ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
எஸ்.கே.பிரசாத் 'இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா மனித உரிமைக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை ஆக்கபூர்வமானதாக இருக்கவேண்டுமே தவிர மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது' என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (23) சுன்னாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், "யுத்தம் நடைபெற்ற காலத்தில் முள்ளிவாய்கால் பகுதியில் எமது மக்கள் துன்பப்படும்போது அவர்களை நவநீதம்பிள்ளையோ சர்வதேச நாடுகளோ பாதுகாக்கவில்லை. எமத…
-
- 0 replies
- 272 views
-
-
'நாங்கள் ஊர்திரும்புகிறோம். நீங்கள் புறப்பட தயாராகுங்கள்" - இராணுவம், ஒட்டுப்படைகளை வலியுறுத்தி யாழில் சுவரொட்டிகள் - சங்கிலியன் - யாழ்.குடாநாட்டை விட்டு சிறிலங்கா இராணுவமும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் தேசவிரோதிகளும் உடன் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி யாழ்.குடா நாடெங்கும் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இன்று(16.04.2006) மாலை குடாநாட்டிலுள்ள பிரதான நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த இச் சுவரொட்டிகளில் இராணுவமும் தேசவிரோதிகளும் குடாநாட்டை விட்டு வெளியேறாவிட்டால் அவர்களுக்கு இங்கேயே புதைகுழி தோண்டப்படும் என்று இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இச்சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 'போர்வேண்டாம் போய்விடு.. சாவேண்டுமெனில் தங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழில் பொலிஸார் குறைவு அதனாலேயே சிவில் நடவடிக்கையில் படையினர் ஈடுபடுகின்றனர்:- யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர்:- இலங்கை இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பில் பொலிஸார் ஈடுபட்டால் அதில் ஒன்றும் தவறில்லை. நாங்கள் ஒன்றும் பயங்கரவாதத்திற்கு ஆட்சேர்க்கவில்லை. இலங்கை இராணுவத்திற்கே ஆட்சேர்க்கின்றோம். என்று தெரிவித்துள்ளார் யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர். எனினும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் பொலிஸார் ஈடுபடுவது இல்லையென்றும் மறுப்புத் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரை விட இராணுவத்தினரே அதிகளவில்; நிலைகொண்டுள்ளனர். இதனாலேயே சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினரை இணைக்கும் செயற்பாடுகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் எ…
-
- 1 reply
- 352 views
-
-
'நாசிவாத' அரசியலை முன்னெடுக்கிறதாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! - சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு! விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை மீளக் குடியேற்றுவதைத் தடுக்கும் 'நாசிவாத' அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், புலம்பெயர்ந்த புலிகளின் பிரிவினை வாதத்திற்கு துணை போகும் அமெரிக்காவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலை போயுள்ளதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க விஜயத்தின் போது அந்நாட்டு இராஜாங்க திணைக்களத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்திருந்த அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், சி…
-
- 1 reply
- 908 views
-
-
'நாடாளுமன்றத்தின் மீதும் வான் தாக்குதல்கள் நடக்கலாம்': ஊகிக்கிறார் அனுரா ஜவெள்ளிக்கிழமைஇ 30 மார்ச் 2007இ 05:26 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ "நாடாளுமன்ற அமர்வுகளின் போதோ அல்லது வாக்கெடுப்பின் போதோ தமிழீழ விடுதலைப் புலிகளால் வான் தாக்குதல் நடத்தப்பட்டால் பேரழிவு ஏற்பட்டுவிடும். எனவே சபாநாயகர் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்" என்று சிறிலங்காவின் தேசிய பாரம்பரிய அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கா தெரிவித்துள்ளார். சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம்.லொக்கு பண்டாராவுக்கு அனுரா பண்டாரநாயக்க எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: "நான் நான்கு நாட்களுக்கு முன்னர் கட்டுநாயக்காவில் இடம்பெற்ற பயங்கரமானஇ எதிர்பாராத வான்தாக்குதல் தொடர்பாக உங்களுக்கு எழுதுகிறேன். …
-
- 4 replies
- 1.2k views
-
-
'நாட்டில் மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' நல்ல ஒழுக்கப் பண்பாடுடைய மனிதர்களை உருவாக்குவதற்கு ஆன்மீகத் தத்துவங்கள் பெரிதும் உதவுவதாகவும் விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் சுதந்திரம், தற்போது நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தெம்பல, ரத்தொளுகம மெதடிஸ்த தேவாலயத்தின் இருநூறாவது ஆண்டுநிறைவு விழாவில் இன்று (04) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதைகளை அமைத்தல், கட்டடங்களை அமைத்தல் போன்ற பௌதீக அபிவிருத்திகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மனிதனது ஆன்மீகப் பண்பாடுகள் வீழ்ச்சியடை…
