Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை இராணுவம் புதிதாக காணிகளை கைவசப்படுத்துவதை நிறுத்தவேண்டும் - நிலங்களை விடுவிக்கவேண்டும் - ஐநா Published By: RAJEEBAN 22 AUG, 2024 | 02:50 PM இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளை கைவசப்படுத்துதலை நிறுத்தவேண்டும் என என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் மனித உரிமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் இடம்பெற்;றுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் காணிகளை விடுவித்தல், வடக்குகிழக்கில் புதிதாக காணிகளை கைவசப்படுத்தலை ந…

  2. சர்வதேச யுத்தக் குற்றச்செயல் விசாரணைகளில் இருந்து தப்பியதா இலங்கை? இலங்கையில் மிக நீண்ட காலமாக நீடித்து வந்த சிவில் யுத்தத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதிலிருந்து இலங்கை தப்பித்துக் கொள்ளக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் வாரத்தில் புதிய தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ளது. கலப்பு நீதிமன்றின் அடிப்படையில் சர்வதேச தலையீட்டுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னதாக உத்தேச தீர்மானத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும், கொழும்பு அரசாங்கம் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படக் கூடிய …

  3. ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடர் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளையதினம் இறுதி முடிவை எடுக்கவுள்ளது. நாளையதினம் கூடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவில் இது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வது உறுதி என்றபோதிலும், கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி யார் யார் செல்வது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் நாளைய தினம் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதோடு ஜெனீவாவில் தமது செயற்பாடுகள் குறித்தும் கூட்டமைப்பு விரிவாகக் கலந்துரையாடவுள்ளது. ச…

  4. நாட்டில் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட சர்வதேச பயங்காரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ.எஸ், தீவிரவாத அமைப்பினை ஒரு மாததிற்குகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியுமாக இருந்தால் ஏன் இந்த சாதாரணமாக வடபகுதியில் ஒரு பகுதிக்குள் இயங்குகின்ற 15 - 20 இளைஞர்களைக் கொண்ட இந்தக் வாள் வெட்டுக் கும்பலை அடக்க முடியாது. என ஈரோஸ் கட்சியின் தலைவர் இ.பிரபாகரன் கேள்வி எழுப்பினார் . யாழ்ப்பாணதில் அமைந்துள்ள ஈரோஸ் கட்சியின் அலுவலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே மேற்படி கேள்விளை எழுப்பினார். இது தொடர்பில் அவர்,மேலும் தெரிவிக்கையில், இந்த வாள் வெட்டுக் குழுக்கள் தானாக தோற்றம் பெற்றது என்று சொல்லவிட முடியாது. இதற்கு பின்னால் ஏதோ ஒரு பலமான பி…

    • 0 replies
    • 374 views
  5. திருகோணமலையில் அதிகரித்துவரும் சிங்களக் குடியேற்றங்கள்: தமிழ், முஸ்லிம் மக்களின் சரித்திரம் மற்றும் கலாசாரத்தை அழிப்பதே பிரதான நோக்கம் - 'த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்' வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டு Published By: VISHNU 12 SEP, 2024 | 09:03 PM (நா.தனுஜா) யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்துவருகின்றது. வடக்கு, கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த தாயகம் என்ற கோட்பாட்டை இல்லாமல் செய்யும் அதேவேளை, அவர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களது சரித்திரம் மற்றும் கலாசாரம் என்பவற்றை முற்றா…

  6. புதுவருட நாளன்று கொழும்பில் கொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் அதிக கப்பல்களுக்கு சொந்தமானவர் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த ஐலண்ட்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  7. ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவளிக்க ஈரான், கட்டார் , சவூதி தாய்லாந்து, உறுதி' ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிராக வாக்களிக்கும் என உறுதியளித்துள்ளதாக ஜெனிவாவிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகியவற்றின் பிரதிநிதிகளை பெருந்தோட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை குழுவினர் ஜெனிவா நகரில் வைத்து சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தாய்லாந்து …

  8. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோர் இராணுவ புலனாய்வுப் பிரிவினராலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்த விசாரணை அதிகாரி, ரவிராஜ் கொலையின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்டுள்ள சரண் என்பவரை சுவிசர்லாந்திலிருந்து அழைத்துவருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். குறித்த நபர் சுவிசர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரியிருக்கின்றார். ஆனால் அவருக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படவில்லை. அவரை இலங்கைக்கு அழைத்துவர நீதிமன்ற அழைப்பாணை தேவைப்படுகின்றது. இதேவேளை ஊடகவியலாளர் பிரகீத், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோர் பு…

  9. இலங்கையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை லங்காசிறியின் நேரலை ஊடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலையை இந்த இணைப்பில் பார்வையிடலாம். மேலும் உங்கள் கருத்துக்களுடன் நீங்களும் நேரலையில் இணைந்துகொள்ளலாம். https://tamilwin.com/article/sri-lanka-presidential-election-2024-live-updates-1726934857#google_vignette திருவுளச்சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் ஒரு எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் திருவுளச் சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படு…

