ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143580 topics in this forum
-
வாராந்தரம் இடம்பெறும் அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு கலந்துகொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டால், அதற்கு எதிராக கடும் அரசியல் நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. அவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் வேளையிலேயே ஜனாதிபதி வடமாகாண முதலைமைச்சருக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்று அமைச்சரவை கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்கு சி.வி. விக்னேஸ்வரன் தயாரானால் முழு வடமாகாணத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மாகாண சபை உறுப்பினர்களும் இந்த செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடு…
-
- 16 replies
- 1.7k views
-
-
சிறீலங்கா உயர்நீதிமன்றம் பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை இடைநிறுத்த உத்தரவு. சிறீலங்கா உயர்நீதிமன்றம் கொழும்பு தங்ககங்களில் இருந்து பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை தற்காலிகமாக இடைநிறுத்த சிறீலங்காவின் காவல்துறை மா அதிபர் விக்ரர் பெரேராவிற்கும் அவரது திணைக்களத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ் உயர் நீதிமன்ற இடைநிறுத்தத்தினை மாற்றுக்கொள்ளைகளுக்கான மையத்தின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார். -Pathivu-
-
- 8 replies
- 1.7k views
-
-
கடந்தவாரம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் தமிழ்பாராளமன்ற உறுப்பினர் சிவநேசன் கொல்பட்டிருந்தார். கொழும்பில் இருந்து வெளி வரும் வாரந்த இதழான த நேசன் அதனது பாதுகாப்பு பத்தியில் தமிழ் பாராளமன்ற உறுப்பினர் சிவநேசன் சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அந்தச் செய்தியால் உற்சாகமடைந்த இராணுவத்தினர் புளியங்குளம் பகுதியில் புதிய தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. Buoyed also, by the Army’s deep penetration unit claymore mine killing of Jaffna District MP Srinivesan north of Puliyankulam last week, soldiers on Monday took on hordes of Tiger cadres in the Pulliyankulam ar…
-
- 11 replies
- 1.7k views
-
-
யாழ்.குடாநாட்டில் உள்ள விடுதிகளில் கலாசார சீரழிவு மற்றும் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் மட்டுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிவ்ரி தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. அதன்போது விடுதிகளில் நடைபெறும் கலாச்சார சீரழிவு தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கை என்ன என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, விடுதிகளில் கலாச்சார சீரழிவு மற்றும் விபச்சாரம் நடைபெறுவது தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைத்தால் மட்டுமே விடுதிகள் முற்றுகையிடப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும். …
-
- 14 replies
- 1.7k views
-
-
ஒரு பௌத்தனும் இறக்காமல் திட்டமிடப்பட்ட குண்டு தாக்குதல்!! ஈஸ்ரர் படுகொலை குறித்துஅரசியல் ஆய்வாளர் திரு. மு. திருநாவுக்கரசு.
-
- 9 replies
- 1.7k views
- 1 follower
-
-
அனைவரையும் அழித்துவிடுவேன்: சம்பூர் மக்களை அச்சுறுத்தி ஆளுநரின் மனைவி! திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கூனித்தீவு கிராம சேவகர் பிரிவுள்ள மத்தளமலை ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி அச்சுறுத்தியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் முன்னிலையிலேயே மத்தளமலையில் அமைந்துள்ள ஆலய வளாகத்தில் இருந்த பெண்கள் உட்பட தமிழர்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்து அனைவரையும் அழித்துவிடுவதாகவும் அச்சுறுத்தி இருக்கின்றார். மூதூர் பிரதேச செயல…
-
- 27 replies
- 1.7k views
-
-
இலங்கையில் மீன் மழை! - கெண்டை மீன்கள் கிடைத்ததால் மக்கள் கொண்டாட்டம். Top News [Wednesday, 2014-05-07 08:58:21] புத்தளம் மாவட்டத்தில் உள்ள, மாதம்பை கலஹிட்டியாவ பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் மழையோடு மீன்களும் வானத்தில் இருந்து விழுந்துள்ளன. பனையேறிக் கெண்டை எனப்படும் இந்த நன்னீர் மீன்கள் 3 அங்குலம் முதல் 5 அங்குலம் வரை நீளமானவை என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர். மழையில் கொட்டிய மொத்தம் 50 கிலோ வரையான கெண்டை மீன்களை மக்கள் பாத்திரங்களில் அள்ளிச் சென்றதாக அவர்கள் கூறினார். கடுமையான காற்றுடன் கூடிய மழையில் அள்ளுண்டு சென்ற மீன்கள் இப்படி தரையில் மழையாக பொழிந்ததாக பீடிஏ சந்திரசிறி என்ற மாதம்பை பிரதேசவாசி கூறினார். http://seithy.com/breifNews.php?newsID=108829&category=…
