Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நவீன சிறைச்சாலை திறப்பு ஹம்பாந்தோட்டை, அங்குனகொலபெலெஸ்ஸவில் புதிய சிறைச்சாலை கட்டடத் தொகுதி, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றுமு; இந்துமத கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் இன்று (16) திறந்து வைக்கப்பட்டது. நவீன சிறைச்சாலை வசதிகள் 01. சிறைக் கைதிகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அமைக்கப்பட்ட முதலாவது சிறைச்சாலை 02. ஆண்கள், பெண்கள் உள்ளடங்கலாக 1500 கைதிகள் சிறைப்படுத்தி வைத்திருக்க முடியும் 03. 65 ஏக்கர் வளாகம் 04. நவீன தொழில்நுட்பம், பூரண பாதுகாப்பு 05. வைத்தியசாலை, தொழிற்பயிற்சி நிலையம், கைத்தொழில் கட்டம் 06. சிறைச்சாலை அதிகாரிகளுக்கான தங்குமிடம் 07. மைதானம், 400 ம…

  2. சட்டவிரோதக் கொலை, காணாமற் போகச் செய்தல் போன்ற கொடூரங்களுக்கு இலங்கை அரசைக் கடுமையாகச் சாடும் மனித உரிமை அமைப்பின் அறிக்கை ஒன்று நியூ யோர்க்கிலிருந்து வெளியாகின்றது. [Monday August 06 2007 06:50:03 AM GMT] [யாழ் வாணன்] இன்று இலங்கையில் இடம்பெறும் சட்ட விரோதப் படுகொலைகள், ஆள்களை வல்வந்தமாகக் காணாமற்போகச் செய்தல் மற்றும் அதுபோன்ற மோசமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அர சைப் பொறுப்பாக்கி, கடுமையாகக் குற்றம் சுமத்தும் நீண்ட அறிக்கை ஒன்று நியூ யோர்க்கிலிருந்து வெளியாகின்றது. பிரபல்யம் பெற்ற சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம்(human rights watch) என்ற நிறுவனமே இந்த அறிக் கையை இன்று பகிரங்கப்படுத்தவிருக்கின்ற

  3. அம்பாந்தோட்டை யால காட்டுப்பகுதியில் நேற்று இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  4. தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர ஏனைய வெளிநாட்டினரை வெளியேற்றுங்கள் - பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவு! June 21,2008 தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர சட்டரீதியான ஆவணங்கள் எதுவுமில்லாமல் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்த முதலமைச்சர் கருணாநிதியின் உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர சட்டரீதியான ஆவணங்கள் எதுவும் இல்லாமலிருக்கும் வெளிநாட்டினரை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளியேற வேண்டுமென விளம்பரப்படுத்துங்கள். இந்த விளம்பர அறிவிப்புகளுக்கு பின்பும் வெளியேறாம…

    • 7 replies
    • 2.1k views
  5. 39 ஆவது சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கையரான கீர்த்திவாசன் கந்தசாமி வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட ஒருவர் பதக்கமொன்றை வெல்வது இதுவே முதன் முறையாகும். 39 ஆவது சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டிகள் வியட்நாம் தலைநகர் ஹனோயில் இம் மாதம் 20 முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. பௌதிகவியல் கோட்பாடுகள் மற்றும் செய்முறைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெற்ற போட்டிகளில் 82 நாடுகளைச் சேர்ந்த 370 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இலங்கை பௌதிகவியல் நிறுவகத்தால் 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஐவரில் ஒருவரான கீர்த்…

  6. 'இலங்கையில் நீதித்துறைக்கும் சட்டவாக்கத் துறைக்கும் இடையிலான பிரச்சினைகள் உட்பட ஏனைய தொழிற்சங்க பிரச்சினைகளும் தொடர்ந்தால், அது ஒரு அரபு வசந்தத்துக்கு இட்டுச் செல்லலாம்' என்று ஆய்வாளர்கள் கூறுவதாக மூத்த பத்திரிகையாளரான அனந்த் பாலகிட்ணர் கூறியுள்ளார். http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/12/121231_anandaudio.shtml

    • 7 replies
    • 1k views
  7. சவுதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூதுரைச் சேர்ந்த இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்தாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10 லட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இத்தகவலை தெரிவித்துள்ளது. ரிசானா நபீக்கின் குடும்பத்தினரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சந்தித்துள்ளார். இதன்போதே, பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார். அத்துடன் ரிசானா நபீக்கின் சகோதரருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருகோணமலை மாவட்ட அலுவகத்திலும் தொழில் வாய்ப்பு வ…

