ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142820 topics in this forum
-
02-05-2008 அன்று BBC சிங்கள சேவைக்கு ஈ.பி.டி.பி. டக்ளஸ் அளித்த பேட்டி. டக்ளஸ்: இலங்கை இந்திய ஒப்பந்தம் இது வரை வடக்கு கிழக்கில் அமுல் படுத்தப்படவில்லை. இதை நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகின்றேன் யாருமே செவிமடுக்கவில்லை.இப்போதுதான
-
- 7 replies
- 2k views
-
-
க.பொ.த (சா/த) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு உங்கள் டயலொக் கையடக்கத் தொலைபேசியில் Exams என டைப் செய்து இடைவெளியின் பின்னர் உங்கள் சுட்டிலக்கத்தை குறிப்பிட்டு 7777 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்ரொயிட் தொலைபேசிகளில் doenets.lk என்ற செயலியின் (App) ஊடாகவும் அப்பிள் தொலைபேசிகளில் doenets என்ற செயலியின் (App) ஊடாகவும் பரீட்சை முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும். …
-
- 4 replies
- 2k views
-
-
"18 இராணுவத்தினர் பலியாகி 78 பேர் படுகாயமடைந்த மன்னார் சமரில் புலிகள் கடைப்பிடித்த உத்தி என்ன?: கொழும்பு ஆங்கில ஊடகம் [வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007, 21:41 ஈழம்] [சி.கனகரத்தினம்] மன்னாரில் கடந்த வாரம் நடைபெற்ற சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த உத்தி என்ன? என்று கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: குடும்பிலையை கைப்பற்றியதைத் தொடர்ந்து வடபகுதியில் சிறிலங்கா இராணுவ முன்னரங்க நிலைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டிப்பாகத் தாக்குதல் நடத்துவார்கள் என்று சிறிலங்கா புலனாய்வுத்துறை எச்சரிக்கை செய்திருந்தது. இந்தத் தகவல் இராணுவத்தினரை சென்றடையும் போது முன்னரங்க நிலைகளில் பாரிய எண்ணிக்கையிலான தமிழீழ விடு…
-
- 3 replies
- 2k views
-
-
சிறிலங்கா- சீனா கூட்டுச்சதி: விரைவில் வவுனியாவில் தமிழ்நாட்டை கண்காணிக்கும் முப்பரிமாண ராடார். வவுனியாவில் தமிழ்நாட்டை கண்காணிக்கும் வகையிலான ஜே.வை-11 என்ற முப்பரிமாண ராடாரை சிறிலங்காவுக்கு சீனா வழங்கியுள்ளதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பு சிங்கள ஊடகமான "லக்பிம" வெளியிட்டுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: சீனாவின் எலெக்ரோனிக் ரெக்னோலொஜி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட ஜே.வை-11 (JY-11) ரக தாழ்வாக பறக்கும் வானூர்திகளை கண்டறியும் முப்பரிமாண ரடார்களையும் அரசு கொள்வனவு செய்துள்ளது. இந்த ராடார்களை கொள்வனவு செய்வதற்கு அரசு கடந்த ஆண்டு கொள்வனவு பத்திரத்தை சமர்ப்பித்ததுடன் முற்பணத்தையும் செலுத்தியி…
-
- 9 replies
- 2k views
-
-
Posted on : Sat Jul 21 8:38:46 EEST 2007 புலிகளுடன் ஒப்பந்தம் செய்து குற்றமிழைத்தது இலங்கை! மனம் புழுங்குகின்றார் ஜனாதிபதி பயங்கரவாதத்திற்கு சட்டரீதியான பிரதேசம் ஒன்றைத் தாரைவார்த்து, உடன்படிக்கையொன்றைச் செய்ததன் மூலம் குற்றமிழைத்துள்ளது இலங்கை. அத்தகைய குற்றத்தை இழைத்த ஒரே நாடு இலங்கையைத் தவிர வேறெங்கும் இருக்க முடியாது. இவ்வாறு கூறியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை மஹரகம, தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 17ஆவது சம்மேளனம் தொடர்பாகத் தாம் அனுப்பி வைத்த ஆசிச் செய்தியிலேயே ஜனாதிபதி இப்படிக் குறிப்பிட்டிருக்கின்றார். ஜனாதிபதி அந்தச் செய்தியில் கூறியிருப்பதாவது: எமது வீரதீரமிக்க பாதுகாப்புப் படையினரால் மிலேச…
-
- 1 reply
- 2k views
-
