ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைக்கு அமெரிக்க உளவு நிறுவனம்தான் காரணம் என்று தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 24 replies
- 4.9k views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் ஆக்கம் - சுகன் ஒப்பந்தங்களும் முடிவுகளும் நடைமுறையில் இல்லாத போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசுவிலகுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து நோர்வே அமைச்சர் எரிக்சொல்கைமும் ஐ.நா அதிபர் பாங்கிமூன் ஐயாவும் கவலைப்படுகின்றனர். மேலும் சில நாடுகள் வருத்தத்தை தெரிவித்துள்ளன. இந்த நிலைமையானது தமிழர்கள் அதிகளவு கொல்லப்படும் போது தெரிவிக்கும் கவலைகளுக்கு ஒப்பானது. கவலை தெரிவிப்பது, கண்டனம் செய்வது, நடவடிக்கை எடுப்பது என்ற ஒழுங்கில் இலங்கை அரசுக்கும் சர்வதேச நாடுகளுக்குமான புரிந்துணர்வு கவலைகளை பரிமாறுவதிலேயே தான் இன்னமும் உள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து அரசு விலகாமலேயே யுத்தத்தை தொடர்ந்து நடாத்தியவண்ணம் இருந்தது. ஆயிரக்கணக்கான …
-
- 3 replies
- 4.9k views
-
-
பிரிவு: தமிழ் நாடு இன்று காலை பச்சையப்பன் கல்லூரிக்கு வெளியே சாலைமறியல் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். காவல்துறையினர் மாணவர்களை கலைக்க முயற்சி செய்தனர் , மாணவர்களின் ஒற்றுமை, போர்க்குணம் ஆகியவற்றால் கூட்டத்தைக் கலைக்க இயலவில்லை, தடியடி நடத்தி கலைத்தது. தடியடியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படு காயம் அடைந்தனர். எவ்வளவு தான் அடக்குமுறை செலுத்தினாலும் எங்களது கோரிக்கை நிறவேறும் வரை போராரடுவோம்! எந்த ஒரு போராட்டமும் அடக்குமுறைகளினால் அடக்க முடியாது, என வரலாறு கூறுவதை நாங்கள் அறைந்து சொல்கிறோம்! மாணவர் வர்க்கமாய் ஒன்று திரண்டு போராடுவோம்! ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போல பல மடங்காக எங்களது போராட்டத் தீ பற்றி பரவும்! என்று …
-
- 0 replies
- 4.9k views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவரை இலக்கு வைப்போம் - சிறீலங்கா வான்படைத்தளபதி சூளுரை. சிறீலங்கா வான்படைத்தளபதி றோசான் குணதிலக கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தாம் விடுதலைப்புலிகளின் தலைவரை இலக்கு வைப்போம் எனவும் அது தமக்கு கடினமான காரியம் அல்ல எனவும் சூளுரைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளின் தலைவரது நடமாட்டம் வன்னியில் மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாத்திரமே காணப்படுவதாகவும் தமது இராணுவம் பொதுமக்களிடம் இருந்து இதுதொடர்பில் தகவல்கள் பெறுவதற்கு கோரியுள்ளதாகவும், பொதுமக்கள் தகவல்களை வழங்கும்பட்சத்தில் தாம் இலக்குமீது தாக்குதல்களை நிகழ்த்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் Pathivu "Air Marshall Roshan Goonetilleke…
-
- 26 replies
- 4.9k views
-
-
தளபதி சூசை அவர்களின் பேச்சு( குரலில்) http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23385 சிறகு விரித்த புலிகள்"- பாடல் குறுவட்டு வெளியீடு: கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை பங்கேற்பு [புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2007, 21:44 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறகு விரித்த புலிகள் பாடல் குறுவட்டினை தமிழீழ கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை இன்று வெளியிட்டார். புதுக்குடியிருப்பில் மாவீரர் மண்டபத்தில் இன்று புதன்கிழமை மாலை தொடங்கிய நிகழ்விற்கு புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல் பொறுப்பாளர் இளம்பருதி தலைமை தாங்கினர். பொதுச்சுடரை லெப்டினன்ட் கேணல் கிட்ட அவர்களின் துணைவியார் ஏற்ற ஈகச்சுடர் திலீபனின் திருவுருவப்படத்துக்கு லெப்.கேணல் குஞ…