-
- 1 reply
- 1.7k views
-
-
திங்கள் 11-12-2006 17:22 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புத்திஜீவிகள் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் பகிரங்கப்படுத்தப்பட்டமை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளளது இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், உட்பட முக்கிய வெளிநாடுகள் அந்த திட்டதை நடைமுறைப்படுத்துமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் சிறுபான்மை மக்களுக்கு ஒரளவு அதிகாரங்களை வழங்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை சிங்கள அடிப்படைவாத கட்சிகள் முற்றாக நிராகரித்துள்ளன . இந்த நிலையில் அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதில் குழப்பமடைந்துள்ளாதாக தெரியவருகின்றது …
-
- 5 replies
- 1.7k views
-
-
5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் – இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலம்!! 5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் – இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் பேச்சு நடத்தியுள்ளார். இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவுடன், நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமைமாலை சந்தித்துப் பேச்சு நடத்தினார். 5.19 பில்லியன் டொலர் செலவில், தலை மன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. 22 கிலோ மீற்றர் நீளமுடையதாக இந்த இணைப்புப் பாலத்தை கடலுக்கு மேலாகவும், கடலடி ச…
-
- 18 replies
- 1.7k views
-
-
(ஊடகப்பிரிவு) வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து 13 ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும் இதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டுமென அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதி தலைமையில் நடாத்தப்படும் பேச்சுக்களில் (13) அரசியலமைப்பின் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கோரியதையடுத்தே, அமைச்சர் நஸீர் அஹமட் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதில் நாங்கள் கரிசனையுடன் உள்ளோம். ஆனால், இத்தீர்வுகள் முஸ…
-
- 9 replies
- 1.7k views
-
-
முகாம்களில் அடைப்பட்டிருக்கின்ற மூன்று லட்சம் மக்களில் ஏறத்தாள 1600 மாணவர்கள் வரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்ற இருக்கிறார்கள். இவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நூல்கள் மற்றும் சத்துணவு போன்றவற்றை ICUTS என்னும் ” சர்வதேச பல்கலைக்கழக தமிழ் மாணவர் சங்கம் ” ( International Committee of University Tamil Students) எனும் அமைப்பு உதவிகளைப் பெற்று இலங்கை கல்வித்திணைக்களம் ஊடாக அந்த மாணவர்களுக்குச் செய்து வருகின்றது. அது தொடர்பான அவர்களின் அறிக்கை. எம் இனிய தமிழ் நெஞ்சங்களே! வாழ்வில் துன்பம், என்பதை கடந்து துன்பமே வாழ்வாய் எம்மினத்தின் ஒரு பகுதி வாடி வதங்குகிறது. உறவுகளையிழந்து, உறுப்புக்களை தொலைத்து, உடமைகள் அழிக்கப்பட்டு, ஊரையும் பறிகொடுத்து இன்று உணவின்றி, உறங்க ஓ…
-
- 4 replies
- 1.7k views
-
-
சிங்களவாதம் கூட போர் தமிழ் மக்களுக்கு எதிரானது என்ற உண்மையை ஒளித்துக் கொண்டே போரிட வேண்டி இருக்கின்றது. எனவே இந்தியப் போக்குக்கு மட்டும் அந்த தேவை இல்லாமல் போகுமா? "புலிவேறு, மக்கள் வேறு" என்று சிங்களம் சொல்லும் போது அது காதுகுத்த விரும்புவது தமிழர்களயோ, சிங்களவர்களயோ அல்ல வெளி உலகத்தை மட்டுமே! "புலிகள்வேறு, மக்கள் வேறு" என்று ஜெயாவோ, பார்ப்பானியமோ சொல்லும் போது அவை காதுகுத்த முற்படுவது தமிழ்நாட்டு மக்களை மட்டுமே, மற்றவர்கள் உணர்வு அவர்கள் அரசியலுக்கு ஒரு மண்ணும் போடாது. தினமலர் என்ற பார்ப்பானிய நாளேடு ஈழத்தின் அழிவுக்கு தன்பங்குக்கு கனகச்சிதமாய் எண்ணை ஊற்றும் பணியில் ஒன்று தான் இதுவும். புதினத்தில் இருந்து...... இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செ…
-
- 1 reply
- 1.7k views
-
-
