Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சென்னை: வெளிநாட்டு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி நேற்று இரவு சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக வெள்ள நிவாரண நிதி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். நேற்று இரவு சென்னை வந்த பிரதமரை, ஆளுநர் மாளிகையில், முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.. முதல்வர் கருணாநிதி நேற்று இரவு ஆளுநர் மாளிகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். இறுதியாக, இலங்கைப் பிரச்சினை குறித்து எடுத்துக் கூறி மத்திய அரசு ஏற்கனவே ஒப்புக் கொண்டவாறு மத்திய வெளியுறவ…

  2. ‘நேசம் இலவச கல்வித்திட்டம்2013′ மாலைநேர இரவுநேர வகுப்புகளுக்கான ஆதரவு தேவை. போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் வசதியற்ற மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் மாலைநேர இரவுநேர வகுப்புக்களை கிராமங்கள் தோறும் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பொருளாதார ஆதரவினை புலம்பெயர் உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். ஒரு பிரதேசத்திற்கான மாலைநேர இரவுநேர வகுப்புகளை நடாத்துவதற்கு மாதாந்தம் 10555,00ரூபா (அண்ணளவாக 65€) தேவைப்படுகிறது. எமது முதல்கட்ட தெரிவில் 6வளாகங்களை தெரிவு செய்துள்ளோம். எமது பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்த ஒவ்வொரு கிராமத்தையும் கருணையாளர்கள் பொறுப்பேற்று எங்கள் எதிர்…

    • 0 replies
    • 444 views
  3.  பான் கீ மூன் ஒத்து ஊதுகிறார்: அனந்தி -எஸ்.ஜெகநாதன் இலங்கைக்கு இன்று புதன்கிழமை இரவு வருகைதரவுள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்து ஊதுபவராகவே உள்ளார்' என, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இரண்டாவது தடவையாக இன்று விஜயம் செய்யவிருக்கின்ற, பான் கீ மூனின் இலங்கை விஜயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதை ஊக்கப்படுத்துவதற்கு, பான் கீ மூன் விரும்பவில்லை. அவர், பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்கு…

  4. இலங்கையில் இருந்து இயங்கிய "லங்கா டிசென்ட்" இணையத்தளம் நேற்றுடன் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளது. பௌத்தநாட்டில் மீண்டும் ஜனநாயகம் மலரும் போது மீண்டும் தமது சேவைகள் தொடரும் என்ற ஆசிரியர் தலையங்கத்துடன் இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சிரச ஊடகம் மீதான தாக்குதல் மற்றும் சண்டே லீடர் செய்திதாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டமை என்பவற்றை அடுத்தே இந்த முடிவை தாம் எடுத்துள்ளதாக "லங்கா டிசென்ட்" இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது http://tamilwin.com/view.php?2aIWnJe0dHj06...d426QV3b02ZLu3e

  5. எதிரிகளின் விசமப்பிரச்சாரத்தை முறியடிக்கவும் புலம்பெயர் தமிழ்மக்கள் இன்றும் என்றும் எமது போராட்டத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் என்பதனை பறைசாற்றும் விதத்திலும் இன்றைய சிங்கள அரசின் கொடிய அழிப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் தினம் தினம் சாவடைந்துகொண்டிருக்கின்றார

  6. மாகாண சபைத் தேர்தலில் வடக்கு - கிழக்கிலும் களமிறங்குகிறது மனோ கணேசன் கட்சி.! "எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிடும்." - இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "தென்னிலங்கைக்கு மேலதிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுமாறு பல அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றன. அந்த அழைப்புக்களைப் பரிசீலனை செய்து வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய நேசக் கட் சிகள…

  7. உண்மை பொய்யாகாது, பொய் உண்மையாகாது; தனது கருத்து தொடர்பில் ஆணைக்குழு அமைத்து உண்மையை கண்டறிய விக்கி சவால் Posted on August 28, 2020 by தென்னவள் 15 0 பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது முதல் உரையில் உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என்றும் முதல் குடிமக்கள் தமிழ் மக்களே என்றும் பேசியமைக்கு இனவாத ரீதியாக எதிர்ப்புத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காரசாரமான பதில் அளித்துள்ள பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தனது கருது தொடர்பில் வீணாக குழப்பம் அடையாமல் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வரலாற்று ஆய்வாளர்களை உள்ளடக்கிய ஆணைக்குழு ஒன்றை அமைத்து உண்மையை கண்டறியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார். பாரா…

    • 7 replies
    • 1.3k views
  8. இலங்கைத் தமிழர்களுக்குத் தேவை தனி ஈழமே என்ற கோரிக்கைக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச வலு சேர்க்கிறார் என்று அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கை வேண்டும் என்பதற்காகவே, கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான நிகழ்ச்சிகளை எல்லாம் மறந்து இலங்கையின் மறுவாழ்வு பணிகளுக்கு ஆதரவு கொடுத்தோம். 2010-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 1½ ஆண்டுகளில் வரலாறு காணாத படுகொலைகளும், சித்ரவதைகளும் இலங்கை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. அரசியல் குழுக்களுடனான மோதல் என்றில்லாமல், இலங்கை ராணுவமே களத்தில் இறங்கி, இனப்படுகொலை செய்தது. அரச பயங்கரவாதம் என உலக நாடுகள் இதனைக் கண்டித்தன. நாகர…