  10. ஐநா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் விசேட அறிக்கை சமர்பித்து இன்று உரையாற்றிய இந்தியாவின் பிரதிநிதி எந்த ஒரு நாட்டையும் பெயர் குறிப்பிடும் தீர்மானத்தை தமது நாடு ஆதரிக்கவில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார். இலங்கையை காப்பாற்றும் முகமாக இந்தியா இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக ஜெனீவா மனித உரிமை மாநாடு தொடர்பில் அக்கறை கொண்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை " உரிமை தீர்மானம் தொடர்பில் இலங்கையை இந்தியா பிணை வழங்கி காப்பாற்றுகின்றது " (India bails out Lanka on rights resolution ) என பிரபல இந்திய அரசியல் விமர்சகர் பி.கே. பாலச்சந்திரன் வர்ணித்துள்ளார். தற்போது நடைபெறும் கூட்டத்தில் அல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய உலகளாவிய காலார…

  11. கே.பி. குறித்து கேள்வி எழுப்ப சபையில் அனுமதி மறுப்பு கே.பி. குறித்து கேள்விகளை எழுப்புவதற்கு பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது ஐ.தே.க. எம்.பி. யான ரவி கருணாநாயக்க கே.பி. தொடர்பிலான கேள்விகளை பிரதம அமைச்சரும் பௌத்த சாசன மத அலுவல்கள் அமைச்சரிடம் கேட்டிருந்தார். கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு எழுந்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன பெயர், விலாசம் இல்லாத நபரொருவர் தொடர்பில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இக்கேள்வி எவ்வாறு ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்று எனக்கு தெரியாது என்பதுடன் முழுப் பெயர் விலாசம் உ…

  12. சிறிசேனவிற்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம் இலங்கையுடனான உத்தேச மில்லேனியம் சலஞ் ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கைக்கான அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்காக உடனடியாக தலையிடுமாறு அவர் இலங்கை ஜனாதிபதியை கோரியுள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்பபடும் சில விடயங்கள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி உடன்படிக்கையை ஏற்க மறுத்துள்ள நிலையிலேயே தூதுவர் இந்த அவசர கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்படும் சில சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் கு…

    • 1 reply
    • 533 views
  13. https://tamilwin.com/article/kv-thavarasa-resigned-from-all-itak-posts-1728222873 தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது சுமந்திரனின் தன்னிச்சையான செயல் அ…

  14. சனி 26-01-2008 12:24 மணி தமிழீழம் [மகான்] ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தித் தயாரிப்பாளர் மீது தாக்குதல் ரூபவாஹினி செய்திக் கூட்டுத்தாபனத்தின் செய்தித் தயாரிப்பாளர் இனம் தெரியாத குழு ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இனம் தெரியாத குழு தாக்கியதோடு இவருக்கு வெட்டுக்காயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் அமைச்சர் மேர்வின் சில்வா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினுள் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தவர் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  15. http://naathamnews.com/?p=4598 சனல்-4க்கு பதிலடி என்ற முழக்கத்துடன் சிறிலங்கா அரசு இன்று செவ்வாய்கிழமை விவரணப்படமொன்றை திரையிடவுள்ள நிலையில் சிறிலங்கா அரசின் கபடத்தனங்களை அம்பலப்படுத்தி ஐ.நா மனித உரிமைச் சபையில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற உப மாநாடொன்றில் சிங்களக் காடையர்கள் நடத்திய அடாவடித்தனம் கடும் பரபரப்பை ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறிலங்கா அரகு இந்த விவரண்படத்தினை திரையிட முற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழனத்தின் மீதான இனவழிப்பை மூடிமறைத்து சிங்கள தேசத்துக்கான ஆதரவினைத் திரட்ட முனையும் சிறிலங்கா அரசின் கபடத்தனத்தை அம்பலப்படுத்துவோம் என நா.த.அ…

    • 9 replies
    • 1.1k views
  16. என்னை கைது செய்யப் போவதாக அறியக் கிடைத்துள்ளது: கம்மன்பில பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவின் ஊடாக தன்னை கைது செய்யத் தயாராகி வருவதாக, அறியக் கிடைத்துள்ளது என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன், சுயாதீன ஆணைக்குழுவில் அதிகமாக உள்ளவர்கள் அன்னத் தரப்பினருக்கு கடைக்குச் சென்றவர்களே எனவும், நிதி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொரும் அதில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் உதய கம்மன்பில இதன்போது தெரிவித்துள்ளார். கடந்த ஆட்ச…

  17. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இமாம் அல்விஸ் விசாரணை குழுவின் அறிக்கையினை பகிரங்கப்படுத்துவதற்கான செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196760 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே அனைத்து விடயங்களும் தெரியும் - உதயகம்மன்பில குற்றச்சாட்டு உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே தெரிந்…

