ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
இருக்கிற கடனையும், இனிப் பெறப்போகும் கடனையும் அடைக்கப் பத்து ஆண்டுகளுக்கு வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் - யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு! Published By: T. Saranya 11 Feb, 2023 | 10:09 AM வடக்கு மாகாணத்தில் அடுத்து வரும் பத்து ஆண்டுகளுக்கு விவசாயம், கடற்றொழில், சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதற்கும், நவீன தொழில் நுட்பத்தைப் பின்பற்றுவதற்கும் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. இன்று நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நிலையில் இருந்து நாங்கள் மீண்டெழ வேண்டுமென்றால் பத்து வருடத்துக்கான அபிவிருத்தித் திட்டம் அவசியமானதாகும் என்றும், நாங்கள் இது வரை பெற்ற கடன்களை மீளச் செலுத்த வேண்டியிருக்கிறத…
-
- 8 replies
- 453 views
-
-
தவறான இலக்குகள் மீதான குண்டுவீச்சை நிறுத்துங்கள்! பொதுமக்களைக் கொல்வதை ஏற்கமுடியாது என்கிறது ஐ.தே.க. 04.01.07. மன்னார் படகுத்துறைக் கிராமம் மீது நேற்றுமுன்தினம் இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட அப்பாவிப் பொது மக்கள் உயிரிழக்கக் காரணமாக அமைந்த விமானத் தாக்குதலை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கருத்துக் கூறுகையில் ""விமானப்படையினரால் செவ்வாய்க்கிழமை மன்னார் படகுத் துறைப் பகுதியில் மேற்கொள் ளப்பட்ட விமானத் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் இறந் தனர் என்று தெரிவிக்கப்படுகின் றது. இதையிட்டு நாம் கவலையடைகிறோம். புலிகளைத் தாக்க விரும்பினால் இலக்…
-
- 0 replies
- 897 views
-
-
இலங்கைக்கு எதிராக செயற்படும் பல தமிழ் இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வரும் பல இணையத்தளங்களை ஆராய்ந்து வருவதாகவும் அப்படியான இணையத்தளங்களை வெகு விரைவில் இலங்கையில் முடக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=120214&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 587 views
-
-
வடக்கும் கிழக்கும் மோடியின் கைகளில்! – அண்ணாமலை தெரிவிப்பு இலங்கையைப் பொறுத்தவரையில் வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் மோடியின் கைகளிலேயே உள்ளன. மோடியையே அந்த மாகாணமக்கள் நம்பியிருக்கிறார்கள். ஏனென்றால் அபிவிருத்தித் திட்டங்களை நாங்களே செய்கின்றோம்.13 ஆவது திருத்தமே தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதற்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.” – இவ்வாறு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார். இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர் தமிழகம் சென்ற அவர் அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். இலங்கை இனப்பிரச்சினைக்கு 13ஆவது அரசியல் திருத்தம் நிரந்தரத் தீர்வாக அமையாது என்றும்,…
-
- 1 reply
- 877 views
-
-
Friday, March 25th, 2011 | Posted by thaynilam தமிழ்பெண் ஊழியர்கள் பொட்டு வைக்ககூடாது- ரூபவாஹினி உத்தரவு சிறிலங்கா அரச தொலைக்கட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஐ அலை வரிசையில் ஒளிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளை வாசிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாதென நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த உத்தரவை மீறிச் செயற்பட முயற்சிக்கும் பெண்களைச் செய்தி வாசிப்பிலிருந்து உடனடியாக நிறுத்துமாறும் கண்டிப்பான உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது சில நாட்களுக்கு முன்னர் ஒரு தமிழ்ப் பெண் நெற்றியில் பொட்டு வைத்து குங்குமமும்; பூசிக் காணப்பட்டதனையடுத்து எரிச்சல் கொண்ட ரூபவாஹினி உயர் மட்டம்…
-
- 4 replies
- 2.2k views
-
-
1.11.2014-எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் அரசுத் தரப்பு வேட்பாளரான சனாதிபதி மகிந்தவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஆழமாகப் பரிசீலிக்கத் தயார் என அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தங்களை இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்துச் செயற்படவில்லை என்றும், இம்முறையாவது தங்களை ஆதரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்றும் அரசின் சிரேஷ்ட அமைச்சரும் சனாதிபதி மகிந்தவின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் கோரிக்கை விடுத்தார் என்று கொழும்பில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில…
