Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் தவறான கருத்துகளையும் அவர்கள் மீது வீண் பழிகளையும் சுமத்தி வரும் இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது மௌனியாக இருப்பதைக் கண்டித்து இன்று கொழும்பிலும் அதன் அண்மித்த பிரதேசங்களிலும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் முஸ்லிம்களின் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. தமது ஆட்சேபனையை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் கொழும்பு மருதானை ஜும் ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக ஜும் ஆ தொழுகையின் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு சுலோகங்களை எழுப்பினர். கொழும்பில் இன்று…

  2. அடக்குமுறைகள் வென்றதாக உலகெங்கிலும் வரலாறில்லை. இதனைப் புரிந்துகொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட இராணுவம் மற்றும் பொலிசாரின் செயலைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது, அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது இலங்கைப் பொலிசாரும் இராணுவமும் நட…

  3. சர்வகட்சிக் குழுவின் யோசனையை ஜனாதிபதி எவ்வாறு இந்தியத் தலைவர்களிடம் சமர்ப்பிப்பிக்க முடியும்? திஸ்ஸ: http://www.globaltamilnews.net/tamil_news....=2107&cat=1 சர்வகட்சி பிரதிநிதிகள் குழுக்கூட்டத்தில் இதுவரை எதுவித இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில், சர்வகட்சி குழுவின் யோசனையை ஜனாதிபதி எவ்வாறு இந்தியத் தலைவர்களிடம் சமர்ப்பிப்பாரெனப் பேராசிரியர் திஸ்ஸவிதாரண கேள்வியெழுப்பினார். சர்வகட்சிக்குழு நேற்றுக் கூடிய போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்யும் போது, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தயாரித்த யோசனைகளைக் கொண்டு வருவாரென இலங்கை இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்ததுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் கூறியுள்ளதாகவும் இது உண்மையா எனவும் கேட்கப…

  4.  புத்தளத்தில் -முஹம்மது முஸப்பிர் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டார். புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேராவின் அழைப்பின் பேரில் விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, புத்தளம் கிவுல ஸ்ரீ லோகானந்த பௌத்த விகாரை, கடையாமோட்டை ஜூம்ஆ பள்ளிவாயல், முக்குத் தொடுவாவ கத்தோலிக்க ஆலயம் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற பொது கூட்டத்திலும் முன்னாள் ஜனாதிபதி கலந்துகொண்டா…

  5. காரைநகர் – ஊர்காவற்றுறை இடையில் பாலம் அமைக்க நடவடிக்கை ? adminFebruary 20, 2026 ஊர்காவற்றுறை துறைமுகம் மற்றும் கப்பல் பழுது பார்க்கும் பகுதி ஆகிவற்றை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர். அதன் போது, காரைநகர் – ஊர்காவற்றுறை இடையில் பாலம் அமைப்பது, துறைமுக அபிவிருத்தி, ஊர்காவற்றுறையில் இருந்து காரைநகர் கடற்கோட்டைக்கு பயணிகள் செல்வதற்கான வழிவகைகள், துறைமுகத்திற்கு அருகில் பாவிக்கப்படாது காணப்படும் காணிகளை மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்தல் மற்றும் எதிர்கால சுற்றுலா வசதிகளை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் கலந்துரைய…

  6. அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ்ச் சிறைக்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறைக்கைதிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த சில தினங்களாக சிறைச்சாலை நிர்வாகம் தமக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக கைதிகள் விசனம் தெரிவித்துள்ளனர். சக சிங்கள கைதிகளைக் கொண்டு தாம் சோதனையிடப்படுவதாகவும் நுளம்புகள் மற்றும் மூட்டைப் பூச்சிகள் நிறைந்த ஓர் அறையில் தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்ச் சிற…

  7. தாயகத் தமிழர்கள் தெளிவான பாதையில் பயணிக்க எத்தனித்துள்ள இத்தருணத்தில் அவர்களை வழிநடத்தி விடுதலையை நோக்கி பாதையில் அழைத்துச் செல்வதைவிட்டு சிங்களத்திற்கு காவடிதூக்கும் சம்பந்தரின் பாராளுமன்றப் பேச்சு வன்மையாக கண்டிக்க வேண்டியதாகும். சிங்கள அடக்குமுறைக்குள் முழுவதுமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தாயகத்தமிழர்கள் அந்த அடக்குமுறையை உடைத்தெறிந்து விடுதலைக்கான பாதையில் நடைபோட உறுதிபூண்டு போர்கோலம் கொண்டு நிற்கையில் தமிழர்களது அரசியல் தலைமையாக கருதப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக விளங்கும் சம்பந்தன் அவர்கள் தான்தோன்றித்தனமாக இன்று சிறிலங்கா பாராளுமன்றத்தில் பேசியுள்ள விடையமானது உலகத்தமிழர்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டுசென்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது…

  8. நோன்புப் பெருநாளை முன்னிட்டு மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை. நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையை விசேட பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:நடைமுறை ஆண்டுக்கான நாட்காட்டியின் பிரகாரம், நோன்புப் பெருநாள் மார்ச் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இஸ்லாமிய மார்க்க முறைப்படி பெருநாள் தி…

