ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
நா.உ. ஜெயானந்தமூர்த்தியின் சகோதரர் சுட்டுப் படுகொலை ஜதிங்கட்கிழமைஇ 20 ஓகஸ்ட் 2007இ 22:26 ஈழம்ஸ ஜந.ரகுராம்ஸ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தியின் மூத்த சகோதரர் சேனாதிராஜா தியாகச்சந்திரன் (வயது 55) இன்று இரவு மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் விபத்தினால் கொல்லப்பட்டுள்ளதாக முதலில் வெளியான செய்திகள் தெரிவித்த போதிலும்இ வாழைச்சேனை மருத்துவமனை வட்டாரங்கள் அவரது உடலில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் இருப்பதனை உறுதிப்படுத்தியுள்ளன. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர்இ இன்று திங்கட்கிழமை மாலை வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போ…
-
- 8 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளித்து, "இலங்கை மண்" வானொலி நாடக ஆசிரியரான படுகொலை செய்யப்பட்ட பொன். கணேசமூர்த்திக்கு தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன், "மாமனிதர்" விருது வழங்கி மதிப்பளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 2k views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, மாநகர முதல்வரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வைப் புறக்கணித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், வெளிநடப்புச் செய்தனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு இன்று (18) காலை 9 மணியளவில் ஆரம்பமாகவிருந்த நிலையில், பொது மக்கள் அணிதிரண்டு, மாநகர முதல்வரின் அலுவலகம் மற்றும் சபை வாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார…
-
- 16 replies
- 2k views
- 1 follower
-
-
நேவி சம்பத் கைது தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் கைதுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இதனை தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினை சேர்ந்த பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி என அழைக்கப்படும் நேவி சம்பத் கைதுசெய்யப்பட்டுள்ளார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். ரவிராஜ் கொலை கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் தலைமறைவாகியிருந்ததை தொடர்ந்து நீதிமன்றம் அவரிற்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்…
-
- 5 replies
- 2k views
-
-
எங்களுக்கு அரசியல் கற்பிக்க வேண்டாம் – புலம்பெயர் அமைப்புக்களுக்கு நெத்தியடி கொடுத்த தாயக மக்கள். Published on August 23, 2015-9:39 am · No Comments கடந்த 17ஆம் திகதிவரை இலங்கையில் மட்டுமல்ல, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலக நாடுகளிலும் தேர்தல் ஆரவாரங்கள் பிரசாரங்கள் மிகத்தீவிரமாக நடைபெற்றன. லண்டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், ஒஸ்ரேலியா, உட்பட ஐரோப்பிய நாடுகள் எங்கும் கூட்டங்களும் தேர்தல் பிரசாரங்களும் என்று அமர்க்களமாகவே காணப்பட்டது. லண்டன் கனடா, ஒஸ்ரேலியா நாடுகளில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் வானொலிகள் என எங்கும் இந்த தேர்தல் ஆரவாரமாகத்தான் காணப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பரிசில் தமிழர்கள் பெரும்தொகையாக கூடும் லாச்சப்பலில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. என்…
-
- 29 replies
- 2k views
-
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதன் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. - பண்டார வன்னியன் Friday, 30 March 2007 12:02 தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சேலத்தில் அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் தமிழ் மாநிலக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழ் மக்களை ஒடுக்க சிறிலங்கா அரசு பாகிஸ்தானிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் ஆயுதங்கள் பெறுவதைத் தடுக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களுக்கான தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும். அமைக்கப்படும் மாநிலத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இலங்கை மத்திய அரசில் தமிழர்களுக்குப் பிரதிந…
-
- 3 replies