தென்னிலங்கையின் யால பகுதியில் ஊடுருவியுள்ள 30 தமிழீழ விடுதலைப் புலிகளை சமாளிக்க 3,000 படையினரை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனுப்பியதன் மூலம் அதன் அரசியல் தாக்கம் என்ன என்பதனை அறியக்கூடியதாக உள்ளது என்று சிறிலங்காவின் வார ஏடான "லக்பிம" தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்! June 10, 2018 தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை முக்கியஸ்தராக செயற்பட்ட போராளியொருவர் இன்று காலை மாரடைப்பினால் மரணமாகியுள்ளார். திருகோணமலை மாவட்ட அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளராக கடமையாற்றிய ஐங்கரன், இன்று அதிகாலை மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். http://www.pagetamil.com/7871/
-
- 20 replies
- 1.7k views
- 1 follower
-
-
கருணாவின் முதலமைச்சர் கனவைக் கலைத்தார் டக்ளஸ் தேவானந்தா ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராணுவ துணை படையான கருணா குழுவை தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சியாக அங்கீகரிக்க மறுத்தமைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு துணை ஆயுதக் குழுவான கருண குழுவே காரணம் என தெரியவந்துள்ளது. அரசியல் கட்சியாக தோற்றம் பெற்ற காலம் முதலே சிங்கள அரசாங்கங்களுக்கு விசுவாசமான துணைப் படையாக செயல்பட்டு வரும் ஈ.பி.டி.பியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் முன்வைத்த வேண்டுகோளின் பேரிலேயே கருணா குழுவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்காத நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் படையினரின் ஆக்கரமிப்பிற்குட்பட்டுள்ள நிலையில் அங்கு நடத்தப்படும் தேர்தல்களின் போது அரசாங்…
-
- 1 reply
- 1.7k views
-
-
மாவட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சிஇ நாகைஇ கரூர்இ பெரம்பலூர்இ அரியலூர்இ தஞ்சாவூர்இ திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும்இ எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கருத்துக் கேட்டறிந்தார். ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்ட அவர் இரவு கோவை புறப்பட்டுச் சென்றார். இந்தக் கூட்டம் ரகசியமான முறையில் காஜாமலை பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்டது. இதில்இ செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. மக்களவைத் தேர்தலில் தேசியக் கட்சியுடன் கூட்டணி என முடிவு செய்யப்…
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
இந்திய அரசு எமது போராட்டத்தை நசுக்க எவ்வளவு முயற்சி செய்தது என்பது இந்த பேட்டி இல் இருந்து தெரிகிறது http://www.rediff.com/news/2000/mar/30lanka.htm இந்த இணையத்தளத்தில் part 1 , part 2,part 3 என்று உள்ளது தொடந்து வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் பொது மக்களையும் சுடுமாறு படையினருக்கு உத்தரவு சிறீ லங்கா இராணுவத்தினர் மீது பொதுமக்கள் குழுமிவந்து தாக்குதல் நடத்தினால் அவர்களையும் சூடுவதற்கான உத்தரவை இராணுவத்தினருக்கு தாம் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள இராணுவத்தளபதி சரத்பொன்சேகா, ஏழாயிரம் உறுப்பினர்களைக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளால் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் படையினரை ஒன்றும் செய்துவிட முடியாதென தெரிவித்துள்ளார். ஊடகமொன்றின் கேள்விக்கு இவ்வாறு தமது வலிமைபற்றி வீரம் பேசியுள்ள அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தினைப் பயன்படுத்தி ஆயுதங்களைக் கடத்திவருகின்றனர். இம்முறை மட்டுமின்றி கடந்த காலங்களிலும் இதனையே செய்துவருகின்றனர். முன்னர் எண்பதுகளி…
-
- 1 reply
- 1.7k views
-
-
கோட்டபாய ராஜபக்ச மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டணம். அமெரிக்கா தூதுவராலயம் இன்று கொழும்பில் கோட்டபாய ராஐபக்ஸ மீது மேற்கொண்ட குண்டுத் தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் அத் தாக்குதலில் கொல்லபட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தாக்குதல் விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை ஒத்த அடையாளங்களை கொண்டுள்ளதாகவும். தாங்கள் விடுதலைப்புலிகளை மீண்டும் பயங்கரவாதத்தை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரும்படிகேட்டுக் கொள்வதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tamilwin.com
-
- 8 replies
- 1.7k views
-
-