  8. இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ள சீனக் கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் எனப்படும் இரசாயன பொருள் உள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச். எல். அனில் ரஞ்சித் தெரிவித்தார். இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி பெறப்படல் வேண்டும் எனவும் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச். எல். அனில் ரஞ்சித் தெரிவித்தார். இருப்பினும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள கப்பலுக்கு எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியேற்றுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கு…

    • 7 replies
    • 918 views
  9. காணாமல் போனோர் தினத்தைமுன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.! சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று முல்லைத்தீவில் இன்றுடன் 176 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிரதான பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பான குறித்த ஆர்ப்பாட்டம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கபட்டுவரும் போராட்டம் இடம்பெறும் பகுதியில் நிறைவடைந்தது. "தடுப்பில் உள்ள எங்களது பிள்ளைகளை தா" காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கு", இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவ…

  10. யார் இந்த ஜெகத் கஸ்பர்? 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி அறிமுகப் படுத்தப்பட்ட முதல் வருடம், அந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து ஜூ.வி. வெளியிட்ட விமர்சனங்கள் என்ன மாகக் கோபம் கொள்ளவைத்தது ஜெகத் கஸ்பரை! துளிகூட அப்பழுக்கு இல்லாத, எந்த விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட தூய உடை மனிதராக தன்னை நிலை நாட்டிக்கொள்ள படாத பாடுபட்ட ஜெகத் சீறினார் அப்போது. ஆனால், அந்த சங்கம நிகழ்ச்சிக்குப் பிறகு பொது வாழ்க்கை மேடைகளில் அவர் தோன்றிய விதமும், அவர் வலுப்படுத்திக்கொண்ட புதுப் புது தொடர்புகளும் திரும்பத் திரும்ப சர்ச்சைப் புள்ளியாகவே அவரை அடையாளம் காட்டியது. இதோ, முதல்வர் மகள் கனிமொழியின் அரசியல் எதிர்காலத்தையே ஆட்டம் காணவைக்கிற லெவலுக்குக் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார் ஜெகத் க…

  11. இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணத் தயாராக இருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இமானுவேல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பில் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வருவதாகவும் அருட்தந்தை இமானுவேல் பிபிசி தமிழோசையிடம் கூறினார். முன்னைய மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் தமிழ் மக்களுக்கு கொடூரமானதாக இருந்ததாகவும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். புதிய அரசாங்கம் வெளிப்படுத்துகின்ற நல்லெண்ண சமிக்ஞைகளுக்கு புலம்பெயர் தமிழர் தரப்பு மதிப்பளிக்க வேண்ட…

    • 7 replies
    • 935 views
  12. அதிகாரங்கள் இல்லாத அதிகாரப்பகிர்வினால் எந்தப் பயனும் இல்லை என்றும், இந்திய முறைமையில் மாநிலங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது போன்று மாகாணசபைகளுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவுக்கு ஆறு நாள் பயணமாக வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று தாஜ் சமுத்ரா விடுதியில் சந்தித்தனர். சுமார் ஒரு மணிநேரம் வரை இடம்பெற்ற இந்தச் சந்திப்புக் குறித்து இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவில் இடம்பெற்றிருந்த செல்வம் அடைக்கலநாதன் பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி…

  13. மத்தலவுக்கு முதல் விமானத்தில் ஜனாதிபதி மஹிந்த வந்திறங்கினார் திங்கட்கிழமை, 18 மார்ச் 2013 11:04 இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட முதலாவது உத்தியோகபூர்வ விமானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்று முன்னர் வந்திறங்கினார். கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்றின் மூலம் ஜனாதிபதி மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60921-2013-03-18-05-34-59.html

    • 7 replies
    • 768 views
  14. கொடைக்குக் கர்ணன் என்றுதான் நாம் அறிந்துள்ளோம். அந்தக் கர்ணனுக்கே கொடை கொடுத்தவன் துரியோதனன். இராஜகுமாரர்களுக்கான வில்வித்தைப் போட்டியில் கர்ணனும் கலந்து கொள்கின்றான். போட்டியில் கலந்து கொள்ள வந்த இராஜ குமாரர்கள் அத்தனை பேரும் கர்ணனைப் பார்த்து தேரோட்டியின் மகன் என ஏளனம் செய்கின்றனர். இராஜகுமாரர்கள் மட்டுமே கலந்து கொள்ளக் கூடிய வில்வித்தைப் போட்டியில் தேரோட்டியின் மகன் எங்ஙனம் பங்கேற்ற முடியும் என சர்ச்சை எழுகின்றது.கர்ணன் நாணிக்கோணி தலைகுனிந்து நிற்கிறான். அந்த நேரத்தில் சபை நடுவே எழுந்து கர்ணனை நான் இராஜகுமாரன் ஆக்குகின்றேன் என துரியோதனன் முழுங்குகின்றான். கர்ணனை இராஜகுமாரனாக்கினால் அவனுக்கு தேசம் எங்கே என்று வினா எழுகிறது.‘அங்கததேசம்’ என்று துரியோதனன் மொழி கி…