-
- 7 replies
- 4.9k views
-
-
வீரகேசரி இணையம் 12/29/2008 2:17:53 PM - விடுதலை புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை எதிர்வரும் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் கைது செய்துவிடுமென அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கண்டியில் இன்று இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-
- 27 replies
- 4.9k views
- 1 follower
-
-
கலக்கிறாய் கரி நாகம் கருணா புது பட்டு வேட்டி கையில தேங்காய் பக்கத்தில பூசாரி ஜயா அவரோடு பாதுகாப்புக்கு சிங்கள இராணுவம். படம்.1 படம் .2
-
- 21 replies
- 4.9k views
-
-
கொள்ளையனுக்கு முற்காலத்தை நினைவூட்டும் தண்டனை கொடுத்த இளைஞர்கள் By ஈழமதி On Feb 10, 2019 Share வடதமிழீழம், யாழ்ப்பாணத்தில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் சிக்கிய இளைஞர் மக்களினால் கட்டி வைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக கொடிகாமம் வரணி பகுதியில் இடம்பெற்ற களவு மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞன் நேற்றையதினம் இளைஞர்களிடம் சிக்கியுள்ளார். இதன்போது அவர் கட்டி வைத்து தாக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனிற்கு விடுதலைப்புலிகளின…
-
- 58 replies
- 4.9k views
-
-
இலங்கை அரசு சமாதான உடன்படிக்கையை இரத்துச்செய்ய முடிவு செய்திருப்பதாக சண் செய்திகள் (இப்போது இலவசமா போகிறது ;) ) தெரிவிக்கிறது. இச்செய்தியை இணயத்தளங்களில் காணமுடியவில்லை.
-
- 17 replies
- 4.9k views
-
-
வி.புலிகள் வான் பலத்தைக் கொண்டிருப்பதாவது தென்னிந்தியாவிலுள்ள அணு உலைகளை இலக்கு வைக்கக் கூடிய ஆபத்து ஏற்படலாமென இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி?? பாலித்த கோஹன தெரிவித்துள்ளார். வி.புலிகளின் வான் படையானது நினைத்தளவிற்கு இல்லாது மிக மோசமானதாயிருக்குமென இலங்கை அரசானது முதல் தடவையாக இந்திய அதிகாரிகளுக்குத தெரிவித்துள்ளதாக 'டைம்ஸ் நெளவ்"வை மேற்கோள் காட்டி 'டைம்ஸ் ஒப் இந்தியா" பத்திரிகை தெரிவித்துள்ளது. வி.புலிகளின் வான் படை அணியை குறைத்து மதிப்பிடக் கூடாதெனவும் இந்தியா அரசுக்கு தெரிவிக்கப்ட்டுள்ளது . எனினும் இவ்வாறானதொரு அச்சுறுத்தலை தங்களால் மிக இலகுவாகச் சமாளிக்க முடியுமென இந்திய அரசு நம்புகிறது. ஆனாலும் தென்னிந்தியாவிலுள்ள மிக முக்கிய அண…
-
- 25 replies
- 4.9k views
-
-
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள் , மாவீரர் வாரத்தின் இறுதி நாள்; தாயக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனிதக் கல்லறைகளில் சிரந்தாழ்த்தி, மலர்தூவி, ஒளிதீபமேற்றும் உன்னதநாள்; நம் தாயக விடுதலைக்காக இதுவரை நாம் இழந்தவற்றை மீள்நினைத்து இழந்த மாவீரர்களின் இலட்சியக் கனவினை ஈடேற்ற அவர் வழிச்சுவடு தொடருவோம் என உறுதியெடுத்துக் கொள்ளும் வீரநாள்; ஈழத்தமிழர்கள் அனைவரிற்கும் ஒரு எதிர்பார்ப்பினைக் கொடுக்கும் நாள்; அன்றுதான் நம் தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்களை அவரது உரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் அரிய நாள். அந்நாளில், ஒட்டுமொத்த உலகமுமே தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் என்ன சொல்லப் போகின்றார் என ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும். ஆனால் இந்த வருடம், தேசிய…
-
- 42 replies
- 4.9k views
-
-
