ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
மும்பையில் இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நேரலை மும்பையில் இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி பங்கேற்கும் நிகழ்வானது இப்பொழுது இந்திய நேரப்படி இன்று (04.10.2009) மாலை 6 மணிக்கு நேரலை செய்யப்படுகிறது. http://www.meenagam.org/?p=12478
-
- 3 replies
- 1.9k views
-
-
[Wednesday, 2011-08-24 23:27:55] கிளி நொச்சி பாரதி புரத்தில் மர்ம மனிதர்கள் ஆயுதங்களுடன் நிர்வாணமாக உலாவுகின்றனர். இதனால் மக்கள் பீதியிலும் குளப்பத்திலும் உள்ளனர். என்று பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்ததை அடுத்து ஆளும் தரப்பினர் அக்கூற்றுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை துறைமுக விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பியான எஸ். ஸ்ரீதரன் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார். மலையகத்தில் ஆரம்பித்த மர்ம மனிதனின் பீதி கிழக்கிற்கு சென்று தற்போது வடக்கிற்கு வியாபித்துள்ளது. மர்ம மன…
-
- 1 reply
- 1.9k views
-
-
வன்னியில் இரண்டரை லட்சத்திற்கும் குறைவான மக்களே இருக்கின்றனர் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இராணுவக்கட்டுப்பாடற்ற வன்னிப்பகுதியில் 2 லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் குறைவானவர்களே இருக்கக்கூடும் என அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் வன்னியிலுள்ள மக்கள் தொகைகுறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதõவது: என்னால் எண்ணிக்கையைக் கூற முடியாது. ஆனால், நிச்சயமாக இரண்டரை லட்சம் மக்கள் அங்கில்லை. இந்தவிடயத்தில் நான் விஞ்ஞானபூர்வமான ஒரு ஆய்வை மேற்கொண்ட…
-
- 0 replies
- 1.9k views
-
-
பரந்தன் பகுதியில் கனேடியப் பிரஜை ஒருவர் கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இரவு 9 மணியளவில் பரந்தன் குமரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாயகத்தின் கிளிநொச்சி குமரபுரம் பகுதியில் உள்ள தனது காணிகளைப் பார்வையிடுவதற்காக கனடாவில் இருந்து வந்த நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கனேடியப்பிரஜையான அந்தோனிப்பிள்ளை மகேந்திரராசா வயது 53 என்பவரே இவ்வாறு கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டவராவார். இதனால் பரந்தன் குமரபுரம் பகுதியில் பதற்றமான நிலைமை காணப்படுகின்றது. இந்தப்படுகொலை தொடர்பில் உடனடியாக காரணங்கள் எதுவும் தெரியவரவில்லையாயினும் பாதுகாப்பு தொடர்பில் இந்தக்கொலை பாரிய அச்சத்தைத் தோற்றுவித்துள்ளதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர…
-
- 5 replies
- 1.9k views
-
-
இந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. மூன்று வாரங்கள் கூட நீடிக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் எனக்கும் பெரும்பான்மை இருக்கவில்லை, அனுரகுமார திசநாயக்கவிற்கும் பெரும்பான்மையில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்படியென்றால் எங்கள் இருவருக்கும் இடையில் என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பியுள்ளார். நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தேர்தலில் தோல்வியடைந்தால் என்னை வீட்டிலிருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனக்கு பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின…
-
-
- 24 replies
- 1.9k views
- 1 follower
-
-
ஜனாதிபதியிடம் பதவிப்பிரமாணம் - ததேகூவுக்குள் சர்ச்சை வட மாகாண முதல்வர், யாரிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா? பதிலளிக்கிறார் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன். வடமாகாண சபையின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும், வடமாகாண மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதால், ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என்ற கருத்துக்கே ஆதரவு அதிகமாக இ…
-
- 23 replies
- 1.9k views
-
-
யாழ்ப்பாணத்தில் மாம்பழ உற்பத்தி வலயம்! இலங்கையில் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயங்களை யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேசங்களில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த மாம்பழ உற்பத்தி வலயங்கள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. உலக வங்கியின் நிதியுதவியுடன், நடைமுறைப்படுத்தப்படும் நவீன விவசாய திட்டத்தின் கீழ் இந்த மாம்பழ உற்பத்தி வலயம் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் ஒரு இலட்சம் சிறந்த ரக மாங்கன்றுகள் செய்கை பண்ணப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://athavannews.com/யாழ்ப்பாணத்தில்-ம…