-
- 1 reply
- 336 views
-
-
'நாட்டுப்பற்றாளர் தினம் - அன்னை பூபதி ஒரு குறியீடு'-சபேசன் தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக, அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை, நாட்டுப்பற்றாளர் தினமாகக் கடந்த ஆண்டு தமிழீழத் தேசியத் தலைமை பிரகடனப் படுத்தியிருந்தது. அன்னை பூபதியின் நினiவு தினத்தை, நாட்டுப்பற்றாளர் தினமாகத் தமிழீழத்து மக்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தார்கள். விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில், நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக, தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம், ஆக்கிரமிப்புப் …
-
- 1 reply
- 1.2k views
-
-
'நாட்டை விட்டு அர்ஜுன மகேந்திரன் வௌியேறிவிட்டார்' மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டைவிட்டுத் வௌியேறிவிட்டதாக, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் சொய்சா, நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். “மத்திய வங்கியின் பிணைமுறிப் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கோப் குழு அறிக்கை, நாடாளுமன்றத்தில் வௌ்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதில் பிரதானமாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, அவர் இவ்வாறு நாட்டைவிட்டு வௌியேறிவிட்டார்” என அவர் மேலும் கூறினார். http://www.tamilmirror.lk/184897/-ந-ட-ட-வ-ட-ட-அர-ஜ-ன-மக-ந-த-ரன-வ-ய-ற-வ-ட-ட-ர-
-
- 2 replies
- 361 views
-
-
'நான் அடையாளம் காட்டுபவரை அழைத்து வாருங்கள்' -எம்.றொசாந்த் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் எம்.சுவாமிநாதன் ஆகியோர் இந்தாண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி வவுனியா புனர்வாழ்வு முகாமுக்கு விஜயம் செய்த புகைப்படத்தில் எனது கணவர் உள்ளார் என காணாமற்போன விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான வேதா என்று அழைக்கப்படும் யோசப் சீலனின் மனைவி சாட்சியமளித்தார். காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு…
-
- 0 replies
- 472 views
-
-
'நான் இல்லாத காலம்' மரணத்துக்கு முன் விவரித்த சோமவன்ச மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, தான் இவ்வுலகில் இல்லாத காலம் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். அதில் அவர், தான் இல்லாத போது, மக்கள் விடுதலை முன்னணி முகங்கொடுக்கும் நிலைமைகள் பற்றி விவரமாக அறிவித்துள்ளார். அவ்விவரங்கள் பின்வருமாறு: 'சோமவன்ச அமரசிங்க என்பவர், எப்போதாவது இந்த உலகை விட்டுச் செல்லக்கூடியவர். அது கட்டாயம் நடக்கும். அரசியலில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரியானதை மக்களுக்காகச் செய்யாத மக்கள் விடுதலை முன்னணி, அழிவுக்கு உள்ளாகும். என் வாழ்க்கையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், மக்கள் விடுதலை முன்னணிக…
-
- 0 replies
- 257 views
-
-
'நான் இவனுக்கு சரியான பாடமொன்று கற்பிக்கின்றேன்' ஜனாதிபதி - பிரதம நீதியரசருடன் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சி தோல்வி : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி கண்டுள்ளதாக ட்ரான்ஸ் கல்ப் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. ' நான் இவனுக்கு சரியான பாடமொன்று கற்பிக்கின்றேன்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும், பிரதம நீதியரசருக்கும் இடையிலான முறுகலை தீர்க்க சில அமைச்சரவை அமைச்சர்கள் எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிறைவேற்று அதிகாரத்திற்கும், நீதிமன்ற அதிகாரத்திற்கும் இடையில் ஏற்பட்டு…
-
- 0 replies
- 2.6k views
-
-
அன்புக்குரியவர்களே! முப்பது வருடங்களுக்கு முன்பு, பாலா அண்ணைக்கு அந்த அக்கறையும், சிந்தனையும் வந்தது. 'தான் தனது நாட்டுக்காய் எதை, எந்த வழியில், எப்படிச் செய்ய முடியும்' என்ற கேள்வியை தன்னைப் பார்த்தே கேட்கும் ஒர் அக்கறையும், அந்தக் கேள்விக்குப் பதில் தேடும் சிந்தனையும் அப்போது அவரிடம் வந்தது. அவருக்கு முன்னால் பல வழிகள் இருந்தன - அதற்குள் சிறந்தது என்று அவருக்குப்பட்டதை அவர் தேர்ந்தெடுத்தார். அந்த வழியில் அவர் - ஒரு கையில் அன்ரியையும் பிடித்துக்கொண்டு - நடந்துகொண்டே இருந்தார், எந்தச் சலசலப்பும் இல்லாமல். பாலா அண்ணை எம்மை விட்டுப் போய் இன்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்படியெல்லாம் நடக்கும் என்று வாழும் காலத்தில் அவர் சொல்லியபடியே, பல விடயங்…
-
- 4 replies
- 3.9k views
-
-