  18. மன்னார் தட்சணாமருதமடுவில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு மாணவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 788 views
  19. தயவுசெய்து உரிமை கோராதீர்கள்! அது மிகப் பெரும் துரோகம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-25 10:36:11| யாழ்ப்பாணம்] இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் ஒரு பெரும் புத்தகத்தையே வெளியிட்டு விடலாம். அந்த அளவிற்கு அது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறியதைப் பலர் வரவேற்றுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடங்குமாயினும், ஜெனிவாத் தீர்மான வெற்றியில் தங்களுக்கும் ஏதோ பங்கு இருப்பது போல கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பதானது, வெற்றியின் மகிழ்ச்சியை உள்ளார்ந்தமாக அனுபவிப்பதற்குத் தடை செய்ததென்றே கூற வேண்டும். உண்மையில் ஜெனிவாவில் தீர்மானம் நிறை வேறியதி…

    • 27 replies
    • 3.1k views
  20. குமார் குணரட்னத்தை விடுதலை செய்யும் விவகாரத்தில் அவுஸ்திரேலியா தலையிடாது முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னத்தை விடுதலை செய்யும் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தலையீடு செய்யாது என இலங்கை;கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் வீசா காலம் முடிவடைந்தும் தங்கியிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நோயல் முதலிகே எனப்படும் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும், இந்த விடயம் தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடப் போவதில்லை என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தீர்மானித்தள்ளது. அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக குமார் குணரட்னம் சில ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கை குடியுரிமையை…

  21. 25 தொண்டர் நிறுவனங்களுக்கு மிகவிரைவில் வருகின்றது தடை? அவற்றைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க அரசு முடிவாம் [Monday February 11 2008 07:32:34 AM GMT] [pathma] மொத்தம் இருபத்தைந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள அமைப்புகளாகப் பட்டியலிட்டு அவற்றுக்கு இலங்கையில் தடை விதிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட உளவு அறிக்கைகளின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கின்றது. ஆழிப்பேரலைப் பாதிப்புக்கு உதவி வழங்குதல், இனங்களுக்கிடையில் சமாதனத்தை ஏற்படுத்து…

  22. ஜப்பானின் நறீற்ரா விமான நிலையம் சிறிலங்காவுக்கு திறந்து விடப்பட்டது! By naatham On 29 Mar, 2012 At 10:14 AM | சிறிலங்காவுக்கான கொடையாளி நாடுகளில் ஜப்பான் வகித்திருந்த முதன்மை இடத்தினை சீனா கைப்பற்றியுள்ள நிலையில் மீண்டும் சிறிலஙஇகாவுடனான உறவினை சீர்படுத்த ஜப்பான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. இதனொரு அங்கமாக ஜப்பானிக் நறீற்ரா விமான நிலையத்தினை சிறிலங்காவின் விமான சேவைக்கு முழுமையாக ஜப்பானிய அரசாங்கம் திறந்து விட்டுள்ளது. 2013ம் ஆண்டு முதல் இது சிறிலங்காவின் பாவனைக்கு வரவுள்ளது. இதேவேளை சிறிலங்காவின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி 2ஆம் கட்ட செயற்றிட்டத்திற்கு 45 பில்லியன் ரூபாயினை ஜப்பான் இலகுகடனாக வழங்கியுள்ளது. http://naathamnews.co…

    • 0 replies
    • 682 views
  23. கொழும்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த படகு சேவை! கொழும்பு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கொம்பெனித்தெரு முதல் கோட்டை வரையான பகுதியில் உள்ள வாவியில் பயணிகள் படகு சேவையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைத்தார். இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த படகு சேவையில் ஒரு மாதத்திற்கு இலவசமாக பயணிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. இந்த படகு சேவையின் ஊடாக குறித்த தூரத்தை 9 – 10 நிமிடங்களில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த படகு சேவை அனைத்துவித பாதுகாப்புடனும் இலங்கை கடற்படையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவி…

  24. விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்யும் சிங்களவர்கள் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற வேண்டும் [18 - February - 2008] * அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து செயற்படும் பொலிஸாரும், படை அதிகாரிகளும் அவ்வாறான செயற்பாடுகளை கைவிட வேண்டும் என மின்சக்தி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். புத்தளம் கச்சேரியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சிவில் பாதுகாப்புக்குழுக்களை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர்; `இரத்தினபுரிப்பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு சிங்கள மக்களே உதவியிருப்பது தெரியவந்துள்ளது. இதனைப் பார்க்கும்போது விடுதலைப…

  25. தமிழீழ விடுதலைப்பு லி உறுப்பினர்கள் நாட்டுக்குள் ஊடுறுவியிருப்பதாக வெளியான தகவல்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என இராணுவம் அறிவித்துள்ளது. புலி உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தில் ஊடுறுவியிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புலி உறுப்பினர்கள் ஊடுறுவியிருப்பதாக வெளியான செய்திகள் வெறும் ஊகங்களே என இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், குறித்த தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, புலி உறுப்பினர்கள் நாட்டுக்குள் ஊடுறுவியதாக மக்கு எவ்வித உத்தியோகபூர்வ அறிக்கைகளும் கிடைக்கவில்லை என காவல்துறை ஊடகப் பே…

    • 1 reply
    • 793 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.