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது Dec 21, 2025 - 11:18 AM தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தையிட்டி 'திஸ்ஸ' விகாரைக்காகச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் பதவி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விகாரைக்கு முன்பாக இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுள்ளதுடன், பாராளுமன்…
-
-
- 27 replies
- 2k views
- 1 follower
-
-
விரைவில் தமிழீழம் மலரும் என்கிறார் ஜஸ்வந்த் சின்ஹா – பாஜகவின் கொள்கையில் மாற்றம் [ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 00:19 GMT ] [ அ.எழிலரசன் ] சிறிலங்காவில் விரைவில் தமிழீழம் மலரும் என்று பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜஸ்வந்த் சின்ஹா சென்னையில் நேற்றுத் தெரிவித்துள்ளார். இவரது இந்தக்கருத்து, இதுவரை ஒன்றுபட்ட சிறிலங்காவை வலியுறுத்தி வந்த பாஜக, தற்போது அந்தக் கொள்கையை கைவிட்டு தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது. தமிழக பாஜக சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான சிறப்புக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜஸ்வந்த் சின்ஹா- …
-
- 21 replies
- 2k views
-
-
புலம்பெயர் உறவுகள் தாயக பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் – டக்ளஸ் அழைப்பு! நாட்டில் நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில் புலம்பெயர் மக்கள் தங்களுடைய தாயக பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அதற்காக உத்தரவாத்தினை தான் வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று( வியாழக்கிழமை) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ”பொருத்தமான சூழலை உருவாக்குவதல் மற்றும் உருவாகின்ற சூழலை பயன்படுத்துதல் என்ற தன்னுடைய…
-
- 14 replies
- 2k views
-
-
தமிழகத்தில் நிலம், வீடு முதலிய சொத்துகளை அயல் நாட்டினர் வாங்குவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சிறிலங்கா அகதிகள் தமிழகத்தில் சொத்து வாங்குவதை அனுமதிக்க இயலாது என்பது போல் தவறான பொருள் தரும் வகையில் சில பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தியர் அல்லாதவர் இந்தியாவில் சொத்து வாங்குவது குறித்த விதிமுறை இந் தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது. இந்திய அரசின் அசை யாச் சொத்து மேலாண்மை, கைய கப்படுத்துதல், மாற்றம் பற்றிய ஒழுங்குமுறை ஆகியன நடைமுறை யில் உள்ளன. பாகிஸ்தான், வங்கதேசம், சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், சீனா, ஈரான், நேபாளம் அல்லது பூடான் ஆகிய எந்த நாட்டின் குடியுரிமை பெற்றவரும…
-
- 3 replies
- 2k views
-
-
கைத்தொலைபேசி இணைப்புக்கள் வழமைக்கு திரும்பினயாழ்குடாநாட்டில் கடந்த 5 மாதங்களுக்கு பின்னர் டயலொக் ஜி.எஸ்.எம் கைத்தொலைபேசி இணைப்புக்கள் வேலைசெய்யத் தொடங்கியுள்ளது. இதேவேளை யாழ்குடாநாட்டில் 40 000 மக்கள் கையடக்கத் தொலைபேசி இணைப்புக்கள் வைத்திருக்கின்றமை தெரிந்ததே. இவ் இணைப்புக்கள் யாவும் கடந்த ஒகஸ்ட் மாதம் 11ம் திகதி முதல் சிறீலங்கா இராணுவத்தினர் நிறுத்திவைத்தனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 7 replies
- 2k views
-
-