-
- 8 replies
- 1.9k views
-
-
முல்லைத் தீவின் இறுதிக்கட்ட பகுதியில் கடும் போர் புரிந்துவரும் விடுதலைப்புலிகள், ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி வருவதாக இலங்கை வெளியுறவு மந்திரி ரோகித பொகல்லகமா ஒப்புதல் அளித்து இருக்கிறார். கடும் போர் இலங்கை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 சதுர மைல் பரப்பளவில் மட்டுமே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாகவும், அதில் 20 சதுர மைல் பரப்பளவை, பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து இருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்து உள்ளது. இறுதிக்கட்ட பகுதிகளான புதுக்குடியிருப்பு, இரணப்பாலை ஆகிய இடங்களில், கடுமையான போர் புரிந்து வரும் விடுதலைப்புலிகள், ராணுவத்தினரின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி வருவதாக வெளியுறவு மந்திரி ரோகித பொகல்லகமா கூறி இருக்கிறார். …
-
- 0 replies
- 1.9k views
-
-
தாயின் கள்ளக் காதலனான 66 வயது முதியவரால் 26 வயது மகள் இன்று கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொகரல்லையில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மத்திய வங்கியில் பயிலுனராகப் பணியாற்றும் சந்திராணி பிரியங்கலா என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார். வீதியில் பஸ் இற்காக காத்து நின்றபோதே கத்தியால் குத்தப்பட்டார். படுகொலையாளியும் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார். முன்விரோதமே இப்படுகொலைக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9353:-66-26-&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 2 replies
- 1.9k views
-
-
[Wednesday March 28 2007 10:52:42 AM GMT] [யாழ் வாணன்] பிரிட்டன் பாராளுமன்ற அனைத்துக்கட்சி குழு வலியுறுத்தல் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வை காண்பதற்கு பிரிட்டன், இலங்கை அரசாங்கத்துக்கு உறுதியான ஆதரவை வழங்கவேண்டுமென வலியுறுத்தியுள்ள பிரிட்டன் பாராளுமன்றத்தின் அனைத்துக்கட்சி குழு, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட விமானத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் பிரிட்டன் பாராளுமன்றத்தின் அனைத்துக்கட்சிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். இது பாரதூரமானது. சமாதான செயல்முறையை ஆரம்பிப்பதிலும…
-
- 4 replies
- 1.9k views
-
-
உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்: இன விடுதலைக்காக முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமரன் நினைவிடத்திலேயே இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஜூன் 5 1974இல் பொன் சிவகுமாரன் வீரமரணம் அடைந்தார். தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டச் செயல்களைப் புரிந்த சிவகுமாரன் பிற்கால ஈழ விடுதலைப் போராட்ட எண்ணத்திற்கும் இயக்கங்களுக்கும் வழிகாட்டியாக செயற்பட்டார். இவரது 44ஆவது நினைவு தினம் நாளை ஆகும். இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், முன…
-
- 9 replies
- 1.9k views
-
-
தமிழ் மக்களை ஏமாற்றும் பேச்சுவார்த்தை நாடகத்தின் நடிகர்கள் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்துவது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கெனப் பலரும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அது நிஜமன்று. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை சர்வதேச அழுத்தத்திற்கு உடனடியாக ஒத்தணம் கொடுக்கவேண்டும். இல்லையேல் நிலைமை மோசமாகி விடும். இதன் காரணமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது போல நடிக்க வேண்டும். அந்த நடிப்பிற்கு அரங்கும் நடிபங்காளர்களும் தேவை. அதே நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே ஒரு இயங்கு தளம் பேச்சுவார்த்தை நடத்துவதாகும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் விட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு அடியோடு உடைப்பட்டு போகும். எனவே பேச்சுவ…
-
- 11 replies
- 1.9k views
-
-