இது செஞ்சோலை படுகொலை நடந்த நான்காவது ஆண்டின் நினைவு வாரமாகும். இந்த நினைவு வாரத்தில்;,பல்வேறு நாடுகளில் நாங்கள் நினைவு நிகழ்வுகளை நடத்துகிறோம். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் நினைவுக் குறிப்புகள் நினைவு மீட்டல்களை பதிவேற்றுகிறோம். ஆனால் இதுவரை புலத்திலுள்ள நாங்கள் அதாவது தனிநபர்களாகவோ அல்லது அமைப்புக்களோ கடந்த வருடம் நடந்து முடிந்த கொடிய யுத்தத்தின் பின்னர் இந்த செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச் சோலை சிறார்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? அவர்களை யார் பராமரிக்கிறார்கள் என்பது பற்றி ஆராய்ந்து அவர்களுக்கு எப்படி உதவுவது என்பது தொடர்பாக உரிய கவனம் செலுத்தவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். இதன் விளைவுதான் ஜெயந்தி அல…
-
- 10 replies
- 1.7k views
-
-
புதன் 01-08-2007 13:12 மணி தமிழீழம் [மயூரன்] மிகப்பெரிய அமைச்சரவையை சமாளிக்கவே கப்பம் அறவிடப்படுகிறது - ஜனாதிபதி அரசாங்கத்தின் மிகப் பெரும் அமைச்சரவையை சமாளிப்பதற்காகவே தமிழ் மற்றும் முஸ்லீம் வர்தகர்களிடம் இருந்து கப்பம் அறவிடப்படுவதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் பிரபல முஸ்லீம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய முஸ்லீம் அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைத்து உங்கள் பயணத்திற்கு முச்சக்கர வண்டி ஒன்றை ஒழுங்கு செய்து தந்தால் தொடர்ந்தும் அமைச்சு பதவி வகிக் முடியு…
-
- 2 replies
- 1.7k views
-
-
வன்னி நிலப்பரப்பிலிருந்து இடம்பெயர்ந்து. சிறிலங்கா படையினரால் வவுனியா வதை முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் தினம் தோறும் சிறிலங்கா படையினராலும், ஈ.பி.டி.பி, புளொட் ஒட்டுக்கும்பல்களினால் பாலியல் சித்திரவதைகளுக்கு உட்பட்டிருப்பதாக, வவுனியா வதை முகாமில் பணியாற்றி விட்டு விடுமுறையில் திரும்பிய முஸ்லீம் பொலிஸார் ஒருவர் தெரிவித்திருக்கிறார். http://www.orunews.com/?p=3542
-
- 0 replies
- 1.7k views
-
-
யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசு மீது இந்தியா செல்வாக்குச் செலுத்த முடியாதிருப்பது துரதிர்ஷ்டம் -கேணல் ஹரிகரன் நாடுகளுக்கிடையிலான உறவுகளை அர்த்தபுஷ்டியுடையவையாக உருவாக்குவது மக்களே தவிர உடன்படிக்கைகள் அல்ல. இரு நாட்டு மக்களினதும் வாழ்வில் வித்தியாசங்களை இந்தியா ஏற்படுத்தாதவிடத்து பரந்துபட்ட கேந்திரோபாய பாதுகாப்பு விடயங்களில் இலங்கையுடனான இந்தியாவின் உறவுகள் பரிகாரத்தைத் தேடித்தராது. இரு தசாப்தங்களின் பின்னர் ராஜீவ் ஜயவர்தனா உடன்படிக்கையை நாம் பார்க்கும்போது எடுத்துச் செல்லும் முக்கியமான விடயமாக இதுவே காணப்படுகிறது. இவ்வாறு தெற்காசியா தொடர்பான இராணுவ புலனாய்வு நிபுணரும் 1987 1990 க்கு இடையில் இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையின் புலனாய்வுப் பிரிவின் தலைவராகப் ப…
-
- 9 replies
- 1.7k views
-
-
மீளக் குடி அமர்த்தப்பட்ட மல்லாவியில் கணவன் மனைவி இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்? 27 December 09 05:05 pm (BST) மக்கள் மீளக் குடி அமர்த்தப்பட்ட மல்லாவிப் பகுதியில் இளம் குடும்பஸ்த்தர்களான கணவன் மனைவி இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன. இந்த சம்பவம் இந்தவார முற்பகுதியில் இடம்பெற்றதாக தெரியவருகிறது. மீளக் குடியமர்த்தப்பட்ட பகுதியின் அண்மையில் இருந்து இவர்கள் இராணுவமுகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இளம் தம்பதியினர் சுட்டுக் கொல்லப்பட்டதனை அடுத்து அனாதரவான அவர்களின் குழந்தைகள் மீண்டும் வவுனியா இடைத்தங்கல் முகாமில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள…
-
- 3 replies
- 1.7k views
-
-
கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்று இயங்கியது தொடர்பாக அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் ஒருவரை கல்கிசை பொலீசார் கைது செய்துள்ளனர். இவர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மேமாதம் 22ம் திகதி மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதியை பொலீசார் முற்றுகையிட்டபோது ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்தப் பெண்களை தலா 25ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் செல்ல கல்கிசை நீதவான் அனுமதித்துள்ளார். பொலீசாரின் தேடுதலின்போது தப்பிச்சென்றவர் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.7k views
-