Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை சுயமான விசாரணை பொறிமுறை ஒன்றை அமைத்து, அதன் இராணுவப் படையினர் மீதுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை கையாள்வதாக உலகுக்குக் காட்டினால், அது 'அது மிகப்பெரிய மாற்றத்தை' ஏற்படுத்தும் என்று பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் கூறியிருக்கிறார். இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் அரசு தலைவர்கள் உச்சிமாநாட்டில் இலங்கையின் மனித உரிமை விவகாரமே முக்கிய பேசுபொருளாக மாறியிருந்தது. அடுத்த மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் அதன்மீதுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்காவிட்டால், சர்வதேச விசாரணையைக் கோரப்போவதாக பிரிட்டன் கூறியுள்ளது. 2015-ம் ஆண்டு நடக்கவுள்ள அடுத்த காமன்வெல்த் மாநாட்டை மால்டாவில் நடத்துவதற்கு காமன்வெல்த் தலைவர்கள்…

  2. காணொளி : இலங்கை நிலவரம் தொடர்பாக மொரிசீயஸ் பிரதமர் சணல்-4 விற்கு வழங்கிய பேட்டி காணொளி.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10018:--------4---&catid=1:latest-news&Itemid=18

  3. இலங்கையில் ஊடக சுதந்திரம் உள்ளதா : மெக்ரே கேள்வி ஊடக சுதந்திரம் முழுமையாக இருப்பதாக இலங்கையில் கூறப்படுகின்றது ஆனால் இங்கு நான் வந்தது முதல் என்பின்னால் புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவருகின்றனர். ஜனாதிபதியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி செனல் -4 இக்கு மறுக்கப்பட்டுள்ளது அப்படியானால் இலங்கையில் ஊடக சுதந்திரம் இருக்கின்றதா என கெலும் மெக்ரே கேள்வியெழுப்பினார். பொதுநலவாய மாநாடு தொடர்பிலான செய்திகளை சேகரிப்பதற்கென பிரித்தானிய பிரதமரின் ஊடகக்குழுவின் ஊடாக இலங்கை வந்துள்ள கெலும் மெக்ரே இன்று மாலை பொதுநலவாய ஊடக மத்திய நிலையத்தில் ஜனாதிபதி மற்றும் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோரால் நடத்தப்படவிருந்த செய்தியாளர் மாநாட்டில் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டத…

  4. கமரோன் பத்திரிகையாளர் சந்திப்பின் முழுமையான காணொளி!!!

  5. காணொளி: இலங்கை தமிழர்களின் இனப்படுகொலையில் சொல்லப்படாத கதை காணொளி:.. http://www.youtube.com/watch?v=2JdWklrWHD8&feature=player_embedded http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10027:2013-11-16-11-13-19&catid=1:latest-news&Itemid=18 நியானி: காணொளி இணைக்க பதிவு திருத்தப்பட்டுள்ளது.

  6. ஆளும்கட்சி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் காமன்வெல்த் ஊடக சந்திப்பில் அட்டகாசம்:- 16 நவம்பர் 2013 http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ElFcDTXiafs இலங்கையின் ஆளும்கட்சி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் காமன்வெல் சந்திப்பில் அட்டகாசம்:- http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99083/language/ta-IN/article.aspx

  7. பிரித்தானியப் பிரதமருக்கு மகிந்த , கண்ணாடி வீட்டில் இருப்பவர்கள் கல் எறியக் கூடாது என்று கூறி உள்ளார். அயர்லாந்தில் நடைபெற்ற படுகொலைகள் பற்றிய விசாரணைக்கு உங்களுக்கு நாற்பது ஆண்டுகள் எடுத்துள்ளது, ஆகவே நீங்கள் கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து எங்களுக்கு கல் எறியக் கூடாது என்று கூறி உள்ளார் சிறிலங்காவின் சனாதிபதி. அடுத்த மார்ச் மாதம் பிரித்தானியாவுக்கும், இந்தியாவுக்கும் வேறு வழி இல்லை. சர்வதேச விசாரணை தான் இனி வர வேண்டியது. http://www.bbc.co.uk/news/world-asia-24970403 Sri Lanka President Rajapaksa defiant on rights row Mr Rajapaksa said Sri Lanka would "take its own time" in probing alleged abuses Continue reading the main story Related Stories Le…

  8. http://www.bbc.co.uk/news/uk-politics-24952042 இங்குள்ள காணொளியை காணுங்கள். புதிய பிபிசி காணொளி.