  9. ட்ரோன் கமெராவால் பதற்றம் படுகொலை செய்யப்பட்டு, பொரளை கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், ஐந்தரை வருடங்களின் பின்னர், இன்று செவ்வாய்க்கிழமை (27) தோண்டியெடுக்கப்பட்டது. அங்கு செய்திகளை சேகரிப்பதற்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களை மயானத்துக்குள் செல்வதற்கு பொலிஸார் அனுமதியளிக்கவில்லை. இதனால், கம்பிகளுக்கு வெளியே ஊடகவியலாளர்கள் நின்றுகொண்டிருந்தனர். இந்நிலையில், கனத்தை மாயனத்துக்குள் ட்ரோன் கமெரா சுற்றிதிரிந்தமையால், பொலிஸார் கலவரம் அடைந்தனர். வானிலிருந்து படம்பிடித்த அந்தக் கமெராவைப் பிடிப்பதற்குப் பொலிஸாரினால் முடியவில்லை. எனினும், கனத்தை மயானத்தின் பாதுகாப்பு…

  10. ஈகப்பேரொளி முருகதாசன் பெயரில் நடந்தேற இருக்கும் அருவருக்கத் தக்க செயல் பல ஆயிரம் செலவில் ஏற்கனவே நடப்பட்ட நினைவுக்கல் இதைத்தான் இப்போது அகற்ற உள்ளார்கள் ஈகப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய தியாகம் தமிழினம் எப்படி மறக்க முடியாதே அதே போல் இப்போது நடக்க இருக்கும் அசிங்கமும் தமிழர்களை விட்டு நீங்காது நிலைக்கப்போகும் என்பது அப்பட்டமான உண்மை. ஏற்கனவே ஈகப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய நினைவிடத்தில் ஏற்கனவே பல ஆயிரம் செலவில் நினைவுக்கல் சிறப்பாக நடப்பட்டது. பிரித்தானியா தமிழர் ஒருங்கினைப்புக்குழுவின் மாவீரர் பணிமனையினரால் ஈகைச்சுடரொளி முருகதாசனின் நினைவுக் கல்லறை திறந்துவைக்கப்பட்டது. முதலில் நடப்பட்ட நினைவுக்கல்லை திறந்துவைத்ததும் ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய பெற்றோர்க…

  11. நியூசிலாந்து, இலங்கையில் உயர்ஸ்தானிகரகங்கள் நிறுவப்படும் ; ஜோன் கீ இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நியூசிலாந்திலும் இலங்கையிலும் உயர்ஸ்தானிகரகங்கள் நிறுவப்படுமென நியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை நியூஸிலாந்து சென்றுள்ளார். இந்நிலையில் நியூஸிலாந்தின் ஆக்லாந்திலுள்ள அரச மாளிகையில் இன்று அவருக்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பு நிகழ்வு நடைபெற்றதுடன் அந்நாட்டு பிரதமர் ஜோன் கீ உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையும் இடம்பெற்றது. பேச்சுவார்த்தையையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் இணைந்…

  12. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழு கட்டுப்பாட்டையும் இழந்ததற்கு அரசாங்கம் இன்று கவலை வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கைக்கு ஒரு சொத்து என துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஏனைய நாடுகளின் முக்கிய துறைமுகங்கள் போன்ற உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஏனைய நட்பு நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும். எனினும், ஒரு முக்கியமான துறைமுகத்தின் கட்டுப்பாட்டை இழப்பது வருந்தத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனாவிடம் ஒப்படைக்க கடந்த அரசு எ…

  13. நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் உரிய காலத்திலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும், எனினும் மாகாண சபைகளை பதவி காலம் முடியும் முன்னர் கலைத்தும், அவை அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தாமலும், தனித் தனியாக தேர்தல் நடத்துவதன் மூலம் அரசாங்கம் அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம்சுமத்தியுள்ளது. மேலும்.. http://www.paristamil.com/tamilnews/?p=25677

  14. நல்லாட்சி அரசாங்கத்தில் பொது மக்களின் காணிகளை படையினர் கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. யாழ்ப்பாணம், வலி. வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் வேகத்தில் கிழக்கிலும் படையினர் கையப்படுத்திய காணிகளை விடுவிக்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள விவசாய காணிகளை வனவள பரிபாலன திணைக்களம் கையகப்படுத்தி வருவதாக கூறிய அவர், சிங்களப் பகுதியில் ஒரு சட்டமும் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியில் பிறிதொரு சட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் குற்றஞ்சாட்டினார். காணி சுவீகரிப்புச்சட்ட கட்டளையை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரைய…

