Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உதவி வழங்கும் சமூகத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் உறுதி மொழிகள் எதனையும் இம்முறை வழங்கப்போவதில்லை என சிறிலங்காவின் நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார். சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் நாடுகள் அமைப்புக்களின் மாநாடு எதிர்வரும் 29 ஆம் நாள் காலியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அம்மாநாடு தொடர்பாக நிதியமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். "மகிந்த சிந்தனையின் கீழான அபிவிருத்தித் திட்டங்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்" எனவும் தெரிவித்த ஜெயசுந்தர, "நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக உறுதி மொழிகளை வழங்குவது இம்முறை இடம்பெறப் போவதில்லை…

  2. 'நியூயோர்க் டைம்ஸ்' செய்திக்கும் எமக்கும் எந்த தொடர்புமில்லை - பிரதமர் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) உள்நாட்டு ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுப்பதனை போன்று தற்போது சர்வதேச ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். ஆகவே 'நியூயோர்க் டைம்ஸ்' விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்து பதிலளிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, நெத் வானொலிக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கை…

  3. 'நியூயோர்க் டைம்ஸ்' குற்றச்சாட்டு; மஹிந்த பதிலளிக்காதது நியாயமா? (நா.தனுஜா , ஆர். விதுஷா ரோஜனா) அர்ஜூன மகேந்திரன் மற்றும் உதயங்க வீரதுங்க இருவராலுமே நாட்டிற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அர்ஜூன மகேந்திரனால் ஏற்பட்ட நட்டத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. மிக் விமான கொடுக்கல் வாங்களினால் ஏற்பட்ட நட்டத்தை இன்னும் ஈடு செய்ய முடியாவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசாது அர்ஜூன மகேந்திரன் நாட்டிற்கு வந்தால் நியூயோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டிற்கு பதிலளிப்பேன் என முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ கூறுவது அர்த்தமற்ற ஒன்றாகும். உதயங்க வீரதுங்க வந்து மிக் விமானம் மோசடி பற்றி தம் பக்க நியாயத்தை சொல்லலாம் என தெரிவித்தார். …

  4. வரலாற்றின் தவறுகளை மறப்போர் அதன் தவறுகளை மீளவும் செய்ய சபிக்கப்பட்வர்களாவர் - இது ஜேர்மனிய சிந்தனையாளர் ஜோஜ் சத்நயணாவின் வார்த்தை. சமீப காலமாக சிங்களத்தின் இறுமாப்பு நிறைந்த வார்த்தைகளை கேட்க நேரும் போதெல்லாம் நான் இந்த வரிகளை நினைத்துக்கொள்வதுண்டு. உலக மேலாதிக்க அரசியல் வரலாற்றில் இந்த வரிகள் யாருக்கெல்லாம் பொருந்திப் போகும் என்ற ஆராய்ச்சியில் நான் ஈடுபட விரும்பவில்லை. ஆனால் ஒடுக்குமுறைகளின் ஏகபோகவாதிகளாக எப்போதுமே இருக்க முடியும் என நம்புவோருக்கெல்லாம் இந்த வரிகள் பொருந்தும். சிங்களத்தின் நவீன அரசியல் வரலாறு என்பதே தமிழர்களை அடக்கி ஆண்டதன் வரலாறுதான். ஓவ்வொரு கால கட்டத்திலும் தெற்கின் ஆட்சியைக் கைப்பற்றும் சிங்கள ஆளும் வர்க்கம் அந்த ஒடுக்குமுறை வரலாற்றைத் தொடர…