    • 39 replies
    • 2.4k views
  9. யாழ் பொதுசன நூலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அங்கிருந்து தொடர்பை ஏற்படுத்திய மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகள் மற்றும் www.gtbc.fm வானொலிக்கு தெரிவித்திருக்கிறார்கள். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை இலக்கத் தகடுகள் அற்ற பொலிஸார் மேற்கொண்டு உள்ளனர். இந்த தாக்குதலில் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் தாக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களின் போது தமிழ்த் தேசிய முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் தள்ளி விழுத்தப்பட்டு உள்ளனர். முன்னர் வந்த செய்திகள்: …

    • 12 replies
    • 1.8k views
  10. டேவிட் கமரூனின் கோரிக்கையை நிராகரித்தது சிறிலங்கா! - சர்வதேச விசாரணைக்கு இடமில்லை என்கிறார் பசில்!! இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் சுயாதீனமான ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் கோரிக்கை விடுத்துள்ளார் அத்துடன், இவ்விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் இடம்பெறாது விட்டால், அது தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சப…

  11. யாழ்ப்பாணத்தில் கமரோன் பொதுநலவாய மாகாநாடு தொடக்க நிகழ்வின் பின்னர் விசேட விமானம் மூலம் யாழ் சென்று யாழ் மத்திய நூலகத்தில் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனை சந்திதித்து அரை மணி நேரம் உரை யாடிய பிரிட்டிஷ் பிரதமர், உதயன் பத்திரிகை அலுவலகத்தினையும் சென்று பார்த்தார். சுதந்திரம் கிடைத்த பின்னர் வடக்கே சென்ற முதலாவது பிரிட்டிஷ் பிரதமர் தான் என்று சொன்னார் டேவிட் கமரோன் யாழ் நூலகத்துக்கு வெளியே 200 பேர் வரையான காணாமல் போனோரின் உறவினர்கள் திரண்டு இருந்தனர்.

  12. பிரபாகரன் வாழ்ந்ததாகக் கூறப்படும் கல்வீடுகளை தகர்க்கலாம் பிரபாகரன் வாழும் மன வீடுகளை அழிக்க முடியுமா? 09 அக்டோபர் 2013 குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் வன்னியில் வாழ்ந்தவர்களுக்கு அநேகமாக நிரந்தரமாக ஒருவீடு இருந்ததில்லை. இடப் பெயர்வுகளால் அடிக்கடி வீடுகள் மாறிப் போக ஒருகட்டத்தில் வீடு என்பதே இல்லாமல் போய்விட்டது. வீடு அழிக்கப்பட்டு வீட்டை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வீடு ஒன்றைப் பற்றிய கனவோடு கடந்த பல வருடங்களாக அலைந்து கொண்டிருக்கிறோம். புல் வெளிகளும் காடுகளும் மரங்களும் பதுங்கு குழிகளும்தான் எமது வீடுகளாக இருந்திருக்கின்றன. நாளுக்கொரு வீடு காலத்திற்கு காலம் பலவீடுகள் வீட்டுக் கொரு பதுங்குகுழி, ஆளுக்கொரு பதுங்கு குழி என்றுதான் எங்கள் வாழ்க்கை க…