    • 1 reply
    • 255 views
  15. மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நேற்று பயங்கரவாத தடுப்பு புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவின் தலைமைக் காரியாலயத்திற்கு (4ம் மாடி) அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கைதுசெய்யப்பட்ட உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மனோகரன் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=3077

    • 0 replies
    • 325 views
  16. மட்டக்களப்புக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையானை பார்வையிட்டதாக சிறைச்சாலை தகவல்களை சுட்டிக்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி, பிள்ளையானுடன் சுமார் 15 நிமிடங்கள் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் கடந்த ஒரு வருடமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விரைவில் தனது தலைமையிலான ஆட்சி மலரும் என்ற நம்பிக்கைய…

  17. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 20 ஆம் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டவுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொம்மையாகப் போகின்றார். அதிகாரத்தை தக்கவைக்க தொடர்ச்சியாக போராடிய ஒருவர் இறுதியாக பொம்மையாக அமர வேண்டிவரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாக கூறி எம்மை அச்சுறுத்த நினைக்கின்றனர். ஆனால் இவற்றிக்கு நாம் அஞ்சப்போவதில்லை எனவும் அவர் கூறினார். 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் …

  18. வன்னிப் பெருநிலப்பரப்பில் யுத்தத்தில் சிக்கியிருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரையும் பரிசுத்த பாப்பரசர் 16 வது பெனடிற் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய தினம் அவரால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளில் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் அதி தீவிரம் அடைந்து பொதுமக்கள் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருக்கும் இந்த வேளையில் தாம் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இரு பகுதியினரையும் வேண்டிக் கொள்வது யாதெனில் மனித முறைமைகளை மதித்து மக்களை சுதந்திரமாக நடமாடவும் காயப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்கவும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வேண்டுவதாக தெரிவித்துள்ளார். இம் …

  19. மோடியுடன் பேசியது ஞாபகத்தில் இல்லை’ அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், ஒரே கொள்கையின் கீழ் அரசாங்கம் இருக்கிறது. அதில், தனக்கெனத் தனியானதொரு கொள்கை இல்லையென பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, “ஒவ்வொரு கட்சிக்கும் அதிலிருக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும், தனித்தனிக் கொள்கைகள் இருக்கலாம்; அவற்றையெல்லாம் ஓரிடத்தில் குவிப்பதே முக்கியம். 20ஐ ஆராய்வதற்காக நான் அமைத்த குழு, அறிக்கையைக் கையளித்துள்ளது. அது, எனக்குக் கையளிக்கப்பட்ட தனிப்பட்ட அறிக்கையாகும்” என்றார். “13ஆவது திருத்தத்தை அமல்படுத்துமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உங்களுடன் இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்புக் கலந்துரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்று, ஊடகத்துறை அமை…

    • 7 replies
    • 1.7k views
  20. முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது வா.கிருஸ்ணா மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபசாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/184517/ம-ன-ன-ள-ம-யர-ச-வக-த-உள-ள-ட-ட-ப-ர-க-த-

  21. கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நிதி மோசடி – பலர் பாதிப்பு கடந்த ஆறு வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்கலாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தில் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் இன்று காலை மாளிகைக்காடு பேர்ல்ஸ் மண்டபத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நியாஸ் என்பவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். அங்கு கருத்துத் தெரிவித்த அவர், கிழக்கின் முக்கிய நகரங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கிய இவர்கள், கல்முனை, மருதமுனை, சம்மாந்துறை, பொத்துவில் உள்ளிட்ட பிரதேசங்கள் முழுவதிலும் மொத்தமாக 200 கோடி ரூபாயையும் நாடு முழுவதிலும் 1200…

  22. சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக தமிழீழ விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 660 views
  23. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் கடலூர் பழைய நகரம் குழந்தை கொலனியைச் சேர்ந்த சோதி என்று அழைக்கப்படும் தமிழ்வேந்தன் (வயது 33) என்பவர் தீக்குளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 301 views
  24. சிவிலியன்கள் படுகொலை தொடர்வது அதிர்ச்சியளிக்கின்றது மேரி ரொபின்சன் : இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தத்தில் தொடர்ச்சியாக சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் மேரி ரொபின்சன் தெரிவித்துள்ளார். சிவிலியன் படுகொலைகளை அரசாங்கப் படையினரும் மேற்கொண்டு வருவதாக இன்னர் பிரஸ் ஊடகத்திற்கு அவர் குறிப்பிட்டுள்ளார். சூடானின் டார்பூர் மற்றும் கொங்கோ ஆகிய நாடுகளில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலத்திற்கு நிகரான ஓர் சூழ்நிலை உருவாகியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்னிச் சிவிலியன்கள் எதிர்நோக்கிவரும் துயரங்கள் குறித்து கேள்வி எழுப்பாவிட்டால் அது மனித உயிர்களை உதாசீனம் செய்வதற்கு நிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.