    • 2 replies
    • 772 views
  5. 'நீ ஒரு விபச்சாரி' ஊடகவியளாளர் மீது கோத்தபாய பாய்ச்சல் [புதன்கிழமை, 18 ஏப்ரல் 2007, 19:33 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளேட்டின் ஆசிரியர் சம்பிக்க லியனாராச்சிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்சவினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வெளியான தகவல்களை தொடர்ந்து, இன்று தனது இத்தாலிய பயணத்திற்கு முன்னதாக சம்பிக்க லியனாராச்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மகிந்த ராஜபக்ச நாளேட்டின் அசிரியரின் பாதுகாப்பில் கோத்தபாயா ராஜபக்ச எடுத்த அக்கறையை அவர் மிகைப்படுத்தி விட்டதாக அரச தலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. நாளேட்டின் ஆசிரியர் மிரட்டப்பட்ட சம்பவம் எனது கவனத்துக்கு வந்துள்ளது. சிறிலங்கா இ…

  6.  'நீ, என்னை பல தடவைகள் வன்புணர்ந்துவிட்டீர்' பிரதான விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக சேவையாற்றுகின்ற பெண்ணை, ஒருசில மணிநேரத்துக்குள் பல தடவைகள் வன்புணர்ந்தவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வெலிக்கடை பொலிஸ் பிரிவிலேயே இடம்பெற்றுள்ளது. இராணுவ சேவையை கைவிட்டுவிட்டு, இராணுவத்திலிருந்து தப்பியோடியிருந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில், அந்த விமானப் பணிப்பெண், தனியாகவே வசித்து வந்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர், அந்தப்…

  7. 'நீங்கள் எங்கள் நாட்டு மக்களின் நண்பன்" ஆப்கான் அமைச்சர் ஜனாதிபதிக்கு பாராட்டு! By General 2012-12-22 13:11:41 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆப்கானிஸ்தான் மக்களின் நண்பர் என இலங்கைக்கு வருகை தந்துள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஸல்மால் ரசூல் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஸல்மால் ரசூல் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக இலங்கைக்கு வருகைத்தரக்கிடைத்தமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக கூறிய ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஸல்மால் ரசூல் - இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ…

  8. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி எழுத்தாளர் வெற்றிச் செல்வியின் சாட்சியங்களுடன் கவிஞர் தீபச்செல்வன் தொகுத்த வானொலிப் பெட்டகம்

  9. 'நீதிபதி சொன்னதால் முகத்திலேயே குத்தினேன்' -செல்வநாயகம் கபிலன் சுன்னாகம் பகுதியில், பெண்ணொருவரைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தரை, அப்பெண்ணின் சகோதரன், முகத்திலேயே குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த, உடுவில் பகுதியைச் சேர்ந்த கே. அதிஷ்டராஜா (வயது 45) என்ற குடும்பஸ்தர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், கடந்த திங்கட்கிழமை (01) இடம்பெற்றுள்ளது. மேற்படி குடும்பஸ்தர், நீண்டகாலமாக தனது தங்கைக்குத் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் அதனாலேயே, தொந்தரவு கொடுத்தவரின் முகத்திலேயே தான் குத்தியதாகவும் அந்நபர் தெரிவித்துள்ளார். 3 சகோதரிகளுக்குத் த…

  10. 01 OCT, 2023 | 11:52 AM முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (01) காலை 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தினரது போராட்ட இடத்துக்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெற்றது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல் உள்ள நாட்டில் எமக்கு நீதி எப்போது?', 'சர்வதேசமே எமக்காக குரல் கொடுக்க எழுந்திரு', 'கையளிக்கப்பட்ட மாணவர்கள் எங்கே?’, ‘குடும்பமாக ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?’, 'தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?', 'சின்னஞ்சிறு சிறார்களும் …