  13. ஜனநாயகத்தின் குரலை அடக்கி ஒடுக்கும் செயல்; யாழ். பல்கலை மூடப்பட்டமைக்கு ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் யாழ். பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றமை ஜனநாயகத்தின் குரலை அடக்கி ஒடுக்கும் செயல். தமிழர்களின் குரலை அடக்கும் செயல் என்று தெரிவித்துள்ள யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கையை வரவேற்பதாகவும் பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகளை நிறுத்தி வைப்பதற்கு தாம் ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளது. இது தொடர்பில் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பொதுநலவாய மாநாட்டு காலப்பகுதியில் ஒருவார காலத்துக்கு அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக யாழ். பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து மூடி வைத்துள்ளனர். இதனைச் சங்கம் வன்மையாகக் கண்ட…

  14. வவுனியா - கொழும்பு தனியார் பேரூந்துகள் மீது மூன்றாவது நாளாக கல்வீச்சு : 16 நவம்பர் 2013 வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் தனியார் பேரூந்துகள் மீது மூன்றாவது நாளாக இன்று சனிக்கிழமை அதிகாலையும் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.15 மணியளவில் வவுனியாவிலிருந்து கொழும்பு சென்ற பஸ்கள் மீது ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து கற்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து இவ்வாறு தாக்குதல் நடாத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர். இத் தாக்குதலில் பயணிகளுக்கோ, சாரதி மற்றும் நடத்துனருக்கோ எவ்விதமான எவருக்கும் காயங்களும் ஏற்படவில்லை எனவும் பேரூந்துகளுக…

  15. பொதுநலவாய தலைமைப் பதவி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு என்பதை தவிர யாழ்ப்பாண பயணத்தை முக்கியப்படுத்திய சர்வதேசம்- பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன், நியுஸிலாந்து வெளியுறவு அமைச்சர் மரேமெக்கலி மற்றும் கனடா பிரதிநிதிகள் உட்பட வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலரும் யாழ்ப்பாணத்திற்கு சென்றமையினால் பொதுநலவாய மாநாட்டின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமைப் பொறுப்பை ஏற்றார் என்ற செய்தியை விட சர்வதேச செய்திகளில் யாழ்ப்பாணம் முக்கியத்துவம் அடைந்துள்ளது. அதுமட்டுமல்ல மாநாட்டைப் பற்றி பேசுவதைவிட இன்னும் இரண்டு விடயங்களுக்கு சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கினறன. ஓன்று வெளிநாட்டுத் தலைவர்களை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்வதற்கு …

  16. சம்பூரில் இடம்பெயர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம் : 16 நவம்பர் 2013 சம்பூரில் இடம்பெயர்ந்த மக்கள் தம்மை மீளக்குடியமர்த்துமாறு கோரியும் தமது காணிகளை கையளிக்குமாறு வலியுறுத்தியும் கிளிவெட்டி, சம்பூர் இடைத்தங்கல் முகாமில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த போராட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இன்றைய இந்தப் போராட்டத்தில் ஒன்றுகூடியவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான சுலோகங்கள் தாங்கிய பாதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்க காணிக்குள் இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளுடன் எதிர்ப…

  17. மாவை – அனந்தி – சுமந்திரன் அமெரிக்கா பயணமாகின்றனர்:- 28 அக்டோபர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகிய இருவருமே இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். அமெரிக்கத் தமிழ்;ப் பேரவையினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றுக் கொண்டு குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளனர். இதேவேளை, அமெரிக்க அரசாங்கத் தரப்பினரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பார்களா என்பது உற…

    • 31 replies
    • 2.4k views
  18. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இன்று மாலை சுமார் 7.10 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த நிலையத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இன்று காலையில், நடந்த கொமன்வெல்த் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வையடுத்து, யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன், அங்கிருந்து திரும்பியதும், சிறிலங்கா அதிபரை சந்தித்துப் பேசினார். இதன்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. சிறிலங்கா அதிபரை தனியாக சந்தித்து, மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்த அழுத்தம் கொடுக்கப் போவதாக, டேவிட் கெமரொன் முன்னர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், பிரித்தானி…

    • 7 replies
    • 1.4k views
  19. காணொளி: இலங்கை விவகாரம் தொடர்பாக அமெரிக்க CNN தொலைக்காட்சியின் பேட்டி காணொளியை பார்க்க.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10021:-----cnn--&catid=1:latest-news&Itemid=18