கொழும்பிலுள்ள இந்திய உதவிக்தூதுவரின் கருத்து Terrorism should be defeated minimizing damage to civilians, says new Deputy High Commissioner of India (, September 17, 2008, 3.00 AM) There is no answer to terrorism except defeating it but in a way the damage to the civilians will be minimized, said the new Indian Deputy High Commissioner Sri Wikram Misri at a meeting with the media Monday (15) evening held in the Indian High Commission. The function was held to welcome the new Deputy High Commissioner. The Deputy High Commissioner stated that India sees Tamil people and LTTE as two phenomena. Although the military action taken by the government to defeat te…
-
- 16 replies
- 4.8k views
-
-
மஹிந்தவின் இறுதிப்போரை எதிர்கொள்ளும் விடுதலைப் புலிகள் -சி.இதயச்சந்திரன்- எவராலும் இலகுவில் அனுமானிக்க முடியாததொரு புதிய பரிமாண வடிவத்தை வெளித்தள்ளப்போகிறது நடைபெறவிருக்கும் இறுதி யுத்தம். எதிரியின் சமகால போரியல் உத்திகளை கூர்ந்து அவதானிக்குமொருவர், முன்னைய கால விடுதலைப் புலிகளின் போர்த் தந்திரங்களை முறியடிக்கும் தந்திர உபாயங்களை அரசு தற்போது பிரயோகிப்பதை உணர்ந்து கொள்வார். இருப்பினும் இனிவரும் யுத்த களத்தில் புலிகளால் மேற்கொள்ளப்படும் மரபு கெரில்லா போர் வழிமுறைகளைக் கற்று, அடுத்ததொரு யுத்தத்தினை எதிர்கொள்ள வேண்டிய அவசியமும் அரசுக்கு ஏற்படச் சாத்தியமில்லை. ஆயினும் வடக்கை இழந்தாலும், கிழக்கையாவது தக்க வைக்கும் கடைநிலை முடிவினை தமது மூல உபாயத்தில்…
-
- 15 replies
- 4.8k views
-
-
புலம்பெயர் மக்களின் நிதிப் பங்களிப்பு எங்கள் போராட்டத்தின் முதுகெலும்பாகவே உள்ளது. உலக அரங்கில் நீங்கள் செய்யும் பரப்புரைப் பணியை மேலும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்யுங்கள் வெற்றி தரும் மகிழ்ச்சியை விரைவில் நாங்கள் அனுபவிப்போம் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். சுவிஸில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் வெளிவரும் ‘நிலவரம்’இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிளிநொச்சி மீதான முற்றுகை இறுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்றியே ஆவதெனச் சிங்களம் சூளுரைத்துள்ள நிலையில், என்ன விலை கொடுத்தாவது கிளிநொச்சியைக் காப்பாற்றிய…
-
- 20 replies
- 4.8k views
-
-
இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன : சுமந்திரன் [ Saturday,12 December 2015, 02:47:35 ] ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போரில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்று அரசாங்கம் நிராகரித்துவருகின்ற நிலையில் இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்களை திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இனப்படுகொலை ஒன்று இடம்பெறவில்லை என்று தாம் எந்த இடத்திலும் கூறவில்லை என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக வெளியாகிய அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் முற்றாக நிராகரித்தார்.…
-
- 58 replies
- 4.8k views
- 1 follower
-
-
''காயப் பட்ட செஞ்சோலை மாணவிகளை மிரட்டி ருபவாகினி பேட்டி....ஆத்திரத்தில் மக்கள் ...'' அன்மையில் செஞ்சோலை மீதான கொடிய சிங்கள விமானப் படையின் காட்டு மிரண்டித்தனமான தாக்குதலில் பலர் கொல்லப் பட்டும் பலர் படும் காயம் அடைந்திருந்தார்கள் . ஈவ் இரக்கமற்று சிங்கள படைகளால் செய்யப்பட்ட இந்த கொலையை கண்டித்து உலகம் புராவும் வாழும் தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர்கள் . சிங்கள படைகளின் இந்த கொடுரத்தை உலகிற்க்கு வெளிப் படுத்தினார்கள் தமிழர் தரப்பின் நியாய பாடுகளை கேட்டு வீதியில் இறங்கினார்கள். அதில் கொல்லப்பட்டோர் அப்பாவி சிறார்கள் என்பதை உலிகிற்க்கு நிருபித்ததர்கள் கொதித்தெழுந்த மக்கள் வீதியில் இறங்கினார்கள். அந்த தாக்குதலில் காயப் பாட்ட சிலர்…
-
- 14 replies
- 4.8k views
-
-
ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகாலமாக இழுத்தடிப்புகளே காணப்பட்டு வருகின்றது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனத்தில் இருந்தே வெளியாகிவிட்டது. அதனால் தான் இந்த நாட்டில் இடம்பெற்ற மோசமான குற்றங்கள், சர்வதேச சட்டங்களை மீறும் குற்றங்கள் பல நடந்துள்ள காரணத்தினால் சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கொண்ட சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அரசாங்கங்கள் உருவாகும், வீழும் ஆனால் நீதிமன்ற சுயாதீனம் பலமானதாக இருக்க வேண்டும். இந்த நாட்டில்…
-
- 46 replies
- 4.8k views
-
-
அவுஸ்திரேலிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தமது நாட்டிற்கு திருப்பியனுப்பப்படும் பட்சத்தில் அவர்கள் துன்புறுத்தலிற்கு உள்ளாவார்கள் எனின் அவர்களை இலங்கைக்கு அனுப்பபோவதில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் இணைந்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் சில சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலித்து வரும் அதேவேளை அதன் சர்வதேச கடப்பாடுகளை மீறும் விதத்தில் செயற்படாது என அறிக்கையில் தெரிவித்துள்ளது. அகதிகள் சித்திரவதையை அனுபவிக்ககூடிய நாட்டிற்கு திருப்பியனுப்பப்படுவது குறித்த இணைக்கப்பாட்டிற்கு அவுஸ்திரேலியா வரும் என்பதையும் அவர்கள் நிராகரித்…
-
- 25 replies
- 4.8k views
-
-
இராணுவ வெற்றிக்கு கருணாவின் பிரிவு காரணமல்ல: இராணுவத் தளபதி இராணுவத்தினர் அண்மையில் பெற்ற வெற்றிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்தமையே காரணமென ஒருவர் கூறுவாராயின் அது வெட்கப்பட வேண்டியது என இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும், கருணாகும் இடையில் அப்பொழுது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இருவரும் பிரிந்தார்கள் எனவும், கிழக்கை மீட்கும் பணிகளை இராணுவம் ஆரம்பிக்கும்போது கருணா 200 போராளிகளுடன் மாத்திரமே இருந்ததாகவும் இராணுவத் தளபதி கூறியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கை மீட்பதற்கு சாதாரண மக்கள் இர…
-
- 32 replies
- 4.8k views
-
-
சிறிலங்கா அரசாங்கம் தற்போது களமுனையில் சிறுவர்களை இராணுவத்தினருடன் தாக்குதலில் ஈடுபடுத்துகின்றனர். கடந்த வாரம் சிறுவர் சிப்பாய் ஒருவர் களத்தில் கொல்லப்பட்டிருந்தார். இவரது உடலத்தை விடுதலைப் புலிகள் கைப்பற்றி சிறிலங்கா இராணுவத்திடம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக ஒப்படைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முருகண்டியில் இடம்பெற்ற மோதலின் போது மேலும் ஒரு சிறுவர் படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவரின் சடலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் போது விடுதலைப் புலிகளால் 15 உடலங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இவற்றில் பெரும்பாலானவை இளவயதினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 4 replies
- 4.8k views
- 1 follower
-
-
அண்மையில் கொழும்பு காந்தானை மற்றும் அநுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட பத்துக்கு மேற்பட்ட சடலங்களும் கருணா ஒட்டுக்கும்பலின் முன்னால் உறுப்பினர்களினதே என சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கருணா ஒட்டுக்குழுவிலிருந்து விலகி வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடியவர்களே, இவ்வாறு கருணா ஒட்டுக்கும்பலினால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருப்பதாக, அவர்களது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இதேவெளை சிறிலங்காப் படையினரின் துணையின்றி, பல சோதனைச் சாவடிகளைக் கடந்து எவ்வாறு கந்தானைப் பகுதியில் சடலங்கள் வீசப்பட முடியுமென பல அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் மட்ட்க்களப்பில் கருணா ஒட்டுக்கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட சி…