  11. [size=3] சென்ற வாரம் 'நீயா நானா 'வில் ஆன்மீகமும் பொருள் மயமும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று ஒளிபரப்பாக இருந்தது. [/size][size=3] மதவாதிகள் அந்த நிகழ்ச்சியே ஒளிபரப்பக் கூடாது என்று போராடுவது அவர்கள் போலித் தன்மையை காட்டுகிறது. [/size] http://www.dailymotion.com/video/xshlv4_nn-a-29072012_shortfilms?from_fb_popup=1&code=AQBnL9uYW5LMvFPnNXcKBkjFWvFyRhFeWQfQzL-fZ09Zky5Ywm1R1lAuCYq2WsWXuPdyM74XQ0rjUB5R5fPqNSIFR1U4bmWNWpmBg7N7TcgTBMIVNCKxfquVHciOAfVs1wrEhIkcoHHkOzFCWh6gWDsBD65VDETfT3iaSdQHSomIKbZ3cGIW1MXTNDCys0PSVaE&fbc=6 http://www.dailymotion.com/video/xshm8h_nn-b-29072012_shortfilms http://www.dailymotion.com/video/xshmlk_nn-c-29072012_shortfi…

    • 0 replies
    • 560 views
  12. கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட வலிகாமப் பிரதேச மக்கள் ‘நீருக்காகத் திரண்ட யாழ்ப்பாணம்’ எனும் தொனிப் பொருளில் யாழ். நல்லூர் ஆலய முன்றலில் நாளை செவ்வாய்க்கிழமை மாபெரும் பேரணியொன்றை நடாத்தவுள்ளனர். தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் எவரையும் கலந்து கொள்ளவேண்டாம் எனக் கேட்கப்பட்டுள்ளது. முற்று முழுதான அரசியல் கலப்பற்ற பேரணியாக இது அமையும். எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் பிரமுகரோ இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற முடியாது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளை காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போராட்டத்தின் முடிவில் மக்கள் பேரணியாக சென்று வட மாகாண முதலமைச்சர், ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மக…

    • 0 replies
    • 292 views
  13.  'நீர்க்காகம்' -பதுர்தீன் சியானா இலங்கை இராணுவத்தினரால் 7ஆவது தடவையாக நடத்தப்பட்டு வருகின்ற 'நீர்க்காகம்' என்ற விசேட தாக்குதல் பயிற்சி நேற்றுச் செவ்வாய்க்கிழமை புல்மோட்டை, அரிசி மலைப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுடன் நிறைவடைந்தது. கடந்த 4ஆம் திகதி ஆரம்பமாகிய இப்பயிற்சி கொக்கிளாய் பிரதேசத்தில் ஆரம்பமாகியிருந்தது. இதில் 2,500 காலாட் படையினரும் 638 கடற்படையினரும் 506 விமானப் படையினரும் கலந்துகொண்டனர். அத்துடன் பங்களாதேஷ், சீனா, இந்தியா, சூடான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த படைவீரர்களும் கலந்துகொண்டனர். …

  14.  'நீலப்படங்களை வரியில் பார்த்தனர்' அழகன் கனகராஜ் இராஜதந்திர நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற, வெளிவிவகார அமைச்சின் பெண் அதிகாரிகள், அங்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்தது மட்டுமன்றி, அங்கு நீலப்படங்களை பார்த்துள்ளனர். அவற்றுக்கெல்லாம் மக்களின் வரிப்பணமே செலுத்தப்பட்டுள்ளது என்று ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்னாயக்க மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்…

    • 4 replies
    • 504 views
  15.  'நீலப்படையணி இளைஞனே முஸ்லிம்களை தீண்டுகின்றார்' அழகன் கனகராஜ் 'சிங்கள, முஸ்லிம் உறவை சீர்குலைத்து, இருதரப்புகளுக்கும் இடையில் மோதலை உருவாக்குவதற்கு சூழ்ச்சி வகுக்கப்படுகின்றது. இதன் ஓர் அங்கமாகத்தான் கண்டியில் பள்ளி வீதி பெயர்பலகை உடைக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்;வின் நீலப் படையணியில் இருந்த இளைஞர் ஒருவரே, முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறார்' என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 'முஸ்லிம் மக்களுக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை இல்லை என்ற பயங்கரமான செய்தியை வழங்குவதே அவர்களின் நோக்கமாக இருக்கின்றது. நீலப்படையணின் சூத்திரதாரி தற்போது கைது செய்யப்பட்…