  20. இலங்கையில் மனித உரிமைகள் இல்லை என்பதை ஜனாதிபதி நிரூபித்து விட்டார்: முஜிபுர் ரஹ்மான் இலங்கையில் மனித உரிமைகள் இல்லையென்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிரூபித்துவிட்டார். அரசாங்கம் பெளத்த அமைப்புகளின் மூலம் சிறுபான்மை மக்களை அடக்குவதைப்போல் இன்று எதிர்க்கட்சியையே அடக்க முயற்சிக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் சிறந்ததொரு பாடத்தினை கற்பித்து விட்டனர். எனவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அரசாங்க அமைப்புகளுக்குமிடையே ஏற்பட்ட மோதலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  21. இலங்கையுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என இந்திய வெளிவிகார அமைச்சர் சல்மன் குர்ஷீத் தெரிவித்துள்ளார். பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்தியப் பிரதிநிதிகளுக்கு தலைமை தாங்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மன் குர்ஷீத், பி.பி.சி செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டில் கலந்துகொள்ளாமை, இலங்கையில் முழுமையான விசாரணையை பிரித்தானியப் பிரதமர் கோரியுள்ளமை, உயிர்வாழும் சுதந்திரத்தைப் பாதுகாத்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சல்மன் குர்ஷீத்திடம் பி.பி.சி. செய்தியாளர் கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த சல்மன் குர்ஷீத்,…

    • 0 replies
    • 408 views
  22. சத்தியம் டிவியில் சத்யம் சாத்தியம் என்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டது தொடர்பாக சில தினங்களுக்கு முன் விவாதம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதாரணியும், பாஜக சார்பில் எஸ்.ஆர்.சேகர் என்பவரும் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் முற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி முடியும் நிலையில் இறுதியாக ஒருவர் போனில் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், விஜயதாரணியையும் ஆபாசமாக கொச்சை வார்த்தைகளில் திட்டியுள்ளார். தமிழ்தாசனின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் விஜயதாரணி. கோபாவேசமாக அவர் அந்த நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், முதல்வரையும், தன்னையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அந்த …

  23. இயக்குனர் லீனா மணிமேகலையினது பதினோராவது ஆவணப்படம் ‘வெள்ளை வேன் கதைகள்’. தமிழகத்திலிருக்கும் ஈழத்து அகதிகளையும் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களையும் மையமாக வைத்து அவர் இயக்கிய ‘செங்கடல்’ படத்தைத் தொடர்ந்து இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதையும், வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்வதையும் அவரது புதிய ஆவணப்படம் பாதிக்கப்பட்ட ஏழு சாட்சியங்கள் வழியாகப் பேசுகின்றது. 13.11.2013 அன்று, இந்த இரண்டு மணிநேர ஆவணப்படம் முழுமையாக லண்டனில் பொதுமக்களிற்கு காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 14.11.2013ல் இந்த ஆவணப்படத்திலிருந்து 12 நிமிடக் காட்சித் தொகுப்பை சனல் 4 ஒளிபரப்பியது. வரும்நாட்களில் அனைத்துலக நாடுகளிலும் படம் திரையிடப்படயிருக்கிறது, இந்த ஆவணப் படம் குறித்த செய்திகள் வரத் த…

    • 0 replies
    • 685 views
  24. 23வது பொதுநலவாய அரச தலைவர் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமானது. மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ளஸ் உட்பட பல அரச தலைவர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டு மண்டபத்திற்கு வருவதாற்காக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுக்கு சிறிலங்கா அரசாங்கம் விசேட வாகனத்தினை வழங்கியிருந்தது. இதனை புறக்கணித்த பிரித்தானிய பிரதமர் தனது சொந்த காரில் சென்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நடவடிக்கையானது சிறிலங்கா அரசாங்கத்திற்கு பெரும் அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாநாட்டின் அமர்வின் போது சிறிலங்காவின் பே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.