையாளர்களை அழைத்த புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மறுநாள் வெள்ளிக்கிழமை காலைவேளைக்குப் பின் வட, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழர்கள் எவரும் உங்கள் `லொட்ஜ்'களில் இருக்கக் கூடாது. அவ்வாறு தங்கியிருந்தால் நாம் அவர்களை வெளியேற்ற…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரின் 2008ஆம் ஆண்டிற்கான மாவீரர் தின உரை குறித்து புதிய விளக்கங்களோடு சொல்லாத விடயங்களைச் சிலாகித்துச் சிலர் பேசத் தொடங்குவார்களென்று தொலைக் காட்சி ஊடகமொன்று ""வியாக்கியானம்'' செய் கிறது. பிரபாகரனின் மாவீரர் உரை, மக்களால் எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில், தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு வியாக்கியானங்களோ, பொழிப்புரையோ தேவையில்லை. அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக விடுக்கும் செய்திகளை அடியொற்றியே ஆழமாகவும் விரிவாகவும் இம் மாவீரர் தின உரை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்தின் நியாயப்பாட்டினை வரலாற்றுப் படிநிலை மாற்றங்களூடாக விளக்கிய பிரபõகரன் சர்வதேச நாடுகள் விதித்த தடைகள் அகற்றப்பட வே…
-
- 1 reply
- 2.1k views
-
-
காலி சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் மீது வன்முறைகள் - கோமா நிலையில் இளைஞர் வைத்தியசாலையில் : 27 ஆகஸ்ட் 2012 வவுனியா சிறைச்சாலையினை தொடர்ந்து காலி சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது கடந்த வாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. தமிழ் அரசியல் கைதிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைத்தாக்குதலில் கோமா நிலையில் மயக்கமுற்ற இளைஞரொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்தே உண்மைகள் வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம் கண்டி வீதி கொடிகாமம் பகுதியை சேர்ந்தவரான சுந்தரம் சதீஸ்குமார் (வயது34) என்பவரே இவ்வாறு கோமா மயக்க நிலையில் காலி களுவாப்பிட்டிய அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திரும…
-
- 14 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப்போராட்டம் பாரிய பின்னடைவை சந்தித்து தமிழர்கள் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு தமிழர் நிலங்களெல்லாம் சூறையாடப்பட்டு கொண்டிருக்கின்றது .கிழக்கில் பசில் ராஜபக்சவும் வெளிநாட்டு நிறுவனங்களும் வளம் மிக்க பகுதிகள் பலவற்றை தம் வசமாக்கிவிட்டனர் .மாலை மரியாதைகளுடன் தற்போது கிழக்கை வலம் வரும் அதிகாரம் மிக்கவர்களுக்கு இவை பற்றி எவ்வித சிந்தனைகளும் அற்ற நிலையில் தமிழ் மக்கள் தமது கையறு நிலையை எண்ணி வேதனைப் பட்டுக்கொண்டிருக்கின்ன்றனர் . 30 வருடங்களுக்கு முன்னரும் இதேபோன்றோதொரு சூழ்நிலையில் தமிழரின் விடுதலையை நெஞ்சில் நிறுத்தி போராடப்புறப்பட்ட இளம் வீரன் இரா.பரமதேவா என்கிற மறத்தமிழன் வீரமரணமடைந்து இன்றுடன் 26 வருடங்கள் நிறைவடைகின்றன. என்றோ ஒரு நாள் இந்த வீரர்களின் கனவு …
-
- 4 replies
- 2.1k views
-
-
நேர்காணல் – மூன்றாம் பாகம்: ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும் Sunday, November 22, 2009 By Arthi பிரபாகரனின் இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது. இனி வரும் ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும் என “ஈழம் இ நியூஸ்” இற்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்…
-
- 4 replies
- 2.1k views
-
-
தமிழர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் இலங்கைக்கான இந்தியாவின் இராணுவ உதவிகளை நிறுத்தக் கோரியும் நடிகர், நடிகைகள் எதிர்வரும் 1ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தவுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளும் பங்கேற்கவுள்ளனர் எனவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகளின் ஆதிக்கத்தில் உள்ள கிளிநொச்சியைப் பிடிக்க அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அப்பகுதியிலிருந்தே வெளியேறி வருகிற இலங்கை இராணுவம். ஏராளமான தமிழர்கள் இதில் பலியாகி வருகின்றனர…
-
- 1 reply
- 2.1k views
-