சீமான் ‘உருவாக்கும்’ புதிய வரலாறு எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி விடுகிறார். தந்தை பெரியார் அவர்களுக்குப் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பெரியார் அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். சக்கர நாற்காலியில் அழைத்து வருகிறார்கள். - சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் 25.12.2010,சனிக்கிழமை, நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சீமான். எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதலமைச்சராக 1977 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். தந்தை பெரியார் அவர்களோ 1973 ஆம் ஆண்டு இறுதியில் இறந்து போய் விட்டார். தான் முதல்வர் ஆவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போய்விட்ட பெரியாரைச் சக்கர நாற்காலியில் வைத்து எம்.ஜி.ஆர் எப்படி மேடைக்கு அழைத்து வந்திருக்க முடியும் என்பது நமக்குப் புரிய…
-
- 3 replies
- 1.9k views
-
-
பிள்ளையானின் பிரத்தியேக செயலாளரும், ரி.எம்.வி.பி யின் தலைவருமான ரகு கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டமை பல ஊடகங்களிலும் வெளிவந்த செய்திகள். ஆனால் சில வெளிவராத அதிர்ச்சித்தகவல்கள் தற்பொழுது எமக்குக் கிடைத்திருக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்ததனால்பிள்ளையானி
-
- 0 replies
- 1.9k views
-
-
இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி அத்தியாயத்தில் இந்தியா போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தியது:- 24 மார்ச் 2011 வன்னியில் இடம்பெற்றஇறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி அத்தியாயத்தில போர்நிறுத்தம் ஒன்று தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்ததாக விக்கிலீக்ஸ் தனவல்களை வெளியிட்டுள்ளது. அப்போது இலங்கையின் அமெரிக்கத் தூதராலயத்தில் உயர் நிலை அதிகாரியாக கடமையாற்றிய பீட்டர் பர்லே தனது குறுந் தகவல் மூலம் இராஜாங்கத் திணைக்களத்துக்கு இது குறித்த செய்திகளைப் பரிமாறியதாக விக்கிலீக்ஸ் குறிப்பட்டுள்ளது. உக்கிரமான இறுதிப் போரின் போது இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோர் இலங்கைக்கு அவசர விஜயம் ஒன…
-
- 5 replies
- 1.9k views
-
-
'இந்து' என்.ராம் பேட்டி இலங்கையில் பார்த்தது..! போரினால் தன் சொந்த நாட்டிலேயே சொந்த பந்தங்களையும்வீடு வாசல்களையும் இழந்து அகதிகளாக மாறியிருக்கும் ஈழத் தமிழர்களை, அவர்கள் அடைபட்டுக் கிடக்கும் முகாம் களுக்குச் சென்று சந்தித்ததோடு, இலங்கை ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்ஷேவையும் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், 'இந்து' நாளிதழின் முதன்மை ஆசிரியர் என்.ராம். ''ஈழத் தமிழர்கள் அடை பட்டுக் கிடக்கும் முகாம்கள், இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான அகதிகள் முகாம்களைவிட மேம்பட்டதாக இருக்கிறது...'' என்று அவர் செய்தி வெளியிட்டிருக்கிறார். இதையட்டி அவர் வெளி யிட்டிருக்கும் படங்கள் மற்றும் கருத்து களை கடுமையாக விமர்சிக்க ஆரம் பிக்கின்றன, ஈழத் தமிழர் ஆதரவு இ…
-
- 5 replies
- 1.9k views
-
-
தமிழக தேர்தல்: அதிமுக பெரு வெற்றி ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளில் அக்கூட்டணி 201 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி சுமார் 36 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. ஜெ. வாக்காளருக்கு நன்றி தமிழகத் தேர்தல்களில் அதிமுக பெரும் வெற்றி பெற்றுள்ளதற்கு வாக்காளர்களுக்கு அதிமுக தலைவர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை சிறப்பாக நடத்தியதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை அடுத்த 18 மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு தாம் முன்னுரிமை தரப்போவதாகக் கூறிய அவர், திமுக ஆட்சி தமிழகத்தி…
-
- 3 replies
- 1.9k views
-
-
ஜெனரல் பொன்சேகா கடந்த திங்கட்சிழமை (8) கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் மீது சற்று நேரத்திற் முன்னர் காவல்துறையினரும், காடையரும் இணைந்து கடும் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினரும், காடையர்களும் இணைந்து கடும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். கல்ஃப்றொப்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2,000 இற்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அணிதிரண்டு, நீதிமன்றத்தை நோக்கி செல்ல முற்பட்ட போது அவர்கள் மீத…
-
- 20 replies
- 1.9k views
-
-
பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்றை பெற்றுத்தருவார் என்று நம்புகிறேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரவித்துள்ளார் மேலும், "நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதே நேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன். நா…
-
- 10 replies
- 1.9k views
-
-