- 2k views
-
-
வரணியில் உந்துருளியில் பயணித்த படை அதிகாரி உட்பட இருவரை காணவில்லை. வரணி படைத்தளத்தில் இருந்து காலை வேம்புராய் படைத்தளத்திற்கு உந்துருளி ஒன்றில் புறப்பட்ட படையினர் இருவர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதிகாரி நிலையுடைய படையினர் ஒருவரும் அவரது பாதுகாப்பு சிப்பாயுமே உந்துருளியுடன் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவருகின்றது. நேற்று காலை புறப்பட்டுச் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வேம்புராய் படைத்தளத்திற்கு செல்லாமையால் இவர்களை படையினர் இப்பிரதேசத்தின் பல இடங்களில் தேடிபார்த்ததாகவும் மாலை வரை இவர்கள் குறித்தான தகவல்கள் எவையும் படையினருக்கு கிடைக்காமையால் இவர்கள் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. படையினரின் உயர…
-
- 4 replies
- 2k views
-
-
கிழக்கே போகும் ரயில் http://www.virakesari.lk/VIRA/cartoon/index.asp?index=-1
-
- 1 reply
- 2k views
-
-
பாதுகாப்புத்துறைப் பேச்சாளாரும் அமைச்சருமான கேஹலிய ரம்புக்வெலவின் மகன் கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் மற்றும் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் என்பவை தொடர்பில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளார். எனினும் இந்தக் குற்றத்தை கல்லூரியின் அதிபர் விலக்கிக் கொள்ளும் வகையில் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல பாடசாலை அதிபரை மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டைக் கல்லூரியின் அதிபர் விலக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைவிரல் அடையாளங்களின் அடிப்படையில் இந்தக் குற்றங்களுக்காக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித்திற்கும் ஏனைய நான்கு மாணவர்களுக்கும் தண்டனை வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஏனைய மாணவர்கள் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்…
-
- 4 replies
- 2k views
-
-
சிறிலங்கா படையினர் தற்போது மேற்கொண்டு வரும் அனைத்து படை நடவடிக்கைகளுக்கும் எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தும் எதிர்ச் சமரின் ஒட்டுமொத்த தளபதியாக கேணல் தீபன் செயற்படுவதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2k views
-
-
நாங்கள் செய்துள்ள சாதனையை ஜெயலலிதா நேரில் வந்து பார்க்கட்டும்- ராஜபக்சே அட்டு (மாலத்தீவு): தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வரலாம். அவரை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் தமிழர் பகுதிகளில் செய்துள்ள சாதனைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன். ஜெயலலிதாவும் இதை நேரில் வந்து பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும் என்று கூறியுள்ளார் ராஜபக்சே. மாலத்தீவில் நடைபெறும் 17வது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த ராஜபக்சே அங்கு டைம்ஸ் நவ் டிவிக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பார்கள் என்ற அச்சம் தனக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை இலங்கைக்கு வரவேற்பதாகவும் அவர் சொல்லியுள்ளார். அந்த …
-
- 8 replies
- 2k views
-
-
தேர்தல் நடத்தாலும், நடக்காவிட்டாலும் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை வெளிவரும் என்பது உறுதி என தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். குறிப்பாக யுத்த குற்றம் தொடர்பான சர்வதேச விசாணையின் அறிக்கையினை ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிட்டே தீரும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றாலும், நடைபெறா விட்டாலும் வெளிவரும் அறிக்கை தடைப்படாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் ஜ.நாவின் அறிக்வை வெளிவரவிருந்தது. இவ்வறிக்கை தாமதப்படுத்தப்படும் போது மனித உரிமைகள் பேரவையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒரு முறைதான் இவ்வறிக்கை தாமதப்படுத்தப்படும் என்று அவர் தெரிவி…
-
- 26 replies
- 2k views
- 1 follower
-
-
யால தாக்குதல்கள் சொல்லும் செய்தி -சி.இதயச்சந்திரன்- 1995 இல் யாழ். குடாவிலிருந்து வெளியேறிய புலிகள் வன்னியில் திரளும் போது, ஜெயசிக்குறு படை நடவடிக்கை மூலம் அவர்களை அழித்து விடலாமென கனவு கண்டார் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா. அது நடக்கவில்லை...விபரங்களுக்கு