Outside the TMVP office in Tirukkovil - White van with newspaper in place of number plate and Jeevendran and Inayapaarathi – Picture taken from inside our van through the windscreen - Picture by Uvindu Kurukulasuriya , TMVP child soldiers - Athula Vithanage pretends to take notes Picture by Uvindu Kurukulasuriya, From Left - Inayapaarathi, Jeevendran, an armed cadre, Sukumar Muralidharan, David Dadge and Uvindu Kurukulasuriya – Picture by Athula Vithanage and TMVP Tirukkovil van has no number plate Picture by Athula Vithanage In November 2005, in recognition of her service to the country and the world, then-President of Sri Lanka Chandrika Kumaratunga conferred on Ra…
-
- 2 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்படாட்டுப் பிரதேசமான பூநகரி கிராஞ்சி மீது நேற்றுக் காலை விமானப்படை விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் கொல்லப்பட்வர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு இராணுவப் பேச்சாளன் பிரிகேடியர் உதய நாணயகன்கார பி.பி.ஸிக்குத் தெரிவித்திருக்கிறார். விமானக் குண்டுவீச்சில 3 சிறுவர்கள் உட்பட எட்டுப் பொதுமக்கள் கொல்லப்பட்டும் பத்துப் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக பி.பி.ஸி. கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை : எப்போ எல்லாம் விமானப்டை தாக்குதல்களை மேற்கொள்கின்றதோ அப்போது எல்லாம் விடுதலைப் புலிகள் பொதுமக்கள் கொல்லப்படனர் என்ற பிரசாரத்தைத்தான் மேற்கொண்டு வருகின்றனர். இது…
-
- 8 replies
- 2k views
-
-
முல்லைப் பெரியாறு அணை விவாகரத்தில் கேரள கட்சிகளின் பிரச்சாரம் தமிழகத்தில் கேரள எல்லையோர மக்களை உசுப்பி விட்டுள்ளது. நேற்று திடீரென திரண்ட கம்பம் பகுதி விவசாயிகள் குமுளியை முற்றுகையிடப் போவதாக திரண்டனர். இத்தனைக்கும் போலீசார் 144 தடையுத்தரவு போட்டிருந்தனர். இந்த தடையையும் மீறி திரண்ட விவசாயிகள் போலீசாரின் தடையையும் மீறி எல்லையை நோக்கிச் சென்றனர். இந்த பேரளி நேற்று நடந்தது பதறிப்போன போலீசார் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் தெரிவித்ததோடு ,மேலதிக போலீசாரோடு சேர்ந்து மக்களை கேரள எல்லையை நெருங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். பின்னர் பேரணியாகச் சென்ற மக்களுடன் தேமாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி, தென்மண்டல ஐஜி ராஜேஸ்தாஸ் ஆகியோர் சமாதானப்படுத்தினர்.பின்னர் மக்கள் கிளம்பிச் சென…
-
- 4 replies
- 2k views
-
-
தமிழக தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி புலம்பெயர் தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரத்தியேகமாக கையடக்கத் தொலைபேசிகளுக்கு இந்தத் தகவல் நண்பர்கள் மூலம் பகிரப்படுவதாக புலம்பெயர் தமிழர் ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார். தமிழக அரசியலில் தமிழர், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற பதங்களை பெருவாரியாக பயன்படுத்தும் நாம் தமிழர் கட்சி, தமிழர்களே தமிழகத்தை ஆழவேண்டும் என்ற கோசத்தை முன்வைத்து தமது பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. இதனை மையப்படுத்தியே, தமிழகத்தில் தமது தேர்தல் பணிகளுக்காக புலம்பெயர் தமிழரிடம் இவ்வாறு நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளதாக எமக்குத் தகவலளித்த புலம்பெயர் இலங்கைத் தமிழர் தெரிவித்தார். …
-
- 25 replies
- 2k views
-
-