-
- 0 replies
- 436 views
-
-
“தமிழருக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை – விக்கிக்கு சகுணம் பிழைக்க வேண்டும்” நாசமறுப்பான்.. மாகாண சபையில் அமைச்சர்களைப் பதவி நீக்கும் அதிகாரம் முதல் அமைச்சருக்கு இல்லை ஆளுநருக்கே உண்டு என இன்று சிறிலங்கா நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சட்டத்தரணியும், முன்னாள் அமைச்சரும், தமிழ்த் தேசிய வாதியும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவருமான டெனீஸ்வரனும், அவரது ஆதரவாளர்களும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரானவர்களும் மாபெரும் வெற்றியாக கொண்டாடி மகிழ்கின்றனர். மறுபுறம் தமிழ் மக்களின் உரிமை மீட்பர்களாகிய இவர்கள், மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை, குப்பையும் கொட்ட முடியாது, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரிடமே அதி…
-
- 1 reply
- 424 views
-
-
ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிக்க 35 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அழைக்கிறது பெப்ரல்! [Monday 2014-11-17 09:00] ஜனாதிபதித் தேர்தலில் 35 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த பெப்ரல் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. குறித்த கண்காணிப்பாளர்கள் பல்வேறு நாடுகளின் தேர்தல்களின் போது கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு நன்கு அனுபவம் பெற்றவர்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைக்கு பங்களாதேஷ், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வர சம்மதம் தெரிவித்துள்ளனர். இவர்கள் இரண்டு வார காலம் இலங்கையில் தங்கியிருந்து தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் ப…
-
- 0 replies
- 374 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதில் பாதிப்பில்லை - பிரதமர் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் போது எமக்கு சீனாவிடமிருந்து எந்தவொரு அழுத்தமும் வரவில்லை. அவ்வாறு அழுத்தம் வந்திருந்தால் மத்தள விமான நிலையத்தை நாம் இந்தியாவுக்கு வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்காது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அம்பாந்தோட்டை துறைமுகம் முன்னைய ஆட்சியின்போது 1320 மில்லியன் டொலர் கடன் பெற்றே நிர்மாணிக்கப்பட்ட…
-
- 0 replies
- 272 views
-
-
யாழ். மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என அறிவித்தல் Share on FacebookShare on Twitter நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. உடைந்து விழும் நிலையில் உள்ள அந்தக் கட்டடத்திற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நாடப்பட்டுள்ளமை காரணமாக அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2023/1326541
-
- 14 replies
- 1.3k views
-
-
அனலைதீவு, நயினாதீவு, எழுவைதீவு பகுதிகளில் புதிதாக வெளிச்ச வீடுகள் April 7th, 2011 nila யாழ். அனலைதீவு, நயினாதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் உள்ள கடற்கரையேரங்களில் புதிதாக வெளிச்ச வீடுகளை நிறுவுவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் நன்மை கருதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தீவகத்திற்கு பொறுப்பான கடற்படை உயர் அதிகாரி மார்சல் கெந்த டொற்ரி வசந்த தெரிவித்துள்ளார். கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு இந்த வெளிச்சவீடுகள் திசைகாட்டிகளாக இருக்கும் என்றும் அவர்கள் குறித்த இடத்திற்கு விரைவாக தமது கடற்பயணத்தை மேற்கொள்வதற்கு இலகுவாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். http://thaynilam.com/?p=205
-
- 0 replies
- 1.3k views
-
-
வடக்கில் பலருக்கு -எச்.ஐ.வி. அச்சம்!! எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்ற அச்சம் கொண்டவர்கள் வடக்கில் பலர் உள்ளனர். அவர்களைக் கண்டறிந்து சிகிச்சை வழங்க வேண்டியிருப்பதால் சிறப்பு நாள்களை ஒதுக்கி சேவைகளை வழங்கிவருகிறோம். இவ்வாறு பாலியல் தொற்று நோய்ப் பிரிவின் வடக்கு மாகாண இணைப்பாளர் மருத்துவர் சத்தியா ஹேரத் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் முதன்முறையாக 10 இடங்களில் நாளை எச்ஐவி தொற்றுநோய்க்கான பிரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. காலை 9.3…
-
- 0 replies
- 325 views
-
-