  9. [url="http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1176:2008-11-22-18-11-10&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54"]டாபுர் (Darfour) பிராந்தியத்தில் சுடான் அரசு தனது படைகள் ஒட்டுக்குழுக்கள் மூலம் செய்த அட்டூழியங்களுக்கு எதிராக ஐநா வலிந்த தலையீட்டை செய்து சுடான் என்ற இறையாண்மை கொண்ட நாட்டுக்கு நெருக்கடியை கொடுத்துக்கொண்டிருக்கின்றத

  10. சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது. இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார். அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் கட்சி வேட்பாளர்களை திங்கட்கிழமை (15) முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கல்முனை கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறினார். நேற்ற அம்பாறையில் எம்.ஏ.சுமந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, கருணா போன்ற கண்டகண்டவர்களிற்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்றார். இந்த நிலையில் இன்று கருணா செய்தியாளர்களை சந்தித்போது, சுமந்திரன் பற்றி நான் பெரிதாக எடுத்துக்…

    • 2 replies
    • 589 views
  11. ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு ; பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - இந்தியா டுடே மாநாட்டில் நாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை! Published By: Digital Desk 1 15 Mar, 2026 | 02:50 PM இலங்கை கடற்பரப்புக்கு அருகில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து நாமல் ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற 'இந்தியா டுடே கான்க்ளேவ் 2026' (India Today Conclave 2026) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்ட விவகாரம் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், இலங்கையின் காலி மற்றும் கொ…

  12. விடுதலைப் போராட்டத்தில் தமது உயிர்களை அர்ப்பணித்த தியாகிகளை கௌரவிக்கும் மாவீரர் தினமான நேற்று வியாழக் கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. சொலமன் எஸ்.சிறில் பாராளுமன்றத்தில் நினைவு கூர்ந்தார். பாராளுமன்றத்தில் நேற்று வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சு, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் இடம்பெற்ற போது மாவீரர்கள் நினைவு கூரப்பட்டனர். இங்கு உரையாற்றிய சொலமன் எஸ். சிறில், தமிழ் மக்களின் வாழ்விலும் வரலாற்றிலும் முக்கியமான நாள் இன்றைய நாள். எமது மக்களின் விடுதலைக்காகவும் மண்ணின் விடிவிற்காகவும் தங்களது இன்னுயிரை ஈகம் செய்த எங்களது தேசத்தின் தியாகிகளை இன்றைய நாளில் எங்கள் நெஞ்சத்தி…

  13. வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாளம்பைக்குளத்தில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள அறிவித்தலில் இஸ்லாமிய கலாசார தலைவர் ஹசன் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அப்பகுதி கிராம சேவகர் என தெரிவிக்கப்படும் வை.நாயர் என்பவரின் றப்பர் முத்திரையும் குத்தப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது. சோபாய புளியங்குள தமிழ் மக்கள் அறிய வேண்டியது முஸ்லிம் மக்களின் (சாம்பைக் குளம்) காணிகளில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களும் இம்மாதம் 16 ஆம் திகதிக்கு முன் வெளியேற வேண்டுமென கிராம சேவையாளர் ஊடாக கேட்டுக்கொள்ளப்படுகின்றது. வெளியேறாத பட்சத்தில் வன்முறைய…

    • 0 replies
    • 523 views
  14. சிறிலங்காப் படைகளில் இருந்து தப்பிஓடிய 18,847 பேர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிறிலங்காவின் முப்படைகளில் இருந்தும் தப்பிஓடியவர்கள், முறைப்படி விலகிக் கொள்வதற்கான பொதுமன்னிப்புக் காலமாக கடந்த ஜூன் 13ஆம் நாள் தொடக்கம், ஜூலை 13ஆம் நாள் வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பொதுமன்னிப்புக் காலத்தில், சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 16,920 பேரும், கடற்படையில் இருந்து தப்பி ஓடிய 831 பேரும், விமானப்படையில் இருந்து தப்பிச்சென்ற 629 பேரும், தாமாக விலகிக் கொள்ள முன்வந்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார். இந்தப் பொது மன்னிப்புக்காலத்தை கடற…

  15. யாழ்.ஊடக மன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. June 19, 2020 யாழ்ப்பாண ஊடகவியலாளர்களால் யாழ்.ஊடக மன்றம் எனும் அமைப்பு இன்றைய தினம்(19.06.2020) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. டில்கோ தனியார் விடுதியில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் ஊடக மன்றத்திற்கான இலட்சினையை மதத் தலைவர்கள் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து நாடாவை வெட்டி அங்குரார்பணம் செய்து வைத்தனர். நிகழ்விலே சர்வமதத்தலைவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் கணேசலிங்கம், யாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவ துறை விரிவுரையாளர் அருட்தந்தை இ.இரவிச்சந்திரன் அடிகளார் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் தமிழ்பேசும் மக்களின் நோக்கு நிலையில் இருந்து எதிர்வரும்…