இலக்கானாரா? இலக்கு வைக்கப்பட்டாரா? [04 - November - 2007] [Font Size - A - A - A] -விதுரன்- விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இறந்துவிட்டார். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டுவிட்டார். இனி எவருடன் இந்த அரசு சமாதானம் பற்றிப் பேசப்போகிறது? கிளிநொச்சியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது தங்களுக்குக் கிடைத்த பெருவெற்றியாக அரசு கொண்டாடுகிறது. ஆனால், இது சமாதான முயற்சிகளுக்கு கிடைத்த பெருந்தோல்வியென்பதை அரசு மறந்துவிட்டது. இந்தப் படுகொலையானது சமாதானப் பேச்சுகளுக்கான வாய்ப்பை இல்லாது செய்துவிட்டது. விடுதலைப் புலிகளுக்கெதிரான படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வந்த நிலையில் அநுராதபுரம…
-
- 2 replies
- 2k views
-
-
20 நாடுகளில் இருந்து 205 அமைப்புகள் தமிழ் மக்கள் விடுதலைக்கு ஒன்று சேர்ந்து விடுக்கும் செய்தி. [Wednesday, 2014-01-15 09:22:17] News Service உலகம் எங்கும் வாழும் தமிழர்களாகிய நாம் - தமிழ் மக்களுக்கு விடுதலை, நீதி, சுதந்திரம் கிடைக்கும் வரை தமிழர்களின் குரலாக நாம் இருப்போம் என்றும் அதே போல் விடுதலை தேடி நிற்கும் மக்களுக்கும் குரல் கொடுப்போம் என்றும், தமிழர் திருநாள் - திருவள்ளுவர் ஆண்டு 2045 யில் கூறிக்கொள்ள விரும்புகிறோம். தமிழர்களுக்கு தேசிய அடையாளத்தை வழங்குவதும், சாதி சமய பேதங்களை கடந்து தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தி நிற்பதுவும், உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதுமான தமிழ்ப் புத்தாண்டில், அனைவருடனும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்…
-
- 26 replies
- 2k views
-
-
பெற்ற தகப்பனால் 'ஆமி புலனாய்வு ஆள்' என்று காட்டிக் கொடுக்கப்பட்ட மகன் 2011-01-16 03:02:24 வலிமேற்கில் உள்ள சாராய'பார்' ஒன்றில் தாகம் தீர்த்துக் கொண்டிருந்தார் 55 வயது மதிக்கதக்க நபர் ஒருவர். திடீரென அங்கு நுளைந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் குறிப்பிட்ட நபரின் கன்னத்தில் அறைந்து விட்டு அவரது பணம் மற்றும் சேட் பொக்கற்றில் இருந்த சில பொருட்களையும் பறித்துச் சென்றார். இதனை அவதானித்த சாராயக் கடை ஊழியர்கள் யார் அது என வினாவிய போது "அது ஆமிப் புலனாய்வு பொடியன். அதனால சும்மா விட்டுவிட்டன் இல்லாட்டி நடக்குறது வேற" என்று வீராப்பு பேசியுள்ளார். உடனடியாக செயலில் இறங்கிய சாராயக் கடை ஊழியர்கள் அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு தகவல் அனுப்பியுள்ளார்கள். அங்கு வி…
-
- 0 replies
- 2k views
-
-
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..? என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா… கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா… நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா… செம்மொழி போற்றும் செந்தமிழ் நாட்டில் தமிழிற்கேன் பஞ்சம்? தமிழை விற்று பதக்கம் வாங்கும் தமிழா கேள் கொஞ்சம்… கம்பனின் வரிகள்… வள்ளுவன் குறள்கள்… பாரதி கவிகள் எங்கே? தொன்று தொட்டு… பழமை பாடும்… தமிழர் பெருமை எங்கே? என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா யேசு, புத்தன், காந்தி சொன்ன அகிம்சை வழியைக் கேளு – தினம் தமிழின் செழுமை படித்து வந்தால் தணியும் கொலவெறி பாரு..! ஆஸ்கார் வாங்கிய தமிழன் சபையில்…
-
- 10 replies
- 2k views
-
-
மகிந்த ராஜபக்ஷவின் இனக்கொலையை சரியெண்டு வாதிடும் சோ என்கிற பார்ப்பணன் !!!!! அண்மையில் தமிழ்நாட்டில் இந்தப் பாம்பு கலந்துகொண்ட நிகழ்வொன்றில் அவன் கக்கிய விசமும் அதற்கு பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் கரகொலி ஆதரவையும் பாருங்கள். பார்க்கவே இதயம் கொதிக்கும் அளவிற்கு அவன் பேசுகிற பேச்சு...... யாம் பெற்ற இன்பம் பெற இவ் வைய்யகம் .............