  16. யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணிக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்று வருகின்றது. இன்று வியாழக்கிழமை அதிகாலை 1 மணிமுதல் காலை 7 மணி கடந்த நிலையிலும் மோதல் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. 15-க்கும் மேற்பட்ட படகுகளில் முன்னேறி வந்த கடற்புலிகளுக்கும் தமது படையினருக்கும் இடையில் மோதல் வெடித்ததாக படைத்தரப்பு மேலும் தெரிவித்தது. இச்சம்பவம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை. http://www.eelampage.com/?cn=31923

  17. இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் திரையிடப்படவுள்ளது. இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், சேனல் 4 தொலைக்காட்சி அது குறித்து வெளியிட்ட காட்சிகள் தான் இலங்கை அரசை கடுமையான சங்கடத்தில் ஆழ்த்தின. போரின்போது 'தாக்குதல்கள் நடத்தப்படக் கூடாத பகுதிகள்' என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நி…

  18. சித்தார்த்த குமாரரின் பிறப்பு முதல் பரிநிர்வாணம் அடைதல் வரையான விசேட சம்பவங்களை உள்ளடக்கிய 'ஸ்ரீ சித்தார்த்த கௌதம' திரைப்படம் நேற்று வெளியிடப்பட்டது. திரைப்படத்தின் முதற்காட்சியைப் பார்ப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டார். அத்துடன், அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்த யாபா அபேவர்தன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடக பிரிவு) http://tamil.dailymirror.lk/--main/57712-2013-01-25-08-05-46.html

  19. 'படுகொலைக்களம்' சனல்- 4 நிகழ்ச்சியை வேற்றினத்தவர் அறியச் செய்வோம்! 'படுகொலைக்களம்' சனல்- 4 நிகழ்ச்சியை வேற்றினத்தவர் அறியச் செய்வோம். கனடியத் தமிழர் தேசிய அவை விடுக்கும் அவசர அறிவித்தல். நேற்றைய தினம் பிரித்தானியாவின் தொலைக்காட்சியான சனல்- 4 ஒளிபரப்பிய 'இலங்கையின் படுகொலைக்களம்' என்ற காணொளிக் காட்சி பார்த்த ஒவ்வொருவரினதும் குருதியையும் உறையவைத்துள்ளது. புலம்பெயர் தமிழராகிய நாம் எமக்குக் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பினை நேர்த்தியாகவும் உடனடியயாகவும் நாம் வாழும் நாடுகளில் மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டிய கடமைப்பாட்டிலுள்ளோம். எமது நாடுகளிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புக்கள், அரச மட்டத்தில் வேலைசெய்யும் உறுப்பினர்கள, பாடசாலைகள, தொழிற்…

    • 8 replies
    • 1.5k views
  20. 'படையினரே அனந்தி வீட்டின் மீதான தாக்குதலை நடத்தினர்' 20 செப்டம்பர் 2013 தேசிய இணைப்பாளர் முகமட் மனாஸ் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவிப்பு படையினரே அனந்தி வீட்டின் மீதான தாக்குதலை நடத்தியதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளில் படையினரது பிரசன்னமிலலை எனக்கூறியவாறு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவ்வமைப்பின் தேசிய இணைப்பாளர் முகமட் மனாஸ் தெரிவித்தார். அனந்தியை நேரில் சந்தித்து உரையாடிய பின்னர் அங்கு வைத்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். வட மாகாண சபைத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அனந்தி சசிதரனின…

  21. 'பட்டினி வலயங்களாக' பெயரிடப்பட்டுள்ள 48 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம் By VISHNU 09 OCT, 2022 | 10:43 AM (நா.தனுஜா) உலகளாவிய ரீதியில் 'பட்டினி வலயங்கள்' என உலக உணவுத்திட்டத்தினால் பெயரிடப்பட்டுள்ள 48 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியிருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையொன்றின் ஊடாக இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதுடன் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பின்மை நிலை உயர்வடைந்துவருவதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 'உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு முன்னதாகவே தொடர்ச்சியான காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்தங்கள், பிராந்திய ரீதியான முரண்பாடுகள், கொரோனா வைரஸ…