'நான் ஏன் பாராளுமன்றம் செல்கின்றேன்': மனந்திறந்தார் ரணில்..! (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் தீவிரமாக பரவிச்செல்லும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. அதேபோன்று இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது பயங்கரமான நிலையாகும். இதற்கு எதிர்க்கட்சியும் மாற்று வழியொன்றை இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. அதனால் இது தொடர்பில் குரல்கொடுக்க வேண்டும் என உணர்ந்தே பாராளுமன்றத்துக்கு செல்வதற்கு தீர்மானித்திருக்கின்றேன் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், பாராளுமன்றம் செல்வதற்கு நான் எதிர்பார்த்திருக்கவில்லை. என்றா…
-
- 1 reply
- 550 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) நான் இப்போது மிகவும் களைப்புற்றுள்ளேன். நான் நாடு தொடர்பில் சிந்தித்து கூறியவை அனைத்தும் உண்மையாகிவிட்டது. அது தொடர்பில் கவலையடைகின்றேன். எதிர்வரும் நாட்களில் பிரித், தியானம் உள்ளிட்ட ஆன்மீகத்திலேயே என் வாழ்க்கையை கழிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன் என பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். விடுதலை பெற்ற பின்னர் ருக்மல்கம விகாரைக்கு சென்றிந்தபோது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். http://www.virakesari.lk/article/56622
-
- 12 replies
- 1.1k views
-
-
கடந்த 15ம் திகதி வெள்ளிக்கிழமையன்று; கிளிநொச்சி நகரப்பகுதிக்குள் வைத்துப் பொதுமக்கள் பலர் பார்த்திருக்க பகலில் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக அழுது கொண்டு தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் அவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இடம் எதுவென்றோ அல்லது அவரைக் கடத்தியவர்கள் யார் என்றோ இதுவரை அறிந்து கொள்ளமுடியவில்லை என குடு;ம்பத்தவர்கள் கூறுகின்றனர். வெள்ளை வான் குழுவால்; கடத்தப்பட்ட இவர் பிரதான வீதி, கண்டாவளையைப் பிறப்பிடமாகவும் கூழாவடி, உருத்திரபுரம், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட 35 வயதுடைய சிவகுமார் பாஸ்கரன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குடும்பஸ்த்தர் இராணுவத்தினரின் தடுப்பு முக…
-
- 1 reply
- 637 views
-
-
Published By: RAJEEBAN 21 JAN, 2025 | 10:32 AM முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் எனதெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே தனக்கு உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது பாதுகாப்பிற்காக அதனை வழங்கினார்கள் அரசமைப்பின் கீழ் எனக்குஅதற்கான உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ளார். நான் அந்த வீட்டிலிருந்து வெளி…
-
- 2 replies
- 203 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக இலங்கை அரசாங்கம் முன்வைத்த குற்றச்சாட்டை ஐரோப்பிய ஒன்றியனத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரொபேர்ட் இவான்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லோர்ட் மலொக் பிரவுணைச் சந்தித்து தன்மீது இலங்கை அரசாங்கம் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பாகவும், அண்மையில் பிரித்தானிய தமிழ் அமைப்பொன்று ஏற்பாடு செய்திருந்த கருந்தரங்கில் கலந்துகொண்டமை பற்றி முன்வைக்கப்பட்ட தவறான கருத்துக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருப்பதாக அவர் கூறியுள்ளார். எனினும், இந்தக் கருத்தரங்கில் மலொக் பிரவுணும் கலந்துகொண்டிருந்தார். ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர் இவான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
'நான்கு தொண்டர் நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு' [வியாழக்கிழமை, 18 சனவரி 2007, 06:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] விடுதலைப் புலிகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புகளை வைத்திருந்த அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பற்றிய இரகசியங்கள் வெளியாகியிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல் நடவடிக்கைகளின் மூலம் விடுதலைப் புலிகளின் முகாம்கள் பல கைப்பற்றப்பட்டிருப்பதைத் தொடர்ந்து குறிப்பிட்ட தொண்டர் அமைப்புக்கள் சில விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமை அம்பலமாகியிருப்பதாகவும்…
-
- 1 reply
- 888 views
-
-
'நாமே வெல்வோம்" எனும் மாவீரர் நாள் உரை இந்த மண் எமது மண்: தமிழர்கள், அந்தப்ப+மியின் ப+ர்விகக் குடிகள்: அமெரிக்கப் ப+ர்வீகர்களான செவ்விந்தியர்களின் தலைவன் சியால்த் உணர்ந்து சொன்னது போல 'இதே ப+மி எங்களின் தாய். நாங்கள் இந்த ப+மியின் ஒரு அங்கம். அது எங்களில் ஓர் அங்கம். வாசமலர்கள் எங்கள் சகோதரிகள். மானும், குதிரையும், ராஜாளி பறவையும் எங்கள் சகோதரர்கள், பாறை, மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித்துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. ஓடைகளிலும், ஆறுகளிலும் பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல: அது எங்கள் மூதாதையரின் இரத்தம். அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை" - அதுபோல 'இந்த மண்ணிலே தான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன.…