2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விருந்துபசாரமொன்று சபாநாயகரின் இல்லத்தில் இடம்பெற்றது. (படங்கள்:சுதத் சில்வா) ' http://tamil.dailymirror.lk/--main/94098-2013-12-22-10-17-58.html
-
- 23 replies
- 1.9k views
-
-
Nimalka Fernando மகிந்த தன்னை ஒரு சிங்கள அரசனாக எண்ணிக்கொண்டு யுத்த வெறி பிடித்து யுத்த வெற்றிக்காக அலையும் ஒரு பைத்தியம் என்று சொல்கிறார் NIMALKA FERNANDO எனும் கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை வழக்கறிஞர். மகிந்த கூட்டமே ஒரு சைகோ கூட்டம் எங்கிறார் இந்த வழக்கறிஞர். கடந்த சிலவருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் அதன் இராணுவ மூலோபாயத்தை உருவாக்கிய விதத்தித்திலிருந்து, அது அரசியல்மயப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இறங்குவதில் அக்கறைகொண்டிருக்கவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் எந்த அரசியல் தீர்வையும் முன் வைக்கப் போவதில்லை. அப்படி ஒன்றே அவர்களிடம் இல்லை. தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல.. சிங்கள மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாத்தல், மனித…
-
- 10 replies
- 1.9k views
-
-
"தம்பி' படத்தில் மாதவனின் சமூகக் கோபத்தையும், சீற்றத்தையும் பார்த்தவர்கள் மிரண்டு போய்தான் இருப்பார்கள். ஈழத் தமிழர் பிரச்சினையில் அப்படத்தின் இயக்குனர் சீமானின் கோபமும் அப்படித்தான் இருக்கிறது. ஈழத்தை "எங்கள் தேசம்' என்றும், இந்தியாவை "நீ...', "உன் தேசம்' என்றும் அழைப்பதிலிருந்தே ஈழப் பிரச்சினை அவரை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இயலாமையும், ஏக்கமும், சினமும், சீற்றமுமாய் வெளிப்பட்ட சீமானின் விரிவான பேட்டி:- ஈழப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலை பற்றிய உங்கள் விமர்சனம் என்ன? விமர்சனமே வேண்டியதில்லை. இப்போது வந்துள்ள நிலைப்பாட்டுக்கு எல்லா அரசியல் கட்சிகளுமே வரவேண்டும் என்பதே என் போன்றவர்களின் விருப்பம். அதுக்காக…
-
- 12 replies
- 1.9k views
-
-
இந்திய மத்திய அரசின் தமிழின அழிப்புக்குத் துணை போகும் கருணாநிதி குடும்பத்தின் தொலைக்காட்சிகள் எங்கள் வீடுகளில் தேவையா ? அண்மைக் காலங்களில் எமது தேசம்; சுமக்கும் துயரங்கள் வெளிநாடுகளில் வாழும் எங்கள் கண்களில் கண்ணீரையும் மனங்களில் நிரந்தர வலியையும்; ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் எமது சொந்தங்கள் சுமக்கும் இந்தத் துயரங்களை எந்த நாடும் கண்டுகொள்ள வில்லை என்பதும், எத்தகைய வெளிநாட்டு ஊடகங்களும் உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவில்லையே என்ற ஏக்கமுமாகவே நாட்கள் நகர்கின்றது. இதில் ஊடகம் தொடர்பான விடையத்தை நாம் எடுத்து கொள்வோம். தன் சொந்த மொழிக்கு இனத்திற்கு இளைக்கப்படும் கொடுமைகளை தமது சொந்த அரசியல் பொருளாதார நலன்களுக்காக திட்டமிட்டு வெளிக்கொணராத தழிழ் ஊடகங்களே இருக்கு…
-
- 7 replies
- 1.9k views
-
-
சென்ற கிழமைம எழுதும் போது தமிழக முதல்வர் பதவி சுகமா? அல்லது இனமானமா? இதில் இரண்டில் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு முதல்வர் கருணாநிதி தள்ளப்பட்டுள்ளார் என எழுதியிருந்தேன். முதல்வர் கருணாநிதி சரியான முடிவு எடுத்தால் வரலாற்றில் இடம் பிடிப்பார் இல்லையென்றால் வரலாறு அவரை மன்னிக்காது என்றும் எழுதியிருந்தேன். இதற்கான விடை இந்தக் கிழமை கிடைத்திருக்கிறது. இனமானம், தன்மானத்தை விட பதவி சுகமே பெரிதென்று கருணாநிதி சொல்லிவிட்டார். இலங்கைத் தமிழர் சிக்கல் தொடர்பாக கடந்த பெப்ரவரி 3 இல் அண்ணா அறிவாலயத்தில் முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடிய திமுக மூன்று நீண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. தமிழ் உணர்வாளர் முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நீங்கலாக ஏனைய இ…
-
- 0 replies
- 1.9k views
-
-
அம்பாறை தெஹியத்த கண்டிய பிரதேசத்தில் வாக்கு மோசடியில் ஈடுபட முயற்சி மேற்கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் உள்ளிட்ட ஆதரவாளர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பரவான மத்திய மாகாவித்தியாலத்தில் உள்ள வாக்கெடுப்பு மையத்திற்கு அருகில் வைத்து காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பட்டுக்குழு தெரிவித்துள்ளது. தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா, அமைச்சரின் இணைப்பதிகாரிகளில் ஒருவரான குடு லால் உள்ளிட்ட ஆதரவாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் பாதுகாப்பு உத்தியோத்தர்கள் உள்ளிட்ட ஆயுதம் தரித்த சிலரை தெஹியத…
-
- 6 replies
- 1.9k views
-