  15. http://www.yarl.com/articles/files/100622_jaffna_reporter.mp3 நன்றி: ATBC வானொலி - அவுஸ்திரேலியா

  16. யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வணிகர்களிடம் ஒருவாரத்துக்குப் போதுமான உணவுப் பொருள்களே கைவசம் உள்ளதாக யாழ்ப்பாண வணிகர் கழகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் சிவில் நிர்வாக அலுவலகத்தில் நேற்று நடந்த சந்திப்பிலேயே வணிகர் கழகப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர். யாழ்ப்பாண அரச அதிபர் கே.கணேஷின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு இடம்பெற்றது. தற்போதைய அசாதாரண சூழலில் பொருள்கள் கூடிய விலைகளில் விற்பனை செய்யப்படுவதுடன், அவை பதுக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அரச அதிபர் இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சந்திப்பில் கலந்துகொண்ட வணிகர் கழகப் பிரதிநிதிகள், அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொருள்களைப் பதுக்கவோ, கூடுதல் விலைக்கு விற்கவோ வேண்டாம் என வர்த்தகர்களிடம் கோருவதாகத…

    • 7 replies
    • 2.8k views
  17. பண்டாரநாயக்க குடும்பத்திலிருந்து அரசியல் பிரவேசம் செய்யும் புதியவர் [06 - August - 2007] -எம்.ஏ.எம்.நிலாம்- பண்டாரநாயக்க குடும்பத்திலிருந்து புதியவர் ஒருவர் அரசியல் பிரவேசம் செய்யவுள்ளார். அவர் பற்றிய விபரங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி அறிவிக்கப்படவிருக்கின்றது. செப்டெம்பர் 26 ஆம் திகதி அமரர் எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவ

    • 7 replies
    • 2.7k views
  18. போர் முனையில் பசுந்தளிர்கள்! வீடெல்லாம் அதிரும்படியாக ஒரு சத்தம் கேட்டது. வெளியில ஓடிப் போய்ப் பார்த்தன். வெடிகுண்டு ஒன்டு வெடிச்சதில் கார், லாரியளெல்லாம் தீப்பிடிச்சு எரிஞ்சு கொண்டிருந்தது. எல்லாரோடுஞ் சேர்ந்து நானும் நெருப்பை அமர்த்த உதவி செஞ்சன். தினமும் உறங்கையில போரைப் பற்றியேதான் பேச்சு.." - இது யாரோ ஒரு புரட்சிக்காரரின் வார்த்தைகள் இல்லை. இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் சுனில் என்ற 11 வயது சிறுவனின் வார்த்தைகள். சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மூர்க்கத்தனமான போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆயுதங்களையே கண்டிராத அப்பாவி மக்களும் அந்தப் போரில் உயிரிழக்கிறார்கள். ஊனமாகிறார்கள். வீடிழக்கிறார்கள். …

    • 7 replies
    • 3.8k views
  19. 15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் தீக்குளித்து ஈகைச்சாவடைந்தார். ஈழத்தமிழர்களிற்காக தீக்குளித்து சாவடைந்த முதல் தமிழக உறவு அப்துல் ரவூப் என்பது குறிப்பிடத்தக்கது.தன் இனத்தின் துயர் துடைக்க தன்னைத் தீயில் ஆகுதியாக்கிய இந்த ஈகைத்தமிழனுக்கு இன்றைய நாளில் நினைவு வணக்கம் செலுத்துகிறோம். http://www.vivasaayi.co…

  20. வியாழன், ஜனவரி 2, 2014 - 20:37 மணி தமிழீழம் | யேசுதாசன், கொழும்பு ஐரோப்பாவால் மீண்டும் வழங்கப்பட்டது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை!! யுத்தக் குற்றங்கள் காரணமாக இலங்கையிடம் இருந்து ரத்து செய்யப்பட்ட ஐரோப்பாவின் ஜீ.எஸ்.பி. பிலஸ் வரிச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கையை அதி குறைந்த வருமானத்தை பெறும் நாடு என்று அடையாளப்படுத்தி இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் றிசாட் பதியுதீன் இதனை இன்று அறிவித்தார். முன்னதாக இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருந்த நிபந்தனைகளுக்கு இலங்கை இணங்காத நிலையில், இந்த சலுகை ரத்து செய்யப்பட்டது. எனினும் இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் சீர் செய்யப்பட்ட ஜீ.எஸ்.பீ…