    • 1 reply
    • 525 views
  22. 'பதவி விலகத் தயங்கோம்' எஸ்.நிதர்ஷன் "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலகுவது தான் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வாக இருக்குமென்றோ அல்லது தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலக வேண்டுமென்றோ இருந்தால், நாங்கள் அதனைச் செய்யத் தயங்க மாட்டோம். பதவி விலகுவதென்பது எங்களுக்கு புதிய விடயமல்ல. " என்று, தமிழரசுக் கட்சியின் தலைவரும் த.தே.கூவின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். சமகால நிலமைகள் தொடர்பில் மாவை சேனாதிராசா எம்.பியிடம் நேற்றுச் சனிக்கிழமை (15) வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜே.ஆர்.ஜெயவ…

  23. (எம்.எப்.எம்.பஸீர், ஆர். யசி) இலங்கையில் ஒரு சிறு குழு நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை மையப்படுத்தி, இனவாதத்தை தூண்டி நாட்டில் இரத்த களரியை ஏற்படுத்த பதவி ஆசை பிடித்த சிலர் முயற்சின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சராகவும் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார். அத்துடன் அதற்கு இடமளிக்காமல், சமாதானத்தை விரும்பும் இலங்கையர் என்ற ரீதியில் நாம் எமது பதவிகளை இராஜினாமா செய்கின்றோம். அந்த பயங்கர்வாத தககுதல்களுடன் முச்லிம் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், விசாரணைகளுக்கு அவர்கள் தமது பதவிகள் ஊடாக இடையூறு ஏர்படுத்துவதாகவும் தொடர்ச்சியாக சிலர் குற்றம் …

  24. 'பதின்மூன்று பிளஸ்' எவ்வேளையும் 'பதின்மூன்று மைனஸ்' ஆகலாம்! -  பனங்காட்டான் [Friday, 2012-10-26 12:30:36] கடந்த இரண்டு வாரங்களாக முக்கிய பேசுபொருளாக இருப்பது பதின்மூன்றாவது அரசியல் திருத்தச் சட்டம். ராஜீவ்-ஜே.ஆர். ஒப்பந்தத்தின் மூலங்களின் ஒன்றான பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் வாழ்வா சாவா என்ற நிலையில் ஊசலாடுகின்றது. மகிந்த ராஜபக்சவினால் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்ட உறுதிகளில் ஒன்று பதின்மூன்றுக்கும் அப்பால் (பதின்மூன்று பிளஸ்). இனப்பிரச்சனைத் தீர்வுக்கு பதின்மூன்றாவது திருத்தம் போதாது. அதற்கும் மேலே சென்று (பதின்மூன்று பிளஸ்) தீர்வு காணப்படும்� என்பது இதன் அர்த்தம். இது ஓர் அறுந்த கயிறு (நேர்மையற்ற வாக்குறுதி) என்பது புரியாமல் இதனை மன்மோகன் சிங் …

  25. 'பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும்": யாழில் சுவரொட்டிகள் By Priyarasa 2013-01-15 11:25:36 தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது சம்பந்தமாக தகவல் தருபவர்களுக்கு பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என சுவரொட்டிகள் யாழ். மாவட்டத்தின் பல பாகங்களிலும் பொலிசாரினால் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பலாலி வீதி காப்பற் போடும் பணியில் ஈடுபட்ட தென்னிலங்கை இளைஞர் ஒருவர் நந்தாவில் தோட்டவெளியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் கொலையைத் தொடர்ந்து கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினர் புன்னாலைக்கட்டுவனில் ஒரு இளம் குடும்பத்தினரை கடத்திச் சென்று விசாரணைகளை மேற் கொண்டதுடன் அவர்களுடைய தந்தையையும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.