-
- 6 replies
- 2k views
-
-
சிங்கள அரசியல்வாதிகள் சிலரின் நடவடிக்கையினாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் வெளியிடுகையில், சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியது. இலங்கை மீதான தாக்குதல் தொடர்பில…
-
- 21 replies
- 2k views
-
-
அரச படையினரால் மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமெனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள சிவிலியன்களைக் கருத்திற் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளும், அரச படையினரும் யுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்துவதன் மூலம் சிவிலியன்களைப் பாதுகாக்க முடியுமென அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள சிவிலியன்களைப் பாதுகாக்கும் தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்குக் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையொன்றின் மூலம் ஆனந்தசங்கரி இந்தக் கருத்துகளை முன்வை…
-
- 6 replies
- 2k views
-
-
வருமானத்துக்கு வழி இல்லாத தமிழர்கள் மேல்மாகாணத்தில் எப்படிக் குடியேற முடியும்? கேட்கிறார் - கோத்தபாய: வடக்கு, கிழக்கிலிருந்து வந்து மக்கள் மேல்மாகாணத்தில் குடியேறும் செயற்பாடு விடுதலைப் புலிகளின் திட்டமிட்டலுடன் இடம்பெறுகிறதா என்று பார்க்கவேண்டியிருக்கிறது. வருமானத்துக்கு எந்த வழிகளும் இல்லாத இவர்கள் பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து இங்கு வந்து குடியேறுகின்றனர். இவர்களுக்கு எங்கிருந்து இந்தப் பணம் வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே அவர் இக் கேள்வியை எழுப்பியுள்ளார்.; அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கொழும்புக்குள் குண்டு நிரப்பிய வாகனம் நுழைவதைத் தடுப்பது…
-
- 1 reply
- 2k views
-
-
மைத்திரியை தெரிவுசெய்ததில் தமிழர்களுக்கு கணிசமான பங்கு இருக்கின்றது எனப் பலரும் இப்போது எழுதி வருகின்றனர். அதிலும் போரினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலேயே வாக்களிப்பு வீதம் மிக உச்சத்தில் இருக்கின்றது. அவ்வாறு மைத்திரியை தெரிவு செய்ததில் கணிசமான பங்கைப் பெற்ற முல்லைத்தீவின் ரகசியம் என்ன? முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சந்தியை அண்மித்த பகுதி. அமைதியான அந்த சிறுநகரத்து இளைஞர்கள் சில பட்டாசுகளை வாங்கிக் கொழுத்திக் கொண்டிருக்கின்றனர். அதன் வெடிசத்தத்தை மீறி அங்கு கூடியிருக்கும் இளைஞர்களின் சந்தோசக் கோஷம் கேட்டுக் கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் புலிகளின் கோட்டையாக இருந்த இந்த நகர இளைஞர்கள் நீண்ட இடைவெளியின் பின்னர் இப்படி…
-
- 1 reply
- 2k views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி புலிகளைத் தவறாக வழிநடத்தினார் புதுடில்லியில் வைகோ. குற்றச்சாட்டு` இலங்கையில் சமாதானத்தை உருவாக்கும் தமது பணியில், அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகள் இயக் கத்தை தவறான பாதை யில் வழிநடத்தினார். இவ்வாறு கூறியுள்ளார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளர் வைகோ. புதுடில்லி வந்துள்ள வைகோ. அங்குள்ள செய்தி ஏஜென்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். ராஜீவ் காந்தி தவறிழைத்தார் என்பதனை நான் உறுதியாகக் கூறுகிறேன். அதனை நான் மாற்றுவதற்கில்லை. 1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்னர், பிரதமர் ராஜீவ் காந்தி வேண்டுமென்றே விடுதலைப் புலிகளைத் தவறாக வழிநடத்தினார். இதில…
-
- 6 replies
- 2k views
-
-
இலங்கை விடயத்தில் மேற்குலகம் ஒதுங்கியது ஏன்? விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தும் வகையில் அனைத்துலக சமூகம் தன்னாலான அழுத்தத்தைப் பிரயோகித்தது. ஆனால் புலிகள் அமைப்பு மற்றொரு முறை மீண்டெழுவதை விரும்பாத இலங்கை ஜனாதிபதி அந்த அழுத்தங்களுக்கு அடிபணியாததால்தான் இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்ள மேற்குலகம் தயங்கியுள்ளதாம். தாய்லாந்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இராஜதந்திரியாகப் பணியாற்றும் நெவில் டி சில்வா எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம். இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் வாழும் தமிழர்களின் மனங்களில் கோபம் அல்லது ஏமாற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. சுதந்திரத் தமிழ்த் தாயகமாம் ஈழம் என்ற தங்கள் கனவை மேற்கு நாடுகள் ஆதரித்து நிற்கும் எனத் தமிழர்கள் கருதிய…
-
- 6 replies
- 2k views
-