    • 7 replies
    • 1k views
  21. மணல் அகழ்வால் கடலுக்குச் சொந்தமாகும் மண்டைத்தீவு! (படங்கள்) மண்டைதீவு 7 ஆம் வட்டாரப் பகுதியில் அமைந்திருக்கும் கடற்கரையோரமாக இனந்தெரியாதோர் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இவ்வாறு கண்மூடித்தனமான முறையில் நடைபெற்று வரும் மணல் அகழ்வால் மண்டைதீவுப் பகுதி எதிர்காலத்தில் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள மக்கள் ஏற்கனவே நீர் உவராதல் மற்றும் குடிநீர் பற்றாக்குறை என்பன ஆரம்பித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை தொடர் மணல் அகழ்வுகள் இடம்பெறும் பட்சத்தில் கடல் அரிப்புக்கள் ஏற்பட்டு எதிர்காலத்தில் மண்டைதீவு கடலுக்குள் போகக் கூடிய அபாய நிலை ஏற்படுவதற்கும் வாய்ப்பிருப்பதாகவும் சுட்டி…

    • 7 replies
    • 1.3k views
  22. உங்கள் நன்றிகளை கலைஞருக்கு கீழ்வரும் மின்னஞ்சல்கள் மூலமாக தெரிவிக்கலாம். cmcell@tn.gov.in thedmk@vsnl.com

  23. அமெரிக்கப் பிரேரணை; ஆதரிக்க இந்தியா முடிவு; கொழும்பு மீது கோபமே காரணம் இராஜதந்திரச்சமர் என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க வல்லரசு நாடு கொண்டுவரவுள்ள பிரேரணையை இந்தியா இம்முறை ஆதரிக்குமென அறிய முடிகின்றது. ஜெனிவா இராஜதந்திரச் சமர் ஆரம்ப மாவதற்கு முன்னரே அங்கு சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை விடயத்தில் டில்லியின் ஆதரவைப் பெறுவதற்கு வாஷிங்டனும், கொழும்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் நிலையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, கடந்தமுறை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த காட்டமான பிரேரணையை வலுவிலக்கச் செய்த இந்தியா, இம்முறையும் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் நகலை அமெரிக்காவிடம் கோரியுள்ளது என அறியமுடி…

    • 7 replies
    • 2.4k views
  24. மாற்றமடைந்துள்ள இந்தியாவின் 'தொனி'? தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா இலங்கையில் தினமும் நடக்கும் தமிழினப் படுகொலை குறித்து ஒலிக்கும் உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த குரலுக்கும் திறக்கப்படாத "இந்தியக் கதவுகள்' மீது முழு நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில் சர்வதேச நீதிமன்றத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் நாடுவதில் தமிழக அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் மட்டுமன்றி தமிழக அரசும் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இரண்டு மாதங்களில் வரவிருக்கும் இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடைசிக் கூட்டத் தொடர் முடிய இன்னும் ஏழு நாட்களே இருக்கும் பட்சத்தில் இலங்கை மீதான இந்திய அரசின் அழுத்தம் இனிமேல் கடுகளவும் ஏற்பட வாப்பில்லை என்றும் ஈழத்தமிழர…

    • 7 replies
    • 1.6k views
  25. சுமந்திரன் தலைமையிலான குழு வோஷிங்டனில் முக்கிய பேச்சு November 18, 2021 அமெரிக்கா சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர்கள் குழு மற்றும் உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு ஆகியவை இரண்டும் ஒன்றிணைந்து வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த மூன்று நாள்களில் பல தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது. சுமந்திரன் தலைமையிலான குழு இன்று நியூயோர்க் செல்கின்றது. அங்கு ஐ.நா. அதிகாரிகளுடன் இன்றும் நாளையும் பல மட்ட கலந்தாய்வுகளில் அக்குழு ஈடுபடும் எனத் தெரிகின்றது. திங்களன்று பத்துத் தரப்புகளுடனும், செவ்வாயன்று பத்து தரப்புகளுடனும், நேற்று ஐந்து தரப்புகளுடனும் இக்குழு சந்திப்புக்களை நட…

    • 7 replies
    • 910 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.