யாழ்.நகரில் நகைக்கடை உரிமையாளரும் அங்கு பணியாற்றிய பெண்ணும் உயிர்மாய்ப்பு 14 MAR, 2023 | 07:04 PM யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரும் குறித்த நகைக்கடையில் பணி புரியும் பெண்ணொருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனையின் பின்னே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/150525
-
- 0 replies
- 773 views
- 1 follower
-
-
செவ்வாய் 30-01-2007 00:35 மணி தமிழீழம் [மயூரன்] கடந்த சனிக்கிழமை வன்னி விசுவமடுப் பகுதியில் எதிர்பாராத வெடிவிபத்தில் போராளி ஒருவரும் ஒன்பது உதவிப்படை வீரர்களும் வீரச்சாவை தழுவிக் காண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ போர் உதவிப்படை வீரர்களான யாழ் மாவட்டத்தை சேர்ந்த சின்னப்பா தவராசா, துரைசாமி தவராசா, செல்லத்துரை பிரமானநடதம், தம்பிராசா அருணோதயன், சபாரத்தினம் றஜிந்தன், விசுவமடுவைச்சேர்ந்த மகேந்திரன் றஜிவன், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த யோகரத்தினம் நிசாந்தன், செபமாலை நரேஸ்காந்தன்,சிவஞானம் விஜிதரன் ஆகியோரே வீரச்சாவடைந்துள்ளனர். இவர்களுடன் லெப்.கேணல் மலரவன் என்றழைக்கப்படும் யாழ்மாவட்டத்தை சேர்ந்த நவரத்தினராசா சுரேஸ்குமார் என்ற போராள…
-
- 4 replies
- 1.2k views
-
-
புதுவருசம்: ஒரு பொழுது உணவுக்குத் தவித்திருக்க பலகாரத்துக்கு எப்படி ஆசைப்படுவது? 14 ஏப்ரல் 2011 வழமைய நாட்களே பெரும் துக்கங்களைதான் தருகின்றன. இதனிடையில் வரும் கொண்டாட்டங்களுக்குரிய நாட்கள் அதைவிடப் பெரும் துக்கங்களை தருகின்றன. ஏனேன்றால் அந்த நாட்கள் வாழ்வையும் போராட்டங்களையும் தவிர்க்க முடியாதபடி ஞாபகத்துக்குக் கொண்டு வருகின்றன. எப்படி இருந்த வாழ்வு? எப்படி இருந்த நாங்கள்? என்ற கேள்விகளை மனமெங்கும் நிரப்புகின்றன. யாராவது வாழ்த்துச் சொல்லும்பொழுதுதான் இன்னுமின்னும் வலியெடுக்கிறது. விரக்தி நிரம்பிய ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் எது கொண்டாட்டத்திற்குரிய நாள் என்பதை எப்படியோ எல்லாம் சொல்லிக் களைத்திருக்கிறார்கள். இன்று சித்திரைப் புதுவருசம். சில தொலைபேசி நிறுவன…
-
- 1 reply
- 906 views
-
-
முன்னாள் விடுதலை புலிகளால் கட்சியில் வலிந்து இணைக்கப்பட்டோம்
-
- 1 reply
- 707 views
-
-
இந்திய மீனவர்கள் 12 பேர் கைது Published By: T. SARANYA 23 MAR, 2023 | 12:12 PM யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இரு இந்திய மீன்பிடிப் படகுகளுடன் 12 மீனவர்கள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இதுவரை காங்கேசன்துறைக்கு கொண்டு வரப்படவில்லை. கொண்டு வரப்பட்டதும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இவ்வாறு 1802 மற்றும் 65 ஆகிய இருபடகுகளே பிடிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/1512…
-
- 1 reply
- 403 views
- 1 follower
-
-
The United Nations is expected to publicly release this week a UN panel of experts' report that looked into whether war crimes were committed in the final stages of Sri Lanka's decades-long civil war, UN spokesman Farhan Haq said Monday. UN Secretary-General Ban Ki-moon and his senior advisors are currently finalizing their review of the report and hope to make it public along with a formal response from the government of Sri Lanka, Haq told reporters here. The UN-commissioned report was delivered to the secretary- general on April 12 and was shared with the government of Sri Lanka. "The secretary-general has always stressed the government of Sri Lanka's pr…
-
- 0 replies
- 1.1k views
-
-
போருக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற சூழல் குறித்து, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது. சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ள இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள தாஜ் விடுதியில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, போருக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற சூழல் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, அதிகரித்த சிறிலங்கா இராணுவப் பிரசன்னம், உயர்பாதுகாப்பு வலயங்களால் மீள்குடியமர்வில் ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் க…
-
- 0 replies
- 727 views
-
-
யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில், கரம்பகம் பகுதியில் தந்தையை வெட்டி படுகொலை செய்த குற்றத்தில் இரு மகன்களும், மேலும் ஒருவரும் என மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமது தந்தையை தாமே கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்த பாடசாலை மாணவர்களான கொலையுண்டவரின் இரு மகன்கள் மற்றும் அவர்கள் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த அவர்களது நண்பர் ஆகிய மூவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவர் இன்று (31) காலை கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த இவர், தனது தோட்டத்தில் குடில் ஒன்றின…
-
- 6 replies
- 934 views
-
-
''சிறிலங்காவின் போரும் சிதைந்து போகும் தமிழரின் வாழ்வியலும்'' -அ. பிரியன்- நான் பணிபுரியும் நிறுவனத்திற்கு என் நெருங்கிய சினேகிதன் வந்தான் அவனை அடையாளம் காண்பதில் சற்றுத் தடுமாறி பின் நிதானித்தேன் ஏனெனில் ஏ-9 பாதை மூடப்பட்டதன் பின்பு அவனுடைய மனைவியும் மூன்று பிள்ளைகளும் கிளிநொச்சிக்கு வரமுடியாத நிலை மனைவியையும் பிள்ளைகளையும் காணாது கவலையோடு இருந்தவனுக்கு அவனது ஒரே ஒரு தம்பியையும் சிறிலங்காப்படையினர் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொன்றனர். இரண்டு துயரங்களும் ஒன்று சேர தலைமுடியும் தாடியும் வளர்த்து முனிவர் நிலை பூண்டிருந்தான் 33 வயதுடைய எனது நண்பன். அதே கோலத்துடன் பார்த்துப் பழகிய என் கண்கள் சற்றுத் தடுமாறியது நியாயமானதே. “இப்ப தான் ஆளப்பாக்கச் சந்தோஷமா…
-
- 0 replies
- 851 views
-
-
ஜனாதிபதி, திருப்பதிக்குச் சென்று திரும்பும் போது, அந்த தெய்வத்தை வணங்கும் பக்தர்கள் இருவர் எங்கள் வசம் வந்துவிட்டனர் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பன்னல பிரதேசத்தில் நேற்று (11) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தற்போதுள்ள அரசாங்கம், இந்த நாட்டு மக்கள் எதிர்ப்பார்க்கும் அரசாங்கம் அல்ல. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜோதிடர்கள் மாத்திரமே எஞ்சியுள்ளனர்' என்றார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/135816-2014-12-12-07-45-38.html
-
- 1 reply
- 434 views
-
-
வெள்ளி 23-02-2007 03:00 மணி தமிழீழம் [சிறீதரன்] புத்தூர் பகுதியில் சூட்டுக்காயங்களுடன் உடலம் அச்சுவேலி காவல்துறையினரால் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடலம் சூட்டுக்காயங்களுடன் புத்தூர் கிழக்கு வாகரவத்தை பகுதியல் மக்கள் குடியிருப்பு பகுதியில் வியாழன் காலை மீட்க்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவ் உடலத்தை பிரேத பரிசோதனைக்காக வியாழன் மதியம் யாழ் ஆசிரியர் வைத்திய சாலையில் கையளித்துள்ளனர். இதேவேளை குடிசார் தகவலின் படி புதன் மாலை சிறீலங்கா படையினரின் நடமாட்டம் அப்பகுதியில் காணப்பட்டதாகவும் துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும் தெரியவந்துள்ளது. எனினும் அவ் உடலமானது இன்னமும் இனம்காணப்படவில்லை http://www.pathivu.com
-
- 1 reply
- 955 views
-
-
யாழ் பஸ் தரிப்பிடத்தில் பிச்சை எடுப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இவர்கள் கையில் ஒரு குழந்தையுடன் பல்வேறு காரணங்களை கூறி பிச்சை எடுப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவர்களுடன் அங்கவீனமான சில ஆண்கள், வயோதிபப் பெண்கள், கைம்பெண்கள் என நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. வடக்கு கிழக்கில் அரசாங்கத்தின் திட்டமிட்ட அடக்கு முறைகள், புறக்கணிப்புக்கள் ஆகியவையே பிச்சை எடுப்பவர்கள் அதிகரிப்பதற்கு காரணம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் பிரதேசங்கள் இருந்தபோது பிச்சை எடுப்போர்கள் என்பவர்கள் அரிதாகவே காணப்பட்டனர். குறிப்பாக வன்னியில் முற்றாகவே பிச்சைக்காரர்கள் இருக்கவில்லை. http://eelanatham.net/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E…
-
- 0 replies
- 1.1k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவர் என நாட்டின் புதிய சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க ஆரூடம் கூறியுள்ளார். மைத்திரி ஜனாதிபதியாகினால் சந்திரிக்கா பண்டாரநாயக்கவே பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபாலவின் அரசாங்கத்தின் பிரதமராக சந்திரிக்காவை நியமிக்க இரகசிய உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். சந்திரிக்காவிற்கு பிரதமர் பதவியை வழங்கும் இரகசிய நோக்கத்தை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்கள் மூலம் திஸ்ஸ அத்தநாயக்க மறைமுகமாக மைத்திரிபால ஜனாதிபதியாவர் என்பதனை ஒப்புக் கொண்டுள்…
-
- 1 reply
- 662 views
-