-
- 0 replies
- 2.1k views
-
-
02 NOV, 2023 | 07:11 PM மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு “நாம்-200” நிகழ்ச்சி கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. https://www.virakesari.lk/article/168355
-
- 28 replies
- 2.4k views
- 1 follower
-
-
காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகள் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடக் கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 'நாம் இலங்கையர் அமைப்பினால்" நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டம் இன்று யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்னால் நடைபெற்றது. இதன் போது குறித்த பகுதியில் படையினர் குவிக்கப்பட்டதாகவும், திடீர் என நான்கு புறங்களிலும் இருந்து வந்த இனந்தெரியாத நபர்கள் கற்கள், முட்டை, தக்காளி ஆகியவற்றால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோ…
-
- 2 replies
- 809 views
-
-
"நாம் ஒரு புண்பட்ட சமூகம்"- உ.த. பேரவை சிங்கள மக்களை ஓர் ‘ஒதுக்கப்பட்ட வகுப்பாக’ அனைத்துலகச் சமூகம் பார்ப்பதை நாம் விரும்பவில்லை என்று உ.த. பேரவையின் பேச்சாளர் கூறியுள்ளார். ஈஸ்வரன் இரத்தினம் - சண்டே லீடர் செய்தித் தாள் அண்மையில் சேனல் 4 வெளியிட்ட ஒளிநாடாக்களைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இலங்கை அரசுக்கு எதிரான செயற்பாடுகளை வண. எஸ். ஜே. இமானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை (உ.த.பே.) முனைப்பாகச் செயற்படுத்தி வருகின்றது. இலங்கை அரசானது உ.த. பேரவையை ஒரு தீவிரவாத நோக்குடைய விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பாகவே பார்க்கின்றது. உ.த. பேரவையின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அறியும் பொருட்டு அதன் பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் அவர்களுடன் சண்டே லீடர் உரையா…
-
- 2 replies
- 778 views
-
-
[size=3] [size=4]இராணுவப் புலனாய்வு பிரிவின் மேஜர் ஒருவரை, அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா மற்றும் துருக்கிக்கான இலங்கை தூதுவர் பாரதி விஜேரத்னவின் மகன் ரொஹான் விஜேரத்ன ஆகியோர் தாக்கியமை தொடர்பாக கடும் ஆத்திரமடைந்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ' நாய்கள் இருக்க வேண்டியது கூண்டிலேயே அன்றி வீதிகளில் அல்ல' எனக் கூறி அவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்னு உத்தரவிட்டுள்ளார்.[/size] [size=4]கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதிக்காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க, அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் பேணிவரும் நெருக்கமான தொடர்பு காரணமாகலே இவர்கள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.[/size] [size=…
-
- 9 replies
- 1.4k views
-
-
-சுமித்தி தங்கராசா வடமாகாண சபை தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு 'நாளைய இளைஞர் அமைப்பு' வேட்பு மனுவினை இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனர். நாளைய இளைஞர் அமைப்பு சுயேட்சைக்குழுவாகவே போட்டியிடவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அணியினரே யாழ். மாவட்டத்pல் உள்ள இளைஞர், யுவுதிகள் சார்பாக போட்டியிடவுள்ளனர். சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளரான அன்டனி ரங்கதுஷhர யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் சுயேட்சைக்குழுவிற்கான வேட்பு மனுவை கையளித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் ஏன் கிடைக்கவில்லை என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி பதிலளிக்கைய…
-
- 0 replies
- 430 views
-
-
(பி.பி.சி - சிங்கள சேவை) இனியேனும் முறையாக செயற்படாது வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முற்படாவிட்டால், நாளொன்றில் சுமார் 200 தொடக்கம் 300 வரையிலானோர் உயிரிழக்கும் நிலை ஏற்படும். அடுத்து வரும் இரு வாரங்களில் கொவிட் தொற்றில் நாளொன்றில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 150 ஆக அமையும் என தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 90 வீதம் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படகூடும் என்பதை தரவுகள் மூலம் உறுதிப்படுத்த முடியும் என ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்துள்ளார். அத்தோடு, ஏற்பட கூடிய அந்த மரண எண்ணிக்கையை தடுக்க நாம் இன்னும் தாமதமாகக் கூடாதென அவர் மேலும் தெரிவித்தார். நாளொன்றுக்கு 200 - 300 மரணங்கள்? துரித மற்ற…
-
- 82 replies
- 5.2k views
- 1 follower
-