  16. வரவு-செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மற்றும் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை ஆகியன நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு சாதகமாக இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 624 views
  17. பிரபாகரன் வருவார் என்ற கனவில் மாணவர்களை வழிநடத்தினார்கள் பிரிகேடியர்கள் சொலமன் - தர்ஸானந்- இயக்கினார்கள் - நெடியவன் - ருத்ரகுமாரன் - விநாயகம் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தை திறப்பதாயின் அது மூடியே இருக்கட்டும் என யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை வடக்கின் யாழ் பலாலி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனை அறுதியிட்டு கூறியுள்ளார மஹிந்த ஹத்துருசிங்க. பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரியரத்னத்துடன் கூட்டத்தில் சமூகமளித்திருந்த ஒரு சில பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் மற்றும் 4 மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர் பிரபாகரன் வருவார் மீண்டும் ஈழவிடுதலைப் ப…

  18. சிங்கள மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு வராவிட்டால் காவல்துறையினரால் ஒன்றும் செய்ய முடியாது: சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வராவிட்டால் அதற்கு காவல்துறையினர் எதனையும் செய்ய முடியாது என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு செல்லும் சிங்கள பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய முழு அளவில் காவல்துறையினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறான ஓர் நிலையில் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை தொடர வருகை தராவிட்டால் அதற்கு காவல்துறையினர் பொறுப்பு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். சிங்கள மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செ…

  19. சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய வர்த்தமானி இன்று வெளியீடு? பொதுத் தேர்தலுக்கான சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (25) வெளியிடப்படவுள்ளது. சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் சட்டமா அதிபரின் அங்கீகாரம் பெற்றதன் பின்னர், இன்று வெளியிடப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று அறிவித்திருந்தார். அதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமை தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அதிருப்தி வெளியிட்டிருந்தார். அத்தோடு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமை…

  20. வீரகேசரி நாளேடு - இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நோர்வேயின் அனுசரணையுடன் தீர்வு ஏற்பட வேண்டும். இலங்கையில் ஒரு வருடத்துக்குள் இனப்பிரச்சினை விவகாரத்தில் மாற்றம் ஏற்படும் என்று சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ள முன்னாள் பின்லாந்து ஜனாதிபதியும் சமாதான தூதுவருமான மாரீப் அதிசாரி தெரிவித்துள்ளார். சமாதானத்துக்கான நோபல் பரிசு இவருக்கு நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நேற்று வழங்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளரிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கொசோவா இனப்பிரச்சினை விவகாரத்தில் சமாதான தூதுவராக செயற்பட்ட மாரீப் அதிசாரி மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் பங்களிப்பு வழங்குமாறு அங்குள்ள பல நண்பர்கள் கோரிக்கை …

    • 7 replies
    • 2.1k views
  21. தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்கி இலங்கை இனப்பிரச்சினைக்கு காரணமாக இருந்ததே இந்தியாதான் என்று சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி ஹமில்டன் வனசிங்க கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  22. இலங்கை அரசால் 13ஐ தன்னிச்சையாக ஒழிக்கவே முடியாது (ஆர்.ராம்) இலங்கை - இந்திய சர்வதேச ஒப்பந்தத்தின் மூலம் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினையும் அதன் மூலமாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையையும் இலங்கை அரசாங்கத்தினால் தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது என்று வடக்கு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர்களான நீதியரசர்.சி.வி.விக்கினேஸ்வரன், ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 13ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்க வேண்டுமென்ற தொனிப்பட்ட பரிந்துரையை முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட பகிரங்கமாக வைத்துள்ளார். அதேநேரம், மாகாண சபைகளினால் நிதிவிரயமாகுவது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கரிசனை கொண்டிருப்பதாக ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலி…

    • 1 reply
    • 457 views
  23. கருணா புதிய அரசியல் கட்சியொன்றை நிறுவியுள்ளார்: தமிழ் மக்கள் புலிகள் கட்சியின் முறுகல் நிலை உச்ச கட்டத்தை அடைந்து கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா புதிய அரசியல் கட்சியொன்றை நிறுவியுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை கருணா நிறுவியுள்ளார். கருணா புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்திருப்பது குறித்து தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாதெனவும் அதன் பொதுச் செயலாளர் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப…

    • 6 replies
    • 1.9k views
  24. சிறிலங்கா கடற்பரப்பில் இயற்கை எரிவாயு அகழ்வுக்கான சாத்தியங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு, அடுத்தவாரம் அமைச்சரவையின் அனுமதி கோரப்படும் என்று சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மன்னார் கடற்பரப்பில், இரண்டு துண்டங்களில் எரிவாயு ஆய்வுக்காக அனைத்துலக அளவில் கேள்விப்பத்திரங்கள் கோரப்படவுள்ளன. இது தொடர்பாக ஆறு அனைத்துலக நிறுவனங்களுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். மலேசியாவின் பெற்றோனஸ், நெதர்லாந்தின் றோயல் டச் ஷெல், இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கூட்டுத்தாபனம், பிரான்சின் டோட்டல், அமெரிக்க பல்தேசிய நிறுவனமான எக்சோன் மொபில் கோர்ப், அமெரிக்காவின் ஹலிப…

    • 1 reply
    • 502 views
  25. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஓப்பந்தம் குறித்து நேற்று வியாழக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.