-
- 9 replies
- 4.8k views
-
-
http://www.nerudal.com/content/view/3207/70/ சீறும் படை என்ற பெயரில் துண்டுப்பிரசுரம்! இன்று காலை கொழும்பில்வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இனுடைய படுகொலைக்கு கருணா குழுவினர் உரிமைகோரியுள்ளனர். மட்டக்களப்பு சீறும்படை என்றபெயரில் இன்றுமாலை துண்டுப்பிரசுரமொன்றை மட்டக்களப்பில் விநியோகித்துள்ளனர். அந்தத் துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- எமது எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்தும் வன்னிப்புலிகளின் அடிவருடிகளாகச் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு உறுப்பினர் இன்றுகாலை கொழும்பில் வைத்து தமிழின விடியலுக்காக கொன்றொழிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 25ஆம் திகதி கிழக்கின் எமது தா…
-
- 14 replies
- 4.8k views
-
-
2006 - 2008 காலப்பகுதியில் ஆழ்கடலில் வைத்து விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்கு அமெரிக்கா முழுமையான உதவிகளை வழங்கியது என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். "தி ஒஸ்ரேலியன்" நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். "இலங்கை கடற்படையால் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்க முடிந்தது போரில் ஒரு திருப்பமாக அமைந்தது. 2006க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலத்தில் நாம் இத்தகைய 12 மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை அழித்திருந்தோம். அமெரிக்கர்கள் எமக்கு மிகமிக உதவியாக இருந்தனர். பெரும்பாலான இந்தக் கப்பல்களின் இருப்பிடம் குறித்து அமெரிக்கர்களே எமக்குத் தகவல் தந்தனர். விடுதலைப் புலிகள் பெரும்பாலான ஆயுதங்களை வெளி…
-
- 48 replies
- 4.8k views
-
-
எனி விடுதலைப்புலிகளால் இராணுவ வெற்றிகளைப் பெற்று போராட்டத்தைக் கொண்டு செல்ல முடியாது. இந்த உண்மையை அவர்கள் புரிந்து கொண்டு ஆயுதங்களை போட்டுவிட்டு அரசியல் ரீதியில் போராடி பேச்சுக்களின் மூலம் தீர்வைப் பெறுவது பற்றி யோசிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்று முன்னாள் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கைம் இந்தியாவில் வைத்து நேற்றுத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் சிறீலங்கா நிலவரம் தொடர்பாக ஐநா பொதுச்செயலர் மற்றும் இந்திய தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு செய்தியாளர்களிடம் மேற்படி கருத்தை சொல்கைம் முன் வைத்துள்ளார். இதே கருத்தையே இணையத்தலைமை நாடுகளும் நோர்வேயும் ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் வெளியிட்டிருந்தன. இதற்கிடையே நேற்றைய தினம் சிறீலங்காவில் போர் கட்டுப்பாடின…
-
- 33 replies
- 4.8k views
-
-
தர்ஹா நகரில் 10 கடைகள் தீ வைத்து எறிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகன தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பினரால் தர்ஹாநகரில் இன்று மாலை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினையடுத்தே மேற்படி பதற்ற நிலை அங்கு உருவாகியுள்ளது. இதேவேளை அளுத்கம மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. அளுதகம பொலிஸ் பிரிவுக்கு மாலை 6.45 மணி முதலும் பேருவளைக்கு 7.45 மணிக்கு பின்னரும் இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கானது மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன, ஊரடங்கு காலப்பகுதியில் பாதைகளில் பயணிப்பது, ஒன்று கூடுவது நடமாடுவது என…
-
- 59 replies
- 4.8k views
-