-
- 1 reply
- 2k views
-
-
எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும்! - முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் [Wednesday 2014-07-16 18:00] பலவித சூறையாடல்களுக்குள் அகப்பட்டிருக்கும் வடமாகாண மக்களாகிய நாம் எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய அபிவிருத்திக்காக உள்ளூராட்சியினை வலுப்படுத்தல் என்ற தலைப்பில் இன்று யாழ்.நகர விடுதியில் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், தலைவர்கள், செயலாளர்களுக்கு நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தனது உரையில், பிரதேச நல்லாட்சி விழுமியங்களை முன்னிலைப்படுத்தும் விழிப்பூட்டல் நிகழ்வு ஒன்று எம்மிடையே நடைபெறுவது மி…
-
- 0 replies
- 2k views
-
-
மூன்று மாணவர்கள் விஷம் குடித்தனர் இலங்கையில் போரை நிறுத்த கோரி அமைதி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்காததால் பெரிய குளத்தில் மூன்று மாணவர்கள் விஷம் குடித்தனர் . அவர்களுக்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது . இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது . http://www.dailythanthi.com/FlashNews/FlashNews.html
-
- 11 replies
- 2k views
-
-
[size=3] LIVE coverage : பிரித்தானியா பாராளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாடு ![/size] [size=3] நாடுகடந்த தமிழீழ .அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்விற்கு முன்நிகழ்வாக, பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நவ 22ம் நாள் மாநாடொன்றும் இடம்பெறுகின்றது.[/size] [size=3] நாதம் ஊடகசேவை Live : http://naathamnews.com/?page_id=306[/size] [size=3] உலகின் பல்வேறு நாடுகளில் வருகை தந்துள்ள தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானிய அரசியல் பிரதிநிதிகள் என பலரும் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.[/size] [size=3] ஈழத் தமிழர்தாயகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக…
-
- 32 replies
- 2k views
-
-
நண்பனையும் எதிரியையும் இந்தியா அடையாளம் காண நல்ல சந்தர்ப்பம் [15 டிசம்பர் 2008, திங்கட்கிழமை 10:10 மு.ப இலங்கை இலங்கையில் யுத்தத்தை நிறுத்தக் கோரும் தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கருத்தை, இந்திய நிலைப்பாடாக இலங்கைக்குத் தெரிவிப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இயன்ற விரைவில் கொழும்புக்குச் செல்வார் என, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடனான தமது சந்திப்பை அடுத்துத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவித்தார். அந்த அறிவிப்பு விடுத்து பத்துநாட்கள் கடந்து விட்டன. ஆனால், இந்திய வெளிவிவகார அமைச்சரின் உத்தேச இலங்கை விஜயம் இன்னும் கைகூடவே இல்லை. இந்தத் தாமதத்திற்கு - விஜயம் இழுபறிப்படுவதற்கு - பல காரணங்கள் பல தரப்பினாலும் கூறப்படுகின்றன. மும்பையில…
-
- 5 replies
- 2k views
-
-
http://www.nowpublic.com/world/colombo-ste...mbardment-vanni
-
- 2 replies
- 2k views
-
-
சம்மந்தர் போட்டியிடாவிட்டால் சிவாஜிலிங்கம் களமிறங்குவார். இரண்டு சிங்கள தேசியவாதிகளை ஆதரிக்காது ஒரு தமிழன் களமிறங்குவது அவசியம். இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முடிவு செய்திருப்பதாக அந்த கூட்டமைப்பை சேர்ந்த இலங்கையின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். ஒருவேளை எங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளரை அதிபர் தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இலங்கையில் போர் முடிவடைந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் அங்குள்ள தமிழ் மக்களின் நிலைமை …
-
- 15 replies
- 2k views
-
-
அதிகமாக மகிழ்ச்சியடைய வேண்டாம்- பாரதூரமான தாக்குதலுக்கு பிரபாகரன் தயாராகிறார்-எல்லாவல மேதானந்த தேரர் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரதூரமான தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். கிழக்குப் பிரதேச பயணத்தை முடித்து விட்டு கண்டி திரும்பிய அவர் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குருதிக் கொடை நிகழ்ச்சியில் பேசியதாவது: மாவிலாறு மற்றும் சம்பூர் வெற்றிகளால் மிக அதிகமாக நாம் மகிழக் கூடாது. தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் பாரதூரமான தாக்குதலுக்கு தயாராகின்றனர். கிழக்குப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளானது பாரிய பாரதூரமான தாக்குதல் ஒன்றுக்கு பிரபாகரன் தயாராவதையே வெளிப்படுத்துகி…
-
- 4 replies
- 2k views
-
-
கேபி யிற்கு 100 ஏக்கர் காணி, கருணாவுக்கு ஆலை வளாகம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதக் கொள்வனவுக்குப் முன்னாள் பொறுப்பாளராக இருந்து பின்னர் இலங்கை அரசுடன் இணைந்து போராட்டத்தினை அழிப்பதற்கு இலங்கை இந்திய அரசுகளுக்கு பக்கபலமாக செயற்பட்ட கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தற்போது வெளிப்படையாக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியத்தினை சிதைக்கும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுவருகின்றார். அவரைப் பயன்படுத்தி புலம்பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதறடித்து அதன் மூலம் புலம் பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளுக்கு அல்லது இனப்படுகொலைக்கு எதிரான விசாரணைகளுக்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்துவதனை…
-
- 4 replies
- 2k views
-
-
சிறிலங்காவின் நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் வரும் என பிரதம மந்திரி கோர்டன் பிறவுண் இன்று எச்சரிக்கைவிடுத்துள்ளார். போரை நிறுத்தி மக்களுக்கு உதவவேண்டும என்பதை பல அழைப்புகள் மூலம் பிறவுண் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கூறியிருந்ததாக டவுணிங் ஸ்ரீற் கூறியுள்ளது. மக்களுக்கு உதவி செய்ய மனிதாபிமான அமைப்புக்களுக்கு வழிவுடுமாறும், விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு மக்களை வெளியேறவிடவிட வேண்டும் என்றும் அத்தோடு சிறிலங்காவின் நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் வரும் என்பதை சிறிலங்கா விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார. http://www.pathivu.com/news/1856/54//d,view.aspx
-
- 4 replies
- 2k views
-
-
வீரகேசரி இணையம் - வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்த திருவிழா உற்சவம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ளது. ஆலய சுற்றாடலில் பொது மக்களின் நன்மை கருதி நான்கு வீதிகளிலும் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆலய சுற்றாடலில் பொது மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸாருடன் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஊள்ளூர் தொண்டர் அமைப்புகளும் கடமையில் ஈடுபடவுள்ளன.
-
- 22 replies
- 2k views
-
-
(நா.தனுஜா) இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது. வெளிவிவகார அமைச்சரின் கருத்தொன்றை மேற்கோள் காண்பித்து, அதற்கு ஆதரவாக சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் கருத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் இறையாண்மையை உறுதிசெய்வதில் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதோடு, இலங்கை ஹொங்கொங்குடன் வழமையான தொடர்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார். அதனை …
-
- 14 replies
- 2k views
- 1 follower
-
-
புங்குடுதீவு மாணவியின் இறுதி ஊர்வலம் இலங்கையின் புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை புலனாய்வு காவல்துறையினர் ஞாயிறன்று மாலை கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்குத் தாங்களே தண்டனை வழங்கவேண்டும் என்றும், ஆகவே அந்த ஐவரையும் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்றும் புங்குடுதீவு ஊரவர் நூற்றுக்கணக்கில் திரண்டு காவல்துறையினரிடம் கோரி வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி மாணவி வித்யாவின் கொடூரமான கொலைக்கும், பாலியல் பலாத்காரத்துக்கும் இவர்களே காரணம் என கண்டறிந்து இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஐந்து பேரும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து …
-
- 5 replies
- 2k views
-